சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 23 பிப்ரவரி, 2011

அண்டை வீடு:பயண அனுபவம் : லஞ்ச மயம்

டாக்காவில் போலீஸுக்கு மரியாதை இல்லை. மாமா என்று கேலி சித்தரிப்புதான்.நிறைய லஞ்சம் வாங்குவதால் அப்படிக் கேலி மரியாதை. ஊழல் மலிந்த நாடு வங்க தேசம் . டாக்கா விமான நிலையத்தை விட்டு இந்தியா திரும்பி வரும்போது தொழிற்சங்கத் தலைவர் காளியப்பன் டாக்கா பண நோட்டுகள் வைத்திருந்ததைப் பிடுங்கிக் கொண்டார்கள்.1000 டாக்கா லஞ்சம் கொடுத்தபின் டாக்கா விமான நிலைய அதிகாரிகள் அவரை விடுவித்து விட்டனர். டாக்காவை இந்தியப் பணமாக மாற்ற 50% கழிவு போட்டு மீதியைத்தான் தந்தார்கள். " கல்கத்தா ஏர்போர்ட்ல போயி எறங்குனா இது செல்லாத நோட்டு. கிழிச்சுதான் போடணும். எங்கிட்ட குடுத்தா 50 ரூபாயாச்சும், பாதி கெடைக்கும்.." வேறு வழியில்லாமல் நாங்கள் எல்லோரும் கையில் இருந்த டாக்கா பணத்தைக் கொடுத்துவிட்டு பாதிப்பணமே வாங்கிக் கொண்டு கிளம்பினோம். அமெரிக்க டாலராக மாற்றிக் கொண்டு விட்ட நண்பர்களுக்குத் திருப்தி.



வங்கதேசத்தில் ஊழல் என்பது சாதாரண வாழ்க்கை முறையாகி விட்டது. 95% காவல்துறையினர் லஞ்சத்தில் ஊறித் திளைக்கிறவர்களாக இருக்கிறார்கள். நிலம், கஸ்டம்ஸ், அரசாங்க அலுவலக காரியங்கள் எல்லாவற்றிலும் ஊழல் மலிந்திருக்கிறது. பொதுத் துறையை அரசைத் தன் காரியத்திற்காய் பயன்படுத்திக் கொள்வதற்கு லஞ்சம் என்ற பெயர் அடிமட்டத்திலிருந்து பிரதமர், நீதித் திறை வரைக்கும் ஊடுருவியுள்ளது. யார் குறைவாக வாங்குகிறார் என்பதில்தான் வேறுபாடே இருக்கிறது. சமூக குடியமைப்புகளின் செயல்பாடுகளும் உரிமை கோரலும் வெகு சாதாரணமாகவே இருக்கிறது. வன்முறை நடவடிக்கைகளும், கொள்ளையும் கற்பழிப்பும் லஞ்சத்தை ஊடுருவச் செய்து விட்டன. உலகின் பதிமூன்றாவது மோசமான லஞ்சம் திளைக்கும் நாடாக இருக்கிறது.



விமான நிலையத்தில் எங்களுக்கு ஏற்பட்ட லஞ்ச விவகாரத்தை வைத்துக்கொண்டு ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது விமான நிலையத்தில் சென்றாண்டு நடந்த ஒரு சாவு பற்றி அவர் சொன்னார். பிர்ராஜ் மியா என்பவர் இங்கிலாந்திலிருந்து வங்க தேசத்திற்குத் திரும்பியிருக்கிறார். வங்க தேசத்தைச் சார்ந்தவர்தான் அவர். இங்கிலாந்தில் குடியேறி ஓர் உணவு விடுதியை நடத்தி வருகிறார். மனைவியும் 5 குழந்தைகளும் அவருக்குண்டு. டாக்கா விமான நிலையத்தில் இறங்கியவரை கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் சிரமப்படுத்தியிருக்கிறார்கள். பிறகு டாக்காவின் அரசு மருத்துவமனையில் அவர் பிணம் இருந்ததாகச் சொல்லப்பட்டதாம். உடல்முழுக்க காயங்கள் இருந்திருக்கின்றன. அவரின் பெட்டி காணாமல் போயிருக்கிறது. பிர்ராஜ் மியாவின் மனைவி இங்கிலாந்திலிருந்து டாக்கா வந்து முறையிட்டபோது உடல்நலம் குறைவால் இறந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 3 லட்சம் வங்கதேச மக்கள் இங்கிலாந்தில் வசிக்கிறார்கள். அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக பிர்ராஜ் மியாவின் சாவு இருந்திருக்கிறது. லஞ்சம் கொடுக்க மறுத்தவரின் மீதான வன்முறைதான் அவரைச் சாகடித்திருக்கிறது. லஞ்சம் பெற வன்முறை கையாளப்படுவது அங்கு சாதாரணமாகியுள்ளது.



சுப்ரபாரதிமணியன்

திங்கள், 14 பிப்ரவரி, 2011

அண்டைவீடு: பயண அனுபவம்

டாக்கா செய்தித்தாள்களில் கப்பல் உடைப்புப் பணிகளில் ஈடுபடுவோரின் சாவும், விபத்துகளும் அது குறித்த அரசின் எச்சரிக்கைகளும், சட்டரீதியான நடவடிக்கைகளும் செய்திகளாய் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததைப் பார்க்க நேரிட்டது.

1970க்குப்பின் கப்பல் உடைத்து அதன் இரும்பு பாகங்களை ப் பிரித்தெடுப்பது முக்கிய வேலைகளில் ஒன்றாக, உலகம் முழுவதும் 700 கப்பல்கள் பழையதாகியும், செயலிழந்தும், விபத்துக்கள் ஏற்பட்டும் உடைப்புப் பணிக்காகத் தயாராகின்றன. இதுவரை 45,000 கப்பல்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. இங்கிலாந்து, தைவான், மெக்ஸிகோ, ஸ்பெயின் போன்ற நாடுகளில் முக்கியத் தொழிலாக இது நடந்து வருகிறது.


இந்தியாவில் அலாங் என்ற குஜராத்தைச் சார்ந்த கடற்பிரதேசத்தில் இப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்றாண்டு சென்னையில் செயலிழந்து போன ஒரு கப்பலை உடைக்கும் பணி தொடங்கியபோது சர்ச்சைக்குள்ளானது.

வங்கதேசத்தில் டாக்காவிலிருந்து 125 கி.மீ. தள்ளி உள்ள சிட்டகாங் துறைமுகப் பகுதியின் 20 கிமீ பரப்பளவு உடைக்கப்பட்ட இரும்புப் பொருட்கள், உதிரி பாகங்களால் மாசுபடுத்தப்பட்ட மிக மோசமான பகுதியாக இருக்கிறது. உடைக்கும்போது ஏற்படும் விபத்துகளில் சிட்டகாங்கில் மட்டும் கடந்த 20 வருடங்களில் 400க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். 6000 பேருக்கு மேற்பட்டோர் கடுமையான காயங்கள் அடைந்திருக்கிறார்கள். ஒரு கப்பல் தளப்பிரதேசத்தில் ஒரு நாளைக்கு ஒருவராவது மிகுந்த

2.சோதனை மிகுந்த அளவில் காயப்படுவது என்பது சாதாரணமாக நிகழ்கிறது. இரும்புக் கம்பிகள், தளவாடங்கள் நசுக்கி சாகிறவர்களும் இருக்கிறார்கள். மின்வாயு மூலம் இரும்புப் பகுதிகள் துண்டிக்கப்படுவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. பெரிய விபத்துக்கள் என்றால் 10ஆயிரம் முதல் 15ஆயிரம் டாக்கா வரை நஷ்ட ஈடு தருகிறார்கள்.1965ல் வங்கதேசத்தில் கொண்டு வரப்பட்ட சட்டமொன்று ஒரு லட்சம் டாக்கா வரை நஷ்டஈடு தர வாய்ப்பு தந்துள்ளது. ஆனால் அது அமலாக்கப்படுவதில்லை என்பதாலும், அதில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்கள் இல்லை என்பதாலும் போராட்டங்களும் தொடர்கின்றன.உலகின் 430 தொழில்கள் மோசமானவை என்ற பட்டியலில் உள்ளன. அதில் 67 இன்னும் மோசமானவையாகவும், அதிலும் இன்னும் இன்னும் மோசமான தாகவும் கணிக்கப்படுகிறது. 11ல் ஒரு தொழிலாக கப்பல் உடைப்பு இருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களும் பெண்களும் இதில் ஈடுபடுகிறார்கள்.ஆனந்தா குழும ம் சிட்டகாங்கில் கப்பல் உடைப்புத் தொழிலிலும், புதுக் கப்பல்களை உருவாக்கும் பணியிலும் தீவிரமாக வங்கதேசத்திலும், இந்தியாவிலும் ஈடுபட்டு வருகிறது. குறைந்தது ஆண்டுக்கு 25 கப்பல்களையாவது ஆனந்தா குழுமம் உடைத்தெடுத்து இருக்கிறது.


பல்வேறு பிரச்சினைகள் காரணமாக சோர்வுறும் மீனவர்களும் கப்பல் உடைப்புத் தொழிலுக்கு மாறிவிடுகிறார்கள். மீனவர்கள் கரையேறி விட்டாலும் கஷ்டங்கள் ஓய்வதில்லை.

திங்கள், 7 பிப்ரவரி, 2011

” மண் புதிது “

” மண் புதிது “ சுப்ரபாரதிமணியனின் பயண நூல்

By சோ முத்து சரவணன்



பொதுவாக பயணக்கட்டுரை எழுதுபவர்கள் தங்கள் மேதாவிலாசத்தை காட்டுவதாகக் கருதிக் கொண்டு தன் பார்த்தக் காட்சிகளை, புனைகதை ஆசிரியர்களை விஞ்சும் வண்ணம் எழுதிக்குவிப்பார்கள். அல்லது அங்குள்ள இடங்களைப்பற்றியச் செய்திகளை விரிவான வர்ணனைகளோடு எழுதி வைப்பார்கள்.
சுப்ரபாரதிமணியன் தான் சந்தித்த வெளிநாட்டுமனிதர்களின் மனோபாவங்களையும், அவர்களோடு தனக்கு நேர்ந்த அனுபவங்களையும் மிக அழகாக பதிவு செய்திருக்கிறார். நாடறிந்த எழுத்தாளர் . அவர் இஅ எப்படி எழுதி இருந்தாலும் நண்பர்கள் வட்டம் பெருமைப்படுத்தவே செய்யும். ஆனால் ஒரு எழுத்தாளனுக்குறிய தார்மீகச் சிந்தனைகள் சிறிதும் பிறழ்வாமல் இவர் பதிவு செய்திருக்கும் குறிப்புகள் மிக மிக கனமானவை.
நான் இந்நூலை வாசிக்கும் போது எனக்கு இந்நூல் மறுபதிப்பு
வழியாக , 15 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது, இப்போதுதான் வாசிக்க நேர்ந்ததை எண்ணி மிகவும் வருந்தினேன்.
மார்க்க்சியம் சார்ந்த சிந்தனையாளர் என்பதால் இதில் மனித உறவுகளின் மகத்துவம் பற்றி வெகுவாக உரசிப்பார்த்துள்ளார் இந்நூலினை 25 அத்தியாயங்களாக பிரிதுது எழுதியுள்ளார். இதை வாசிப்போர் தொடர்ச்சியாக இன்றி எந்தவொரு பகுதியை மட்டும் வசித்தாலும் அற்புதமாக பல விசயங்களைப் புரிந்து கொள்ளலாம். அய்ரோப்பா, இங்கிலாந்து பயண அனுபவம் இதில்.
புலம் பெயர்ந்த ஆசியர், இந்தியர், இலங்கைத்தமிழர் பற்றிய செய்திகளும் அவர்களது இன்னல்களையும் இங்கிலாந்துப் பெண்களின் வாழ்க்கை முறை , அதை இந்தியப் பெண்கள் எதிர்கொள்ளும் நிலை, ஜெர்மனி இணைப்பின் விளைவுகள், புதிய நாஜிக்கள் என்ற அடையாளத்துடன் சில புல்லுருவிகள் செய்யும் மூன்றாம் உலக நாட்டு மக்கள் மீதான் தாக்குதல், பிரான்சைக்கலக்கும் அல்ஜீரிய தீவிரவாதிகள் பற்றிய கலக்கம், அதே நேரம் அங்கே கடைபிடிக்கப்படும் ஜனநாயக மரபு, அதன் பிண்னனியில் உள்ள உண்மைகளை நிதர்சனமாக நம் கண் முன் கொண்டு வருகிறார்..
மூன்றாம் அலக நாடுகள் மீதான் முதல் இரண்டாம் உலக நாடுகளின் ஈவிரக்கமற்ற கரிசனம், தன் இயற்கை வளங்களை பாதுகாக்க மூன்றாம் நாடுகள் மீதான இந்த கரிசனப்பார்வையின் ஊளனத்தை 21ம் நூற்றாண்டின் 10 ஆண்டுகளிலேயே உலகம் அறிந்து கொண்டாலும் நூலாசிரியரின் பார்வையில் அது முன் கூட்டியே அலசப்படுகிறது. இது அவரின் எழுத்து சிந்தனைக்கு வளம் சேர்ப்பதாகும். அங்கு வாழும் இலங்கைத் தமிழர்களுக்குள் எழும் பிரிவினை கோசங்களைப் பார்க்கைகையில் ஆசிரியர் பின் வரும் அத்தியாயத்தில் ஈழத்தின் மறுவாழ்வு பற்றிய ஆசிரியரின் கணிப்பு தவறாகிப்போனது.
மலையகத்தமிழனை, மட்டக்க்கிளப்பு தமிழன் மட்டம்காக நினைக்கும் நிலையில் இந்தப் பிரிவினை எண்ணம்தானே இன்று ஈழம் பற்றிய கனவு வீழக் காரணமானது. தமிழன் உலகம் முழுவது வாழ்கிறான் என்பது பெருமிதம், அதே வேளையில் பிரிந்தே வாழ்கிறான் என்ற செய்தி வேதனை தருகிறது.
நிற வெறி, இன வெறி என்பது சென்னை தூதரகத்திலேயே துவங்கி விட்டதை ஆசிரியர் குறிப்பிடும் போது இந்த உலகம் இன்னும் நாகரீகத்தின் எல்லையைத் தொடவில்லை என்பது உறுதிப்படுகிறது.
தஸ்லிமா நஸ் ரீன் பற்றிய பார்வை விலாசமானது மெக்டொனால்ட் உணவு பற்றிய ஆசிரியரின் பயம், நம் நாட்டின் தற்போது விற்பனையாகும் ஜங்புட் கலாச்சாரம் , தீம்பார்க், மாயாஜால் என்று மேலைக் கலாச்சாரத்தின் வேகம் ஜீரமாக பரவி வருவதை கண்கூடாக்க் காட்டுகிறது. அங்கு பார்த்த திரைப்படங்கள் பற்றிய பார்வை உலகை ஒரு சுற்று வர வைக்கிறது.
மனிதனுக்கான எல்லை எது என்பதில் மனிதம் மட்டுமே தோற்பதில்லை. வெகுவான மனிதர்களும் தோற்கிறார்கள் எல்லைகள் விரிவடைந்த போதிலும் மனித மனங்களின் விரசங்கள் விரிவடையக் தொடங்கியது. சமாதானத் த்த்துவம் மட்டுமே சகஜமானதாகப்பார்க்கப்படுகிறது. இதுவே உலக அரங்கில் அதிகார மையத்தின் அரசியல் சண்டையானது. இக்கட்டுரைதொகுப்பைப் படித்தபோது எனக்குள் எழுந்ததே இந்த விமர்சனத்தத்துவம் . இச்சிந்தையை தரும் இந்நூல் அதனளவில் வெற்றியே.
( சுப்ரபாரதிமணியனின் ” மண் புதிது “ பயணக்கட்டுரை.
அறிவு பதிப்பகம், சென்னை வெளியீடு
ரூ 60/ )

= சோ.முத்து சரவணன்

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

அண்டை வீடு : பயணக் கட்டுரை

போர்க்குற்றவாளிகள்
--------------------------


4
இலங்கை இனப்படுகொலையை முன்னிட்டு ராஜபட்சே உட்பட பலர் போர்க்குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டும் என்று உலக டப்ளின் நீதிமன்றம் உட்பட பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.

இதுபோல் வங்கதேச விடுதலையின்போது 1971ல் வங்கதேச மக்களின் மீதான பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ரஜாக்கர்கள் உட்பட முஸ்லிம் அடிப்படைவாதிகளின் வன்முறையும், கொலைக்குற்றமும் குறித்த போர்க்குற்றவாளிகளாய் பிரகடனப்படுத்தப்பட்டவர்கள் மீதான விசாரணையும், தண்டனையும் குறித்து முப்பதாண்டுகளாக வங்கதேசத்தில் பேசப்பட்டு வருகின்றன. இப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா இது குறித்து ஆவணம் செய்யப்படும் என்று தொடர்ந்து பேசிவருகிறார்.

போர்க்கால விதிமுறைகளை மீறுபவர்கள் போர்க்குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. பிடிபட்டவர்களைத் தவறாகப் பயன்படுத்துவதும் துன்புறுத்துவதும், வெள்ளைக் கொடியேந்தி சரணடைய வருபவர்களைக் கொல்வதும் போர்க்குற்றங்களாகவே கணிக்கப்படுகிறது.







1971 வங்கதேசத்தில் ஜெனரல் யாஹ்யகானின் அதிகார வன்முறையோடு ஜமாத் அமைப்பினரும், முஸ்லிம் லீக்கும், ரஜாக்கர்களும் துணையாக இருந்தனர். 30 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். நாலரை லட்சம் பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளானார்கள். எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், குடிமை அமைப்பைச் சார்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கொல்லப்பட்டனர். 1971 ஜனவரி 25, 26 இருதினங்களில் மட்டும் டாக்கா நகரில் 50 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். ‘ஆபரேஷன் சர்ச்லைட்’ என்று அதற்குப் பெயரிடப்பட்டது. ஒன்பது மாதத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய கொடுமைச் செயல்களால் பல ஆயிரக்கணக்கில் பெண்கள் பாலியல் அடிமைகளாய் ராணுவத்தினரால் ஆக்கப்பட்டனர். ராணுவ முகாம்களில் பாலியல் இயந்திரங்களாக்கப்பட்டனர் பெண்கள். இந்துப் பெண்களின் கட்டாய கர்ப்பமும் கொடுமையான விஷயமானது. Ôமுட்டுக் கல்யாணம்Õ என்ற தற்காலிகத் திருமணங்கள் நிகழ்த்தப்பட்டன. தற்காலிகத் திருமணங்களை முஸ்லிம் மரபானவர்கள் ஏற்பதில்லை.



ஜெனரர் யாஹ்யாகான் , அலிபூட்டோ, டிக்காகான், மேஜர் ஜெனரல் ரா பார்மென் அலி உட்பட பலர் போர்க்குற்றவாளிகளாக்கப்பட வேண்டும் என்பதும் கோரிக்கையாக இருந்தது.

இந்தக் கொடுமைச் செயல்களில் ரஜாக்கர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். Ôவாலிண்டியர்Õ என்ற சாதாரணப் பொருள் ரஜாக்கர்களுக்கு அர்த்தப்படுத்தப்பட்டாலும், அவர்கள் அசாதாரண கொலைகாரர்களாகவே விளங்கினர்.

டாக்காவின் இரண்டாவது இடத்தில் அதிக பிரதிகள் விற்கும் Ôடெய்லி இன்குலாப்Õ என்ற பத்திரிகையைப் போர்க்குற்றவாளிகள் கைப்பற்றி தங்கள் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தினர். ஆனால் இப்போது ‘டெய்லி இன்குலாப்’ போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக இயங்கி வருகிறது.


போர்க்குற்றவாளியான ராணுவத்தினர் 195 பேர் பாகிஸ்தானுக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டதாய் சொல்கிறார்கள். உச்சநீதிமன்றம் போர்க்குற்றவாளிகள் என வங்கதேசத்தில் யாருமில்லை என்று அறிவித்ததும் பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

இதையொட்டி இதில் பங்குடையதாக குற்றம் சாட்டப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாம் அமைப்பின் தலைவர் அலி அஸ்மா முகமது முஜிபுரும், 1971ல் ஜமாத் அமைப்பு போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேகம் கலீதா ஜியா முன்னாள் பிரதமராக இருந்த காலத்தில் போர்க்குற்றவாளிகள் தண்டனை பெறுவர் என்று சொல்லிக்கொண்டிருந்தார். இன்றைய பிரதமர் ஷேக் ஹசீனாவும் அதையே கூறுகிறார். சமீபத்தில் ஜமாத் இஸ்லாம் சார்ந்த 40 பேரின் வெளிநாட்டுப் பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஜமாத் இஸ்லாமின் தலைவரான ஹான்சா குலாம் ஆசாத் கொடுமைக்கார ரஜாக்கர்களில் முதன்மையானவராகக் கருதப்படுபவர். முன்னர் ஷேக் ஹசீனா ஆட்சிக்கு வந்தபோது ஹன்சா குலாம் ஆசாத்திடம் சென்று ஆட்சி புரிய ஆசி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பேகம் கலிதா ஜியா கட்சியின் கூட்டணியில் முஸ்லிம் மத அமைப்புகளும் ரஜாக்கர்களும் இருப்பதால் அவர்களை அடக்க ஷேக் ஹசீனா போர்க்குற்றவாளிகள் ஆயுதத்தைப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு உண்டு.

ஷேக் முஜிபுர் ரகுமான் வங்கதேச விடுதலைக்குப்பின் 1975ல் கொல்லப்படும் வரை போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்றே சொல்லிக் கொண்டிருந்தார். அவர் குடும்பமே கொல்லப்பட்டது.

டாக்காவில் ஷேக் ஹசீனாவின் பிறந்தநாளின்போது இருந்தோம். பிறந்த நாள் கொண்டாட்டங்கள் என்று பிளக்ஸ் போர்டுகளும், கட்அவுட்டுகளும், ஊர்வலங்களும், பொதுக்கூட்டங்களும் இல்லாதது ஆறுதல் தந்தது. அன்று ஷேக் ஹசீனா போர்க்குற்றவாளிகள் விசாரணை ஆரம்பமாகியுள்ளது பற்றியும் தெரிவித்தார்.

அன்று செப்டம்பர் 30 – ‘தி டெய்லி ஸ்டார்’ - ஆங்கிலப் பத்திரிகையில் வந்த செய்தியை அப்படியே மொழிபெயர்த்துத் தந்துள்ளேன்.


சுப்ரபாரதிமணியன்