சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 11 அக்டோபர், 2011

உடனடித் தேவை தமிழ் சாகித்ய அகாதெமி

தமிழ் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தவும், கெளரவிக்கவும் தமிழக அரசு உடனடியாக தமிழ் சாகித்ய அகாதெமியை ஏற்படுத்த வேண்டும் என்று தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வலியுறுத்தினார்.
நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் 3ம் ஆண்டு இலக்கிய விருது வழங்கும் நிகழ்ச்சியில், எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.

23 எழுத்தாளர்களுக்கு ரூ. 3.4 லட்சம் பரிசு

எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் 3ம் ஆண்டு இலக்கியப் பரிசளிப்பு விழா நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், சார்பில் சிறந்த நூல்களைப் படைத்த எழுத்தாளர்கள் 23 பேருக்கு ரூ. 3.4 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.
நாமக்கல் செல்வம் கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, கு.சி.பா.அறக்கட்டளையின் தலைவரும், செல்வம் கல்வி நிறுவனங்களின் தாளாளருமான பொ. செல்வராஜ் தலைமை வகித்தார்.
இலங்கை கொழுந்து இதழாசிரியர் அந்தனி ஜீவா, சேலம் கட்டடப் பொறியாளர் எஸ்.பி. ராமசாமி, பெங்களூர் மென்போருள் பொறியாளர் எஸ்.கே. சம்பத், ராம் கிட்ஸ் நிறுவன நாமக்கல் முதல்நிலை மேளாளர் எஸ். ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விருதுகளின் நோக்கம் குறித்து எழுத்தாளார் கு.சின்னப்பபாரதி உரையாற்றினார்.சிறப்பு விருந்தினராக தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் பங்கேற்று ,எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.
விழாவில், பனிநிலவு நூலை எழுதிய லண்டனில் வாழும் இலங்கை எழுத்தாளர் ரா.உதயணனுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் வெளிநாடு வாழ் எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நூல்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகையாக அளிக்கப்பட்டது.

கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை சார்பாக 2011 ஆம் ஆண்டு
இலக்கியப் பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நூல்கள்
சிறப்புப் பரிசு ரூபாய் பத்தாயிரமும் – விருதும்

பரிசு பெற்றவர்கள்
வெளிநாடு

1. வி. ஜீவகுமாரன்(டென்மார்க்)
2. நாகரத்தினம் கிருஷ்ணா (பிரான்ஸ்)
3. சை. பீர்முகமது (மலேசியா)
4. நடேசன் (ஆஸ்திரேலியா)
5. தெணியான் (இலங்கை)
6. கே. விஜயன் (இலங்கை)
7. சிவசுப்ரமணியன் (இலங்கை)
8. தனபாலசிங்கம் (இலங்கை)
9. கலைச் செல்வன் (இலங்கை)
10. உபாலி லீலாரத்னா (இலங்கை)
11. புரவலர் ஹாசிம் உமர்


பரிசு பெற்றவர்கள்
தமிழ்நாடு
------

12. ஆர். எஸ். ஜேக்கப்
13. சுப்ரபாரதிமணியன்
14. ப. ஜீவகாருண்யன்
15. குறிஞ்சி வேலன்
16. மயிலை பாலு
17. லேனா தமிழ்வாணன்.
18. வெண்ணிலா
19. ஜீவபாரதி
பூங்குருநல் அசோகன்
20. டாக்டர். H. பாலசுப்ரமணியம் – டில்லி
21. என். சிவப்பிரகாசம்.


சுப்ரபாரதிமணியன்