சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 18 டிசம்பர், 2023

திருப்பூர் மக்கள் மாமன்றம் : ஒரு வேடந்தாங்கல் என ஆக்கிய சிற்பி சி. எஸ். அவர்கள்.. நுகர்வு மயமாகிப் போன சூழலில் திரையரங்குகளும், திரைப்படங்களுமே மக்களின் வாழ்வியலாகப் போய் விட்ட தமிழர்களின் வாழ்க்கையில் ஒரு நூலகம் வாசகர்களுக்கு அடைக்கலமாக , ஒரு வேடந்தாங்கலாக 30 ஆண்டுகளாக விளங்கிறது இதுவரை சுமார் 5,00,000 வாசகர்கள் அங்கு வந்து நூல்களை, இதழ்களைப் படித்துப் பயன்பெற்றிருக்கிறார்கள். திருப்பூரின் பல அரசு நூலகங்களுக்கு இல்லாத பெருமை இந்தத் தனியார் நூலகத்திற்கு உண்டு.சாதாரண வாசகர்களின் அடைக்கலம் என்பதே அது . இலவச நூலகம். இதைத் 30 ஆண்டுகளுக்கு முன் துவக்கி வைத்த நஞ்சப்பா உயர்நிலைப்பள்ளியின் முன்னால் தலைமை ஆசிரியர் சுப்ரமணியத்தைப் போலவே இங்கு வந்து சென்றிருக்கும் ஆயிரக்கணக்கான தமிழறிஞர்களின் பெயர்கள் அதன் மகத்துவம் சொல்லும்.. எந்த இலக்கிய அமைப்பும் வந்து கூட்டம் நடத்தலாம். இலவசம்தான். எந்த சாமான்ய மனிதனும் வந்து உதவிப்பெற்றுச் செல்ல்லாம் இலக்கிய, மருத்துவ, ஆன்மீக ஆலோசனை , உதவிகள் உட்பட. இதன் அமைப்புத்தலைவர் சி.சுப்ரமணியனும் அவ்வப்போது மாறும் வேறு நிர்வாகிகளும் அன்புடன் கைகொடுக்க தயாராக இருக்கிறார்கள்.ஏழை மாணவர்களுக்குச் சீருடை முதல் புத்தகங்கள் வரை, மருத்துவ ஆலோசனையில் சித்த முகாம் முதல் கண்சிகிச்சை முகாம்கள் வரை பல சாமானிய மக்களுக்கு அகதி முகாம் போலவே கடந்த காலங்களில் அடைக்கலம் கொடுத்திருக்கிறது. மக்கள் மாமன்றம் வெளியிட்டிருக்கும் திருப்பூர் இலக்கியச்சிற்பிகள் முதல் சுமார் பத்து நூல்கள் மற்றும் அதன் உறுப்பினர்கள் எழுதியுள்ள 200 நூல்கள் பெரும் சாட்சியம் ( சுப்ரபாரதி மணியனே 100 நூல்கள் எழுதியுள்ளாரே ) அதன் இலக்கிய , கலாச்சார ஈடுபாட்டைச் சொல்லும். எத்தனையெத்தனையோ இலக்கியப் போட்டிகள், பரிசளிப்புகள். கவிரவிப்புகள். திருப்பூரில் திருவள்ளுவர், தமிழன்னை சிலைகளை நிறுவினார் சி எஸ்.. அடைக்கலம் தரும் வேடந்தாங்கல் மனநிலையை மக்கள் மாமன்ற உறுப்பினர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பது 50 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலவாணி தரும் நகரவாழ்க்கையின் இயந்திரத்தனத்தில் ஈரம் நிறைந்த அம்சமாகும் என்பதை மக்கள் மாமன்றம் அமைப்பை நிறுவி திருப்பூரின் அடையாளங்களில் அதை ஒன்றாக்கியவர் அமரர் சி.எஸ் அவர்கள்.