சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 5 மார்ச், 2024

இலக்கிய கருத்தரங்கம் வாசகர் சிந்தனை பேரவை சார்பாக இலக்கிய கருத்தரங்கம் ஞாயிறன்று நடைபெற்றது. ஏவிபி லேஅவுட் சங்க கட்டிடம், காந்திநகரில் நடைபெற்றது பாரதி சுப்பராயன் அவர்கள் நவீன மனிதர்கள் என்ற தலைப்பில் உரையாற்றும்போது “ நவீன மனிதர் என்பவன் பகுத்தறிவாளன் கேள்வி கேட்பவன்.., மாற்றம் இல்லாதது என்றும் இல்லை எல்லாம் மாறும் ஆனால் எந்த காலத்திற்கும் மாறாத நவீனம் அன்புதான். சக மனிதன் அன்பு என்றைக்கும் நவீனமானது தான் “ என்று குறிப்பிட்டார் முத்து பாரதி தீர்த்தகிரி என்ற விடுதலைப் போராளி என்ற தலைப்பில் பேசினார் அழகு அரசப்பன் கதையாடல் என்ற தலைப்பில் மற்றும் ச. நாகராஜன் புத்தகக் கலை என்ற தலைப்பிலும் பேசினர். சுப்ரபாரதி மணியன் எழுதிய திரைப்படக் கட்டுரைகள் நூல் ” பெயர்கள் இல்லாத வீடு “ தொகுப்பை பாரதி சுப்பராயன் வெளியிட தங்க பூபதி பெற்றுக் கொண்டார் .இதை சென்னை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பலர் கவிதை வாசித்தனர் கருத்துரைகள் வழங்கினர். குட்டி கிருஷ்ணன் நன்றியுரை வழங்கினார். வாசகர் சிந்தனை பேரவையின் தலைவர் துரை, செயலாளர் வெள்ளிங்கிரி, துணைச் செயலாளர் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்திற்கு வாசகர் சிந்தனை பேரவை பாலசுப்பிரமணி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள் . வாசகர் சிந்தனை பேரவையின் 15 வது கூட்டம் இது. செய்தி : தங்கபூபதி - வாசகர் சிந்தனை பேரவையின் நிர்வாகி
கூவம் நாவல்/ காவ்யா சண்முகசுந்தரம் ( சுந்தரபாண்டியன் ) காவ்யா சண்முகசுந்தரம் அவர்கள் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை சமீபத்தில் நதிகளின் பெயரில் எழுதிக் கொண்டிருக்கிறார். அப்படித்தான் மூன்றாவது பகுதியாக அவருடைய சென்னை வாழ்க்கை கூவம் என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது படிப்பு சார்ந்த சென்னை வாழ்க்கை பிறகு வேலைக்காக அலைவது ஆகியவை இந்த நாவலின் மையத்தில் உள்ளன இந்த நாவலில் சென்னை வாழ்க்கையை பற்றி அனுபவங்களை விரிவாக சொல்லி இருக்கிறார். படிப்பு தாண்டி இலக்கியம், அரசியல் போன்றவற்றினுடைய பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. கூவம் எப்படி நாறிக்கொண்டிருந்தது. பழகிய வாழ்க்கையில் நாற்றம் குறைந்து போய் காணப்பட்டது. இது மையமாக இருக்கிறது வழக்கமாய் அவருடைய நாவல்களில் தென்படும் கிண்டலும் கேலியும் அங்கங்கே வந்து போகிறது. பல சமகால எழுத்தாளர்களை, கல்வித்துறை சார்ந்தவர்கள் இந்த நாவலில் சந்திக்கப்படுவது நல்ல விஷயம். தமிழகத்தின் அரசியல் சூழலில் மிக முக்கியமான காலகட்டமான நெருக்கடி நிலை, எம்ஜிஆரின் அரசியல் பிரவேசம் முதற்கொண்டு பல்வேறு விஷயங்கள் பதிவாகியுள்ளன நாவலாசிரியர் தன் வேலைக்காக பெங்களூர் செல்லும் விடயம் கடைசி அத்தியாயத்தில் வந்து முடிகிறது.இனி பெங்களூர் அனுபவங்களை அடுத்த நாவலில் எழுதுவார் . பெங்களூர் பா .கிருஷ்ணசாமி அவர்கள் ஒரு நாவலை 500 பக்கம் அளவில் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவரின் பெங்களூர் அனுபவங்களை பதிவு செய்திருக்கிறார். அவை முழுக்க தனி மனித அனுபவங்களாய் இருக்கின்றன, பெங்களூர் வாழ்க்கையின் அரசியல், சரித்திர கலாச்சார அரசியல் சார்ந்த குறிப்புகள் எதுவும் இல்லாமல் அந்த நாவல் நிரம்பியிருந்தது. ஆனால் காவ்யா சண்முகசுந்தரம் அவர்களின் இந்த நாவலில் சென்னை வாழ்க்கையின் சரித்திர கலாச்சார அரசியல் சார்ந்த குறிப்புகள் மற்றும் இலக்கிய குறிப்புகள் விரவிக் கிடைக்கின்றன. இதை வாசகன் சுலபமாக படிக்க ஏதுவாகிறது. ஒரு நாட்குறிப்பேடு சங்கதிகளைப் புரட்டிக் கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை இந்த நாவல் தருகிறது. இது மிக எளிமையானது நாவலின் இன்னொரு பக்கத்தை மறுப்பதாகவும் இருக்கிறது. ஆனால் காவ்யா சண்முகசுந்தரம் அவர்களின் அனுபவங்கள் தமிழுக்கு தேவையாக இருக்கின்றன. இலக்கிய ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் பல விஷயங்களை பதிவு செய்ய இந்த வகை நாவல்கள் அவசியம். இலக்கிய மாணவர்களையும் வாசகர்களையும் குறிப்பிட்ட காலம் சார்ந்த சரித்திர ஏடுகளை புரட்டிப் பார்க்கும் அனுபவத்தை தரும் நாவலாக இது அமைந்துள்ளது. ( காவ்யா பதிப்பகம், விலை ரூபாய் 250 )-- சுப்ரபாதி மணியன்

ஞாயிறு, 28 ஜனவரி, 2024

New book . ncbh publications சுவர்கள் நாவல்- மாற்கு / சுப்ர பாரதி மணியன் கிறிஸ்தவத்தில் கல்லறைகளில் தீண்டாமை இருக்கிறது தீண்டாமை சுவர்கள் கல்லறைகளில் இருந்து மக்களை பிரிக்கின்றன. ஆதிக்க சாதியைச் சார்ந்த கிறிஸ்தவர்களுக்கு ஓரிடத்திலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மற்றொரு இடத்திலும் கல்லறை இருக்கிறது என்ற நிலைமை தமிழகத்தில் இன்றும் தொடர்கிறது. கிறிஸ்துவத்தில் தீண்டாமைக்கு இடம் இல்லை ஆனால் தீண்டாமை பல இடங்களில் கடைபிடிக்கப்படுகிறது இதை கிறிஸ்தவ தலைவர்களால் தடுக்க முடியவில்லை தீண்டாமை என்பது இந்தியாவை பொறுத்த அளவில் சமயங்களைக் கடந்த சமூக பிரச்சனையாக மாறி உள்ளது என்பது எதார்த்தம். தலித் ஒருவர் கிறிஸ்துவராக மாறினால் அவர் கிறிஸ்துவராக மாறிவிட்டார் எனவே அவரை சமமாக மதிக்க வேண்டும் என்று பொதுச் சமூகம் நினைப்பதில்லை. மத மாற்றத்திற்கு முன்பு அவரை எப்படி நடத்தியதோ அப்படியே தான் நடத்துகிறது என்ற மாற்கு அவர்களுடைய எண்ணங்கள் நாவல் வடிவங்களாக கிறிஸ்துவ சமுதாயத்தில் தலித் மக்கள் படும் சிரமங்களை கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது கிறிஸ்தவத்தில் எந்த விதத்தில் தீண்டாமை இருந்தாலும் தவறுதான் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது காலத்திற்கு காலம் புது வடிவங்களில் அது வெளிப்பட்டு இருப்பதை இந்த நாவலில் அவர் சொல்கிறார். இந்த விஷயம் சாவிலும் தொடர்கிறது ஆதிக்க சாதிக் கிறிஸ்தவர்கள் புதைக்கப்பட்ட இடங்களில் கல்லறைகளில் பக்கத்தில் தலித் கிறிஸ்தவர்கள் புதைக்கப்படக்கூடாது என்பதற்காக சுவரைக்கட்டி பிரித்துப் பார்க்கிறார்கள். இந்த தீண்டாமையை பற்றி எழுதப்பட்ட நாவல் தான் சுவர்கள் என்பதாகும். இறந்த பின்பு கிறிஸ்தவர்களுக்கு ஏற்படும் இந்த பாகுபாடு தேவையா கல்லறையில் சமத்துவம் இருக்கிறதா என்பதை பற்றி அவர் இந்த நூலை எழுதியிருக்கிறார். மாற்கு அவர்கள் கிறிஸ்துவ சமுதாயத்தைப் பற்றிய விமர்சனங்களை சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாவல்களில் வெளிப்படுத்தி இருக்கிறார் மற்றும் அவருடைய புலனாய்வு நூல்களும் தன் வரலாற்று நூல்களும் இதை வெளிப்படுத்துகின்றன. இதில் வருகிற செல்வம் என்ற கதாபாத்திரம் கிறிஸ்தவ பாதிரியார் ஆகி சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் ஆனால் அங்க இருக்கிற தீண்டாமையும் பாகுபாடும் அவரை அங்கிருந்து வெளியேறு செய்கிறதும் அவர் மீது காவல்துறையின் வன்முறையும் ஏவப்படுகிறது அவர் தன்னுடைய உயிரையும் இழக்க வேண்டி இருக்கிறது இந்த நாவலில் பல கதாபாத்திரங்கள் மூலம் அவர் சொல்லும் குரலை நாம் கேட்க வேண்டும் “ செத்த பிறகும் மேரிக்கு பக்கத்தில் வாழ முடியாத இப்ப நிலைதான் சாமி தெரியுது உயர்ந்த சாதிக்கு தனி கல்லறை. அரிசனங்களுக்கு தனி கல்லறை ..என்ன சாமி இது சாமி.. செத்த பிறகு கூட நான் என் மேரிக்கு பக்கத்தில் இருக்கக் கூடாதா ..எதற்கு சாமி இது தனித்தனி கல்லறையா நான் செத்த பிறகு என் மேரிக்கு பக்கத்தில் இருக்கணும்னு ஆசைப்படுகிறேன் என்று அதில் வருகிற கதாபாத்திரங்கள் ஒன்றை கதறுகிறது ஆதிக்க சாதி கல்லறைக்கு பக்கத்தில் புதைக்க முயற்சி செய்தால் கலகம் வரும். சாதி கலவரத்திற்கு வித்திட்டதாக அமையும் என்பதை இதில் வருகின்ற பல சம்பவங்கள் சொல்கின்றன. “ என்னடா இவன் எப்படி இங்கே வந்தான்னு தானே நினைக்கிறீங்க நமது சாதியை மதிப்ப நான் சாமியாரா போயி உயர்த்துவேன்னு நினைச்சீங்க ஆனா நான் அங்கு இருந்தா நமது சாதியின் மதிப்பு அவ்வளவு உயர்த்த முடியாது வெளியே வந்தாத்தான் அதிகம் உயர்த்த முடியும் என்று நினைத்தேன் அதனால் வெளியே வந்துட்டேன் “ என்று செல்வம் என்ற ஒரு மனிதனின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது ஆனால் அந்த குரல் பலவீனம் ஆகிப்போகிறது. இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் பிரிக்கும் சுவற்றை இடிக்கிறார்கள். அதன் பின்னால் என்ன நடக்கிறது என்பதையும் இந்த நாவல் சொல்கிறது. சமமான கல்லறையும் வேண்டும் தடுப்பு சுவர்கள் இருக்கக்கூடாது என்று போராடும் விடுதலை குழுக்கள் மதவாதிகளால் மற்றும் காவல்துறையால் அடக்கப்படுகிறார்கள்.” விளைச்சலில் எல்லோரும் சமமாக பாவிக்கப்பட வேண்டும். சமமாக அறுவடை செய்ய வேண்டும் இருப்பதை பரிந்து கொள்ள வேண்டும் எனக் கூட்டு முறை விவசாயம் செய்து அதை அடுத்த தலைமுறைக்குஅறிவிக்க வேண்டும் என்ற கனவை கூட இந்த நாவல் வருகிற கதாபாத்திரங்கள் உணர்த்துகின்றன. சாதிக் கொடுமைகளை எல்லாம் நீக்க வேண்டும் என்று கிறிஸ்துவத்துக்குள் கருப்பு தினம் கொண்டாடப்படுகிறது. அந்த கருப்பு தினங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதை இந்த சுவர்கள் நாவல் சொல்லுகிறது ரூபாய் 200 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை வெளியீடு 0
தாமரையில் வெளிவந்துள்ளது அக்கானி :. இலா வின்சென்ட் நாவல் -- சுப்ரபாரதிமணியன் பனையேறி மக்களுடைய வாழ்க்கையை ஹெப்சிபா ஜேசுதாசன் ஜேக்கப் வாத்தியார் முதற்கொண்டு செல்வம் வரை பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் வின்சென்ட் அவர்களின் நாவலில் அவருடைய களமும், கோலமும் வேறுபட்டதாக இருக்கிறது. வின்சென்ட் அவர்கள் சேலத்திற்கு நாஞ்சில் நாட்டு கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்து சுமார் 50 ஆண்டுகள் ஆகிவிட்டன ஆனால் இந்த நாவலில் அவர் பயன்படுத்தி இருக்கும் நாஞ்சில் நாட்டு பூட்டேற்றி கிராம மக்கள் சார்ந்த மொழியை அவர் பயன்படுத்தும் லாவகமும் மலையாளமும் தமிழும் கலந்த மணி பிரவாள பேச்சு நடையும் இந்த நாவலின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. அந்த பேச்சு மொழியோடு அவர்களுடைய உணவு வகைகள், அவர்களின் வசிப்படங்கள், வாழ்க்கை முறை போன்றவற்றை மிகவும் நுணுக்கமாக இதில் காட்டியிருக்கிறார். அந்த பனையேறி மக்கள் வேலையில்லாத போது நெசவு தொழிலைக் கைக்கொள்கிறார்கள் அல்லது கூலி வேலைக்குச் செல்கிறார்கள். பனையேறி தொழில் சார்ந்த தீவிரமான நுணுக்கமான விவரிப்புகள் போல நெசவாளர் சார்ந்த தகவல்கள் இல்லாமல் இருக்கிறது. ஆனால் கதை ஓட்டத்தோடு நெசவுத்தொழிலோடு அந்த மக்கள் எப்படி இயைந்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை சிறப்பாக சொல்கிறார். ஏழ்மையில் கிடக்கும் மக்கள் தங்கள் தினசரி வாழ்க்கைக்கு ஓடுபவர்கள். அவர்களுக்குப் பசியைத் தீர்க்க ஏதாவது உணவு கிடைத்தால் போதும். இதிலிருந்து மீட்சி என்பது பற்றி எல்லாம் அவர்கள் யோசிப்பதில்லை. ஆனால் கல்வி என்பது அவர்களுக்கு எப்படி மீட்சியைத் தருகிறது. பொதுவுடமை இயக்கங்கள் எப்படி அவர்களை வலிமைப்படுத்தி எழுச்சி கொள்ள வைக்கிறது என்பதுதான் இந்த நாவலின் முக்கிய மையமாக இருக்கிறது. அதுவும் பெண்கள் படும் பாட்டை சொல்ல இயலாது. குடும்பத்தில் உழைப்பாளிகளாக இருக்கிறார்கள். கணவன்களின் கொடுமையை சகித்துக் கொள்கிறார்கள். குடும்பப் பெருமையை காப்பாற்ற வேண்டியிருக்கிறது. பாலியல் ரீதியான பல்வேறு தொல்லைகளையும் சகித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது இதெல்லாம் மீறி தன் குடும்பத்து உறுப்பினர்களை பெருமைப்படுத்த பல்வேறு செயல்களில் செயல்பட வேண்டி இருக்கிறது. அந்த வகையில் ஏழ்மையிலும் கல்வியைப் பெறுவது அதற்கான முயற்சியில் எடுப்பது என்பது பெண்களின் முக்கிய கடமையாகி விடுகிறது. இந்த பனை தொழிலாளர்கள் தங்களுடைய சிரமங்களை அப்படியே சொல்லிக் கொண்டிருக்காமல் தங்கள் உரிமைகளை சார்ந்து போராடவும் வழி வகுத்துக் கொள்கிறார்கள். இதுதான் இந்த நாவலில் முக்கிய அம்சமாக இருக்கிறது. அந்த போராடும் மக்களின் வாழ்க்கை முறையில் இருந்து, படித்த ஒருவர் அந்த இயக்க வேலைகளுக்காக தன்னை ஈடுபடுத்திக் கொள்வதை சூசகமாக சொல்லி இந்த நாவல் முடிகிறது. அங்கு இருக்கிற பொதுவுடமை இயக்கம் சார்ந்த செயல்பாடுகளை பற்றி விரிவாக சொல்கிறபோது அப்பகுதியில் அந்த கட்சியின் தோற்றம், வளர்ச்சி அது தேர்தலில் தன்னை முன்னிறுத்த ஆசைப்படுவது, அது பற்றி விமர்சனங்கள் போன்றவையும் சொல்லப்படுகிறது கிறிஸ்துவத்தை பற்றியும், விடுதலை இறையியல் பற்றியும் பல்வேறு விவாதங்கள் இந்த நாவலில் இருக்கின்றன, அந்த விவாதங்களை அவர்கள் தங்களுடைய பேச்சுக்களாக, உரைகளாக மட்டும் கொள்ளாமல் நாடக வடிவில் சொல்லும் விதத்திலும் அந்த நாடகப் பிரதி என்று இந்த நாவலில் இடம்பெற்றிருக்கிறது. பொதுவுடமை இயக்கங்கள் இந்த மண்ணின், பனையேறி மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பாடுபடுவதை இந்த நாவல் பல்வேறு சித்திரங்கள் மூலம் சொல்கிறது. 70 களில் திருப்பூரில் நடந்த ஒரு நெசவாளர் போராட்டத்தை மையமாக வைத்து நான் ” தறி நாடா” என்ற நாவலை எழுதியிருக்கிறேன். அந்த நாவலில் நெசவாளிகளின் போராட்ட சூழலும் அந்த நெசவாளர் குடும்பத்திலிருந்து படித்த இளைஞன் அந்தப் போராட்டம் தருகிற அறிமுக காரணமாக தன்னை பொதுவுடமை இயக்கத்தில் முழுமையான மாறுவதற்காக தயார் படுத்திக் கொள்வதை அந்த நாவலில் நான் எழுதி இருந்தேன். அந்த நாவலின் இரண்டாவது பாகமாக அந்த இளைஞரின் பொதுவுடமை இயக்க அனுபவங்களும் இன்றைய கட்சி சார்ந்தவர்களின் சாதிய, தனி மனித குருரங்களும் சார்ந்து அது அவனை சிதைப்பதை இரண்டாவது பாகமாக எழுத நினைத்திருந்தேன். ஆனால் இரண்டாவது பாகம் ஒரு வகையில் பொதுவுடமை இயக்கம் சார்ந்த பலவீனங்களை பெரிதுபடுத்தி காட்டுவதாக அமைந்துவிடும் என்று நான் அந்த இரண்டாம் பாக நாவலை எழுதவில்லை. இந்த நாவலில் வின்சென்ட் அவர்கள் அப்படி ஒரு இளமையான, துடிப்பான இளைஞனைத் தான் முன்வைக்கிறார். சுயநலத்தோடு வாழ்க்கையை நடத்துவதை விட பொதுநலத்தோடு அணுகுவது என்பது அந்த இளைஞனுக்கு உவப்பாக இருக்கிறது. இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சிகள் சாதாரண தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியத் தாக்கங்களை இன்னொரு கோணத்தில் சொல்லும் நாவலாகவும் இது அமைந்திருக்கிறது. இந்த நாவலில் வரும் பாத்திரங்கள் பனையேரி மக்களுடைய வாழ்க்கையோடுப் பின்னிப் பிணைந்தவை. அவர்களிடம் மொழியும் அந்த வகையில் பின்னிப்பிணைந்தவை. ரத்தமும் சதையுமாக அந்த மனிதர்களை முன் வைப்பதில் இல வின்சென்ட் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார். அவருடைய 15க்கும் மேற்பட்ட நூல்களில் அவருடைய முதல் நாவலாக இதைக் கொள்ளலாம். பல்வேறு ஆய்வு நூல்களும் கட்டு நூல்களும் எழுதி இருந்தாலும் முதல் நாவல் என்ற வகையிலேயே ஒரு சிறந்த நாவலை அவர் தந்திருக்கிறார் என்பது கூடுதல் பலம் தருகிறது. பாரதி புத்தகாலயம் சென்னை வெளியீடு - ரூபாய் 330
உயிர்மையில் வெளிவந்துள்ளது சிறுகதை போட்றா ஒரு போடு சுப்ரபாரதி மணியன் இப்படி ஒரு கொலை செய்வதை இன்னும் தாமதமாக ஆரம்பித்திருக்கலாம் அல்லது தன்னை கொலை செய்ய சொல்லி சீனு தாமதமாகத்தான் வேலை கொடுத்திருக்கிறார் என்பது சுரேஷுக்கு விளங்கியது. வழக்கமாய் மிதிவண்டியில் வரும். சீனு அவரின் இரட்டை சக்கர வாகனத்தில் மது போதையில் இருந்த ஒருவரை கூட்டி வந்து வண்டியை நிறுத்தியபடி பின்னால் உட்கார்ந்து இருந்தவரை வலது கையால் எம்பி கீழே விழ வைத்தார். வந்தவர் முழு போதையில் இருப்பது நன்கு தெரிந்தது. விழுந்த வேகத்தில் எந்த வலியையும் அவர் முகம் காட்டாதபடி இறுகிப் போய்விட்டது கண்களை அவர் திறக்கப் முயன்று பின்பு மூடிக்கொண்டார் இவன் தலையில ஒரு அடி கொடுத்து சாகடித்துப் புதைத்திரு என்று சொன்னார். : போட்றா ஒரு போடு அரைகுறையாக இருந்த ஒரு குழியை சரியாக ஒரு குழியை மூட வேண்டிய வேலை இருந்ததால் கையில் கடப்பாரையும் மம்பட்டியும் சுரேஷ் கையில் இருந்தது. “ போடணும்னு சொல்றேனே போட்டுடு” சீனுவின் முகம் இன்னும் இறுக்கமாகத்தான் இருந்தது கண்கள் சிவந்து இருந்தன. நன்கு குடித்து இருக்கிறார் என்பது தான் தெரிந்தது. ஏதோ கோபப்பட்டு சொல்கிறார் என்று தான் சுரேஷ் நினைத்தான். . ” போடறேன்னு சொல்றனே போடு போட்றா ஒரு போடு “ . சுரேஷ் எதுவும் பேசாமல் தூரத்தில் இருந்த சிதைந்தக் கல்லறைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். ” அடுத்த வாரம் தங்கச்சி கல்யாணம் இருக்கு இல்ல. அதுக்கு பணம் வேண்டாமா. போடு ஒரே போட்ல போட்டு தள்ளு .புதுக்குழி போட்டு அவனை மூடிவிடு “ சுரேஷுக்கு அவனின் தங்கை திருமணத்திற்கு பணம் தேவையாகத்தான் இருந்தது ஆனால் அவன் கொடுக்கிற வேலை அபாயகரமாகத் தோன்றியது இதுவரைக்கும் அப்படி வேறு மாதிரி எதுவும் வேலை தந்ததில்லை. “ காசு வேணும்னா போடு நான் போட்டுடுவேன். ஆனா நீ போட்டுப் பாக்கணும். அதுக்காக தான். இங்கிருந்து ஆரம்பிக்கச் சொல்றேன் ”என்று சீனு சொன்னார். சுரேஷ் வேறு வழியில்லாமல் கையில் இருந்த மம்பட்டியால் கீழே போதையில் விழுந்து கிடந்தவனின் தலையில் ஓங்கி அடிக்க ரத்தம் பீறிட்டது. ” புதுக்குழி ஒன்னு தோண்டி உள்ள போட்டு. அவ்வளவுதான். ஒன்னும் நினைக்காதே. முதல் வேலைதான் சிரமமா இருக்கும் அப்புறம் போகப் போக இதுவே சுலபமாயிடும். உங்க தங்கச்சி கல்யாணம், அம்மாவுக்கு ஆபரேஷன், அப்பாவுக்கு வைத்திய செலவு எதுவேணும்னாலும் பார்த்துக்கிறேன். இங்கிருந்து நீ ஆரம்பிக்க வேண்டியிருக்கும்” 0 வேறு வழியில்லாமல் புதுக்குழியை அன்று சுரேஷ் தோண்ட வேண்டியிருந்தது. செத்துப் போனவனை அப்படியே காலால் உருட்டித் தள்ள வேண்டி இருந்தது. இதுவரை சீனு இது மாதிரியான வேலை அவனுக்கு கொடுத்ததில்லை. இதுதான் முதல் முறை.சீனு வந்த இரட்டைச் சக்கர வாகனத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். பலமுறை சீனுவின் மிதிவண்டியில் அவன் சென்றிருக்கிறான்.சுகமான பயணம் என்கிற வகையில்தான் இருந்திருக்கிறது 0 அவன் அந்த கல்லறை தோட்டத்திற்கு வந்தபோது கல்லறை குழி வெட்டுவனாக தான் வந்தான் “ குழி வெட்ற வேலைதா இருக்கு வேற ஒன்னும் வேலை இல்லை “ என்றார். ” செய்யறேங்க “ “ சரி பொணம் வரும்போது குழி வெட்டணும். அவ்வளவுதான் எதுத்த மாதிரி மின்மயானம் வரப்போகுதும். அது வர வரைக்கும் தான் நமக்கெல்லாம் வேலை இருக்கும். அதுவரைக்கும் தான் காசு எல்லாம் சேர்க்க முடியும். இந்த வேலையிலதா காசு பார்க்க முடியும்” குழி வெட்டும், மற்றும் பிணங்களை அடக்கம் செய்யும் வேலையைத்தான் சுரேஷ் செய்து கொண்டு இருந்தான். ஒரு நாள் ரோஸ் நர்சரிக்கு கூட்டிக் கொண்டு போனார். ரோஸ் நர்சரி என்பது ஒரு ஆரம்ப பாடசாலை. ஆங்கில பாடசாலை. மாலையில் நான்கு மணிக்கு அந்த பள்ளி வகுப்புகள் முடிகிறபோது வெளியேறு வரும்போது ஒரு குழந்தையை பார்க்கச் சொன்னார் சீனு இரண்டு நாட்கள் அப்படித்தான் அந்த பெண் குழந்தையைப் பார்த்தான். அழகாகத்தான் இருந்தது. “ அந்த குழந்தையை வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு கூட்டிட்டு போயி ஏதாவது சாப்பிட வாங்கி கொடுத்துட்டு எங்காச்சு ஒரு இடத்துல விட்டுட்டு வந்துரு. வேற ஒன்னும் பண்ணாதே” “ நான் குழி வெட்ற வேலையைப் பண்ணுகிறேன். அது போதும்” “ இதையும் பண்ணனும். இல்லைனா தங்கச்சி, அப்பா, அம்மா இவங்களையெல்லாம் யார் காப்பாற்றுவா. நான் கொடுக்கிற காசுதான் காப்பாற்றும்” அந்த குழந்தையை அவன் அப்படித்தான் தினமும் கவனித்திருந்து விட்டு நான்காவது நாள் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூட்டிக்கொண்டு போய் கொண்டத்து காளியம்மன் பின்புறம் இருந்த முனியப்பன் சிலை அருகில் விட்டு விட்டு வந்து விட்டான். அதற்குள் மூன்று மணி நேரம் ஆகிவிட்டது குழந்தையை காணவில்லை என்று பெற்றோர்கள் காவல் நிலையத்துக்கு போனார்கள். பல இடங்களுக்கும் செய்திகள் பரவின. கடைசியில் அழுது கொண்டிருந்த குழந்தையை சிலர் காவல்துறையிடம் ஒப்படைத்தார்கள். “ அந்த மூன்று மணி நேரம் அந்த குழந்தையை காணமுன்னு அந்த நாயி பதற்றப்பட்டு அலைஞ்சான் பாரு எனக்கு அது போதும். அதுதான் பழிவாங்க சரியானது” “ அந்த நாய் என்னங்க அப்படி பண்ணினான்.” “ அந்த நாய் .. அவ .. அவளை இந்தக் கல்லறைத் தோட்டத்துல ஒரு குழிதோண்டி புதைத்து இருக்கணும். ஆனா நான் விட்டுட்டேன். இப்போ சின்ன சாக்கா அவள பழிவாங்க இது பண்ணி இருக்கேன் .போதும். ஆரம்பம்தான் ” “ அவளுக்காக அந்த குழந்தையை எதுக்குங்க கஷ்டப்படுத்தணும்” “ அவளெ பழிவாங்க எங்க ஆச்சு ஆரம்பிக்கணும்ன்னு சரியா ஆரம்பிச்சிருக்கேன் .” அதுதான் சுரேஷ் செய்த முதல் குற்ற காரியம்..சவக்குழி வெட்டும் வேலையை தவிர சீனு சொன்ன பிற வேலைகளில் முதலாவது அது. . அதன் பிறகு சில கொலைகளை செய்யச் சொன்னார். எல்லாம் சுலபமாக முடிந்தது. ஆனால் இதெல்லாம் எங்க போய் மாட்டும் என்று தான் அவனுக்கு பயம் இருந்து கொண்டே இருந்தது. அவனுக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் ஏதாவது இப்படி செய்யச் சொல்வர் சீனு. ” அம்மாவெ நல்லாப் பார்க்க வேண்டாமா அப்பாவைப் பார்க்க வேண்டாமா இல்ல அவங்களுக்கு இந்த கல்லறைத் தோட்டத்துல குழியை வெட்டி பொதைச்சிடுவியா அதன்பின் குழி வெட்ற வேலையினால உனக்கு எல்லாம் ஃப்ரீயா வந்துடுமா “ இப்படி கொலை செய்வதை விட திருட்டு எவ்வளவோ மேல் என்று தான் அவனுக்கு தோன்றியது. திருட்டு பட்டத்திற்குள் போய் விடக்கூடாது என்று தான் அவன் நேர்மையாக வேலை செய்ய ஆசைப்பட்டு இந்தத் தோட்டத்திற்கு சவக்குழி வெட்டும் வேலைக்கு வந்தான். குழந்தையைக் கடத்திக் கொண்டு போன மாதிரி அப்படி சின்ன சின்னதாய் பல விஷயங்கள் செய்ய வேண்டி இருந்தது. யாரையாவது மிரட்ட வேண்டி இருந்தது. கொஞ்சம் நாலு தட்டு தட்ட வேண்டி இருந்தது. ஆனால் திரும்பத் திரும்ப கொலை செய்ய சீனு தூண்டவில்லை என்பது தான் அவனுக்கு ஆறுதலாக இருந்தது. .ஆனால் சுரேஷ் செய்த காரியங்களில் பலவை குற்ற காரியங்கள் என்று பட்டியலிடும் வகையில் தான் இருந்தது. அது சீனுவுக்கும் தெரிந்தது. இது எல்லாம் விட்டுவிட்டு வேறு வேலைக்கு போய் விடலாமா பக்கத்தில் புதுசா புதிதாய் ஏதோ மில்லொன்று வந்திருந்தது. தற்காலிகமாகத் தொழிலாளர்களை எடுக்கிறார்கள் என்று சொன்னார்கள். அதற்குப் போய் விடலாமே என்று கூட நினைத்தான். “ அப்படியெல்லாம் உட்டு விட மாட்டேன். நீ பண்ண காரியம் எல்லாம் என்கிட்ட இருக்கு. அதை வைத்து நான் உன்னை மிரட்டிடுவேன் எனக்கு துணையா நான் சொல்ற காரியத்தை பண்ணிட்டு தங்கச்சி அப்பா அம்மா குடும்பம் அப்புறம் இனி வரப்போற பொண்டாட்டி இவங்களையெல்லாம் நல்லா வச்சுக்க நீ என்னோடு இருக்கிறதா சரியா இருக்கும்.” வேறு வழி இல்லாமல் சுரேஷுக்கு அது கூட சௌரியமாகத்தான் தோன்றியது. ஆனால் சீனு என்ன சொல்லப் போகிறார், குழி வெட்டுவதைத் தவிர என்ன வேலை தரப் போகிறார் என்பது தான் அவனுக்குள் பயத்தை கிளப்பிக் கொண்டே இருக்கும். பெரும்பாலும் சவக்குழி வெட்டும் வேலையைத்தான் அவர் சொன்னார் என்பது ஆறுதலாக இருந்தது ..அந்த வேலையை செய்வதற்கு அந்த கல்லறை தோட்டத்தில் வேறு ஆட்கள் இல்லை. ஒரு ஆள் போதும் என்று சொல்லிவிட்டார் சீனு. .அவ்வப்போது வந்து சுத்தம் செய்துவிட்டு போகிற ஒரு முதியவள் சுரேஷ்சை ஏறிட்டும் பார்த்ததில்லை காரணம் அவன் முகத்தில் தெரிகிற. கொலைக் களையை அவள் கண்டுபிடித்து இருப்பாளா என்று சுரேஷிற்கு சந்தேகம் இருந்தது. கிறிஸ்துவர்களைப் புதைப்பதில்லை . ஆனால் கல்லறைத்தோட்டம் என்ற பெயர் எப்படி வந்தது என்பது அவனுக்கு ஆச்சர்யமாகத்தான் இருக்கும். சீனு கொலையாளி தான் என்ற சந்தேகம் சுரேஷுக்கு அவன் வேலைக்கு வந்த இரண்டாவது நாளில் தெரிந்துவிட்டது கல்லறை தோட்டத்தில் ஒரு பழைய வீடு இருந்தது. வீட்டு முன்புறத்தில் இருந்த அடைக்கப்பட்ட அறையில் தட்டு முட்டு சாமான்களும் பழைய மரச் சாமான்களும் கிடந்தன அதில் ஒரு மூட்டை ஒன்று கட்டப்பட்டு கிடந்தது. அதை ஆவலுடன் ஒரு நாள் அவன் பிரித்துப் பார்த்தான். கடப்பாரை கத்தி போன்றவை அந்த மூட்டையில் இருந்தன. எல்லாவற்றிலும் சிவப்பு சாயம்.. இது ரத்த கறையா அல்லது சிவப்பு சாயமா என்று சுரேஷுக்கு சந்தேகமாக இருந்தது. ரத்தக்கறை என்றால் ஏதாவது காவல்துறை நாய் கூட இந்த மூட்டையை வந்து முகர்ந்து பார்த்து அவரைக் காட்டி கொடுத்திருக்கும் ஆனால் ரத்த கறையாகத் தெரியவில்லை ஒருநாள் அந்த மூட்டையை அவிழ்த்து எச்சிலை தொட்டு அந்த சிவப்பு வர்ணத்தை கொஞ்சம் அழுக்காக்கிப் பார்த்தான். அப்போதுதான் அது ரத்தம் அல்ல சிவப்பு வர்ணம் பூசப்பட்ட கத்தி கபடாக்கள் என்பது தெரிந்தது. அந்த சாக்கு முட்டையைத் திறந்ததை சீனு தெரிந்து கொண்டார். “ அதுல ரத்த கரைய இருக்குனு பாத்தியா இல்ல. சிவப்பு கலர் பெயிண்ட்தான். உனக்கு பயத்தை கொடுக்கணும் இந்த விஷயத்துல எல்லாம் சொல்லிக் கொடுக்கணும் அப்படின்னு தான் நான் சிவப்பு கறை பண்ணி அங்க வச்சிருந்தேன்.. நீ அதை திறக்கணும். பாக்கணும் அப்படி நினைச்சேன்.. ரத்த கலர், ஆயுதம் இதெல்லாம் பாக்குறப்போ உன் மனசுக்குள்ள ஏதோ பயம் தோணும் அப்படி தோணி நீ ரத்தக்கறை, கொலை சாவு இதையெல்லாம் சுலபமா புரிஞ்சுக்கணும். அதுக்குதான் நான் இந்த ஏற்பாட்டை பண்ணனன் ” என்று சொன்னார். அவர் தன்னை இந்த படுகுழிக்குள் தள்ளுவதற்காக இப்படி ஒரு விஷயத்தை வைத்து இருக்கிறார் என்பதை அவன் தெரிந்து கொண்டபோது கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. ஆனால் ஏதோ பயம் காட்டுவதற்காகத்தான் இதை செய்கிறார். பரவாயில்லை என்றுதான் முதலில் நினைத்தான். அதன் பின் சீனு சொல்கிற காரியங்களைச் செய்வது, பிறகு சமாதானப்படுத்திக் கொள்வது என்பது சாதாரணமாகிவிட்டது. சுரேஷ்க்கு குடும்பம் சுலபமாகத்தான் நடந்து கொண்டிருந்தது. சீனு சொல்கிற மாதிரி ஒரு பொண்டாட்டியை தேட வேண்டிய அவசியமும் இருந்து கொண்டிருந்தது. ஒரு தன்னைத் தேடி வருபவளை இங்கேயே கொண்டு வந்து வைத்து விடலாமா அல்லது வேறு இடத்தில் குடி வைக்கலாமா? கல்லறைத் தோட்டம் என்றால் அந்த பெண்ணுக்கு பிடிக்காமல் போகும். கல்லறை தோட்டம் நகரத்தில் இருந்து தள்ளித் தான் இருந்தது. எல்லாவற்றுக்கும் பாதுகாப்பு தான். ஆனாலும் தனியாக வீடு இருப்பது என்பது சௌரியமாகத் தான் இருக்கும் என்று நினைத்தான். திருமணம் ஆகும்போது அதை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தான் அப்போது அவனுக்கு சித்தி வீட்டு கல்யாணம் காரியங்களுக்காக பணம் தர வேண்டிய ஒரு கட்டாயம் இருந்தது. சீனு அலட்சியமாகத் தான் இருந்தார். அதனால் அவரிடம் கடுமையாக பேசி பணம் வாங்க முடியவில்லை. கடுமையாக அவரிடம் பேச முடியாது . அரசாங்க கட்டுப்பாட்டுக் கல்லறை என்பதால் யாராவது ஏதாவது சீனுவுக்கு சங்கடங்கள் தந்து கொண்டிருந்தார்கள் என்பது ஞாபகம் வந்து ஆறுதல் அடைந்தான் . தி மு க, அரசாங்கத்தைக் கலைத்திருந்தார்கள் . அந்தக் கவலை அவரை ஆட்கொண்டு விட்ட்தா என்ற சந்தேகம் இருந்தது. அந்த அரசாங்க அலுவலகத்தில் அன்றைக்கு சம்பள பட்டு வாடா என்பதை அவன் அறிந்திருந்தான். யாரிடமிருந்தாவது பணப்பையை பிடுங்கி விட்டால் போதும் சித்தி வீட்டு கல்யாணத்திற்கு சரியாகிவிடும் என்பது அவனுடையத் தீர்மானமாக மாறி இருந்தது. அப்படித்தான் சம்பளம் வாங்கிக் கொண்டு காலி சோத்து பொட்டலத்தை சேர்த்து கக்கத்தில் வைத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தவனை ஒதுக்குப்புறமான இடத்தில் தலையில் அடித்து விழவைத்தான் சுரேஷ், அவன் கீழே விழுந்த பின்னால் அவன் கக்கத்தில் வைத்திருந்ததில் காலி சோற்றுப் பொட்டலப் பையை தூக்கி எறிந்து விட்டு நகர்ந்து விட்டான். இரண்டு நாள் கழித்து அடிபட்டவன் செத்துப் போனது தினசரி செய்தித்தாளின் ஒரு பகுதியாக செய்தி இருந்தது. அந்த செய்தியில் செத்துப்போனவனுடைய வாழ்விடம் பற்றிய சின்ன குறிப்பு இருந்தது அதைத் தேடிப் போய் செத்துப் போனவன் யார் என்று தெரிந்து கொண்டான் சுரேஷ் 0 அவன் பக்கத்தில் வந்து நின்ற மிதிவண்டியை கவனித்தான் பதினைந்து வயது இருக்கும் ஒரு சிறுவன் அந்த வண்டியை ஓட்டி வந்திருந்தான். டபுள்ஸ் உக்காரலாமே என்றான் ” எதுக்கு “ “ என்ன ரொம்ப தூரம் நடந்து வந்திருக்கீங்க. அதனாலே நானும் டபுள்ஸ் கூட்டிட்டு போலாம்னு.. .சைக்கிள்ல ஜாக்கிரதையா ஓட்டுவேன்” முகத்தில் பூத்திருந்த வியர்வையை சட்டை நுனியால் துடைத்துக் கொண்டான் சுரேஷ்.சுராசின் சட்டையில் பூக்கள் பூத்திருந்தன பல வர்ணங்களில். மிதிவண்டியில் ஏறி சவுகரியமாகத் தான் உட்கார்ந்தான் சுரேஷ் நீ யாருன்னு எனக்கு தெரியும் என்றான் அந்த பையன் “ யாரு நான் . “ “ எங்க அப்பாவை கொன்னவன்” “ அப்படி சொல்றியா.. ஆமா அப்புறம் ஏன் போலீஸில் சொல்லல வண்டியே நிறுத்தறையா.” “ எங்க அம்மா தான் காரணம்” “ அப்படியா எங்க அம்மா உன்னுடைய சின்ன வயசு காதலி அப்படிங்கிறது எனக்கு தெரியும் ” “ஓ அது தெரிஞ்சிருச்சா... செத்துப் போனது யாருன்னு இடத்தை தேடி பார்த்தப்போ உங்க அம்மாவை பல வருஷங்கள் கழித்து பார்த்தேன். அப்பதான் எனக்கு ரொம்ப வயசாயிருச்சுன்னு தெரிஞ்சது. உங்க அம்மாவுக்கு உன்னை மாதிரி ஒரு பையன் இருக்கிறது தெரிஞ்சது..அது நீதானா. ஆனா நான் எதிர்பார்க்கலை செத்துப் போனவன் என்னுடைய காதலியோட புருஷனா இருக்கணும்னு நான் எதிர்பார்க்கல. எதிர்பார்க்காத மாதிரி வாழ்க்கையில் நிறைய நடக்குது.” “ இந்த சைக்கிளை வாங்கி கொடுக்க எங்க அப்பா கஷ்டப்பட்டார் அதெல்லாம் நெனச்சா கண்ணீர் வருது” “ நான் என்ன சொல்றதுன்னு தெரியல. எல்லாமே எதிர்பாராமல் நடந்துருச்சு. சரி நான் தான் கொலைகாரன்னு தெரிஞ்சு நீ ஏன் போலீசுக்கு சொல்லல. கண்டு பிடிக்காமெ அலையறாங்க . உங்க அம்மாவுக்கு தெரியுமா “ “ எனக்கு தெரியும். எங்க அம்மாவுக்கு தெரியுமான்னு தெரியாது போலீஸ்ல சொன்னா எங்க அம்மா போலீஸ் ஸ்டேஷனுக்கு நடக்க வேண்டி இருக்கும். உனக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் இதனால யாருக்கு என்ன பிரயோஜனம்னு ஒரு நினைப்பு வந்தது ஆனால் அது சரியா..” “ அது சரியான்னு கேக்குற ஆள் நீ இல்லயா . தெரியுது சரி நான் இறங்கிக்கிறேன் “ “ ஏன் இறங்கறே “ “ கொஞ்சம் பயமா இருக்கு நான் கொன்னு போட்டவனுடைய பையன் என்ன கூட்டிட்டு போறான் அப்படிங்கறது.... பையனுடைய அம்மா என்னுடைய காதலியா ஒரு காலத்துல இருந்தாங்க.” “ அது சரி. தப்பிச்சு போறியா” “ இனிமேல் தப்பிக்க முடியும்ன்னு தோணவில்லை. சரி என்ன பண்ணனும்” “ ஒன்னும் பண்ண வேண்டாம் எங்க அம்மாவ கல்யாணம் பண்ணிக்கோ.. உன் பழைய காதலி தானே.. தாராளமா பண்ணிக்கோ. எங்க அம்மா வறுமையில, ஒரு விபச்சாரியாக ஆகாமெ இருக்க அது உதவும் .அப்புறம் நானும் என்னுடைய வாழ்க்கையை சுலபமாக ஓட்ட உதவும். இல்லைன்னா குடும்பத்தில் இருக்கிற பிரச்சனைகள் எல்லாம் பெரிசாயிட்டே இருக்கும். எங்க அம்மா பெரிய பிரச்சனையா விதவையா வாழ வேண்டி இருக்கும். அதனால தான் அப்படி சொல்கிறேன்” அந்தப் பையனின் மிதிவண்டி கொஞ்சம் நகர்ந்து போய் நின்றதை முன்பே இறங்கிய சுரேஷ் கவனித்தான் “ நீ சொல்றதெல்லா நல்லாத்தா இருக்கு. போலீஸ் நாய் சீக்கிரம் மோப்பம் புடிச்சிரும்ன்னு மனசு சொல்லிட்டிருக்கு”
யாரப்பா நீங்க துரை ஆனந்தகுமார் அவர்களின் சிறார் நாவலை முன்வைத்து .. .. சுப்ரபாரதிமணியன் ஆனந்தகுமார் அவர்கள் தொடர்ந்து சிறுவர் இலக்கியம் சார்ந்து நிறைய நூல்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்திய அவர் பற்றிய குறிப்பு பார்த்தபோது அவர் இதுவரை 25 புத்தகங்கள் சிறுவர் இலக்கிய நூலாக கொண்டு வந்திருக்கிறார் என்பது ஆச்சரியம் அளித்தது .அவ்வப்போது எனக்கு வந்து சேர்க்கின்ற நூல்கள் தான் அவை. ஆனால் எண்ணிக்கை இப்போது கூடிவிட்டது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அந்த மகிழ்ச்சிக்கு காரணம் சிறுவர் இலக்கிய நூல்களின் பங்களிப்பில் அவருடைய முக்கியத்துவம் நன்கு உணர தலைப்பட்ட காலம் இது. தமிழில் சிறுவர் இலக்கியம் பல சிகரங்களை எல்லாம் தொட்டு விட்டது. படைப்புகளில் எடுத்துக்கொள்ளும் மையமாகட்டும் அதை பல்வேறு கோணங்களில் அலசுவதாகட்டும் எல்லாம் சிறப்பாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் ஆனந்தகுமார் எப்படி முக்கியத்துவம் பெறுகிறார் என்பதும் முக்கியம். அவர் தமிழக சூழலுக்கு வெளியே இருந்து கொண்டு, வெளிநாட்டில் இருந்து கொண்டு நேரத்தை இதற்கு ஒதுக்கி கொண்டு புத்தகங்களை கொண்டு வருகிறார் . வயது சார்ந்து சிறுவர்களுக்கு நூல்கள் தமிழில் வெளியிடப்படுவது இல்லை. இது மேல்நாட்டு இலக்கிய வகைகளில் சிறுவர் இலக்கிய வகைகளில் முக்கியமாக இருக்கிறது. ஆகவே வயது சார்ந்து இவர்களுக்கான நூல் எது இந்த வயதிற்கான நூல் இது என்று அவர் வரையிட்டு ஒவ்வொரு புத்தகத்திலும் அதைக் குறிப்பிடுகிறார். பிறகு நமது சிறுவர்களுக்கு புத்தகங்களில் பெரும்பாலும் ஓவியங்கள் இடம் பெறுவதை தவிர்க்கிறார்கள் நம்மவர்கள். காரணம் பக்க அளவு அதிகமாகின்றது. செலவு அதிகமாக உள்ளது என்பதுதான் காரணம். அப்படி நல்ல ஓவியங்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை என்ற குறைபாடும் இருக்கிறது. அதுவும் குழந்தைகளுக்காக குழந்தைகளுடைய மனதினைக் கொண்டு ஓவியம் வரையும் ஓவியர்கள் குறைவாக இருக்கிறார்கள். இன்றைய ஓய்வில்லாத ஓவியர்கள் மத்தியில் குழந்தைகளுக்காக நல்ல ஓய்வு மனநிலையுடன் வரைகிற ஓவியங்கர்களும் குறைவாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் துரை ஆனந்த குமாருடைய புத்தகங்களின் ஓவியங்கள் மிக முக்கியமான பங்களிக்கின்றன. பாதி பக்கங்களுக்கு மேல் அந்த வகையில் ஓவியங்கள் இடம் பெறுகின்றன. இந்த நூலில் சுமார் 120 பக்கங்களில் 60 பக்கங்களுக்கு மேலாக ஓவியங்கள் இடம் பெற்று இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டலாம். பிறகு இவர் தன்னுடைய நூலுக்காக எடுத்துக் கொள்ளும் புத்தக சைஸ்- அளவு என்பது முக்கியமாக இருக்கிறது குழந்தைகள் நன்கு உணர்ந்து படிக்கிற அளவில் பெரிய எழுத்துக்களும் பெரிய ஓவியங்களும் பெரியளவு புத்தக உருவங்களும் முக்கியமானவை. இவை வெறும் தமிழ் சார்ந்த குழந்தைகள் மட்டும் படிப்பதற்கான நூலாக இல்லாமல் அவர் வாழ்கின்ற வெளிநாடுகளில் இருக்கின்ற வேறு மொழிக் குழந்தைகளும் படிக்க உபாயமாக ஆங்கிலத்தில் அந்தப் பிரதிகள் அச்சிடப்படுகின்றன. ஆங்கிலம் தமிழ் என்று ஒரே பக்கத்தில் அவை அச்சிடப்படுவது இன்னும் விசேஷம். தமிழர்கள் அல்லாத மற்றக் குழந்தைகள் மத்தியில் தமிழை கொண்டு செல்லவும் தமிழ் சார்ந்த நூலை கொண்டு செல்லவும் இது ஒரு நல்ல உபாயமாக எடுத்துக் கொள்ளலாம். அப்படித்தான் பல வகைகளில் ஆனந்தகுமார் அவர்களுடைய சிறுவர் நூல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த யாருப்பா நீங்க என்ற இந்த சிறார் நாவலில் கூட அவர் புதுமையான கற்பனைகளைக் கொண்டு வந்திருக்கிறார். ஓவியங்கள் கதாபாத்திரங்களாக மாறுவதும் அவை உரையாடுவதும் அவை செயல் புரிவதும் என்று புதுமை இருக்கிறது. இந்த புதுமை நாம் முன்பே கூட சில இடங்களில் கண்டிருக்கலாம். ஆனால் ஓவியங்கள் கதாபாத்திரங்கள் ஆக உருவாகி அவை நடத்தும் உரையாடல்களும் செயல்களும் இந்த நாவலில் உள்ளன அப்படித்தான் தங்களின் வரைந்த பிரதான ஓவியரை காண வேண்டும் என்று கோரிக்கை வைத்து கவனத்தில் கொண்டு வர ஒரு வங்கிக்குள் ஓவியங்களின் கதாபாத்திரங்கள் நுழைகிறார்கள். அந்த பிரதான ஓவியரை பார்க்க வேண்டும் என்பதுதான் அவருடைய கோரிக்கையாக இருக்கிறது அதற்கு காவல்துறையும் ஒத்துழைக்கிறது. அவர்களின் தலைவராக இருந்த ஒரு பிரதான கதாபாத்திரத்தை கணினி குப்பை கூடைக்குள் போட்டு விட்டது. டஸ்ட் பின்னுக்குள்.. , அதை அந்த ஓவியர் தேடி எடுத்து மீட்டெடுத்துத் தருகிற போது அந்த ஓவிய கதாபாத்திரங்கள் மகிழ்ச்சி அடைகின்றன. இந்த மகிழ்ச்சி ஒவ்வொரு பக்கத்துக்கும் வெளிப்படுத்துகிறது. இந்த கதை சொல்லலில் ஒருவித மேஜிக்கல் ரியலிசப் பாணியை கொண்டு வந்து விடுகிறார். அதன் மூலமாக பேண்டஸி அம்சங்களும் மேஜிக்கல் அம்சங்களும் கலந்து இந்த நாவலின் வாசிப்பை இன்னும் சுவாரஸ்யமாக்குகிறது. இந்த சுவாரஸ்யத்தை இந்த நாவலில் மட்டுமல்ல அவர்களுடைய எல்லா நாவல்களிலும் கண்டு உணரலாம். குழந்தைகளுக்கான நாவல்களில் சுவாரஸ்யத்தை உண்டு பண்ணுவது என்பது அவர்களுக்கான சரியான தின்பண்டங்களை அவர்களிடம் கொடுத்து சுவைக்க சொல்லி தருவது போலத்தான். அப்படித்தான் தொடர்ந்து சிறுவர் நூல்களை அவர் கொண்டு வந்திருக்கிறார். 25 சிறார் நூல்கள் என்ற எண்ணிக்கையை அடைகிற துரை ஆனந்தகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்வோம் ( யாருப்பா நீங்க வம்சி வெளியீடு ரூபாய் 200 பக்கம்120 )
மனிதர்கள் நடைபாதையில் இருக்கிறார்கள் - ஹரணி சிறுகதைகள் சுப்ரபாரதி மணியன் கல்வித்துறை சார்ந்தவர்கள் குறிப்பாக ஆசிரியர்கள் முந்தைய தலைமுறையினர் எழுத்தாளர்களாக இருந்து எழுதுகிற போது அவர்கள் நிறைய லட்சிய மனிதர்களை காட்டினார்கள். அந்த லட்சிய மனிதர்கள் இன்று பல வகைகளில் கேலிக்குரியவர்களான மனிதர்களாகி விட்டார்கள். . ஆனால் அவர்களுடைய லட்சியங்களும் வாழ்க்கை பற்றிய கோணங்களும் இன்றைக்கும் தேவையாக இருக்கின்றன. இப்போது கல்வித்துறை சார்ந்து இருக்கக்கூடிய எழுத்தாளர்களில் பலர் ” மாதிரி மனிதர்களை” உருவாக்குகிறார்கள். எழுத்திலும் சில செயல்பாட்டிலும். அவர்கள் பள்ளிகள், கல்லூரிகளில் நல்ல கல்வி, மற்றும் ஒழுக்கத்துடனும் மாணவர்களை உருவாக்க ஆசைப்படுகிறார்கள். அதே பிம்பங்களைக் கொண்டு சமூகத்தில் மனிதர்கள் இருக்க வேண்டும் என்று பல மாதிரி மனிதர்களை கதைகளில் உருவாக்குகிறார்கள்.. இந்த மாதிரி மனிதர்கள் எல்லோர் கண்களிலும் படுவதில்லை.. எல்லோரும் அவர்களுடன் உறவு கொள்வது இல்லை ஆனால் சிலரின் கண்களில் படுகிறார்கள். சிலரோடு உறவுகள் கொள்கிறார்கள். அவர்கள் எல்லாம் அதிர்ஷ்டசாலி என்று சொல்லலாம். எழுத்தாளர்கள் கலைஞர்கள் தாங்கள் விரும்புகிற விஷயத்தை படைப்புகளில் மனிதர்கள் மேல் ஏற்றி பல சமயங்களில் மாதிரி மனிதர்களை உருவாக்குகிறார்கள். பல சமயங்களில் அவர்கள் இயல்பாகவே நம் வாழ்க்கையில் கூடவே இருக்கிறார்கள் அவற்றையெல்லாம் அவர்கள் தொகுத்து பார்க்கிறார்கள்.. . தான் பணிபுரிந்த கல்வித்துறை சார்ந்த அனுபவங்களை பல கதைகளில் கொட்டி இருக்கிறார் ஹாரணி அவர்கள். முன்பே தான் பணிபுரிந்த பள்ளிக்கூடம் இடிக்கப்பட்டு பிளாட் போடப்படுகிறது. காலமாய் சிரமப்பட்டு கட்டி உருவாக்கிய பள்ளியை இப்படி நிலமாக்கி விற்கிற கோரத்தை கண்டு உயிர் விடுகிற ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஹாரணியின் கதைகளில் . இப்படித்தான் பலர் இருக்கிறார்கள். எங்கள் பகுதியில் பிரபல பின்னலாடை நிறுவனம் ஒன்று வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ஒரு இலவச பள்ளியை பல ஆண்டுகளாக நடத்தி வந்தார்கள். கட்டணம், புத்தகங்கள் உட்பட அனைத்தும் இலவசம். ஆனால் அந்த வெளிநாட்டு நிறுவனம் ஐந்தாண்டுகளுக்கு பிறகு பின்னலாடை நிறுவனத்தை அவர்களே நிதி வசதியை உருவாக்கிக் கொண்டு கல்வி பணி நடத்த வேண்டும் என்று சொன்னபோது பின்னலாடை நிறுவனம் அந்த முயற்சியை கைவிட்டு அந்த பிரமாண்டமான பல ஆண்டுகள் நடந்த பள்ளி கட்டடத்தை இடித்துவிட்டு நிலத்தை கூறு போட்டு விற்றார்கள். அந்தப் பள்ளியை இடித்துத் தரை மட்டமாக்கியபோது அந்த புல்டோசர் முன் விழுந்து தடுக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றி மனம் நொந்தேன். ஹாரணியின் ஒரு கதையை படிக்கும் போது இது ஞாபகம் வந்து வருத்தியது எப்போதுதான் நம்மவர்கள் மனிதர்களாக இருக்கிறார்கள்.. வீட்டிற்கு வயது வந்த பெண்ணிற்கு யார் சடங்கு செய்வது என்ற கேள்வி வருகிறது உற்றார் உறவினர் கண்டுகொள்ளாத போது அந்த குடும்பத்திற்கு உதவி செய்து வரும் ஒரு பெண் அக்காவாகிறாள், அதேபோல திருநங்கையின் வாழ்க்கைக்கு ஒளியூட்ட ஒருவர் மனைவியாக்கி கொள்கிறார். அந்த திருநங்கை குடும்பத்திற்காக உழைக்கிறார். ஆனால் அவளை வீட்டுத் திருமணத்திற்கு அழைக்கக் கூடாது என்ற நிர்ப்பந்தம் வருகிற போது திருநங்கையின் இருப்பு பற்றி நியாயம் சொல்லப்படுகிறது. வித்தியாசமான ஒரு கோணத்தில் சொல்லப்பட்ட கதை ஆகிறது வாழ்வதற்கு வயதிருக்கிறது. இறக்கிறபோது பலருக்கு பலர் தெரிய வருகிறார்கள். அப்படித்தான் இறப்புக்கு வயது 46 என்றொரு கதையில் இறந்தபின் நினைக்கப்படும் கருணையுள்ள மனிதர்கள் பற்றி சொல்கிறார். லஞ்சமற்ற வாழ்க்கை, நேர்மையான வாழ்க்கை பற்றி தொடர்ந்து ஹரணி பேசிக் கொண்டே இருக்கிறார். வீட்டில் மனைவி போன்றவர்கள் லஞ்சத்தை விரும்புபவர்கள். ஆனால் கணவர் அதை எதிர்த்து வாழ்க்கை முழுவதும் போராடி ஏதோ ஒரு கட்டத்தில் மனைவி அதை உணர்ந்து கொள்வதை தெரிவிக்கும் கதையில் உயர்ந்த லட்சியங்கள் இருக்கின்றன. கடைசி காலம் தங்க இடமில்லை மருமகன் அடைக்கலம் கொடுக்கிறார் .ஆனால் அவர் லஞ்சம் வாங்கி மோசமானவராக காட்டப்படுகிற போது அந்த அடைக்கலம் தமக்கு தேவையில்லை என்று வெளியேறுகிற மனிதர்கள் இருக்கிறார்கள் . திருடு போன நகை திரும்ப கிடைக்கும் என்ற வகையில் பாதையில் திறந்து விடப்படுகிற போது அதற்காக செய்யப்படும் வழிமுறைகள் ஒரு பெண்ணை நிராகரிக்க சொல்கிறது .இவர்களெல்லாம் ஒருவகையில் உயர்ந்த மனிதர்களாக நிற்கிறார்கள்.பல விசயங்களில் ” மாதிரி மனிதர்களாக” இருக்கிறார்கள் ஒரு கதையில் கணேசமூர்த்தி போல வாழ்வது எளிதான அல்ல தவக்கோலம் தான் என்று சொல்லுகிறார் .அப்படி தவக்கோலத்தில் இருக்கிற பல மனிதர்களை காட்டுவது இந்த தொகுப்பில் அடையாளமாக இருக்கிறது. வீட்டில் வசிக்கும் கடவுளாக வீட்டிற்காக உழைப்பவர்கள் தரிசனம் செய்யப்படுகிறார்கள் .இந்த வாழ்க்கையை தான் அந்த கஷ்டங்களுடன் மனிதர்கள் இலக்கிய பாத்திரங்களாக உலாவும் இருப்பை காட்டுகிறார். இலக்கியம் செய்வோம் என்ற வகையில் வாழ்க்கையின் , நேர்மறையான எண்ணங்கள் கொண்ட வாழ்க்கையை காட்டும் எழுத்தாளர்கள் மத்தியில் நல்ல மனிதர்களை பட்டியலிடுவது தான் ஹரணி அவர்களின் பங்காக இருக்கிறது. கசடுகள் நீங்கி வாழ்ந்த மனிதர்கள், வாழும் மனிதர்கள் பற்றிய கதைகளை எடுத்துக்கொண்டு எழுதுவது சுலபமா என்ன..... ஆனால் அந்த சுலபத்தை சுலபமாக கையாண்டு இருக்கிறார் ஹரணி அவர்கள் . கல்லூரி பணி வாழ்க்கையில் இருந்த ஓய்வு பெற்றாலும் பல கல்லூரியில் அவருடைய பணியை தொடர கேட்டுக் கொண்டாலும் போதும் கல்லூரி வாழ்க்கை இலக்கியப் பணியாற்றலாம் என்று அவருடைய எண்ணங்களை பகிர்ந்து கொண்ட போது மகிழ்ச்சி அடைந்தேன். அதேபோல விடாத முயற்சியும் தரளாத ஒழுக்கமும் கடுமையான உழைப்பும் நியாயமான செயல்பாடுகளும் என்றைக்கும் எல்லாம் கடந்து பேசப்படும் என்று ஹரிணி அவர்கள் முன்னுரையில் சொல்கிறார். அப்படி காலம் கடந்து பேசப்படுகிற மனிதர்களை இந்த கதைகளில் காட்டுகிறார் நாராயணன் என்ற கதாபாத்திரம் பல கதைகளில் வருகிறது இந்த நாராயணன் கதாபாத்திரங்கள் அப்பாக்களாக, தம்பிகளாக தாத்தாக்களா, உறவினர்களாக இருக்கிறார்கள் அல்லது எல்லாமே நல்லது நடக்க வேண்டும் என்று விரும்புகிற நல்ல உறவுகளாக இருக்கிறார்கள். இந்த நாராயணங்களின் எண்ணங்கள் உயர்ந்தவை சக மனிதனை நேசிக்கச் சொல்பவை சக மனிதனோடு நீண்ட பயணம் செய்பவை. நாராயணன் போன்ற மனிதர்களை அடையாளம் கண்டு கொள்வது சுலபமல்ல அவ்வாறான மனிதர்களை கண்டு கொள்வதற்கு நல்ல மனம் வேண்டும். அப்படியான மனிதர்கள் ” கண்டவர் “ கண்களுக்கு எல்லாம் கட்டுப்பட மாட்டார்கள். தட்டுப்பட மாட்டார்கள். ஆனால் கருணையின் கண்களுக்கு கட்டுப்படுவார்கள். காரணம் அவரின் நேர்மையான எண்ணங்கள் தான் அடிப்படையாக இருக்கின்றன. அந்த எண்ணங்களின் அடிப்படையில் பல “ மாதிரி மனிதர்களை” அவர் இந்த தொகுப்பில் காட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது ( ரூபாய் 200 கேஜி பப்ளிகேஷன் தஞ்சாவூர்) சேகுவேரானுடைய புரட்சிகர சிந்தனைகள் பிடல் காஸ்ட்ரோ தமிழில் மு. ந புகழேந்தி / சுப்ரபாரதி மணியன் இந்த சிறு நூலில் சிலி நாட்டு மக்களுக்காக புரட்சிகரமான போராட்டங்களை நடத்திய ஒரு போராளி பற்றிய பல்வேறு குறிப்புகள் உள்ளன. அதில் சேகுவாராவுக்கு காஸ்ட்ரோவின் புகழ் அஞ்சலி, இருபதாம் நூற்றாண்டின் இதிகாசம், சேகுவாரா பிடலுக்கு எழுதிய கடிதங்கள் போன்றவை சில விஷயங்களாய் உள்ளன. சேகுவாராக்கு அஞ்சலி கட்டுரையில் கரை படியாத ஒழுக்கம் கபடம் இல்லாத மனப்போக்கு செய்கையில் மாசு எடுத்து இல்லாத எடுத்துக்காட்டான மனிதர் செய்யும் முறை மனப்பூர்வமாக பிடல் காஸ்ட்ரோ சொல்லுகிறான். 20 ஆம் நூற்றாண்டு இதிகாசம் என்ற கட்டுரையில் சேகுவாரா கவிதைகள் படிப்பதில் ஆர்வம் உடையதாக இருந்த போதிலும் தான் கவிஞராக விளங்க முடியாமல் போன ஒரு புரட்சிக்காரன் என்று அவரை பற்றி விளக்கமாக சொல்கிறார் பிடல் காஸ்ட்ரோ அவர்களுக்கு சேகுவாரா எழுதிய கடிதம் மிக முக்கியமானது.. என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் எதுவும் கொடுப்பதற்கு இல்லை என்பதில் எனக்கு கொஞ்சம் கூட வருத்தமில்லை அப்படி இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் அவர்களுக்காக நான் எதுவும் கேட்கவும் இல்லை அவருடைய செலவையும் கல்விக்கு தேவையானதையும் நாடு வழங்கும் என்று எனக்கு தெரியும் என்று குறிப்பிடுகிறார் சேகுவாரா தன் குழந்தைகளுக்கு எழுதிய கடிதமும் பெற்றோர்களுக்கு எழுதி மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இங்கு விவரிக்கப்பட்டுள்ளன சேகுவாராவின் வாழ்க்கை பற்றிய விவரங்கள் அடங்கிய குறிப்புகள் இந்த நூலில் இறுதியில் அமைந்துள்ளன. நான் மறுபடியும் போர் ஆடை அணிந்து என்னுடைய புரட்சிகர குதிரையில் ஏறி பயத்தை தொடங்கியுள்ளேன் என்று குறிப்பிடும் சேகுவாரா பயணத்தை பல தோழர்கள் என்றும் தொடர்கிறார்கள் என்பதை இந்த நூல் தெரிவிக்கிறது ( ரூபாய் 45 நியூ செஞ்சுரி புத்தக நிலையம் வெளியீடு)
Pesum puthiya sakthi issue may 2023 வவ்வால் பூ சிரிக்கும் வனாந்திரம். 14/40 கொண்டை ஊசி வளைவு - சுப்ர பாரதி மணியன் யாழ் எஸ் ராகவன் தேடலின் தீவிரத்தில் பலர் இங்கே சுயத்தை தொலைக்க நினைப்பதுண்டு ஆனாலும் சுயம் அகம் புறம் என்ற பேதம் இன்றி எல்லா இடங்களிலும் வெளிப்பட்டே தீரும். குறைவான பாத்திரங்களைக் கொண்டு ஒரு நாவலை கட்டமைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. தத்துவ விசாரணமும் ஆழ்ந்த அனுபவமும் உளவியல் சார்ந்த நிலைப்பாடுகளும் தெரிந்த ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு நாவலை எழுதி விட முடியும் என்று தோன்றுகிறது.நேரடி கதை சொல்லும் முறை என்பது வேறு சற்று ஆழ்ந்து படித்து புரிந்து கொண்டு ரசிப்பது என்பது வேறு. வாசகனின் மனநிலையை வாசகனின் வாசிப்பு ஆற்றலை உரசி பார்க்கும் விதமாக எழுதுகின்ற இருண்மை தன்மையில் நாவல் படைக்கப்பட்டு இருக்கிறது. சீர பாகம். திராக்ஷாபாகம். நாளிகரபாகம். என்று ஒரு பிரதியை புரிந்து கொள்ளும் விதத்தை வடமொழியாளர்கள் மூன்று விதமாக சொல்லி வைத்திருக்கிறார்கள் சீரம் என்றால் பால் பாலை பருகுகின்ற போது எவ்விதமான சிரமமும் தேவையில்லை. திராட்ச பாகம் என்பது திராட்சை பழத்தை சாப்பிடும் போது அதில் இருக்கும் விதைகளை துப்பி விட்டு அருந்த வேண்டும். நாளிகரம் என்றால் தேங்காய் தேங்காய் பால் வேண்டுமென்றால் தேங்காய் உடைத்து துருவி அது வெந்நீரில் போட்டு பிழிந்து அதன் பிறகு தான் நாம்தேங்காய் பாலை அருந்த முடியும்அந்த வகையில் எனக்கு இந்த கதை நாளிதர பாகமாகவே தெரிகிறது. 14/40 கொண்டை ஊசி வளைவு என்ற நாவல் தமிழில் மிகச் சிறந்த படைப்பாளி சுப்ர பாரதி மணியன் அவர்களால் எழுதப்பட்டது. வாழ்வில் பொருள் சம்பாதிக்க வேண்டும் பணம் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஓடி ஓடி உழைத்த ஒருவன்.ஓய்விற்காக உடல் மட்டும் மன செம்மைப்படுத்தும் பயிற்சிக்காக ஆனைகட்டி அருகில் உள்ள ஒரு பயிற்சியில் தங்குகிறான்.அங்கே வாழ்வில் பல துன்பங்களை சிக்கல்களை சந்தித்து உடலாலும் மனதாலும் சுரண்டப்பட்டு துன்பத்தில் உழண்ட பெண்ணான நயன்தாரா என்ற கதாபாத்திரத்தை சந்திக்க நேர்கிறது. ஆறுதல் தேடி அலையும் அவள்.உடலை மட்டுமே சுரண்டிய சுரண்டும் உன்மத்தர் கூட்டத்திற்கு மத்தியில் யாரேனும் உள்ளத்தை ஆசைகளை புரிந்து கொள்வார்களா என்று ஏங்கும் ஒரு பெண்ணின் மனம்.குடும்பச் சிறையில் பாசக்கயிற்றில் பணம் எண்ணும் அரக்கனின் கொடூர கோர பசியில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் ஒரு இளைஞனின் ஆசைகளும் அபிலாசைகளும் ஊடும் பாவுமாக கதையின் மைய நீரோட்டமாக அமைகிறது. இயற்கை எழில் கொஞ்சும் ஆழியார் அணை ஆனைகட்டி பகுதியில் இருந்து கதை அற்புதமாக தொடங்குகிறது மெதுவாக நகர்ந்து நகர்ந்து. காதலும் காமமும் நகைச்சுவையும் சரிவிகிதத்தில் கலந்து சித்த தத்துவம் ஜென் தத்துவம் சைவ சித்தாந்த தத்துவம் அத்தனையும் அலசி ஆராய்ந்து கதை வேகம் எடுக்கிறது. இயல்பாக ஒரு ஆணுக்கு பெண் மீது ஏற்படும் ஈர்ப்பும் காமமும் ஒரு பெண்ணுக்கு ஆண் மீது ஏற்படும் காதலும் கவித்துவமாக கதையில் வருணிக்கப்பட்டு வந்திருக்கிறது. மனவளக்கலை பயிற்சி மையம் அங்கே இடம் அமைப்பு உணவு அமைப்பு அறை அமைப்பு அத்தனையும் விரிவாக விளக்கப்பட்டு வந்திருக்கிறதுகாதல் என்ற ஒழுங்கு உள்ளே வந்து விட்டது என்றால் உலகமே ஒழுங்கின்மையாக தெரியும். திருமணமான ராஜகுமாரன் ஒரு விடுதியில் தன் கற்பை பறிகொடுத்து பொதுமகளிர் ஆக்கப்பட்ட நயன்தாராவும் சந்திக்கின்ற இடம் அபாரம். அவள் பெயர் வள்ளி எதுவானாலும் இருக்கலாம் ஆனாலும் நம் கற்பனையை மெருகட்டுவதற்கு நயன்தாரா என்ற பெயர் சுவையாக தான் இருக்கிறது. கதையின் முதல் பகுதியில் காசியில் நடக்கும் மூடநம்பிக்கை சார்ந்த விஷயங்களை கட்டு உடைத்து எதார்த்தத்தின் மைய நீரோட்டத்தை அலசி பார்க்கும் தத்துவ விசாரணமாகவே கதை அமைகிறதுபயிற்சிக்கு செல்லாமல் அறையிலேயே தங்கி அவர்கள் காதல் புரியும் அழகு இடையிடையே ராஜகுமாரனுக்கு தன் மனைவி பேசுகின்ற செயல் அரசன் என்ற கதாபாத்திரம் வயதுக்கு மீது வழியும் காட்சி அங்கு இருக்கும் வாட்ச்மேன் உடைய அறிவுரை. இன்னும் அந்த பயிற்சிக்கு வந்திருக்க கூடிய பல்வேறு மக்களைப் பற்றி விவரிக்கிறார் நண்பர்கள் இலங்கை அகதியாக வந்தவர் பல்வேறு இயக்கத்தில் இருந்து வெளிவந்தவர்கள் தொழில் சார்ந்தவர்கள் வாழ்க்கை இழந்தவர்கள் என்று பலரின் வர்ணனைகள் குறைவான கதாபாத்திரங்களில் நம் மனதில் நிறைவாக நிற்கின்றன வாழ்வில் பல சிக்கல்களை சந்தித்து அதை தீர்ப்பதற்காக பயிற்சிக்கு வந்த இருவருக்கிடையில் ஏற்பட்ட காதலை எவ்வளவு சுவையுடன் அவர் பகிர்ந்து இருக்கிறார் அந்த ஆணனை நம்பி இவள் சந்தேகத்துடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து வெளியே இருவரும் தனியாக செல்கிறார்கள் அவர்கள் செல்லுகிற இடம்தான் 14.40 கொண்டை ஊசி வளைவு. அங்கே ஒரு சித்தர் போலிகளையும் மாயைகளையும் கட்டுடைத்து பேசுகிறார்.இவன் கூட நாம் இருப்பது சரியா என்று யோசிக்க முன்னே அந்தப் பெண் அவனை விட்டுவிட்டு வெளியே சென்று விடுகிறார். இயல்பை மீறி நடக்கும் எதுவும் துன்பம் தருவதாகவும் தொல்லையை மேலும் அதிகப்படுத்துவதாகவே இருக்கும்.ஏற்றுக்கொண்ட அமைப்பில் இருந்து விலகுவதும் ஏற்றுக்கொண்ட புரிதல் இருந்து மாறுவதும் எப்பொழுதும் நமக்கு சங்கடங்களை தரும் என்பதை மிக அழகாக சொல்லப்பட்ட நாவல் 102 பக்கங்கள் (உயிர்மை பதிப்பக வெளியீடு அற்புதமான பதிப்பு ) நீங்கள் ஒரு முறை அந்த வளைவுக்குள் சென்று வாருங்கள் வவ்வால் பூ பூக்கும் வனாந்தரம் உங்களையும் வசீகரிக்கும் யாழ் எஸ் ராகவன் உத்தமபாளையம் வட்டம் தேனி மாவட்டம் இந்த ஈர நிலங்களானது பல்வகையான பல்லுயிர்களுக்கு பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் இருந்து வருகிறது. நாம் பெரிதும் கவனித்திடாத நத்தைகள், வண்டுகள், சிறு பூச்சிகள், புழுக்கள் என ஆயிரக்கணக்கான பல்லுயிர்கள் இந்த ஈர நிலத்தில் பிறந்து வாழ்ந்து அந்த சூழலின் உணவுச் சங்கிலியில் ஓர் பங்கு வகித்து வருகிறது. சற்று ஆழமில்லாமல் நமது குதிங்கால் வரை நீர் தேங்கி சில காலம்வரை நிற்கும் ஈரநிலங்களில் பல பறவைகள் நின்று அந்த நீரினுள் உள்ள மண்ணை கொத்தி கிளரிக் கொண்டிருப்பதை நம்மில் பலர் கண்டிருப்போம். வாருங்கள் வவ்வால் பூ பூக்கும் வனாந்தரம் உங்களையும் வசீகரிக்கும் ( யாழ் எஸ் ராகவன் உத்தமபாளையம் வட்டம் தேனி மாவட்டம் ) 0
சிறுகதை பார்க்க மறுத்தப் பறவைகள் : சுப்ரபாரதிமணியன் சுற்றுச்சூழல் ரவீந்திரன் குறுஞ்செய்திகள் அனுப்பி இருந்தார். ராயன் குளத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் வந்திருப்பதாகவும் போய் ஒரு பார்வையை பார்த்து விடும்படியும் சொல்லியிருந்தார்.. அவர் இரண்டாவது முறையாகவும் குறுஞ்செய்தி அனுப்பி விட்டார் சுகுமாரனுக்கு இன்றைக்கு தான் வாய்த்தது.ராயன் குளத்திற்கு செல்வதற்காக அவர் முன் வந்து நின்ற அந்த சிற்றுந்தை கவனித்தான். அந்தப் பகுதிக்கு பேருந்துகள் செல்வது குறைவு எதைச்சையாக அது அவன் கண்ணில் பட்டதும். ஏறிவிட்டான். . ராயன் குளம் என்று சொன்னதும் சுடுகாடுன்னு சொல்லுங்க என்று அந்த நடத்துனர் சொன்னார். ஏன் அப்படி சொன்னார் என்று அவன் யோசித்துப் பார்த்தான். குளத்திற்கு பக்கம் ஒரு பெரிய சுடுகாடு இருக்கிறது. பல காலமாக மக்கள் அதை பயன்படுத்தி வருகிறார்கள். எனவே ஒரு முக்கியமான பறவைகள் சரணாலயமாக இருக்கிற இடத்தைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ளாமல் சுடுகாடு என்பதன் பயன்பாட்டினால் மனதில் கொண்டிருக்கிறார்கள்.. ” ஆமா சுடுகாடு தான் . எல்லாத்தையும் சுடுகாடா மாத்திட்டு இருக்காங்க “ என்றும் சொல்லி வைத்தான் நடத்துனர் சிரித்துக் கொண்டே பணத்தை வாங்கிக் கொண்டு சென்றார். தனியார் சிற்றுந்துகளில் டிக்கெட்டுகள் தருகிற பழக்கம் சமீபமாய் இல்லாமல் போய்விட்டது. அவர்களுக்கு சவுரியமாக போய்விட்டது. எவ்வளவு வேண்டுமானாலும் கட்டணம் கேட்கிறார்கள் சூழலுக்கு தகுந்தபடி. பேருந்து முளகிஸ்வரன் கோயில் அருகில் நின்றது. உலகில் மிக முக்கியமான பழமையான கோயில்களில் அது ஒன்று. தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில். அந்த கோவிலின் முகப்பில் இருக்கும் நந்தியின் ஒரு காது அறுபட்டிருக்கும். அதற்கு ஒரு கதை உண்டு. ஒரு வியாபாரி தங்கத்தை கொண்டு வைத்துக்கொண்டு அந்தப் பாதையில் பயணம் போகிறார். அந்த கோயிலில் அருகில் வந்து தங்கி இருக்கிறார். அங்கு இருக்கிற பூசாரி பையில் என்ன வைத்திருக்கிறாய் என்று கேட்டவுடன் மிளகு என்று சொல்லி இருக்கிறார். அதனால் இந்த பூசாரி சரி என்று விட்டுவிட்டார் காலையில் எழுந்து அந்த வியாபாரி மூட்டையை பார்க்கிறபோது அந்த மூட்டையில் வைத்த தங்கம் காணோம். மிளகுதான் இருந்திருக்கிறது. வியாபாரி மன்னிப்பு கேட்டிருக்கிறார்.அதனால் அந்த ஈஸ்வரன் பெயருக்கு அப்படி வந்து விட்டது ..கோயிலை தூரம் இருந்து பார்த்தபடி சுகுமாரன் நடக்கத் தொடங்கினான். . குளத்திற்கு முன்புறம் உள்ள பகுதி எல்லாம், ஒரு பள்ளி இப்போது ஆக்கிரமிப்பு செய்து விட்டது. எதிர்ப்பகுதியில் உள்ள பள்ளி தான். 50 ஆண்டுகளாக பல மாடி கட்டங்களாக, பல ஏக்கர்களாக வந்து விட்டது பள்ளிக்கு எதிரில் உள்ள மைதானத்தை முன்பு பள்ளியின் பேருந்துகள் நிறுத்துவதற்கு பயன்படுத்தி வந்தார்கள். இப்போது அதை ஒட்டிய வடக்கு பகுதி முழுக்க பள்ளியால் ஆக்கிரமப்பட்டு பள்ளியை பள்ளிக்கு சொந்த இடம் என்று அறிவிப்புகள் வந்துவிட்டன. ஒரு வகை நீல நிறம் கொண்ட சேலை போன்ற மெல்லிசான தடுப்புகள் போல செய்து இருந்தார்கள். இவ்வளவு காலமாய் விற்கப்படாமல், ஆக்கிரமப்படாமல் இருக்கிற இந்த இடம் இப்போது அந்தப் பள்ளி நிர்வாகத்தால் ஆக்கிரமப்பட்டு இருப்பது அவனுக்கு அதிசயமாகப்பட்டது. சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்புகள் அந்த ஆக்கிரமிப்பு பற்றி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த விவரங்கள் எல்லாம் அவன் அவ்வப்போது தெரிந்து கொண்டிருந்தான். ஆனால் அது என்னவானது என்று தெரியவில்லை. இன்னும் அந்தப் பள்ளி நிர்வாகத்தின் கீழ் அந்த இடம் டெல்லி முட்களின் ஆக்கிரமிப்பு மீறி அடர்ந்திருந்தது. குளத்தின் முகப்பிற்கு சென்றான். அங்கிருந்த ஒரு தோப்பில் வேம்பு, கொய்யா, மாமரம் என்று நிறைய மரங்களை கொண்டிருந்தது. அதுவும் ஒரு தனியார் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது ஆனால் அதனுடைய பராமரிப்பு குளத்திற்கு ஒரு மகுடத்தை கொண்டு வந்திருந்தது. ராயன் குளம் வறண்டு இருந்தாலும் கவர்ச்சியாக இருந்தாலும் ஆரம்பத்தில் உள்ள இந்த தோப்பு ஒரு வகை சூழலையையும் குளத்தின் முகப்பு என்ற அந்தஸ்தையும் கொண்டு வந்திருந்தது.. எல்லாவற்றிலும் தனியார் மயம் வந்துவிட்டது அப்படித்தான் அந்த தோப்பு கூட தனியார் கைவசம் இருப்பதால் சரியாக நிர்வாகம் செய்யப்படுகிறதா என்ற எண்ணம் அவனுக்கு வந்தது அந்த பந்தல் போல் அடர்ந்த பரந்த இலைகளின் மேற்பரப்பில் வெள்ளை கொக்குகள் குடியிருப்பதை அவன் பார்த்திருக்கிறான். அங்கு தான் ஒரு மரப்பறவை ஒரு இரட்டை சக்கர வாகனத்தின் கண்ணாடியை கொத்திக் கொண்டே இருப்பதை ஒரு முறை பார்த்தான். அப்போதுதான் அந்த தோப்புக்காரர் சொன்னார். அந்த கண்ணாடியில் அந்த மரப்பறகை தன் உருவத்தை பார்க்கிறது ஒரு விபத்தில் அதனுடைய துணையை தொலைத்துவிட்டது ஆகவே அந்த துணை அந்த கண்ணாடியில் தெரியும் அந்த உருவம் தான் என்று நினைத்து அது அன்பால் கொத்திக் கொண்டே இருக்கிறது .பல நாட்களாக இது நடந்து கொண்டிருக்கிறது வண்டியை கொண்டு வந்து நிறுத்திவிட்டால் போதும் ரொம்ப நேரத்திற்கு அதை செய்து கொண்டிருக்கிறது என்று அவர் சொன்னது அவனுக்கு ஞாபகம் வந்தது. கொஞ்ச தூரம் சென்றதும் ராயன் குளம் அவன் கண்களுக்கு ப்பட்டது. இரு பக்கமும் அடர்ந்து இருந்த டில்லி முள் புதர் போல் ஆகியிருந்தது. கிழக்கிலிருந்து மேற்கு போகும் பாதையில் முழுக்க சிமெண்ட் தரை நிரம்பி இருந்தது. காங்கிரீட் சுவர்கள் குளத்தையும் அந்த பக்கம் போகும் பாதையையும் பிடித்திருந்தது அங்கு ஓடக்கூடிய தண்ணீர் பல மிகை வர்ணங்களை கொண்டதாக இருந்தது.. எங்கிருந்தோ வரும் சாயப்பட்டறைகள் நீர் அங்கு வந்து சேர்வது பற்றி பல சர்ச்சைகள் இருந்தன.. ஏதோ பகுதியில் இருந்து குழாய் மூலமாக சாயத்தண்ணீர் அந்த குளத்திற்கு வருவதாக பலர் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அவன் குளத்தை கொண்டு கண்களில் பார்த்தபோது அவை விரிந்து பெரிய ஏரியாகப்பட்டது. 400 ஏக்கருக்கு மேல் உள்ள பகுதி இடையில் மரங்கள் அங்கங்கே அளந்து இருந்தன நடுவில் தீவு போன்ற ஒரு பகுதியில் மரங்கள் இருந்தன அங்க தான் வெயில் நேரங்களில் பறவைகள் இளைப்பாரி கொள்வதும் தூங்குவதும் என்று நண்பர்கள் சொல்வார்கள். நீலநிறத்தின் பாதிகளைக் காட்டும் மீன்கொத்திகள், தொங்கும் குடுவை வடிவக் கூடுகளுடன் தூக்கணாங்குருவிகள், நாணல்களை அலங்கரிக்கும் புள்ளிச்சில்லைகள் இருந்த இடம் என்று நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள் நல்ல வேலையாக அப்போதுதான் இளஞ் சூரியன் வர ஆரம்பித்திருந்தான். கொஞ்சம் தாமதமானாலும் பறவைகளைப் பார்க்க முடியாது. அவை அங்கேயுள்ள தீவு போன்ற உள்ள பகுதிக்கு போய் அடைக்கலம் ஆகிவிடும். வெயில் வராததற்கு முன்பாகவே அங்கே வந்துவிட்டது அவனுக்கு ஆறுதலாக தான் இருந்தது. அவனின் மெல்ல நடை குளத்தின் மத்திய பகுதிக்கு கொண்டு வந்திருந்தது. கரகரப்பாகக் குரல் தரும் தேரைகள், தவளைகள், கிரீக் கிரீக் என்று சத்தமெழுப்பும் பாச்சைகள், பூச்சிகளெல்லாம் எங்கே போய் விட்டன என்று தெரியவில்லை. காங்கிரீட் போடப்பட்ட அந்த பகுதியில் இருந்து அவன் குளத்தை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் அவன் அருகில் வந்த நாரையும் இரு புறாக்களும் அவனையேப் பார்த்தன. நாலைந்து கொக்குகளும் அவன் அருகில் இருந்த மரத்தின் மீதும், ஒரு பாறை மீதும் இருந்தன . அந்தப் பகுதி அந்த பகுதிக்கு சுகுமாரன் செல்லும்போதெல்லாம் அவை வந்து அவை அருகில் நின்று கொள்ளும். பல அவனை அடையாளம் கண்டு கொள்ளும். ஏதாவது பேச ஆரம்பிக்கும் அப்படித்தான் அவன் சிரித்தபடி வெளிநாட்டு பறவைகள் நிறைய வந்திருப்பதாக தகவல் வந்தது என்று சொன்னான். அதிலிருந்த கொக்கு வந்து தன் நீண்ட அலகைக் காட்டியபடி ஒரு வகை சிரிப்பை உதிர்த்தது ‘ ஆமாம் வந்திருக்கின்றன. தட்டை வாயான் நிறைய வரும். இந்த முறை குறைவாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள் கூட வேறு பகுதியில் இருந்து இங்கு வரும் அவை கூட குறைவாக உள்ளன” என்றது ஒரு காக்கை. . ஒனறு அவன் பக்கத்தில் பறந்து வந்து காலடியில் உட்கார்ந்தது “ ஸ்மார்ட். பிஷ் ஐபிஸ், லிட்டில் கிரேட் இதெல்லாம் சாதாரணமாக வந்து செல்லும் குளம் இது. அவையெல்லாம் வேறு பருவத்தில் வரும் போல் இருக்கிறது. இந்த முறை எல்லாம் இப்போது வந்திருக்கின்றன. நாங்களும் அடையாளம் கண்டு கொண்டோம். பார்த்து சிரித்தோம். பழகிக்கொண்டோம் ஆனால் இந்த முறை அவையெல்லாம் ஏனோ அதிகமாக பழகாமல் தயங்கி இருக்கிறேனா என்றன. அவர்கள் பயப்படுவதற்குக் காரணம் இந்த சாய தண்ணீர் அவர்களை சிரமப்படுத்துகிறது. சாயத்தண்ணீர் வாசம் அதிகமாகிவிட்டது அவர்கள் அதை சகித்துக் கொள்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து பறந்து வந்து கொஞ்ச நாள் இருக்கப் போகிற இடம் இப்படி மோசமாகிவிட்டது என்று வருத்தம் தான் அவர்களுக்கு . “ இது நமக்கு பழகிப் போனது தானே” “ ஆமாம் இந்த சாயத்தோடு கழிவுகளோடு நாம் இருப்பது பழகிப் போய்விட்டது “ இன்னொரு புறம் அவன் மேல் பகுதிக்கு நடக்க அந்த வெளிநாட்டு பறவைகள் ஏதாவது தட்டுப்படுமா என்று பார்த்தான் சிலது தட்டுப்படலாம். இன்னும் வெயில் வரவில்லை.வெயில் வந்தால் அவையெல்லாம் எங்காவது போய் அடைக்கலமாகிவிடும். “ அதில் யாரையாவது பார்க்க முடியுமா.. சொல்ல முடியுமா” “ முயற்சி செய்கிறோம். ஆனால் இந்த முறை என்னமோ புருஷ், பைபர் போன்றவைகள் முகம் கொடுத்து பேசவில்லை அப்படியே ஒதுங்கி போகின்றன ” “ காரணம் என்ன” என்று சுகுமாரன் கேட்டான் அவன் பார்வையில் மெல்ல கிழக்குப் பகுதியில் இருந்து கொண்டிருந்த எஸ்வியின் கண்ணில் பட்டது. அதன் செந்நிறம் அவனுக்கு பிடித்திருந்தது. அதை தன்னுடைய கைபேசியில் படம் பிடித்துக் கொண்டான் வலது பக்கத்தில் இருந்த காலி இடத்தில் குடியிருப்புகள் வருவது தெரிந்தது. அவை பல மாடி கட்டடங்களாக இருக்க வேண்டும். அங்கிருக்கும் அறிவிப்பு பலகையில் இருந்த கட்டிடம் பல மாடியாக தான் இருந்தது குளத்திற்கு பறவைகள் சரணாலயம் என்ற அந்தஸ்து கிடைத்துவிட்டது. அரசாங்கம் செலவிற்கு அனுமதி தந்துவிட்டது அதன் வளர்ச்சிக்காக பல கோடி ரூபாயை அறிவித்திருந்தது. இந்த நிலைமையில் அங்கு குடியிருப்புகள் வருவதும் ராயன் குளத்தை அந்த குடியிருப்புகள் விடுதிகளில் இருந்து நேராக பார்க்கும்படி இடங்கள் அமைக்கப்படுவதும் சாதாரணமாகிவிட்டது. இனிமேல் ராயன் குளத்தையும் பறவைகளையும் பார்க்க அந்த விடுதி அறைகளில் உட்கார்ந்து கொண்டு பைனாகுலர் மூலமாக படம் பிடிப்பார்கள் சுலபமாகிவிடும் இன்னும் நிரம்ப விடுதிகள் வர உள்ளன. ” சரி வெளியாட்டுப் பறவைகளை ஏதாவது பார்க்க முடியுமா” “ நாங்கள் தான் சொன்னோமே. இந்த முறை அவர்களெல்லாம் முடங்கி போய்விட்டார்கள். வெளியேவரப் பயப்படுகிறார்கள்” ”என்ன காரணம்” “ அந்தப் பகுதிகளில் ஏதாவது பிணங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன பத்து நாளா இதே குறை தான் ” ஒரு மாணவி இறந்து போனாள். அவள் அங்கு இருக்கிற பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். பள்ளியின் சீருடை உடன் அவள் பிணம் கிடந்.து ஒரு ஆண் அதன் பின்னால்.. ஒரு ஆண் பிணம் இன்னொரு மூலையில் கண்டெடுக்கப்பட்டது. அது ஏதோ காதல் தகராறு. ஜாதித் தகராறு உயர்ந்த சாதி பெண் தாழ்த்தப்பட்ட சாதி பையன் என்றார்கள். அவனும் பின்னால் பிணமாகக் கிடந்தான் அவன் தற்கொலை செய்து கொண்டான் என்று சொன்னார்கள். ஆனால் அவன் கொல்லப்பட்டதாக பிண ஆய்வு சொன்னது. அப்படித்தான் இன்னொரு இளம் பெண்ணும் இறந்து போயிருந்தாள். குலத்தின் இன்னொரு பகுதியில் இவர்களெல்லாம் பிணமாக கிடந்தார்கள். இந்த வெளிநாட்டு பறவைகள் இந்தப் பிணங்களை எல்லாம் பார்த்து பயந்துவிட்டன ” இது என்ன நாங்கள் குடியிருக்க வந்த இடம். இப்போதெல்லாம் இங்கே பிணங்களை அதிகமாக பார்க்க வேண்டியிருக்கிறது. என்று அந்த பறவைகள் சங்கடப்பட்டு இருக்கின்றன “ அப்போதுதான் அவை ஒரு கேள்வியை கேட்டுள்ளன உயிர்களைக் கொல்வது பாவம்தான். ஆனால் இங்குள்ள பறவைகளை எல்லாம் கொல்கிறார்கள். அதை சகித்துக் கொண்டுதான் இங்க எல்லாம் வந்து போகிறோம். ஆனால் ஆண்களும் பெண்களும் இப்படி பிணங்களாக இங்கே கிடைப்பதற்காக இந்த குளம் அமைக்கப்பட்டது போல் இருப்பது வேதனை அளிக்கிறது என்றார்கள். ” பிணங்களைக் குவிப்பது என்பது இந்த சமூகத்தின் வேலையாக இருக்கிறது சிரமம் கொள்கிறது” என்று அப் பறவைகள் சொல்லிக் கொண்டிருந்தன . எங்கள் நாட்டில் இதெல்லாம் பெரிய மனித உரிமை பிரச்சனைகள். இங்கெல்லாம் சாதாரணமாகிவிட்டது” சுகுமாரன் மெல்ல நடக்க ஆரம்பித்து அரை மணி நேரம் ஆனது அரை மணி நேர நடையில் ரயில் தொடர் வண்டி பாதை வந்துவிட்டது. தொடர்வண்டிகள் அந்தப் பகுதியில் செல்கிற போது அவை எழுப்பும்ம் சத்தம் நாரசமாக இருக்கும். ஆனால் அவையும் பழகி போனது. போலத்தான் பறவைகள் அந்த குளத்தில் நடைமுறையி வந்து கொண்டிருந்தன.. வடக்கு பகுதியில் இருந்த காலி இடத்தில் சில கடைகள் புதிதாக முடித்திருந்தன. அவற்றில் வழக்கம் போல சம்சரமாக பிளாஸ்டிக் பைகளில் தின்பண்டங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. . குளம் பறவைகளின் சரணாலயம் ஆகிவிட்டது என்பது தெரிந்து இந்தக் கடைகள் எல்லாம் புதிதாக வந்திருக்கின்றன. இந்த கடைகள் பலருக்கு தீனி போடும் . ஆனால் இங்கு வந்து செல்லும் பறவைகளுக்கு தீனி போட யாரும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை இந்த சாயக்கழிவுகளில் எந்த தீனி கிடைக்கும். சிறு உயிர்களும் சிறு பூச்சிகளும் இந்த சாய கழிவில் மடிந்துதான் போகும் இந்த பறவைகளுக்கு தீனி என்பது கிடைக்காமல் போகும் என்பதை அவன் யோசித்துப் பார்த்தான். முன்பெல்லேம் இடத்தையும் இரையையும் பகிர்ந்து கொண்டு இணக்கமாக வாழும் புள்ளி மூக்கு வாத்து, கம்புள் கோழி, குளத்துக் கொகு , நன்னீர் ஆமைகள் இருந்த இடம்தானே என்ற நினைப்பு வந்தது. கொஞ்சம் களைப்பாகி விட்டது. எவ்வளவு தூரம் நடப்பது வெயில் சுழன்று அடிக்க ஆரம்பித்தது. அவன் ஒரு சுற்று போய்விட்டு வந்த போது மீண்டும முன்பு உரையாடிய கொக்குகளும் புறாக்களும் அவன் அருகில் வந்து நின்று கொண்டன “ வெளிநாயாட்டுப் பறவைகளை பார்க்க முடியவில்லை. நீங்கள் ஏதாவது சமிக்னை அனுப்பினீர்களா.” “ முயற்சி செய்தோம் யாரையும் கண்டுபிடிக்கவில்லை சீக்கிரம் ஊருக்கு போய் விடுவோம் என்று சொன்னார்கள். அவர்களுக்கு இங்கு இருப்பதை பிடிக்கவில்லை என்று சொன்னார்கள் இன்று ஒருவரும் கண்ணில் தட்டுப்படவில்லை. சூரிய ஒளி கூட அவர்களுக்கு கொஞ்சம் கடுமையாக தான் சகிக்க முடியாதபடி இருக்கிறது ஆதலால் உள்ளே போய்விட்டார்கள் போல் இருக்கிறது. கொஞ்ச நேரம் இருந்தால் மீண்டும் முயற்சி செய்கிறோம். வாய்ப்பில்லாமல் கூடப் போகலாம்” ஆனால் உள்ளூர் பறவைகளுக்கு தெரியாத விசயங்கள் இரண்டு நடந்திருந்தன. ஒன்று.. குளத்திற்கு மேலே பரவிய கரும் புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரு பறவை மயக்கமடைந்து மூன்று நாட்களாய் உணர்வின்றி இருப்பது. இரண்டு..குளத்திற்கு சாய நீர் வந்து சேரும் இடத்தில் தண்ணீர் பருகிய இன்னொரு பறவை சுய நினைவு இழந்து இரண்டு நாட்களாய் ஒரு தனித்த இடத்தில் கிடப்பதுதான். அதைக் காணவில்லை என்று பிற பறவைகள் தேடி அலுத்து விட்டன இந்த முறை வெளிநாட்டுப் பறவைகளைப் பார்க்காமல் திரும்புகிறோம் என்று எண்ணம் சுகுமாரனுக்கு வந்தது. அதே சமயம் குளத்தில் எந்த பிணத்தையும் பார்க்காமல் திரும்புகிறோம். நல்ல வேளை என்றும் சொல்லிக் கொண்டான் WRITER SUBRABHARATHIMANIAN 8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 09486101003
Published in Uyirmmeei April issue 2023 Short story குற்றமும், தண்டனையும்/ சுப்ரபாரதிமணியன் “ கருப்புக் கண் “ என்று அந்த போலீஸ்காரர் தியாகராஜனைப் பார்த்துச் சொன்னார் .அவர் வழக்கமான சீருடை அணிந்து இருக்கவில்லை .நன்கு சலவை செய்யப்பட்ட வெள்ளை சட்டையில் நீல பூக்கள் இருந்தன .அவரின் தலை கேசம் காவல் துறை சார்ந்த மனிதரின் அலங்காரமாக இல்லாமல் புதிதாக இருந்தது. இன்றைய கல்லூரி மாணவர்கள் போட்டுக்கொள்ளும் தலைக்கேச வேஷம் போல் இருந்தது. அந்த அறைக்கு வந்து செல்பவர்களில் பாதிப்பேர் இப்படித்தான் காவல்துறை உடுப்பு இல்லாமல் இருந்தார்கள். பலர் வெள்ளை சட்டையில் இருந்தார்கள். அவனை அடித்தவர்கள் யாரென்று அடையாளம் காண முடியாதபடி பலர் வந்து போகிறார்கள். போனார்கள் ” கருப்புக் கண் தெரியுமா ”. ” தெரியாதுங்க ஒரு கண்ணாடியில் பார்த்தால் உனக்கு தெரிஞ்சுடும் ” . ” கண்ணாடி இருந்தாக் குடுங்க “ ” ஓ அது வேறயா ..அதுவேற கொடுக்கணுமா உன் மூஞ்சி லட்சணம் எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கணுமா “ .தியாகராஜனின் கண்களைச் சுற்றி கருப்பாய் வீக்கம் வந்திருந்தது. எலும்பு முறிந்த இடம் என்றில்லாமல் வேறு இடத்தில் வீக்கம் வந்து விட்டது போலிருந்தது ” .கண்டியூசன் அடினா என்னனு தெரியுமா .அந்த அடி தான் நீ இன்னைக்கு வாங்க போறே”. ” வேண்டாங்க. வாங்குனது போதும் உடம்பெல்லாம் வலி .எதெத் தாங்கறது “ ” கண்டியூசனடினா என்னனு இன்னைக்கு நான் உனக்கு தெரிய வைக்கனும்”. கை கூப்பியபடி சுவற்றோடு சேர்ந்து உட்கார்ந்திருந்த தியாகராஜனின் கைகள் தளர்ந்து விழுந்தபோது அவனின் கண்களில் கண்ணீர் கசிந்தது. தியாகராஜனின் கைகளிலும் கால்களிலும் பல இடங்களில் வட்ட வடிவில் வீக்கம் வந்திருந்தது .மூடின கையை ஒன்று சேர்த்து அடித்த இடங்களில் இப்படி வட்டவடிவில் வீக்கம் வந்து விட்டது. சொல்லி குத்தி விட்டது போல இருந்தது .தொடைக்கு கீழ் ஒவ்வொரு இடமும் இன்னும் வலித்தது அவனின் மூளையில் அபாய சிக்னல்களைத் தந்து கொண்டிருந்தன. விரைக்கொட்டை பெரிய வீக்கத்தைக் கொண்டு வந்துவிட்டது மிகவும் அடிபட்ட பல பகுதிகளில் வீக்கம் வேறு இடங்களில் பரவுவது போல இருந்தது .எங்கு எலும்பு முறிந்து இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் வேறு இடத்தில் வீக்கம் வந்து விட்டது போல இருந்தது .அவன் அருகில் ஏதாவது கயிறு இருக்கிறதா என்று தேடினார்கள் முன்பே அவன் இடுப்பில் கட்டியிருந்த அருணாக் கயிற்றைக் பிடுங்கி இருந்தார்கள் . ”ஏதாவது கயிறு இங்கே கிடந்ததா” ”அதெல்லாம் ஒன்னும் இல்லை ” ” இல்ல உனக்கு முன்னால் இங்கு ஒருத்தன் இருந்தான் அவன் கழுத்தில் கயிறு போட்டு இறுக்கி இருக்கான்” ” அய்யய்யோ “ ” என்னய்யா ஆகும். கழுத்தை இறுக்கி இருக்கான் மூச்சுத்திணறல் வந்துடுச்சு அந்த கயிறு ஏதாச்சும் துண்டு கிடைக்குதான்னு “ ” ஒன்னும் காணங்க”. தியாகராஜனுக்குக் கூட அப்படி ஒரு கயிறு கிடைத்து கழுத்தை இறுக்கி மூச்சுத்திணறல் வந்து விட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான்.உடம்பின் எல்லா பாகங்களும் வலித்தன.மெல்ல எழ முயன்று சுவற்றோடு உடம்பை சேர்த்துக் கொண்டு இன்னும் அழுத்தம் கொடுத்து எம்பியதில் அவனின் வட்டவடிவ வீக்கங்கள் பெரிதாகியது போல இருந்தது . கருப்புக் கண் வந்தாயிற்று. அடுத்து கண்டியூசனடினா என்னனு காட்டறேன் என்கிறார். இதெல்லாம் எங்கு போய் முடியும் தன் உடம்பை என்னவாகி வைக்கும் என்பது தியாகராஜனுக்கு பயம் அதிகரித்து அவன் உடம்பில் வியர்வை பெருக்கெடுத்தது .வெளியில் ஓரளவு வெயில் இருக்கும் அந்த வெயிலின் வெப்பம் அறைக்குள் வந்து இன்னும் வியர்வையைப் பெருக்கெடுத்து ஓட விட்டது போல இருந்தது . எதுக்கு இப்படி அடிக்கிறீங்க என்று கேட்ட போது ” அப்புறம் குண்டர் சட்டத்தில் போட்டவங்களை சும்மா விடுவாங்களா” என்றான் ஒருவன் ” . குண்டர் சட்டமா. ஆமாம் அதுதான் உள்ள வச்சிருக்காங்க உன் மாதிரி ஆளுக இனிமேல இந்த மாதிரி நடவடிக்கைகளை வெச்சுக்கக் கூடாதுன்னு. அப்புறம் உன்னை மனசுல வெச்சுட்டு எவனும் இது மாதிரி பண்ணக் கூடாது.. அதுக்கு தான் ...பொம்பளெ கேசு இப்போ இடம் மாறிடுச்சு இப்பிடி “ ”அதுக்கு இப்படியா அடிப்பாங்க “. ” அண்ணன் தம்பி உதவற மாதிரி இந்த அடி உதவும் நல்ல அடி. நல்ல பாடமாக இருக்கும் ”. அந்த காவலாளி அறையை விட்டு வெளியே செல்லும்போது சப்தமாக்கி கேட்டை பூட்டிவிட்டுச் சென்றான். மெல்ல உடம்பை நகர்த்தி ஒரு அடி சுவரோடு சேர்ந்து நகர்ந்து மெல்ல எழுவதற்கு முயன்றான் தியாகராஜன்.வலி எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை.ஆனால் உடம்பின் ஒவ்வொரு அணுவும் வலித்தது.ஒவ்வொரு அணு என்று சொல்வார்களே அதன் பூரணத் தன்மையை இப்போதுதான் அவன் அறிந்து கொண்டான். ஒவ்வொரு அணுவில் இருந்து கிளம்பும் வலி மெல்ல மெல்ல அவன் உடம்பையே தீயில் போட்டு வாட்டி எடுத்த மாதிரி இருந்தது . அருகில் கசங்கிக் கிடந்த அந்தத் தாளை அவன் எடுத்தான். எண்ணெய் பிசுக்குடன் அந்த தினசரித் தாளின் கையளவுப் பகுதி இருந்தது .இவர்கள் ஏதாவது எண்ணைப் பலகாரம் தின்றதன் மிச்சமாய் அது தன் அறைக்கு வந்து வேடம் காட்டுகிறது என்று நினைத்தான். மெல்ல அதை எடுத்து முகர்ந்து போது அந்தத் தாளில் இன்னும் எண்ணை வாசம் மிச்சம் இருப்பது தெரிந்தது. அப்படி என்றால் இப்போது தான் அந்த தாள் இங்கே இடம் பெயர்ந்திருக்க வேண்டும். இப்போதுதான் ஏதாவது சாப்பிட்டுவிட்டு அவர்கள் இங்கே கடாசி வீசியிருக்க வேண்டும் இந்த போண்டா, பஜ்ஜி எண்ணையின் பிசுபிசுப்பு வாசனை எத்தனை நாளைக்குப் பிறகு உணரப் போகிறோம் என்ற கற்பனை அவனுக்கு வந்தது. இதையெல்லாம் சாப்பிடுகிற வாய்ப்புக் கூட இல்லாமல் செய்து விட்டார்களே என்று இருந்தது தியாகராஜனுக்கு. அந்தத் தாளில் கிழி பட்ட பகுதியை அவன் பார்க்க ஆரம்பித்தான். செய்தித்தாள் படித்தும் பல நாட்கள் ஆகிவிட்டன .படிக்கிற பழக்கத்தில் செய்தித்தாள் மட்டும் அவனின் அட்டவணையில் இருந்தது. கையிலிருந்த எண்ணெய் பிசுக்கால் தாளின் வரிகள் ஒருவகை மினுமினுப்புடன் அவனின் கண்களில் தெரிந்தன. மனிதனின் வாழ்வில் ஒரு செயலும் இல்லை. நல்லதானாலும் சரி கேட்டதானாலும் சரி.. ஒவ்வொரு செயலுக்கும் பலனுண்டு. அணுவளவு நன்மையோ அல்லது தீமையோ அதற்கும் பலன் உண்டு. மனிதன் பரிசோதனைக்காகப் படைக்கப்பட்டான். இந்த வாழ்வு ஒரு பரிசுக்காக இந்த உலகம் ஒரு பரிசோதனைக் கூடம். உங்களின் ஒவ்வொரு செயலும் பதிவு செய்யப்படுகிறது இதில் தேர்ச்சிபெறவே மனிதன் போராட வேண்டும் இதைத்தான் வேதங்களை அளித்து உணர்த்துகிறான் இறைவன். அவனின் வாழ்வு அவனுக்கு தரப்பட்ட சந்தர்ப்பம். அதை மிகச் சரியாக உபயோகிக்க வேண்டும். இந்த வாழ்வு மகத்துவம் மிக்கது .மீண்டும் இந்த சந்தர்ப்பம் கிடைக்காது. இறந்துவிட்டால் இந்த நாட்கள் கிடைக்காது என்று இருந்த அந்தப் பத்தியின் ஓரத்தில் வேதங்களில் ஒளியில் இறைவன் என்று இருந்தது .அது புத்தகத்தின் பெயராக இருக்கக் கூடுமா. இப்போதெல்லாம் புத்தகங்களை யார் படிக்கிறார்கள் புத்தகங்களை இப்படி போண்டா பஜ்ஜி மடக்குவதற்குத் தான் பயன்படுத்த வேண்டும் போல இருக்கிறது. இது இஸ்லாமிய நூலாக இருக்குமா கிறிஸ்துவ நூலாக இருக்குமா. நிச்சயம் இந்து நூலாக இருக்காது .அனேகமாக இஸ்லாமிய நூல் ஆகத்தான் இருக்கும் என்று நம்பத் தொடங்கினான் தியாகராஜன். நவாஸ் ஹமீத் என்றொரு நண்பன் அவனுக்கு உண்டு. அவனுக்கு இருக்கிற பழக்கங்களில் மோசமான பழக்கங்களில் ஒன்று வாயில் எப்போதும் சிகரெட்டை வைத்துக் கொண்டிருப்பது தான் .சமீபமாய் இ-சிகரெட் என்று ஏதோ வந்திருக்கிறது என்று அவனிடம் நீட்டினான் .புகை வராது ஆனால் புகை படிக்கிற அனுபவமும் ருசியும் இருக்கும் என்று சொன்னான் .இதெல்லாம் எனக்கு எதற்கு என்று தியாகராஜன் வேண்டாம் என்று சொல்லியிருந்தான். அவனுக்கு இறை நம்பிக்கையும் தானம் செய்வதில் அக்கறையும் இருந்தது அவனிடம் இப்படி ஒரு புத்தகப் பத்தியை மனப்பாடமாகச் சொன்னால் அவன் நிச்சயம் மகிழ்ச்சி அடைவான். இந்த குறுகிய அறைக்குள் வேறு எதையும் சிந்திக்க முடியாது. இந்தத் தாளில் ஒரு பகுதியை மனப்பாடம் செய்து கொள்ளலாம் .அவனிடம் இந்த வார்த்தைகளைச் சரியாகச் சொன்னால் அவன் மகிழ்ச்சி அடைவான். தியாகராஜன் திரும்ப அந்த தாளின் முனையில் உள்ள பத்தியைப் பார்க்க ஆரம்பித்தான். அந்த எழுத்துக்கள் எண்ணைப்பூச்சுடன் வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தன 00 கை விரல்கள் பரபரத்துக் கொண்டிருந்தன தியாகராஜனுக்கு .எப்போதும் கைகளில் இருக்கும் கைபேசியை எந்த வகையிலாவது உபயோகப்படுத்திக் கொள்வது என்பது சாதாரணமாகி விட்டது அவனை. முகநூல் , வாட்ஸ்அப் , குறுஞ்செய்தி என்று ஏதாவது அலைக்கழித்துக் கொண்டே இருக்கும் அதுவும் முகநூலில் வருகிற வீடியோக்களில் பெண்கள் சம்பந்தமான விசயங்களை விரும்பிப் பார்ப்பான் ,கொஞ்சம் கைவிரல்கள் பிசகி விட்டது போல எதையாவது அழுத்திவிட்டால் பெண்கள், பாலியல் சம்பந்தமாக நிறைய வீடியோக்கள் வந்து குவிந்து விடும். அந்த வகை வீடியோக்களைப் பார்ப்பதில் அவனுக்கும் ஆர்வம் இருந்தது. இப்போது கைபேசி இல்லாமல் கம்பிகளுக்குள் அடைபட்டுக் கிடப்பது அவனுக்கு சிரமமாகத்தான் இருந்தது. எவ்வளவு கைபேசிகளை காவல்துறையினர் அபகரித்துக் கொண்டார்கள் என்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது .நோக்கியா சாம்சங் சைனா மாடல் மைக்ரோமேக்ஸ் லெனோவா சோனி எரிக்சன் சாம்சங் என்று அப்போது அறையில் அங்கிருந்த அவர்களிடம் இருந்த கைபேசிகளை எல்லாம் சுருட்டிக் கொண்டார்கள். பணமும் அதுபோல் மேசையின் மேலும் மேசையின் இழுப்பறையிலும் இருந்தவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டார்கள் .இந்த கைபேசிகளை எல்லாம் என்ன செய்திருப்பார்கள் என்று பல சமயங்களில் அவன் யோசித்திருக்கிறான். கைப்பற்றப் பொருட்களை பார்ம் 95ல் பதிவிட்டு நீதிபதியிடம் ஒப்படைத்து விடுவார்கள் பிறகு அவையெல்லாம் அப்படியே கிடக்கும். ஒரு நாளைக்கு அவை அடித்து நொறுக்கப்பட்டு குப்பை ஆகிவிடும் .இந்த கைபேசிகளை காவல்துறையினர் ஏதாவது எடுத்து பயன்படுத்துவார்களா என்ற சந்தேகம் தியாகராஜனுக்கு எழுந்திருக்கிறது .இந்த கைபேசி களிலிருந்து சிம்களைப் எடுத்துவிட்டு வேறு சிம்களை போட்டு பயன்படுத்தலாம் அப்படி செய்வதற்கு சாத்தியங்கள் இருக்கிறதா என்று யோசித்திருக்கிறான். ஆனால் அவற்றிலிருந்து கிடைக்கும் அலைவரிசை கைபேசி சம்பந்தமான தயாரிப்பு எண்கள் எங்காவது பதிவாகி குற்றம் சாட்டப்பட்டவர்கள் இடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைபேசிகள் என்ற எண்ணம் வந்துவிடும் என்று அதை பெரும்பாலும் தவிர்ப்பதாக சொல்லிக்கொண்டான். இது போல் ஆயிரக்கணக்கான கைபேசிகள் அவர்களிடம் இருக்கும். ஊரில் உள்ள வீடியோ பார்லர்களில் கைப்பற்றப்பட்ட குறுந்தகடுகளை அப்படித்தான் காவல் துறை அலுவலகங்களில், பீரோக்களில் கிடப்பதையும் அல்லது சாக்கு மூட்டையாகக் கிடப்பதையும் தியாகராஜன் பார்த்திருக்கிறான் .அவனுக்கு தெரிந்த ஒரு நண்பர் காவல்துறை கைப்பற்றிய குறுந்தகடுகளை வாங்கி வந்து பார்த்துவிட்டு திருப்பித் தந்ததாக கூடச் சொன்னார். அந்த கைப்பற்றப்பட்ட குறுந்தகடுகளில் பாலியல் சம்பந்தமான விஷயங்கள் இருந்தன .ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் அவற்றைப் பெற்று பார்த்து அனுபவித்து திருப்பித் தந்ததாக ஒரு நண்பர் சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது அதற்கெல்லாம் அவசியம் இல்லை எல்லாப் படங்களும் கைபேசியில் இருக்கின்றன. ஆனால் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் கொடுத்து வாங்கிய இந்த கைபேசிகள் இப்படி முடங்கிப்போய் கிடப்பதோ அல்லது இறுதியில் நொறுக்கப்பட்டு குப்பை ஆக்கப்படுவதோ அவனுக்கு நினைக்கையில் சங்கடம் அளித்தது .முகநூல் , வாட்ஸ்அப் என்று வந்தபின் தொடர்புகொள்வது சுலபமாகத்தான் ஆகிவிட்டது . ஆனால் அதுவே காவல்துறையினருக்கு வழக்குகளை விசாரிக்க போதுமானதாக இருப்பதாக சொல்லிக்கொண்டார்கள் .கைபற்றப்பட்ட கைபேசிகளில் அதிகபட்சமாய் 8000 ரூபாய் உள்ள கைபேசி இருந்தது. அதே போல 300 ரூபாய் உள்ள சைனா கைபேசிகளும் இருந்தன கைப்பற்றப்பட்ட பொருட்களைப் பட்டியலிடும் போது ஒவ்வொன்றிற்கும் எண் குறித்தார்கள் அப்போது காண்டம் ,கருத்தடை ஆணுறை விலை குறிக்காமல் மதிப்பிடப்பட்ட விலை என்ற பகுதியில் 0 என்று குறிப்பிட்டார்கள். அது அப்படி விலை அற்றதா அல்லது விலை மதிப்பு இல்லாததா.. அதை எவ்வளவு ஜாக்கிரதையாக கையாள வேண்டும் .அதை எவ்வளவு நுணுக்கமாக பயன்படுத்த வேண்டும் என்னென்ன அத்தியாவசியமான விஷயங்களுக்குத் தேவையாக இருக்கிறது என்றில்லாமல் மதிப்பிட்டவர்கள் கீழே விரிக்கப்பட்டிருந்த நீலக்கலர் பிளாஸ்டிக் பாய் 200 ரூபாய் என்று போட்டு இருந்தார்கள் .அதனுடைய விலை மட்டும் சரியாகக் குறித்து இருந்தார்கள். மற்றபடி மற்ற கைபேசிகளுக்கு விலை என்று குறிப்பிட்ட தொகை பாதியாக தான் இருந்தது. அவையெல்லாம் சரியான பயன்பாட்டில் தான் இருந்தவை .ஆனால் இவ்வளவு குறைவாக மதிப்பிட்டு இருக்கிறார்கள் என்று அவன் கூட முணுமுணுத்துக் கொண்டான். குற்ற அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விவரங்களில் கடவுச்சீட்டு எண் என்று ஒன்று இருப்பதை அவன் எட்டிப் பார்த்தபோது அந்த விண்ணப்பத்தில் இருப்பது தெரிந்தது. தியாகராஜன் மலேசியா சிங்கப்பூர் போக வேண்டுமென்று கடவுச்சீட்டு எடுக்க ஆசைப்பட்டு இருந்தான். ஆனால் சமீபகாலங்களில் விசா பெறுவதற்கு அங்கிருந்து யாராவது கடிதம் அனுப்ப வேண்டும், உத்தரவாதம் தரவேண்டும் என்று வந்துவிட்ட விதிமுறைகளால் தாமதித்துக்கொண்டிருந்தது. .இல்லை என்றால் கொஞ்சம் காசு அதிகம் செலவழித்து அங்கு அறைகள் பதிவு செய்துகொண்டு அதை விசாவிற்கு காண்பித்தால் சுலபமாகிவிடும். அது கொஞ்சம் செலவு அதிகம் என்று அவன் தவிர்த்திருந்தான். கடவுச்சீட்டு வாங்குகிற எண்ணம் அப்படியே தவிர்த்து விட்டது . அவன் ஒரு முறை அங்கு வருகிற நெருக்கமான பெண்களிடம் மலேசியா சிங்கப்பூர் போலாமா என்று கூட கேட்டு வைத்தான். அவர்கள்கூட உற்சாகமாய் போகலாம் என்று சொல்லியிருந்தார்கள் அதற்காக திட்டமிடல் பற்றி அவன் யோசித்துக் கொண்டிருந்தான் .குற்றம்சாட்டப்பட்டவர்களின் விவரப்பட்டியல் இருந்த கடவுசீட்டு எண் என்பது வெளிநாடு செல்வதற்கான பாஸ்போர்ட் அல்ல. சிறைக்கு அனுப்புவதற்கு அவர்களுக்கான ஒரு எண் என்பது அவனுக்கு பின்னால் தெரிய வந்தது .அந்த விவரம் பிணையத்தில் எடுக்கும்போது பூர்த்தி செய்யப்பட வேண்டிய குறிப்பாக இருந்தது .ஆனால் பிணையம் தனக்கு கிடைக்குமா என்பது சந்தேகமாக இருந்தது. அவனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்திருந்தார்கள் .அவனையும் ஜான்சிராணி அடையாளம் காட்டினாள். அவளை விபச்சாரத்திற்கு ஈடுபடுத்தியதாய் அவள் சொன்ன எட்டு பேர்களை குண்டர் சட்டத்தில் தான் போட்டிருந்தார்கள், ஆனால் குண்டர் சட்டத்தில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்பதை அவர்களின் வழக்கறிஞர்களிடம் அவனும் சொல்லி இருந்தான். அப்படி குண்டர் சட்டத்தில் போட்டால் பிணையும் கிடைக்காது .ஓராண்டுக்கு வெளியில் வரமுடியாது அவர்கள் மேல் போடப்பட்டிருக்கும் வழக்குகளை குண்டர் சட்டத்திலிருந்து வேறு பிரிவுகளுக்கு மாற்றினால் பிணையம் கிடைக்கும், வெளியே வர ஏதுவாகும் என்பது கூட முக்கியமான விஷயமாக இருந்தது ,அதற்காக வழக்கறிஞரிடம் அவனும் சொல்லிக்கொண்டிருந்தான் ,ஆனால் காவல் துறையில் உள்ளவர்களால் தான் அடிபட்டு மிதிபட்டு நடமாடச் சிரமப்பட்டு பிணையில் வெளியே போய் நிம்மதியாக இருக்க முடியுமா என்ற கேள்வி வந்தது . இனி மனைவி அவனைச் சரியாக பார்ப்பாளா. மரியாதை தருவாளா .இனி அவளை எப்படி எதிர்கொள்வது. எதற்கெடுத்தாலும் முறைத்துக்கொண்டு அவள் பெற்றோர் வீட்டுக்கு செல்பவள் இந்த வழக்கு காரணமாக அவள் நிரந்தரமாகக் கூட தன்னைவிட்டு விலகக் கூடும் என்பது அவனுக்கு பயம் அளித்தது. பல பேர் பாதுகாப்பு இல்லத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டு இருந்தான். தன்னுடன் கைதுசெய்யப்பட்ட அழகிகளையெல்லாம் சிறையில் போடுவார்களா அல்லது பாதுகாப்பில்லத்தில் வைப்பார்களா என்பது அவனுடைய கற்பனைக்கே எட்டவில்லை. வழக்குகள் என்பது பல பிரிவுகளாக இருந்தன. சில வழக்குகள் விடுதலை வரை பல வழக்குகள் தண்டனையாக அபராதத் தொகை கட்டும் வரை. சில வழக்குகள் சிறைக்குச் சென்று தள்ளி விடும் வரை. சில வழக்குகள் தண்டனை முடியும்வரை என்று வகைவகையாக இருந்தன. இவற்றில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இப்படி வகை வகையான தண்டனைகள் கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது தனக்கு கிடைக்கும் தண்டனை எதுவாக இருக்கும் இந்தப் பட்டியலில் ஏதாவது ஒன்று அவனுக்கு கிடைக்கும். ஆனால் அது எதுவாக இருக்கும் என்பது அவனின் யோசிப்பிற்கு உடனே வரவில்லை. பெயில் வரை இருக்கும் வழக்குக்கு மேலாக சிறை மேலும் இருக்கும் என்பது அவனுடைய மனதில் இருந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருப்பவர்கள் பல பேர் அவனுக்கு அவ்வப்போது அறிமுகமாகி இருந்தார்கள். ஆனால் அவர்கள் தன்னை சுற்றிவளைத்த காவல்துறையுடன் இருப்பது அவனுக்கு ஆச்சரியம் தந்தது .சாதாரண சமூகப் பணியாளர்கள் ஆலோசனை சொல்பவர்கள்,கவுன்சிலர்கள் போன்றவர்களெல்லாம் அந்தப் பட்டியலில் வந்துவிட்டது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது , குழந்தைகள் நலக்குழு வைச் சார்ந்த சிலரும் அவனிடம் கேள்விகள் கேட்டார்கள் ஆச்சரியமாக இருந்தது. இவர்கள் எல்லாம் யார் .திடீரென்று இவர்களெல்லாம் எப்படி முளைத்தார்கள் .இவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறதா .ஏதோ கொஞ்சம் பணம் ,கொஞ்சம் எலும்புத் துண்டு போட்டால் இவர்கள் எல்லாம் ஓடி விடுவார்கள் என்றுதான் தியாகராஜன் நினைத்திருந்தான். ஆனால் அவர்களின் செல்வாக்கு என்ன என்பதை அவர்கள் கேட்ட கேள்விகளில் இருந்து அவன் அறிந்து கொண்டான் .குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் என்று சுமார் 30 பேராவது அந்த பட்டியலில் இருப்பார்கள் என்று தோன்றியது .இவர்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒரே வழக்கறிஞரை வைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை அல்லது ஒவ்வொருவரும் தனக்கு தெரிந்த வழக்கறிஞர்களை நியமித்து தான் வாதாட வேண்டுமா என்பது அவனின் குழப்பங்களில் ஒன்றாக இருந்தது .ஆனால் குண்டர் சட்டத்தில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்டு வேறு வழக்கு பிரிவுகளின்கீழ் தாங்கள் வந்துவிட்டால் ஓரளவு ஆறுதலாக இருக்கும் என்று நினைத்தான் .தான் அடி பட்டது போல் மற்றவர்களும் அடிவாங்கி இருப்பார்களா அல்லது பாதிக்கப்பட்ட பெண்களை பாலியல்தொழில் செய்ய தூண்டியதாக உள்ள சிலருக்கு இன்னும் கடுமையான அடி உதைகள் கிடைத்திருக்குமா.. பாலியல் தொழில் மூலம் சம்பாத்தியம் ஈட்டி பாதிக்கப்பட்ட பெண்களை பாலியல் தொழில் செய்யத் தூண்டியதாக யார் மீதெல்லாம் வழக்குகள் போட்டிருப்பார்கள் அவனுக்கு யூகிக்க முடியவில்லை. ஆனாலும் குண்டர், போக்சோ சட்டப் பிரிவில் இருந்து வேறு சட்டப் பிரிவுக்கு மாற்றம் செய்து விட்டார்கள் என்றால் அது ஒருவகை ஆறுதலாக இருக்கும் என்பது அவனின் விருப்பமாக இருந்தது . விரல்களின் நாட்டியத்தை இப்போது கைபேசி எதுவுமில்லாமல் விரல்களை அசைத்து பாவனை செய்து கொண்டான் ஆனால் உடம்பின் ஒவ்வொரு அணுவும் வலியை உற்பத்தி செய்வது போல விரல் நுனிகளில் வலியின் தீவிரம் வந்து நின்றது. ஐயோ என்று லேசாக முணுமுணுத்துக் கொண்டான் .அம்மா என்று எதேச்சையாக வார்த்தைகள் அவனின் வாயில் இருந்து வந்தன. அம்மாவை இன்னும் கொஞ்சம் கௌரவப்படுத்தி சாக விட்டிருக்கலாம். கடைசி காலத்தில் காலில் அடிபட்டு கிடந்தவளை ஒரு பிச்சைக்காரியைப் போல தானும் சேர்ந்து நடத்தி விட்டது ஞாபகம் வந்தது .அம்மா கால்களைத் தூக்கிவைக்க முடியாமல் ஏதோ இரும்பு குண்டுகளைக் கட்டி விட்டது போல இருப்பதாகச் சொல்லி அழுவாள் .அதேபோலத்தான் பெரிய இரும்புக் குண்டுகளை கயிற்றில் மாட்டி தன் உடம்போடு இணைத்து பெரும்பாரம் ஆகிவிட்டதை அவனின் கண்களில் இருந்து கசிந்த கண்ணீர் வெளிப்படுத்தியது. ” நான் செத்துருவன் போலிருக்கு “ ” நீ சாக மாட்டே. ரொம்ப நாள் இருப்பே . தப்பு பண்ணும் போது தெரியலையா தப்புன்னு “ “ தப்புன்னு தெரியலே. கொஞ்சம் காசு வந்துச்சு. பல பெரிய புள்ளிக கைக்கிவந்துட்ட மாதிரி இருந்துச்சு . “ “ தப்புன்னு தெரியலே. ஆனா தண்டனை மட்டும் இப்போ தெரியறதாக்கும் “ “ ஆமாங்க “