சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 31 மே, 2017


* சீன திரைப்பட விழா : கனவு : 3,4 6/17


1.         CROUCHING TIGER, HIDDEN DRAGON:
                           SWORD OF DESTINY  (2016/102 mins.)
2.         LET’S GET MARRIED  (2015/127 mins.)
3.         THE MASTER  (2015/109 mins.)
4.         GRIEF OVER THE YELLOW RIVER (1999/100 mins.)
5.         THE DEAD END  (2015/139 mins.)
6.          SHADOW MAGIC (2000/90 mins.)
7.          LADY OF THE DYNASTY  (2015/122 mins.)


பார்த்தேன் Chinese film   Yellow Magic Orchestra  படம் :

Yellow Magic Orchestra (abbreviated as YMO) is a Japanese electronic music band consisting of principal members Haruomi Hosono (bass, keyboards, vocals), Yukihiro Takahashi (drums, lead vocals) and Ryuichi Sakamoto (keyboards, vocals).[5] For their early studio albums and live performances, the band was often accompanied by music programmer Hideki Matsutake.[7]

Each of its members were seasoned veterans of the music industry before Hosono formed the band as a one-off exploration of computerized exotica, initially paying tribute to performers such as Les Baxter and Martin Denny while also parodying Western conceptions of the orient. Over the course of YMO's career, the group continued to embrace new technologies, fusing them with classic pop forms, and indulging in sociopolitical, technological, or musical subversion.[8]

They are often considered influential innovators in the field of popular electronic music.[5][4] They contributed to the development of synthpop,[1] ambient house,[5] electronica,[2] electro,[3] contemporary J-pop,[9] house,[5][10] techno,[10][11] and hip hop music.[2] More broadly, their influence is evident across various genres of popular music, including electronic dance,[4] ambient music,[5][6] chiptune, game music,[12][13] and pop music.[6]

YMO were pioneers in their use of synthesizers, samplers, sequencers, drum machines, computers, and digital recording technology in popular music,[5][14][15] during a time when these technologies were seen as

பார்த்தேன் Chinese film    Crouching Tiger, Hidden Dragon: Sword of Destiny    படம் : good

Crouching Tiger, Hidden Dragon: Sword of Destiny (Chinese: 臥虎藏龍:青冥寶劍) is a 2016 American-Chinese martial arts film directed by Yuen Woo-ping and written by John Fusco, based on the novel Iron Knight, Silver Vase by Du Lu Wang. It is also a sequel to the 2000 film Crouching Tiger, Hidden Dragon. The film stars Donnie Yen, Michelle Yeoh, Harry Shum, Jr., Jason Scott Lee, Roger Yuan, Woon Young Park, Eugenia Yuan, JuJu Chan, Chris Pang, Veronica Ngo, Shuya Chang and Natasha Liu Bordizzo. The film was released in Hong Kong on February 18, in China on February 19 and worldwide on Netflix outside China on February 26, 2016.

பார்த்தேன் Chinese film    Lady  of the dynasty
படம் : good


Lady  of the dynasty

One of Chinese’ history’s most common tropes is the tale of a beautiful, tragic woman who brings about the downfall of heroic men and great empires. None are more romanticized than Concubine Yang Guifei, for whom one of the most famous (and long) epic poems in Chinese literature, Song of Everlasting Regret, was dedicated.

Naturally then, Fan Bingbing was chosen to play Concubin

பார்த்தேன் Chinese film    Lover's Grief over the Yellow River   படம் : good
Lover's Grief over the Yellow River (simplified Chinese: 黄河绝恋; traditional Chinese: 黃河絕戀; pinyin: Húanghé júeliàn) is a 1999 Chinese film directed by Feng Xiaoning. It was China's official Best Foreign Language Film submission at the 72nd Academy Awards, but did not receive a nomination.[1] Feng considers it the second of his "War and Peace" (战争与和平) trilogy.
The plot centers on an American pilot, played by Paul Kersey, who also starred in Feng Xiaoning's 1997 Red River Valley, a film which depicted the British invasion of Tibet in 1905. During the Second Sino-Japanese War the American pilot makes a forced landing near the Great Wall in North China but is taken into the care of the Communist guerilla forces. He meets and falls in love with a young woman fighter who had been raped by the Japanese invaders. The American returns to the Yellow River after the opening of China in the 1980s.[2]




பார்த்தேன் I, Daniel Blake  படம் : good
I, Daniel Blake is a 2016 drama film directed by Ken Loach and written by Loach's frequent collaborator Paul Laverty. It stars Dave Johns as Daniel Blake, who is denied employment and support allowance despite his doctor finding him unfit to work. Hayley Squires co-stars as Katie, a struggling single mother whom Daniel befriends.

The film won the Palme d'Or at the 2016 Cannes Film Festival and the Prix du public at the 2016 Locarno International Film Festival





 * திண்டுக்கல் சுற்றுச்சூழல் முகாமில்  பேசியதில்..
சுற்றுச் சூழல் படைப்பிலக்கியத்தில்..
----------------------------------
இந்த நாவல்கள்  முன் வைக்கும் உள்ளீடான தார்மீகக் கேள்விகள் உலகளாவில் சுற்றுச் சூழல் பிரச்சனைகளாக வடிவெடுத்துவிட்டன என்பது இன்னும் துயரமானது.  சிறப்புப் பொருளாதார மண்டலங்களாய் திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் அறிவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் பயமுறுத்துகின்றன.  அடிப்படை மனித உரிமைப்ப்பிரச்சினைகளாக சுற்றுச்சூழல் பிரச்சினைகள்  உலகெங்கிலும் வடிவெடுத்துள்ளன. கார்பரேட் சமூகப் பொறுப்புணர்வு, நியாய வணிகம் போன்றவை உலக அளவில்  முதலாளித்துவதின்  கருணை முகங்களாய் காட்டப்படும் இந்நாளில்  நவீனக்கொத்தடிமைத்தனமும் புதிய பரிணாம விசுவரூபங்களைக்  கொண்டிருக்கிறது.மனிதர்களின் பேரசைக்காக மண்ணை நாசமாக்குவதும், ஆறுகளை மாசுபடுத்துவதும், நிலத்தடி நீரை மாசுபடுத்துவதும் தொடர்ந்த தொழில் முன்னேற்றம் என்ற பெயரில் நடைபெற்றுவருவது கவலை கொள்ள வைக்கிறது. அதற்கான எதிர்ப்புக்குரல்

    கடந்த 20 ஆண்டுகளாக நானும் படைப்பிலக்கியவாதிகளும் எழுதிவரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள், குழந்தைத் தொழிலாளர் பிரச்சினைகள், குழந்தைத்தொழிலாளர் நலன்கள் குறித்த அக்கறையை  தமிழ் ஹிந்து அக்கறைகொண்டு அவை பற்றிய படைப்புகளை முன்னிருத்துகிறது. கார்ப்பரேட் உலகம் பற்றிய பல விமர்சனங்களையும் அக்கறையுடன் வெளியிட்டு வருகிறது.கார்ப்பரேட்டுகள் முதலீடு செய்யலாம்.லாபம் சம்பாதிக்கலாம். அதே சமயம் நதியைப் பாழாக்குவதற்கோ, நிலத்தடி நீரைமண்ணை பாழாக்குவதற்கோ அவர்களுக்கு உரிமை இல்லை. சம்பாதிக்கும் லாபத்தில் ஒரு பகுதியை தொழிலாளர் நலனுக்காக  கார்ப்பரேட்  சமூக நலத்திட்டத்தின் கீழ் செலவு செய்ய வேண்டும்  என்று விதிகளும், பாராளுமன்ற மசோதாக்களும் இருந்தாலும் அவை நடைமுறைபடுத்தப்படுவதில்லை. பேர் டிரேடு -நியாய வணிகம் சார்ந்து அவர்கள் இயங்க வேண்டிய அவசியத்தை ஹிந்துவின் கட்டுரைகள் ஒரு வகையில் வலியுறுத்துகின்றன. கார்ப்பரேடுகளுக்கு எதிரான குரலாக இல்லாமல் கார்ப்பரேட்டுகளின் சமூகப் பொறுப்புணர்வு பற்றிய அக்கறையை தொடர்ந்து வலியுறுத்துகிறது.
உலக அளவில் மனித உரிமைப்பிரச்சினைகளாக   முன்வைக்கப்படும் பல்வேறு பிரச்சினைகள் பற்றிய விவாதங்களை ஹிந்து முன்னெடுப்பது ஆரோக்கியமானதாகும்.  சமூகத்தின் மனச்சாட்சியின் குரலாக, ஒருவகையில் எழுத்தாளர்களின் குரலாக   அது இலக்கிய ஆளுமைகள், கலைத்துறையினர், அறிவுத்துறை முன்னோடிகளை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துகிறது.உலக மயமாக்கலால் கிராமங்களிலிருந்து துரத்தப்படும்  மக்கள் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு இடம்பெயர்கிறார்கள். இங்கு அவர்கள் தொழிலாளிகளின் உரிமையற்று, வெறும் கூலிகளாக, கொத்தடிமைகளாக, சுமங்கலித்திட்டத்தின கீழான அடிமைகளாக, குழந்தைத் தொழிலாளர்களாக தொடர்ந்து இயங்கி வருகிற அவலத்திலிருந்து மீட்டெடுக்கிற பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை நுணுக்கமாகவும், பூடகமாகவும்  சமீப்ப் படைப்புகள் செய்து வருவது ஆரோக்கியமானதாக இருக்கிறது. இது இலக்க்கிய தர்மத்தின் குரலாக ஊடகங்களுக்கு முன் உதாரணங்களை முன்வைக்கும் முயற்சியாகும்.( ஒரு பகுதி )












வியாழன், 25 மே, 2017

திருப்பூர் தொழில் துறை   இடி விழுவதைத் தவிர்க்க வேண்டும்
                                 “ திருப்பூர் மாவட்டச் சிறப்பிதழ்”  வெளியீட்டு விழா
------------------------------------------------------------------

நிலவளம் “ மாத இதழ் தமிழக அரசின் கூட்டுறவுச்சங்கங்களின் மாத இதழாக 50 ஆண்டுகளாக வெளிவரும் பத்திரிக்கையின் “ திருப்பூர் மாவட்டச் சிறப்பிதழ் ஆக மே இதழ் வெளிவந்துள்ளது.  . அதில் திருப்பூரைச்சார்ந்த இலக்கிய வாதிகள், கல்வியாளர்கள், பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், தொல்பொருள் ஆய்வாளர்கள் உட்பட பலரின் படைப்புகள்  இடம்பெற்றுள்ளன.
அந்த  “ திருப்பூர் மாவட்டச் சிறப்பிதழ்”  வெளியீட்டு விழா
 வியாழன் மாலை 6 மணி :சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகம், அம்மா உணவகம் அருகில் , பாண்டியன்நகர், திருப்பூர் தலைமை:கலாமணி கணேசன், சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. இதழினை சுப்ரபாரதிமணியன் வெளியிட்டுப் பேசும்போது :

                                  திருப்பூர் தொழில் துறை பல்வேறு சிக்கல்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது. வெளிநாடுகளிலிருந்து ஆர்டர் கிடைத்தாலும் தொழிலாளர் பற்றாக்குறை  அதை முடிக்க முடியாமல் தாமதமாக்குகிறது.அல்லது நூல் விலை உயர்வு அல்லது மனித உரிமை மீறல்கள் என்னும்படியான சுமங்கலித் திட்டத்தில்  பெண்களின் மீதான துன்புறுத்தல், குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை, சாயம் சார்ந்த பிரச்சினைகள்    என்று இருந்து கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் செயல்பட்டு வந்த சில மேற்கத்திய நாடுகளின் ஏற்றுமதி அலுவலகங்கள்  மூடப்பட்டு விட்டன. அல்லது பெங்களுருக்கு சென்று விட்டன என்பது இதன் அடையாளம். திருப்பூர் பஞ்சாலையை பயமுறுத்தும் பங்களாதேஷ் போன்ற நாடுகளின் நூல் உற்பத்தி, சாயமேற்றலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.  இவையெல்லாம் திருப்பூரை புறம் தள்ளிக் கொண்டே இருக்கின்றன. அரசின் தொழிலாளர் கொள்கை  அல்லது அணுகுமுறைகளும் இது போல் பெரும் ஏற்றுமதி நிறுவனங்களை விலகிப் போகச் செய்திருக்கின்றன. வடிவமைத்தலிலும் நுகர்வோர் மார்கெட்டை தக்க வைத்துக் கொள்வதிலும் நாம் முன்னணியில் இருக்கிறோம் என்று நம்பிக்கைக் கொண்டிருப்பதில் பல இடிகள் சமீபமாய் விழுகின்றன. நமக்கு வரும் பல முக்கிய ஆர்டர்கள் வெளி மாநிலங்களுக்கும் பங்களாதேஷ், இந்தோனிசியா, சீனா, துருக்கி, கம்போடியா நாடுகளுக்கும் சென்றிருப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் தெருமுனை சப்தமோ, ஒருகை ஓசைகளோ போதாது என்று உணரப்பட்டிருக்கிறது.எல்லோர் உள்ளம் கேட்கும் பொருளாதார மொழி வித்தியாசமாகவே இருக்கிறது. வியாபாரம் சார்ந்த் தன் முனைப்புகளும் நடவடிக்கைகளும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.பொருட்களை விநியோகிக்கும் இணைப்பு முயற்சியில் பல சிரமங்கள் இருக்கின்றன.அரசின் பொருளாதாரக் கொள்கையின் அணுகுமுறை, தொழிலாள வர்க்கத்தினரின் பங்கேற்பு , குறைகளை நீக்குவதர்கான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.  வறுமை, பாலியல் சுரண்டல், குறைந்த ஊதியம், பெண்கள் தங்கும் விடுதிப் பிரச்சினைகள் என்று நமது போதாமையும் நாம் கற்றுக் கொண்டவையிம் நிறைய இருகின்றன. உலகமயமாக்கல் பலவிதங்களில் புரட்டிப் போட்டு விட்டது. ஒரு நாளைக்கு ஒரு சட்டையை மாற்றும் -லட்சக்கணக்காண  ரூபாய் விலையுள்ள சட்டையை மாற்றும் பிரதமர் தொழிலாளர் சட்டங்களை மாற்றுவதில் இன்னும் அக்கறை கொண்டு வருகிறார் என்பது பெரிய ஆபத்தாகவும் கணிக்கப்பட்டிருக்கிறது.
  பங்களாதேஷில் நூறு பேர் இறந்த பின்னலாடை தீ விபத்தில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையினர், ஏற்றுமதியாளர்கள் மட்டுமில்லாமல் பிராண்ட் சம்பந்தமானவர்கள் பெரும் தொகையை நஷ்டஈடாகத் தந்துள்ளனர் என்பது சமீபத்திய மிக முக்கியமானதாகும்.தொழிலாளர்களைப் பொறுத்த அளவில் சுரண்டல் என்பது சாதாரணமாகிவிட்டது. 12 மணி நேரத்திற்கும் அதிகமான நேரத்தை ஒரு ஷிப்ட்டாக்க் கொண்டு பணிபுரிகிறார்கள்.பின்னலாடை , பஞ்சாலைகளில் இளம் பெண்கள் படும் சிரமங்களுக்கு அளவில்லை. குழந்தைகளை பள்ளிகளை விட்டு விட்டு வெளியே வருவது பெரும் துயரம், பள்ளிகளை விட்டு அவர்கள் வெளியேறும் நேரத்தில் பஞ்சாலைகள் போன்றவை அவர்களை வரவேற்று சுமங்கலித் திட்டத் தொழிலாளிகள் ஆக்கி விடுகின்றன.  தொடர்ந்து பணிசெய்தல், ஓய்வின்மை,   நோய்களால் அங்கு பெணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் புதிது புதிதாய் இளம் பெண்கள் சேர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.தொழிலாளிகள் மீது அக்கறை கொள்ளாமல் எந்திரங்களாகப் பார்க்கும் பார்வை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த இளம் பெண்கள் பற்றிய செய்திகள் தொடர்ந்து ஊடகங்களில் வெளிவந்து கொண்டே இருகின்றன. அவர்களின் உரிமை சார்ந்த பிரச்சினைகள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.


 உலக அளவில் இப்பிரச்சினைகள் நுகர்வோர் சட வல்லுநர்கள் ம்த்தியில் பெரும் பாதிப்புகளைத் தந்து வந்துள்ளதை பிரிட்டிஷ் அரசின் சமீப சட்டமொன்றைச் சொல்ல்லாம்.  தொழிலாளர் உரிமை மறுக்கப்படும் தொழிற்சாலைகளோடு வியாபாரம் செய்பவர்கள் குற்றவாளிகளாக கருதப்படும் சட்டம் அங்கு அமுலுக்கு வந்துள்ளது அது இந்தியா  மற்றும் மூன்றாம் உலக நாடுகளின் உற்பத்தியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாகும்.தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட உரிமை மீறலகள் காரணமாக  ஏற்றுமதி வர்த்தகம் வெவேறு மாநிலங்களுக்கும் வெவ்வெவேறு நாடுகளுக்கும் மாறும் போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.கொள்முதலாளர்களின் உற்பத்திச் சங்கிலியில்  நியாயமான தொழில் வாய்ப்பும் தொழிலாளர் நிர்வாக செய்ல்பாடுகளை பழைய முறைகளிலிருந்து மாற்றி நவீனமாக்கும் முயற்சிகளும் எப்போதைக்கும் இல்லாத அளவில் இப்போது மிகவும்  தேவையாக உணரப்பட்டிருகிறன.
புலவர் சொக்கலிங்கம் “ இலக்கிய இன்பம் “ என்ற தலைப்பில் உரையாற்றினார். நிக்ழ்ச்சியை சக்தி மகளிர் அறக்கட்டளை, பாண்டியன் நகர் நடத்தியது.


Kanavu,       8/2635, Pandian nagar, Tiruppir  641 602  ( ph. 9486101003 )


வியாழன், 18 மே, 2017

அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது         ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா 2017
---------------------------------------------------------
*14/5/17   ஞாயிறு,. மத்திய அரிமா சங்கம், , காந்திநகர்,              திருப்பூர்  நடைபெற்றது மத்திய அரிமா சங்கம் தலைவர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார்.
* சிறப்பு விருந்தினர்கள்: - கவிஞர் இந்திரன் , சென்னை
(
சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர்.,  ) ., - கவிஞர் சின்னசாமி  IPS., PhD.                 ( Deputy Commissioner of Police , Tirupur )
கவிஞர் இந்திரன் , சென்னை (( சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர் ) உரையில்:
உலகமயமாக்கலும் தொழில் துறை வளர்ச்சிக் காலத்தின் நெருக்கடிகளும் துயரப்படவே வைத்திருக்கிறது. இந்த பெரும் செல்வத்தை விட்டுவிட்டு செத்துப் போவதற்கு நான் என்ன முட்டாளா? என்ற கேள்வி மனிதனை நகைப்புக்குள்ளாகுகிறது. கைவினை கலைஞர்கள் சமகாலத்தில் புறக்கணிக்கப்படுவது சாபமாய் உயர்கிறது. இந்த பூமியின் மீது மாசடையாமலிருக்கட்டும் என்ற ஆசையின் விஸ்வரூபம்தான் செல்வத்தை நோக்கிய எங்களது பேராசை/ எங்கே முடியுமென்றுஆதங்கத்துடன் கேள்வியை முன்நிறுத்துகிறது. .சாதி இன வேறுபாட்டைக் கடந்த  கலாச்சாரம் முன் வைக்கும்  நிபந்தனைகள் பற்றி உரக்கவே இன்றைய கவிதை உலகில்  காணலாம். .மொழியின் சிக்கல்களை மீறி, கலாச்சார சுதந்திரம் பற்றி விரிவாய் இவை பேசுகின்றன...கவிதை என்றைக்கும் காலத்தின் குரல் .

சுப்ரபாரதிமணியனின் உரையில்.. பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு சமூகம் மோசமான திசையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதன் அடையாளம் இந்த பெண்கள் மீதான வன்முறை. இதை நல்ல படைப்புகளை வாசிப்பதன் மூலம்மாற்றுச்சிந்தனைகளை உருவாக்குவதம் மூலம் குறைக்கலாம்.
 உலகமயமாக்கல் பெண்களையும் குழந்தைகளையும் வெகுவாக பாதித்து விட்டது. பெண்களை வேலைக்குப் போய் பணம் சம்பாதிக்கிறவர்களாகவும், பாலியல் சுரண்டலுக்கு பலியாகிறவர்களாகவும் மாற்றி விட்டது. குழந்தைகள் கல்வியை வன்முறையாகவே பார்க்கிறார்கள்,பெண்கள் பற்றியச் சிந்தனைகள் பகுத்தறிவின் துணை கொண்டே மாற்றியமைக்க முடியும்  .சமரசமற்ற சுயமரியாதை கொண்ட பெண்களின் உலகமே முன்னேறிய சமூகத்தின் அடையாளமாக இருக்கும்.

1.அம்சப்ரியா , பொள்ளாச்சி, 2.இளஞ்சேரல், கோவை  3. சூரியநிலா , சேலம்
4. சந்திரகுமார் , கோவை     5. பன்னீர்செல்வம், மதுரை 6.பேரா. ராம்கோபால், கோவை 7.பேரா. ஆர்.பாலகிருஷ்ணன் , கோவை 8. செ.இராசு , ஈரோடு
9. இடைப்பாடி அமுதன் , நாமக்கல் 10.சி.ஆர்.ரவீந்திரன், கோவை  இவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருது பெற்றவர்கள் உரை நிகழ்த்தினர்  :
பெண் எழுத்தாளர்களுக்கான சக்தி விருது: விருது பெற்றவர்கள்
மனுஷி ,பாண்டிச்சேரி
ஜெயஸ்ரீ , திருவண்ணாமலை( மொழிபெயர்ப்பாளர் )
நித்யா ( மகிழினி ), கோவை
ஜெயந்தி  , பெங்களூர் ( மொழிபெயர்ப்பாளர் )
உமா ஜானகிராமன் ., பெங்களூர்
நர்மதா, சென்னை
செங்கவின், பொள்ளாச்சி
கீதா பிரகாஷ், பொள்ளாச்சி
பேரா.சுஜாதா , குன்னூர்
பேரா. தி.சாந்தி திண்டுக்கல்
ஜெயந்தி சங்கர் ( சிங்கப்பூர் )
வத்சலா ரமேஷ் ( லண்டன் )
கீதா சச்சின் ( திருப்பூர் )
கவிதா மெய்யப்பன் ( திருப்பூர் )
குக்கூ அழகேசுவரி ( ஊத்துக்குளி )
சாந்தா மாணிக்கம் ( திருப்பூர் )

குறும்படம்:
அரவிந்தன் , கோவை
மணிவண்ணன், ஊட்டி
விக்னேஷ், தஞ்சை
மு.இளங்கோவன் , பாண்டி

                    




சில நிறுத்தங்கள்: சுப்ரபாரதிமணியன்

            பழையனூரில் மூன்று பேருந்து நிறுத்தங்கள் உLLanண்டு. எதிலும் நிழலில் நின்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள நிழல் குடையோ மறைப்புகளோ இல்லை. வெய்யிலானாலும் மழையானாலும் ஏதாவது மரத்தடி கிடைத்தால் பாக்யம் என்பது போல் தவிப்பார்கள் சுடுமணலில் கால்களை வைத்தவர்கள் போல் தள்ளாடுவார்கள். ஆண்கள் ஏதாவது தேநீர் கடையில் போய் தேனீர் குடித்து விட்டு கொஞ்சம் நேரம் உட்கார அனுமதி கிடைக்கும். பெண்கள் என்றால் தெருதான். தெருவில்தான் நிற்கவேண்டும். வெயிலில் காயவேண்டும் .

முதல் பேருந்து நிறுத்தம் பழைய பழையனூர் . பத்து பேர் கொண்ட கும்பல் பூவரச மரத்தடியில் இருந்தது. நூறு நாள் திட்ட வேலைக்கு போகிறவர்களை அங்கு வரச்  சொல்லியிருந்தான் சூப்பர்வைசர் மங்கள கிருஷ்ணன். வாய்க்கால் மேடு பகுதிக்கு போக வேண்டியிருக்கும் என்று சொல்லியிருந்தான். அருணாதேவி அந்தக் கும்பலில் அன்று சேர்ந்திருந்தாள்.

எங்கு வேலைக்குச் சென்றாலும் அதிகபட்சம் மூன்று மாதங்கள் செய்வாள். அப்புறம் வேலை இடம் மாற்ற புது இடம் தேடுவாள்.முன்பு வேலை செய்த இடங்களில் ஆண்களின் தொல்லை பற்றி சொல்வாள்.
 " பார்க்கற பார்வை...சேலையிலிருந்து ஆரம்பிச்சு மெதுவா கேக்கறது. சாப்பாட்டு பொட்டலம் வாங்கித் தந்துன்னு ஆரம்பிச்சு மொக்கை போடுவானுக..."

" நீ என்ன அவ்வளவு பெரிய அழகியா அருணா..."

" இங்க இருக்கறவங்களெ விட அழகுதா..."

" செரி... செரி... பேரழகியா நெனச்சக்காதே"

 ஏதாவது பிரச்னை என்றால் மஞ்சுளாவிடம்தான் சொல்வாள். அவளும் " நீ என்ன பெரிய அழகியா என்றுதான் கேட்டிருக்கிறாள். " உன்னெ விட நான் அழகிதாண்டி " என்பாள். ஏதோ வொருவகையில் அவள் தூரத்துச் சொந்தம். அப்பா அம்மாவை மஞ்சுளா கூட வைத்துக்கொண்டு திண்டாடுபவள். அவள் அண்ணன் திருமணம் செய்து கொண்டு தனியே போய் விட்டான். அவள் அம்மா செம்மறி ஆடுகள் நாலைந்தை வைத்துக் கொண்டு புல், செடி கண்ட இடங்களில் மேய்த்துக் கொண்டிருப்பாள்.
       மஞ்சுளா பெரிய மனுஷி ஆன பின்பு ஆடு மேய்க்கப் போவதில்லை. கொஞ்ச நாள் மில்லிற்கு போனாள். பஞ்சு மூக்கில் நுழைந்து இருமலைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்ததால் மில்லிற்குப் போவதை நிறுத்திக் கொண்டாள். இன்றைக்கு நூறு நாள் வேலைக்கு மங்கள கிருஷ்ணன் கூப்பிட்டால் போலாம். இல்லையென்றால் மஞ்சுளா வீட்டிற்கு போகலாம் என்று நினைத்திருந்தாள் அருணாதேவி.  ஒரு நல்ல பருப்பாவது சாம்பாராவது சுவைக்காக கிடைக்கும். புது இடம் புது ருசி என்பாள்.

பழையனூரின் இரண்டாம் பேருந்து நிறுத்தம் புதிய பழையனூர் நிறுத்தம். பெரிய வேப்பமரம் ஒன்று அதன் ஆகிருதியுடன் நின்றிருக்கும். ஒவ்வொரு காலத்திற்கும் தகுந்த மாதிரி வேப்பிலை கொழுந்து, வேப்பம்பழம், இலைகள் உதிர்ந்து அந்த மரத்தடி ரம்மியமாகவே இருக்கும். இளஞ்சேரல் பழையனூர் வடக்குப் பகுதி மூலையில் ஒரு தோட்டம் வாங்கி சுள்ளிக் கரடாக இருந்த இடத்தில இயற்கை வேளாண்மைக்காக ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தான். கணிணிப் பொறியாளராக இருந்து பெங்களூர் , அமேரிக்கா என்று பத்தாண்டுகள் அலைந்துவிட்டு கோவைக்குத் திரும்பியவன் அங்கு வந்து இடத்தை வாங்கினான். நிலத்தை ஒழுங்குபடுத்தி வேலி போட்டான். மண் புழு உற்பத்தி என்று ஆரம்பித்திருந்தான். காய்கறி போட ஆயத்தம் செய்து கொண்டிருந்தான். அந்த இடத்தில யாரவது தங்கியிருந்து பார்த்தால் நல்லது என்று ஷெட் போட்டிருந்தான். ஒரு குடும்பமாக இருந்தால் நல்லது என்று நினைத்திருந்தான். சுப்பையாவைப் பற்றி யாரோ சொல்ல இளஞ்சேரல் தொடர்பு கொண்டிருந்தான். சுப்பையாவிற்காக இளஞ்சேரல் காத்திருந்தான். அவனின் கண்களில் இருந்த கறுப்புக் கண்ணாடி வெய்யிலின் தாக்கத்தை குறைத்திருந்தது. எல்லாவற்றையும் லேசான கறுப்பில்தான் காட்டிக் கொண்டிருந்தது

" எனக்கே இது மாதிரி நினைப்பு இருந்துச்சு. ஒரு தாய் தமிழ்ப் பள்ளி ... ஒரு இயற்கை வேளாண்மைத் தோட்டம்ன்னு கொஞ்சம் கனவு இருக்குது. "

" தாய்த் தமிழ்ப் பள்ளி பெய்லியரா "

" அரசாங்க ஆதரவு இல்லெ. நோஞ்சான் கொழந்தை மாதிரி இருக்குது. "

" நாம ஒன்னு இங்க முயற்சி பண்ணலாமா..."

" மெட்ரிகுலேஷன் பள்ளிக நாலஞ்சு ஊரச் சுத்தி இருந்து பயமுறுத்துது. மொதல்ல இயற்கை வேளாண்மைத் தோட்டம் பாருங்க. எனக்கே இதிலே தங்கிப்பார்த்துக்க ஆசைதா. வீட்லே யாருக்கும் அக்கறை இல்லே. பரம்பரையான வூடு. வெளியே போக வேண்டாமுன்னு பாக்கறேன்" என்று சொல்லியிருந்தான். சுப்பையாவுக்காக இளஞ்சேரல் காத்திருந்தான். கை குறி பார்க்கும் பெண்ணொருத்தி பத்தடி தூரத்தில் கனத்த பாறை ஒன்றின் மீது உட்கார்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.அந்தப்பாறையை உடைக்காமல்  அப்படியே விட்டு வைத்திருப்பதை ஆச்சர்யத்துடன் பலர் பார்த்துச் செல்வார்கள்.

பழையனூரில் மூன்றாவது சந்திப்பு முனியப்பன் கோவிலின் முகப்பில் இருந்தது. அங்கு கிளி ஜோசியர் ஒருவர் உட்கார்ந்திருப்பது பழமையான விஷயம். மலை வெய்யில் என்று தாக்குபிடிப்பிக்காமல் இருக்கும் போது கொஞ்சம் இடம் மாறி உட்காருவார். மற்றப்படி முனியப்பன் கோவில் மேடைக்கு கீழ் இருந்த இடம் அவருக்கு நிரந்தரமானது. என்பதுபோல் உட்கார்ந்திருப்பார். மேடைச் சுவரோடு கட்டிவைத்தது போல் அவரின் கிளிக்கூண்டு நெருங்கியிருக்கும்.

" தாலிக்குத் தங்கம், 3 வருடம் வேலை செய்தால் 30,000 ரூபாய் கல்யாண செலவுக்கு. தங்குமிடம், சாப்பாடு இலவசம்." என்ற ஒரு பிரசுரத்தை ஒருவன் கொடுத்துக்கொண்டிருந்தான். 
ஜோசியக்காரர்    " தள்ளி நில்லுப்பா...நம்ம கிளிக் கூண்டை மறைக்கறே " என்று சத்தமிட்டார்.
 " இது எங்கப்பா..எந்த ஊர்லே ."

" வேட செந்தூரிலே "

" அங்கதா மில்லுக குவிஞ்சு கெடக்குதே. இந்த ஊர்ல இருபது வருஷத்துக்கு முந்தி ஒரு மில்லு இருந்து அப்போ மாங்கல்யத் திட்டம்ன்னு பேர் இல்லாமெ கேரளப் பொண்ணுகளே வெச்சு வேலை வாங்குனாங்க. பணம் தர்லே ஏமாத்திட்டாங்க.ஒரு பொண்ணெ கர்ப்பம் பண்ணிட்டாங்கன்னு ஏக காம்ப்ளயிண்ட். ஒரு கேஸ் கூட கோர்ட்ல இருக்கு. சொன்ன பணம் வரலேன்னு.."

" இதுலே எல்லாம் செரியா நடக்கும். நல்ல சாப்பாடு . தங்கற வசதி "

" உனக்கு எவ்வளவு கமிஷன் "

" இருக்கு... ஆயிரம் ஒரு ஆளுக்கு. ரெண்டாம் வருசமும் அவங்க அங்கேயே இருந்தா இன்னம் ஐநூறு கிடைக்கும். ஆமா ஜாதகம் பார்க்கறதுக்கு வர்ரவங்க இருக்கற ஊர்ல நீ வந்து கிளி ஜோஸ்யம் போட்டிருக்கே "

" பாஸ்ட் புட் மாதிரி உடனே பலன் கேட்க வர இன்னும் ஆளுக இருக்காங்க. உனக்கு கல்யாணம் ஆகலையா. ஒரு சீட் பாத்திரலாமா. சுமங்கலித் திட்டப் பொண்ணேயே பாத்திரலாமா."
உன் வேலையெ நிறுத்தற மாதிரி ஏதாச்சும் செய்யணும் ..
அவன் எதைச் சொல்கிறான். கிளி ஜோதிடம் பார்ப்பதைச் சொல்கிறானா. சுமங்கலித்திட்டத்திற்குப் பெண்களைப் பிடிக்கும் வேலையைச் சொல்கிறானா  என்று யோசிப்பதைப்போல் கிளிக்கூண்டைப் பார்த்தான் ஜோசியகாரன்.




subrabharathi@gmail.com  Fb:  Kanavu Subrabharathimanian Tirupur  :                                                                      blog: www.rpsubrabharathimanian.blogspot.com
Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003