சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 30 டிசம்பர், 2008

"உயிர் எழுத்து" ஓராண்டு பயணம்




சுப்ரபாரதிமணியன்
---------------------



படைப்பிலக்கியத்தில் சிறுகதைகளுக்கான பிரசுர வெளியை இன்றைய வெகுஜன இதழ்கள் வெகுவாக அலட்சியப்படுத்தி வருகின்றன. இலக்கிய இதழ்களிலும் மாதம் ஒரு சிறுகதை என்ற அளவிலேயே இடம் பிடிக்கிற நிலையில் வருடத்திற்கு ஒரு இலக்கிய இதழில் 10 முதல் 15 சிறுகதைகளே இடம்பெரும் வாய்ப்புள்ளது. அதுவும் அந்த இலக்கிய இதழின் குழு சார்ந்தவர்களின் படைப்புகளாகவே பெரும்பாலும் அவை இருக்கும். இந்நிலையில் "உயிர் எழுத்து" கடந்த ஓராண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை வெளியிட்டிருப்பது ஒரு சாதனையாகவே நிகழ்ந்துள்ளது. படைப்பிலக்கியத்தளத்தில் சிறுகதைப் படைப்பாளிகளுக்கான மேடையாகி உள்ளது.


வெகுஜன இதழ்களில் சிறுகதைக்கான பக்கங்கள் சிறுத்துவிட்டன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நான் ஹைதராபாத்தில் வசித்த போது ஒரு தெலுங்கு பத்திரிக்கை "இன்லெண்ட் லெட்டர்" சிறுகதையொன்றை வெளியிட்டது. கடித வடிவ கதை. கதையை லே அவுட் செய்த ஓவியர் 'இன்லெண்ட் லெட்டர்' வடிவில் அதை வெளியிட்டிருந்தார். அடுத்த வாரம் 'இன்லெண்ட் லெட்டர்' கதைக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அதைப் பார்த்த அதன் ஆசிரியர் எழுத்தாளரிடம் "இன்லெண்ட் லெட்டரில்" எழுதப்படும் கதைகளை வரவேற்பதாக எழுதினார்.பிறகு இன்லெண்ட் லெட்டர் கதைகள் அதில் வெளிவந்தன.

அதில் இருந்த சௌகரியம் சிறுகதைக்கான பக்க அளவை குறைத்து விட்டார். தொடர்ந்து அவ்வகைக் கதைகள் அந்த இதழில் பிரசுரமாகின. பிறகு கொஞ்ச நாள் கழித்து "போஸ்ட் கார்ட்" கதைகளை எழுத்தாளர்களிடமிருந்து வரவேற்பதாக அந்த ஆசிரியர் அறிவித்தார். பிறகு நிறைய இன்லெண்ட் லெட்டர் கதைகளை அடுத்து போஸ்ட் கார்டு கதைகள் பிரசுரமாகின.அப்போது கல்கியில் "ஹைதராபாத் பக்கம்" என்றொரு பத்தி எழுதி வந்த நான் அதில் இதைக் குறிப்பிட்டிருந்தேன். தமிழிலும் இன்லெண்ட் லெட்டர் கதைகள், போஸ்ட் கார்டு கதைகளை வெகுஜன இதழ்கள் வெள்யிட்டன. இப்போது 20 செகண்ட் கதைகள் என்றும் வந்துவிட்டன. சிறுகதைக்கான இடம் என்ன என்பதை அவை நிர்ணயித்துவிட்டன. இச்சூழலில் " உயிர் எழுத்து " கடந்த ஒரு ஆண்டில் மட்டும் வெளியிட்டிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் பற்றி யோசித்துப் பார்க்கலாம். சிறுகதைக்கு அது தரும் இடம் குறிப்பிடத்தக்கது.


இதில் இடம்பெரும் படைப்புகள் பெரும்பாலும் விளிம்புநிலை மக்களைப் பற்றியதாகவே உள்ளன. பின்நவீனத்துவ சமூகத்தில் பெண்கள், தலித்துகள், அரவாணிகள், லும்பன்கள் என்ற நிலையிலான விளிம்பு நிலை மக்களைப் பற்றியே அவை பெரும்பாலும் பேசுகின்றன. அதை எழுதியிருப்பவர்கள் விளிம்பு நிலை மக்களைப் பருந்துப் பார்வையாகப் பார்க்கிறவர்களாக இல்லாமல் விளிம்பு நிலை மக்களிடமிருந்து வந்தவர்களாகவும், அவர்களின் இயக்கங்களோடு தொடர்பு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


விளிம்புநிலை மக்களின் படைப்புகளை பிரதானப் படுத்துகிற பின்நவீனத்துவமும், அதன் அடித்தள கோட்பாடான மார்க்சியம் குறித்த விவாதத்திற்கான களத்தையும் உயிரெழுத்து விவரித்துள்ளது. இடதுசாரி கவிஞர்களின் கலாச்சார. அரசியல் தள பங்களிப்பை பல்வேறு கட்டுரைகள் தொடர்ந்து வெளிப்படுத்துகின்றன. உலகமயமாக்கல் சூழலில் மார்க்சிய தத்துவ புணருத்தாரணத்தின் அவசியம் பற்றிய விவாதங்களையும் அவை உள்ளடக்கியுள்ளன.


உலகமயமாக்கல் பத்திரிக்கைத் துறையிலும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டை இந்தியாவில் தொடங்கிவிட்டது. நிறுவனப்பட்டிருக்கிற பெரிய வணிக இதழ்களுக்கே அவை சவாலாக அமைந்துவிட்டிருக்கின்றன. இச்சூழலில் சுதிர் செந்தில் என்ற தனி மனிதனின் சேமிப்பு முதலீடும். உழைப்பும் உயிர் எழுத்தாய் நிறுவப்பட்டிருக்கிறது. இடதுசாரி இயக்கங்கள் மூலம் தனது ஆரம்ப கால நடவடிக்கைகளுடன் கலாச்சார தளத்தில் நிழைந்த சுதிர் செந்தில் ஒரு தேர்ந்த வாசகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்.குறிப்பிடத்தக்க கவிஞராகவும் இரு கவிதைத் தொகுதிகள் மூலம் நிறுவியவர். இந்த இதழின் மூலம் தன்னை ஒரு பத்திரிக்கை ஆசிரியராகவும் நிருபித்திருக்கிறார். இன்றைய பன்னாட்டு நிறுவன பத்திரிக்கை முதலீட்டிற்கு எதிரான ஒரு சிறு கலகக்குரலாக சுதிர் செந்தில் என்ற தனி மனிதனின் சேமிப்பு முதலீடும், உழைப்பும் இந்த பத்திரிக்கையில் படைப்பிலக்கிய தளத்தில் நிறுவப்பட்டிருப்பதை குறிப்பிட்டாக வேண்டும்.



( - சென்னையில் நடைபெற்ற "உயிர் எழுத்து" முதலாண்டு நிறைவுவிழா பேச்சு:சுப்ரபாரதிமணியன்.)


விழாவில் 8 புதிய நூல்கள்

வெளியிடப்பட்டன. எழுத்தாளர்கள் பிரபஞ்சன், இன்குலாப், முருகேசபாண்டியன்,

கரிகாலன், ஆதவன் தீட்சண்யா, மருது, சுதீர் செந்தில்,

நா முத்து குமார்,ரவிசுப்ரம­யன்,பாரதிகிருஸ்ணகுமார், சை.பீர்முகமது, பாவண்ணன்

உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

" உயிர் எழுத்து " திருச்சியில் இருந்து வெளிவரும் இலக்கிய இதழாகும். ஆண்டு சந்தா ரூ 240/ முகவரி: 9, முதல் தளம்,

தீபம் வணிக வளாகம், கருமண்டபம், திருச்சி 1

ஓடும்நதி

வல்லரசுக் கனவுகளும் அல்லலுறும் பெண்களும்:சுப்ரபாரதிமணியனின் " " படைப்புலகம்

கீரனூர் ஜாகிர்ராஜா




தமிழ்ப் புதினங்கள் இன்றைய நிலை ஆரோக்கியமானதாகவும் நம்பிக்கையளிக்கக் கூடிய விதத்திலும் இருக்கிறது. வெவ்வேறு இலக்குகளில் சுற்றிச்சுழன்று மானுட வாழ்வின் சகல கூறுகளையும் அவதானித்து வாசகனுக்கு ஒரு பரந்த அனுபவப் பரப்பினை அவை தரிசிக்க வைக்கின்றன. சமகாலப் படைப்பாளிகள் பலரும் தொடர்ச்சியாக எழுத தமிழ்ப் புதினப் பாதையை žராக்கித் தந்துள்ளனர்.


சுப்ரபாரதிமணியன் திருப்பூரை வாழ்விடமாகக் கொண்டு தமிழ்ச்சூழலில் தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 1970-களில் சுகாதாரமான பூமியாக இருந்த திருப்பூர் நகரில் பனியன் கம்பெனிகள் துளிக்கத் தொடங்கியபோது அடித்தள மக்களின் வாழ்க்கைப் போராட்டத்துக்கு ஓரளவு தீர்வு கிடைத்தது. ஒன்றிரண்டாகப் பெருகிய கம்பெனிகள் ஒரு கட்டத்தில் திகைப்புக்குரிய அளவில் வளர்ச்சியுற்று நகரத்தையே வசப்படுத்திவிட்டன. விவசாயம் அழிந்தது. விளைநிலங்கள் வணிக வளாகங்களாயின. நொய்யலாறு கழிவுகளின் பிறப்பிடமாயிற்று. தமிழகத்தின் மூலை முடுக்குகளிலிருந்தும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் திருப்பூருக்கு புலம் பெயர்ந்தனர். இவர்களுடன் வெளிமாநிலத்தவர்களும் இணைந்தனர். இடநெருக்கடி, குடிநீர்ப் பஞ்சம், சுற்றுச்சூழல் மாசுகள் அதிகரித்தன. திருப்பூர் நகரம் திக்கித் திணறிற்று. கம்பெனிகளோ சிப்டுகளை அதிகப்படுத்தின. தாலி கிடைத்துவிடுமெனும் நம்பிக்கையில் பனியன் கம்பெனியின் கொட்டடிகளில் இளம்பெண்கள் சுமங்கலித்திட்டம் என்ற வருடாந்திர ஒப்பந்தங்களின் பெயரில் அடிமைப்பட்டனர். சமூக அக்கறையாளர்கள், தன்னார்வலர்கள், இலக்கியவாதிகள் இதன்மேல் விமர்சனங்களை வைக்கத் தொடங்கினர். சுப்ரபாரதிமணியன் இவர்களுக்கிடையில் தன் குரலை தொடர்ந்து ஒலிக்கச் செய்து கொண்டிருப்பவர்.


சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த இவரின் " தேநீர் இடைவேளை " என்னும் நாவல் திருப்பூர் நகரத்தின் பிரச்சனகளையும், கோவை மாவட்டத்தின் தொழிற்சங்க வரலாறையும் வாசகர்களுக்கு நெருக்கமாக அறிமுகம் செய்த படைப்பு. அந்நாவல் முழுவதும் கடிதங்களே இடம் பெற்றிருந்தன. " ஓடும்நதி" என்னும் இந்நாவலிலும் கடித உத்தியை பயன்படுத்தி நாவலின் ஒரு பகுதியை நகர்த்துகிறார் சுப்ரபாரதிமணியன்.


செல்வன்- செல்லம்மிணி இருவரின் நட்பு கடிதங்களின் வழியே விரிகிறது. செல்லம்மிணி தன் தந்தையுடன் கொங்குமண்டலத்தின் உள்ளொடுங்கிய கவுண்டர் இனத்தின் ஆதிக்கப் போக்குமிக்கதொரு கிராமத்தில் வசிக்கிறாள். தண்­ர் பிரச்சனை, காமுகர்களின் வெறியாட்டம் இவர்களை கம்பெனிக்கு கொண்டுவந்து சேர்க்கிறது. பவர்லூம் கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறாள் செல்லம்மிணி. தலைக்கு குளித்த ஜந்தாம் நாள் அயர்ந்துறங்கும் வேளையில் பழைய பாத்திரக்காரனால் பலாத்காரத்துக்குள்ளாகிறாள். மீண்டும் கம்பெனி வேலைக்கு செல்கையில் செல்வனை சந்திக்கிறாள். கம்பெனியில் சொக்கன் என்பவனுடன் நெருங்கிப் பழகி செகந்திராபாதுக்கு அவனுடன் சென்று மூன்று மாதகாலம் சேர்ந்து வாழ்கிறாள். சொக்கன் பிரிகிறான். அப்பாவின் முகத்தில் விழிக்க சங்கடப்பட்டு சித்தப்பாவிடம் அடைக்கலமாகிறாள். சித்தப்பா சிறிது காலம் அவளுக்கு ஆதரவளித்து மீண்டும் அவளை அவளின் தந்தையிடம் ஒப்படைக்கிறார். கால் சூம்பிய ரங்கண்ணனிடம் செல்லம்மிணியை சேர்ப்பித்துவிட்டு அவரும் மரணிக்கிறார். தன்னை சிதைத்த பாத்திரக்காரனை அவள் மீண்டும் சந்திக்க நேர்கிறது. அவன் அவளை மீண்டும் žண்டுகிறான். குழப்பத்தினூடாக உள்ளூர் வக்கீல் ஒருவரிடம் வேலைக்குச் செல்கிறாள். கல்வியறிவில்லாத பலருக்கு கடிதம் எழுதிக்கொடுத்து மனநிறைவடைகிறாள். இதற்கிடையில் நாகாலாந்திலிருந்து திரும்பும் செல்வன் மல்லிகா என்பவளைத் திருமணம் செய்துகொண்டு உள்ளூரில் தமிழ்வழிக்கல்விப் பாடசாலை தொடங்கி நடத்துகிறான்.


இந்த நெடுங்கதையினூடாக மேரி என்னும் பாவப்பட்டவளின் கிளைக்கதையும், செகந்திராபாத் ஜுலியின் கதையும் நாவலில் இடம்பெறுகின்றது. செல்லம்மிணி என்னும் குணசித்திரத்தின் வாயிலாக அல்லலுறும் பெண்ணின் ஆன்மாவை வாசகர்களுக்கு தரிசிக்கத் தருகிறார் சுப்ரபாரதிமணியன். நம் தேசத்து புறக்கணிக்கப்பட்ட பெண்களின் ஒட்டுமொத்தப் பிம்பம்தான் செல்லம்மிணி. வல்லரசு ஆகப்போகும் தருணத்திலும் ஊருக்கு ஊர் கிராமத்துக்கு கிராமம் செல்லம்மிணிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர் என்பதும் வன்முறைக்குள்ளாகின்றனர் என்பதும் கசப்பான நிஜமாகி நம்மை கலவரப்படுத்துகின்றது.


சுப்ரபாரதிமணியனின் முந்தைய படைப்புகளிலிருந்தும் " ஓடும்நதி "மாறுபட்டு வேறுவேறு திசைகளில் பரவிப் பாய்ந்து செல்கிறது. பல நேரங்களில் ஒரு தேசாந்திரியின் பயணக்குறிப்புகளைப் போலவும் சில நேரங்களில் ஒரு துயர நாடகத்தைப் போன்றும் பிறிதொரு சமயத்தில் ஒரு பேரிலக்கியத்தின் நுண்ணிய கூறுகளுடனும் "ஓடும்நதி"கண்ணாமூச்சி காட்டுகிறது. கதைச் சம்பவங்கள் நாகாலாந்து, செகந்திராபாத், திருப்பூர் என ஸ்தலங்கள் மாறி நிகழ்ந்து ஓய்கின்றன. நாகாலாந்த், கவுஹாத்தி, அசாம் மலைப்பகுதி நிலக்காட்சிகள், அம்மக்களின் வாழ்வியல் அம்சங்கள் மிகுந்த சிரத்தையுடன் ஆசிரியரால் அவதானிப்புக்குள்ளாகியுள்ளன.


காட்டெருமையை வேட்டையாடி அதன் தலையைக் கொய்து வருபவரை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்ளுதல், புராதன கட்டிடமொன்றில் இளைஞர்களும் இளம் பெண்களும் தங்கி விரும்புகிறவர்களுடன் தங்கு தடையற்ற பாலுறவு கொள்ளுதல், மரணைத்தவரின் உடலைப் புடைக்காமல் எரியும் அடுப்புக்கு மேலே கட்டித் தொங்கவிட்டு அது வெந்து வடியும் நிணத்தை உடம்பில் பூசிக்கொள்வது என்று மலைவாழ் மக்களின் வினோத சடங்குகள் நம்பிக்கைகள் நாவலாசிரியரால் நுட்பமாக விவரிக்கப்படும் பொழுது அதிர்வும் பீதியுமான வாசக அனுபவத்துக்குள்ளாக முடிகிறது. " ஓடும்நதி " சுப்ரபாரதிமணியனின் பெரும் பயணத்துக்கான வெள்ளோட்டம்.



ஒடும் நதி (நாவல்)

சுப்ரபாரதிமணியன்

விலை-150/- வெளியீடு: அம்ருதா

பக்கம் - 336. எண்.5. 5வது தெரு,

எஸ்.எஸ்.அவென்யூ, சக்தி நகர்,போரூர்,

சென்னை-11

======================================================================

இலக்கியப் போட்டி 2008

அறிவிப்பு
---------


தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும்

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும்

இணைந்து நடத்திய இலக்கியப் போட்டி 2008

=======================================================

வென்றோர்கள்

===========

சென்ற ஆண்டில் வெளிவந்த நூல்களுக்குப் பரிசுகள்:


நவீனம்

சுப்ரபாரதிமணியன் (ஓடும் நதி)
******************************

சிறுகதை

மதுரா (போதி மரக்காடு)


கவிதை நூல்

நட. சிவ குமார் (வெட்டி முறிப்புக்களம்)

மயூரா ரத்தினசாமி (நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தைகள்)


நாடக நூல்

பி.சி. சண்முகம் (உங்களால் உலகம்)

கே. எஸ். ரமணா (காற்றிலே கலந்து வந்த நாடகங்கள்)


கட்டுரை நூல்

சேதுபதி (சொற்பொழிவாளர் பாரதி)

தி.மா. சரவணன் (சிறுவர் இதழ்கள்)


சிறப்புப் பரிசுகள்:

--------------------

கலாநிதி பேராசிரியர் நா. வானமாமலை நினைவுப் பரிசு (ஆய்வு நூலுக்கு)

முனைவர் இரா. காமராசு (பேரா. நா. வானமாமலை ஆராய்ச்சித் தடம்)

முனைவர் ஆ. செல்லபெருமாள் (நவீனப் பண்பாட்டு மானிடவியல்)


தொ.மு.சி. ரகுநாதன் நினைவுப்பரிசு (மொழிபெயர்ப்பு நூலுக்கு)

எஸ்.பி. இராமகிருஷ்ணன்(மலையாளக்கதைகள்)


அழகியநாயகி அம்மாள் நினைவுப் பரிசு (சிறுகதை நூல்)

வாய்மை நாதன் (நாலி)


எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி நினைவுப்பரிசு (சிறுகதை நூல்)

இலா. வின்சென்ட் (மீண்டெழுதல் கதைகள்)



இரவீந்திரபாரதி பொன்னீலன் ஆர்.இராதாகிருஷ்ணமூர்த்தி

பொதுச்செயலாளர் தலைவர் நிர்வாக மேலாளர் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம்

======================================================================

செய்தி; செந்தீ நடராசன் மாநில இலக்கிய குழு செயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், 36/122 கல்படித்தெரு, நாகர்கோவில் 629001

9442138856

======================================================================

=issundarakannan7@gmail.com

வல்லரசுக் கனவுகளும் அல்லலுறும் பெண்களும்:





சுப்ரபாரதிமணியனின் " ஓடும்நதி " படைப்புலகம்


கீரனூர் ஜாகிர்ராஜா
-----------------



தமிழ்ப் புதினங்கள் இன்றைய நிலை ஆரோக்கியமானதாகவும் நம்பிக்கையளிக்கக் கூடிய விதத்திலும் இருக்கிறது. வெவ்வேறு இலக்குகளில் சுற்றிச்சுழன்று மானுட வாழ்வின் சகல கூறுகளையும் அவதானித்து வாசகனுக்கு ஒரு பரந்த அனுபவப் பரப்பினை அவை தரிசிக்க வைக்கின்றன. சமகாலப் படைப்பாளிகள் பலரும் தொடர்ச்சியாக எழுத தமிழ்ப் புதினப் பாதையை žராக்கித் தந்துள்ளனர்.


சுப்ரபாரதிமணியன் திருப்பூரை வாழ்விடமாகக் கொண்டு தமிழ்ச்சூழலில் தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 1970-களில் சுகாதாரமான பூமியாக இருந்த திருப்பூர் நகரில் பனியன் கம்பெனிகள் துளிக்கத் தொடங்கியபோது அடித்தள மக்களின் வாழ்க்கைப் போராட்டத்துக்கு ஓரளவு தீர்வு கிடைத்தது. ஒன்றிரண்டாகப் பெருகிய கம்பெனிகள் ஒரு கட்டத்தில் திகைப்புக்குரிய அளவில் வளர்ச்சியுற்று நகரத்தையே வசப்படுத்திவிட்டன. விவசாயம் அழிந்தது. விளைநிலங்கள் வணிக வளாகங்களாயின. நொய்யலாறு கழிவுகளின் பிறப்பிடமாயிற்று. தமிழகத்தின் மூலை முடுக்குகளிலிருந்தும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் திருப்பூருக்கு புலம் பெயர்ந்தனர். இவர்களுடன் வெளிமாநிலத்தவர்களும் இணைந்தனர். இடநெருக்கடி, குடிநீர்ப் பஞ்சம், சுற்றுச்சூழல் மாசுகள் அதிகரித்தன. திருப்பூர் நகரம் திக்கித் திணறிற்று. கம்பெனிகளோ சிப்டுகளை அதிகப்படுத்தின. தாலி கிடைத்துவிடுமெனும் நம்பிக்கையில் பனியன் கம்பெனியின் கொட்டடிகளில் இளம்பெண்கள் சுமங்கலித்திட்டம் என்ற வருடாந்திர ஒப்பந்தங்களின் பெயரில் அடிமைப்பட்டனர். சமூக அக்கறையாளர்கள், தன்னார்வலர்கள், இலக்கியவாதிகள் இதன்மேல் விமர்சனங்களை வைக்கத் தொடங்கினர். சுப்ரபாரதிமணியன் இவர்களுக்கிடையில் தன் குரலை தொடர்ந்து ஒலிக்கச் செய்து கொண்டிருப்பவர்.


சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த இவரின் " தேநீர் இடைவேளை " என்னும் நாவல் திருப்பூர் நகரத்தின் பிரச்சனகளையும், கோவை மாவட்டத்தின் தொழிற்சங்க வரலாறையும் வாசகர்களுக்கு நெருக்கமாக அறிமுகம் செய்த படைப்பு. அந்நாவல் முழுவதும் கடிதங்களே இடம் பெற்றிருந்தன. " ஓடும்நதி" என்னும் இந்நாவலிலும் கடித உத்தியை பயன்படுத்தி நாவலின் ஒரு பகுதியை நகர்த்துகிறார் சுப்ரபாரதிமணியன்.


செல்வன்- செல்லம்மிணி இருவரின் நட்பு கடிதங்களின் வழியே விரிகிறது. செல்லம்மிணி தன் தந்தையுடன் கொங்குமண்டலத்தின் உள்ளொடுங்கிய கவுண்டர் இனத்தின் ஆதிக்கப் போக்குமிக்கதொரு கிராமத்தில் வசிக்கிறாள். தண்­ர் பிரச்சனை, காமுகர்களின் வெறியாட்டம் இவர்களை கம்பெனிக்கு கொண்டுவந்து சேர்க்கிறது. பவர்லூம் கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறாள் செல்லம்மிணி. தலைக்கு குளித்த ஜந்தாம் நாள் அயர்ந்துறங்கும் வேளையில் பழைய பாத்திரக்காரனால் பலாத்காரத்துக்குள்ளாகிறாள். மீண்டும் கம்பெனி வேலைக்கு செல்கையில் செல்வனை சந்திக்கிறாள். கம்பெனியில் சொக்கன் என்பவனுடன் நெருங்கிப் பழகி செகந்திராபாதுக்கு அவனுடன் சென்று மூன்று மாதகாலம் சேர்ந்து வாழ்கிறாள். சொக்கன் பிரிகிறான். அப்பாவின் முகத்தில் விழிக்க சங்கடப்பட்டு சித்தப்பாவிடம் அடைக்கலமாகிறாள். சித்தப்பா சிறிது காலம் அவளுக்கு ஆதரவளித்து மீண்டும் அவளை அவளின் தந்தையிடம் ஒப்படைக்கிறார். கால் சூம்பிய ரங்கண்ணனிடம் செல்லம்மிணியை சேர்ப்பித்துவிட்டு அவரும் மரணிக்கிறார். தன்னை சிதைத்த பாத்திரக்காரனை அவள் மீண்டும் சந்திக்க நேர்கிறது. அவன் அவளை மீண்டும் žண்டுகிறான். குழப்பத்தினூடாக உள்ளூர் வக்கீல் ஒருவரிடம் வேலைக்குச் செல்கிறாள். கல்வியறிவில்லாத பலருக்கு கடிதம் எழுதிக்கொடுத்து மனநிறைவடைகிறாள். இதற்கிடையில் நாகாலாந்திலிருந்து திரும்பும் செல்வன் மல்லிகா என்பவளைத் திருமணம் செய்துகொண்டு உள்ளூரில் தமிழ்வழிக்கல்விப் பாடசாலை தொடங்கி நடத்துகிறான்.


இந்த நெடுங்கதையினூடாக மேரி என்னும் பாவப்பட்டவளின் கிளைக்கதையும், செகந்திராபாத் ஜுலியின் கதையும் நாவலில் இடம்பெறுகின்றது. செல்லம்மிணி என்னும் குணசித்திரத்தின் வாயிலாக அல்லலுறும் பெண்ணின் ஆன்மாவை வாசகர்களுக்கு தரிசிக்கத் தருகிறார் சுப்ரபாரதிமணியன். நம் தேசத்து புறக்கணிக்கப்பட்ட பெண்களின் ஒட்டுமொத்தப் பிம்பம்தான் செல்லம்மிணி. வல்லரசு ஆகப்போகும் தருணத்திலும் ஊருக்கு ஊர் கிராமத்துக்கு கிராமம் செல்லம்மிணிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர் என்பதும் வன்முறைக்குள்ளாகின்றனர் என்பதும் கசப்பான நிஜமாகி நம்மை கலவரப்படுத்துகின்றது.


சுப்ரபாரதிமணியனின் முந்தைய படைப்புகளிலிருந்தும் " ஓடும்நதி "மாறுபட்டு வேறுவேறு திசைகளில் பரவிப் பாய்ந்து செல்கிறது. பல நேரங்களில் ஒரு தேசாந்திரியின் பயணக்குறிப்புகளைப் போலவும் சில நேரங்களில் ஒரு துயர நாடகத்தைப் போன்றும் பிறிதொரு சமயத்தில் ஒரு பேரிலக்கியத்தின் நுண்ணிய கூறுகளுடனும் "ஓடும்நதி"கண்ணாமூச்சி காட்டுகிறது. கதைச் சம்பவங்கள் நாகாலாந்து, செகந்திராபாத், திருப்பூர் என ஸ்தலங்கள் மாறி நிகழ்ந்து ஓய்கின்றன. நாகாலாந்த், கவுஹாத்தி, அசாம் மலைப்பகுதி நிலக்காட்சிகள், அம்மக்களின் வாழ்வியல் அம்சங்கள் மிகுந்த சிரத்தையுடன் ஆசிரியரால் அவதானிப்புக்குள்ளாகியுள்ளன.


காட்டெருமையை வேட்டையாடி அதன் தலையைக் கொய்து வருபவரை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்ளுதல், புராதன கட்டிடமொன்றில் இளைஞர்களும் இளம் பெண்களும் தங்கி விரும்புகிறவர்களுடன் தங்கு தடையற்ற பாலுறவு கொள்ளுதல், மரணைத்தவரின் உடலைப் புடைக்காமல் எரியும் அடுப்புக்கு மேலே கட்டித் தொங்கவிட்டு அது வெந்து வடியும் நிணத்தை உடம்பில் பூசிக்கொள்வது என்று மலைவாழ் மக்களின் வினோத சடங்குகள் நம்பிக்கைகள் நாவலாசிரியரால் நுட்பமாக விவரிக்கப்படும் பொழுது அதிர்வும் பீதியுமான வாசக அனுபவத்துக்குள்ளாக முடிகிறது. " ஓடும்நதி " சுப்ரபாரதிமணியனின் பெரும் பயணத்துக்கான வெள்ளோட்டம்.



ஒடும் நதி (நாவல்)

சுப்ரபாரதிமணியன்

விலை-150/- வெளியீடு: அம்ருதா

பக்கம் - 336. எண்.5. 5வது தெரு,

எஸ்.எஸ்.அவென்யூ, சக்தி நகர்,போரூர்,

சென்னை-11




திங்கள், 17 நவம்பர், 2008

"சோத்துப்பொட்டலம்"

சுப்ரபாரதி மணியனின் குறும்படம் "சோத்துப்பொட்டலம்"

புதன், 12 நவம்பர், 2008

இடம்பெயரும் மக்களைப் பற்றிய திரைபடங்கள்

இடம்பெயரும் மக்களைப் பற்றிய
திரைபடங்கள்

வெள்ளி, 7 நவம்பர், 2008

பேரறிஞர் பெருந்தகை அண்ணா நூற்றாண்ண்டு விழா இலக்கிய பரிசுகள் -2008


திருப்பூர் மாநகர திராவிட முன்னேற்றக் கழகம்
திருப்பூர் கலை இலக்கிய பேரவை
இணைந்து வழங்கும்

பேரறிஞர் பெருந்தகை அண்ணா நூற்றாண்ண்டு விழா இலக்கிய பரிசுகள் -2008

வியாழன், 23 அக்டோபர், 2008

கலைஞர் டிவி

20/10/2008 அன்று கலைஞர் டிவி யில்
கால 8 மணிக்கு "சந்தித்த வேளை "
நிக‌ழ்ச்சியில் பங்கேற்றுக்கொண்டு
த‌ன்னுடைய‌ எழுத்து ப‌ய‌ண‌ம் ப‌ற்றியும்
த‌ன்னோடு ப‌ய‌ணித்த‌வ‌ர்க‌ள் ப‌ற்றியும்
தெளிவாக‌ ம‌டைதிற‌ந்த‌ வெள்ள‌மென‌
இல‌க்கிய‌ச்சுவை ஊட்டினார் என்றால்
அது மிகைய‌ல்ல‌!

சனி, 18 அக்டோபர், 2008

மணல் வீடு நாடகநூல்

மணல் வீடுகள் நாடக நூல்

மணல் வீடு : சுப்ரபாரதிமணியனின் நாடக நூல்

- எஸ் எ பாலகிருஸ்ணன் -

நடித்தலும், நவீனமும்

சுப்ரபாரதிமணியனின் முப்பது புத்தகங்களில் ஒன்று நாடக நூல் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுகதை, நாவல் , கட்டுரை என்று எல்லாத்தளங்களிலும் தடம் பதித்திருக்கிறார். தமிழில் நாடக நூல்கள் வெகு குறைவு. எழுத்தாளர்களும் ஆர்வம் காட்டுவதில்லை.தி ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, பி.எஸ். இராமையா, ஜெயந்தன், பிரபஞ்சன், இன்குலாப் போன்ற எழுத்தாளர்கள் சில நாடகங்களை எழுதியிருக்கிறார்கள். மற்றபடி நவீன நாடகங்களை நாடகக்காரர்களே படைத்துக் கொள்கிறார்கள். நவீன நாடகங்கள் உருவானபிறகு எழுத்தாளர்கள் நாடகத்துறையைத் திரும்பிப்பார்ப்பதில்லை. அவைகளும் மக்களை நெருங்குவதில்லை.

கோமல் சுவாமிநானின் சட்டகவடிவ நாடகங்கள் மக்களின் போராட்டங்களைச் சித்தரித்தன. அதனால் மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. கோமலுக்குப்பின் சில நல்ல நாடகங்களை தஞ்சை ராமசாமி உருவாக்கி வெற்றி பெற்றார். அமைப்புகள் பின்னணி இல்லாததால் மக்களை அதிகம் சென்றடையவில்லை.

நாடகங்கள்தான் இடதுசாரி கட்சிகள் கேரளத்தில் ஆட்சிக்கு வர முக்கியப் பங்காற்றின.தமிழகத்தில் சுதந்திரப்போராட்டகாலத்தில்
நாடகங்கள் மக்களிடையே சுதந்திர உணர்வையூட்டின, அதன்பின் திராவிட இயக்கங்கள் நாடகங்களிலும், திரைப்படங்களிலும் பெற்ற
பலன் நாடறியும்.

பிரிட்டிசு அரசாங்கம் நாடகங்களுக்கு விதித்த சட்டத்தை இன்றைக்கும் நமது அரசுகள் கவனமாகப் பாதுகாக்கின்றன.
"மணல் வீடு" தொகுப்பில் மூன்று நாடகங்கள் உள்ளன.இவை வானொலிநாடகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாடகத்தில் ( மணல் வீடு ) மூன்று தலைமுறைகள் இடம் பெறுகின்றன. முதலிரண்டு தலைமுறைகள் முந்தையத் தலைமுறைகள் குறித்து பற்றும் மதிப்பும் மூதாதியாருக்கான சடங்கு முறைகளில் ஈடுபாடும் கொண்டுள்ளன. இன்றைய தலைமுறையின் பொறுப்பு, அல்லது பொறுப்பற்றத்தன்மை குறித்து கவலையும் விரத்தியும் அடைகின்றனர். ஆயினும் அவரவர் வாழ்க்கையை அலுப்பும் சலிப்புமாய் சுமப்பதைவிட அனுபவித்து தீர்ப்பதே நன்றென உணர்கின்றனர். இது முழுமையாக வாசிப்பிற்கான நாடகமாக இருப்பினும் இது வானொலி வடிவம் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

"பசுமை எனும் தாய்மை" எனும் நாடகம் பிரசாரத்தன்மை வாய்ந்த நடிப்பதற்கான நாடகம்.சுற்றுச்சூழல் குறித்தது. திருப்பூர் பனியன் தொழில் காரணமாக அதன் சாயக் கழிவுகளால் மாசுபட்ட வரலாற்றுப் புகழ் பெற்ற " காஞ்சிமாநதி " யெனும் நொய்யல் நதிகரையில் வாழும் ஒரு கிராம மக்களின் எழுச்சியை விவரிக்கிறது. மக்கள் இயக்கம் என்றும் முதன்மையான து என்பதை பிரச்சாரத்தொனியில்தான் சொல்ல முடியும்.

"முளைப்பாரி" எனும் மூன்றாவது நாடகம் மத நல்லிணக்கம் பற்றிப் பேசுகிறது. இந்துக்களும், இசுலாமியரும் காலம் காலமாய்
அனுசரித்துதான் வாழ்ந்து வருகிரார்கள். அவர்களின் ஒர்றுமை திட்டமிடப்பட்டு குலைக்கப்படுகிறது. ஆனாலும் அந்த கிராம மக்கள் தங்களுக்குள் இருக்கும் அர்த்தமற்ற பயத்தை உதறிவிட்டு திருவிழாவில் ஒன்றுபடுகிரார்கள். திருவிழாவில் வீசப்பட்ட கல் யாரால் வீசப்பட்டது என்பது சுசகமாக விவரிக்கப்படுகிறது. அந்த தீய சக்திகள் யார் என்பதினை நாடகமாக நடிக்கப்பட்டால் மக்களும் புரிந்து கொள்வார்கள். இதுவும் ஒரு நவீன அம்சம்தான்.

(மணல் வீடு= சுப்ரபாரதிமணியனின் நாடகங்கள்: விலை ரூ 30/ .
கௌதமராஜன் வெளியீடு. 24, பாட்டை வீதி; மீனாட்சிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி 607 302 )

எஸ் எ பாலகிருஸ்ணன்.

செவ்வாய், 14 அக்டோபர், 2008

வின்சென்டின் அனுபவக் குதிர்

Thursday October 9, 2008


வின்சென்டின் அனுபவக் குதிர்


=----------- சுப்ரபாரதிமணியன் --------------



உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது என்கிறார்கள். ஆனால் நமது அனுபவங்கள், வாக்கையின் தினப்படி நடவடிக்கைகள் என எல்லாமே சுருங்கி விட்டன. செக்கு மாட்டு அனுபவங்கள். வெறுமையும் அலுப்பும் மேலும் மேலும் நம்மை பிடித்து அழுத்தும் நிர்பந்தங்கள். நமது அனுபவங்களோடு எவ்வித சம்பந்தமும் இல்லாதபடி பிற ஊடகங்களும் நம்மை அன்னியமாக்கியிருக்கின்றன.


இந்த சூழலில் பிற அனுபவங்களையும் தன் அனுபவம் போல் வரித்துக் கொண்டு எழுதுபவர்களே நிறைய எழுத முடியும். பிறரின் அனுபவங்களையும் எழுத்தில் பகிர்ந்து கொள்ள முடியும். சாதாரண வாழ்க்கையில் நாம் சந்தித்திருந்தாலும் அவர்களோடு அளவளாவுதல் மூலம் உறவாட முடியும்.


இந்த பாக்யம் இலா.வின்சென்ட்டிற்கு வாய்த்திருக்கிறது. வெவ்வேறு வகையான மனிதர்கள்,கதாபாத்திரங்கள் மூலம் இக்கதையில் பல அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். சொந்த அனுபவம் சார்ந்த விடயங்களை மட்டுமே எழுதுவேன் என்று வெறுமையை திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் வெவ்வேறு வகையான களனும், அனுபவங்களின் உள்வாங்கலும் வின்சென்டிற்கு வாய்த்திருப்பது அபூர்வமானது. இந்த அனுபவங்களை அவர் žரான குரலில் வெளிப்படுத்துகிறார். இயல்பான வெளிப்பாட்டு மொழியும், முறையும் வாசகர்களை சுலபமாக நகரச் செய்யும்.


ஒவ்வொரு கதையும் வெவ்வேறு களங்களில். இப்படி ஒவ்வொரு படைப்பிற்கும் வெவ்வேறு அனுபவங்களைக் கொண்டு எழுத முயல்வது சாதாரணமானதல்ல. ஜல்லிக்கட்டு சூழல், ரவிக்கைபோட முடியாத கலாச்சார சிக்கல், நாத்திகவாதியின் சபலம், கிறிஸ்துவ குடும்பங்களின் பின்னணி, பனையேறும் வாழ்க்கையினர், முஸ்லீம்களின் கலாச்சார நெருக்கடிகள், சாவு வேலை வாய்ப்பை தரும் என்ற நெருடல், கொத்தடிமைகளாய் நெசவாளர்கள், மருமகளை தன் கொடுமை மகனிடமிருந்து விடுவிக்க ஆசைப்படும் முடமான அத்தை, ஆதி திராவிடர்களும் தர்மகர்தாக்களும் மோதும் தெலுங்கு மொழிப் பின்னணியிலான சிக்கல்கள், ஓரின பாலுறவாலர்களின் திருமண விரிசல் என விரிந்து கொண்டே போகின்றன.


"போராட்டம் பல கண்களாய் முளைத்து விளித்தன" எனும் வின்சென்ட்டின் வார்த்தைகள் பலரை போராட்டக் களத்திற்கு தள்ளும் சில மாதிரி கதாபாத்திரங்களை லட்சிய வேகத்துடன் படைத்திருக்கிறார். நாத்திகவாதியாக இருந்து வாழ்ந்து முடிக்கப் போகிறவர் வளர்ந்துவிட்ட குடும்ப நபர்களிடம் தொடர்ந்து போராடவே வேணியிருக்கிறது. அமலா போராடி வெற்றி பெறுவது சாதாரணமல்ல.பனையேறும் மக்களின் பிரச்சனைகளோடு போராட்ட உணர்வும் வலுப்பெறுகிறது. இந்த உணர்வுதான் கொத்தடிமையிலிருந்தும், பாலியல் அடக்குமுறையிலிருந்தும் விடுபட நெசவாளர்களை உந்துகிறது. சிறுநீர் கிட்னியைக் கூட தானம் செய்ய முனைகிறது. ஜாதீய இறுக்கங்களின் மத்தியில் உள் ஒதுக்கீட்டுப் பிரிவுகளின் மோதல் குரூரமாய் முன் வைக்கப்படுகிறது. பாலியல் சுதந்திரம் கோரி வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்கள் தங்களின் கருத்துக்களை மீறி வாழ்க்கையைப் பார்க்கிறார்கள்.


வாழ்க்கையின் துயரங்களுக்கு மத்தியிலும் சின்னச் சின்ன சந்தோஷங்களை தேடி அடைகிறார்கள். பாலியல் அனுபவங்களை விவரிக்கும் போக்கிலும் தன்மையிலும் நேர்ந்த நுணுக்கங்கள் வெளிப்படுகின்றன. இன்ப ரகசியங்களாய் அவை வழிந்து உரைநடையை மினுங்கச் செய்கின்றன.


விளிம்புநிலை மக்களின் அனுபவங்களைச் சார்ந்தே வின்சென்ட் இயங்குகிறார். அவர்களின் சார்பாக குரல் கொடுக்கும் தொனியை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அந்தக் குரலோ, தொனியோ உரக்க அமைய வேண்டியதில்லை என்பதையும் அறிந்திருக்கிறார். கருத்துக்களின் மோதலின் களமாய் சில சிறுகதைகளையும் முன் வைக்கிறார். அவற்றை உரையாடல் தன்மையில் வைக்கும் போது பிசிறு தட்டுவதில்லை. அவை விவாதத்திற்குரிய கருத்துக்களாகவும் மாறி விடுகின்றன. இந்த வகை விவாதங்களை உருவாக்குவது படைப்பின் வெற்றியாகக் கூட கொள்ளலாம். முஸ்லீம் மக்கள் வாழ்க்கையோ, தலித் மக்களின் உள் பிரச்சனைகளோ, கிறிஸ்துவ அனுபவங்களோ, தெலுங்கு குடும்ப சூழலோ வெளிப்படுத்தும் போது அந்தந்த சூழலும் மொழியும் சார்ந்து மாறுவதும் நுணுக்கமாவதும் உவரின் தேர்ந்த பார்வையைக் காட்டுகிறது. அவற்றில் பயன்படுத்தப்படும் மொழி மென்மையானதாகவும், பொதுவானதாகவும் இல்லாமல் நுணுக்கத் தனித் தன்மையுடன் விளங்குவது சிறப்பியல்பாகக் கொள்ளலாம்.


அய்யம்மாள் ஆஸ்த்துமா தொல்லையில் அவதியுறுவதைப் பற்றி ஒரு கதையில் வரும் சித்தரிப்பு வெகு நுணுக்கமானது. அந்த மூச்சுத் திணறலை நாமும் அனுபவிக்கிறோம். அதை விட்டு விடுபடுவதற்குள் நமக்கும் மூச்சுத் திணறலாகி விடுகிறது. இவ்வகைத் திணறலைத்தான் பல கதைகளில் அந்த மனிதர்களின் சிக்கலோடு ஒப்பிட்டு பார்க்க முடியும். அந்தத் திணறலை உணர வைப்பது இக்கதைகளின் வெற்றியாக இருக்கிறது. இந்த வெற்றியை அடைவதற்கு நுணுக்கமானப் பார்வையும், பகிர்ந்து கொள்ளும் மொழி லாவகமும் வாழ்க்கை குறித்த தரிசனமும் அவசியம். இந்த அவசியத்தை படிக்கிற வாசகனும் உணரச் செய்கிறார். நவீன சிறுகதைகளில் சிலருக்குப் பிடித்தமான குறுகிய கால களன், வெறுமையை விவரித்தல் என்பதைத் தவிர்த்து, விரிந்த தொனியில் கதை சொல்லுவது என்ற பழைய பாணி சில இடங்களில் மிகையாக உறுத்தவே செய்கிறது. கதையை குறுகிய கால அளவிலிருந்து நெடுங்காலத்திற்குக் கடத்திச் செல்கிறது.


கலைடாஸ்கோப்பின் பலவர்ணங்களின் ஜாலத்தைப் போல பலவகை மனிதர்களின் நுணுக்கமான அனுபவங்களால் தன்னை நிறைத்துக் கொண்டிருக்கிறார் வின்சென்ட். இந்த அனுபவக் களனில் அவர் புரண்டெழுந்ததில் இது ஒரு பகுதிதான். இன்னும் கொட்டித் தீர்க்க வனுபவங்கள் குவிந்து கிடக்கிற மனித பிம்பம் அவர்.



- சுப்ரபாரதிமணியன்



மீண்டெழுதல்: இலா வின்செண்டின் சிறுகதைகள்: வெளியீடு: அமிருதா பதிப்பகம், சென்னை ரூ 80/-




Copyright:thinnai.com 

செவ்வாய், 7 அக்டோபர், 2008

திங்கள், 6 அக்டோபர், 2008

எழுத்தாளர் களுக்கு கலை, இலக்கிய பெருமன்றம் விருது

செய்தி :தினமணி(திருச்சி)

சனி, 4 அக்டோபர், 2008

செவ்வாய், 30 செப்டம்பர், 2008

தமிழ்மாமணி விருது பெறும் திருப்பூர் மாமணிகள்












தமிழ்மாமணி விருது பெறும் திருப்பூர் மாமணிகள்

திங்கள், 29 செப்டம்பர், 2008

இலக்கியப் போட்டி 2008

Thursday September 18, 2008

அறிவிப்பு
============


தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும்

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும்

இணைந்து நடத்திய இலக்கியப் போட்டி 2008

=======================================================

வென்றோர்கள்

===========

சென்ற ஆண்டில் வெளிவந்த நூல்களுக்குப் பரிசுகள்:


நவீனம்

சுப்ரபாரதிமணியன் (ஓடும் நதி)


சிறுகதை

மதுரா (போதி மரக்காடு)


கவிதை நூல்

நட. சிவ குமார் (வெட்டி முறிப்புக்களம்)

மயூரா ரத்தினசாமி (நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தைகள்)


நாடக நூல்

பி.சி. சண்முகம் (உங்களால் உலகம்)

கே. எஸ். ரமணா (காற்றிலே கலந்து வந்த நாடகங்கள்)


கட்டுரை நூல்

சேதுபதி (சொற்பொழிவாளர் பாரதி)

தி.மா. சரவணன் (சிறுவர் இதழ்கள்)


சிறப்புப் பரிசுகள்:

--------------------

கலாநிதி பேராசிரியர் நா. வானமாமலை நினைவுப் பரிசு (ஆய்வு நூலுக்கு)

முனைவர் இரா. காமராசு (பேரா. நா. வானமாமலை ஆராய்ச்சித் தடம்)

முனைவர் ஆ. செல்லபெருமாள் (நவீனப் பண்பாட்டு மானிடவியல்)


தொ.மு.சி. ரகுநாதன் நினைவுப்பரிசு (மொழிபெயர்ப்பு நூலுக்கு)

எஸ்.பி. இராமகிருஷ்ணன்(மலையாளக்கதைகள்)


அழகியநாயகி அம்மாள் நினைவுப் பரிசு (சிறுகதை நூல்)

வாய்மை நாதன் (நாலி)


எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி நினைவுப்பரிசு (சிறுகதை நூல்)

இலா. வின்சென்ட் (மீண்டெழுதல் கதைகள்)



இரவீந்திரபாரதி பொன்னீலன் ஆர்.இராதாகிருஷ்ணமூர்த்தி

பொதுச்செயலாளர் தலைவர் நிர்வாக மேலாளர் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம்

======================================================================

செய்தி; செந்தீ நடராசன் மாநில இலக்கிய குழு செயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், 36/122 கல்படித்தெரு, நாகர்கோவில் 629001

9442138856

======================================================================

=issundarakannan7@gmail.com

======================================================================




Copyright:thinnai.com 

சனி, 6 செப்டம்பர், 2008

"ஓலைக்கீற்று" நூல் வெளீயீட்டுவிழா!

நன்றி : தினமலர்

Transcreating a tamil novel Chayathirai:

Transcreating a tamil novel Chayathirai: TRANSLATED AS THE COLOURED CURTAIN by P.Raja

BY D.GNANASEKARAN
-------------------

Translation plays an important role in appreciating different modes of thought and different life styles while providing a fresh view of oneness, unity and commonality. Nanoam chomsky's remark that "Translation is like squaring a circle and circling a square" smacks of a bit jovality. But we are unable to take it with a grain of salt if we understand the statement in its proper perspective. there is no gainsaying the statament that translation has always been an adjunct of creating writing itself. Translation is a compromise, the effort to be literal and the effort to be idiomatic. what is generally understood as a translation involves the rendering of a Source Language Text(SL) into the Target Language Text (TL) so as to ensure that the surface meaning of the two will be approzimately similar and the structures will be seriously distorted. Translation measures the linguistic competence of the translator by means of the TL product.

The work under study The Coloured curtain renders itself as a touchstone to assess P.Raja as a translator. It was originally written in tamil by Subrabharathimanian under the title Chayathirai (published by B.Rr.. publishing corporation, Delhi and priced at Rs.200). The novelist has published 200 short stories, fifiteen short story collections and one travelogue. His stories have been translated into Indian regional languages and into the European languages like English and Hungarian. He has been the editor of the Tamil quaterly, Kanavu, since 1987. The translator is a freelancer, well-anthologised poet, novelist, shortstory writer and the critic. He has already translated several books from Tamil into English and proved himself component enough in the art of translation.

The main idea of translating a work from Tamil into English is reaching out to the global audience. We know that translation is neither a creative art nor an imitative art but stands somewhere between the two. From all our considerations of this art, the fact emerges that the individual translator can translate one work only in one way, and that his best way is always a tension between the original and the new idiom of the translator. P.Raja appears to have experienced, nor can never be eliminated, nor can the tension between closeness and naturalness, between form and meaning, between poetry and prose. These things represent divergent ideals, but in translation they have to bo reconciled for translation is a matter of compromise. The translator has to be faithful to the original in rendering its intensity, poignancy and imagery, usually circumscribed by a certain cultural ethos. It is maintained that faithfulness should be adhered to in the process of transtlating, but " faithfulness" in the field of translation does not always mean "the same thing" .of the qualities needed by a translator many authorities feel that a translator must be a master of two languages. The knowledge of the foreign language must be critical and of his own must be practical. The translator like the critic and scholar must be a reader. The ideal transtor must be the ideal reader, a rare breed, P.Raja can claim to belong to this rare breed. The fact that he has already made a mark in Tamil creative writing proves that he is at home with both the languages, Tamil and English. This bilingual proficiency has sharpened his technical skills, of course. governed by his fertile imagination. He could with ease grasp the adroitness of comparative arrangement of linguistic elements between the SL and the TL text with regard to phenemic, morphemic, lexical, syntactic, semantic and discourse levels. Since he himself shares tha cultural ethos depicted in the original by being a Tamilian, he handles the idiomatic problems without distorting the spirit of Tamil idioms and usages.

Coming to the context of the Tamil novel Chayathirai , one can confidently say that it is one of the significent novels in Tirupur pleasently covered with a coloured curtain. The novel is a curtain raiser on the plight of the suffering dyeing community attached to the textile industry in Tirupur. it presents a series of contrasts between illusion and reality, life and death, the beautiful and the external internal and so on. The novelist successfully brings the various human attributes under close scrutiny and the narration is realistic and poignant. The charaters are not larger than life. They share the virtues and the vices that a commoner normally undergoes. in addition, the novel broadens its scope to study the socio-economic travais of the weavers who are torn between life and death. in fact, the socio-economic dimension appears to be more significant than the moralistic outlook. One can't help think of the existentialist philosophy while digesting the narrative technique employed by the novelist from the beginning to end.Faithfulness should be the basic principle for a translator. P.Raja has tried to do justice to the task in hand and his sucess lies in his reasonable adherence to the fidelity of the original. Translation of the same book by different translators is bound to face a few variations as is seen in the cse of translations of great works. What strikes the reader in the case of translations of great works. What strikes the reader in P.Raja's translation is his utmost sicerity and felicity of expression.

As Prema Nandakumar aptly puts iin her review in the INDIA TODAY , the novel "is quite a significent novel in Modern Tamil literature on the grounds that it is told artistically and that the treatment of its subject matter is quite new." The novel can be classified under the post-modernist fiction. Anecdotal in nature, the events don't appear to be interrelated. But "as the curves and the lines join together to make a picture, the expriences of several characters put together make the reader read the mind of the writer. Since Subrabharathimanian has deftly handled such a technique, the novel touches us personally too and awakens our responsibilities" (quoted from the review included in the translation). Such a technique throws a challenge to the translator who has to be extra-careful not to disrupt the flow of narration and thereby distort the spirit and meaning of the novel. It is likened to right-rope walking and P.Raja, having accepted the challenge, comes to terms with his job not only in ensuring the beauty and the intensity of the original narration but also in enhancing tha readablilty of tha translation. His job is commendable and it is possible only for a translator who gained a reasonable mastery over both the languages, Tamil and English.

Tirupur brings to our minds a land of the river Noeyal and greens and vegetables grown on its banks. In addition, the variety of woven fabrics that lure people and the newly sprung multi-coloured constructions too come to mind. All these adorn the external Brushing aside attractive curtains, we are shocked to see an altogether different world behind the farcade. The Noeyal is reduced to a gorgeously coloured gutter. The streets are polluted with the waste effluents from the dye industries.

Ponneelan, Sahitya Akademi winnwe, in his foreword to the translation say that this novel can't oast of any story. There is not even a basic thread running through the novel. Nor does it show its characters in different moods. And all that one can see is the dead leaves dancing on this waste-land, dancing to the tunes of the winds. Bhaktavatchalam is the lead character who threads through the entire action. He lives with Jothimani clandestinely without the matrimonial tie-up. Characters like Nagan, Sundari, Veluchami and Kumar bear the brunt of the chemical pollution and live mechanically throwing their hands up in despair. in short, the novel is a splendid polemic against our greed for wealth by polluting our natural resources and environment. It talks about marginal men. This novel has no plot, story or even hero in the traditional sense. What stands out is the novelist's way of narration. He makes the reader feel with all his senses and this technique of clarity is laudable. the same clarity shines through Raja's translation too. The narrative tempo has been maintained throughout and P.Raja has done his best to bring the same pervading gloom and despair into the translation and we sigh heavily as the novelist himself does when he describes the plight of the poor Tirupur children working in dye industries.

The translator has already used Tamil words in transliteration like kumkum, grahapravesam, poojari, ragi, kali, munud, nalangu,thali, sombu, therukutthu, sticker pottu,aadi month, erukkam leaves, alagu, appa, and hybrids like kolams. They add a native colour to the narratio,n. they are distinguished by italicising them. His felicity of expression is evident from the phrases like "the noisy street budded into view", "That made many women shoulder their way towards it" (p.8), "He thought of those halycon days..." (p.162), "The ashoka tree at the portico continued to disown its brown leaves" (p.163), and "There was a million crowd of pilgrims" (p.146). There are some typographical errors like "those mixture of colours" (p.83,1.2), "... it was the man from Mysore who forced him sit in the loom pit(p.65). it would be helpful if the tamil words in transliteration were glossed at the end of the book. This lapse might hamper a European reader who does not know Tamil.Sentences like the following could have been translated still more idiomatically : " The fritted and broken wires of Nagan's chair that sat at tha gate come to this view"(p.14), "he could see his footwear covered with street dust and progressed further to reach the edge of his pants"(p.10), "...the passangers as if disturbed by that sound vied with each other to elbow their way out"(p.11), " he moved to the street corner only to find that a lorry was parked obstructing the company's building from the view"(p.13). Of course, any translator, for that matter, has an inherent scope for further refinement. As Otto Jesperson has nively put it, "Translation is transferring a person from one cosmos to another". The translator has not only to translate a work of art but to transliterate and transcreate it if warranted to make the translation readable. P.Raja has employed all these tools polished over the years and kept ready in his arsenal to make the translation as readable and absorbing as the original.

Dr.D.Gnanasekaran, Reader in English, K.M.Centre for P.G. Studies, pondicherry. Add:29, Main Avenue, West Brindawan, pondicherry-605013, (India).
Delhi: B.R.PUBLISHING CORPORATIONS: Rs 200

Sent by: issundarakannan7@gami.com

srimukhi@bsnl.in

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2008

The Faces Of The Dead

Subrabharrathimanian's Novel!
----------------------------------------------------
------ R Balakrishnan --------

Subraharathimanians fictions palpatitate with passion for the poor and the marginalised based on the Tiruppur of 15,000crores rupees export town,Tamil nadu and related settings they deal with lives of migrant and unorganised workers and probably children, their plight etc.., This novel "Faces of the Dead" is a translation of his "pinakalin mughankal"in tamil. this work is thematised on how the strong, physical components of the body of the children are exploited by various, especially the hardcore labour system... Male ones are given jobs which are more for their capacity and female ones are sexually too exploited. Their parents are from a community of descendents who have neither anyform of possessions nor meaning behind their lives.These helpless ones are thrown into a space where the thoughtless plundering of the natural resourses take place from sunrise to sunset. Kanagu, senthil, devaki, veni, poorani are all central charaters of this novel, children they are in the beginning of their teens but are exposed the nearbig atire which never suit to. Instead of their dreams or even a persuit of heigher education they are exposed to hard working conditions- as their families need their salary. The Tamil original has been translated into English by R.Balakrishnan, a poet and an English lecturer.

Kanagu and senthil are packed up, leave their school after the last working day. Kanagu has a dream to pursue higher education, wherever senthil belongs to a still poorer family wants to take up an errand job after holidays. Kanagu's father finds his job work in weaving indoldrum and gets difficult to make up both the ends meet. Hence Kanagu is forced to take up a small job at a nearby textile unit. Poorani is one such a ward, though interested in learning she finds it difficult to make herself comfortable in huge schools. The teachers too are seemingly threatening. She believes a job would bail out her from her troubles; so also her family, sheis given a small job of taking care of a mentally disturbed women Meenakshi. When days role by she finds how difficult it is to do a job instead of leaving Kanagu and Senthil find their pockets swell with a bit of money earned through hard work.., they spend lavishly, learn to smoke and drink too. Senthil develops a feeling for one of his colleagues in the mill, Devaki though she is older than him. she is a migrant from downsouth. Yet he got appalled in a situation after finding that she is sexual exploit of the mill owners,. the agonies of Meenakshi grow more and totally it results in sending out poorani from the job. Meanwhile the city is targeted with a terrorist attack, bombs serially exploidng everywhere hit the normal life and people lose jobs too as the city's economy is badly affected. This is the time perhaps Poorani may leave the town to find an another job, leaving her affectionate family at a tender age. There is an abandoned house, find a space a wide canvas of this novel which is probabily a place meant for illegal activities and brothel. Fire burns this small edifice and the story ends up into an epic setting burning.

Sent by: issundarakannan7@gmail.com

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2008

சுப்ரபாரதிமணியனின் 'ஓலைக்கீற்று' நூல் விமர்சனம்- தாண்டவக்கோன்

சுப்ரபாரதிமணியனின் 'ஓலைக்கீற்று' நூல் விமர்சனம்- தாண்டவக்கோன்
------------------------------------------------------------------

சுப்ரபாரதிமணியனின் கை வண்ணத்தில் இன்னுமோர் கதைவண்ணம் 'ஓலைக்கீற்று' எனும் ஒற்றை வரியைத் தாண்டி, இந்நூலிற்கு வேறெந்த அறிமுகமும் தேவையில்லைதான். தேனை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவர். சாப்பிடும் விதங்களில்தான் ஆளுக்காள் மாறுபடுவர். சுவாரஸ்யத்துக்கோ, தகவலுக்கோ ஒருவர் ருசித்த விதத்தை ஒன்னொருவருக்குச் சொல்லுவது தேவையெனில் - 'ஓலைக்கீற்று'க்கான இவ்விமர்சனமும் தேவையானதே.


வெறும் கற்பனைச் சம்பவங்களிலும், விநோதப் புனைவு உத்திகளிலும் நம்பிக்கையில்லாத படைப்பாளியாகத் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டிருப்பவர் ஆர்பிஎஸ் எனப்படும் சுப்ரபாரதிமணியன் அவர்கள் அவரது படைப்புகள் என்றுமே சமகால வாழ்வியலின் அவலங்களை வெகு அக்கறைரயோடு பேசுபவை. ஜிலுஜிலுப்பான வார்த்தை விளையாட்டுக்களையும், பொறுப்பற்ற சொல்லாடல்களையும் அவரது படைப்புகளில் காணவியலாது. கீழே நடக்கும் கலவரத்தை உயரமான கட்டிடத்தின் மீது வெகு பாதுகாப்பாக நிற்பவர் விவரிப்பதற்கும்- அதே கலவரத்தில் சிக்குண்டு சேதப்பட்டவர் அதை விவரிப்பதற்கும் நிறைய வித்தியாசங்களுண்டு. இதில் ஆர்பிஎஸ் இரண்டாவது வகை.


அதனால்தான் கதை செய்வதற்காகப் போலியான வறட்டுப் பாணிகளில் யோசிப்பதில்லையவர். எக்கதையிலும் தான் புழங்கிக் கொண்டிருக்கும் மண்ணையும் மக்களையுமே பதிவு செய்கிறார். மண் என்றால் மண் சார்ந்த வளங்களும், மக்கள் என்றால் அவர்களின் சுகங்களும் அவரின் கதைப் பொருட்களாகின்றன. மண்ணும் மனிதமும் வளமாக இருத்தலே சமூக வெற்றி எனும் கோட்பாட்டில் நின்றுகொண்டு, அவற்றைச் சுரண்டும் சக்திகளை அடையாளப்படுத்தி ஆணி அடிக்கிறார்..'ஓலைக்கீற்று' தொகுப்பின் ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒரு ஆணி குத்துகிறது.


ஆற்றைக் கெடுத்த ரசாயனக் கழிவுகள் உருவாக்கிய பூச்சிகள் 'ஈரம்' கதை முடிந்த பிறகும் நம்முள் ஊர்கின்றன. செத்த எலிகளாய் மனிதர்களைப் பந்தாடும் அப்பூச்சிகளின் அரக்கத் தனம் ஆணியாய்ப் பதிகிறது. இதில் அடிக்க மறந்த ஆணிகள் சிலவற்றை 'கழிவு' கதையில் அடித்துக் கடமை முடிக்கிறார். செருப்பை மாற்றி அணிந்து கொண்ட நகைப்பில் தொடங்கிக் கரடுமுரடான தனியார்மய எதிர்ப்பைக் குத்திக் கதை செய்திருக்கும் இவரின் எழுத்தாணி பிரமிப்பானது. அந்த 'மாற்றங்கள்' கதையின் அரசு அதிகாரி யார் என்றும் நமக்குத் தெரிந்துதான் விடுகிறது.


தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைக்காகக் கூட்டமாக விமானம் ஏறும் நாட்களில் விமானங்களில் வழங்கப்படும் உணவு வழக்கமானதாக இல்லாமல் சாதாரணமானதாக இருக்கும் என்கிற சர்வதேச அவலத்தைப் போகிற போக்கில் குத்திச் சொல்கிறது 'திரும்புதல்' கதை. மருந்துப் பொட்டலங்களோடு வாழப்பழகிவிட்ட இன்றைய சூழல் குறித்த குத்தலோடு "பொட்டலங்கள்' கதை. சுடுகாடுகள் அழிந்து மின் மயானங்கள் வந்து விட்டன, ஆனால் சாகிறவர்களும் சாகிற காரணங்களும் மாறவில்லை என்றொரு ஆணி 'மயானம்' கதையில்.


ஒரு மனப் பிறழ்ச்சியாளரின் ஓலைக் கீற்று வழியான பார்வையும் அவர் மீதான புறப்பார்வைகளும் 'ஒலைக்கீற்று' கதையையும் தாண்டிக் குத்துகின்றன மனதில். நாகரீகம் வளர்கிறதா வீங்கி நாறுகிறதா என்றொரு குத்தல் 'வெளுப்பு'வில் உறவுகளை உதறிக்கொண்டு தனித்தனி மனிதச் சில்லுகளாகச் சிதறிவிட்ட இன்றைய நடப்பைக் குத்துகிறது 'முன்பதிவு'.


'நீலப்படமும் சுசித்ராவும்' கதையில் தன் சிநேகிதியை நீலப்படத்தில் பார்க்க நேரும் யதார்த்தம் பயங்கரக் குத்தல். மேல்தட்டுக் கலாச்சாரத்தின் விகாரம், 'சூடு' கதையில் குத்தித் துருத்துகிறது. பிழைப்புச் செய்து வந்த தறிகளையே கட்டைகளாக உடைத்து விற்றுப் பிழைக்கும் நெசவாளிகளைப் பேசும் 'சாம்பல்' - அடிப்படையறிந்து வளராத விஞ்ஞானத்திற் கெதிரான குத்து.


சமூக ஏற்ற தாழ்வுகள் கழிப்பறைகளிலிருந்தே தொடங்குவதைக் குத்திக் காட்டிச் சொல்கிறது 'கழிப்பறைகள்' எனும் கதையாணி. இளம் விதவையொருத்தியின் நகர மறுக்கும் வாழ்க்கையின் நடுவே நம்பிக்கை அச்சாணியாகக் குத்தி நின்று இயக்கம் கொடுக்கிறது 'பாதுகாப்புகள்' சிறுகதை.


தொட்டு விட்டால் பிறகு விட்டுவிட முடியாத ஒரு 'தொடுப்பு'க்கு நம்மை ஆளாக்குகிறது இத்தொகுப்பு. ஆர்பிஎஸ் அவர்களின் எதிரே உட்கார்ந்து கதை பேசுவது மாதிரியான எழுத்துப் பாணிக்கு நம் கண், செவி, மெய் என்று அத்தனையையும் ஆளாக்கிக் கொண்டு அசந்து உட்கார்ந்து விடுகிறோம், வேறெதையும் விடுத்து பாத்திரங்களின் மன ஓட்டங்களையே கதைப் பட்டங்களுக்கான நூலாக்கிச் சுண்டுவதில் இவருக்கு நிகர் அவரே.


இது இவரது 13 வது சிறுகதைத் தொகுப்பு எனும் நான்காம் பக்கத் தகவல், நம்மிடம் இருக்கும் இல்லாத இவரது ஏனைய தொகுப்புகள் குறித்த அக்கறையோடு நம்மை அலமாறிப் பக்கம் உந்தித் தள்ளுகிறது. அர்த்தமுள்ள அழகிய வடிவமும் கொடுத்து வெளியிட்டிருக்கும் காவ்யா பதிப்பகத்தாருக்கு தமிழுலக வாசகர்கள் நன்றி பாராட்டக் கடமைப்பட்டவர்கள்.


( 26-08-2008 அன்று திருப்பூரில் நடைபெற்ற சுப்ரபாரதிமணியனின் " ஓலைக்கீற்று " சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டு விழாவில் குறும்பட இயக்குனர் தாண்டவக்கோன் பேசியது. நூலை பேராசிரியை முத்து சிதம்பரம் வெளியிட , சுதாமா கோபாலகிருஸ்ணன் பெற்றுக்கொண்டார். " ஓலைக்கீற்று " ரூ 50/ காவ்யா பதிப்பக வெளியீடு, சென்னை. இவ்விழாவில் இவ்வாண்டின் அரிமா குறும்பட விருதுகள் 8 குறும்படப்படைப்பாளிகளுக்கும் ( கருணா ,விஆர்பி மனோகர், ஆண்டோ, தாரகை, கோவை சதாசிவம்,புவனராஜன், சுபாஸ், குணவதிமைந்தன்) அரிமா சக்தி விருது 5 பெண் எழுத்தாளர்களுக்கும்( பேராசிரிகைகள் முத்து சிதம்பரம், பாக்கியமேரி, சுலோட்சனா, அருணாதேவி, அம்சா) வழங்கப்பட்டன. சேலம் ஆண்டோவின் " ஆதிவாசிகள் " என்ற தலைப்பிலான புகைப்படக் கண்காட்சியும் நடைபெற்றது. )


செய்தி: issundarakannan7@gmail.com

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2008

காகித்யா அகாடமி சார்பில் நடந்த நிகழ்ச்சி














நன்றி :தினத்தந்தி /19/08/2008

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2008

" ஓடும்நதி "

வல்லரசுக் கனவுகளும் அல்லலுறும் பெண்களும்:சுப்ரபாரதிமணியனின் படைப்புலகம்
----------------------------------------------------------------------
கீரனூர் ஜாகிர்ராஜா
-----------------



தமிழ்ப் புதினங்கள் இன்றைய நிலை ஆரோக்கியமானதாகவும் நம்பிக்கையளிக்கக் கூடிய விதத்திலும் இருக்கிறது. வெவ்வேறு இலக்குகளில் சுற்றிச்சுழன்று மானுட வாழ்வின் சகல கூறுகளையும் அவதானித்து வாசகனுக்கு ஒரு பரந்த அனுபவப் பரப்பினை அவை தரிசிக்க வைக்கின்றன. சமகாலப் படைப்பாளிகள் பலரும் தொடர்ச்சியாக எழுத தமிழ்ப் புதினப் பாதையை žராக்கித் தந்துள்ளனர்.


சுப்ரபாரதிமணியன் திருப்பூரை வாழ்விடமாகக் கொண்டு தமிழ்ச்சூழலில் தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 1970-களில் சுகாதாரமான பூமியாக இருந்த திருப்பூர் நகரில் பனியன் கம்பெனிகள் துளிக்கத் தொடங்கியபோது அடித்தள மக்களின் வாழ்க்கைப் போராட்டத்துக்கு ஓரளவு தீர்வு கிடைத்தது. ஒன்றிரண்டாகப் பெருகிய கம்பெனிகள் ஒரு கட்டத்தில் திகைப்புக்குரிய அளவில் வளர்ச்சியுற்று நகரத்தையே வசப்படுத்திவிட்டன. விவசாயம் அழிந்தது. விளைநிலங்கள் வணிக வளாகங்களாயின. நொய்யலாறு கழிவுகளின் பிறப்பிடமாயிற்று. தமிழகத்தின் மூலை முடுக்குகளிலிருந்தும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் திருப்பூருக்கு புலம் பெயர்ந்தனர். இவர்களுடன் வெளிமாநிலத்தவர்களும் இணைந்தனர். இடநெருக்கடி, குடிநீர்ப் பஞ்சம், சுற்றுச்சூழல் மாசுகள் அதிகரித்தன. திருப்பூர் நகரம் திக்கித் திணறிற்று. கம்பெனிகளோ சிப்டுகளை அதிகப்படுத்தின. தாலி கிடைத்துவிடுமெனும் நம்பிக்கையில் பனியன் கம்பெனியின் கொட்டடிகளில் இளம்பெண்கள் சுமங்கலித்திட்டம் என்ற வருடாந்திர ஒப்பந்தங்களின் பெயரில் அடிமைப்பட்டனர். சமூக அக்கறையாளர்கள், தன்னார்வலர்கள், இலக்கியவாதிகள் இதன்மேல் விமர்சனங்களை வைக்கத் தொடங்கினர். சுப்ரபாரதிமணியன் இவர்களுக்கிடையில் தன் குரலை தொடர்ந்து ஒலிக்கச் செய்து கொண்டிருப்பவர்.


சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த இவரின் " தேநீர் இடைவேளை " என்னும் நாவல் திருப்பூர் நகரத்தின் பிரச்சனகளையும், கோவை மாவட்டத்தின் தொழிற்சங்க வரலாறையும் வாசகர்களுக்கு நெருக்கமாக அறிமுகம் செய்த படைப்பு. அந்நாவல் முழுவதும் கடிதங்களே இடம் பெற்றிருந்தன. " ஓடும்நதி" என்னும் இந்நாவலிலும் கடித உத்தியை பயன்படுத்தி நாவலின் ஒரு பகுதியை நகர்த்துகிறார் சுப்ரபாரதிமணியன்.


செல்வன்- செல்லம்மிணி இருவரின் நட்பு கடிதங்களின் வழியே விரிகிறது. செல்லம்மிணி தன் தந்தையுடன் கொங்குமண்டலத்தின் உள்ளொடுங்கிய கவுண்டர் இனத்தின் ஆதிக்கப் போக்குமிக்கதொரு கிராமத்தில் வசிக்கிறாள். தண்­ர் பிரச்சனை, காமுகர்களின் வெறியாட்டம் இவர்களை கம்பெனிக்கு கொண்டுவந்து சேர்க்கிறது. பவர்லூம் கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறாள் செல்லம்மிணி. தலைக்கு குளித்த ஜந்தாம் நாள் அயர்ந்துறங்கும் வேளையில் பழைய பாத்திரக்காரனால் பலாத்காரத்துக்குள்ளாகிறாள். மீண்டும் கம்பெனி வேலைக்கு செல்கையில் செல்வனை சந்திக்கிறாள். கம்பெனியில் சொக்கன் என்பவனுடன் நெருங்கிப் பழகி செகந்திராபாதுக்கு அவனுடன் சென்று மூன்று மாதகாலம் சேர்ந்து வாழ்கிறாள். சொக்கன் பிரிகிறான். அப்பாவின் முகத்தில் விழிக்க சங்கடப்பட்டு சித்தப்பாவிடம் அடைக்கலமாகிறாள். சித்தப்பா சிறிது காலம் அவளுக்கு ஆதரவளித்து மீண்டும் அவளை அவளின் தந்தையிடம் ஒப்படைக்கிறார். கால் சூம்பிய ரங்கண்ணனிடம் செல்லம்மிணியை சேர்ப்பித்துவிட்டு அவரும் மரணிக்கிறார். தன்னை சிதைத்த பாத்திரக்காரனை அவள் மீண்டும் சந்திக்க நேர்கிறது. அவன் அவளை மீண்டும் žண்டுகிறான். குழப்பத்தினூடாக உள்ளூர் வக்கீல் ஒருவரிடம் வேலைக்குச் செல்கிறாள். கல்வியறிவில்லாத பலருக்கு கடிதம் எழுதிக்கொடுத்து மனநிறைவடைகிறாள். இதற்கிடையில் நாகாலாந்திலிருந்து திரும்பும் செல்வன் மல்லிகா என்பவளைத் திருமணம் செய்துகொண்டு உள்ளூரில் தமிழ்வழிக்கல்விப் பாடசாலை தொடங்கி நடத்துகிறான்.


இந்த நெடுங்கதையினூடாக மேரி என்னும் பாவப்பட்டவளின் கிளைக்கதையும், செகந்திராபாத் ஜுலியின் கதையும் நாவலில் இடம்பெறுகின்றது. செல்லம்மிணி என்னும் குணசித்திரத்தின் வாயிலாக அல்லலுறும் பெண்ணின் ஆன்மாவை வாசகர்களுக்கு தரிசிக்கத் தருகிறார் சுப்ரபாரதிமணியன். நம் தேசத்து புறக்கணிக்கப்பட்ட பெண்களின் ஒட்டுமொத்தப் பிம்பம்தான் செல்லம்மிணி. வல்லரசு ஆகப்போகும் தருணத்திலும் ஊருக்கு ஊர் கிராமத்துக்கு கிராமம் செல்லம்மிணிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர் என்பதும் வன்முறைக்குள்ளாகின்றனர் என்பதும் கசப்பான நிஜமாகி நம்மை கலவரப்படுத்துகின்றது.


சுப்ரபாரதிமணியனின் முந்தைய படைப்புகளிலிருந்தும் " ஓடும்நதி "மாறுபட்டு வேறுவேறு திசைகளில் பரவிப் பாய்ந்து செல்கிறது. பல நேரங்களில் ஒரு தேசாந்திரியின் பயணக்குறிப்புகளைப் போலவும் சில நேரங்களில் ஒரு துயர நாடகத்தைப் போன்றும் பிறிதொரு சமயத்தில் ஒரு பேரிலக்கியத்தின் நுண்ணிய கூறுகளுடனும் "ஓடும்நதி"கண்ணாமூச்சி காட்டுகிறது. கதைச் சம்பவங்கள் நாகாலாந்து, செகந்திராபாத், திருப்பூர் என ஸ்தலங்கள் மாறி நிகழ்ந்து ஓய்கின்றன. நாகாலாந்த், கவுஹாத்தி, அசாம் மலைப்பகுதி நிலக்காட்சிகள், அம்மக்களின் வாழ்வியல் அம்சங்கள் மிகுந்த சிரத்தையுடன் ஆசிரியரால் அவதானிப்புக்குள்ளாகியுள்ளன.


காட்டெருமையை வேட்டையாடி அதன் தலையைக் கொய்து வருபவரை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்ளுதல், புராதன கட்டிடமொன்றில் இளைஞர்களும் இளம் பெண்களும் தங்கி விரும்புகிறவர்களுடன் தங்கு தடையற்ற பாலுறவு கொள்ளுதல், மரணைத்தவரின் உடலைப் புடைக்காமல் எரியும் அடுப்புக்கு மேலே கட்டித் தொங்கவிட்டு அது வெந்து வடியும் நிணத்தை உடம்பில் பூசிக்கொள்வது என்று மலைவாழ் மக்களின் வினோத சடங்குகள் நம்பிக்கைகள் நாவலாசிரியரால் நுட்பமாக விவரிக்கப்படும் பொழுது அதிர்வும் பீதியுமான வாசக அனுபவத்துக்குள்ளாக முடிகிறது. " ஓடும்நதி " சுப்ரபாரதிமணியனின் பெரும் பயணத்துக்கான வெள்ளோட்டம்.



ஒடும் நதி (நாவல்)

சுப்ரபாரதிமணியன்

விலை-150/- வெளியீடு: அம்ருதா

பக்கம் - 336. எண்.5. 5வது தெரு,

எஸ்.எஸ்.அவென்யூ, சக்தி நகர்,போரூர்,

சென்னை-11

======================================================================

அனுப்பியவர்:issundarakannan7@gmail.com

ஞாயிறு, 27 ஜூலை, 2008

"உயிர் எழுத்து" ஓராண்டு பயணம்

சுப்ரபாரதிமணியன்


படைப்பிலக்கியத்தில் சிறுகதைகளுக்கான பிரசுர வெளியை இன்றைய வெகுஜன இதழ்கள் வெகுவாக அலட்சியப்படுத்தி வருகின்றன. இலக்கிய இதழ்களிலும் மாதம் ஒரு சிறுகதை என்ற அளவிலேயே இடம் பிடிக்கிற நிலையில் வருடத்திற்கு ஒரு இலக்கிய இதழில் 10 முதல் 15 சிறுகதைகளே இடம்பெரும் வாய்ப்புள்ளது. அதுவும் அந்த இலக்கிய இதழின் குழு சார்ந்தவர்களின் படைப்புகளாகவே பெரும்பாலும் அவை இருக்கும். இந்நிலையில் "உயிர் எழுத்து" கடந்த ஓராண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை வெளியிட்டிருப்பது ஒரு சாதனையாகவே நிகழ்ந்துள்ளது. படைப்பிலக்கியத்தளத்தில் சிறுகதைப் படைப்பாளிகளுக்கான மேடையாகி உள்ளது.


வெகுஜன இதழ்களில் சிறுகதைக்கான பக்கங்கள் சிறுத்துவிட்டன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நான் ஹைதராபாத்தில் வசித்த போது ஒரு தெலுங்கு பத்திரிக்கை "இன்லெண்ட் லெட்டர்" சிறுகதையொன்றை வெளியிட்டது. கடித வடிவ கதை. கதையை லே அவுட் செய்த ஓவியர் 'இன்லெண்ட் லெட்டர்' வடிவில் அதை வெளியிட்டிருந்தார். அடுத்த வாரம் 'இன்லெண்ட் லெட்டர்' கதைக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அதைப் பார்த்த அதன் ஆசிரியர் எழுத்தாளரிடம் "இன்லெண்ட் லெட்டரில்" எழுதப்படும் கதைகளை வரவேற்பதாக எழுதினார்.பிறகு இன்லெண்ட் லெட்டர் கதைகள் அதில் வெளிவந்தன.

அதில் இருந்த சௌகரியம் சிறுகதைக்கான பக்க அளவை குறைத்து விட்டார். தொடர்ந்து அவ்வகைக் கதைகள் அந்த இதழில் பிரசுரமாகின. பிறகு கொஞ்ச நாள் கழித்து "போஸ்ட் கார்ட்" கதைகளை எழுத்தாளர்களிடமிருந்து வரவேற்பதாக அந்த ஆசிரியர் அறிவித்தார். பிறகு நிறைய இன்லெண்ட் லெட்டர் கதைகளை அடுத்து போஸ்ட் கார்டு கதைகள் பிரசுரமாகின.அப்போது கல்கியில் "ஹைதராபாத் பக்கம்" என்றொரு பத்தி எழுதி வந்த நான் அதில் இதைக் குறிப்பிட்டிருந்தேன். தமிழிலும் இன்லெண்ட் லெட்டர் கதைகள், போஸ்ட் கார்டு கதைகளை வெகுஜன இதழ்கள் வெள்யிட்டன. இப்போது 20 செகண்ட் கதைகள் என்றும் வந்துவிட்டன. சிறுகதைக்கான இடம் என்ன என்பதை அவை நிர்ணயித்துவிட்டன. இச்சூழலில் " உயிர் எழுத்து " கடந்த ஒரு ஆண்டில் மட்டும் வெளியிட்டிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் பற்றி யோசித்துப் பார்க்கலாம். சிறுகதைக்கு அது தரும் இடம் குறிப்பிடத்தக்கது.


இதில் இடம்பெரும் படைப்புகள் பெரும்பாலும் விளிம்புநிலை மக்களைப் பற்றியதாகவே உள்ளன. பின்நவீனத்துவ சமூகத்தில் பெண்கள், தலித்துகள், அரவாணிகள், லும்பன்கள் என்ற நிலையிலான விளிம்பு நிலை மக்களைப் பற்றியே அவை பெரும்பாலும் பேசுகின்றன. அதை எழுதியிருப்பவர்கள் விளிம்பு நிலை மக்களைப் பருந்துப் பார்வையாகப் பார்க்கிறவர்களாக இல்லாமல் விளிம்பு நிலை மக்களிடமிருந்து வந்தவர்களாகவும், அவர்களின் இயக்கங்களோடு தொடர்பு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


விளிம்புநிலை மக்களின் படைப்புகளை பிரதானப் படுத்துகிற பின்நவீனத்துவமும், அதன் அடித்தள கோட்பாடான மார்க்சியம் குறித்த விவாதத்திற்கான களத்தையும் உயிரெழுத்து விவரித்துள்ளது. இடதுசாரி கவிஞர்களின் கலாச்சார. அரசியல் தள பங்களிப்பை பல்வேறு கட்டுரைகள் தொடர்ந்து வெளிப்படுத்துகின்றன. உலகமயமாக்கல் சூழலில் மார்க்சிய தத்துவ புணருத்தாரணத்தின் அவசியம் பற்றிய விவாதங்களையும் அவை உள்ளடக்கியுள்ளன.


உலகமயமாக்கல் பத்திரிக்கைத் துறையிலும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டை இந்தியாவில் தொடங்கிவிட்டது. நிறுவனப்பட்டிருக்கிற பெரிய வணிக இதழ்களுக்கே அவை சவாலாக அமைந்துவிட்டிருக்கின்றன. இச்சூழலில் சுதிர் செந்தில் என்ற தனி மனிதனின் சேமிப்பு முதலீடும். உழைப்பும் உயிர் எழுத்தாய் நிறுவப்பட்டிருக்கிறது. இடதுசாரி இயக்கங்கள் மூலம் தனது ஆரம்ப கால நடவடிக்கைகளுடன் கலாச்சார தளத்தில் நிழைந்த சுதிர் செந்தில் ஒரு தேர்ந்த வாசகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்.குறிப்பிடத்தக்க கவிஞராகவும் இரு கவிதைத் தொகுதிகள் மூலம் நிறுவியவர். இந்த இதழின் மூலம் தன்னை ஒரு பத்திரிக்கை ஆசிரியராகவும் நிருபித்திருக்கிறார். இன்றைய பன்னாட்டு நிறுவன பத்திரிக்கை முதலீட்டிற்கு எதிரான ஒரு சிறு கலகக்குரலாக சுதிர் செந்தில் என்ற தனி மனிதனின் சேமிப்பு முதலீடும், உழைப்பும் இந்த பத்திரிக்கையில் படைப்பிலக்கிய தளத்தில் நிறுவப்பட்டிருப்பதை குறிப்பிட்டாக வேண்டும்.



( - சென்னையில் நடைபெற்ற "உயிர் எழுத்து" முதலாண்டு நிறைவுவிழா பேச்சு:சுப்ரபாரதிமணியன்.)


விழாவில் 8 புதிய நூல்கள்

வெளியிடப்பட்டன. எழுத்தாளர்கள் பிரபஞ்சன், இன்குலாப், முருகேசபாண்டியன்,

கரிகாலன், ஆதவன் தீட்சண்யா, மருது, சுதீர் செந்தில்,

நா முத்து குமார்,ரவிசுப்ரம­யன்,பாரதிகிருஸ்ணகுமார், சை.பீர்முகமது, பாவண்ணன்

உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

" உயிர் எழுத்து " திருச்சியில் இருந்து வெளிவரும் இலக்கிய இதழாகும். ஆண்டு சந்தா ரூ 240/ முகவரி: 9, முதல் தளம்,

தீபம் வணிக வளாகம், கருமண்டபம், திருச்சி 1

email: uyirezhuthu@gmailcom


========================================

அனுப்பியவர்: issundarakannan7@gmail.com

========================================

thinnai.com 

புதன், 23 ஜூலை, 2008

The Faces Of The Dead! Subrabharrathimanian's Novel!



The Faces Of The Dead! Subrabharrathimanian's Novel!
-----------------------------------------------------
- R Balakrishnan -
-----------------

Subraharathimanians fictions palpatitate with passion for the poor and the marginalised based on the Tiruppur of 15,000crores rupees export town,Tamil nadu and related settings they deal with lives of migrant and unorganised workers and probably children, their plight etc.., This novel "Faces of the Dead" is a translation of his "pinakalin mughankal"in tamil. this work is thematised on how the strong, physical components of the body of the children are exploited by various, especially the hardcore labour system... Male ones are given jobs which are more for their capacity and female ones are sexually too exploited. Their parents are from a community of descendents who have neither anyform of possessions nor meaning behind their lives.These helpless ones are thrown into a space where the thoughtless plundering of the natural resourses take place from sunrise to sunset. Kanagu, senthil, devaki, veni, poorani are all central charaters of this novel, children they are in the beginning of their teens but are exposed the nearbig atire which never suit to. Instead of their dreams or even a persuit of heigher education they are exposed to hard working conditions- as their families need their salary. The Tamil original has been translated into English by R.Balakrishnan, a poet and an English lecturer.

Kanagu and senthil are packed up, leave their school after the last working day. Kanagu has a dream to pursue higher education, wherever senthil belongs to a still poorer family wants to take up an errand job after holidays. Kanagu's father finds his job work in weaving indoldrum and gets difficult to make up both the ends meet. Hence Kanagu is forced to take up a small job at a nearby textile unit. Poorani is one such a ward, though interested in learning she finds it difficult to make herself comfortable in huge schools. The teachers too are seemingly threatening. She believes a job would bail out her from her troubles; so also her family, sheis given a small job of taking care of a mentally disturbed women Meenakshi. When days role by she finds how difficult it is to do a job instead of leaving Kanagu and Senthil find their pockets swell with a bit of money earned through hard work.., they spend lavishly, learn to smoke and drink too. Senthil develops a feeling for one of his colleagues in the mill, Devaki though she is older than him. she is a migrant from downsouth. Yet he got appalled in a situation after finding that she is sexual exploit of the mill owners,. the agonies of Meenakshi grow more and totally it results in sending out poorani from the job. Meanwhile the city is targeted with a terrorist attack, bombs serially exploidng everywhere hit the normal life and people lose jobs too as the city's economy is badly affected. This is the time perhaps Poorani may leave the town to find an another job, leaving her affectionate family at a tender age. There is an abandoned house, find a space a wide canvas of this novel which is probabily a place meant for illegal activities and brothel. Fire burns this small edifice and the story ends up into an epic setting burning.

Sent by: issundarakannan7@gmail.com

புதன், 9 ஜூலை, 2008

திங்கள், 30 ஜூன், 2008

புத்தக வெளியீட்டு விழா



திருப்பூர் கலை இலக்கிய பேரவை மற்றும் டி.கே.டி ஆசிரியர் பயிற்சி
பள்ளி சார்பில் தேவாங்கபுரம் பள்ளியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில்
புத்தகத்தை மேயர் செல்வராஜ் வெளியிட யுனிவர்சல் தியேட்டர் அதிபர் பழனிசாமி
பெற்றுக்கொண்டார்.அருகில் எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன்,விங்ஸ் ச்வுகத் அலி

செவ்வாய், 24 ஜூன், 2008

பட விமர்சனம்

துவக்குகளின் சப்தங்களிடையில்....
சுப்ரபாரதிமணியன்
----------------------------------


இலங்கையின் தேசிய இனச்சிக்கல், போரின் விபரீதங்களால் தகர்ந்து கொண்டிருக்கும் தமிழர்களின் சாதாரண வாழ்க்கைக் கனவுகளுக்கு மத்தியில் அப்பிரச்சனைகள் பற்றிய சுவடின்றி திரைப்படங்கள் இலங்கையிலிருந்து வெளிவருவது அங்கு நிலவும் அரசியல் சூழலின் இறுக்கத்தையும் கலைஞர்களின் இயலாமையையும் காட்டுகிறது என்று புரிந்துகொள்ள முடிகிறது.

பிரசன்னா ஜெயக் கொடியின் 'சங்கரா' என்ற இலங்கை படத்தில் இவ்வகைச் சிக்கல் முழுதும் புறக்கணிக்கணிப்பட்டு அல்லது தேவையில்லாதாக்கப்பட்டு ஒரு திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கோவிலில் வரையப்பட்டிருக்கிற 'தெலபதா ஜாதகயா' கதைகளை மையமாகக் கொண்டு வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் சிதிலமடைந்திருப்பதை சரி செய்ய ஒரு புத்தத்துறவு வருகிறார். அக்கதைகளில் புத்தரின் உபதேசங்கள் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. உயர்ந்த லட்சியங்களை மனதில் கொண்டிருப்பவன் பெண் போன்ற மாயைகளால் கவரப்படக்கூடாது என்பது அதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது.

கிராமிய சூழல், வழிபாட்டிற்கென்று வந்து போகும் சிங்களவர்கள், தனித்து விடப்பட்ட சூழலில் புத்தத் துறவி தன் வேலையைத் தொடர்கிறான். இளம்பெண் ஒருத்தியின் தலை 'ஹேர்பின்'னை ஒருநாள் எதேச்சையாக கோவிலில் கண்டெடுக்கிறான். அந்த இளம்பெண்ணை அவன் அறிவான். அதை அவளுக்கு தருவது என்ற முடிவில் அலைவுறுகிறான்.சாதாரண மனிதனின் சபலமும் ஊசலாட்டமும் அவனின் துறவைக் கேள்விக்குறியாக்குகிறது. பௌத்த வாழ்க்கையின் சாரங்களும், ஓவியங்களின் மையமும் இருவேறு உலகங்களாகின்றன. இரண்டிற்குள்ளும் அலையும் மனமும் புனைவுகளும் வெவ்வேறாகின்றன.

ஓர் இரவில் அந்த ஓவியங்கள் சிதைக்கப்படுகின்றன. அந்த ஓவியங்களின் மறு žரமைப்பு என்பது அவனுக்கு கேள்விக்குறியாகிறது. தான் மாட்டிக் கொண்டிருக்கும் மோகவலையை பிய்த்தெறிவதா அல்லது அதனுள் மாட்டி அலைவுறுவதா என்பது அவனுள் விசுவரூபிக்கிறது. கோவிலைத் தாண்டிய புறச்சூழலை தவிர்த்து விட்டு இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருப்பதில் பல கேள்விகள் தேவையில்லாததாக்கப்படுகின்றன. தேசிய இனச் சிக்கலில் பௌத்தமும், அது சார்ந்த அமைப்புகளின் சமரச உணர்வும் ஒரு புறம் இப்படத்தை மையமாக்கி ஒப்பீடு நிகழ்த்தப்படும்போது இப்படத்திற்கு இன்னுமொரு பரிமாணம் கிடைக்கலாம். அது வலிந்து கொள்ளப்படும் படிமமாகத்தான் இருக்கும்.

ஈழத்தமிழ்ச் சூழலை பின்னணியாகக் கொண்டு ஒளிப்பதிவாளர் சி.கே.ராஜ்குமார், இயக்குனர் புதியவனின் உருவாக்கத்தில் வெளிவந்திருக்கும் 'மண்' திரைப்படம் இலங்கைச் சூழலில் ஜாதீய இறுக்கத்தை வெளிப்படுத்துகிறது. இலங்கையின் சாதீய பிரச்சனைகள், தீண்டாமைக் கொடுமைகள் தமிழர்கள் மத்தியில் நீறு பூத்த நெருப்பாக இருந்து வருகிறது. இப்பிரச்சனைகள் முதன்மைப்படுத்திப் பேசுவது ஈழத்தமிழர்களுக்கு எதிராக முனைப்படுத்தும் போக்குகளால் பல சந்தர்ப்பங்களில் பின்னோக்கித் தள்ளப்பட்டிருக்கிறது. இந்திய வம்சாவளியின் மலையகத் தமிழர்களும் தீண்டாதவர்களாகவே நடத்தப்படுகிற அவலத்தையும் இப்படம் சொல்கிறது.

'தோட்டக்கார நாய்' என்ற வசவுடன் வாழும் மலையகத் தமிழர் குடும்பம் ஒன்று கலவரமொன்றில் மகனை இழந்ததால் வவுனியா பிரதேசத்தில் கனகராயன் கிராமத்தில் இடம்பெயர்ந்து வ'ழ்ந்து வரும் சூழலில் அக்குடும்பத்து பெண் பண்ணையாரின் மகனைக் காதலித்து கர்ப்பமுறுகிறாள். பண்ணையார் மகன் இப்பிரச்சனையிலிருந்து தப்பிக்க லண்டன் சென்று விடுகிறான். இருபதாண்டுகள் கழித்து அவன் போரில் சிதைந்த தன் கிராமத்தைப் பற்றி ஒர் ஆவணப்படம் எடுக்க வருகிறான். ஏமாற்றப்பட்ட பெண்ணின் மகன் தன் தந்தையை அடையாளம் கண்டு சுட்டுக் கொல்கிறான். சாதீய கொடுமைகளின் காரணமாக 'கும்பிட மட்டுமே உயர்ந்த கைகள் இப்போது கொடுமைக்கு எதிராகத் துப்பாக்கியைத் தூக்கவும் உயர்வதை' இயக்குனர் சுட்டுகிறார்.

கிராமிய சாதீய உணர்வின் ஆழமும், சிறுவயதினரின் பாலியல் குறித்த விவாதங்களும் பாலியல் அலைக்களிப்புகளும் நுணுக்கமாக படம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. ராஜ்குமாரின் தேர்ந்த ஒளிப்பதிவு இலங்கையின் வனப்பை ஏக்கம் கொள்ளும் வகையில் படமாக்கியிருக்கிறது. வனப்பின் பின்னணியில் கேட்கும் துவக்குகளின் சப்தங்கள் முழுமையாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு வனப்பான பூமி போரால் சிதைவுறுகிற கொடுமை மனதை துன்புறுத்துகிறது. அந்தப் போரின் நியாயங்கள், விவாத தர்க்கங்களோ இப்படத்தில் இடம்பெறவில்லை. ஆனால் அங்கு நிலவும் சாதீயக் கொடுமையின் அழுத்தம் சரியாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. வவுனியா பகுதியில் இப்படப்பிடிப்பு நடத்த போராளிகளின் அனுமதி , தமிழ்ப்படத்தின் தேவை ஆகியவை குறித்து பல சங்கடங்களும் மனதில் எழும். யுத்த பூமியிலிருந்து யுத்தம் தவிர்த்த விடயங்களைச் சொல்ல புதியவனுக்கு இருக்கும் உறுத்தலும் எளிதாக விளங்கக் கூடியதுதான்.

- சுப்ரபாரதிமணியன் (subrabharathi@gmail.com)


கமண்டலத்தில் நதி - சுப்ரபாரதிமணியனின் " ஓடும் நதி " நாவல் சிறுபான்மையினருக்கு எதிரானதா

சுந்தர் அர்னவா ( பக்ருதீன் அலி அகமது )

=============================================

கமண்டலத்தில் நதி
*****************

( நன்றி- கலாப்ரியா கவிதை)


சுப்ரபாரதிமணியனின் " ஓடும் நதி " பற்றி கோவை சி ஆர் ரவீந்திரனின் கட்டுரை சென்ற இதழில் வெளியாகியிருந்தது . அது சில யோசிப்புகளுக்குக் கொண்டு சென்றது.


துயரம் என்பது எப்படி வரும்.உடலால், மனதால், சூழ்நிலையால் இன்னும் எப்படி எல்லாம் வருமோ? அப்படி எல்லாம் வருகிறது செல்லமணிக்கு. செல்லமணியின் துயர நதி - அவள் அனுபவம் ஓடும் நதியாக மாற்றம் அடைந்துள்ளது. நதி என்ற குறியீடு பெண்ணையும், அவள் அனுபவ எண்ணங்களையும் குறிப்பதாகவே தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.


செல்லமணியின் தற்கொலை எண்ணத்தில் ஆரம்பமான நாவல் அவள் நொண்டி புருஷனோடு வாழ்வதாக முடிகிறது. நிறைய முரண்பாடுகள் நிறைந்தது இந்நாவல். செல்லமணியின் சில மாத அனுபவங்கள் நீண்ட அத்தியாயங்களில் விவரிக்கப்படுகிறது. அவளோடு சில கண அனுபவங்கள் கூட நாவல் முழுவதும் வருகிறது. பல வருட வாழ்க்கை சில பாராக்களில் முடிகிறது. இப்படித்தான் வாழ்வு அமைகிறது.


'சொக்கன்' என்ற தலித் பாத்திரம் வில்லனாக ஏன் சித்தரிக்கப்பட வேண்டும்? . சொக்கன் செல்லமணியை விட்டு செல்ல காரணம் என்ன என்பது நாவலில் இல்லை. செல்லமணியோடு இருக்கும் துயரத்தோடு அவன் செல்கிறான், நாவலை விட்டு வெளியேறுகிறான். சாதிமறுப்பு திருமணங்களுக்கு எதிராகவே அந்த அத்தியாயங்கள் நீள்கிறது. ஆனால் பின் அத்தியாயங்களில்

கவுண்டர்களின் சாதி ஆதிக்கம் குறித்தும், தண்­ர் பிரச்சனையில் ஆதிக்க வெறியோடும், தலித்களுக்கு எதிராக கொலைவெறி தாக்குதலும் விவரிக்கிறது. அதில் கம்யூனிஸ்ட்களும் சாதி பின்னணியோடு இருப்பதாக குற்றச்சாட்டை, விமர்சனத்தை முன் வைக்கிறார். இது சிறுபான்மையினருக்கு எதிரான குரலாக அமைந்து விடும் அபாயத்தை தருகிறது.


நாவலில் செல்லமணி அனுபவத்தைவிட நம்மை வியக்க வைப்பது என நாகாலாந்து கடிதங்களை சொல்லலாம். அது தனித்து நாவலாக வந்திருக்க வேண்டியது.செல்லமணி வாழ்வோடு- எந்த வகையிலும் ஒட்டாதது. நவீன எழுத்தும் உத்தியும் புதிய அனுபவத்தோடும் ஆதி பொதுவுடைமை மக்களின் தொடர்ச்சியாகவும், கடிதங்கள் நன்றாக வந்துள்ளன.


அப்புறம் மேரி, பக்ருதீன் உறவு வித்தியாசமாக அமைந்து உள்ளது. வயதானவனின் காமம், இளம் பெண்ணின் தேவை என்ற உறவு நிலை- மிகச் சரியாக சித்தரிக்கப்படுகிறது.


வக்கீல், செல்லமணி உறவு கூட அப்படித்தான். ரமேஷ்குமார். அவள் வாழ்வில் வருவதை- அந்த வன்புணர்ச்சியை நிகழ்வை விவரிப்பது- இன்னும் துயரமிக்க அவள் உடல்வலியையும், மனவலியையும்- இன்றும் பதிவு செய்ய வேண்டியது.


செகந்திராபாத் ஜுலியின் வாழ்வு கூட நமக்கு புது அனுபவமே இன்னும் வடிவ நேர்த்தி கொண்டு நல்ல பெண்ணிய நாவலாக வர வேண்டியது அவரின் ஆண் பார்வை நாவலில் மிகுந்தே வருவதும்,. நவீன கதை சொல்லல் முறையும்- வாசகன் அவரின் மற்ற நாவல்களில் கண்டடைந்ததே. என்றாலும் குறிப்பிடத்தக்க நாவல் " ஓடும் நதி "


( " ஓடும் நதி " அமிர்தா பதிப்பகம் , சென்னை விலை ரூ 150/- பக்கங்கள் 346. )

ஓடும் நதி பற்றி "பால்கி"

ஒரு தொழிற்சங்கவாதியின் பார்வையில் : சுப்ரபாரதிமணியனின் :" ஓடும் நதி " நாவல்

பால்கி
======================================================

பால்கி ( மாநில செயலாளர் SNEA =BSNL அதிகாரிகள்

தொழிற்சங்க அமைப்பு )

=====================================================


சென்னை அமிருதா பதிப்பகத்தால் வெளிவந்திருக்கும் சற்று பெரிய நாவலான "ஓடும் நதி" வாசிப்பு சில பல தொழிற்சங்க தொடர் நடவடிக்கைகளால் தடைபட்டாலும், சுவாரசியமாய் வாசிக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கும் அற்புத நாவல் என்பதை படித்து அறிந்தேன்.

சென்ற திண்ணை இதழில் சுந்தர் அர்னவா குறிப்பிட்டிருக்கும் தலித் பாத்திரம் வெளியேற்றப்பட்டிருப்பது, பொதுவுடமைவாதிகள் மீதான ஜாதீய விமர்சனம்

போன்றவற்றை மீறி மனதில் கொள்ளப்பட பல விசயங்கள் இந்த நாவலில் உள்ளன.


நதியின் இரு மருங்கிலும் உள்ள கரைகள் பலரால், பல நோக்கங்களுக்கு பயன்பட்டிருப்பதைப்போல இந்த நாவலில் ஆசிரியரால் கொண்டு வரப்பட்டிருக்கும் பாத்திரங்களான செல்லம்மிணி, மேரி, நீலியக்கா, ராஜேஷ்குமார், இப்ராகிம், செல்வம், சொக்கன் இப்படி ஏராளமானவர்கள் பயன்பட்டிருக்கிறார்கள். ஆறு பிரிவுகளில் பிரிக்கப்பட்டிருக்கும் நாவலின் முதல் பிரிவில் செல்லம்மிணி மனது, செல்வம் இவர்களுக்கிடையேயான கடித உறவுகள் அதில் தங்களுது பிரச்சனைகள் பகிர்ந்து கொள்கிற லாவகம் அற்புதமாய் கையாளப்பட்டிருக்கிறது. இயல்பாகவே ஆசிரியரின் பல நூல்களில் அவர் காட்டும் சுற்றுப்புறசூழல் அக்கறை பல சமயங்களில் வாசகருக்கு உணர்த்தும் வகையில், காற்றில் கலந்த விஷம்-இராசாயன நெடி-தொழிற்சாலையின் பிரசவத்தால் ஏற்பட்டுள்ளது என்று எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. திருப்பூர் நெரிசலில் மூக்கினை சொறிபவர்கள் யாராக இருந்தாலும் - இந்த எழுத்துக்கள் நினைவுக்கு வரும் வகையில் இது அமைந்துள்ளது. நாகாலாந்தினை பார்க்காதவர்கள், நகரத்தின் நாசத்தில் வாழ்பவர்கள், இரைச்சலில் இரையாகும் நபர்கள் மட்டுமல்ல அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய இடமாக நாகாலாந்து வாழ்கின்ற பகுதி இருந்துள்ளது என உணர முடிகிறது.


செகந்திராபாத் பகுதியில் சொக்கனுடன் சென்றதும், சொந்த காரணத்தில் சொக்கன் திரும்பிவிட்டாலும் அங்குள்ள நபர்களுடன் இருந்த நாட்கள் செல்லமிணியின் நிலை எப்படி இருந்தது என்பதை அற்புதமாக எழுதியுள்ளார் ஆசிரியர்.


படிப்பறிவில்லாத சூழலில் சிக்கித்தவிக்கும் ஒரு பெண் தனது ஆசையின் தொடர்ச்சியாய் ஏற்படும் அதிர்வுகளாய் நிகழ்ச்சிகள் அமைகின்றன. மொழிதெரியாத இடத்தில் வாழும் பெண்களின் மனநிலை, சந்தடிசத்தங்கள் அதிகமாய் இருக்கும் இடத்தில் வாழும் சாதாரண குடிமக்களின் நிலைகள் அவற்றுடனே எழுதப்பட்டிருக்கும் கடுமையான நிபந்தனைகள் இதனுடன் ஒத்துப்போகும் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறாள் பெண் என்பதை இந்த நாவலின் மையப் பாத்திரத்தின் வழியாக சொல்வதில் ஆசிரியர் அடைந்திருக்கும் வெற்றி பாராட்டுக்குரியது.


சுற்றுச்சூழலை மாசுபாடுத்தும் பணக்கார கணவான்களை ஆலயத்தில் அறிமுகமாக்கும் எழுத்துக்களில் தன்மனச்சாட்சியை பேசவைத்து சமூகத்தின் மீதான அக்கறையை ஆசிரியர் ஜெயபால் வக்கீல் மூலம் கொண்டு வந்துள்ளது புதுமையானது மட்டுமல்ல சமூக விரிவாக்கம் என்ற பெயரில் லாப கொள்ளையை உறுதிப்படுத்தும் ஆட்களுக்கு எதிராக போராடுவதற்கு உதவியானதும் கூட.


நாவலில் நாகாலாந்து, செகந்திராபாத், திருப்பூர், சுற்றியுள்ள பல இடங்கள் புழங்கப்பட்டிருப்பினும் அமைதி, கலவரம், மாசுபடும் நகரம் என்ற வகைகளுக்குள் அவை அடங்குகின்றன. நதியின் நீர் எல்லா இடங்களிலும் புதியதானதாகும் என்ற விதிக்கு ஏற்ப நாவலின் மையக்கருவான செல்லம்மிணி தான் சந்தித்த ஆட்கள் அனைவருக்கும் உதவும் வகையில் வாழ்வினை அமைத்திருப்பதை லாவகமாகவும் சற்றே பெண்களின் அவலத்தை உணரும் வகையிலும் வெளிப்படுத்தியுள்ளார்.


வாழ்வின் மிச்சங்களில் நதியின் மகத்துவத்தை உணருகிறோமோ இல்லியோ நாவலின் மூலம் ஓடும்நதியின் இயல்பை உணர்ந்திருக்கிறோம்.



( ஓடும் நதி: ரூ150/- அமிர்தா பதிப்பகம் சென்னை பக்கங்கள் 350 )


( மாநில செயலாளர்SNEA =BSNL அதிகாரிகள் தொழிற்சங்க அமைப்பு )

வெள்ளி, 20 ஜூன், 2008

வலை மொழி

வியாழன், 12 ஜூன், 2008

சுப்ரபாரதிமணியன் கதைகள் புத்தகம்

please visit

http://www.viruba.com/result.aspx?p=%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d&q=2

நன்றி !

-----------------

"விருபா வளர் தமிழ்" செயலி

The Coloured Curtain



Translation of Tamil Novel "

Chayathirai"/Subrabharathimanian. Translated by P. Raja. Delhi, B.R. Pub., 2003, xii, 196 p., $11 (pbk). ISBN 81-7646-356-6.
"The novel The Coloured Curtain is a translation of the Tamil Novel Chayathirai which is quite a significant novel in modern Tamil literature. The author portrays the reality of life in Tirupur pleasantly covered with a coloured curtain. He excels in the depiction of sorrow page after page by throwing light on illusion and reality, life and death, beauty and rubbish by tearing open the coloured curtain.
"It is remarkable that a uniform tone of depiction is maintained throughout the novel. Be it the portrayal of hunger or gluttony, love or disappointment, rise or fall, the voice and the feeling too are one and the same.
"The characters come alive in all their passions, appetites, delusions and deceptions. This novel’s devastating attack on human carelessness, greed and irresponsibility will linger with the reader long after he has completed reading it. A solid work of art that will stand the test of time. This novel was awarded the Best Novel Award by the Government of Tamil Nadu in 1999."

பேராண்டிகள்: தாண்டவக்கோனின் நான்காவது குறும்படம்

சுப்ரபாரதிமணியன்
---------------------------
தாண்டவக்கோனின் குறும்பட படைப்புலகத்தில் குழந்தைகள் நிரம்பியிருக்கிறார்கள். பள்ளி போகும் மூன்று குழந்தைகளின் தந்தை என்ற வகையில் அவர்களின் உலகம், அவர்களின் பிரச்சளை அவர் நன்கு அறிந்திருக்கிறார். அவர்களூடே பயணம் செய்து அவர்களின் உலகில் நடமாடவும், அவர்களின் பிரச்சனைகளில் பங்கு பெறவும், சிக்கல்கள் அவர்களுக்குள் பூதாகரமாகும்போது கைகொடுக்கவும் அவருக்கு இயல்பாகிறது. குழந்தை மனத்துடன் அவர்களை அணுகுவதற்கு ஏற்ற மனநிலையை உருவாக்குவது சாமான்யமல்ல; அந்த இயல்பான மனநிலையையும் பக்குவத்தையும் கொண்டவராய் அவர் இருப்பது படைப்பு நிலைக்கு வெகு சாதகமாகிறது. இந்த சாத்தியத்தை அவரின் முதல் குறும்படமான 'பூங்கா' முதல் விளிம்பு நிலையினரான ஊனமான குழந்தைகளின் பிரச்சனைகளை முன் வைக்கிற 'கை', குழந்தைகளுக்கான பிளாஸ்டிக் பற்றிய கல்வி பற்றிய "பாலிபேக்" ஆகியவற்றிலும் காணமுடியும்.
"பூங்கா"வில் அன்பிற்காக ஏங்கும் பெண்குழந்தை பக்கத்து வீட்டு ஏழை பையனுடன் கொள்ளும் நட்பு அன்பிற்கு அடைக்கலமாகிறது. "இப்படிக்கு பேராண்டி" படத்தில் இந்தச் சிறுவர்கள் குடும்பங்களில் மூத்தோரான தாத்தா பாட்டிகள் இல்லாத வெறுமையை உணர்ந்து அவர்களை தேடிக் கண்டடைகிறார்கள். இந்த ஏக்கத்தை நம்முள்ளும் ஆழமாக விதைத்து விடுகிறார். இது அவரின் கலைத்திறனின் வெற்றியாக இருக்கிறது.
படத்தின் ஆரம்பத்தில் அறிமுகமாகும் பள்ளிக் காவலாளி ஒரு சிறுசெடி தன் பராமரிப்பில் இருந்து தவறிப் போவதை கவனிக்கிறபோது துணுக்குகிறார். அதை முதுமையான கைவிரல்களால் நிலத்தைக் கீறி பதியமிட்டு நீர் ஊற்றவும் செய்கிறார். இந்தப் பரிவை தடுக்கி விழுந்து சாப்பாட்டு கேரியரை சிதறடித்து விடும் சிறுவனிடமும் காட்டுகிறார். பெரியோரின் நேசம் இப்படித்தான் படத்தில் இப்படித்தான் படத்தில் அறிமுகமாகிறது. அது காவலாளி என்ற நிலையிலிருந்து தாத்தா பாட்டி பற்றின ஏக்கமாக விரிகிறது. அவர்கள் இல்லாத உலகத்தை நினைத்து பூதாகரமாக்கிக் கொள்கிறார்கள். தாத்தா பாட்டி உலகில் தங்களுக்கான இடமில்லாதது பற்றி அழுகை இருந்தாலும் எதிர்ப்பு தெரிவிக்க இயலாதபடி சூழல் இருக்கிறது (ஆனால் தனிப்பயிற்சி எடுக்கும் ஆசிரியையின் மகள் தன் எதிர்ப்பை சுலபமாகக் காண்பிக்கிறாள். கட்டாய நடனத்தை எதிர்த்து காமிக்ஸ் வாசிப்பில் என்ன தவறு என்று எதிர்க்கேள்வி எழுப்புகிறாள். அவளுக்குள்ளும் தாத்தாபாட்டி இல்லாத ஏக்கத்தை காமிக்ஸ்க்குள் அடக்க வேண்டியிருக்கிறது.)
குழந்தைகள் இருவரின் ஏக்கம் பெற்றோர்களைத் தொற்றிவிடுகிறது. கனவுகளுக்குள் நிரம்பி அதிர்ச்சியடைகிறார்கள். குழந்தைகள் தாத்தா பாட்டி புகைப்பட தேடுதலில் ரத்தம் சிந்த வேண்டியிருக்கிறது. இதன் முடிவாய் தாத்தா பாட்டிகளை கண்டடைகிறார்கள்.
தாத்தா பாட்டி பற்றின ஏக்கங்களே குழந்தைகளின் பார்வையிலிருந்து விரிகிற வேளையில், தாத்தா பாட்டியின் பார்வையோ, நோக்கிலிருந்தோ குழந்தைகள் மீதான பாசம் முறித்து இன்னும் சில நெகிழ்வுகளை அது சமச்žரான பாச வெளியின் விஸ்தாரத்தை குடும்பமெங்கும் விதைத்து விளைந்திருப்பதைக் காட்டியிருக்கும்.
இப்படத்தின் குளோசப் காட்சிகள் பலமாக அமைந்திருக்கின்றன. ஆனால் அழுகை காட்சிகளில் எல்லோரும் " நாடக நடிகர்களாகி" விடுகிறார்கள். பகல், இரவு, கனவு காட்சிகளிலும் ஒரே விதமான முகப்பூச்சு, உடை தரம், ஒளியமைப்பு உறுத்துகிறது. குழந்தைகளின் நுண்ணிய உணர்வுகளின் மத்தியில் தனிபயிற்சி எடுக்கும் ஆசிரியை கணவனுடன் தனிப்பயிற்சி மாணவர்களை உட்காரவைத்தபடி தேநீர் அருந்தும் குரோதமும் தென்படுகிறது. திரைப்படத்தனம் என்பது ஏற்படுத்தும் அழுத்தமான சுவடுகளை விரல்களை எண்ணுவதிலிருந்து எதிர்ப்புக் குரலுக்காக போராட்ட ஊர்வலம் என்ற தொலைக்காட்சி பிம்பம் 'தாத்தா பாட்டி வேணும்" என்று கோஷமிட்டபடி ஊர்வலம் செல்லும் வரைக்கும் நீள்கிறது. இந்தவகை சாதரண நிகழ்வுகளை யதார்த்த தளத்தின் சாதாரண இயல்பை மீறி திரைப்பட வடிவத்தில் அழுத்தமான காட்சிகளாக்குவதில் தாண்டவக்கோன் அவரின் பெரும்பான்மையான படைப்புகளில் வெளிப்படுத்துகிறார் (சமீபத்திய அவரின் சிறுகதை யொன்றிலும் இதை நுணுக்கமாக கவனிக்க முடிகிறது ). வெறும் யதார்த்த தளம் மீறி சுவாரஸ்யப்படுத்தும் தன்மைக்கு இந்த வகை வெளிப்பாடு அவசியம். அந்தவகையில்தான் குழந்தைகளின் குறும்புகள் கூட இடம் பிடிக்கின்றன. அழுகை என்பது குழந்தைகள் காதை மூடும் விபரீதமாகிறது. சித்தப்பா என்ற பணம் மற்றும் பொருள் குறித்த அக்கறை கொண்ட கதாப்பாத்திரம் கனவிலும் அதே போன்ற செய்கையைத்தான் வெளிப்படுத்துகிறது.
குழந்தைகளுக்கு ஏற்பட்ட சிறு விபத்து பற்றி அறிகிற தாத்தா மனநிலையும் பதட்டமும் ஊசியால் நூல் கோர்க்க முடியாத சிக்கலால் நுணுக்கமாக காட்டப்படுகிறது. அதிலிருக்கும் பதட்டம் அன்பு குறித்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முடியாத எல்லோருக்கும் ஏற்படும் அதிர்ச்சிப் படிமமே இப்படத்தின் சாட்சியாகும். பள்ளிக் காவலாளி முதல் மருத்துவர் வரை பலரும் பகிர்ந்து கொள்ளும் அறிவுரைகள், கருத்துக்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றாலும் அவை குழந்தைகளுக்கான உலகில் அழுத்தம் பெறும் விடயங்களாகி விடும் என்பதையும் கவனிகக நேர்கிறது. தொழில் முறையற்ற நடிகர்களின் நடிப்புப் பயிற்சி பலவீனம் துருத்திக் தெரிகிறது. பலவீனத்தை உதற அவர்களும் முயற்சி செய்கிறார்கள். படத்தில் இழையோடும் சோகத்தை குழந்தைகளின் சேஷ்டைகளும் கதாபாத்திர உருவாக்க சுவாரஸ்யமும் தவிர்க்கச் செய்கின்றன. சோக இழையை தவிர்த்துக் காட்டும் முயற்சியாக படத்தின் எழுத்துக் காட்சியில் கதாபாத்திரங்கள் இயல்பாய் சிரித்து வெளிப்படுவது குடும்ப உறவுகளில் தென்படாத அன்பையும், நேசிப்பையும் நோக்கி எள்ளி நகையாடியே இருப்பதற்கான சாட்சிகளாகக் கூட கொள்ளலாம். குழந்தைகளின் உலகில் அவர்களுடன் நேசக்கரம் நீட்டும் முயற்சிகளின் தொடர்ந்து தாண்டவக்கோன் இயங்குவது படைப்புலகிற்கு வரப்பிரசாதம்தான்.
அன்பையும், பாசத்தையும் நெகிழ்வையும் பகிர்ந்து கொள்வது அவரின் படைப்பின் ஆதாரமாக இருக்கிறது. இந்த ஆதாரத்தை தன் படைப்புகளின் அடிநாதமாக அவர் கொண்டிருக்கிறார் என்பதை அவரின் தொடர்ந்த செயல்பாடுகளில் அறிந்து கொள்ள முடிகிறது. அவர் இயங்குகிற காட்சி சார்ந்த செயல்பாடுகள், கலை இலக்கிய முரற்சிகளில் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் குழந்தைகள் பற்றிய அக்கறையிலிருந்து தொடங்கப்பட வேண்டிய செயல்களின் ஆதாரங்களை சுட்டிக் காட்டியபடி இயங்குகிறார் அவர்.
- சுப்ரபாரதிமணியன் ( subrabharathi@gmail.com )
( இப்படிக்கு பேராண்டி.. தாண்டவக்கோனின் நான்காவது குறும்படம்.
எழுத்து, இயக்கம், தயாரிப்பு: தாண்டவக்கோன்.55 நிமிட குறும்படம்
KA ARTS, TIRUPPUR >Ph., 09360254206 )