சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 23 நவம்பர், 2009

குறு குறு குறும்படங்கள்

குறுகுறு குறும்படங்கள்
=====================

1. Texture of Soul ( Direction : Deepath Gera )
--------------------------------------------------------------------

தொழு நோய் பற்றிய படம். ஒரு வகுப்பில் தொழு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். 2ம் 2ம் எவ்வளவு என்று கேட்கிறார். மாணவர்கள் 4 என்கிறார்கள். தொழு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவன் கையை மேலே நீட்டி “ 0 “ என்கிறான். அவனின் கைகளில் விரல்கள் இல்லை.


2. Stair case ( Direction : George Mangalath Thomas )

முதிய பெண்ணொருத்தி கதவை பூட்டி விட்டு மாடியிலிருந்து கீழ் இறங்குகிறாள். இறங்க சிரமப்படுகிறாள். தரைப்பகுதிக்கு வந்த பின் மேலே பார்க்கிறாள். மீண்டும் படியேறுகிறாள். இறங்கியதை விட ஏறுவதற்கு வெகு சிரமப்படுகிறாள். வெகுவாக சிரமப்படுகிறாள். மாடிக்குச் சென்று கதவைத் திறந்து அண்ணாந்து பார்க்கிறாள். பேன் ஓடிக் கொண்டிருக்கிறது. அதை அணைப்பதற்காக ஸ்விட்சை பார்த்து, ஆப் செய்கிறாள். பேன் நிற்கிறது. மிகுந்த சிரமத்துடன் மீண்டும் படிகளில் இறங்குகிறாள்.


3. மலைகளை.... ( இயக்கம் : ராஜா சந்திரசேகர் )

” மலைகளை வரைகிறவன் ஏறிக் கொண்டிருக்கிறான் கோடுகள் வழியே” என்ற கவிதைவரிகளுக்கான ஓவிய சித்திரம் இது. இதையடுத்து தற்போது வெளிவந்திருக்கும் மூதாட்டி என்ற கவிதையின் ஒளி வெளிப்பாடும் மிகவும் உருக்கமானது.


4. மரம்.. மரம் அறிய ஆவல் ( இயக்கம்: தி. சின்ராஜ்)

ஒரு நிமிடப்படம் இது. மரங்கள் வெட்டப்படுவதன் வலியை மலையின் இயற்கை அழகு மூலமும், மரத்தை வெட்டி கோடாரிக்கு கைப்பிடியாவதும், அதுவும் மரம் வெட்டப் பயன்படுவதும், குருவிகளின் கதறலாய் மரம் பற்றிய வாசகமும் கொண்ட படம்.

கொஞ்சம் மண்ணும், கொஞ்சம் சூரியனும்




குறும்படங்கள்: 1

15 ஆம் நூற்றாண்டின் கவிஞர் கபீரை முன் வைத்து அயோத்தி ராமனின் "போராளி"த்தனத்தை அலசுவதற்கு "கபீர் காடா பஜார் மெய்ன்" என்ற படம் உருவாகக்கப்ப்ட்டிருக்கிறது. பிராமணன் பெரியவனா, வேதம் பெரிதா, மனிதத்துவம் பெரிதா என்ற கேள்வியை, ராமன் அயோத்தி பிரச்சினையை முன் வைத்து யோசித்தவர் போல்"நன்றாய் இருப்பவை ஒன்றே" என்கிறார் கபீர். ஆனந்த் பட்வர்த்தனைப் போல் அயோத்திப் பிரச்சினையை அலசுவதற்கு இந்தப்படம் உதவியது என்றாலும் , ராமனை முன் வைத்து கபீரினுள் சென்று நோக்குவதற்குமான உபாயமாக இருக்கிறது . கபீரைப்பற்றிய பல தொன்மங்கள் உள்ளன.

1.கபீர் முஸ்லீம் நெசவாளி. ஆனால் பிரார்த்தனைகள், சடங்குகளில் நம்பிக்கையில்லாததால் முஸ்லீம்கள் அவரி நிராகரிக்ககிறார்கள். கபீர் என்ற சொல்லுக்கு "அல்லாஹ்" என்ற பொருளுமுண்டு.

2. கபீர் இந்து. மூஸ்லீமால் வளர்க்கப்பட்டவர்.

3. தாமரை மலரில் பிறந்தவர். சாதாரண மனிதரல்ல.அவதாரபுருசர்.

4. விஸ்ணுவின் அவதாரம்

5. ஒரு சூபி, நாட்டுப்புறக்கலைஞன்

இந்த வெவ்வேறு கோணங்கள் பற்றிய பார்வைகளை பலர் முன் வைத்திருக்கிறார்கள். அந்த அவதானிப்பபுகளில் அவரவர் பக்கமிருந்து சான்றுகளை அந்தந்த தரப்பினர் முன் வைக்கிறார்கள். மரத்தின் வேர்களை அறிய முடியாதது போல கபீரின் மூலத்தையும் அறிய முடியாமலிருக்கிறது. சாதாரண மனிதராக இருந்து அதி அற்புத பிறவியாக்கப்பட்டிருக்கிறார்.

படத்தின் இயக்குனர் சப்னம் வீரமணி கபீரின் கவிதைகளைப் பாடும் கவிஞர்களையும், பாடகர்களையும் தேடிச் சென்று பேட்டி கண்டிருக்கிறார். கபீரை ஆதர்ச மூச்சாகக் கொண்டு அவர்கள் வாழ்கிறார்கள். இந்தத் தேடலை இந்தியாவில் மட்டுமல்ல பாக்கிஸ்தானுக்கும் சப்னம்வீரமணி நீட்டித்திருக்கிறார்.

நாட்டுப்புறப்பாடல்களின் தாக்கமும், பாடும் முறைகளும் கபீருக்குள் இருப்பதைக் கண்டறிந்து நாட்டுப்புறப்பாடகர்கள், அவரைக் கொண்டாடுகிறார்கள். சூபி கவிஞர்களும் , பாடகர்களும் நாங்கள் அவரை உள்வாங்கிக் கொண்டதைப் போல யாரும் உள்வாங்கி தெளிவு பெற்று விட முடியாது என்கிறார்கள். ஒரு கவிஞன் என்ற அளவில் சாதாரண மக்களின் மனதில் இவ்வளவு ஆழப்பதிந்திருப்பதைப் பார்க்கும் போது இந்த அளவு தென்னிந்தியாவில் யாராவது மக்களின் மனதில் ஆழத்திற்கு சென்றிருப்பார்களா என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. கபீர் என்னும் கவிஞன் அதிர்ஷ்டசாலி என்று தோன்றுகிறது. ராமன் பற்றி கபீர் சொன்ன மாயாவாதங்களை இப்படத்தில் ராமனுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பேசும் மக்கள் தங்களைத் திரும்பிப் பார்த்ததுக்கொள்ள இப்படம் ஏதுவாகலாம்.

குறிப்புகள்:

1. எனது ‘சாயத்திரை’ நாவலை ஹிந்தியில் திருமதி மீனாட்சி பூரி மொழிபெயர்த்திருக்கிறார். கன்னடத்தில் தமிழ் செல்வி ‘ பண்ணத்திரா’ என்ற தலைப்பிலும், மலையாளத்தில் ஸ்டேன்லி ‘ சாயம் புரண்ட திர’ என்ற தலைப்புகளிலும் மொழிபெயர்த்திருக்கிறார்கள். மீனாட்சி பூரி ‘ ரங்ரங்கிலி சாதர் மெஹெலி’ என்று தலைப்பிட்டிருந்தார். அவரிடம் விளக்கம் கேட்டபோது கபீரை வடஇந்தியர்கள் நன்கறிவார்கள். சாதாரணமக்களுக்கும் பரிச்சயமானவர். அவர் ஒரு நெசவாளி. நெசவு, சாயத்தோடு சம்பந்தம் கொண்டது என்பதால் இத்தலைப்பினை கபீரின் கவிதைகளில் இருந்து எடுத்தேன் என்றார். சுற்றுச்சூழலை மையமாக வைத்துத் தலைப்பிட்டால் சட்டென்று விளங்காமல் போய்விடும்.

2. கபீரை நாடகமாக்குகிற ஒரு நாடகாசிரியர்.: கபீர் பற்றின மூலம் சர்ச்சசைக்குரியதே. கபீருக்கு எந்த வகையில் தாடி வைப்பது, எப்படி தொப்பி வைப்பது, எந்த வகை உடைகளை அணிவிப்பது என்பது ஒவ்வொருமுறையும் சர்ச்சசைக்குறியதாகிறது. நானும் என் மனநிலை தோன்றுவதற்கேற்ப தாடி வைக்கிறேன்,தொப்பி, உடைகளை வடிவமைக்கிறேன். சர்ச்சையும் தீராது. கபீர் இன்றைக்கும் சர்ச்சைக்குறிய கவி புருசர்தான்.

3. ‘சப்னம்’ வீரமணியின் இன்னொரு விவரணப்படம் ‘ கோல் சுந்தர் ஹை’ கபீரின் பாடல்களை மேடைகளில் பாடுபவரான குமாரகவுரவ்வை முன் வைத்து கபீரைப்பற்றின ஒரு மீள் பார்வையை இதில் வெளிப்படடுத்துகிறார். குமார் 1947ல் பிறந்தவர். மிகவும் இள வயதிலேயே பாடகராகப் பரிணமித்தவர். 23 வயதில் எலும்புருக்கி நோயால் அவதிப்பட்டார். பாடுவதற்குத் தடையிருந்தது.1952ல் அதிலிருந்து மீண்டு, மீண்டும் கச்சேரிகள் செய்கிறார். கபீரை முமுமையாக உள்வாங்கிக் கொண்டு வெளிப்படுத்தியவர் என இதில் இடம்பெற்றிருக்கிற பல்வேறு பேட்டிகளில் சிலாகரிக்கப்படுகிறார். சுபாமுக்தல், ராம்பிராசாத், திபாங்கே போன்றோரின் விளக்கமானப் பேட்டிகளும் கபீர் வாழ்ந்ததாகச் சொல்லப்பட்ட இடங்களும், குமாரின் வாழ்க்கை நிகழ்வுகளும் இதில் விரிவாகப் பதிவாகியிருக்கின்றன. "ஒருவன் செத்தால் தூக்கம் சில நாளைக்குக் கூட வரும். ஞானவான் செத்தால் அவர் கூடவே இருப்பார். கபீர் ஞானவான்" என்கிறார் ஒரு நாட்டுப்புறப்பாடகர்.

subrabharathi@gmail.com

வியாழன், 12 நவம்பர், 2009

திருப்பூரில் குறும்பட பயிற்சி முகாம்

==திருப்பூரில் குறும்பட பயிற்சி முகாம்
=================================

* டிசம்பர் 24 முதல் 27 வரை/திருப்பூர் முத்து மஹாலில்
* கட்டணம் ரூ 1,700/ மட்டும்
* சிறப்பு பயிற்சியாளர்கள்:

இயக்குனர்கள் பாலு மகேந்திரா, கே ரங்க்ராஜ் ( உதய கீதம் ) அ, நந்தினி ( திரு திரு துறு துறு )
எழுத்தாளர்கள் பா ராகவன், எஸ் ராமகிருஸ்ணன், சுப்ரபாரதிமணியன்
ஒளிப்ப‌திவாள‌ர் தாமு, ப‌ட‌த்தொகுப்பாள‌ர் உத‌ய‌ச‌ங்க‌ர், இசைய‌மைப்பாள‌ர் சுரேஸ் தேவ்
ப‌திவுக்கு: VRP Academy of Arts, 1503, ஞான‌கிரி சாலை, காம‌ராஜ‌புர‌ம் கால‌னி, சிவ‌காசி 626 189 கைபேசி: 99524 24292, manohar_vrp@yahoo.com
===========================================================

திருப்பூர் அரிமா விருதுகள்
===========================

* அரிமா குறும்பட விருது ரூ 10,000 பரிசு( கடந்த 2 ஆண்டுகளில் வந்த குறும்படங்களை அனுப்பலாம்)
* அரிமா சக்தி விருது ( கடந்த 2 ஆண்டுகளில் வந்த பெண் எழுத்தாளர்களுக்கானப்
நூல்களில் 2 பிரதிகள் அனுப்பவும் )
* சென்றாண்டு பரிசு பெற்றோர்:

அரிமா குறும்பட விருது :
1. கார்த்திக் சோமசுந்தரம் , சென்னை( நானும் என் விக்கியும் )
2. பாலு மணிவண்ணன், சென்னை ( அம்மாவும், மம்மியும் )
3. ஜோதிகுமார் , திருப்பூர் ( வறுமையின் கனவு )
4. வி.ஜெகதீஸ்வரன், தேனி ( தொடர்பு எல்லைக்கு வெளியே )
5. தாண்டவக்கோன், திருப்பூர் ( இப்படிக்கு பேராண்டி )
6.எஸ். ராஜகுமாரன், சென்னை ( 21 இ, சுடலைமாடன் தெ
7.எஸ்.ஜே. சிவசங்கர்,கன்னியாகுமரி( இரங்கலும், இரங்கல் நிமித்தமும்)
8. விஜயகுமார், சேலம் ( குப்பை)
9.மணிமேகலை நாகலிங்கம்,சென்னை( த்தூ)
10. நா. செல்வன், நெய்வேலி ( இருட்டறை வெளிச்சங்கள் )

சிறப்புப் பரிசுகள்:
1. து.சோ.பிரபாகர், திருப்பூர் ( தக்காளி )
2. தி.சின்ராசு, மேட்டுப்பாளையம் ( மரம், மரம் அறிய ஆவல் )
3. நம்பி, அவிநாசி ( Stop child trafficking )
* அரிமா திரைப்படவிருது: மு. ராமசாமி. தஞ்சை
* அரிமா நாடக விருது : சி.எச். ஜெயராவ், சென்னை

அரிமா சக்தி விருது
===================

1. அர‌ங்க‌ ம‌ல்லிகா, சென்னை ( நீர்கிழிக்கும் மீன், ‍க‌விதைக‌ள்)
2. ச‌.விஜ‌ய‌ல‌ட்சுமி, சென்னை ( பெருவெளிப்பெண், ‍க‌விதைக‌ள்)
3. மு.ஜீவா, கோவை ( பின்ந‌வீன‌த்துவ‌மும், பெண்ணிய‌ செய‌ல்பாடுக‌ளும்)
4.மித்ரா, சித‌ம்ப‌ர‌ம் ( ஜ‌ப்பானிய‌ த‌மிழ் ஹைக்கூக்க‌ள்‍,க‌ட்டுரைக‌ள்)
5.ச‌க்தி ஜோதி, திண்டுக்க‌ல் ( நில‌ம்புகும் சொற்கள்,‍க‌விதைக‌ள்)
6.ர‌த்திகா, திருச்சி (தேய்பிறையின் முத‌ல் நாளிலிருந்து க‌விதைக‌ள்)
7.ச‌க்தி அருளான‌ந்த‌ம், சேல‌ம் (பறவைகள் புறக்கணித்த நகரம் ‍‍,‍கவிதைகள்)
சிற‌ப்புப் ப‌ரிசுக‌ள்
==============
1.ச‌ந்திர‌வ‌த‌னா, ஜெர்ம‌னி ( ம‌ன‌ஓசை, சிறுகதைகள்)
2.ஜெயந்தி சங்க‌ர், சிங்க‌ப்பூர் ( ம‌ன‌ப்பிரிகை, நாவ‌ல்)
3.நா.ச‌ண்முக‌வ‌டிவு, கோவை(வான்விய‌ல் சாஸ்திர‌ம்)
4.மு.ச‌.பூங்குழ‌லி, ப‌ழ‌னி (எரிம‌லைப்பூக்க‌ள், கட்டுரைக‌ள்)

அனுப்ப‌ வேண்டிய‌ முக‌வ‌ரி:
========================

ம‌த்திய‌ அரிமா ச‌ங்க‌ம், 39/1 ஸ்டேட் பேங்க் கால‌னி,
காந்திந‌க‌ர், திருப்பூர் 641 603.
தொலைபேசி: 0421 645188, 09344690640,09443559215

===============================================================

திருப்பூரிலிருந்து சில புதிய குறும்படங்கள்

திருப்பூரிலிருந்து சில புதிய குறும்படங்கள்
==========================================
1. சிட்டுக்குருவிகளைத் தொலைத்த மனிதர்களின் கதை: ( கோவை சதாசிவம் )‌

சிட்டுக்குருவிகளின் வகைகள், அறிவியல் பெயர், அவற்றின் சுபாவம் இவற்றோடு அவற்றின் இருப்பு குறைந்து வருவதைப் பற்றி சொல்லும் படம். அவற்றின் அழிவுக்குக் காரணமான விசயங்களையே ஆராய்கிறது. 16 நிமிட குறும்படத்தில் அவசரம் துரத்தும் தார் சாலைகளில் குருவிகளைப் பற்றின அக்கறையைச் சொல்லும் படம்


2. வறுமையின் கனவு : ( ஜோதிகுமார்)

ஜோதிகுமாரின் இரண்டாவது குறும்படம் இது. வட்டிக் கொடுமையைச் சித்திகரிக்கிறது. வட்டி வாங்குபனின் க‌ழிவிரக்கம், வட்டி கொடுப்பவனின் அதிராம் இவற்றினூடே தென்படும் மனித முகங்களை ஒருங்கே இணைத்துள்ளார். சமூக அவலம் என்ற வகையில் அதை முன்னிருத்துவதில் நிறை பெறுகிறது.எஸ்.ஏ பாலகிருஸ்ணன், நாகராஜன் போன்றோரின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது.
3. தூரம் அதிகமில்லை ( ராகுல் நக்டா)

பள்ளிச் சிறுவன் மனதில் ஏற்படும் எண்ண மாறுபாட்டையும் அதை அவன் கல்வியினூடே களைந்து கொள்வதையும் குறிக்கிறது. மாணவர்களைப் பற்றிய ஒரு கல்லூரி மாணவனின் படம்.

4. த‌க்காளி : ( து சோ பிர‌பாக‌ர் )

ம‌டிந்து கொண்டிருக்கும் விவசாயத்தையும் அதன் வேராய் இருக்கும் தொழிலாள‌ர்களையும் த‌ட்டி எழுப்பும் சிறு முய‌ற்சி என்கிறார் பிரபாகர். தக்காளி என்ற விளை பொருளை முன் வைத்து விவசாயிகளின் நிலையை எடுத்துக் கூறுகிறது. பின்ன‌ணி உரையாடல் மூலம் கதை போல் நகர்த்திச் செல்வது நல்ல முயற்சி .

5. சும‌ங்க‌லி : ( ர‌விக்குமார்/சுப்ர‌பார‌திம‌ணிய‌ன் )

நவீனக் கொத்தடிமைத்தனமாய் இன்றைக்கு பஞ்சாலை தொழிற்சாலைகளில் இளம் பெண்களை வேலை வாங்கும் திட்டமும், அது சார்ந்த விமர்சனமும் இந்தக் குறும்படத்தில் பதிவாகியிருக்கிறது.கவிஞர் சுபமுகியின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது

சனி, 7 நவம்பர், 2009

சாயக்கழிவு

இந்த இடம்
தடை செய்யப்படலாம்
தடை செய்யப்படுவதற்கு முன்
ஒரு முறை வந்துவிடும் போங்களேன்
இந்த இடம்
நதியும், சாயக்கழிவும், ஒன்று சேரும்
இடம்
இதற்கப்புறம் நதி
சாயக்கழிவுகளின் சங்கமம்தான்
பிறர் வருகைக்கென்று
இந்த இடம் தடைசெய்யப்படலாம்
தடை செய்யப்படுவதற்கு முன்
ஒரு முறை வந்து விட்டுப் போங்களேன்


சுப்ரபாரதிமணியன்

சாகித்திய அகாதமி: ரஸ்யாவில் உலக‌ப்புத்தகக்கண்காட்சியில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன்

சாகித்திய அகாதமி: ரஸ்யாவில் உலக‌ப்புத்தகக்கண்காட்சியில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன்



ரஸ்யாவில் நடைபெற்ற உலகப்புத்தக்கக்கண்காட்சியில் சாகித்திய அகாதமி குழுவில் சாகித்திய அகாதமியின் தமிழ் குழு ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பங்கு பெற்றார். " 2009: இந்தியா நட்பு நாடு " என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இவ்வாண்டு இந்திய எழுத்தாளர்களும், கலைஞர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். சிற்பி குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்திய கதை மரபைப்பற்றிப் பேசியிருக்கிறார்.இந்தியாவில் இருந்து கலந்து கொண்டவர்களில் சிலர்: சச்சிதானந்தன் ( மலையாளம் ), அசோக்வாஜ்பாய் ( இந்தி ) , அபர்ணா ( மராத்தி) , பாமா ( தமிழ் ). சிற்பி ரஸ்யா செல்வது இது இரண்டாம் முறை.அவரின் அனுபவங்களை பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் " இரு நகரங்களின் கதை " என்ற தலைப்பில் பகிர்ந்து கொண்டார்.



உலக இலக்கியத்தின் ஆதர்சமாக இருந்த ர‌ஸ்ய இலக்கியம் இன்று குறிப்பிடும்படியாக இல்லை.எழுத்துச் சுதந்திரம் இருந்தாலும் எழுச்சி மிக்க இலக்கியம் இல்லை. அதுவும் குழந்தைஇலக்கியப் படைப்புகள், புத்தகங்கள் வெகு சாதாரண‌மான தரத்தில் இருந்தன. இந்தியாவில் இருந்து கொண்டு சென்ற குழந்தை இலக்கிய நூல்கள் அங்கு காட்டப்பட்ட்ன.பல மடங்கு உயர்ந்த தரத்தில் இருந்தன‌. பழய செய்திகளே மீண்டும் மீண்டும் நினைவு கூறப்பட்டன.கவிதை வாசிப்புகள், எழுத்தாளர்களுடனான சந்திப்புகளில் புதிய உத்வேகம் இல்லை. புத்தக்க கண்காட்சியில் ஏகதேசம் ஆங்கில நூல்கள் இல்லை என்னும்படி வெகு குறைவாக இருந்தன.இந்தியாவில் இருந்து வந்திருந்த நடன நிகழ்ச்சிகள் உரத்தச் சப்தத்துடன், நேர்த்தியில்லாமல் இருந்தன. ஆனால் ரஸ்ய நடனங்களின் நளினமும், நேர்த்தியும் கவர்ந்தன.


பயணத்தில் இரு நகரங்களைத் தரிசித்தோம்.



கிரம்ப்ளின்: ஊசியிலைக்காட்டுக் கோட்டை என்பது அர்த்தம்.இரு நதிகளின் சந்திப்பில் இந்த நகரம் இருக்கிறது. இங்குள்ள மியூசியங்களைக் காண ஒரு மாதமாகும்.

சிவப்புக்கற்களால் கட்டப்பட்டதால் ரெட் ஸ்கொயர் என்று பெயர் வந்திருக்கிறது.இங்கு லெனின் உடல் இன்னும் இருக்கிறது. அது 1935 ல் அடக்கம் செய்யப்பட்டது. 1953ல் ஸ்டாலின் உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டது ஆனால் பின்னர் அது இடமாற்றம் செய்யப்பட்டுருக்கிறது.கிரம்ளின் கோட்டைக்குள் நிறைய தேவாலயங்கள் இருக்கின்றன.ஒவ்வொரு அரசரும் ஒவ்வொரு தேவாலயத்தில் வழிபாடு செய்ய தனித்தனியாகக் கட்டியதால் அவ்வளவு தேவாலயங்கள். 1918 தேவாலய வழிபாடுகள் நிறுத்தப்பட்டு 1991ல் மீண்டும் துவங்கியிருக்கின்றன. ஜார் மன்னனின் ஆட்சியின் ஆடம்பரம், ஜாரினா அரசியின் ஊடதாரித்தனம் ஒவ்வொரு இடத்திலும் தெரிகிறது.ஜார் மணி 130 டன் எடை கொண்டது சிறப்பானது.பாஸ்டர்நாக்கின் கிராமத்திற்கு சென்றிருந்தோம்.நாபில் பரிசு வாங்காதே என கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்.வாங்கவில்லை. நாடு கடத்தப்பட்டார். நேருவின் படம் அவரின் அறையில் இருகிறது.அவரை இந்தியாவிற்கு வாருங்கள் என‌வரவேற்ற ஆவணங்கள் இருந்தன.


மாஸ்கோ நகரத்தில் விலை வாசி தாறுமாறாய் இருக்கிறது நாணயமில்லாத மனிதர்களால் நிரம்பி வழிகிறது.நுகர்வுக்கலாச்சாரம் கோலோச்சுகிறது. மெட்ரோக்களில் விலை மாதர்கள் நிரம்பத் தென்படுகிறார்கள்.முதலாளித்துவ ஆட்சியின் கூறுகளைக் காண முடிகிறது.பணத்தேவை அதிகரித்து விட்டது. கார்ப்பரேட் கம்பனிகள் நிறைய செயல்படுகின்றன்.மாஸ்கோவில் தனியார் கட்டிடங்கள் இல்லை என்றாலும், வெளிப்பகுதியில் புதிதாய் தனியார் கட்டிடங்கள் ஏராளமாய் வந்தி விட்டன என்பதே அரசு பிடியில் இருந்து தனியார் மயம் கோலொச்சுவதை காண முடிகிறது.ஸ்டாலின் காலக் கொடுமைகளைப் பற்றி ஒருவரிடம் கேட்டதற்கு " We are pigs, we need Stalin " என்றார். அது அவரின் தனிப்பட்டக் கருத்தாக இருக்கலாம் என்றார்கள் நண்பர்கள் .


துருக்கியின் இஸ்தான்புல் ஒவ்வொருவரும் காண வேண்டிய மிகச் சிறந்த ஒழுங்கமைப்பும் அழகும் கொண்ட நகரம்.


இரு நகர எழுத்தாளர்களும் இந்தியாவுடனான இல‌க்கிய பரிவர்தனை மிக அவசியம் என்றனர்.




=சுப்ரபாரதிமணியன்



( thinnai.com) 

திங்கள், 2 நவம்பர், 2009

கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் கவிதைகள் ஆங்கிலத்தில்

கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் கவிதைகள் ஆங்கிலத்தில்
====================================================


க‌விஞ‌ர் சிற்பி பால‌சுப்ர‌ம‌ணியனின் தேர்ந்தேடுக்க‌ப்ப‌ட்ட‌க் க‌விதைக‌ளின் மொழிபெய‌ர்ப்பு ஆங்கில‌ நூலாக‌ ' SIRPI POEMS : A JOURNEY ' வெளிவ‌ந்துள்ள‌து. சிற்பி அவர்கள் இரு முறை சாகித்திய அகாதமி பரிசு பெற்றிருக்கிறார். " ஓடும் நதி " கவிதைத் தொகுதிக்காகவும் ( 20030), அக்னிசாட்சி மலையாள நாவல் மொழிபெயர்ப்புப் பணிக்காகவும். சாகித்திய அகாதமியின் தமிழ் ஒருங்கிணைப்பாளராகவும் தற்போது உள்ளார். ‌டாக்ட‌ர் கே எஸ் சுப்ர‌ம‌ணிய‌ன் மொழிபெய‌ர்த்திருக்கிறார்.அக்க‌விதைகள் 1968லிருந்து 2005 வ‌ரை சிற்பியால் எழுதப்ப‌ட்டவற்றில் சில ஆகும். ( ரூ 100, 136 ப‌க்க‌ங்க‌ள்: வெளியீடு: கோல‌ம், 106( 50 ), அழ‌க‌ப்பா குடியிருப்பு, பொள்ளாச்சி 641 001.) டாக்ட‌ர் கேஎஸ் எஸ் இதுவரை 6 நாவ‌ல்க‌ள், 4 குறுநாவ‌ல் தொகுப்புக‌ள், மூன்று த‌மிழ் க‌விதை‌த் தொகுப்புக‌ள் ஆகிய‌வ‌ற்றை மொழிபெய‌ர்ப்பில் வெளியிட்டுள்ளார். அவ‌ரின் நானு க‌ட்டுரைத் தொகுப்புக‌ள் வெளிவ‌ந்துள்ள‌ன‌.

டாக்ட‌ர் கே எஸ் சுப்ர‌ம‌ணிய‌ன் சிற்பி கவிதைகளின் மொழிபெயர்ப்பு பற்றி கூறுகிறார்: Sirpi a major poet in the modern era of Tamil Literature. His reputation as a poet is not merely based on the many awards which have come his way e.g. the Sahitya Akademi Award. The quality and range of his poetic creativity , his significant contribution to the genere of Tamil New Poetry spanning about four decades; his immersion in modern Tamil literature , which being deeeply rooted in the rich and ancient Tamil poetic tradition; and a rare capacity to combine in himself depth of scholarship with creative sensitivity-these attributes account for his position in the modern Tamil literary field. I consider it a pleasant privilege to produce a book of translation of selected poems of this respected poet, and a dear friend.


Sirpi scales the peaks of his creative outpouring in his award winning collection " Oru Gramaththu Nadhi " . "The river of a village " revisiting his
formative years in is native village. This is a delectable string of charming vignettes of lyrical nostaligia. The poet is also facinated and overwhemlmed by the 'vishwaroopa' of the universe , and the awesome power and fury of nature' and can conjure up a stunning vision of the sun being trashed into the bowels of distant space, plunging the earth into an open ended epoch of unrelieved Darkness. These pen pictures are riveting and find a prominent place in this volume.




ஒரு க‌விதை மொழிபெய‌ர்ப்பில்:
THE BODY THE MIND
===================
He
Slowly sinking
into quicksand.
Frightened eyes
Saw Knees disappearing
Struggling hands
Buried
Sand covered the chest.
Sand
Creeping up the neck
Lo, In his eyes
Rapture bloomed.
At some distance
A young shepherdes
Sans blouse.
( Udalum Ullamum : 2005)