சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 18 டிசம்பர், 2023

இங்கிலாந்தில் பசுமைக் கட்சிகள் என்பது பற்றி இங்கிலாந்து சேர்ந்த பேராசிரியரை டேவிட் இவன் அவர்களை நேற்று சந்தித்தபோது கேட்டேன். 30 ஆண்டுகளுக்கு முன்னால் நான் லண்டன் சென்றபோது பசுமைக் கட்சி சார்ந்த சிலரை சந்தித்தேன் அவர்கள் இந்தியாவைப் போல எங்களுடைய இயக்க வேலைகள் சாதாரண அடிப்படை சுகாதாரம் போன்றவை கணக்கில் இல்லை அணுசக்தி கழிவுகள் முதல் சூரிய கோள் சார்ந்த பல விஷயங்கள் எங்கள் கவனத்தில் இருப்பது என்று சொன்னார்கள் நேற்று சந்தித்த இங்கிலாந்து பேராசிரியரிடம் பசுமைக் கட்சிகள் பற்றி கேட்டேன். இப்போதும் அவை ஒரு சதவீதம் வாக்குகள் பெற்று சில இடங்களை பாராளுமன்றத்தில் பிடிக்கிறார்கள் அவர்களுடைய செயல்பாடுகளில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் போது வாக்களிக்கிறார்கள். இப்போது எல்லாம் அணுசக்தி சார்ந்த அவர்களின் நோக்கங்களும் விவாதங்களும் இல்லை. திசை மாறிவிட்டன ஏனென்றால் எங்களைப் போன்ற நாடுகளில் முக்கியமான பல விஷயங்கள் அணுசக்தி சார்ந்த செயல்பாடுகளாக இருக்கின்றன என்று சொன்னார் திருப்பூர் ஒரத்துப்பாளையம் அணை விவசாய பயன்பாட்டுக்காக கட்டப்பட்டது. ஆனால் பின்னால் சாயக்கழிவுகள் தேய்க்கும் இடமாக மாறி இருந்தது பல ஆண்டுகள் சர்ச்சைக்குரிய இடமாக அந்த அனை இருந்து வருகிறது . சமீப ஆண்டுகளில் அந்த பக்கம் செல்லவில்லை இங்கிலாந்தில் இருந்து வந்த பேராசிரியர் குழுக்களும் கோவை பேராசிரியர் முத்துக்குமார் தலைமையிலான மாணவர்களும் சமீபத்தில் நேற்று அங்கு சென்று வந்திருக்கிறார்கள். அவர்களிடம் கேட்டபோது இப்போது சாயக்கழிவுகள் குறைந்துவிட்டன. நீரில் அடித்துக் கொண்டு போகப்பட்டு விட்டன. அந்தப் பகுதியில் விவசாயம் நடக்கிறது ஆனால் உப்பினுடைய தன்மை ஒவ்வொரு பகுதிக்கும் மாறிக்கொண்டே இருக்கிறது. உப்பின் தன்மை வெகுவாக குறைய வேண்டும். இன்னும் விவசாயம அதிகம் நடைபெற வேண்டும். நாங்கள் ஒரு தோட்டத்தில் இளநீர் குடித்தோம் அந்த வகையில் திருப்தியாக இருக்கிறது என்றார்கள். நேரில் சென்று பார்க்க வேண்டும்