சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 8 டிசம்பர், 2014

கோவை இலக்கியச் சந்திப்பு 48: அ.முத்துலிங்கம் குறித்த இரு நூல்கள் வெளியீடு

Print PDFஅ.முத்துலிங்கம் 30/11/14 ஞாயிறு காலை 10 மணி : நரசிம்ம நாயுடு மேல்நிலைப்பள்ளி, மரக்கடை, கோவையில் சுப்ரபாரதிமணியன் தொகுத்த அ.முத்துலிங்கம் குறித்த  இரு நூல்கள் வெளியீடு நடைபெற்றது. சுப்ரபாரதிமணியன் 2 நூல்களை வெளியிட ஈரோடு சந்திரு, கோவை நித்திலன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
சுப்ரபாரதிமணியன் :  “  எல்லோருக்கும் இது வாய்க்காது. முத்துலிங்கத்திற்கு கிடைத்திருக்கும் இந்த ரச வாத  வித்தை தமிழுக்கு பெரிய கொடை.  இலங்கைக்காரர் என்றால் ஈழ தேசிய இனச் சிக்கல் சம்பந்தமாக விசயங்கள் இல்லாமல் இருக்க முடியாது.  இதில் உள்ள பல கட்டுரைகளில் இலங்கை இனக் கலவரச் சம்பந்தங்கள் உள்ளன.அகதிகளின் அவலம் இருக்கிறது. தனி ஈழம் தாகம் தென்படுகிறது.  இவற்றியெல்லாம் ஒரு எழுத்தாளன் பதிவு செய்யும்  பக்குவம் தெரிகிறது.  அரசியல் சார்ந்தோர் அவற்றை சொல்வதைக் காட்டிலும் எழுத்து ரசனையில்  நல்ல பதிவாகி விடுகிறது. 
வேலை சூழலில் பல துரோகங்கள், சாப்பாடு தூக்கி மனிதர்களுடனான உறவும் சொல்லப்படுகிறது.  ஆப்பிரிக்க நியமனம் போது ஒரு சாவோடு அதை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.. நிலத்தில் கிடைக்கும் வைரம் பெண்களின்  கண்களில் மின்னுகிறது.  மேசன் சங்கத்து அனுபவங்கள் போல நண்பர்களின் கட்டாயத்தால்  சில இடங்களில் உறுப்பினராக இருக்க வேண்டியிருக்கிறது. சூடான் விருந்தில் வாயின் உட்சபட்ச பயன்பாடு சொல்லப்படுகிறது. பெசவரின் பூங்கொத்துப் பெண்கள்  சுவராஸ்யமானவர்கள். பாக்கிஸ்தானின் ஜகஜாலக்கில்லாடி கள்ளன்கள்  கலை உச்சத்தில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இப்போது அமுலில் இருக்கும்  மின்வெட்டைக் கவனிக்கிற போது எங்கோ மின் திருட்டு நடந்திருக்கிறது என்பதும் தெரிகிறது. சோமாலியா அனுபவங்கள் பற்றி சொல்லும் போது இந்த மின் திருட்டு பற்றி எழுதுகிறார்.புத்தாண்டு கொண்டாட்டங்கள், குதிரைப்பயணம், சைக்கிள் ஓட்டுதல், விமான நிலையத்தில் செருப்பு கழற்றும் சடங்குகள், முடித்திருத்தும் அனுபவங்கள், ஞாபக மறதி என்று சுவாரஸ்யமான  நிறைய விசயங்கள். இவற்றில்  நீங்கள்  ஏதாவது உண்மையைக் கண்டு பிடித்தால்  அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன். அது தற்செயலானது என்று முத்துலிங்கம் தரும்  வாக்குமூலத்தைப்  புறம் தள்ளி விட்டு  அவரை முன்னிலைப் படுத்திதான் இந்த நாவலைத் தொடர முடிவதற்குக் காரணமாக   தன்னிலையாகச் சொல்லப்படுவதை முக்கிய காரணமாகக் கொள்ளலாம். படைப்பாளன் ரொம்பவும் தன்னை மறைத்துக் கொள்ளவும் முடியாது.  மறைத்துக் கொண்டாலும் அவன் வெளிப்படும் தருணங்களைச் சுலபமாகக் கண்டு கொள்ளலாம். இதிலும் முத்துலிங்கம் அவர்களைச் சுலபமாகக் கண்டு கொள்ள முடிகிறது.  இதில் வருகிற இந்தியப் பெண்களோ, ஆப்பிரிக்கப் பெண்களோ,  நைரோபிப் பெண்ணோ  அனுதாபத்துடனும்  எந்த வகையிலும் கிண்டலுக்கு ஆளாகாமலும் சரியாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.  அவர்கள் மீதான எள்ளல் தொனி ஒரு பிசகு அதிகமாகிப்போனாலும் கொச்சையாகிவிடும். அது எங்கும் நிகழவில்லை.” பெண் படைக்கப்படுவது ஆயுள் முழுவதும் உறிஞ்சப்படுவதற்கு. அவளுக்கு ஓய்வு நாள் என்பது இன்னும் குறிப்பிடப்படவில்லை” என்று ஒரு இடத்தில் எழுதுகிறார்.  பல இடங்களில் இது போன்ற சித்தரிப்புகள், வார்த்தைகள் பெண்களை மேன்மைப்படுத்துகின்றன.இப்போது அவரின் உற்சாகமான எழுத்திற்கு  இடைஞ்சலாக ஞாபக மறதி வந்திருக்கலாம். முதுமையில் ஒவ்வொவொரு நாளும் உயிர் தப்புவதுதான் நாட்களைக் கடத்துவது என்றாகி விடுவதை இறுதியில்  குறிப்பிடுகிறார்.எழுத்தாளர்களுக்கோ,  இந்த  நாட்களைக் கடத்துவது என்பது இல்லாமல்  ஆயுள் போதாமைதான் கணக்கில் வரும்.  .கலை  இலக்கிய விசயங்களில் ஈடுபடுபவர்களுக்கு உடலின் உபாதை மீறி இயங்க  இயங்க படைப்பூக்கம் ஒரு உந்து சக்தியாக கூடவே இருந்து கொண்டிருக்கும்  என்று  தோன்றுகிறது “  என்றார்.

1. அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்தொகுப்பு: சுப்ரபாரதிமணியன்  | அ.முத்துலிங்கம் பற்றிய  கட்டுரைகள் தொகுப்பு
( எஸ்.இராமகிருஷ்ணன், சுப்ரபாரதிமணியன்,உமாசக்தி, வெங்கட்சாமிநாதன், ஜெயமோகன், பராசக்தி சுந்தரலிங்கம், தமிழ்மகன், நாஞ்சில்நாடன், பாவண்ணன், மு.இராமநாதன், இல.சைலபதி, மதுமிதா, காயத்ரி சித்தார்த், எஸ். செந்தில்குமார் ஆகியோரின் கட்டுரைகள் ) (ரூ 90,( நற்றிணை பதிப்பகம், சென்னை  28482818, 9486177208 )

2. தமிழ்மொழிக்கு ஒரு நாடில்லை  ஜெயமோகன், மதுமிதா, கடற்கரய், காலம், கிருஷ்ணா டாவின்சி,ராம்பிரஷன், மதுரபாரதி ஆகியோர் முத்துலிங்கத்திடம் எடுத்த நேர்காணல்கள்
(அ.முத்துலிங்கம் பேட்டிகள் , கவின்கலை பதிப்பகம் சென்னை ரூ120)

நெசவாளன் எப்போதும் அம்மணத்தோடா.. 

சுப்ரபாரதிமணியன்

கல்யாணப்புடவையில் இப்போதெல்லாம் அதிகம் பேசப்படுவது திவாகா பட்டு என்ற 44 லட்ச ரூபாய் சேலைதான். பணக்காரர்கள் முகூர்த்தத்தில் அந்த பட்டுச்சேலையை அதிகம் விரும்புகிறார்கள். அதை விற்கும் கடையின் லேபிள் இருக்கும். அதை நெய்தவன், உருவாக்கியவன் பெயர் எங்குமிருக்காது. நெசவாளன் கூலியாளாக எங்கோ நின்று விடுகிறான். அவ்வளவு அற்புதமாக நெய்பவன் கலைஞனாக தன் இருப்பைக் காட்டிக் கொள்ள முடிவதில்லை. அதை வடிவமைக்கும், டிசைன் செய்பவனுக்கு கூட பெரும் மரியாதை இருக்கும். ஆனால் நெய்பவனுக்கு கூலிக்காரன் அந்தஸ்துதான். நெசவாளனுக்கு எந்த அடையாளமும் இல்லை.முன்பெல்லாம் கல்யாணம் என்று வருகிற போது ஒரு பட்டுச் சேலை எடுப்பார்கள். இப்போது 20 தேவைப்படுகிறது. அதிலெல்லாம் விறகப்படும் கடையின் முகவரிதான் இருக்கும். நெய்தவன் முகவரியற்றே இருக்கிறான்.கைத்தறி என்று பெயர் போட்டு விசைத்தறியில் நெய்த சேலைகள் அமர்க்களமாய் விற்கப்படுகின்றன.தமிழகத்தில் 2 லட்சம் குடும்பங்கள் 4 லட்சம் நெசவாளர்கள் உள்ளனர். தனியாரை நம்பி இருப்பதால் பெரிதாய் சமூக பாதுகாப்பு இல்லை. அன்னாடம் காய்ச்சி போல தினக்கூலி போலாகிவிட்டான். ஒரு சேலைக்கு நெசவாளி பெறும் கூலி நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் லாபம் நிர்ணயிக்கப்படுவதில்லை. இடைத்தரகர்கள், விற்பவர்கள் எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் விற்ற்கலாம். கிலோ கணக்கில் விற்கிற இன்றைய யுகத்தில் கிலோ 6,000 ரூபாய் முதல் 1,60,000 ரூபாய் வரைக்கும் சேலை விற்கிறது.விசைத்தறியில் 300 ரூபாய்க்கு விற்கும் சேலை கைத்தறியில் 1000 ரூபாயாகிறது.விசைத்தறியில் கூலி வேலை செய்கிறவனுக்கு 1 லட்சம் ரூபாய் கூட அட்வான்ஸ் கொடுக்கப்படுகிறது. கைத்தறி டிசைன்கள் விசைத்தறியில் போடப்பட்டு அம்ர்க்களமாக உற்பத்தி நடக்கிறது. கைத்தறி சேலைகளை தோளில் போட்டு விற்ற அண்ணா, க்லைஞர்கள் இன்று இல்லை. விலைவாசி உயரும் வேகத்தில் நெசவாளிக்கு கூலி உயர்வு இல்லை. அவன் போராடுவதில்லை. 30 வருடம் முன் 150 ரூபாய்க்கு விற்ற பட்டு இப்போது 4500 ரூபாய். அப்போது 250 ரூபாய்க்கு விற்ற சேலையில் 50 ரூபாய் லாபம் என்று நியாயம் இருந்தது. . இப்போது 4500 பட்டுக்கு, 1500 கூலிக்கு என்று 6000 ரூ அடக்கவிலையாகிறது. விற்பது எத்தனை ரூபாய்க்கு என்பதை வியாபாரி மட்டும் அறிவான்.. ஒவ்வொரு ஊருக்கும் கூலி வித்தியாசமுண்டு. தஞ்சையில் 700ரூ வாங்கும் நெசவாளி சிறுமுகையில், கோவையில் நெய்தால் ரூ 1000 வாங்குவான். முதலாளிகளின் கருணையை பொறுத்து கூலி நிர்ணயிக்கப்படுகிற தொழில் நெசவு மட்டுமே.பட்டு விலை ஏறுகிறது. ஜரிகை விலை ஏறுகிறது. கூலி மட்டும் நெசவாளிக்கு ஏறுவதில்லை.போராட அவன் ஒன்று சேர்வதில்லை. ஜாதி ரீதியாக சங்கம் வைக்கிற நெசவாளி தொழிற்சங்க ரீதியாக ஒன்றுபடுவதில்லை. அவர்களை தொழிற்சங்க ரீதியாக ஒருங்கிணைப்பதில் பொதுவுடமை வாதிகளுக்கும் தோல்விதான். இது பற்றிய அறியாமையில் நெசவாளி உழல்கிறான்.கூலியில் முதலாளி ஏமாற்றுகிறான். விசைத்தறியில் கைத்தறி ரகங்கள் போட்டு ஏமாற்றுகிறார்கள். 10,000 விசைத்தறிகளில் கைத்தறி ரகம் ஓடினால் 1 தறியை அரசாங்க அதிகாரி பிடிப்பான். எல்லாம் கண் துடைப்பு. கைத்தறியை வசதி படைத்தவர்களே அணிகிறார்கள் அனுதாபத்தோடு. ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளிகளின் கூட்ட்த்தில் நெசவாளியும் கலந்தே நிற்கிறான். பெட்ஷீட், ஜமுக்காளம், பாய் முடைவோர், பட்டு, கோரா, பம்பர் நெய்பவர்கள் எல்லோரும் நெசவாளர்களே. ஆனால் பெட்ஷீட், ஜமுக்காளம், பாய் நெய்பவர்கள் வறுமையின் கோட்டின் கீழ்தான் இருக்கிறார்கள். பட்டு, பம்பர்கோரா கைத்தறியில் நெய்பவர்கள் நிலையான வருமானம் கொண்டவர்களாக இருப்பது ஆறுதல் தருகிறது. 1 கோடி பேர் படித்தஇளைஞ்ர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஆனால் கைத்தொழிலை சொந்தத் தொழிலாக கொண்ட குடுமப்ங்களில் இந்த அவலம் இல்லை. அது நெசவோ, மர வேலையோ…. எம்பிஏ படித்தவன் 5,000 ரூக்கு அலைய வேண்டி உள்ளது. நெசவாளர் வீட்டுப்பையன் சுலபமாய் அதை விட 4 மடங்கு சம்பாதித்து விடுவான். ஆனால் நெசவாளி அவனது மகனை நெசவாளி ஆக்க விரும்புவதில்லை. நெசவுத்தொழில் சரியான ஆட்கள் இல்லாமல், புதிய தலைமுறையினரின் ஆர்வம் இல்லாமல் ஒதுங்கிக் கிடக்கிறது. நெசவாளி சம்பாதித்து குழந்தைகளை மருத்துவர், பொறியாளர் அக்குகிறார்ன். ஆனால் நெசவாளன் குடும்பத்துக்கு பெண் தர விருப்பமிருக்காது பலருக்கு. படித்தவன் கணிசமான வருமானம் இருந்தாலும் நெய்வதில்லை. வீட்டில் எல்லோரும் சேர்ந்து செய்தால்தான் தொழில் நடக்கும். தனியாள் வேலையாக அது இல்லை.. 5 விசைத்தறிகளுடன் ஆரமபிக்கும் ஒருவன் பத்து வருடத்தில் 50 தறிகளைக் கொண்டிருப்பான். 5 தறிக்கு நூல் கொடுப்பவன் 10 வருடத்தில் 100 தறிக்கு நூல் கொடுத்து முதலாளி ஆகி விடுவான்.ஒற்றைத்தறியுடன் நெய்பவன் அப்படியேத்தான் இருப்பான். தரகர்கள் கொழுக்க தறியில் உட்கார்ந்திருப்பவன் தனியாளகவே இருந்து வருகிறான். நெசவாளி கலைஞன்தான். ஆனால் அந்த அடையாளத்தை சமூகம் அவனுக்குத் தருவதில்லை. இப்போது மெமரி கார்டு போட்டு ஜமுக்காளத்தில் பல டிசைன்களில் நெய்கிறான் நெசவாளி.அவனின் வாழ்க்கை தறிக்குழிக்குள்ளான ” மெமரி” தான் எப்போதும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் அவன் தொழில் செய்யலாம். ஆனால் தனியார் முதலாளிகளின் ஆக்கிரமிப்பு அவர்களை கூட்டுறவுச் சங்கங்களிடம் அணுக விடுவதில்லை. தனியார் தரும் கூலிதான் நிரந்தரமாக்கப்பட்டதாகும். தனியாரை நம்பியே, அவனிடம் கூலி வேலை செய்தே நெசவாளி யுகங்களைக் கடத்தி விட்டான். திருப்பூரின் ஒவ்வொரு பகுதிக்கும் முதலாளிகள் அடிக்கடி வந்து நெசவுச் சாமான்கள் கொடுத்துப் போகிறார்கள். திருப்பூரில் பெரிய முதாலாளிகள் உருவாகவில்லை. உருவானவர்கள் இல்லாமல் போய் விட்டார்கள். கோவைப்பகுதியிலிருந்து ஜவுளிக்கடைகள் ஆண்டுதோறும் 400 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்கிறார்கள். நெசவாளன் என்ற கலைஞனுக்கு விளம்பரத்தில் கோமனாண்டி, அம்மணக்காரன் என்ற பெயர்கள்தான் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன., 

 சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602 / 9486101003 / subrabharathi@gmail.com