சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 21 ஜூன், 2020

திக்கு தெரியாத உலகில் ....சுப்ரபாரதிமணியன்

தற்காலிகப் பேரிடர் vs  நீடித்தப் பெரும் பேரிடர்
தற்காலிகப் பேரிடர் என்று கொரானாவை மதிப்பிட்டால் நீடித்த பெரும் பேரிடர் என்ற வகையில் சுற்றுச்சூழலைப் பொறுத்த அளவில் பல விசயங்களை இந்தக் கொரானா காலத்தில் மத்திய அரசு தொடங்கியுள்ளது.

அதில் முக்கியமானது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி சுரங்கங்களை தனியாருக்கு விடுவது என்பது .

இன்னும் சில முக்கியமானவைகளில்  மீத்தேன் எடுப்பதில் உள்ள நடைமுறைகளை லகுவாக்கியது மற்றும் இந்தியாவில் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்    500 நிலக்கரி சுரங்கங்கள் ஏல முறையில் தனியாருக்கு வழங்கப்படும் என்பதும் , அதில் 50 சுரங்களின் செய்லபாடுகள் உடனடி செயலுகு வருவதும் தூய்மை மின்சாரம் தத்துவத்தை பன்னாட்டு அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த நடவடிக்கை , சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியாவை பல பத்தாண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்று விடும்.

மற்றும்
மத்திய அரசு அறிவித்திருக்கும் திட்டங்களில் அபாயம் தரப்போகிறவைகளில் அருணாசல பிரதேச புலிகள் சரணாலயம், அசாமின் யானைகள் காப்பகம், கர்நாடகப்பகுதியின் புலிகள் காப்பகம், குஜராத்தின் சிங்கங்கள் சரணாலயம், பெல்காமின் பசுமை மாறாக்காடுகள், கர்நாடகாவின் தாராவதி சரணாலயம் , தெலுங்கானாவின் யுரேனிய சுரங்கங்கள்  பகுதிகள் போன்றவை முக்கியமானவை.


கிரின்பவர்- பசுமை சக்தியை மேம்படுத்த உலக நாடுகளின் உச்சி மாநாடுகளில் இந்தியா கையெழுத்திட்டிருப்பதை  மீறி காற்றாலை , சூரிய மின் ஒளி மூலம் மின்சாரத்திற்கு வழிகோலுவதை விட்டு விட்டு உலகநாடுகள் கைவிட்டு வரும் நிலக்கரி சுரங்கங்கள் மூலமான எரிசக்திகளுக்கு வழி வகுத்திருப்பதும் நிர்பந்திப்பதும்  முறையானதல்ல... கார்ப்பரேட் நிறுவன லாப வேட்டைக்கு உதவும் நடவடிக்கைகளே இவை.


இத்திட்டத்தில் 30 பல்லுயிர்க் காடுகளைத் தனியாருக்கு தாரைவார்க்கிறது மத்திய அரசு.இந்த 30 காடுகளில் அருணாசலப் பிரதேசத்தில் உள்ள திபாங் பள்ளத்தாக்கு உள்ளது   இங்குள்ள  மிஷ்மி சமூகத்தின் கலாச்சார நடைமுறைகள் மனிதர்களுக்கும் புலிகளுக்கும் இடையே வலுவானது . மிகப்பெரிய எட்டலின் நீர்மின் திட்டத்துக்காக அணை அமைப்பதற்காக இத்திட்டம் தரப்பட்டுள்ளது.
இந்த அனுமதி என்பது 2017ம் ஆண்டு வன ஆலோசனை குழு கூறியுள்ள வனக்கொள்கைக்கு எதிரானது..
அசாமில் உள்ள டெஹிங் பட்காய் யானை காப்புப் பகுதியில் நிலக்கரி சுரங்க திட்டம், கோவாவின் பகவான் மகாவீர் வனவிலங்கு சரணாலயம் வழியாக நெடுஞ்சாலை, கிர் தேசிய பூங்காவின் வழியாக சுண்ணாம்புகல் சுரங்கம், கர்நாடகாவில் ஷராவதி சரணாலயத்தில் புவிதொழில்நுட்ப விசாரணை மையம் உள்ளிட்ட 30 திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் இருபது  புலிகள் காப்புப் பகுதிகள், சரணாலயங்கள், சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் , வனபகுதிகள் பாதிக்கப்படும்.



இனி மேற்குத் தொடர்ச்சி மலை பற்றி..

இந்தியப்பரப்பில் மேற்குத்தொடர்ச்சி மலையின் பரப்பளவு 2லட்சம் சதுர கிலோமீட்டர். தாவர வகைகள், மீன், பறவை, பாலூட்டி வகைகளில் 30 சதவிகிதத்தைத் கொண்டுள்ளது. கிழக்கு நோக்கிப் பாயும் 40 நதிகளுக்கும், மேற்கு நோக்கிப் பாயும் 30 நதிகளுக்கும் பிறப்பிடமாக விளங்குகிறது. கோதாவரி, கிருஷ்ணா, மண்டோவி, காவிரி, ஸுவாரி ஆகிய சில முக்கிய நதிகளுக்கு அதுதான் பிறப்பிடம். சுமார் 25கோடி மக்கள் மேற்குத்தொடர்ச்சி மலையைத்தான் நீராதாரத்துக்குச் சார்ந்துள்ளனர்.

. 2,500 வகையான ஓரிடவாழ் தாவரங்கள், பூச்சிகள், விலங்குகள், நீர்நில வாழ்விகள் உள்ளன. இத்தகைய சூழலியல் பெருமை வாய்ந்த மலைத்தொடரின் ஒரு பகுதி வளர்ச்சி என்ற பெயரில் அழிக்கப்படுதல் நல்லதல்ல.
மலை முகடுகளில் மழை நின்ற பிறகும்கூட, நீரோடைகளாகப் பல மாதங்களுக்கு நீர் வழிந்தோடும். அதன்மூலம் வறண்ட காலங்களில் கூட நீர் இருக்கும்.

       சில மாதங்கள் முன்பு கேரளா கவிதைத் திரு விழா ஒன்றிற்கு மன்னார்காடு செல்லவேண்டியிருந்தது நண்பர்கள் பலரும் அட்டப்பாடி வழியாக செல்வது சிரமமாக இருக்கும் என்றார்கள் ஆனைகட்டி வழியாக செல்வது விருப்பமாக இருந்தது. காரணம் ஆனைகட்டியும் அதைத் தாண்டிய 100 கிலோ மீட்டர் பகுதிகளும் மரங்களால் சூழப்பட்டு இருப்பதும் நல்ல வெயிலிலும் இதமான சீதோஷ்ண நிலை கொண்டிருப்பதும் உவப்பாக  இருக்கும் என நினைத்தேன்.
ஆனைகட்டியிலிருந்து கேரள எல்லை கடந்து செல்லும்போது இரண்டு முக்கிய அறிவிப்பு பலகைகள் தென்பட்டன .

1. தமிழ்நாட்டின் மதுவகைகள் கேரள எல்லைக்குள் கொண்டு செல்லக்கூடாது என்று.
2 .சைலன்ட் வேலி எனப்படும் அமைதிப்பள்ளத்தாக்கு பற்றிய விவரங்களும் அங்கு செல்வதற்கான பதிவு எண்களும் குறிப்பிட்டு இருந்த இன்னொரு பலகை.
பகல் பத்து மணியளவிலேயே  வெயில் கடுமையாக தான் இருந்தது .திருப்பூர் கோவை வெயிலைவிட அந்த வெயில் அதிகமாகத் தான் இருந்தது. ஆனால் பேருந்தில் செல்ல செல்ல மரங்கள் அடர்ந்திருக்கும் பகுதிகளிலும் காடுகளும் என்று  குளுமை வந்து விட்டது .
அட்டகட்டியைக்  கடக்கும் போதெல்லாம் மனதுக்குள் ஏற்படும் ஒருவகை மகிழ்ச்சியும் குளுமையும் அப்போது வந்துவிட்டது .அட்டகட்டி தாண்டி செல்கிறபோது ஓரிரு இடங்களில் தீ எரிந்து கொண்டிருப்பது தெரிந்தது .வெயில் காலங்களில் இப்படி வறண்ட பகுதிகள் தீப்பற்றி எரிவது என்பது சாதாரணம். தான் தொடர்ந்து இதுபோன்ற காடுகள் எரிவது. 2020இல் அமேசான் காடுகள் போன்றவை நம் கவனத்தில் வந்திருக்கின்றன.

அட்டப்பாடி மலைபகுதியில் வசிக்கும் தமிழக பூர்வீகக்குடி தாய் நஞ்சம்மாப்பற்றி பொதி அவர்களின் முகநூலில் இருந்து தெரிந்து கொண்டேன் அவரின் பாடலும் கேட்டேன்.
கேரளாவை கலக்கிக்கொண்டு இருக்கிறது ஒரு கிராமிய தமிழ் பாடல்.அந்த பாடலுக்கும்,குரலுக்கும் சொந்தக்காரர் கேரளாவில் அட்டப்பாடி மலைபகுதியில் வசிக்கும் தமிழக பூர்வீகக்குடி தாய் நஞ்சம்மா.
மலையாள திரையுலகமும்,மீடியாக்களும் அவரை போற்றிக்கொண்டு இருக்கிறது இப்போது.கேரளா அரசும் கிராமிய பாடலுக்கான விருதை கொடுத்து கௌரவித்து இருக்கிறது."அய்யப்பனும் கோஷியும் " என்ற மலையாள திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ,பாடிய அவரின் சொந்த பாடல் இன்று கேரளாவின் சூப்பர் ஹிட் பாடலாக அங்கே ஒலித்துக்கொண்டு இருக்கிறது.சினிமாவை பற்றி ஏதும் தெரியாத அந்த பாமர தமிழ் குயிலின் குரல் உலகமெங்கும் ஒலிக்க என் ஆசை.அதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சி.பாடலை கேட்டுப்பாருங்கள் நிச்சயம் உங்களை அறியாமல் உங்கள் தலையும்,கைகளும் மனமும்...அசைந்தாடும்.பாடலின் தமிழ் உச்சரிப்பும்,வார்த்தைகளும் நமக்கு புரிய சற்று சிரமமாக இருக்கும் ஏனென்றால் நாம் நாட்டுப்புற தமிழை மறந்து பல ஆண்டுகள் ஆகிப்போனது என்கிறது விதைகள் வாசகர் வட்டம்.
பல இடங்களில் காணப்படும் பசுமைப்பரப்பு  ஆச்சர்யம் கொள்ளச் செய்கிறது. காடுகளின் பசுமைப்பரப்பு  விரிந்துள்ளது என்ற ஆய்வு கூட ஆச்சர்யப்படுத்துகிறது. காடுகளின் உள்பபகுதிகளில் மரங்கள் வெட்டப்படுவதால் அடர்த்தியும்  குறைகிறது.  காட்டு மண், செத்துப்போன மரங்கள் , சருகுகளை, இலைகள் போன்றவை மொத்தமும் கரிமம்தான். காடுகளைப் பல்வேறு காரணங்களுக்காக அழிப்பது காடுகளின் பரப்பளவி சுருக்குகிறது.  திடீர் தீ போன்றவையும் காடுகளை அழிக்கின்றன.  தோட்டப்பயிர்களையும்  பசுமைப்பரப்பாகக் கணக்கிட்டு  பசுமைப்பரப்பு அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார்கள் .இந்தியாவில் 2010-18 காலத்தில் 1.25 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் காடுகள் அழிந்து விட்டதாக நம்பமான ஆய்வுகள் சொல்கின்றன. இதில் தீக்கும் முக்கியப்பங்கு உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை இதுபோல் பல்வேறு தீப்பிடிப்புச் சம்பவங்களால் அடிக்கடி செய்தித்தாளில் வந்துகொண்டே இருக்கிறது. பனிக்காலம் முடிந்து கோடை காலத்தின் முன் பருவமான இலையுதிர்காலம் தொடங்கிய மாதங்களில் இலைகள் மரங்கள் மொட்டையாக காட்சியளிக்கும்.அந்த  இடங்களில் இதுபோன்ற தீப்பிடிப்பு என்பது சாதாரணமாகிவிட்டது .வறட்சியால் ஊசிப் புல், புதர்கள் கருகிக் கிடக்கின்றன .தேக்கு மூங்கில் உள்ளிட்ட மரங்கள் தங்கள் இலைகளை உதிர்த்து வெறுமையாக இருக்கின்றன .கோடையில்  ஊசி போல் மர உதடுகள் காய்ந்து கிடக்கின்றன .தேக்கு மூங்கில் உள்ளிட்ட மரங்கள் இலைகளை உதிர்த்து விட்டு காடு முழுக்க கழிவுகளையும் குப்பைகளையும் கொண்டுவந்திருக்கிறது. இது காட்டுப்பகுதியில் இயற்கையாகவும் செயற்கையாகவும் தீப்பிடித்து எரிவதற்கு பெரிதும் உதவியாகி விடுகிறது .காடுகளை ஒட்டிய பட்டாக் காடுகளில் காய்ந்த விறகு ., சருகு  கிடைக்கும் போது அது சாதாரணமாய் காட்டுபகுதிக்குள் பரவுகிறது .பல சமயங்களில் பல சாமானியர்கள் நெடுஞ்சாலை ஓரங்களில் சமையல் செய்கிறார்கள் .சிகரெட் பிடித்து தூக்கி போடுவதாலும் தீ பற்றுகிறது. ஒருவகையில் செயற்கையாக உருவாக்கப்படும் இந்த வகை தீப்பிடித்தலைத்  தடுக்க தீ தடுப்பு கோடுகள் வனத்துறையினர் அங்கங்கே திட்டமிட்டு போடுகின்றனர்.  குறிப்பிட்ட இடைவெளிக்கு பின்னால் மரம் செடி கொடிகளை வெட்டி தீத்தடுப்பு கோடுகளை அமைக்கிறார்கள் .மக்களிடமும் செயற்கையாக காட்டுத்தீ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள் .பழங்குடி மக்கள் இவ்வகை தீப்பிடித்தலைப் பார்த்து பயப்படுகிறார்கள் .அவர்களுக்கு தீயணைப்புக்கான கருவிகள் எல்லாம் தரப்படுகின்றன . கையறு நிலையில் நிற்கிறார்கள் என்பது முக்கியமாக கவனத்துக்குரியது ஆக இருக்கிறது .
அங்கு தீ பரவுவது போல் புற்று நோய் பரவுதலும் சுலபமாகிவிட்டது.  ஆனைகட்டி, அட்டப்படி பகுதிகளில் தென்படும் புற்று நோய் மருத்துவம் பற்றிய ஏகப்பட்ட விளம்பரம், மருத்துவமனைகள் பயம் தருகின்றன. கொங்குபகுதியில் புற்று நோய் மருத்துவ மனைகள் வெகுவாக அதிகரித்து விட்டன. இந்நிலையில் புற்று நோயை உண்டாக்கும்  ரசாயனங்களைக்கூட பகுக்கும் புதுவகைப் பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டிருப்பது  ஆறுதலிப்பதாக பல விஞ்ஞானிகள் கருதுகிறார்கள் .தீ எரிவதைப் போல வீசியெறியப்படும் கழிவுகள்  என்று எதை எரித்தாலும்  அதில் வெளியாகும் ரசாயனங்கள் புற்று னோயை உருவாக்கும்.இதில் தீ தரும் ரசாயனங்கள் கூடச் சேர்ந்திருக்கலாம். இந்தப் புதிய நுண்ணுயிரியோ  எளிதில் ஆவியாகும், எல்லாவகைப் பொருட்களையும் சிதைக்கும் தன்மை வாய்ந்தது.மண்ணில் இயற்கையாக்க் கலந்திருக்கும் தாவர நார்ப்பிணைப்புகளை சிதைக்கும்  இயற்கையான கழிவுகளைக் கொண்டு இதைப் பகுத்துவிடலாம் என்கிறார்கள்.. இந்த நுண்ணுயிர்க்கும் மரங்களுக்கும் உள்ள இணக்கமான உறவு  என்பது இந்த நுண்னுயிரி பெருக வேண்டும் என்பதற்காக மரங்கள் இதற்குக் கரிமங்களைத் தருகின்றன.. பதிலுக்கு நெட்ரஜன்., பாஸ்பரஸ் போன்ற ஊட்டச் சத்துகளை இது மரங்களுக்கு அளிக்கிறது  என்கிற புதுச் செய்திகள் கிடைத்திருக்கின்றன.
       இந்த மேற்கு தொடர்ச்சி மலை காடுகளை காப்பாற்றும் முயற்சிகளும் அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கோவை சார்ந்த ஓசை அமைப்பு 2019இல் 3 நாள் மாநாடு ஒன்றை கோவையில் நடத்தியது .அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் சார்ந்த அறிஞர்கள் கலந்து கொண்டார்கள் .நானும் கலந்து கொண்டு சூழலியல் தீவிரவாதம் என்ற தலைப்பில் பேசினேன். அதுபோல மேற்கு தொடர்ச்சி மலையைக் காக்கும் இயக்கத்தினுடைய பல்வேறு செயல்பாடுகளை பற்றி கு .வி  கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஒரு கட்டுரை ஒன்றில் தெரிந்து கொண்டேன் ஆயிரத்து 1987 ல் -100 நாள் தொடர் பேரணி ஒன்றும் ஐந்துநாள் மாநாடும் கோவாவில் நடைபெற்று இருக்கிறது. நவாப்பூரில் தொடங்கி மேற்கு நோக்கியும் மற்றொன்று தெற்கிலுள்ள கன்னியாகுமரியில் தொடங்கி வடக்கு நோக்கியும் குழுக்களாக பயணங்களை மேற்கொண்டு இருக்கின்றனர். அப்போது பெரிய அளவு உற்சாகமாக செயல்பட்டிருக்கிறார்கள். பிறகு 2011 இல் மேற்கு மலைத்தொடரின் பல மாநிலங்களிலிருந்து இளைஞர்கள் நடைபயணம் மேற்கொண்டு ஆற்றல் நுகர்வு ,பழங்குடி மக்களுடைய பிரச்சினைகள், மனிதன் காட்டுயிர் எதிர்கொள்ளல் ,சுரங்கங்கள் ,சூழல் சுற்றுலா ,நீராதாரங்களை பேனல் அரசு செயல் திட்டங்கள் போன்ற தலைப்புகள் விவாதித்து இருக்கிறார்கள் 2017 இந்த இயக்கத்தினுடைய ஒரு விழா கொண்டாடப்பட்டு இருக்கிறது, அது முப்பதாம் ஆண்டு விழா .மற்றொரு இயக்கம்  2010 ஆரம்பிக்கப்பட்டு மேற்கு தொடர்ச்சி மலையின் சூழ்நிலை ஆய்வு செய்ய கவனம் கொண்டிருக்கிறது, 2010இல் மாதவ் காட்கில் தலைமையில் குழுவும் 2012இல் கஸ்தூரிரங்கன் தலைமையில் ஒரு குழுவும் உருவாக்கப்பட்டு அந்த அறிக்கைகள் இணைய தளத்தில் கிடைக்கின்றன ,கார்கில் குழு இந்த மலைத்தொடரின் பகுதிகள் சூழலில் காரணங்களால் பெரிதும் சீர்கெட்டு இருக்கிறது என்று சொன்னது ,ஆனால் கஸ்தூரிரங்கன் குழு அவ்வளவு பாதிப்பு இல்லை என்று சொன்னது,
மேற்குத் தொடர்ச்சி மலையில் 50 க்கும் மேற்பட்ட ஆறுகள் உற்பத்தியாகின்றன. பச்சைபுல் வெளிகள் நீரைக்காத்து கசிந்து ஆறுகளாக வெளியோறுகின்றன. அவை வறண்டு விடுவதால் இந்த வகைத் தீவிபத்து தவிர்க்கமுடியாததாகி விடுகிறது.
 ஓசை அமைப்பு நடத்திய கோவை மாநாடு மாதவ் காட்கில் குழு கஸ்தூரிரங்கன் குழு ஆகியவற்றின் அறிக்கைகளை  மையமாகக் கொண்டு தொடர்ந்து ஆய்வுகளை நடத்தியது .காட்டுப்பகுதியில் தீ பிடிக்கிறபோது அதை அணைக்கிற முயற்சியில் பழங்குடியினர் பலவகைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர்.  பழங்குடிகளை விட நாம் எந்த வகையிலும் உயர்ந்தவர்கள் அல்ல என்ற கருத்தாக்கம் தொடர்ந்து நிலை நிறுத்தப்படுகிறது .
லெவிஸ்டிராஸ்  போன்றவர்கள் பழங்குடிகள் மேன்மை தன்மை பற்றி பல விஷயங்களைக் குறிப்பிட்டு இருக்கிறார் .அமைப்பின் விதிகளின்படி இயற்கை அணிகளை மறு சீரமைப்பு செய்யும் பணிகளை பற்றி லெவிஸ்டிராஸ் பல அபிப்ராயங்களை கூறுகிறார். ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் மையமாக மனிதன் தன்னை நிறுவிக் கொண்ட மேற்கின் நவீனத்துவ சிந்தனை முறையும் அதனால் ஏற்பட்ட வரலாறு சூழலில் பின் விளைவுகள் குறித்த  விமர்சனமும் லெவிஸ்டிராஸ்க்கு இருந்தது ..ஆனால் இயற்கை விலங்குகள் மனிதர்கள் ஆகியவற்றின் சமநிலையை பாதுகாக்க பழங்குடி சமூகங்கள் தங்கள் முழு ஆற்றலை செலுத்தினர் . பூமி பிரபஞ்சத்தின் மையம் இல்லை என்பதை கோபர்நிகசும் வாலில்லாத குரங்கு தான் மனிதர்களின் மூதாதை என்பதை டார்வினும் நனவிலியின் கருணையால் நாம் வாழ்கிறோம் என்பதை பிராய்டும் உணர்த்த இதைப்போல காட்டுமிராண்டிகள் என நம்மால் அழைக்கப்படும் பழங்குடிகளை விட நாம் உயர்ந்தவர்கள் அல்ல என்பதை லெவிஸ்டிராஸ்  அவருடைய படைப்புகளில் நிறுவியிருக்கிறார் .

பழங்குடி மக்களுக்கு காட்டுத்தீயை அணைக்கும் நவீன கருவிகள் கூட பயன்படுத்தப்பட பயிற்சிகளும் தீயணைக்கும் கருவிகள் பயன்பாடு, புகையில் இருந்து தற்காத்துக்கொள்ளும் முகமூடிகள் மற்றும் கையுறைகள் தீப்பிடிக்காத உடைகள் உள்ளிட்டவை பயன்படுத்தும் பயிற்சிகளும் பழங்குடிகளுக்கு தரப்படுகின்றன என்பது ஒரு செய்தியாக தெரிகிறது. எப்படியாயினும் தீபரவுவது தடுக்கப்படவேண்டும் .
மேற்குத்தொடர்ச்சி மலை சார்ந்த மத்திய அரசின் புதிய நடவடிக்கைகளால் வரும் பாதிப்புகள்  புவி வெப்பமாதலுக்கும் நுண்உயிரினங்களின் அழிவுக்கும் வழிகோலும்.
சேலம் முதல் சென்னை வரையிலான எட்டு வழிச்சாலைத்திட்டத்திற்கு நீதிமன்றங்கள் தடை விதித்தது போல் இவ்வகைத்திட்டங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைத்திட்டங்களை நிராகரித்து வீடியோ கான்பிரசிங் முறையில் நிறைவேற்றப்பட அவசர ஆயத்தம் செய்ததை நீதி மன்றங்கள் சரியாகக்  கண்டு கொண்டு தடை விதித்தாலே   நிம்மதி பெருமூச்சு கிடைக்கும் . இந்த அனுமதி என்பது 2017ம் ஆண்டு வன ஆலோசனை குழு கூறியுள்ள வனக்கொள்கைக்கு எதிரானது என்பதால்நீதிமன்றங்கள் முறையாகத்தலையிட்டால்  முறையாகத் தடுக்கப்படும்..
  .
அமைதி.. அமைதி..
நீதிமன்றங்கள் பதில் சொல்லட்டும்.

வழக்குகள் காத்திருக்கின்றன
ஜீன் 5 உலக சுற்றுச்சூழல் தினம்:
குறிஞ்சி மகளிர் சிந்தனைக் களம் அமைப்பின் இணைய தள சந்திப்பில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் கலந்து கொண்டு பேசினார். குறிஞ்சி மகளிர் சிந்தனைக் களம் அமைப்பினைச் சார்ந்த   சுபசெல்வி, வில்வம், நந்தகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் :
 எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பேசியது

நீர் என்பது அடிப்படை உரிமை என்பதற்கு பதிலாக அடிப்படை தேவை என்று சொல்லப்படும் சூழல் வந்துவிட்டது. உரிமை என்றால் ஒவ்வொருவருக்கும் அளிப்பது என்றாகும். தேவை என்பது விலை கொடுத்து வாங்க வலியுறுத்துவது.
            வளர்ந்த நாடுகளில் நீர் விநியோகம் என்பது பொதுத்துறையின் கீழ் உள்ளது. ஆனால் பொதுத் துறையின் கீழ் இருந்து தனியார் துறைக்கு செல்லும் பாதைக்கு வளர்ந்த நாடுகள் திட்டமிட்டு வலியுறுத்துகின்றன. எனவே அவை தாம் கடன் கொடுக்கும் நாடுகளிடம் தனியார் மயமாக்கலை வற்புறுத்தி நிர்பந்திக்கின்றன.
            விற்பனை நீரை தொடர்ந்து மக்கள் பருக விளம்பரங்கள் மூலம் வலியுறுத்தப்படுகிறது. சுவை கூடுவதற்கு ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. அதில் பல பூச்சிக் கொல்லி மருந்துகளும் உள்ளன. இவை உடல் நலத்தை பாதிப்படையச் செய்பவை.
            இவற்றை வியாபார நோக்கம் கொண்டு பெரும் முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் கையில் எடுத்துக் கொண்டு லாபம் சம்பாதிக்கின்றன. இது சாதாரண மக்களைச் சுரண்டவும் ஊழல் பெருகவும் வழி வகுத்து விட்டது.
                        குடிநீருக்கே இப்பிரச்னைகள் என்கிறபோது விவசாயம் இன்னும் சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது. மானாவாரி விவசாயம், பாசன விவசாயம் என்று விவசாயம் நடைபெறுகிறது. இவை இன்று வறண்ட நிலையிலேயே காணப்படுகிறது. நீர்நிலைகள் பொது சொத்தாக அறிவித்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மிக முக்கியம். தூர்வாரலும், தடுப்பணைகளும் நீர் தேக்க பயன்படும். தொடர்ந்து மழை நீர் சேமிப்பு திட்டங்கள் அமுல்படுத்தவும் வேண்டியுள்ளது தனியார்கள் ஆழ்குழாய்களை அமைத்தலை முற்றிலும் தடை செய்ய வேண்டும். நீர் விளையாட்டுக்கு அதிக அளவில் தண்ணீர் பயன்படுத்தப்படுவதும் தடை செய்யப்பட வேண்டியுள்ளது.
            "நீர் சிக்கல் என்பது ஒரு சூழலியல் நெருக்கடி. இதற்கு வியபார ரீதியாக தீர்வு என்பது பூமியை நாசப்படுத்தும். சூழலியல் சிக்கலுக்கு சூழலியல் ரீதியில்தான் தீர்வு காண முடியும்"  என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். பூமியின் வெப்பம் அதிகரிப்பது என்பது சமீப ஆண்டுகளில் அதிகரித்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு உலகெங்கும் ஆண்டு தோறும் 3 லட்சம் பேர் பூமியின் சூட்டின் காரணமாக மரணமடையக் கூடும் என்று கூறுகிறார். கடந்த பத்து ஆண்டுகளில் இது ஒன்றரை லட்சமாக இருந்தது.
கொரானா பாதிப்பு கூட பூமியின் சூட்டின் காரணமாகத்தான். இதிலிருந்த மக்கள் தங்களைக்காப்பாற்ற சுயகட்டுப்பாட்டுடன் கூடிய மருத்துவ அறிவுரைகளைக் கைக்கொள்ள வேண்டும்  என்றார்.



தறிநாடா : சுப்ரபாரதிமணியன் நாவல்
மதுராந்தகன்

1971ல் திருப்பூரில் நடந்த நெசவாளர் போராட்டத்தை மையமாகக் கொண்ட நாவல். நெசவாளர்கள் பற்றியநாவல்கள்  தமிழில் குறைவுதான். அதில் இதுவும் ஒன்று

 இந்த லாரியை கொஞ்சம்  நகர்த்தி நிறுத்தி நிறுத்துங்கப்பா.. பாவு நீட்டணும்.
 ரங்கசாமி கூறினார்.
ஏய் யாரப்பா.. அது ரோடு . எங்களுக்கும் சொந்தம் தான் நீங்க வேற  எடம் பாரப்பா “ என்ற கவுண்டரின் பதில் இடையில் பேச வந்த  ரங்கசாமியின் மனைவி நாகமணி ஏதோ கூற வந்தவளை ஜாடை காட்டிப் பேசாதிரு என்றார் .ரங்கசாமி.
இது நாவலில் ஒரு பகுதியில் வருவது.
 இவர்கள் பொதுவாகவே எதிப்பு சக்தியற்ற கூட்டம்.  கைத்தறி நெசவாளர்கள போராட்ட குணம் இல்லாதவர்கள் என்ற நிலையில் இல்லாமல் கூலியை உயர்த்திக் கொடு என்ற போராட்டம் தொடங்குகின்ற சமயம்  அவர்கள் மனநிலை வெவ்வேறானது.
நெசவாளர்களின் வாழ்க்கை என்பது தான் உண்டு தன் வேலையுண்டு என்று வாழ்கின்ற அப்பாவி மக்கள். சினிமா சீட்டாட்டம் அமாவாசை நாளைக்கு என்றால் இரவு பெருக்கான் எலி வேட்டைக்குத் கிளம்புவார்கள். ராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என்ற உலக அறிவே  இல்லாத அளவில் தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள்.
இன்றைய நிலை வேறு .
கூலி உயர்வு போராட்டத்தை எப்படி தொடங்குவது என்று வழி தெரியாமல் தேவாங்கர் நெசவுத் தொழிலாளர் சங்கம் மூலமாக ஆட்களைத் திரட்டி போராடுகிறார்கள் மறுநாள் ஊர்வலத்திற்கு யாரும் வராமலும் கோசம் போட ஆள் இல்ல .அவங்க தடுமாறுவதும் குழப்பமான மன நிலையை அடைகிறார்கள் .அரசியல் கட்சிகளின் ஆதரவு கேட்க அவர்களும் நீங்கள் ஏற்கனவே நெசவுத் தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் சாதி சங்கத்துடன் போராடுகிறீர்கள் எங்களோடு இணைந்து வந்தால் சேர்ந்து போராடலாம் இல்லையென்றால் ஆதரவு மட்டுமே தரமுடியும் என்று கூறிவிட குழப்பத்தோடு இருக்கிறார்கள். இந்த நிலையில்  நெசவு வியாபாரிகள் இவர்களின் போராட்டத்தை கண்டு கொள்வதே இல்லை.இதில்  நெசவாளர்களின் நிலையை மிக மிக எதார்த்தமாக ஆசிரியர் எழுதியிருக்கிறார். இந்த நிலையில் பஞ்சம் தலைவிரித்து ஆரம்பிக்கிறது கஞ்சித் தொட்டித் திறந்து  வைத்து போராடி வருகிறார்கள்.  வெளியூர் நெசவாளர்களும் உள்ளூர் நெசவாளர்களுக்கும் வருகின்ற நெசவாளர்கள் அனைவருக்கும் கஞ்சி ஊற்றப்படுகிறது. பொன்னு -ரங்கசாமியின் மகன் இவன் படித்து விட்டு வேலைக்காக முயற்சி செய்து கொண்டுள்ளான். இவனுக்கு ராஜாமணி என்ற மார்க்சிய தோழன் அறிமுகமாகிறார் அவரோடு சேர்ந்து இயக்கம், இலக்கிய  நாவல்களைப் படிக்க ஆரம்பிக்கிறார். அவனுக்கு நெசவாளர் போராட்டம் முறை பிடிப்பதில்லை .ஆனாலும் இவனால் யாருக்கும் எதுவும் சொல்ல முடியாத நிலை. மேலும் போராட்டம் தீவிரமடைகிறது . தீவைப்பு சம்பவங்கள் . போலீசார் துரத்தி  ஓடும்போது நிலையும் ..அதனால் ஆண்கள் தலைமறைவாக சுற்று வரையும் நடக்கிறது .இந்த நிகழ்ச்சியை ஆசிரியர் சுப்ர பாரதி மணியன் யதார்த்தமாக நேரில் கண்டது போல் மிக அற்புதமாக  சொல்கிறார். நெசவாளர்களின் நிலை பற்றி வேறு எங்கும் இல்லாத அளவு விவரித்து எழுதி இருப்பார் .          இறுதியாக போராட்டம் வெற்றி பெறுகிறது .கூலி உயர்வு தருவதாக முதலாளி கூறி வருகிறார்கள் இந்த நிலையில் சிறை சென்ற தோழர்களை விடுதலை செய்ய முயற்சிக்கிறார்கள். பெண்கள் எப்போதும் எப்போதும் போலவே சவுண்டம்மன் சாமி புண்ணியத்தில் போராட்டம் வெற்றி பெற்று விட்டது நான் பழனிக்கு மொட்டை அடிக்கப் போகிறேன்  காவடி எடுத்து விட்டு போகிறேன் என்று சொல்லிக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்கள். போராட்டத்தின் கடுமை மறந்தவர்களாக இந்த நாவலில் வருகிற கதாபாத்திரங்கள் அனைவருமே போராட்டம் உணர்வின்றி  பல சமயங்களில் உள்ளார்கள். தீவிரம் காட்டுவது இல்லை
சீட்டாடிக் கொண்டிருப்பவர்களை ஊர்வலத்திற்கு அழைத்த போது யாரும் விருப்பமுடன் எழுந்து வருவதில்லை. ரங்கசாமி அதிலேயே மிகவும் களிப்படைகிறார் .அவரின் இரண்டு பெண்கள் கூட போராட நாங்கள் ரெடி என்று சொல்லிச் சென்றார்கள் ஓயாமல் நாடா ஓடினால் நெசவாளி வீட்டில் பாட்டுச்சத்தம். ஓடிய நாடா ஓய்வெடுத்தால் நெசவாளி வாழ்வில் கேள்விக்குறி என்பதை  இந்த நாவலில்  திரு சுப்ரபாரதி மணியன் அவர்கள் மிக அருமையாக நெசவாளர்களின் வாழ்க்கை முறையை யதார்த்தமாக கூறிச்சென்றது  அருமை. பொதுவாக எதையாவது சான்று இரு என்ற தத்துவமும் போராட்டக் காலங்களில் எவ்வாறு நிதர்சனமாக இருந்தது என்பதை இந்த நாவல் மூலம் சொல்லாமல் சொல்கிறார் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்
உழைப்பவர்களின் தொழிலாளர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய உன்னதமான நாவல் அவர்களின் உணர்ச்சிகளைக்கொட்டி இருப்பதால், ( ரூ 175 . என்சிபிஎச் வெளியீடு, சென்னை  )
 மதுராந்தகன்
-------------------------------------------------- in;mso-padding-alt:0in 0in 1.0pt 0in'>