சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 22 ஏப்ரல், 2010

"சாயத்திரை" மலையாளத்தில்

CHAAYAM PURANDA THIRA ( Malayalam ) Tamil novel by SUBRABARATHI MANIYAN Translated into Malayalam by STANLEY Published by Chintha publications, Thiruvananthapuram.Pp.160 price Rs.85/-
- K SATHYADEVAN -A literary work, whether it is a novel, a poem or an essay carrying a poignant social message is bound to become a classic for, it retains its relevance far into the future spreading original literary fragrance. This is true to the hilt in the case of this novel written by Subrabarathi maniyan and handsomely translated into Malayalam by Stanley. The much talked about and intensely worried about and vastly debated problem of environmental pollution posing as a menacing threat to human life everywhere has been the focus of the topic in the novel which picturises the sub-human lives of a few souls thrown into the doldrums of poverty, filth and pollution obtaining in the guise of industrial development. The background of the novel is the fast growing knitwear city on the banks of Noyyal River. The novelist gives a comparison of the hoary past Noyyal which ran through the heartland of kongunadu like a silver girdle, turning everything green and fertile, and the blackened and dried up banks of today with filth and poverty all around solely.Because of the emissions and effluents pushed out of the dyeing units coming up like mushrooms in the knitwear city in the recent times. The hapless life’s of a handful of people living around have been described with stirring passion and compassion in an effort to warn against the disaster looming large on normal life around the area in the guise of industrialization.The fabric of the novel is woven with the thread spun around the characters like Bhakthavalsalam, Nagan, Swamiyappan, Chettiar, Jothimani, Velusamy and his lover Soundri and also the minor ones such as Chikkannan, Kamala, Veni and Thenmozhi, all eking out a living in small jobs connected with the dying and knitting factories flourishing all around. The author has used his pen to give life to them in his unique way with minimum words, but at the same time bringing out a vivid picture of their contrasting personalities.Bhakthavalsalam Is the epitome of the educated under- employed youth destined to his fate with a small job under Swamiyappan, an entrepreneur in the dyeing and textile business. He too is a hapless soul struggling against odds in the quagmire of the unhappy situation prevailing in the industry for the lower class workers. His attachment to Jothimani, a factory worker has been narrated in scattered bits of conversations between them which are nimble but romantic.The author waves out a fantasy to describe situations when Bakthavalsalam revels in his dreams about a life with Jyothimani, which as fate would have it, not to come.Swamiyappan’s character has been that of a middleclass businessman struggling hard to push his business forward in a world full of deceit and skullduggery. The portraying of this factory owner, with an ancestral legacy both financial as well as cultural, through a couple of chapters is a superb master piece of the author’s skill in depicting characters in minimum words. Nagan, the watchman and errand boy of Swamiyappan’s business place is a migrant from the village, attracted by the lure of urban dispensation; but succumbs to the pressure of work in the adverse conditions of chemicals and dies of the factory and ends up as a physical wreck. As a dalit community member with experience of social subjugation by the upper class, he carries within him a deep despise against discrimination in the basis of caste. The novelist speaks through Nagan; ‘is it a sin to be born on this earth? And is it a crime to be born as a low castle?’. Having been transplanted from an agrarian background to a proletarian hub of the city in quest of a living, it is not surprising that Nagan nurses a grievance in his mind in the form of a revolt against the social set up, albeit silently. .Chettiar’s life as a sick and crippled old man, surrounded by filth and refuse of the decaying city is described with ample strength and clarity to arouse a sense of revulsion and nausea. But Chettiar always speaks sense amidst all his physical handicaps.Death is an unwelcome visitor to this community at frequent intervals. And its stealthy approach has been described with grief and pathos that accompany such departures. This body of Soundari dangling at the end of a rope, the exit of chettiar from this world and even the corpse of a yong man found in the blackened waters of the canel beside the bridge are all symbols of devastation that the industrial pollution is bringing to the city. The last journey of Bhakthavalsalam to the Noyyal in its riotous fury after the rains is also a point to ponder whether man is not still subordinate to the order of nature, however high he may strive in his power to harness it to his advantage.Book ReviewThe back cover epigraph on the book appears thus: ‘the blackend face of Tamilnadu in the urbanization process’. CHAYAM PURANDA THIRA is a strong pointer against the mindless industrialisation that the country is fast embracing in its quest for development, seemingly at the risk of damaging the eco-system, thereby inviting disaster to humanity, Sri Subrabharathi Maniyan has scored many a point high in the realm of literature in choosing a subject most relevant to mankind at this point of time. A common problem looming large over the developing countries throughout that world has been brought into perspective with the happenings at close quarters in our neighbourhood. It is the problem of the dying Noyyal with the textile and dyeing industry on its banks as the perpetrators of the crime.No wounder that CHINTHA publications have chosen a novel which can do more benefit to society that the ever somany service organizations can manage to do through their propaganda.Stanley has again proved that he is quite adept in the art of translation. His prowess to perform the ‘Parakayapravesa’ into the self of the Author while going through the process of translation is quite evident from the fact that the soul of the novel has been kept intact till the end. Hope that many more such jewels will find the light of the day through that efforts of Stanley.
CHAYAM PURANDATHIRA Tamil novel by SubrahnarathimanianMalayalam Translation: STANLEY- A. N. கணேஷ்
(Malayalam playwright, Cinema serial writer)On reading the forceful novel ‘Chayam puranda Thira”, it occurred t me the plight of the fateful dwetiers on the banks of Chaliar river, undergoing untold miseries due to all types of incurable diseases simply because they happened to live near the waters of the river highly polluted by the toxic wastes spewed out by the industrial giant, Mavoor Ryons.A poignant hteme with atmost relevance to the present day social environment has been depicted in a straight forward manner without the one of exaggeration but directly going deep into the heart of the reader. The style of narration, the portrayal of characters and the contexts in which they appear are all brilliant and standing as a match to each other.The characters in the novel pour our their tales of woes. They discuss the news in the village in their local dialect. They express their views mostly in the language of satire.The novelist does not speak nor opens his mouth. Nor does he argue for their sake. Nor quarrel. Standing aside, he curiously watches everything, donning the mantle of an avid reader. And there lies the essence of relish the novel caters to the reader and the ultimate triumph of the novelist. Undoubtedly it can be claimed that “Chayam Puranda Thira” is of a class with unpretentious stemming from the fathomiess depth of the heart and pulsating through sentiments of the Tamils.I have spent fourteen long years in the streets of weaver class Chettiars in a world of cotton. I could therefore transform myself as one among the characters in ‘Chayam Puranda Thira’ (in Tamil “Chayathirai”) with much ease, and relish the novel up to the hilt. Perhaps that may be the reason why I could plumb far into to depth more than an ordinary reader. Otherwise how could I be able to enjoy reading it in one stretch and read it for a second time variciously with uninterrupted interest?It is not a small matter that Subrabharathimanian has marvelously succeeded in depicting the Noyyal river and the surrounding places deeply afflicted with the toxic pollutions exuded from the small scale banian factories and godowns and the unfortunate lot of people on its banks who left to suffer under the ravages of a plethora of incurable diseases. This he has accomplished in an effortless manner and in an enviable style. The translation has made it to flow effortlessly to the minds of Malayalam readers like a clear trackling water source. The fact, that it is a translation does not at all come to the minds of the readers. It is here that the genius of writer Stanley shines with brilliance. The language and the translation have done good justice to the original and have succeeded in retaining its oneness with the latter impeccably. The realism, simplicity and straight forwardness go hand in hand like a pair of yoked bullocks moving along the track in unison without jerk, drag or poll. Stanley is not only a playwright, but his hands are also adept in the craft of translation.Bhakthavachalam, Samiyappan, Chettiar, Nagan, Kumar, Jothimani, Soundari, Veni, Kamala, Tehnmozhi and the like are characters of individuality and of high profile. Even the small time character, Chikkannan has been portrayed with bright coloour. The subtle hand of Subrabharthimanian in his craft is mosthigly commendable, perhaps unparalleled.The relationship between Bhakthavachalam and Jothimani has been drawn without losing its emotional depth, at the same time without any exaggerated hue in its depiction. A very apt narration indeed.Veluswamy is the scapegoat of the water and environmental pollution. A representative of the poor people who are destined to be at the receiving end of the disaster. A commendable piece in the story is the softness with which his love towards Soundari, its beginning and its end has been narrated. The horrible scene of Soundaris’s body swinging on a rope will haunt the reader for ever, certain.The canvas depicting the picture of Chettiar is exceptionally astounding. It is sure to create ripples of disturbance in the mind of the reader, no doubt about that.Chettiar, Soundari and Bhakthavatchalam are unfortunate characters who get themselves immioralised through the tragedies they face eventually.Nagan’s attitude is sure enough to simmer up the sentiments of the reader to a great extent. “Is it a crime to be born And is it a sin to be born in a low class in society?”“Chayam Puranda Thira” has been compared to the sinister and blackened face of unbanised Tamilnadu. What a true comparison in one single sentence. (=Chayam Puranda Thira: Malayalam Translation of Tamil Novel Chayathirai by Subrabharathimanian, Chintha Publication , Desabimaani road, Trivandrum, Kerala, Price Rs. 85 =)•Chayathirai, Rs 50 Kaavya Publication, Chennai•Reng Rengli Sadhar Mehi (Translation in Hindi •Rs. 150 Translated by Meenakshipuri, published by Neelakan Prakashan, Mourahil, New Delhi )•The coloured Curtain (Translation in English by P. Raaja. Published by BRPC, New Delhi Rs. 150)•Bannathira (Translation in Kannada, by Tamilselvi, Chennai Rs. 85, Navayuga Publication, Bangalore)•Copies can be had from: KANAVU, 8 2635 pandian Nagar, Tiruppur 641 602. Tamilnadusubrabharathi@gmail.com

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

இடப்பெயர்வு

இடப்பெயர்வு என்பது பல்வேறு புதிய
நாகரீக முறைகளையும் உருவாக்கியுள்ளது. முன்பு அடிமை வியாபாரம், கத்தல், இனப்பிரச்சினைகளே இடம்பெயர்விற்குக் காரணங்களாக இருந்தன. பருவகாலப் பயிர்களின் விளைச்சல், அறுவடை போன்றவற்றுக்கும், ஆடுமாடுகளின் வளர்ப்பிற்கும் ஒவ்வொரு இடமாக நகர்ந்து கொண்டிருப்பது பயனுள்ளதாக இருக்கிறது. குடும்பங்களாக இடம் பெயர்வது இதற்கென்றாகிவிட்டது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது கோடைக் காலங்களில் வந்து தங்கிச் செல்வதற்காகப் பல மலைப்பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. கடும் குளிரை விரட்டவும், விடுமுறையைப் போக்கவும் என்று வெளிநாட்டினர் சுலபமாக இடம் பெயர்கிறார்கள். வேட்டையாடுபவர்கள் இடம்பெயர்தலை விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள்.
உலகம் திறந்த சந்தை என்றானபின்பு பெரு நகரங்களுக்கு வேலை தேடி மக்கள் இடம்பெயர்வதும், தேசிய இனப்பிரச்சினைகள் காரணமாக மக்கள் அகதிகளாக இடம்பெயர்வதும் இந்த நூற்றாண்டின் சாபங்களாக அமைந்து விட்டிருக்கின்றன. இடம்பெயர்கிறவர்களில் பாதிப்பேர் பெண்களாவர். வேலையின்மை, குறைந்த சம்பளமும் பெண்களை இடம்பெயரச் செய்கின்றன. 175 மில்லியன் மக்கள் உலகமெங்கிலும் இடம்பெயர்ந்தவர்களாக இருக்கின்றனர். குடும்ப வேலைகள், விபச்சாரத்திற்காகக் கணிசமான அளவில் பெண்கள் இடம்பெயர வேண்டியிருக்கிறது. இப்படி இடம்பெயர்கிறவர்களில் பலர் காணாமல் போய்விடுகின்றனர்.
அர்ஜென்டைனா போன்ற நாடுகளில் இணையதள தொடர்பு, பேஸ்புக் இணைப்பு போன்றவற்றின் காரணமாகக் காணாமல் போகிறவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். ஒரு மாதத்திற்கு சராசரியாக 16 பெண்கள் அங்கு காணாமல் போகிறார்கள். 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு வேலைகளுக்காக அர்ஜென்டைனாவிலிருந்து இதுவரை கடத்தப்பட்டிருக்கிறார்கள். அர்ஜென்டைனாவின் மத்திய தர வர்க்கமும், மேல்தட்டு வர்க்கமும் படித்தவர்களாக இருக்கிறார்கள். மற்றபடி விளிம்புநிலை மக்களின் கல்வியறிவு திருப்திகரமானதாக இல்லை. பெரும்பாலும் கத்தோலிக்கர்களாக இருந்தாலும் மதம் இரண்டாம் பட்சமாக்கி, அவர்களை அலைக்கழிக்க வைக்கிறது. மதமாற்ற வாய்ப்பையும் தேடிப் போகிறார்கள்.
அர்ஜென்டைனாவின் பெண் இயக்குனர் காப்யெல்லா டேவிட்டின் பல படங்களில் அந்த தேசத்துப் பெண்கள் பிரச்சினை மையமாகியிருக்கின்றன. கல்லூரிப் பேராசிரியராகவும் விளங்குபவர், 18 வயது முதல் திரைப்படத்துறையில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்திருக்கிறார். அர்ஜென்டைனாவில் காணாமல் போகிற பெண்களைப் பற்றியும், குழந்தைகளைப் பற்றியும் இவரின் அக்கறை திரைப்படங்களைத் தாண்டியும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளிலும் அமைகிற மாதிரி கல்லூரி வாழ்க்கையையும், திரைப்படப் பணியையும் மேற்கொண்டு வருகிறார்.
நகரத்திற்கு வேலை தேடிப் போகிற இரு இளம் பெண்களை மையமாகக் கொண்ட படம் அர்ஜென்டைனாவின் ‘எ பிளை இன் த ஆசஸ்.’ இதேபோல் நகரத்திற்குச் செல்லும் ஆப்ரிக்க சிறுவர்களைப் பற்றின ஜீலு மொழிப் படம் ‘மை சீக்ரெட் ஸ்கை.’ நகரங்களில் பெண்களும் குழந்தைகளும் அலைக்கழிவதை இப்படங்கள் காட்டுகின்றன.
‘மை சீக்ரெட் ஸ்கை’ என்ற ஆப்ரிக்க படத்தில் நகரம் நோக்கிச் செல்லும் இரு சிறுவர்களின் சிரமங்களைப் பார்க்க முடிகிறது. 10 வயது தெம்பி என்ற பெண் அவளின் 8 வயது சகோதரனுடன் அம்மாவின் மரணத்திற்குப் பின் தனித்து விடப்படுகிறார்கள். கலைப்பொருட்கள் போட்டிக்கு அம்மா கையால் செய்த ஒரு சிறு பாயைக் கையில் எடுத்துக் கொள்கிறார்கள். அந்தக் கிராமத்திற்கு வரும் ஒரு கிறிஸ்துவப் பாதிரியார் கலைப் பொருட்களின் சிறப்பு பற்றிச் சொன்னதால் அவள் அதைத் தயாரிக்கிறாள். அது பரிசு பெற்றால் தன் குழந்தைகளுக்குப் பயனாகும் என்பது அவள் எண்ணம். பாதிரியைச் சந்திப்பது, போட்டிக்காக அந்தப் பாயைச் சேர்ப்பதுதான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது. தெருவாழ் சிறுவர்களைச் சந்திக்க நேர்கிறது. அவர்களுள் 12 வயது சில்லி பைட் அவர்களுக்கு உணவளிக்கிறாள். தங்க மறைவான இடம் தருகிறாள். பாதிரியைச் சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாகச் சொல்கிறாள். அவள் அறிமுகப்படுத்தும் ஒருவரின் தம்பியைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்த எண்ணுகிறாள். அவள் தப்பிக்கிறாள். தெருவாழ் சிறுவர்கள் செய்யும் சிறு தவறுகளுக்கு உடந்தையாக வேண்டியிருக்கிறது. தம்பியும் முரண்பட்டு அலைகிறான். பாதிரியைச் சந்திப்பதும் வெறும் ஆறுதலாக மட்டும் அமைகிறது. கொஞ்சம் காசு சேர்த்து ஊருக்குத் திரும்ப பேருந்து கட்டணத்திற்காகக் காத்திருக்கிறார்கள். முன்பு நகரத்திற்கு வந்தபோது திருட்டு ரயிலில் ஏறி வந்திருக்கின்றனர். கிராமத்திற்கு சில்லி பைட்டையும் அழைக்கிறார்கள். ‘தெருப் பையனைக் கிராமம் ஏற்றுக் கொள்ளுமா?’
‘தெருப் பையன் என்று யாருக்குத் தெரியும்.’ சில்லி பைட் ஒத்துக் கொள்வதில்லை நகரமும், அதன் வாழ்க்கையுமே தனக்கு ஒத்துவரும் என்கிறாள்.
‘எ பிளை இன் த ஆசஸ்’ என்ற ஸ்பானியப் படத்தில் இதுபோல் இரண்டு பெண்கள் நகரத்திற்கு வேலை தேடிச் செல்கிறார்கள். நான்சியும், பட்டாவும் நல்ல சிநேகிதிகள். ஒரே கிராமத்தைச் சார்ந்தவர்கள். அவர்களை வீட்டு வேலைக்கென்று கூட்டிப் போகும் இளைஞனால் விபச்சார விடுதியில் சேர்க்கப்பட்டு விடுகிறார்கள். தங்களை அனுப்பிய கிராமத்துப் பெண் ஒரு பெரும் தொகை பெற்றிருக்கிறாள். நான்சி சற்றே முதிர்ந்தவள். வெகுளியானவள். விபச்சார விடுதி சூழல் தன்னை வெளியேற விடாது என்று உணர்ந்து கொள்கிறாள். பட்டா ஒத்துக்கொள்ள மறுக்கிறாள். சித்ரவதைக்குள்ளாகிறாள். தப்பிக்க முயன்று அடிபடுகிறாள். நான்சி தன்னிடம் வரும் ஒருவனிடம் தங்கள் நிலையைச் சொல்லிக் காவல்துறையிடம் சொல்லச் சொல்கிறாள். அவன் பற்களை இழந்த ஒரு சாதாரண உணவு விடுதி வேலையாள. அவளைப் பல முறை ஜன்னல் வழியே பார்ப்பது கூட நான்சிக்கு ஆறுதல்தான். பட்டாவின் கதறல் யாரையும் எட்டுவதில்லை. தப்பிக்க முயலும் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. நான்சி பக்கத்துக் கட்டிடங்களுக்கு தப்பிச் சென்று காவல்துறையினரைக் கூட்டிவருகிறாள். தப்புகிறார்கள். நான்சி கிராமத்திற்குத் திரும்பி ஒருவனைத் திருமணம் செய்து கொள்கிறாள். பட்டா நகரத்தில் உயர்நிலைக் கல்வி கற்கும் வாய்ப்பை பெறுகிறாள். அர்ஜென்டைனா தேசத்துப் பெண்களும், கிராமச் சூழல்களும் பெண்களை எங்காவது துரத்திக் கொண்டிருக்கின்றன.
பட்டாவிற்கான கல்வி என்பது நகரத்தில்தான் வாய்த்திருக்கிறது. அதிலும் பெரிய துயரிலிருந்து மீண்டு வருகையில் ஓர் ஆறுதலாக அமைந்துவிட்டிருக்கிறது. தன்னார்வக் குழுக்களின் செயல்பாடுகளாலும், அரசுகளின் சில நலத்திட்டங்களாலும் இதுபோன்ற கல்வி கற்கும் வாய்ப்புகள் பெண்களுக்கு அமைகின்றன. உலகமெங்கும் தெருவில் வாழும் குழந்தைகளுக்கான வாழ்நிலை உறைவிடங்கள் தன்னார்வக் குழுக்களால் நடத்தப்படுகின்றன.
தெருவில் வாழும் சிறுவர்களில் பெரும்பாலும் பையன்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். கல்வி வன்முறையாகித் துரத்துவதும், குடும்பச் சூழ்நிலை, வறுமை போன்றவையும் அவர்களைத் தெருவுக்குத் துரத்தி விடுகின்றன. ‘மை சீக்ரெட் ஸ்கை’ படத்தின் ஆப்ரிக்க குழந்தைகள் தெருவோரச் சிறுவர்களாய் தங்களை விதியமைத்துக் கொள்ளாமல் கிராமத்திற்குத் திரும்ப வருவதில் பெரூமுச்சு கிளம்புகிறது. பார்க்கக் கடலும், பெரிய கட்டிடங்களும், ராட்சத வாகனங்களும் இல்லாமல் போகலாம். ஆனால் கிராமம் தரும் பாதுகாப்பு அவர்களை அலைக்கழிப்பிலிருந்து தப்ப வைக்கும்.
தெருவோரச் சிறுவர்களுக்கு இயல்பான பெயர்கள் பெரும்பாலும் இருக்காது. இட்டுக் கட்டப்பட்ட பெயர்களும், கேலிக்காய் வைக்கப்பட்ட பெயர்களும் நிலைத்து விடும். அவர்களுக்கு வயது கூட தெரியாது. ஓர் ஆப்ரிக்க தெருவோரச் சிறுவன் இப்படிச் சொல்கிறான்: ‘எனக்கு வயது தெரியவில்லை. ஆனால் எத்தனை கிறிஸ்து மடங்களில் தெருவோரத்தில் சாப்பாடு கிடைத்தது என்பது

சனி, 17 ஏப்ரல், 2010

சதுரங்க மனிதர்கள்

திருப்பூர் இளம் குறும்படைப்பாளிகளின் களமாக விளங்கி வருகிறது. இளம் படைப்பாளிகளில் மிகவும் இளையவர் ரவிக்குமார். லீவு, எட்டாம்வகுப்பு, கழல், எதிர்வினை, சுமங்கலி ஆகிய குறும்படங்களுக்குப் பின்பு இவர் இயக்கி வந்திருக்கும் 15 நிமிடக் குறும்படம் "கண்ணாமூச்சி".தொடர்ச்சியாக அக்கரையுடனான செயல்பாட்டினால் "கண்ணாமூச்சி"யை வந்தடைந்திருக்கிறார் ரவிக்குமார். அவர் சார்ந்த பொதுவுடமை இயக்கச் செயல்பாடுகள் சமூகவியல் சார்ந்த முழு அழுத்தத்தைத் தரும் விஷயங்களையே இதுவரை அவரின் படைப்புகளாக்கியிருக்கிறது. விடுமுறைகூடக் கிடைக்காமல் பனியன் கம்பனியில் உழலும் சிறுவனைப் பற்றிப் படம் எடுத்திருக்கிறார். சரியான கல்வி வசதியும், உதவியும் இல்லாத ஒரு சிறுவன் தொழிற்சாலைக்குள் தள்ளப்படுவதைக் குறும்படமாக்கியிருக்கிறார். பல ஆசைகளில் உடம்பை நிர்மூலமாக்கும் மதுவின் தன்மை பற்றி ஒரு நிமிடக் குறும்படத்தில் காட்டியிருக்கிறார். பின்னலாடை, நூற்பாலைகளில் பதின்பருவப் பெண்கள் கொத்தடிமைகளாய் ஆக்கப்பட்டிருக்கும் கொடுமை பற்றி 'சுமங்கலி’ பேசுகிறது. ’தழலில்’ சின்னச் சின்ன ஆசைகள் தலைமுறைகளைத் தாண்டி கடந்து போவதாக இருக்கிறது. 'கண்ணாமூச்சியில் தலைமுறை இடைவெளி கடந்த தாத்தா பேரன் உறவு பற்றிய அழுத்தம் இருக்கிறது.சிறந்த சிறுகதைத் தன்மையை 'கண்ணாமூச்சி’ அதன் திரைக்கதையாகப் பெற்றிருக்கிறது. திருப்பம் தரும் எதிர்வினை முத்தாய்ப்பாக அமைந்துவிட்டிருக்கிறது. தாத்தா பேரனிடம் கதை சொல்லும்போது யதார்த்த உண்மைகளை மீறி தனது வீரச்செயல்களுக்கான முத்திரையை நிறையச் சொல்லுவார். தனது ஆளுமையை நிலைநிறுத்த அது தேவையானது என்றிருப்பவர். நொய்யல் ஆற்றில் கரைபுரண்டோடிய வெள்ளம் பற்றி பேரனிடம் கதை சொல்கிறார். கதை கேட்டு பேரன் தாத்தாவுடன் நெருங்கியிருக்கிறான். அவனது நண்பன் செஸ்-ஸில் வெல்ல முடியாதவனாக இருப்பதாகக் காட்டி அவனைத் தாத்தா வெல்ல வேண்டும் என்கிறான். "நீங்க செஸ் சேம்பியன் ஆச்சே தாத்தா" ... தலையாட்டிவிடும் தாத்தா வேறு வழியின்றி செஸ் கற்றுக்கொள்கிறார்.தனது பழைய நண்பன் ஒருவனை தேடிச்சென்று செஸ் நகர்வுகளைக் கற்றுக்கொண்டும் செஸ் பற்றிய புத்தகங்களை வாசித்தும் ஒருவார இடைவெளியில் பையனை ஞாயிறில் எதிர்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் கற்றுக்கொள்கிறார். வீட்டில் பலரின் விமர்சனத்திற்கு ஆளாகிறார். "பேரன் கேட்டிருக்கிறான், என்ன செய்ய"? ஞாயிறில் அந்த செஸ் பையன் வருவதில்லை. பேரனுக்காகக் காத்திருந்து அலுத்துப்போகிறார் தாத்தா. கையில் பேட்டுடன் கிரிக்கெட் மைதானத்திலிருந்து வருகிறான் பேரன்.
" இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. செஸ் போட்டி உன் பிரண்டோட இருக்கே. எங்கடா அவன் பயந்து போயிட்டனா?"
"அதிருக்கட்டும் தாத்தா." என்று கிரிக்கெட்டில் வீரனான அவனின் நண்பனான ஒருவனைக் குறிப்பிட்டு அவ்னைத் தாத்தா தோற்கடிக்க வேண்டும் என்கிறான்.
"தாத்தாதான் கிரிக்கெட்டிலும் சாம்பியனாச்சே"
"ஆமாமா"
காலச்சூழலுக்கேற்ப தன் நண்பர்களையே சக நடிகர்களாக்கி அந்த அனுபவங்களுக்குள் அமிழ்ந்திருக்கிற அவர்களை கதை மாந்தர்களின் மூலம் வெளிப்படுதுவதாய் தனக்கு நெருக்கமானவர்களை நடிக்க வைத்திருக்கும் ரவிக்குமார், அந்த நெருக்கமானவர்களின் பலவீனஙகளை கடந்து திரையில் வெளிப்படுத்த சிரமஙகள் பட்டிருந்தாலும் அவர்களின் அனுபவங்களை நடிப்பிற்கும் உரமாக்கிக் கொள்கிறார். சக மனிதர்களால் வெளிப்படும் படைப்பிற்கான தன்மை யதார்தத்திற்கு வெகு அருகாமையில் இருக்கிற்து. அந்த வகையில் ஜெயபால், கே.பொன்னுசாமி, நந்தகோபால், சபரி ஆகியோர் நடிப்பை சொல்லலாம். உயர்ந்த தொழில் நுட்பக் காமிராவைப் பயன்படுத்தியிருந்தால் இப்படத்தின் தரம் வெகுவாகக் கூடியிருக்கும். சதுரங்கபலகைக் காட்சிகள், பலருடன் விளையாடுவதைக் காட்டியிருப்பது, சூழலை சரியாகக் காட்சிக்குள் கொண்டுவருவதில் நேர்ந்த அக்கறை இருக்கிறது. அக்கறை கொண்ட தலைமுறை குதிரைப்பாய்சசலாய் விரைந்துகொண்டிருக்கிற்து.

நன்றி

" சிக்கிமுக்கி "



வியாழன், 8 ஏப்ரல், 2010

சந்திரனின் கீழ் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள்

கேரளத் திரைப்பட விழாக்களில் சிறந்த படத்திற்கான ‘ஸ்வர்ண சக்கோரம்’ பரிசு ரூ. 10 லட்சம் வழங்கப்படுகிறது. இவ்வாண்டு சிறந்த இயக்குனருக்கான ‘ராஜத சக்கோரம்’ விருதும், ரசிகர்களின் சிறப்பு விருதும் என்று இரட்டை சிறப்பம்ச விருதுகளைப் பெற்றபடம் ‘ட்ரூ நூன்’ என்ற தகிஸ்தான் படமாகும்.
மத்திய ஆசியாவில் ஆப்கான் எல்லை, உஸ்பெக்கிஸ்தான், சீனா போன்ற நாடுகளுக்கு மத்தியில் அமைந்திருப்பது தகிஸ்தான். ஆப்கானின் கலாச்சாரக் கூறுகளை இந்த மண் பெற்றிருக்கிறது. பெர்சிய மொழி பேசும் இம்மக்கள் சோவியத் குடியரசோடு இருந்தவர்கள். 1992 முதல் 1997 வரை நடைபெற்ற உள்நாட்டுப் போர் அந்த நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைத்து விட்டது. ஏழ்மையான நாடாக்கி விட்டது. தொலைக்காட்சித் தொடர்களும், வீடியோ படங்களும் சிறிய அளவில் தயாரிக்கப்பட்டாலும் கடந்த 18 ஆண்டுகளில் தகிஸ்தானிலிருந்து எந்த ஒரு திரைப்படமும் வெளிவரவில்லை. அதற்கான வசதிகளும் அந்த நாட்டில் இல்லை. திரைப்பட ஸ்டுயோக்கள், தொழில்நுட்ப அலுவலகங்கள் இல்லை. இந்தச் சூழலில் கடந்த 18 ஆண்டுகளில் வெளிவந்திருக்கும் முதல் படம் இதுவாகும். இதை இயக்கியவரின் முதல் படம் என்ற அளவிலும் இது சிறப்பிடம் பெறுகிறது.
சோவியத் யூனியனின் வீழ்ச்சி இந்த நாட்டை வெகுவாகப் பலவீனப்படுத்திவிட்டது. மதச்சார்பற்ற நாடு என்றாலும் 98 சதம் முஸ்லிம்கள் வாழும் நாடு. அதில் 95 சதம் ஷியாக்களும், 3 சதம் சன்னிகளும் இருக்கிறார்கள். தஸ்கிஸ்தான் மொழியும் அவர்களின் பயன்பாட்டில் உள்ளது. மத்திய வயது வரையிலான கல்வி அமலில் இருந்தாலும் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையே பார்க்க முடிகிறது. இடிந்த பள்ளிக் கூடங்கள். இப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி, குழந்தைகளின் கல்வி நிலையைத் தெரிவிப்பதாக இருக்கிறது. முள் கம்பி வேலியின் இருபுறமும் குழந்தைகள் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒருபுறம் ஆசிரியர் ஒரு கரும்பலகையைப் பிடித்தபடி பாடம் நடத்துகிறார். ராணுவ வண்டிச் சத்தம் வருவதைக் கேட்டு எல்லோரும் கலைந்து போகிறார்கள்.
அந்தக் கிராமத்தில் கிரில் என்ற ரஷ்ய முதியவர் தட்பவெப்பநிலை கண்காணிப்பு பரிசோதகராக இருக்கிறார். நிலபர் என்ற பெண் அவருக்கு உதவுபவளாக இருக்கிறாள். தன் குடும்பம் இருக்கும் ரஷ்யாவிற்கு அவர் எழுதும் கடிதங்களுக்குப் பதில் இல்லை என்பது அவரின் சோர்வுக்குக் காரணமாக இருக்கிறது. அந்த மலைப்பிரதேசத்தின் இன்னொரு மேல் பகுதி கிராமத்து இளைஞன் ஒருவனுக்கு நிலபர் மணமுடிக்க நிச்சயிக்கப்பட்டிருக்கிறாள். திடுமென ஒரு நாள் அமெரிக்க-கனடா எல்லைகளைப் பிரிக்கிற சர்வதேச எல்லைக்கோட்டினர் நிலபரும், அவள் காதலனும் இருக்கும் வெவ்வேறு கிராம எல்லைகளை முள்கம்பி வேலி போட்டுப் பிரிக்கிறார்கள். இனி எந்தப் பகுதிககுச் செல்வதென்றாலும் விசா வேண்டும். நிலபரின் அம்மாவிற்குப் பிரசவ வலி. அந்த மேல் பகுதி கிராமத்திற்குத்தான் செல்லவேண்டும். நிலபருடன் சேர்ந்து 3 பெண் குழந்தைகள். இந்தப் பிரசவம் ஓர் ஆண் குழந்தையைத் தரும் என்று நிலபரின் தந்தை நம்புகிறார். திருமணத் தேதியும் நெருங்குகிறது. முள்வேலியைக் கடந்து போய் தங்கள் உறவினர்களைப் பார்ப்பது, பள்ளிக்கூடம் போவது, சந்தைக்கு, மருத்துவமனைக்குப் போவது அவர்களால் கற்பனை செய்துகொள்ள முடியாத விஷயமாகிறது. இதை அப்பகுதி மக்கள் எதிர்த்தாலும் ராணுவம் கெடுபிடியாக இருக்கிறது. வேலி எல்லையில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதை வெடித்துக் காண்பித்துப் பயமுறுத்துகிறது. கிரில் முள்வேலியை ஒரு இடத்தில் சிதைத்து பிரசவத்திற்குப் போனவளைப் பார்க்க நிலபர் அப்பாவை அனுப்புகிறார். நிலபரின் திருமண நாளை எப்படிக் கொண்டாடுவது என்று தெரியவில்லை. கண்ணிவெடிகளைக் கண்டறிய ஒரு கருவியை உருவாக்குகிறார் கிரில். நிலபரும் கிரிலும் இரவில் அக்கருவியைக் கொண்டு அவர்கள் கடக்கவிருக்கும் பகுதியில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதை சிறு சிவப்புக் கொடியை வைத்து அடையாளமாக்குகிறார்கள். நிலபரின் அம்மாவிற்கு ஆண் குழந்தை பிறக்கிறது. நிலபரின் திருமண நாளில் விருந்து நடக்கிறது. மேல்பகுதிக்கு நிலபருடன் சிலரே செல்லலாம். ராணுவத்தின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க வேண்டும். முள்வேலி தற்காலிகமாக துண்டிக்கப்பட்ட சிறு இடைவெளியில் கண்ணிவெடிகளைச் சரியாக அடையாளம் கண்டு மணமகள் இருக்கும் பகுதிக்குச் சிலரே செல்லலாம் என கிரில் சொல்கிறார். குடும்ப உறுப்பினர்கள் தேர்வாகி கிரில்லின் உதவியுடன் கடக்கிறார்கள். கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கும் இடங்களில் ஜாக்கிரதையாகக் கால்வைத்து அவர்கள் நகர்ந்து மேல்பகுதிக்குப் போகிறார்கள். கிரில் காலில் ஒரு கண்ணிவெடி தட்டுப்படுகிறது. நகர்ந்தால் குண்டு வெடிக்கும். ஒவ்வொருவராக மேல்பகுதிக்கு அனுப்பிவிட்டு அவர் அந்த இடத்திலேயே நிற்கிறார். மற்றவர்கள் மேலேவர வற்புறுத்துகிறார்கள். தன் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்ட ஹாம் ரேடியோ துண்டிக்கப்படவில்லை என்று காரணம் சொல்கிறார். உண்மையாகவே பல கடிதங்களுக்குப் பதில் இல்லாத அவரின் குடும்பத்தினர் அப்போது ஹாம் ரேடியோவில் கிரில்லைத் தொடர்பு கொள்கிறார்கள். தன் நிலைமை கிரில்லுக்குத் தெரிகிறது. திருமண கோஷ்டியை ஜாக்கிரதையாக மேல்பகுதிக்கு அனுப்பிவிட்டு அவர் ஒரு கண்ணிவெடி வெடித்து மரணமுறுகிறார்.
இப்படத்தின் மையத்தை பக்மன் ஹோபாடியின் படங்களிலும் காணலாம். கேரள சர்வதேசத் திரைப்பட விழாவில் தேர்வுக்குழுவில் இடம் பெற்றிருந்த குர்திஸ் திரைப்பட இயக்குனர் பக்மன் ஹோபாடியின் ‘டர்ட்டில்ஸ் கேன் பிளை’ கண்ணிவெடிகளுக்குள் தங்களின் வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டவர்களைப் பற்றிய முக்கியமான படமாகும். 1988ல் சதாம் ஹுசைன் வட ஈராக்கிலுள்ள பல குர்திய கிராமங்களைத் தரைமட்டமாக்கினார். அகதி முகாமில் வாழும் சிறுவர்களுக்குக் கண்ணிவெடிகளை அகற்றுவதும் அதைக் கொண்டுபோய் விற்பதும் அமெரிக்காவின் போர் செய்திகளை அறிந்து கொள்வதும் சாதாரண வேலையாகிறது. கண்ணிவெடியில் காலை இழந்த சிறுவன் ஒருவன் வெடிக்காத கண்ணிவெடிகளைத் தேடி எடுப்பதை ஒரு சிறுவர் பட்டாளத்துடன் செய்கிறான். கண்ணிவெடிகளைக் கூடையில் போட்டு முதுகில் சுமந்து அச்சிறுவர்கள் நடமாடுகிறார்கள். குர்திஸ்தான் ஒரு கண்ணிவெடி விதைப்பு பிராந்தியமாக இருக்கிறது. இப்படத்தில் ஒரு சிறுமி நள்ளிரவில் அகதி முகாமினை விட்டு வெளியேறி குளத்தில் இறங்கி, மண்ணெண்ணையை உடலில் ஊற்றி பற்ற வைத்துக் கொள்கிறாள். குளத்தில் கரையில் அம்மா என்றழைத்தபடி குழந்தை நிற்கிறது. தீயை நனைத்துவிட்டு குளக்கரைக்கு மேல்வந்து குழந்தையை எடுத்துக் கொள்கிறாள். ஊன்றுகோலுடன் நடக்கும் சாட்டலைட் என்ற புனைபெயர் கொண்ட சிறுவன் துணையாக இருக்கிறான். பக்மன் ஹோபாடியின் உலகம் இன்னொரு பிரதேசத்தில் இப்படத்தில் விரிவடைந்துள்ளது. கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட உலகத்தில் சிறு குழந்தைகள் சர்வசாதாரணமாக நடமாட அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனமாக இருக்கிறது. சந்திரன் ஆகாயத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்தாலும் வெடித்துச் சிதறும் சூரியனாய்க் கண்ணிவெடிகள் புதைந்திருப்பதை ‘ட்ரூ நூன்’ படம் சொல்லுகிறது. செயலிழந்த வெடிக்காத கண்ணிவெடிகள் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருள்களாகின்றன.

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

பாலியல் சுற்றுலா

புத்தமத நாடான தாய்லாந்து ‘பாலியல்’ சுற்றுலாவிற்குப் பெயர் போனதாக விளங்குகிறது. பொருளாதார வளர்ச்சியின் முன்மாதிரியாக முன்பெல்லாம் குறிப்பிடப்பட்ட தாய்லாந்து 2006-07ம் ஆண்டுகளில் ராணுவ ஆட்சியில் பிடிபட்டது. அரசியல் கட்சிகளின் இயக்கங்கள் தடை செய்யப்பட்டன. தொண்ணூறுகளின் இறுதியில் பொருளாதாரச் சிக்கல்களின் பெரும் பள்ளத்திலிருந்து மீண்டது. இந்தியா, சீனா மற்றும் ஆசிய நாடுகளின் கலாச்சாரத் தாக்கத்தாலும் புத்தமதத்தின் பின்பற்றலாலும் கீழ்படிந்திருந்த தாய்லாந்தில் 2500 ஆண்டுகால புத்தமத போதனைகள் அந்த நாட்டை எந்த வகையிலும் பாலியல் ‘விபச்சார’த்திலிருந்து மீட்டு விடவில்லை. புத்த போதனைகள் ஒரு எல்லையில் நின்று வேடிக்கை பார்க்கிறது என்று சொல்லப்படுவதுண்டு. வறுமை ஒருவகையில் ‘தாய்’ கிராமப் பெண்களையும், சிறுமிகளையும் விபச்சாரத்துள் தள்ளி விட்டது. அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க புத்தமதத் துறவிகளைவிட, தன்னார்வக் குழுக்கள்தான் அதிக அளவு செயல்பாடுகளில் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். ‘மத்திய வழி’ என்றொரு போதனை புத்தமதத்தில் இருக்கிறது. அந்த போதனைகூட விபச்சாரத்தை வெகுவாகக் கண்டிப்பதில்லை என்கிறார்கள். உலகின் 50வது பெரியநாடு, அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதன்மையானது, உலகின் சிறந்த குடும்பப் பொறுப்பான மனைவிகள் உள்ள நாடு என்ற பெருமைகளை மீறி, பாங்காக் போன்ற நகரங்களின் மற்ற உள் கிராமங்களின் விபச்சாரம் இன்னொரு வகை நிலையின் குறியீடாகவும் இருக்கிறது.
அந்த நாட்டின் இயற்கை வளம், யானைகள், அடர்ந்த காடுகள், திரைப்பட முயற்சிகளுக்கான குறைந்த செலவு போன்றவை அமெரிக்கப் படங்கள் நிறைய எடுக்க வசதிகளாக அமைந்திருக்கிறது. பெருமளவில் அமெரிக்கப் படங்கள் அங்கு எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதே சமயம் 80 ஆண்டுகால தணிக்கைக் குழு சிக்கல்களால் அந்நாட்டுப் படங்களுக்கு ஏற்படும் சிதைவுகள், தடைகள் சுயமான இயக்குனர்களை நல்ல படங்களை எடுக்கவிடவில்லை. கடந்த ஏழு ஆண்டுகளில் சொந்த நாட்டின் அரசியல், பொருளாதார, தணிக்கைக் குழுவின் சிக்கல்களை மீறி உலக அளவில் பேசப்படும் படங்களைத் தந்தவர்களில் பெக் எக் ரத்தன் ரருங் மிக முக்கியமான இயக்குனராக வெளிப்பட்டிருக்கிறார்.
பெக் எக் அமெரிக்காவில் திரைப்படக் கல்வி பயின்றவர். பேய், சண்டை, மூன்றாம்தர நகைச்சுவையே தாய்லாந்து படங்களின் அம்சங்களாக இருந்திருக்கின்றன. அமெரிக்க சாயல் படங்களும், திகில் படங்களும் மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கு திரையிடலுக்காக எடுக்கப்படுகின்றன. பெக்எக்கின் ‘69’ என்ற முதல் படம்கூட நகைச்சுவை கலந்த படமாகத்தான் இருந்திருக்கிறது. ‘டிரான்சிஸ்டர் லவ் ஸ்டோரி’ என்ற படம் நகைச்சுவை அம்சங்களை மீறி தீவிரத்தொனியைக் கொண்டிருந்தது. கிராமப்புறத்தைச் சார்ந்த பான் என்ற இளைஞன் திரைப்படப் பாடல்களால் ஆகர்ஷிக்கப்பட்டவன். உள்ளூரில் ஒரு விவசாயியின் பெண்ணைச் சுற்றித் திரிகிறான். திருமணம் செய்து கொள்கிறவன் ராணுவத்தில் வேலை கிடைப்பதால் சென்று விடுகிறான். எதேச்சையாய் திருவிழாவொன்றில் நடக்கும் பாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு பாங்காக் நகரத்திற்குத் திரைப்பட வாய்ப்பிற்காகப் போகிறான். சாதாரண துப்புரவாளனாக இசைப் பதிவுக்கூடத்தில் வேலை கிடைக்கிறது. இரண்டு ஆண்டுகள் சிரமப்பட்டு ஒரு பெண்ணின் சிபாரிசால் கச்சேரியில் பாடத்துவங்குகிறான். ஆனால் அவனுக்கு உதவுபவன் ஓரினப் பாலுறவுக்குத் தூண்டுவதால் அது சாவில் முடிந்து போக தப்பித்து ஓடுகிறான். கரும்புக் காட்டொன்றில் வேலை செய்து வருபவன் அதன் மேலாளரியின் நடவடிக்கை பிடிக்காமல் தப்பி எதேச்சையாக திருட்டில் ஈடுபட்டு சிறைக்குச் சென்று விடுகிறான். கர்ப்பமாய் அவன் கிராமத்தில் விட்டுவந்த மனைவி குழந்தை பெற்று வளர்ப்பவள், நகரத்திற்கு அவனைத் தேடி வருகிறாள். அவனுக்கு ‘மழை நீரை’ பொட்டலப் பரிசாகக் கொண்டு வருகிறாள். அடுத்த நாள் சந்திப்பதாக சொன்னவன் சாவுப்பிரச்னையில் பான் மாட்டிக் கொண்டுவிட, நிர்க்கதியாக வீடு திரும்புகிறாள். உள்ளூரில் மருத்துவப் பிரதிநிதியாக வரும் ஒருவனின் நட்பும், உத்தரவாதமும் அவளுக்கு இன்னொரு குழந்தையைத் தந்து விடுகிறது. சிறையிலிருந்து திரும்புபவன் கிராமத்திற்குத் திரும்புகிறான். மனைவிக்கு அவன் பரிசளித்த டிரான்சிஸ்ட்டர் புழுதிபட்டுப் பயனில்லாமல் போய்விட்டது. பெக் எக்கின் ‘பிளாய்’ படம் அவரின் சிறந்த படங்களில் ஒன்றாகும். பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து திரும்பும் விம், அவனது முன்னாள் தொலைக்காட்சி நடிகையான மனைவி டாங்குடன் ஒரு சாவுசடங்கிற்காகக் காத்திருக்கிறான் ஒரு விடுதியில். அங்கு வந்து தன் அம்மாவிற்காகக் காத்திருக்கும் இளம் வயதுப் பெண்ணுடன் டாங் கணவனை இணைத்துப் பார்த்து சந்தேகப்படுகிறாள். ஏழு வருடத் திருமண வாழ்க்கையை முறித்துப் போட்டபடி டாங் கிளம்பிவிடுகிறாள். அவளின் ரசிகன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஒருவன் அவளது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். அங்கு பாலியல் அத்துமீறல் நடக்கிறது. தப்பிவருகிறாள். இதனிடையில் விடுதியில் வேலை செய்யும் ஒரு பெண் உலர்சலவைப் பிரிவிலிருந்து ஒரு உடுப்பை எடுத்து வருகிறாள். அதை அணியும் இன்னொரு ஆண் பணியாள் அவளுடன் உடல் உறவு கொள்கிறான். ஒரு பக்கம் டாங்கின் அலைபாய்தலும் சிரமங்களும், இன்னொருபுறம் விடுதிப்பெண்ணின் உற்சாகமான உடல் உறவும் களிப்பும் என்று படம் செல்கிறது. இப்படத்தில் இடம்பெற்ற உடல் உறவுக் காட்சிகளுக்காக தாய்லாந்தில் இப்படம் தடை செய்யப்பட்டது. சர்வதேசப் பரிசுகள் பெற்றபின் பின்னால் சீரமைப்பு செய்யப்பட்டு தாய்லாந்தில் வெளிவந்தது.
இவரின் இவ்வாண்டுப் படம் ‘நிம்ப்’. இளம்புகைப்படக்காரர் காதலியுடன் ஒரு காட்டிற்குச் செல்கிறார். அதில் பெண் காணாமல் போவதும் ஒரு மரம் இயற்கையில் குறியீடாகி அழிவின் உச்சமாக பயமுறுத்துவதும் இப்படத்தில் மையமாக இருக்கிறது.
தாய்லாந்தின் சிறந்த பத்துப் படங்களில் ஒன்றாக ‘நிம்ப்’ கணிக்கப்பட்டிருக்கிறது. திருப்தியில்லாத திருமணமும் அது வாழ்க்கையைப் பயமுறுத்திக் கொண்டிருப்பதையும் மரம் என்ற குறியீட்டை மையமாகக் கொண்டு பெக் எக் இயக்கியிருக்கிறார். கலைப் பட வகையில் அவரின் சமீபப் படங்கள் இருப்பது ஒரு குற்றச்சாட்டாக அவர்மீது வைக்கப்பட்டது. வெளிநாட்டு ரசிகர்களுக்காக கலைப்படங்களை இயக்குபவர் என்ற முத்திரை அவர்மீது குத்தப்பட்டிருந்தது. திகிலும் மோசமான நகைச்சுவை, சண்டை, பாப் கலாச்சாரம் போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து தாய்லாந்து படங்களின் போக்கை வெளிநாட்டு ரசிகர்களின் கவனிப்பிற்காய் மாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர் பெக் ஏக். என் மேல் உள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து நான் தப்பிப்பதற்காகவே என்னைப் பாதித்த அமெரிக்க திகில் படங்களின் வரிசையில் அடுத்ததாய் ஒரு திகில் படத்தை எடுக்கவிருக்கிறேன் என்கிறார்.