சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 18 டிசம்பர், 2023

புகையிலை வரலாறு கட்டுரை தொகுப்பு இரா. காமராசு / சுப்ரபாரதிமணியன் தொகுப்பில் புகையிலை ஒரு நுகர்வோர் பண்பாட்டு ஆய்வு என்ற தலைப்பில் செய்த ஆய்வின் தரவுகளை ஒரு நூலாக தந்து நம்மை மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறார் .புகையிலை சாகுபடி குறித்த நிறைய விபரங்கள் புகையிலை எப்படி பயன்பாட்டிற்கு வந்தது. அது சார்ந்த தொன்மக்கதைகள் நிரம்ப உண்டு . புகையிலை என்பது தவறான காரணங்களுக்காக மிகவும் பிரபலமடைந்த தாவரமாக கருதப்படுகிறது. ஆனால் இன்றைக்கு சாதாரணமான பயன்பாட்டு தாவரம் என்றாகிவிட்டது இந்த புகையிலை சார்ந்த பல நாட்டு தொன்மக் கதைகள் எல்லாமே விரிவாக சொல்லப்பட்டிருக்கின்றன. சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கின்றன அந்த கதைகள் மூலமாக அந்த மக்களுடைய வாழ்க்கையை தெரிந்து கொள்ள முடிகிறது இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தின் புகையிலை தமிழகத்தில் ஊடுருவியது. கேரளா பயன்பாடு முதல் கொண்டு சுவாரஸ்யமான நிறைய பதிவுகள் உள்ளன. இவற்றையெல்லாம் சுவாரஸ்யமாக எடுத்துச் சொல்லும் போது புகையிலையின் தீமைகள் குறித்தும் சொல்லாமல் இருக்க முடியாது. அது ஒரு கடமையாக அமைகிறது அப்படித்தான் புகையிலை மருந்து பொருளாகவும் இருப்பதைப் பற்றி சொல்லுகிற அதே வேளையில் அது தரும் நோய்களைப் பற்றியும் சிறப்பாக சொல்லியிருக்கிறது இதுபோன்ற ஆய்வுகளும் நமக்கு பல்வேறு பயன்பாட்டில் உள்ள பொருட்களுடைய வரலாற்றை பற்றி சுலபமாக சொல்லும் அந்த வகையான நூலாக இருக்கிறது. தொடர்ந்து இந்த நூலை பற்றி நண்பர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வெற்றிலை சார்ந்தும் இதே போல ஒரு வரலாறும் இரா காமராசு எழுதியிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். சுவாரஸ்யமான தகவல்கள் கொண்டு கடுமையான உழைப்பையும் கொண்டுஇந்த நூல் உருவாகியிருக்கிறது. நாட்டுப்புறவியல், படைப்பிலக்கியம் சார்ந்த செயல்பாடுகள் தாண்டி இரா காமராசு அவர்களின் . இவ்வகை முயற்சிகள் நமக்கு அவசியமாகப்படுகிறது. ( இந்த நூல் உயிர் பதிப்பகம் வெளியீடு ரூபாய் 200 )