சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

எழுத்தாளர் குறிஞ்சிச் செல்வர் கொமாகோதண்டம்-  --  80
-சுப்ரபாரதிமணியன்
ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் பஞ்சாலைத் தொழிலாளியான குறிஞ்சிச் செல்வர் கொ.மா.கோதண்டம், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வனயியல், பறவையியல், விலங்கியல், தாவரவியல், மலைவாழ் மக்களின் வாழ்வியல் எனப் பல ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதியிருப்பவர்.
கொ.மா.கோதண்டத்தின் இலக்கிய வாழ்க்கையின் பெரும்பகுதிகள் மலைவாழ் மனிதர்களைப் பற்றிய படைப்புகளாலேயே நிறைந்திருக்கின்றன. வனயியல் சார்ந்த படைப்புகளுக்கு அவர் பளியர் இன மக்களுடன் பழகிய அனுபவங்கள் ஆதாரமாக இருந்திருக்கின்றன. ஏற்காடு, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளின் அடர்ந்த வனங்களில் தங்கியிருந்து.. வாழ்ந்து.. பெற்ற அனுபவங்களை எழுதியதாலேயே இவர் குறிஞ்சிச் செல்வர் ஆனார்.
ராஜபாளையத்தில் 60 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் ‘மணிமேகலை மன்றம்’ இலக்கிய அமைப்பின் தலைவர் பொறுப்பை வகித்துவரும் கொ.மா.கோதண்டம், 100-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார். இவரது ‘ஆரண்ய காண்டம்’ சிறுகதைத் தொகுப்பு இந்தியக் குடியரசுத் தலைவர் விருதுபெற்றது.
‘காட்டுக்குள்ளே இசை விழா’ என்ற நூலுக்கு சாகித்ய அகாடமியின் சிறுவர் இலக்கியப் பிரிவு பரிசு கிடைத்தது. மலேசிய தொலைதூரப் பல்கலைக்கழகம் இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இவரது படைப்புகள் ரஷ்யா, ஜெர்மனி, ஆங்கிலம், சிங்களம், வங்காளம், இந்தி, தெலுங்கு எனப் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
‘ஆரண்ய காண்டம்’, ‘ஏலச்சிகரம்’, ‘குறிஞ்சாம் பூ’, ‘ஜன்ம பூமிகள்’ போன்ற நூல்கள் முழுக்க முழுக்க மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் மலைவாழ் ஏலத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
இந்த நூல்களை வாசித்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சுப்பு, அப்போதைய அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசென்றார். அதன் நீட்சியாக வில்லிபுத்தூர் அருகேயுள்ள செண்பகத் தோப்பு ‘பளியர்’ இன மக்களுக்கு அரசின் சார்பில் 32 வீடுகள் கட்டித்தரப்பட்டன. அவர் பெற்ற விருதுகளைக் காட்டிலும் இந்த நிகழ்வு அவருக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்திருக்கும்தானே!
“குறிஞ்சிக்கு ஒரு கொ.மா.கோதண்டம்” என்றார் ந.பிச்சமூர்த்தி. “சங்ககாலக் குறிஞ்சிக் கபிலருக்குப் பிறகு மலை பற்றிய நூல்களை கொ.மா.கோதண்டம் தவிர்த்து யாருமே எழுதவில்லை. இருபதாம் நூற்றாண்டின் குறிஞ்சிக் கபிலர்” என்றார் கி.ராஜநாராயணன்.
எளிமையான சொல்லாட்சி, சாதாரண மக்களின் வாழ்க்கை என இவரின் படைப்புகள் பெரும் வாழ்வியலை முன்வைக்கின்றன. கற்பனைகளைக் காட்டிலும் அனுபவங்கள் படைப்பாகும்போது அவை கூடுதல் நெருக்கம் தருவதாக எனக்குத் தோன்றுகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றின் இயற்கை குறித்த நூல்களில் கொ.மா.கோதண்டத்தின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. தன் வாழ்க்கையையும் படைப்புகளையும் இயற்கையோடு மிக நெருக்கமாக அர்ப்பணித்துக்கொண்டவர் கொ.மா.கோதண்டம்!
Post Comment