சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 22 டிசம்பர், 2010

பயணத் தொடர்:

1. பதற்றம்

பதற்றத்தில் ஆங்கிலத்தில்தான் கத்திக்கொண்டிருக்கிறேன் என்று உணர ஒரு நிமிடம் ஆயிற்று. எப்படி ஆங்கில பிசாசுள் அகப்பட்டேன் என்று தெரியவில்லை. சேவ் அலோசியஸ் அவரின் கைப்பை சோதனை முடிந்த திருப்தியில் தூரம் போய் உட்கார்ந்திருந்தார். அனைவரின் கல்கத்தா, டாக்கா விமான டிக்கெட்டுகளையும் ஒருங்கிணைத்து சரிபார்க்கிற வேலையில் இருந்தார். என் கைப்பையைக் காணவில்லை என்பதைத்தான் பதற்றத்துடன் ஆங்கிலத்தில் கத்திக்கொண்டிருந்தேன். தமிழில் ஏன் கத்தவில்லை என்று ஆச்சர்யமாக இருந்தது.

கோவை விமான நிலையத்தில் கைப்பை பரிசோதனைக்காகச் சென்றதில் எனது பை மட்டும் திரும்பவில்லை. என்னவாயிருக்கும் என்று பதற்றமடைந்திருந்தேன். சற்று நகர்ந்ததும் அவினாசி பாஸ்கரன் என்ன என்று விசாரித்துவிட்டு சோதனையிடத்தில் இருந்த பெண்மணியிடம் இந்தியில் பேச ஆரம்பித்தார். அவர் சரளமான இந்தி பேசியது ஆச்சர்யமளித்தது. அவர் ஏன் இந்தியில் பேசுகிறார். தமிழிலேயே கூட கேட்கலாம். அல்லது ஆங்கிலத்தில். ஆனால் சோதனையிடப் பெண்ணின் உடம்பும் முக வாகும் வடக்கத்திய தோற்றத்தைக் கொடுத்து இந்தியில் பேச வைத்திருக்குமா? சட்டென ஆங்கிலமும் அவருக்குக் கைகூடவில்லையா என்று ஆச்சர்யமாக இருந்தது. அந்தப்பெண் கீழே கிடந்த என் கைப்பையைக் காட்டினாள். அதனுள் கைப்பேசி, பர்ஸ் உட்பட எல்லாமும் இருந்தன. பாஸ்கரன் மீண்டும் சரளமாக இந்தியில் பேசியதும் இந்த இளம்பெண் சோதனைக்கு மீண்டும் என் கைப்பையை அனுப்பினாள். அது மீண்டு வந்தபோது என் பையைத் திறக்கச் சொன்னாள். ஒரு புத்தகப் பண்டல் முழுமையாக உறையிடப்பட்டதாக இருந்தது. அதை சேவ் அலோசியஸ் என்னிடம் விமான நிலைய முகப்பில் கொடுத்திருந்தார். அதனுள் எனது தேநீர் இயைடவேளை நாவலின் திருமதி பிரேமா நந்தகுமாரின் மொழிபெயர்ப்பிலான ஞழவந ருறேசவைவவந« டுநவவநசளஞ ஆங்கில பிரதிகள் மற்றும்¬ கூ£ந டுயளவ ளுலஅடிலே என்ற எனது தேர்ந்தெடுக்கப்பட்டக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் பிரதிகள் (ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் கோவை பாலகிருஷ்ணன்) இருந்தன. அவை இரண்டையும் சேவ் அலோசியஸ் வெளியிட்டிருந்தார். வங்கதேசம் செல்வதையொட்டி சில பிரதிகளை அவரிடம் கேட்டிருந்தேன்.



சோதனைப் பெண் பண்டலைக் காட்டி என்னவென்று கேட்டார். கூ£ந ருறேசவைவந« டுநவவநசள பிரதியொன்று பையில் இருந்ததை எடுத்துக்காட்டினேன். Òஓ... எழுத்தாளரா... புத்தகமாÓ என்றாள்.

அந்த இரண்டு நூல்களுமே நடுப்பக்கத்தில் பின் அடித்த விதமான பைண்டிங் முறையில் இருந்ததால் காப்பர் ஒயர்களாகவும், அவற்றின் துண்டுகளாகவும் தெரிந்திருக்கிறது. பரிசோதனையில் குண்டுகளும், அபாயப் பொருட்களும் இப்படித்தான் ஒயர்களாகவும். துண்டுகளாகவும் தென்படுமாம். புத்தகங்கள் ஒன்றுடன் ஒன்று அடுக்கப்பட்ட விதம் ஏதோ பல எலக்ட்ரானிக் கார்டுகளை ஒன்று சேர்த்து வைத்தவிதமாய் இருந்திருக்கிறது. அந்த பண்டல் புத்தகங்களது என்று தெரிந்ததும் கைப்பை என்னிடம் கொடுக்கப்பட்டது. ஆசுவாசமாக இருந்தது. பதற்றம் குறைந்துவிட்டது.

ஒரு மாதத்திற்கு மேலாக வங்கதேசம் பயணத்தையொட்டி பதட்டம் வந்துவிட்டிருந்தது. அலுவலகத்திலிருந்து பெறப்படவேண்டிய என்ஓசி தரப்படாமல் இருந்தது. சில புரிதல்களுக்காக அந்தக் கோப்பு திருப்பி அனுப்பப்பட்டு சங்கடமளித்துக் கொண்டிருந்தது. எனது முந்தின வெளிநாட்டுப் பயணங்களில், இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், சிங்கபூர், இந்த தாமதமும் மன உளைச்சலும் ஏற்பட்டிருக்கவில்லை. வழக்கமாய் கணக்கியல் துறையும், கண்காணிப்புத் துறையும் ஆட்சேபணைகள் எழுப்பாதபோது சுலபமாகக் கிடைத்துவிடும். இந்த முறை பயணப்படுகிறதுக்கு முதல்நாள் கூட உத்தரவாதமாய் எதுவும் தெரியவில்லை. எங்கள் தொழிற்சங்கத்தினர் நிர்வாகத்திடம் என்ஓசி தரப்படாததன் காரணத்தைக் கேட்டிருந்தார். கோவை அலுவலக மேலாளரை இறுதியாகச் சந்திக்கச் சொன்னார் பாஸ்கியும், கோவை வி.சுப்ரமணியனும் மேலாளரிடம் எனது பயணத்திட்டத்தையும் விபரங்களையும் தந்தேன். நான் எழுத்தாளர் என்ற விபரக் குறிப்புகளையும் தந்தேன். அவர் அதைப் படித்துவிட்டு திருப்தியடைந்தார். அந்த வாரம் குசடிவே டு¬நே பத்திரிகையில் (அக்டோபர் 8, 2010) னுச¬எந« வடி னநளயிசை என்ற தலைப்பில் திருப்பூர் தொழில் வளர்சியினூடாக அது தற்கொலைக் களமாகியிருப்பதைப் பற்றி வந்த கவர் ஸ்டோரி 24 பக்கக் கட்டுரையில் எனது பேட்டி ய§ஜிலீமீ ஷிவீறீமீஸீt ஜிக்ஷீணீரீமீபீஹ் என்ற தலைப்பில் வந்திருப்பதையும் மேலாளரிடம் காட்டினேன். அவர் கீழ் மட்டத்திலிருந்து கோப்பு வரவில்லை, விசாரிப்பதாகச் சொன்னார். காத்திருந்த பத்தாவது நிமிடத்தில் எனக்கு வந்த கைப்பேசி அழைப்பில் மாலையில் அந்தச் சான்றிதழ் வழங்கப்படும் என்றார்கள். ஆறுதலாக இருந்தது. மாலைவரை கோவையில் காத்திருந்து வாங்கிச்செல்ல எண்ணியிருந்தேன். மாலையில் சென்னை மத்திய அலுவலகத்திற்கு அனுப்பி ஒப்புதல் பெற்று வந்தபின்தான் தரமுடியும் என்றார்கள். தொழிற்சங்க தலைவர் புறப்படுங்கள் பிறகு பார்க்கலாம் என்றார்.

சான்றிதழ் இல்லாமல் கிளம்பி விட்டால் துறை சார்ந்த நடவடிக்கைக்கு வாய்ப்பிருக்கிறது. வெளிநாட்டுப் பயணத்தை இந்த திகிலுடன் சுவாரஸ்யப்படுத்த முடியாது. சேவ் அலோசியஸிடம் இதை தெரிவித்தால் சங்கடமே. கோவை, கல்கத்தா, டாக்கா, போக வர விமான டிக்கெட்டுகள், டாக்காவில் தங்கும் விடுதியின் முன்பதிவு விபரங்கள் ஆகியவற்றைத் தந்திருந்தார். எப்படியும் கிளம்பி விடுவது என்று தீர்மானித்து விட்டேன்.

அலுவலக ரீதியான நடவடிக்கை என்றால் சந்தித்துத்தான் ஆகவேண்டும் என்பது மனதிலிருந்தது. பதற்றத்துடனே வெளிநாட்டுப் பயணம் என்பதில் விமான நிலைய கைப்பை சோதனையும் அமைந்துவிட்டது.

சென்னை விமானத்திற்காக காத்திருந்தோம். சிஎஸ்டிஈ பாஸ்கரன் அடுத்தவாரம் திருப்பூரில் நடைபெற உள்ள கல்வி உரிமை மாநாட்டு அழைப்பிதழ் அனுப்பியிருந்ததை ஞாபகப்படுத்தினான். பழ.விசுவநாதன் அவர்கள் கனவு சார்பில் கலந்து கொள்வார் என்று தெரிவித்தேன். கல்வி உரிமை சட்டம் பற்றி விரிவாய் சொல்ல ஆரம்பித்தார். திக்ஷீஷீஸீt லிவீஸீமீ என் பேட்டியைப் படித்தார். அதையொட்டி திருப்பூரில் தற்கொலை விகிதம் அதிகமாகியிருப்பதைப் பற்றி விரிவாகச் சொல்ல ஆரம்பித்தேன்.
கடைசி அத்தியாயங்களில் கல்வி உரிமை பற்றியும், திருப்பூரின் தற்கொலை விகிதம் அதிகமாகியிருப்பதைப் பற்றியும் விரிவான கட்டுரைகளையும், பிரண்ட்லைன் என் பேட்டியின் தமிழாக்கத்தையும் இணைத்திருக்கிறேன்.

வரலாற்றின் சாட்சியமாய் ஈழத்திரைப்படங்கள்

கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக புகலிடத்திரைப்பட முயற்சிகள் பற்றி அக்கறை கொண்டு எழுதி வருபவர் லண்டனில் வாழும் யமுனாராஜேந்திரன். விடுதலை என்பது பற்றி வேறுவேறு விதங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.யமுனா ராஜேந்திரன் பொதுவுடமை இயக்கச் சார்பில் விடுதலை நோக்கங்களைப் புரிந்து கொண்டும், அர்த்தப்படுத்தியும் திரைப்பட உருவாக்கங்களைப்பற்றி எடுத்துரைக்கிறார். பன்னாட்டுத் திரைப்படங்கள் குறித்து இருபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். “ புத்தனின் பெயரால் திரைப்பட சாட்சியம் “ என்ற அவரின் சமீபத்திய நூலில் ஈழப்போராட்டம் தீவிரம் பெற்ற பின்பு வெளிவந்த படங்கள் பற்றிய விரிவானப் பார்வை இடம் பெற்றிருக்கிறது. முப்பதாண்டு கால ஈழப்போராட்டத்தின் விளைவாகவும், முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னும் கம்பி வேலிகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிற மனிதர்களின் உளவியல் சிக்கலை இக்கட்டுரைகள் முன் நிறுத்துகின்றன. முடிந்து போய் விட்ட விடுதலைப்போராட்டத்தின் ஆன்மாவை முன்னிறுத்தும் இந்நூல் புனைவுப்படங்கள், குறும்படங்கள், விவரணப்படங்கள் ஆகியப் பிரிவுகளில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. முப்பதாண்டு கால உக்கிரமான போரில் பாதிக்கப்பட்ட கிராமப்புற சிங்கள் ஆண் பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுருக்கும் சிக்கல்களைப்பற்றி விரிவாக எடுத்துரைப்பதிலிருந்து மனித அவலத்தை எவ்வித இன் பாகுபாடுமின்றி முன் வைத்திருப்பதில் ராஜேந்திரனின் அக்கறையை நேர்மையாகக் கொள்ளலாம். இலங்கையின் தெற்கிலிருந்து நகரங்களுக்கு இடம் பெயர்ந்த சிங்கள் ஆண்கள், பெண்களைப் பற்றிப் பேசுகிறது. இலங்கை ராணுவத்தில் சேர்வதற்காக இடம் பெயர்கிறார்கள். சுதந்திர வர்த்தக வலையங்களில் பணிபிரிவதற்காக இளம் பெண்கள் நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்வது போலவே வளைகுடா நாட்டுவீட்டு வேலைகளுக்குச் செல்கிறார்கள். இந்த இடம் பெயர்வில் அவர்கள் எதிகொள்ளும் உளவியல் சிக்கல்களைப் பற்றி சொல்லும் படங்களை ராஜேந்திரன் விரிவாக எடுத்துரைக்கிறார்.

.

விடுதலைபுலிகளுக்கும் இலங்கைப்படையினருக்குமான மோதல் குறித்த படங்களை முன் வைத்து தமிழரது கோரிக்கை நியாயங்களை ஒட்டி விடுதலைப்புலிகளின் மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேசும் சிங்கள இயக்குனர்களின் பார்வையும் வெளிப்படுகிறது.

250க்கும் மேற்பட்ட குறும்படங்களை உருவாக்கிய விடுதலைப்புலிகளின் இயக்கம் அவற்றில் சமூக நிலைபற்றிய பிரச்சினைகளை முன் வைத்திருக்கிறது. விடுதlலைப்புலிகளால் தொழில்முறையில் உருவாக்கப்பட்ட முழு நீளப் படங்கள் பெரும்பாலும் ஹாலிவுட் பாணியை மையமாகக் கொண்ட சாகசப்படங்களாக இருந்ததைச் சுட்டிக் காட்டுகிறார். ஹாலிவுட் போர்ப்படங்கள் தமிழ்த்துணைத்தலைப்புகளுடன் போராளிகளுக்கு திரையிட்டுக் காட்டுதலும் தொடர்ந்து நிகழ்ந்திருக்கிறது. ஈழமக்களின் வாழ்க்கை அவலம் குறித்த ’ஆணிவேர் ‘ போன்ற படங்கள் உலகத்திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று ஈழத்திரைப்படங்களின் பின்னுள்ள அரசியல் செய்தியை அழுத்தமாக முன் வைத்திருக்கிறது. திரைப்படம் குறித்தப் பயிற்சி வகுப்புகளுக்காக புலிகள் தீவிர அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் . தமிழக இயக்குனர்களை அழைத்து வந்து பயிற்சி அளித்திருக்கிறார்கள். அவர்களின் ஈழத்திற்கான திரைப்படத்துறை , திரைப்பட கலாச்சார இயக்கத்தை உருவாக்கும் முயற்சிகளை விரிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது.

ஈழப்போராட்டம் தமிழ்த்திரைப்பட சூழலிலும் தென்னிந்தியத் திரைப்படங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதை பல படங்களை முன்நிறுத்திப் பேசுகிறார். அவற்றில் அரசியல் நீக்கப்பட்ட கட்டாயத்தன்மையின் அவலம் குறித்தும் சொல்கிறார். “ கன்னத்தில் முத்தமிட்டால் “ முதற்கொண்டு ‘ சையனைட் ‘ முதலானவை அதற்கு பலியாகியுள்ளன. ஈழத்தமிழர்களின் நிச்சயமற்ற வாழ்க்கையூடே சிங்கள தேசியம் தன்னை வளர்த்துக் கொண்ட்தையும் ஈழத் தமிழ் மக்களின் கலாச்சார ஒடுக்குமுறை சிக்கலுக்கு மத்தியில் சிங்களவர்களின் உணர்ச்சி குறிப்பிட்த்தக்கது என்கிறார். சிங்கள அரசின் ஒடுக்குமுறை ஈழத்தமிழர்களின் தனித்தப் பண்புடனான ஆதார திரைப்பட உருவாக்கத்தை தடுத்திருக்கிறது என்பதும் இந்நூலில் கவனிக்கத்தக்கதாய் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இன்றுள்ள நிலை பற்றி வருத்தத்துடனே எடுத்துரைக்கிறார். இனி குறும்படங்கள் அங்கிருந்து வராது. தமிழகத்திரைப்பட உலகைச் சார்ந்தவர்கள் விரக்தியிலும், மவுனத்திலும் கையாலாகத்தனத்திலும் மூழ்கிக் கிடக்கிறார்கள். இவர்களிடமிருந்து நம்பிக்கை தரும் ஈழம் பற்றிய படங்கள் வர வாய்ப்பில்லை. இதற்கு விதிவிலக்கான உதாரணமாக நம்பிக்கை விதைகளைக் கொண்டு நார்வே நாட்டு சுபாஷின் சமீபத்திய ‘ வன்னி எலிகள்’ குறும்படம் பற்றிக் குறிப்பிடுகிறார்.

“ ஒரு ஜோடி எலிகள் வன்னி அகதிகள் முகாமான மானிக்பார்மின் கூடாரங்களில் அலைந்து திரிகின்றன. அகதிகளின் கூக்குரல். பசி ஓலத்தில் சிறுவர் சிறுமிகள். இளைஞர்கள் மீதான சித்ரவதை. பாலியல் வல்லுறவால் கதறும் பெண்கள். கைத்துப்பாக்கிகள் எல்லாவற்றுக்கும் நிரந்தரப்புள்ளி வைக்கின்றன. மனிதர்கள் இங்கு எலிகளாகவும், எலிகள் இங்கு மனிதர்களாகவும் ஆகிறார்கள் எலிகளைப் போலவே மனிதர்களும் வேட்டையாடி அழிக்கப்படுகிறார்கள். எலிகள் ஒழிந்த உலகம் என்பது சாத்யமேயில்லை “


” புத்தனின் பெயரால் திரைப்பட சாட்சியம் “ யமுனா ராஜேந்திரன் நூல்

ரூ 140/ உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18

---------------- சுப்ரபாரதிமணியன் ----------------
( subrabharathi@gmail.com )

வியாழன், 25 நவம்பர், 2010

டாக்கா: பிசாசு நகரம்

அயோத்தி பாபர் மசூதி தீர்ப்பு வெளியான அன்று பரபரப்பாக இருந்தது. அன்றுதான் டாக்காவின் பிரபலமான டாக்கீஸ்வரியம்மன் கோவிலுக்குச் செல்வதற்கு ஏற்பாடாகியிருந்தது.உலகம் முழுவதும் இருந்து இந்துக்கள் வழிபடும் கோவில் அது. ஊர் பெயருடன் சேர்த்து அந்த அம்மன் பெயர் வழங்கப்படுகிறது. டாக்கீஸ்வரி டாக்காவின் ஈஸ்வரி . 1971ல் ரமண காளி கோவிலொன்று பிரசித்தியாக இருந்ததை வங்க தேசவிடுதலைப்போரில் பாக்கிஸ்தான் ராணுவம் முழுமையாக அழித்த பின்பு இந்துக்களின் மிக முக்கியமான கோவிலாகியது. அப்போது பாக்கிஸ்தான் ராணுவத்தால் இக்கோவிலும் சிதைக்கப்பட்டது. முக்கிய பாகங்கள் ராணுவத்தளவாடங்கள் நிறுத்தவும் ஆயுதசேமிப்புக்கும் பயன்படுத்தப்பட்டன.

தலைமை பூசாரி உட்பட பலர் கொல்லப்பட்டனர். ஆனால் 800 வருடப் பழமை வாய்ந்த ஈஸ்வரி அம்மன் சிலை காப்பாற்றப்பட்டது. 11ம் நூற்றாண்டில் பலால் சென் என்ற அரசனால் கட்டப்பட்டப் பழமையானது இது. 1988ல் இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்ட பின்பு டாக்கீஸ்வரி கோவிலின் முன்பு பாக்கிஸ்தான் கொடி ஏற்றப்படுவதும் சம்பிரதாயஙகளும் கடைபிடிக்கப்படுகின்றன. ஈஸ்வரி அம்மன் கழுத்திலிருந்து விழுந்த நகையால் இக் கோவில் பிரசித்தி பெற்றதாகக் கதை உண்டு.

டாக்காவின் உணவில் டாக்கா கபாப்பும், பக்கர் காளியும், பிரியாணியும் முக்கியமானவை. பக்கர்காளி காலை உணவு. ரசகுல்லா, குலோப்ஜமுன் உட்பட ஏகப்பட்ட இனிப்பு வகைகள். “மச்சே பாடே பெங்காலி “ என்கிறார்கள். வங்கதேசத்தவனை அரிசியும், மீனும்., மட்டனும் வளர்த்திருக்கின்றன.பாலுக்குத் தட்டுப்பாடு. ஒரு லிட்டர் 60 ரூபாய்க்கு விற்கிறார்கள். எல்லாவற்றிலும் இனிப்பு சேர்க்கிறார்கள். “ நக்சி பித்தாஸ் “ என்ற அரிசியில் செய்த இனிப்பு கலந்த புட்டொன்றை ஒரு வயதானவள் தெருவில் விற்றுக் கொண்டிருந்ததை

வாங்கிச் சாப்பிட்டோம். “ இது கல்யாணத்தின் போது மணமகளுக்கு விசேசமாக செய்து தருவது. இதைச் சாப்பிடுவது பாக்கியம். “ வயதானவள் இதைச் சொல்லும் போது புதுமண்பெண் போல முகம் சிவந்து விட்டது. புஸ்டியான இளம் பெண்கள் மத்தியில் நன்கு திடமாகவே அவள் இருந்தாள். “ நல்லா சாப்புடுவாங்க எங்க ஆளுக. பஞ்சோ பண்சோனர் தேஸ் – 5 விதமான உணவைச் சாப்பிடுபவர்கள் தேசம். “

” செரி ஏழைக்கு...”

“ பாண்டா இருக்கவே இருக்கு “

“ பாட்டிலா ”

” இல்லே. தண்ணீ ஊத்தி வைத்த இரவுச் சாப்பாடு. “

“ பழைய சோறா “

“ உப்பும் மிளகாயும் சேர்த்தால் அமிர்தம். அரிசியில் செய்ய்யும் மூன், கூரம், சீரா இவையெல்லாம் கூட அமிர்தம்தா .. “

கடினமான எலும்பாக இருக்கிறதேயென்று இரவு உணவு விடுதியில் விசாரித்தேன். ” நாட்டுக்கோழி கூட சாதாரணமாக கிடைக்குமா “

“ இது நாட்டுக் கோழியில்லே. வாத்துக்கறி . நாளைக்கு ராத்திரி டின்னர்லே ஒட்டகக் கறி போட்டர்லாமா.”

பாஸ்போர்ட்டைக்காட்டி கூட வந்த நண்பர்களில் சிலர் மது பானங்களை வாங்கினர். என்னுடன் வந்தவர்களில் தொழிற்சங்கத்தலைவர்கள், தன்னார்வக்குழுவினர், சமூக ஆர்வலர்கள் என 12 பேர் கொண்ட குழு டாக்காவில் பின்னலாடையின் அபரிமித ஏற்றுமதி பற்றி தெரிந்துகொள்ளச் சென்றிருந்தோம். “ என்ன பிராண்டிக்கு இவ்வளவு பஞ்சம். ..விஸ்கியா சாப்புட வேண்டியிருக்குது. “ என்றார் கூட இருந்த ஒரு நண்பர். குரானில் “ மது சாப்பிடுவது பகைமை தரும் . பலனை விட துன்பம் அதிகம் தருவது என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே தடை” என்கிறார்கள். மதுவுக்கு இருக்கும் தடை கடுமையாகக் கடைபிடிக்கப்படுகிறது. திருட்டுச் சாராயம் ரகசியமாக ஊடுருவி விட்ட்து. கிராமப்புறங்களில் மோலோ அல்லது பங்களா என நாட்டுச் சரக்குக் கிடைக்கிறது. கிறிஸ்துவ நிகழ்ச்சிகள், திருமணங்களில் வைன் பயன்படுத்தத் தடை இல்லை. டாக்கா நகரம் முழுக்க ஆள் மிதிக்கும் லட்சக்கணக்கான ரிக்சாக்களால் நிரம்பி வழிகிறது. ரிக்சாக்களையும், வெளிநாட்டுக்கார்களின் நெரிசலையும் மீறி 10 கி மீ கடக்க 2 மணி நேரமாகிவிடுகிறது. ஒரு ரிக்சாக்காரன் சொன்னது: “ காரோ என்ற எங்க ஆதிவாசிகள் பயன்படுத்தும் மது இங்கே எனக்குக் கிடைத்துவிடுகிறது. “

மதுவை தடை செய்திருக்கும் நாட்டில் விபச்சாரம் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அங்கீகாரம் பெற்ற 20 சிவப்பு விளக்குப் பகுதிகள் டாக்காவில் உள்ளன. குழந்தைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதும் உள்ளது. 12 வயதில் பின்னலாடைத்தொழிலுக்காக பர்குனா மாவட்ட்த்திலிருந்து டாக்கா வந்த ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு ஓட்டல் ஒன்றில் சேர்க்கப்பட்டு பின் விபச்சார விடுதியில் தள்ளப்பட்டதை ஒரு விவரணப்பட்த்தில் பார்த்தேன். அவள் சரீபா: சரீபாவைப்போல 30, 000 குழந்தைகள் இத்தொழிலில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். வங்க தேச அரசியல் சட்டம் சூதாட்டமும் , மது அருந்துவதும் பெரும் குற்றங்கள் என்கிறது. இங்கு சாலையோரங்களில் விலைமகளிர் நின்று கொண்டிருப்பது தினமும் தென்படுவது. ஏழைப்பெண்களும், நகர சேரிப்பெண்களும் இதில் அதிகம். கர்ப்பமான பெண்களுடன் உறவு கொள்வதில் இருக்கும் சுவாரஸ்யம் ப்ற்றி ஒருவன் சொன்னதாக ஒரு பெண் பத்திரிக்கையாளர் சொன்னது;

“ முட்டைகளோடு இருக்கிற மீனுக்கு ருசி அதிகம். அது மாதிரி கர்ப்பமான பெண்களுடன் உறவு கொள்வது சுவாரஸ்யமானது”. இலீஸ் மற்றும் சீத்தல் ஆற்று மீன் வகைகள் இங்கு கிடைக்கின்றன. ஈலிஸா, ஈலிகா, ஹில்ஸா என்றும் பெயருண்டு, இப்பெயர்களில் பெண்களும் இருக்கிறார்கள்.

ஸேக்முஜிபுர் ரகுமானின் மகள் சேக்ஹசீனா இப்போது பிரதமர்.

( முஜிபுரைப் பிரதமராக்கி வங்கதேசத்திற்கு விடுதலை வாங்கித்தந்த இந்திராகாந்திக்கு சிலை இல்லை) வங்கதேச அவாமிலீக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாம் முறையாகப் பிரதமர் ஆகியிருக்கிறார். அவாமிலீக் கட்சி இட்துசாரிகளையும், மதச்சார்பற்றவர்களையும் கூட்டணியில் வைத்திருக்கிறது. தேசியக்கட்சி பிரதானக் கட்சி. இது இஸ்லாமிய கட்சிகளுடன் கூட்டு வைத்திருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. தொழிற்சங்க வாதிகளுக்கு அடக்குமுறையும் சிறையும் சுலபமாக சேக்ஹசினா ஆட்சியில் கிடைத்துவிடுகின்றன. 30 லட்சம் பனியன் தொழிலாளர்கள் உள்ள ஊரில் தினசரி சம்பளம் 52 ரூதான். டாக்கா. இது வெகுக்குறைவு. இரண்டு மாதங்கள் முன் 15000 பனியன் தொழிலாளர்கள் நட்த்தியப் போராட்ட்த்தில் காவல் துறையுனருடன் நடந்தப் போராட்டத்தில் காவல்துறையினருடன் நடந்த மோதலில் பலத்த சேதம் தொழிலாளர்களுக்கு. 12 வயது முதல் குழந்தைத்தொழிலாளியாக இருந்து பின் படித்து முன்னேறிய 30 வயது கல்பனா என்ற தொழிற்சங்கத்தலைவரை சந்தித்தோம். ” 5000 டாக்கா கேட்டோம். 3000 கொடுக்கலாம். இப்போது 1663 டாக்காதான். 5000 கொடுத்தால் எல்லா பனியன் கம்பனிகளையும் மூடவேண்டியதுதான் என்கிறார்கள். முதலாளிகள் லாபத்தைக் குறைத்துக் கொள்வதை விரும்புவதில்லை “ என்கிறார்,

காவல்துறையினருக்கு மரியாதை இல்லை. மாமா என்று கேலிச் சிரிப்புதான். நிறைய லஞ்சம் வாங்குவதால் அப்படி கேலி மரியாதை. ஊழல் மலிந்த நாடு. டாக்கா விமான நிலையத்தை விட்டு இந்தியா வரும்போது ஒரு தொழிற்சங்கத்தலைவர் டாக்கா பண நோட்டுகள் வைத்திருந்ததைப் பிடுங்கிக் கொண்டாகள். 1000 டாக்கா லஞ்சம் கொடுத்தபின் டாக்கா விமான நிலைய அதிகாரிகள் அவரை விடுவித்தனர். டாக்காபணத்தை இந்திய ரூபாயாக மாற்ற 50 சதம் கழிவு போட்டு மீதியைத்தான் தந்தார்கள்.

“ கல்கத்தா ஏர்போர்ட்லே போயி எறங்குனா இது செல்லாத நோட்டு. கிழிச்சுதா போடணும். எங்க்கிட்டே குடுத்தா 50 ரூபாயாச்சும் மிஞ்சும்” வேறு வழியில்லாமல் நாங்கள் எல்லோரும் கையில் இருந்த டாக்கா பணத்தைக் கொடுத்துவிட்டு பாதிப்பணமே வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.

டாக்கா திரைப்பட உலகின் பெயர் ‘ டாலிவுட் ‘ . நம்ம ஊர் கோலிவுட், பாலிவுட் போல வருடத்திற்கு 100 படங்கள் வெளிவந்த காலம் உண்டு. இப்போது சுருங்கி விட்ட்து. இந்தித் திரைப்படங்கள் திரையிட அங்கு தடை.. திருட்டு டிவிடி இந்திப்படங்கள் , பாடல்கள் சுலபமாகக் கிடைக்கின்றன. பலர் எங்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டது.” தயவு செய்து பங்களாதேஸ் படங்களுக்குப் போய் விடாதீர்கள். “ கபர்சிங்குகளின் ஆதிக்கம் அதிகம். “ கபர்தார்”.

எழுத்தாளர்கள் டாக்காவை பிசாசு நகரம் என்கிறார்கள். தஸ்லிமா நஸ்ரின் பாபர்மசூதி இடிக்கப்பட்டதையும் இந்துக்கள் துன்புறுத்தப்பட்டதையும் பற்றி “ லஜ்ஜா” நாவலில் எழுதிய காரணத்தால் பத்வா தண்டனை விதிக்கப்பட்டது. ஜெர்மனி, ஸ்வீடன், இந்தியா என்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரும் இதை சாத்தான் நகரம் என்கிறார். தினமும் 8 மணி நேரம் மின்சாரவிநியோகம் இல்லாதத் தலைநகரம். இருளில் டாக்கா பெரிய பூதமாக பயமுறுத்துகிறது. டாக்காவிலேயே 8 மணி நேர மின்வெட்டு என்றால் பிற நகரங்களிலும், கிராமங்களிலும் கேட்கவே வேண்டாம். இருட்டு சாத்தான் நிரந்தப்பிடியில் வைத்திருப்பான். அந்நிய செலவாணி அதிகம் தரும் பனியன் தொழிலே இதன் பிரகாசம்.


---- சுப்ரபாரதி மணியன் ------

subrabharathi@gmail.com

ஞாயிறு, 14 நவம்பர், 2010

” ஓம் ஒபாமா “ திரைப்பட அனுபவம்

11-11-10 தேதிய “ தி இந்து “ தினசரியில் திருமதி ஜானகிவிஸ்வநாதனின் இயக்கத்திலான “ ஓம் ஒபாமா “ திரைபட முன்னோட்டம் பற்றியக் கட்டுரையைப்படித்ததும் அப்படத்துடனான என் அனுபவப்பகிர்வை எழுத வேண்டும் என்றுத் தோன்றியது.
2009 பிப்ரவரியில் திரைப்பட ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் அவர்கள் தொடர்பு கொண்டு திருமதி ஜானகி விஸ்வநாதனுடன் சேர்ந்து ஒரு திரைப்பட கதைப்பணியில் ஈடுபடக் கேட்டுக் கொண்டார்.அவரின் ” குட்டி” , ”கனவுகள் மெய்ப்படவேண்டும் ” படங்களைப் பார்த்திருக்கிறேன். ராஜ்குமார் இரண்டிலும் ஒளிப்பதிவு பணியில் இருந்தவர்,ஒத்துக் கொண்டபின்பு திருமதி ஜானகி தொலைபேசியில் பேசினார். தொடர்ந்து பேசிக்கொண்டேஇருந்தார். மின்னஞ்சலில் சில தகவல்களை தர நானும் அக்கதைக்கான சம்பவங்களை தொடர்ந்து தந்து கொண்டிருந்தேன். தினமும் பெரும் பேச்சுசுதான். பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் என் துறையில் ஒருவாரப் பயிற்சிஒன்றுக்கு சென்னையில் இருந்த போது அவரைச் சந்திக்க பிப்ரவரி 15 மாலை தேதி தந்திருந்தேன். பிப்ரவரி 14 என் மனைவி கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் மாரடைப்பால் காலமானதால் நான் பயிற்சியின் இடையிலேயே திருப்பூர் திரும்பி விட்டேன். திருமதி ஜானகியிடம் குறுஞ்செய்தியாக தெரிவித்தேன்.
பத்து நாள் இடைவேளைக்குப் பின் அவர்கள் தொடர்பு கொண்ட போது சுகந்தியின் மரணம் தந்திருந்த சோர்விலிருந்து விடுபட வேண்டியிருந்த்தால் அக்கதைபற்றித் தொடர்ந்து தொலைபேசியில் கலந்தாலோசித்தோம் . தபாலில் சம்பவங்கள் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருந்தேன். 40 காட்சிகளை வடிவமைத்திருந்தேன். ஒரு மாத இடைவெளியில் சாகித்திய அக்காதமியின் நிகழ்ச்சிக்குச் சென்றபோது அவர்கள் வீட்டில் ஒரு முழு நாள் நான் எழுதிய திரைக்கதை சம்பவங்களை முறைப்படுத்தினோம். .
பின்னர் தொடர்பு கொண்ட பலமுறை சற்று தாமதமாகும் என்றார். பிறகு ஒருமுறை திரைக்கதை முயற்சிக்கு சன்மானம் கேட்டு கடிதம் எழுதியபோது தொடர்பு கொள்வதாக குறுஞ்செய்தி அனுப்பினார். அவ்வளவுதான். பிறகு நாலைந்து முறை அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கும் அதே பதில் குறுஞ்செயதிதான்.
“ காஞ்சீபுரம் “ திரைக்கதைவிசயத்தில் நடந்ததைப் பற்றிய என் அபிப்ராயங்களை ” கனவு “ இதழிலும், திண்ணை, இனியொரு இணைய இதழ்களிலும் எழுதி இருந்த போது இப்படிக் குறிப்பிட்டிருந்தேன்.
”கனவு” 63 ம் இதழ் அக்டோபர் 2009 இதழில் பக்கம் 24லில் இப்படி குறிப்பிட்டிருக்கிறேன்:
“ எனது சாயத்திரை நாவலை நான் திரைக்கதையாக்கி வைத்திருந்ததை பெற்றுக் கொண்ட பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இப்போது 5 பேர் உள்ளனர். சமீபத்தில் ஒரு பெண் இயக்குனர் கேட்ட்தினால் “ ஆன்லைனில் ஒரு திரைக்கதை எழுதி முடித்தேன். பிளீஸ், பிளிஸ் என்று தொலைபேசியிலெயே தொடர்ந்து கேட்டுக்கொடிருந்தார். 15 நாளில் முழுத் திரைக்கதையை ஆன்லைனில் எழுதி முடித்தேன். அது என்ன பாடு படப்போகிறதோ. திரைப்படத்துறையைச்சார்ந்த ஒரு நண்பர் சொன்னார்: பத்து குயர் பேப்பர் வாங்கிக்குடுத்து இதுதான் சன்மானமுன்னு அனுப்பிசிருவாங்க “
சினிமாவுலே இதெல்லாம் சகஜமப்பா”

“ ஓம் ஒபாமா” விசயத்தில் பத்து குயர் பேப்பரும் கிடைக்கவில்லை. ஒரு பைசா சன்மானமும் கிடைக்கவில்லை.

நான் எழுதிய ” ஓம் ஒபாமா ‘ திரைக்கதையில் சில சம்பவங்கள்.:
திருப்பூரை ஒட்டிய ஒரு கிராமம். பின்னலாடைத்துறை தொழிலுக்கு அந்த கிராமத்திலிருந்து வரும் சிலரின் வாழ்க்கை. அதில் காதல் வயப்பட்ட ஒரு ஜோடிபிரதானமாய். அந்த கிராமத்து அம்மன் கோவிலில் பூஜையின்போது நாதஸ்வரம் வாசிக்கும் ஒரு குடும்பம். அந்த ஊர் பண்ணையரின் மகன் நிர்வாகத்திற்கு வரும்போது நாதஸ்வரத்திற்கு பதிலாக கோவில் பூஜையின்போது சிடி போட்டு நாதஸ்வர ஓசை வந்தால் போதும் என்று அக்குடும்பத்திற்கு வேலை போய்விடுகிறது.
இதில் வரும் பிரதான சிறுவன் பாத்திரத்தின் அண்ணன் பனியன் கம்பனி வேலைக்குப் போய்விடும்போது பள்ளியில் படிக்கும் சிறுவன் விடியற்காலையில் எழுந்து கோவிலுக்கு நாதஸ்வரம் வாசிக்கும் அப்பாவுடன் செல்லும் தொந்தரவில் திரைக்கதை ஆரம்பிக்கிறது. பையன் குடும்பம் நாத்ஸ்வரம் ஓதி கடவுளை எழுப்புவதால் பையனுக்கு பள்ளியில் மவிசு அதிகம். தங்கள் குறைகளை பையன் துயிலெழும் கடவுளிடம் சொல்லி அருள் பாவிக்க தலைமை ஆசிரியர் முதற்கொண்டு பலர் வேண்டுகிறார்கள்,
பனியன் உற்பத்தி பாதிப்பு, அமெரிக்க இரட்டை கோபுர வீழ்ச்சி , பொருளாதார தடுமாற்றம் திருப்பூர் பனியன் ஏற்றுமதி பாதிப்பில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் அமெரிக்காவில் ஒபாமா வெற்றி பெற்றால் நிலைமை சீராகும். என்று வேண்டிக்கொள்கிறார்கள் . ஓம் லாபம், எழுதுவதைப்போல் பலர்
; ஓம் ஒபாமா ; நாமம் எழுதுகிறார்கள். கிராம வாழ்க்கை, பனியன் உற்பத்தி பாதித்ததால் கிராம மக்களின் மனநிலை, பையனின் பள்ளி அனுபங்கள்..பையனும் ஓம் ஒபாமா எழுதுகிறான். பலன் கிடைத்ததா என்பதை வெள்ளித்திரையில் காண்க.

நானும் வெள்ளித்திரையில் பார்த்துவிட்டு, அல்லது சிடி கிடைத்தால் பார்த்துவிட்டு அடுத்த அங்கலாய்ப்பிற்குப் போகவேண்டும்.

==சுப்ரபாரதிமணியன்
subrabharathi@gmail.com

செவ்வாய், 9 நவம்பர், 2010

இது எனது தேசம் இல்லை :வங்காள தேசப்பயணம்

திருப்பூர் ரூ 15,000 கோடி அந்நிய செலவாணியை பின்னலாடை உற்பத்தி மூலம் தருகிறது. திருப்பூருக்குப் போட்டியாக கடந்த 5 ஆண்டுகளில் வங்காள தேசம் முன்னணியில் நிற்கிறது. முதலிடம் சீனாவிற்கு.. வங்காள தேசத்தின் பின்னலாடை உற்பத்தி குறித்த ஆய்வுக்காக 12 பேர் கொண்ட குழு டாக்கா சென்றது அதில் நானும் இடம்பெற்றிருந்தேன். தொழிற்சங்கப்பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வத்தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்ட குழு அது.

வங்காள தேசம் பரப்பளவில் குறுகியது. அரசாங்கம் தரும் அபரிமிதமான சலுகைகள், தொழிலாளர்களின் கடுமையான உழைப்பு, ஏற்றுமதியாகும் பஞ்சு. நூல், துணி போன்ற மூலப்பொருட்களின் தாராளமும் , குறைந்த உழைப்புக்கூலியும் பின்னலாடை ஏற்றுமதிக்கு துணையாக இருக்கின்றன. நிதி உதவி, வரிச்சலுகையும் கூட, டாக்காவின் 5000 பின்னலாடை தொழிற்சாலைகளில் 3 மில்லியன் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களில் 80 சதத்தினர் இளம் பெண்களாவர். தொழிலாளர்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் சுமார் 60 அமைப்புகள் உள்ளன. தொழிற்சங்கங்கங்கள் பலவீனமாக இருக்கின்றன. நிர்ணயக்கப்பட்ட தற்போதிய சம்பளம் 1663 டாக்கா மட்டுமே ( 1 ரூ =1.1 டாக்கா) அது நவம்பர் முதல் 3000 டாக்காவாக உயரயிருப்பதாகக் கூறுகிறார்கள். விலைவாசி கடுமையாக உள்ளது. அரிசி 40 டாக்கா. பருப்பு 110 டாக்கா, பால் 60, வெங்காயம் 35 டாக்கா. இந்நிலையில் விலைவாசியை சமாளிக்க தொழிலாளி அதிக நேரம் உழைக்க வேண்டி உள்ளது. மலின உழைப்பு.. மலின உழைப்பு... இதுவே பின்னலாடை வெற்றியின் ரகசியம்.

தொழிற்சங்க ஈடுபாடு குறைவாக இருக்கிறது. தொழிற்சங்கபிரதிநிதிகள் கொடுமைப்படுத்தப்படுவதும் , சிறையிலடைக்கப்படுவது சாதாரணம், சான்றிதழ் தரம்., கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு, நியாய வணிகம் அதிகம் பேசப்படும் காலத்தில் மலின உழைப்பு சாதாரணமாகத் தென்படுகிறது. நவீன கொத்தடிமைத்தனத்துள் தொழிலாளி வர்க்கம் மாட்டிக்கொண்டுள்ளது. திருப்பூர் 80 ஆண்டுகளில் பெற்றிருக்கும் வளர்ச்சியை வங்காள தேசம், டாக்கா 5 ஆண்டுகளில் பெற்றிருக்கிறது .தரச்சான்றிதழ் பெற்ற ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகள் 3 மட்டுமே உள்ளன. அவையும் வெளிநாட்டினர் முதலீடு செய்துள்ள தொழிற்சாலைகளே.

டாக்காவில் தொழிற்சங்கப்பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்புகள், தரச்சான்றிதழ் அளிக்கும் நிறுவனங்கள், அவற்றின் ஆடிட்டர்கள், தொழில் அதிபர்கள், பின்னலாடைத்தொழிலாளர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்தோம்.டாக்காவை ஒட்டிய 11ம் நூற்றாண்டு பழமை வாயந்த டாக்கீஸ்வரி கோவில், பூனம் நகரம், டாக்கா பல்கலைக்கழகம், பார்லிமெண்ட் கட்டிடம், , மொழிப்போராட்ட நினைவுச்சின்ன வளாகம்,, பூரி கங்கா பகுதி , மிர்பூர் போன்ற தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளைச் சுற்றிப்பார்த்தோம். நாவலாசிரியர் தஸ்லீமா நஸ்ரின் லஜ்ஜா நாவலில் விவரிக்கும் இந்து மக்கள் வசிக்கும் பகுதியைச் சுற்றினோம்.

அயோத்தி பாபர் மசூதி தீர்ப்பு வெளியான நாளில் சற்று திகிலுடன் தான் டாக்காவில் திரிந்தோம். பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில் டாகாவில் பல கோவில்கள் இடிக்கப்பட்ட்தையும், இந்துக்கள் துன்புறுத்தப்பட்ட்தையும் லஜ்ஜா நாவல் விவரிப்பதாலேயே நஸ்லிமா நஸ் ரினுக்கு பத்வா தண்டனை வழங்கப்பட்டது. 1992 டிசம்பர் 7 ஒரு அவமான நாள் என்கிறார் நஸ்லிமா;தாதிபசார் டாக்காவில் இந்துக்கள்

அதிகம் வசிக்கும் பகுதியாகும். அக்கலவரத்தில் அநேகமாக முழுக்குடியுருப்புகளும் நாசமாயின. நஸ்லிமா நஸ் ரீனின் ஒரு கவிதை இப்படி ஆரம்பிக்கிறது.:


இது எனது நகரம் இல்லை.

என்னுடையது என ஒரு போதும்

நான் சொல்லிக் கொண்ட மாதிரியிலான நகரம் இல்லை இது.

குள்ளத்தனமான அரசியல்வாதிகளுடையது

இந்த நகரம்

பழிவாங்களுக்கு அஞ்சாத வியாபாரிகள்,

சதை வியாபாரிகளின் .,

கூட்டிக்கொடுப்பவர்களின் ., பொறுக்கிகளின்,

வன்புணர்வானவர்களின் நகரமேயல்லாது இது

அது எனது நகரமாக இருக்க முடியாது.

சந்தர்ப்பவாதிகளின் நகரம் இது.

இதனை இனி ஒரு போது

எனது நகரம் எனச் சொல்லமாட்டேன்.

இனி ஒரு போதும்.


subrabharathi@gmail.com

சுப்ரபாரதிமணியன்



நன்றி

Thinnai.com 

செவ்வாய், 19 அக்டோபர், 2010

திருப்பூர் : தற்கொலை நகரம்

சுப்ரபாரதிமணியன்



சில ஆண்டுகளுக்கு முன் சாயக்கழிவுகளும், சாயநீர் குட்டைகளும் அதிகமாகிக் கொண்டிருப்பதையும், ஒரு காதல் ஜோடி சாய நீர் கழிவுக்குட்டையில் விழுந்துத் தற்கொலை செய்து கொண்டது பற்றியும்

“ தற்கொலைக்களன் “ என்று சாய கழிவைக்குறியீடாக வைத்து ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். சமீபத்திய செய்திகளில் திருப்பூர் நகரமே ஒரு தற்கொலைக் களன் ஆகியிருப்பதை அறிய முடிகிறது.. சென்னைக்கு அடுத்தபடியாக தற்கொலை விகிதம் திருப்பூரில் தான் அதிகம் என்பதை புள்ளி விபரக்கணக்குகள் தெரிவிக்கின்றன. ஒரு நாளைக்கு 30 தற்கொலை முயற்சிகளும், மாத்த்திற்கு 50 தற்கொலை சாவுகளும் பதிவாகின்றன. சென்றாண்டில் 495 தற்கொலை சாவுகள் நிகழ்ந்திருக்கின்றன. இவ்வாண்டின் முதல் ஆறு மாதத்தில் 350 பேர் தற்கொலை செய்து உயிரிழந்திருக்கின்றனர்..இவர்களில் 20 வயது முதல் 40 வயதிற்குற்பட்டவரே அதிகம். அதிலும் ஆண்கள் அதிகம்.

( முகூர்த்த நாட்களில் திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் நடைபெறும் திருமணங்கள்- தன்னிச்சையாக நாலைந்து யுவதிகளும், யுவன்களும் வந்து ஒரு திருமணத்தை நடத்துகிறார்கள். -, மற்றும் திருப்பூர் மகளிர் காவல் நிலையங்களில் நடைபெறும் இளம் வயதினரின் காதல் திருமணங்கள் ஆகியவற்றுக்கும் இந்த தற்கொலை விகித்த்திற்கும் வெகு சம்பந்தம் உண்டு. இதைத் தவிர சர்ச் நடவடிக்கைகள் தனி கவனம் பெறுகின்றன. மத மாற்ற நடவடிக்கைகளில் சிலர் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றசாட்டிலும் திருமண பந்தங்கள் அமைந்திருக்கின்றன. )

10லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரமாகி விட்டது திருப்பூர். இதில் பாதிக்கு மேல் வெளியூர்களில் இருந்து வந்த தொழிலாளர்களும், வந்து போகும் மக்களும் அடங்குவர். வெளியூர் என்பது வெளி மாவட்டங்கள் என்ற 5 வருடம் முன்பு இருந்த நிலை மாறி ஒரிசா, பீகார் போன்ற வேலை வாய்ப்பு மிகவும் குறைந்த மாநிலங்களும் இதில் அடக்கம். நேபாளம் சார்ந்த தொழிலாளர்களுக்கான தொழிற்சாலைகள் இங்கு சிலது உண்டு.

திருப்பூர் வேலை வாய்ப்புகளுக்கான ஒரு சொர்க்கம் என்று நம்பி இங்கு

படையெடுக்கிறார்கள். வேலைவாய்ப்பும் அதிக சம்பளமும் என்பது உண்மைதான். ஆனால் அடிப்படை ஆதாரங்களுக்கான செலவு என்பது இந்த அதிகப்படியான சம்பளத்தை விட குறைவாகத்தான் இருக்கிறது. வீட்டு வாடகையும், தண்ணீர் போன்றவைகளுக்காக செலவழிக்கப்படும் தொகையும் அதிகமாக இருக்கிறது. கிராமங்களில் நல்ல காற்றோட்டத்துடனும், ஓரளவு தண்ணீர் வசதியுடனும் வாழ்ந்தவர்கள் இங்கு புறாக்கூடு, குருவிக்கூடு வீடுகளில் வாழும் நிலை. பொதுக்கழிப்பறை கூட அதிகம் இல்லாத தெருக்கள் குப்பையால் நிரம்பி வழிகின்றன. பாலீதின் பொருட்களின் உபயோகம் அபரிமிதமாக இருக்கிறது. சாலை விரிவாக்கங்களால் மரங்கள் பிரதான சாலைகளில் அருகி விட்டன . அதனால் 5டிகிரி வெப்பம் அதிகரித்தே மிக வெப்பமான நகரமாக இருக்கிறது. தொழிலாளர்களுக்கு

.

பல சமயங்களில் வேலை நிரந்தரமின்மையும், வேலை வாய்ப்பின்மையும் பணத்தட்டுப்பாடுகளை உருவாக்குகிறது.

இதனால் கடன் வாங்க வேண்டிய அவசியமும், அதற்கான வட்டியும் அவர்களை மீளச் செய்வதில்லை. ஊரில் இருப்பவர்கள் சொர்க்கபுரிக்குச் சென்றிருக்கும் தங்களின் குடுமப நபரின் வருமான சேமிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் போது க்டன் வாங்குவது தவிர்க்க இயலாததாகி விடுகிறது. இந்த கடனிலிருந்து மீளவது சிரம்மாகி விடுகிறது. அதிகப்படியான உழைப்பை எதிர்பார்க்கிற நகரம் இது. எட்டு மணி நேர உழைப்பு என்பது இங்கு அமுலாக்கப்படுவதில்லை. குறைந்த்து 10 மணி நேர சிப்ப்ட் என்பதே நடைமுறையில் உள்ளது. அதிக நேரத்திற்கான இரட்டிப்பு சம்பளம் என்பது 10 மணி நேரத்தைத் தாண்டும் போது தான் சாத்தியமாகிறது. அதிக நேர உழைப்பு என்பது மனித உடலை இயந்திரமாக்கி , வயதையும், நோய்களையும் கூட்டி விடுகிறது. பனியன் கம்பனியில் வேலை செய்கிறவன் 40 வயதிற்கு மேல் வேலை செய்ய உடல் ஆரோக்கியத்தையும், பலத்தையும் பெற்றிருப்பதில்லை. கடன் தொல்லை போன்றவற்றிலிருந்து விடுபட தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கட்டுகளை வாங்குவதிலும் தன் சேபிப்பை செலவிடுகிறான். ஒற்றை பெற்றோர் முறையிலான

.

தொழிலாளியாய் ஆண் இங்கு வந்து வேலை செய்து வருமானம் ஈட்டும் போது பெண் ஊரில் இருந்து கொண்டு குடும்பத்தையும், குழந்தைகளையும், வருமானமில்லாத நிலத்தயும் பார்த்துக் கொண்டிருப்பாள். அல்லது ஆண் ஊரில் இருந்து கொண்டு பெண்ணை வேலைக்கு அனுப்புவதும் பெருமளவில் நடக்கிறது. ஊரில் கணவன் சிறு விவாசாய நிலத்தை வைத்துக் கொண்டு விவசாயம் செய்து கொண்டிருப்பான். குடும்பத்தை தாயுமானவனாக இருந்து காத்துக் கொண்டிருப்பான். பெண் இங்கு வந்து சம்பாதித்து மிச்சம் பிடித்து வீட்டிற்கு அனுப்ப முயற்சி செய்து கொண்டிருப்பாள். ஒற்றைப் பெற்றோர் முறையிலான இவ்வகைத் தொழிலாளர்கள் இங்கு வந்து தங்கி வேலை செய்யும் போது சுதந்திரமாய உணர்கிறார்கள். ஜாதி உணர்வை புறம் தள்ளி விட்டு இயல்பாய் இருக்கிறார்கள். அதிக நேரம் குறிப்பாய் இரவிலும் தொழிற்சாலையில் இருக்கும் கட்டாயத்தால் வேற்று பாலியல் தொழிலாளர்களுடனான பேச்சும், பழக்கமும் , தொடர்பும் பாலியல் தொடர்புகளாக மலர்கின்றன. .

. தொழிற்சாலை சூழலில் தனிமைப்பட்டு போயிருக்கிற தொழிலாளிக்கு பாலியல் தொடர்பு சகஜமும், இயல்புமாகிறது.. இது ஆரம்பத்தில் ஆறுதல் தந்தாலும் உளவியில் ரீதியான சிக்கல்களை ஆரம்பம் முதலே தந்து விடுகிறது. இந்த சிக்கல் தொடர்கதையாகி குற்ற நடவடிகைகளுக்கும், கொலைகளுக்கும் வழி வகுக்கின்றன. திருப்பூரில் குற்ற நடவடிக்கைகளும்,

கொலை விகிதங்களும் மிகவும் அதிகமாக இருக்கின்றன.

வெளியில் இருந்து வரும் தொழிலாளி தன்னை தொழிலாளியாக கருதுவதில்லை, அதற்க்கான உரிமைகளையும் கோருபவனாக இல்லை. மழை பெய்தால் ஊருக்குப் போய் விவசாயம் செய்யலாம் என்ற கனவில் பலர் இருக்கிறார்கள். அல்லது ஊரில் தாங்கள் பார்த்த வேலைக்கு தடங்கல் இல்லை என்றுத் தெரிகிற போது வெளியேறுப்வர்களும் இருக்கிறார்கள். அதிகப்படியான நேர உழைப்பால் அசதி மற்றும் ஓய்வின்மை அவனை வெளியேறத்துடிக்கிறவனாக்க்குகிறது.தொழிற்சாலையில் பிரச்சினை என்று வருகிற போது தொழிந்சங்கங்களை அணுகுவதை விட தொழிற்சாலையின் நிர்வாகிகளையோ, புரோக்கர்களையோ அணுகி தங்கள் பிரச்சினையை தீர்த்துக் கொள்வது ஏதுவாக இருக்கிறது. வாரம் 5 ஞாயிற்றுக்கிழமைகளில் 4 ஞாயிற்றுக் கிழமைகள் வேலை இருக்கும். மீதமாக ஒரு ஞாயிற்றுக்கிழமையில் மதுவும், மூன்றாம் தரப்படங்களும் அவனுக்கு ஆறுதல் தருகின்றன. தொழ்ழிற்சங்கத்தினர் அவனை அணுகுவது கூட சிரமமாக இருக்கிறது. அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ந்ல்ல பூங்காக்களோ ( இருக்கு ஒரே பூங்கா மாசடைந்த நொய்யலின் ஓரம் சாயக்கழிவு துர்நார்றங்களை வீசிக்கொண்டிருப்பதாக இருக்கிறது. பெயர் பிருந்தாவன். பெயரில் என்ன இருக்கிறது. ) இல்லை. மாவட்டம் என்று ஆகிவிட்டாஅலும் மாவட்ட்திற்கான மையநூலகமோ இல்லை. மிகக் குறைந்த கொசுக்கடி நூலகங்களே உள்ளன. அதிகப்படியான மதுபானக் கடைகளும்,( 100) அதிக பெட்ரோல் பங்குகளும் உள்ள நகரம். குடிநீருக்காக கால்கடுக்க குடும்பப் பெண்கள் நிற்கவேண்டிய நிலை. மூன்று குடிநீர் திட்டங்கள் நிறைவேறி விட்டன. அதிலும் பிரைவேட் ப்ப்ளிக் பார்ட்னர் திட்டம் என்று ஆசியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பவானி தண்ணீர் திட்டம் ஒரு வகையில் தோல்வியே. குடிநீருக்காக மக்கள் பணம் தருவதை கட்டயமாக்கும் திட்டம் இது.இன்னும் இருபது ஆண்டுகளுக்குப் பின் திருப்பூர் மக்கள் தொகை இருபது லட்சத்தை தாண்டும் என்ற புள்ளிவிபரத்தை முன் வைத்து செயல்படும் திட்டங்கள் தேவையாக இருக்கின்றன. சாயத்தால் நொய்யல் ஆற்றையும் , மண்ணையும் மாசுபடுத்தி விட்டோம். அதை சுத்தம் செய்யலாம் வாருங்கள் என்று ஏற்றுமதியாளர்கள் பெரிய பெரிய பேனர்கள போட்டு தங்கள் குற்ற உணர்வை வெளிக்காட்டிக்கொண்டிருக்கிறார்கள் சமீபத்தில். நொய்யலை சுத்தம் செய்கிறோம் என்று நகரத்தின் மையத்தில் சிறிய பகுதியை சுத்தம் செய்திருக்கிறார்கள் வளம் என்ற ஏர்றுமதியாளர்கள் சங்கத்து உறுப்பினர்கள். 1000 அங்கீகரிக்கப்பட்ட சாயப்பட்டறைகள் உள்ளன. இதற்காக எரியூட்டப்படும் மரங்களும், அவற்றின் சாம்பலும் ,துண்டு பனியன்களை வீட்டு உபயோகத்திற்காக எரியூட்டப்படும் கழிவும், சாயக்கழிவும் பெரும் அபாயங்களாக மாறி உள்ளன. தினசரி இங்கு விற்கப்படும் கொசுவர்த்தி நிவாரணி சுருளும் , திரவ புட்டியின் எண்ணிக்கையும் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் விற்கப்படுவதில்லை.சாயப்பட்டறைக் கழிவுகளை மறுசுத்திகரிப்பு முறையில் நிவர்ர்த்தி செய்ய 30 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன.200 நிறுவனங்கள் தனிப்பட்ட முறையிலும் வைத்துள்ளன. அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் உப்பின் அளவு அபரிமிதமாக இருப்பதால் பெரும் சுற்று சூழல் பாதிப்பு எற்படுகிறது.சாயக்கழிவுகளை கடலில் கலக்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட போது கலைஞருக்கு நன்றி தெரிவித்து பேனர்களும், தட்டிகளும் நகரம் முழுவதும் காணப்பட்டன. சாதாரண தொழிலாளி திருப்பூருக்கு சாயப்பிரச்சினையிலிருந்து விடிவு வந்து விட்டதென்று கலைஞரைப் புகழ்ந்து நெகிழ்ந்து போய் கிடந்தான். சுற்றுச் சூழல் பாதிப்பும் , சுற்று சூழல் அமைப்புகளின் எதிர்ப்பும் மீறி அது நிறைவேறப்போவதில்லை.தொழிற்சங்கவாதிகளும் , அரசியல் தலைவர்களும் ஏற்றுமதியாளர்களாகவும், பனியன் வியாபாரிகளாகவும் உள்ள சூழல் எந்த சுற்றுச் சூழல் சார்ந்த நம்பிக்கைக்கும் இடம் தருவதில்லை. தொழிற்சங்க்க கல்வியோ, அரசியல் கல்வியோ தொழிலாளிக்குத் . தர முடியாத நிலையில் தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் இருக்கின்றன. வெளிநாட்டு ஆர்டர்கள் வருவதும் போவதுமான ஊரில் வேலை பல சமயங்களில் நிரந்தரமில்லாத்தாகி விடுகிறது. இது தரும் பாதுகாப்பின்மை அவனை பயத்திற்குள்ளாக்கி விடுகிறது. அவன் நிரந்தர தொழிலாளியாக இல்லாமல் பீஸ் ரேட் செய்கிறவனாக , காண்டிராக்ட் ஊழியனாக மாறிய நிரந்தரத்தன்மை இங்கு அவனை பாதுகாப்பில்லாதவனாக்கி விடுகிறது. குடும்பத்தினருடன் அவன் இருக்கும் நேரம் குறைவாகவே இருக்கிறது. குடும்பத்திலும் அந்நியனாகவே இருக்கிறான்.

சமூக மனிதனாக அவன் நடமாடுவதாற்கான சந்தர்ப்பங்கள் வெகுவாகக் குறைந்து விட்டது. கலாச்சாரத்தளத்தில் அவனின் செயல்பாடு முடக்கப்பட்டு விட்டது முந்தின தலை முறை படிப்பறிவை நிராகரித்துவிட்டு குழந்தைத்தொழிலாளியாக வளர்ந்ததின் பலனை திருப்பூரின் இன்றைய கேளிக்கை நடவடிக்கைகளும், நுகர்வு கலாச்சார குடும்ப அமைப்புகளும், குற்ற நடவடிக்கைகளும் வெளிப்படுத்துகின்றன. இதிலிருந்து மீண்டு அவன் சக மனிதனாகவோ, சக் தொழிலாளியாகவோ சமூகத்தில் தன்னைப் பிணைத்துக் கொளவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து விட்டன. இந்த .சூழல்கள் அவனை சோர்வுள்ளவனாக, மனரீதியாக பாதிப்படைந்துள்ளவனாக அவனை மாற்றி விட்டது. இதுவே அவனை தற்கொலைக்குத் தூண்டுகிறது. அந்நிய செலவாணி தரும் டாலர் சிட்டி என்ற அடைமொழி மாறி தற்கொலை நகரம் என்றாகி விட்டது. வணிக நடவடிக்கைகளும், நுகர்வு கலாச்சாரமும் கலாச்சார அந்நியமாக்கலும் இதைத்தவிர வேறு எதையும் ஒரு தொழில் நகரத்தில் வாழும் மனிதனுக்குத் தந்து விடாது. திருப்பூரின் தொழில் வளர்ச்சி தந்திருக்கும் நிரந்த போனஸ் இது.

சுப்ரபாரதிமணியன் , subrabharathi@gmail.com

வெள்ளி, 15 அக்டோபர், 2010

பால சாகித்திய புரஸ்கார் மற்றும் விருதுகள்

1.சாகித்திய அகாதமி: குழந்தை இலக்கியப் பரிசு

சாகித்திய அக்காதமி ஆண்டுதோறும் படைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகிய பிரிவுகளில் பரிசு வழங்கி வருகிறது. இவ்வாண்டு முதல் சிறுவர் இலக்கியத்திற்கும் வழங்குகிறது. இவ்வாண்டிற்கான “ பால சாகித்திய புரஸ்கார்” பரிசு திண்டுக்கலைச் சார்ந்த குழந்தை எழுத்தாளர் கமலவேலனுக்கு அவரின் ‘அந்தோணியின் ஆட்டுக்கூட்டி’ என்ற நூலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 1961 முதல் சிறுவர் நூல்களை கமலவேலன் எழுதி வருகிறார். கண்ணன், அரும்பு, கோகுலம், தினமணியின் சிறுவர் மணி ஆகிய இதழ்களில் குழந்தைகளுக்காக எழுதி வருகிறார். ஆசிரியராகப் பணியாற்றியவர் . அறிவொளி இயக்கத்தில் சிறந்த பணிக்காக மால்கம் ஆதிசேசய்யா விருதும் பெற்றிருக்கிறார்.


” மண் புதிது “ சுப்ரபாரதிமணியனின் பயண நூல் வெளியீடு


சுப்ரபாரதிமணியனின் “ மண் புதிது “ பயண் நூல் வெளியீட்டு விழா திருப்பூரில் எம்ஜி புதூர் மூன்றாம் வீதியின் ஓசோ பவனில் நடைபெற்றது. வழக்கறிஞர் சி ரவி நூலை வெளியிட வழக்கறிஞர் சுகன்யா பெற்றுக் கொண்டார். நூலை அறிமுகப்படுத்தி கவிஞர் முத்து சரவணன் பேசினார். 1995 இல் சுப்ரபாரதிமணியன் இங்கிலாந்து, அய்ரோப்பிய நாடுகளுக்குப் பயணம் சென்றிருக்கிறார். அப்போதைய தமிழ் ஈழம் பற்றியக் கனவுகள் இப்போது சிதைந்திருப்பது வருத்தம் தருகிறது. அய்ரோப்பிய நாட்டில் வாழும் ஈழமக்களைப்பற்றி அதிகம் எழுதியிருக்கிறார். அவர்கள் கலாசாரரீதியாக அன்னியப்பட்டிருப்பது பற்றியும் அதிகம் கூறியிருக்கிறார். வெவ்வேறு நாட்டு தேசிய இனக்குழுப்போராட்டங்கள் தீவிரவாதப்போராட்டங்களாக மாறி இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். தீவிர அக்கறையுடன் திரைப்பட , குறும்பட முயற்சிகள் பற்றியும் எழுதியுள்ளார். வழக்கமான பயண நூலாக இல்லாமல் கலாச்சாரத்தேடலாக இந்த நூல் வடிவமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது என்று குறிப்பிட்டார். வழக்கறிஞர் சுகன்யா பழங்குடிகள் மீதான் வன்முறை என்ற தலைப்பிலும் வழக்கறிஞர் சி ரவி “ முத்துகுமார்; நெருப்பாய் வாழ்ந்தவன் ’ என்ற நூல் பற்றிய விமர்சன உரையையும் வழங்கினர். பழ விசுவநாதன் தலைமை வகித்து மறைந்த தமிழ் தேசிய வாதி ஆசிரியர் துரை அரசன் பற்றிப் பேசினார். கவிஞர் இரத்தின மூர்த்தியின் கவிதைகள் குற்ற உணர்வில் அமிழ்ந்து கிடக்கும் தனி மனிதனின் தீவிர மன ஆதங்கமாக அமைந்திருந்தன. ஆலம் நன்றி கூறினார். “ மண் புதிது “ நூல் வெளியீடு : அறிவு பதிப்பகம், சென்னை , இரண்டாம் பதிப்பு இது.


Interior Decoration :ஆங்கிலk கவிதை தொகுப்பு


பத்து இந்திய மொழிகளைச் சார்ந்த 54 பெண் கவிஞர்களின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பு இது. தமிழில் குட்டி ரேவதி, சல்மா, சுகந்தி சுப்மணியன், இளம்பிறை, மாலதி மைத்திரி, சிகிர்தராணி, உமா மகேஸ்வரி, வத்ஸலாவின் கவிதகள் இடம் பெற்றுள்ளன. உருது, ஆங்கிலக் கவிதகளும் உள்ளன. தெலுங்குக் கவிஞர்களின் மொழியாக்கத்தில் வசந்தா கண்ண பிரான் இடம் பெற்றுள்ளார்.


( ரூ 395. வெளியீடு . Women Unlimited , New Delhi )


நம்மாழ்வார்; சிற்பி பாலசுப்ரமணியன்


பாலுக்கும் தேனுக்கும் நிகரான இலக்கியச் சுவையும், பண்பட்ட வைணவ செந்னெறி ஏற்றத் தத்துவச் செழுமையும் கொண்ட திருவாய்மொழியைத் தந்த நம்மாழ்வார் நம் சிந்தயிலும், சென்னியிலும் வீற்றிருக்கும் கீர்த்தி உடையார். வைணவ அடிமைத் திறமும் , ஆய்வு நெறித்தரமும் ஒன்றிணைந்த சிறப்போடு கவிஞர் சிற்பி பாலசுப்ரம்ணியன் அவர்கள் இதை உருவாக்கி உள்ளார்.. ஞானப்பரம்பரை என்ற பழம் இலக்கிய வரிசையில் இடம்பெற்றுள்ள நூல் இது. பொள்ளாச்சி என் ஜி எம் க்ல்லூரி இந்த ஞானப்பரம்பரை நூல் வரிசையை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

செம்மொழி மாநாட்டு சமயத்தில் “ வள்ர் கொங்கு” என்றத் தலைப்பில் கொங்கு நாட்டுப் படைபாளிகள், மொழி அறிஞர்கள் , திரைப்படத்துறையினர் எழுதிய 500 பக்க நூல் ஒன்றையும் இக்கல்லூரி வெளியிட்டிருந்த்து. இவ்வாண்டில் இக்கல்லூரி இணைந்து நடத்திய சாகித்திய அக்காதமியின் அற நெறி நூல்களும், உலகமயமாக்கலும் கருத்தரங்கமும், நல்லி திசை எட்டும் மொழிபெயர்ப்பு பரிசு குறித்தான மொழிபெயர்ப்பாளர்களின் கருத்தரங்கு ஒன்றும் குறிப்பிடத்தக்கது.




wwww.thinnai.com 

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

சுப்ரபாரதி மணியன்: FRONTLINE#links#links

சுப்ரபாரதி மணியன்: FRONTLINE#links#links

சாகித்திய அகாதமி: குழந்தை இலக்கியப் பரிசு

சாகித்திய அக்காதமி ஆண்டுதோறும் படைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகிய பிரிவுகளில் பரிசு வழங்கி வருகிறது. இவ்வாண்டு முதல் சிறுவர் இலக்கியத்திற்கும் வழங்குகிறது. இவ்வாண்டிற்கான “ பால சாகித்திய புரஸ்கார்” பரிசு திண்டுக்கலைச் சார்ந்த குழந்தை எழுத்தாளர் கமலவேலனுக்கு அவரின் ‘அந்தோணியின் ஆட்டுக்கூட்டி’ என்ற நூலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 1961 முதல் சிறுவர் நூல்களை கமலவேலன் எழுதி வருகிறார். கண்ணன், அரும்பு, கோகுலம், தினமணியின் சிறுவர் மணி ஆகிய இதழ்களில் குழந்தைகளுக்காக எழுதி வருகிறார். ஆசிரியராகப் பணியாற்றியவர் . அறிவொளி இயக்கத்தில் சிறந்த பணிக்காக மால்கம் ஆதிசேசய்யா விருதும் பெற்றிருக்கிறார்.

” மண் புதிது “ சுப்ரபாரதிமணியனின் பயண நூல் வெளியீடு

--------------------------------------------------------------------------------

சுப்ரபாரதிமணியனின் “ மண் புதிது “ பயண் நூல் வெளியீட்டு விழா திருப்பூரில் எம்ஜி புதூர் மூன்றாம் வீதியின் ஓசோ பவனில் நடைபெற்றது. வழக்கறிஞர் சி ரவி நூலை வெளியிட வழக்கறிஞர் சுகன்யா பெற்றுக் கொண்டார். நூலை அறிமுகப்படுத்தி கவிஞர் முத்து சரவணன் பேசினார். 1995 இல் சுப்ரபாரதிமணியன் இங்கிலாந்து, அய்ரோப்பிய நாடுகளுக்குப் பயணம் சென்றிருக்கிறார். அப்போதைய தமிழ் ஈழம் பற்றியக் கனவுகள் இப்போது சிதைந்திருப்பது வருத்தம் தருகிறது. அய்ரோப்பிய நாட்டில் வாழும் ஈழமக்களைப்பற்றி அதிகம் எழுதியிருக்கிறார். அவர்கள் கலாசாரரீதியாக அன்னியப்பட்டிருப்பது பற்றியும் அதிகம் கூறியிருக்கிறார். வெவ்வேறு நாட்டு தேசிய இனக்குழுப்போராட்டங்கள் தீவிரவாதப்போராட்டங்களாக மாறி இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். தீவிர அக்கறையுடன் திரைப்பட , குறும்பட முயற்சிகள் பற்றியும் எழுதியுள்ளார். வழக்கமான பயண நூலாக இல்லாமல் கலாச்சாரத்தேடலாக இந்த நூல் வடிவமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது என்று குறிப்பிட்டார். வழக்கறிஞர் சுகன்யா பழங்குடிகள் மீதான் வன்முறை என்ற தலைப்பிலும் வழக்கறிஞர் சி ரவி “ முத்துகுமார்; நெருப்பாய் வாழ்ந்தவன் ’ என்ற நூல் பற்றிய விமர்சன உரையையும் வழங்கினர். பழ விசுவநாதன் தலைமை வகித்து மறைந்த தமிழ் தேசிய வாதி ஆசிரியர் துரை அரசன் பற்றிப் பேசினார். கவிஞர் இரத்தின மூர்த்தியின் கவிதைகள் குற்ற உணர்வில் அமிழ்ந்து கிடக்கும் தனி மனிதனின் தீவிர மன ஆதங்கமாக அமைந்திருந்தன. ஆலம் நன்றி கூறினார். “ மண் புதிது “ நூல் வெளியீடு : அறிவு பதிப்பகம், சென்னை , இரண்டாம் பதிப்பு இது.

Interior Decoration :ஆங்கில கவிதை தொகுப்பு

--------------------------------------------------------------------------------

பத்து இந்திய மொழிகளைச் சார்ந்த 54 பெண் கவிஞர்களின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பு இது. தமிழில் குட்டி ரேவதி, சல்மா, சுகந்தி சுப்மணியன், இளம்பிறை, மாலதி மைத்திரி, சிகிர்தராணி, உமா மகேஸ்வரி, வத்ஸலாவின் கவிதகள் இடம் பெற்றுள்ளன. உருது, ஆங்கிலக் கவிதகளும் உள்ளன. தெலுங்குக் கவிஞர்களின் மொழியாக்கத்தில் வசந்தா கண்ண பிரான் இடம் பெற்றுள்ளார்.

( ரூ 395. வெளியீடு . Women Unlimited , New Delhi )

நம்மாழ்வார்; சிற்பி பாலசுப்ரமணியன்

--------------------------------------------------------------------------------

பாலுக்கும் தேனுக்கும் நிகரான இலக்கியச் சுவையும், பண்பட்ட வைணவ செந்னெறி ஏற்றத் தத்துவச் செழுமையும் கொண்ட திருவாய்மொழியைத் தந்த நம்மாழ்வார் நம் சிந்தயிலும், சென்னியிலும் வீற்றிருக்கும் கீர்த்தி உடையார். வைணவ அடிமைத் திறமும் , ஆய்வு நெறித்தரமும் ஒன்றிணைந்த சிறப்போடு கவிஞர் சிற்பி பாலசுப்ரம்ணியன் அவர்கள் இதை உருவாக்கி உள்ளார்.. ஞானப்பரம்பரை என்ற பழம் இலக்கிய வரிசையில் இடம்பெற்றுள்ள நூல் இது. பொள்ளாச்சி என் ஜி எம் க்ல்லூரி இந்த ஞானப்பரம்பரை நூல் வரிசையை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
செம்மொழி மாநாட்டு சமயத்தில் “ வள்ர் கொங்கு” என்றத் தலைப்பில் கொங்கு நாட்டுப் படைபாளிகள், மொழி அறிஞர்கள் , திரைப்படத்துறையினர் எழுதிய 500 பக்க நூல் ஒன்றையும் இக்கல்லூரி வெளியிட்டிருந்த்து. இவ்வாண்டில் இக்கல்லூரி இணைந்து நடத்திய சாகித்திய அக்காதமியின் அற நெறி நூல்களும், உலகமயமாக்கலும் கருத்தரங்கமும், நல்லி திசை எட்டும் மொழிபெயர்ப்பு பரிசு குறித்தான மொழிபெயர்ப்பாளர்களின் கருத்தரங்கு ஒன்றும் குறிப்பிடத்தக்கது.

FRONTLINE


Subrabharathi Manian. His writings espouse the cause of the poor.


“THE greatest tragedy of Tirupur, the erstwhile bastion of the leftist and trade union movements in western Tamil Nadu, is that the class consciousness of the workers, more particularly the migrant labour in the garment industry, has been blunted and they are being pushed into the drudgery of a monotonous, dull and mechanical life,” says Subrabharathi Manian, a member of the Sahitya Akademi Advisory Board, who in his writings espouses the cause of the poor and the marginalised, particularly the migrant labourers in the garment industry.

Talking to Frontline, he expressed anguish at reports on suicides and attempts to commit suicide by migrant workers and their family members. “Many migrant workers in the garment industry, who alienate themselves from the trade unions in a bid to earn more through hard work, ultimately slip into depression the moment they realise that they have been drawn into an illusory world of prosperity,” he said.

According to him, the worst hit among the migrants are single parents and their children. He recalled how he, along with his parents, migrated to Tirupur five decades ago, when he was hardly 10 years old, from his native Segadanthaazhi village. For hundreds of families in Segadanthaazhi and a few other villages in the area, Tirupur's fledgling hosiery industry offered hope .

Manian learnt a lot about the travails of migrant labourers when he was an employee of the Telecom Department in Hyderabad for eight years, until 1993. The labourers, most of them from southern Tamil Nadu looking for work in Andhra Pradesh, inspired his first novel, Matrum Silar (And a Few Others), in 1989. Issues such as inter-State river water disputes, which posed a formidable challenge to national integration, provoked him to pen Sudu Manal (Hot Sand) in 1992.

When he returned to Tirupur in 1994 he was stunned by the growth of the knitwear industry, which had started earning foreign exchange to the tune of Rs.10,000 crore. But soon he was able to see the other side of the “Dollar City”, with 30,000 children employed in the hosiery industry. Beside, the release of untreated effluents into the Noyyal river, the lifeline of Tirupur, by dyeing units added to the agony of the farming community.

As a socially conscious writer committed to socialism and democracy, Manian wielded his pen against the evil practice of child labour and the pollution of the Noyyal. His novel Saayathirai (The Coloured Curtain), published in 1994, described the devastating effect of effluents from dyeing factories on the cultural and economic life of the people. Translated into English, Hindi, Malayalam and Kannada, the novel won the appreciation of the literary world. A recipient of the “katha” award for the ‘best short story writer' and the Tamil Nadu government's award for ‘best novel', he has authored 30 works, including seven novels, 13 short story collections and a travelogue.

It was a sad reality that activists of different political parties in Tirupur were prepared to discuss everything under the sun but carefully skirted issues such as child labour, labour rights and protection of the environment. Marxism helped him to see things from a different perspective. Along with a few NGOs, he and his friends in the progressive literary circles launched an awareness campaign on child labour and environment protection. However, he made it clear that they were not opposed to industrial development or science and technology.

They were disheartened by the lukewarm response from the people and the industry but saw light at the end of the tunnel in the form of pressure on the exporters from buyers. This forced the exporters to adopt mechanisms such as social audits, including ISO 9000 and Social Accountability 8000, to ensure labour standards and eco-friendly garments, he said. The media forced the government to intervene, he added.

Though child labour was no longer in vogue in the big export units, it was still practised at the sub-contract level and by some of the units producing knitwear for the domestic market, said Manian. Exporters now responded to issues relating to pollution, and corporate social responsibility and fair trade practices were among the issues that were widely discussed in the town, said Manian.

Large-scale influx of migrant workers added a new dimension to Tirupur's problems. These first-generation workers are mostly single men or women and they tire themselves out when still young.

Manian said government agencies, exporters, trade unions, political parties and intellectuals should put their heads together to evolve a strategy to ensure that the garment labourers were treated humanely. Writers had a key role to play in this regard, he concluded.

S. Dorairaj


--------------------------------------------------------------------------------


நன்றி

FRONT LINE

http://www.hinduonnet.com/fline/stories/20101008272001800.htm

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

பணக்கார ஊரிலிருந்து ஒரு ஏழைக்கட்சி

திருப்பூர் 15,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணி தரும் நகரம் என்பதால் ஆசியாவின் மிகப் பெரிய வியாபாரகேந்திரமாகும். மக்களின் நேரம் கெட்ட நேர உழைப்பு முக்கிய காரணம்.எல்லாத் தரப்பினரும் இங்கு முதலீடு செய்கிறார்கள். அத்வானி முதல் கொண்டு கபில்தேவ் வரைக்கும் பெரும் பிரமுகர்களுக்கு தொழில் பினாமிகள் உள்ளதாகச் சொல்கிறார்கள். அரசியல் கட்சிகளுக்கு பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் ஊர். இதனால் வியாபார விடயங்களை மீறி அரசியல் வாதிகளின் பார்வைக்கு இலக்காகி இருக்கும் ஊர்.( ஒரு ஆண்டுக்கு எத்தனை முறை துணை முதலமைச்சர் இங்கு வருகிறார் என்பது முக்கிய கணக்கு. ஒவ்வொரு முறையும் அவர் இங்கு வரும் போது வரவேற்பு, பொதுக்கூட்டத்திற்கு 3 கோடி ரூபாய் செலவாகிறது . ஆளும் கட்சிப் பிரமுகர்கள் இதைச் சுற்றிஉள்ள பகுதிகளில் வாங்கிக் குவித்த சொத்து காரணமாக இங்கு ரியல் எஸ்டேட் வியாபாரம் எகிறிப்போயிருக்கிறது. ) உள்ளூர் மார்க்ஸ்ட்கட்சி சட்ட மன்ற உறுப்பினர் அரை கோடி ரூபாயை தமிழக தொழிலாளர் நல அமைச்சருக்கு சர்வதேச தொழிலாளர் நியதிப்படியான 8 மணி வேலை நேரம் இங்கு செல்லுபடியாகாது என்று சட்டத் திருத்தலுக்காக ஏற்றுமதியாளர்களிடம் பெற்ற பணத்தை லஞ்சமாகக் கொடுத்தார் என்பதான முதல் காரணமாகக்கொண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அவர் தி மு கவில் இணைகிறார். ) தொழில் நகரம் என்பதை மீறி இது அரசியல் நகரம் ஆகி விட்டது.

இங்கு சமீபத்தில் பிரபலமான பேச்சாளர் தமிழருவி மணியன் தனது ஆதரவாளர்களின் பலத்தைக் காட்ட ஒரு கட்சி ( இயக்கம்) ஆரம்பித்த வைபவம் நடைபெற்றது. காந்திய சமுதாய இயக்கம்.தமிழருவி மணியனுக்கு இங்கு எப்போதுமே பெரும் கூட்டம் கூடும். கவர்ச்சிகரமான பேச்சு, வாசிப்புப் பழக்கம் இல்லாமல் கூட்டத்தில் பேசுவதைக் கேட்கப்பழகி சொக்கிப்போய் கிடக்கும் பெரும் கூட்டம் திருப்பூரில் உண்டு. கட்சி ஆரம்ப விழாவுக்கு இருமடங்குக் கூட்டம் கூடியிருந்தது. அவரின் பேச்சு காந்தீயம் இன்றைய சூழலுக்கு எப்படி பொருந்துகிறது என்பதை விட கருணாநிதி மீதான எக்கச்ச்க்க கோபத்தின் வெளிப்பாடாகவே இருந்தது. ( அவர் குடியிருக்கும் அரசு வீட்டை காலி செய்ய அரசு எடுத்த நடவடிக்கைக்கு நீதிபதி சந்துரு தந்திருக்கும் தீர்ப்பு பிரசித்தியானது. தமிழ் வாழ்க என்று கதறிக் கொண்டிருப்பதை விட தமிழ் அறிஞர்களுக்கு கவுரவம் தருவது நல்லது. முக்கியம் என்றார் சந்துரு.) காந்திய பொருளாதார விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்க அறிக்கை தந்திருருந்தார் தமிழருவி. உறுப்பினர் சந்தா ரூ 20 மட்டும். போராட்டங்களுக்கு அழைக்கமாட்டேன் என்று உறுதி மொழி தந்திருக்கிறார். நெல்லைக்கண்ணன் போன்றோர் தமிழருவி மணியனை விட கூட்டங்களுக்கு அதிகத் தொகை வாங்குகிறவர்கள். அவருக்கு அதிக கூட்டம் கூடும் ஊர் திருப்பூர். அவருக்கு ஆதரவு தரும் பணக்காரர்கள், புரவலர்கள் இங்கு அதிகம். அவர் அவரின் ஆதரவாளர்களின் கூட்டத்தை இங்கு கூட்டக்கூடும். ( நகைச்சுவை மன்ற மாதக்கூட்டங்களுக்கு வரும் எக்கச்சக்க கூட்டத்தை வைத்துக் கொண்டு உள்ளூர் துணுக்கு எழுத்தாளர் ஒருவர் இது நல்ல சமயம் நகைச்சுவை கட்சி தொடங்க என்றார்.) சட்டமன்றத் தேர்தல் னெருங்கி வரும் நேரத்தில் இது போன்ற பலத்தைக் காட்டும் கூட்டங்கள் , புதிய கட்சிகளின் ஆரம்ப விழாக்கள் அதிகரிக்கும்.இந்திய ஜனநாயகம் கட்சிகளை ஆரம்பிப்பதை வெகுவாக ஆதரிக்கும் தாரளவாதம், பெருந்தன்மை கொண்டதாகும்.
ஆமாம், நகைச்சுவை கட்சித்தலைமைக்கு கீழ்க்கண்ட பேச்சாளர்களில் யாரை நீங்கள்சிபாரிசு செய்கிறீர்கள். 1.கு ஞானசம்பந்தம் 2. சாலமன் பாப்பையா.
3. லியோனி 4. ராசா
சிறந்த சிபாரிசுக்கு ஒரு டஜன் திருப்பூர் லோக்கல் பனியனும், ஈரோடு அயிட்ட ஜட்டி அரை டஜனும் பரிசு காத்திருக்கிறது.


======================================================>சுப்ரபாரதிமணியன்

புதன், 18 ஆகஸ்ட், 2010

நகரத்திற்கு வெளியே இருக்கும் மனிதர்களுள் விஜய் மகேந்திரன்

நகரத்திற்கு வெளியே இருக்கும் மனிதர்களுள் விஜய் மகேந்திரன்
--------------------------------------------------------------

- சுப்ரபாரதிமணியன்

தற்போதைய வெகுஜன ஊடகங்களில் திரைப்படங்களும் இதழ்களும் இளைஞர்களையே
மையமாகக் கொண்டிருக்கின்றன. திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களில் பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என்பதால் திரைப்படங்கள் அவர்களை மையமாகக் கொண்ட காதல் அம்சத்தையே பிரதானமாகக் கொண்டிருக்கின்றன. இன்னொருபுறம் கேளிக்கை சார்ந்த விடயங்களிலும், நுகர்வு கலாச்சாரத்தன்மை கொண்டும் அமைந்திருக்கின்றன. வெகுஜன இதழ்கள் இளைஞர்களை கவர்கிற வகையில் திரைப்பட நடிக, நடிகைகளின் வாழ்க்கை செய்திகளையே மையமாக கொண்டு இயங்குகின்றன. இன்றைய இளைஞர்களின் உள்ளார்ந்த சிக்கல்களையும், பிரச்சனைகளையும் இவைகள் வெகு குறைந்த சதவீதத்திலேயே முன் வைக்கின்றன.

இலக்கிய இதழ்கள் சார்ந்து எழுதும் இளம் எழுத்தாளர்களின் படைப்புகளில் அவர்களின் பிரத்யேக வாழ்கை சார்ந்த சிக்கல்கள் வெகுவாக வெளிப்படுவதில்லை. அவர்களில் பெரும்பான்மையோர் பெரியவர்களின் உலகில் தென்படும் சிக்கல்களையும், அனுபவங்களையுமே, அவரின் வயது சார்ந்தோரின் பிரச்சினைகளையும் படைப்புலகில் கொண்டு வந்து இயங்குவது விசேஷ தன்மையாக இருக்கிறது. இதுவே அவரின் பிரத்யேக எழுத்தின் இயல்பு அன்று தொனிக்கிற விதமாய் அவரின் ''நகரத்திற்கு வெளியே'' முதல் தொகுப்பில் இருக்கும் கதைகள் அமைந்திருக்கின்றன. பொதுத்தலைப்பு நகரத்திற்கு வெளியே என்றிருந்தாலும், நகரம் சார்ந்து இயங்குகிற இளைஞர்களையே இக்கதைகள் மையமாக கொண்டிருக்கின்றன. கணிசமான இளைஞர்கள் கவிதா உலகில் தங்களை ஆட்படுத்திக் கொண்டு தீவிரமாய் இயங்குவதைப் போல சிறுகதைத் தளத்தில் இயங்கவில்லை. அவ்வாறு இயங்குகிரவர்களில் குறிப்பிடதக்கவராயும் விஜய் மகேந்திரன் இருக்கிறார்.

நகரம் சார்ந்த உதிரி இளைஞர்கள் இவரின் கதைகளில் நிரம்பத் தென்படுகிறார்கள். நகர கல்லூரியில் விரிவுரையலர்களாக கொத்தடிமை போல அவர்கள் இயங்குகிறார்கள். குடிகார இளைஞர்களாய் இருக்கிறார்கள். பழைய புத்தகக் கடைகளைத் தேடிப்போய் அலைகிறவர்களும் இருக்கிறார்கள். வேலை இல்லாமல் மன உலைச்சல்களில் அல்லல்படும் இளைஞர்கள் மத்தியில் ஆறுதல் சொல்லவும் மன பிரதிபலிப்பை இளைஞர்கள் இன்னொரு தளத்தில் காணக் கிடைக்கின்றார்கள். கல்லூரி வாழ்க்கை முடிந்து திருமணத்தின் போது சந்தித்து தங்களின் கல்லூரி வாழ்க்கையை எண்ணி ஏங்கிக் கொள்கிறவர்களையும் இருக்கிறார்கள். ''ஏதோ குழாய் வரி கட்டாத வீட்டின் குழாய் இணைப்பைத் துண்டிக்கச் சொல்வது போல'' காதலைத் துண்டித்துக் கொண்டு புது காதல் உலகத்திற்குள் நுழைந்து கொள்ளும் இளைஞர்களும் இருக்கிறார்கள். பாலியல் தேவைகள் இளம் பெண்களை கருக்கலைப்பிற்கு கொண்டு செல்கின்றன. இதன் பொருட்டு அவமானம் அடைகிறார்கள். சாகசச் செயல்களும், அத்து மீறல்களும் சில இளைஞர்களை தாதாக்களாக மாறி அவர்கள் வன்முறையின் கூரிய நகங்களுக்குள் அடைபட்டு சாவையும் சந்தித்து கொள்கிறார்கள். வீட்டிற்கு தெரியாமல் காதலில் ஈடுபட்டு பின் குடும்பச் சூழலை விட்டு ஓடிப்போகிற இளம் பெண்களும் அவலமும் மூத்தகுடி உறுப்பினர்களை முன் வைத்து அலசப்படுகிறது.

நகரம் சார்ந்து இயங்கும் இளைஞர்களின் சிக்கல்களை, வீட்டுச்சூழலிலும், அலுவலக சூழலிலும், அவதானித்து அவற்றை விஜய் மகேந்திரன் கதைகளுக்குள் கொண்டு வருகிறார். உதிரிகளாய் இயங்கிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் உலகம் நுட்பமாய் வெளிப்படுகிறது. இந்த குரூரங்களுக்குள் இருக்கும் இளைஞர்களின் வாழ்க்கையை எவ்வித துவேசமும் இன்றி வெளியே நின்று அவதானித்து பதிவு செய்கிறார். அவர் இளைஞர் என்பதாலேயே துவேஷம் இக்கதைகளில் படியவில்லை.

முதியவர் ஒருவர் தனது சமவயது நண்பருக்கு எழுதும் கடிதங்களை மையமாகக் கொண்டிருக்கும் ''அடைபடும் கற்று'' என்ற கதையில் டிரைவ் இன் உணவு விடுதி இருந்த இடம் ஒரு தொழிற்சாலைக்காக காலி செய்யப்பட்டுவிட்டது பற்றியதாக இருக்கிறது. அதில் இடம் பெரும் ஒரு பகுதியில் ருசியான உணவின் மேன்மை பற்றிச் சொல்லப்படும்போது ''எப்படியோ உமக்கு வேதனையிலும் நாக்கில் நீர் சொட்டுகிறது'' என்ற கேள்வி இருக்கிறது. இளைஞர்களின் இயல்பான வாழ்வை மீறி குரூரங்கள் தென்படும் பகுதிகளில் கூட விஜய் மகேந்திரன் மெல்லிய கேலி பல கேள்விகளை முன் வைக்கிறது.

ஆனால் குரூரமனத்தின் வெளிப்பாடாக இல்லாமல் அக்கறை சார்ந்த கவலையாகவும் இருக்கிறது.

இக்கதைகள் சொல்லப்பட்டிருக்கும் தொனியில் இருக்கும் யதார்த்தமும், எளிமையும் ஏமாற்றக்கூடியது. எளிமையான சொற்களை மீறிய தீர்க்கமான இளைஞர்களின் அனுபவங்கள் கவனத்திற்குரியவை. கதைகளின் தலைப்புகள் கவித்துவமாய் அமைக்கப்பட்டிருப்பது அவற்றின் உள்ளடக்கத்தை இன்னும் தீவிரமானதாக்குகிறது .


நகரத்திற்கு வெளியே
சிறுகதைகள்
விஜய் மகேந்திரன்
உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை-18.
விலை ரூ.50/-

சூர்யா, கார்த்திக்., சிவகுமார், நல்லி, சிற்பி விருதுகள்

சூர்யா, கார்த்திக்., சிவகுமார், நல்லி, சிற்பி விருதுகள்

-------------------------------------------------------
சுப்ரபாரதிமணியன்


தமிழ்த் திரைப்பட உலகம் சூரியகுழுமத்துள் முடங்கிப்போய்விட்டது. முன்பு திரைப்பட விநியோகஸ்தில் ஆரம்பித்தது. பின் திரைப்பட தயாரிப்புகளிலும் ஈடுபட்டு இன்று எந்த முன்னணி திரைப்பட நடிகரும் அவர்களின் தயாரிப்பில் நடிப்பதற்கு உட்படாமல் இருக்கமுடியாது. இல்லையென்றால் வருமானவரி தொல்லை, ரெய்டு என்று ஆரம்பித்து தொல்லை தொடரும். எடுத்த படத்தை அவர்களிடம் போட்டுக் காட்டி விட்டு அவர்கள் சொல்லும் பணத்தை வாங்கிக் கொண்டு போய்விடுவது உத்தமம். தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் இவர்கள் வசம் என்பதால் இடியாப்பசிக்கல். இவர்களின் கைங்கரியத்தால் தியேட்டர் கிடைக்காமல் 60 படங்கள் காத்துக் கிடைப்பதாய் ஆனந்தவிகடன் தகவல் தந்திருக்கிறது. திரைப்படங்கள் மூலம் ஆட்சிக்கு வந்தகுழுமத்தால் திரைப்படத்றையினருக்குத் தலைவலி. திரைப்படதுறை முடங்கிப் போகும் சூழல்.பத்திரிக்கைத்துறையில்எதிர் கருத்தாளர்களுக்கு இருக்கும் மிரட்டலும், தாக்குதலும் அபாயகரமானவையாக மாறிஉள்ளன. சூர்யா, கார்த்திக் எந்தப்படங்களில் நடிப்பது என்பதை அவர்களோ, தந்தை சிவகுமாரோ தீர்மானிக்க முடியாது. சிவகுமார் சொற்பொழிவுகளில், பேச்சு சிடி தயாரிப்பதில் அக்கறை கொண்டு பொழுதைப் போக்குவதைத் தவிர வேறு வழியில்லை.

சிவகுமாரின் இது “ ராஜபாட்டை அல்ல” ஆங்கில வடிவம் பெற்றுள்ளது. ஆனால் ஆங்கிலத்திலும் அதே தலைப்பில்.. ஆங்கில வாசகர்களை மனதில் கொண்டு தலைப்பு இடப்படவில்லை என்று தெரிகிறது.இப்படிப்பட்ட மொழிபெயர்ப்புகள் யாருக்காக என்ற கேள்வி எழுகிறது. தலைப்பு ஆங்கிலத்தில். உள்ளே தமிழ் அறிஞர்களின் கருத்துக்கள் ஆங்கிலத்தில் தரப்பட்டிருக்கின்றன. அந்த தமிழ் அறிஞர்கள் பற்றி ஆங்கில வாசகன் அறிந்திருக்காத போது அவற்றால் என்ன பயன். சோ, தமிழருவி மணியன், நக்கீரன் கோபால் ஆகியோரின் கருத்துக்கள் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் போது அவர்களைப் பற்றிய அறிமுகக் குறிப்புகளும் இல்லை. சிவகுமார் பற்றிய அறிமுகக்குறிப்புகள் கூட இல்லை. தமிழில் இதைப் படித்தவன் எதற்கு மறுபடியும் ஆங்கிலத்தில் படிக்கப்போகிறான்.ஆங்கிலவாசகர்களை மனதில் கொண்டு ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளிப்பட வேண்டும். அல்லயன்ஸ் பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது. திரைப்படத்துறையினர் எழுதிய புத்தகங்கள் என்றால் அவற்றைல் 200, 500 பிரதிகள் பெற்றுக்கொள்ள பணக்காரர்கள், அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.ஆனால் இலக்கியப் படைப்புகள் மொழிபெயர்ப்பில் வரும்போது அவர்களைப் பாராட்ட நல்லி போன்று சிலர்தான் இருக்கிறார்கள். இவ்வாண்டு 1.5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை மொழிபெயர்பாளர்களுக்கு நல்லி பொள்ளாச்சியில் நடைபெற்ற விழாவில் வழ்ங்கினார்.

பலபரிசுகளை வாங்கிக் குவித்திருக்கும் சிற்பி பாலசுப்ரமணியனின் மொழிபெயர்ப்பில் மாத்ருபூமி வீரேந்திர குமாரின் பயணக்கதை

” வெள்ளிப்பனி மீதில்” குறிப்பிட்த்தக்கதாகும். தமிழில் இருந்து மலையாளத்திற்கு தோப்பில் முகமது மீரானின் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கும் சாபி செருமாவிலாயி 15 ஆண்டுகள் தேனீர் கடையில் வேலை பார்த்தவர். இப்போது கேரளத்தில் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார்.. இவரின் நூலும் பரிசு பெற்றது.

( எனது சுடுமணல் நாவலை இவர் மலையாளத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். )

ஆகாசம்பட்டு சேசாசலம், கீதா சுப்ரமணியன், அசோகன் முத்துசாமி, ஆர் பி சாரதி, , மா ராமலிங்கம், தருமி , சுப்ரபாலன், பாலாஜி ஆகியோர் பரிசு பெற்ற மற்றவர்கள். கொஞ்சம் ஆங்கிலப்புலமை, வெளிநாட்டில் இருந்தது ஆகிய தகுதிகளே பலருக்கு ஆங்கிலத்திலிருந்து நூல்களை மொழிபெயர்க்கும் தகுதியையும், பரிசையும் கொடுத்திருப்பதை சமீபத்தில் வந்திருக்கும் சில ஆங்கில மொழி ஆக்கங்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. சம்பந்தப்பட்ட நூல்களின் மூல களமும், கலாச்சார விசயங்களும் அக்கறை கொள்ளப்படாமல் இயந்திர ரீதியான மொழிபெயர்ப்புகளாய் அவை அமைந்திருக்கின்றன.



கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் ( 2 முறை சாகித்திய அகாதமி பரிசு பெற்றவர், சாகித்திய அகாதமியின் தமிழ் குழு ஒருங்கிணைப்பாளர்) கடந்த 15 ஆண்டுகளாய் கவிஞர்களுக்கு பரிசு அளித்து வருகிறார். இவ்வாண்டு சிற்பி இலக்கிய விருதில் 1 லட்சம் பரிசுத் தொகையை பகிர்ந்து கொண்டவர்கள்: கவிஞர்கள் கலாப்ரியா, இளம்பிறை, மரபின் மைந்தன் முத்தையா , சக்திஜோதி, தங்கம் மூர்த்தி, அழகிய பெரியவன் ஆகியோர், கவிஞர்களுக்கு அங்கீகாரம், பரிசுகள், பாராட்டுகள் சுலபமாகக் கிடைத்து விடுகின்றன. உரைநடையாளர்கள், சிறுகதையாளர்கள், நாவலாசிரியர்களுக்கு அவ்வகை அங்கீகாரம் சுலபமாக கிடைப்பதில்லை. துரதிஸ்டாசாலிகள் அவர்கள்.



சுப்ரபாரதிமணியன் subrabharathi@gmail.com

சாகித்ய அகாதமி

சாகித்திய அகாதமி : சேலம் எழுத்தாளர்கள் சந்திப்பு

--------------------------------------------------------------------------------

22-08-10 ஞாயிறு மாலை 5 மணி ,தமிழ்ச் சங்கக்கட்டிடம், சேலம்.
தலைமை; தமிழ்நாடன்

அறிமுகவுரை: சுப்ரபாரதிமணியன்
( சாகித்ய அகாதமி ஆலோசனைக்குழு உறுப்பினர் )
கதை வாசிப்பு:
பெருமாள் முருகன்
க வை பழனிச்சாமி
இல வின்சென்ட்
மு அம்சா
கவிதை வாசிப்பு:
சூர்ய நிலா
சிபி செல்வன்
அ கார்த்திகேயன்
கு கணேசன்
சக்தி அருளானந்தம்
கோனூர் வைரமணி
க ஆனந்த்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: எழுத்துக் களம், சேலம்

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

பொன்னீலனின் "மறுபக்கம்"

பொன்னீலனின் ” மறுபக்கம் “ மதச் சார்பின்மைக்கு இணக்கமான நாவல்


சுப்ரபாரதி மணியன்



சமகால அரசியல் நாவலில் எழுத்தாளர்கள் அக்கறை கொள்ளாததற்கு பல காரணங்களை யூகிக்க முடியும். ஆனால், மக்கள் சார்ந்த இயக்கங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் சமகால அரசியல், சமூக நடைமுறை பற்றிய முன்னெடுப்புகளிலும், போராட்டங்களிலும் ஈடுபடுகிற அவசியம் காரணமாக அது படைப்புகளிலும் விஸ்தாரமாக இடம் பெறுவதுண்டு. பொன்னீலன் போன்றவர்கள் பொதுவுடைமைக் கட்சி சார்ந்த இலக்கிய இயக்கங்களோடு தொடர்ந்து செயல்படுவதால் அவர் படைப்பு சார்ந்த அனுபவங்களுக்கு சமகால அரசியலை, தொடர்ந்து எடுத்து இயங்கி வருகிறார். அவரின் சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ‘புதிய தரிசனங்கள்’ நாவல் நெருக்கடி காலத்தையொட்டிய ஒரு யதார்த்த படைப்பாகும்.



’மறுபக்கம்’ நாவலில் மண்டைக்காட்டுச் சம்பவம் முதல் 2002 வரையிலான குமரி கிராமங்களின் பல்வேறு வகை ஜாதிகள், மதங்களைச் சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. சேதுமாதவன் என்ற இளைஞன் கன்னியாகுமரியின் பசுவிளை என்ற நாஞ்சில் நாட்டு கிராமத்திற்கு மண்டைக்காடு பற்றிய கள ஆய்வுக்காகச் சென்று தரவுகளைச் சேகரிக்கிறான். அந்தத் தரவுகளின் சேகரிப்பே இந்த நாவலாகியிருக்கிறது. அந்த கிராம மனிதர்களின் வாழ்க்கையூடே தோள்சீலை கலகம், வைகுண்ட சாமியின் ஆன்மீகப் பணி, அடிமை ஒழிப்பு, கன்னியாகுமரி தமிழ்நாடு இணைப்புப் போராட்டம், மண்டைக்காடு சம்பவம் போன்றவற்றின் தரவுகளும், அதில் பங்கு பெற்ற, சாட்சியாய் இருந்தவர்களின் வாக்குமூலங்களும் பதிவாகியிருக்கின்றன. இவை ஆவணப் பதிவுகளாக வெவ்வேறு அடுக்குகளில் அமைந்திருக்கின்றன. அந்தக் கால மனிதர்களின் வாழ்க்கை மத, ஜாதிப் பிரச்சனைகளால் அல்லலுறுவதை நாவல் விவரிக்கிறது. அதற்கு தரவுகளும் வாக்கு மூலங்களும் தவிர பழைய மரபுக் கதைகள், நாட்டுப்புற தொன்மங்கள், நாட்குறிப்புகள், உரைகள் போன்றவையும் பயன்படுகின்றன. விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையாக அவை விரிகின்றன. விழிப்பு நிலையிலான மாயத் தோற்றம் ஒரு அடுக்காகிறது. கனவு சார்ந்து யதார்த்த வாதம் இன்னொரு அடுக்காகிறது.


இதன் மூலமான மதச்சார்பின்மை பற்றி கருத்து வலுப்பட்டு பிரதிபலிக்கிறது. மதக்கலவரங்களில் மக்கள் சிக்குண்டு வேதனைப்படுகிறார்கள். அவன் கழுத்தில் தொங்கும் ஏசுநாதர் இதெல்லாம் கண்டு அலறுவார் என்று ஒரு வாசகம் ஓரிடத்தில் வருகிறது. அவை ஏசுநாதர் மட்டுமல்ல, பல்வேறு மத தெய்வங்களின் அரற்றலாயும் இருக்கும். இதற்கெல்லாம் ஆறுதலாக அமைபவை இந்நாவலில் இடம்பெறும் மகான்களும், அவதார புருஷர்களும்தான். வைகுண்டசாமி, மீட் அய்யர், மார்த்தாண்ட வர்மா, பப்புத் தம்பி, ராமன் தம்பி, அயோத்திய தாசப் பண்டிதர், குன்றக்குடி அடிகளார், ஜீவா போன்றோரின் வாக்குகளும் செயல்பாடுகளுமே மக்களுக்கு ஆறுதல் தருகின்றன. இவர்களின் மூலம் சாதியத்திற்கும், அரசிற்கும், வைதீகத்திற்கும், எதிரான எதிர்ப்புக் குரலாக இந்த நாவலின் மையம் தன்னை கட்டமைத்துக் கொள்வது விசேஷமானது. விடுதலை பெற்ற உண்மைகள் மனிதனின் இறுக்கங்களை,அடிமைத்தனத்தை விடுதலை செய்யும் என்பது தெளிவாகிறது. “சேர்வைக்காரன் சாமிய சிவனாக்கியது எவ்வளவு பெரிய ஆன்மிகத் தொண்டு..... அப்ப கிருஷ்ணனை ஏசுவாக்கினா பாராட்டுவீங்களா.... ஏசுதானே சர்வ வல்லமையுள்ள சர்வதேசக் கடவுள். அது அன்னிய மதம்” என்று விவாதிக்கிறார்கள்.


இந்த ஆவணங்கள் சேதுமாதவன் பலரை சந்திக்கச் சென்று சேகரிக்கிற தரவுகள் மூலம் கட்டமைக்கப்பட்டு ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. வெறும் ஆவணங்களின் தொகுப்பாகவும் பெரும்பான்மை நாவலின் பகுதிகள் அமைந்துவிட்ட பலவீனமும் இதனால் வெளிப்படுகிறது. இது ஒரு வகை நாவல் தன்மையாகவும் கணிக்கப்படுகிறது. சமீபத்தில் வெளிவந்த சி.ஆர். ரவீந்திரனின் ‘கண்ணில் மின்னல்’ என்ற நாவலில் திருப்பூர் பற்றிய செய்திகளும், ஆவணங்களும், பத்திரிக்கை விவரங்களும் அப்படியே தரப்பட்டிருப்பதன் மூலம் ஒரு நகரம் பற்றிய சித்தரிப்பு தரப்பட்டிருக்கிறது.அந்த வகையிலே பலவகை ஆவணங்களின் தொகுப்பாக இந்த நாவலின் பெரும்பகுதி அமைந்துவிட்டிருக்கிறது. இதில் உலாவும் மனிதர்களின் வாழ்க்கை சார்ந்த அலுவல்கள் சொற்பமாகவே காணப்படுகின்றன. முத்து என்ற பெண் கதாபாத்திரம் மட்டும் குறிப்பிடத்தக்கதாகவே இருக்கிறது. திருமணமான உறவு சகிக்க முடியாத்தாக இருக்கிறது. அதிலிருந்து விடுபட எத்தனிக்கிற அவளின் முயற்சிகள் வலுவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.சாதனாதியாக இந்த நாவலில் நுழையும் சேதுமாதவன் வெளியே வர முத்து போன்ற பெண்களும், ஆவணப்பதிவுகளும் உதவுகின்றன. மற்றைய கதாபாத்திரங்கள் வெறும் தட்டையாகத்தான் பிரதிபலிக்கிறார்கள்.


ஆவணங்களின் தொகுப்பாக இந்த நாவல் முழு வடிவம் எடுக்கிற முயற்சியிலிருந்து கன்னியாகுமரியின் தொன்மக் கதைகள், வெவ்வேறு குரல்களாய் மகான்கள் தென்படுவது, நாடகப் பணியிலான ஒரு பகுதி, உரையாடலாய் தனிப் பகுதிகள், தனி உரையாடல்கள் போன்றவை அமைந்து தப்பிக்க வைக்கிறது. 800 பக்க நாவலில் மனித ஆளுமையோடும், பலவீனங்களோடும் மிகச் சொற்பமாக கதாபாத்திரங்கள் வளர்த்தெடுக்கப்பட்டிருப்பது பலவீனமாகும். சமகால அரசியலை முன் வைக்கும் மதச் சார்பின்மைக்கு இணக்கமான நாவல் என்ற வகையில் அதன் குரல் கரவத்திற்குரியது.


( மறுபக்கம்: பொன்னீலனின் நாவல் , ரூ 350, என்சிபிஎச் வெளியீடு, சென்னை )


விமர்சனம் : சுப்ரபாரதிமணியன்

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

மொழியின் துல்லிய உலகம் ---- சுப்ரபாரதி மணியன்

மொழியின் துல்லிய உலகம் - சுப்ரபாரதிமணியன்
--------------------------------------------
----------- மகுடேசுவரன்
--------------

எழுத்தாளர்கள் தாங்கள் வாழும் உலகின் சுற்றுப்புறத் தாக்கங்களைத் தங்கள் படைப்புகளில் எப்பொழுதுமே முன்வைத்து எழுதுவார்கள். நகரங்களில்தாம் எல்லா வகையான நடவடிக்கைகளும் அதீதங்களும் அரங்கேறிவிடுகின்றன. அதிலும், திருப்பூர் போன்ற வளரும் பெருநகரங்களில் செயல்பட்டுவரும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், குறும்படக் கலைஞர்கள் - தாம் வாழும் நகர் சார்ந்து படைப்பில் இயங்கவேண்டிய அளவுக்குப் பிரச்சனைகள் நிறையவே இருக்கின்றன. இந்நகரின் பெண்கள், குழந்தைகள், தொழிலாளர்கள் படைப்பில் பிரதானமாக வந்து போவார்கள்.

இந்நகரிலிருந்து இயங்கும் கவிஞர் மகுடேசுவரனின் படைப்புகளிலும் இவ்வூர்த் தன்மைகள் மிகுந்திருப்பதும் கதை மாந்தர்கள் இவ்வூரைப் பிரதிநிதித்துவப் படுத்துவதும் இயல்பான ஒன்றுதான்.

மகுடேசுவரனிடமிருந்து இதுவரை ஆறு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. இவருடைய முதல் கவிதைத் தொகுப்பான ‘பூக்கள்பற்றிய தகவல்கள்’-ஐ நான் தான் கனவு சார்பாக வெளியிட்டேன். அது மிக முக்கியமான தொகுப்பு. வெளிவந்ததும் அத்தொகுப்பு மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட்து. சுஜாதா உள்ளிட்ட மூத்த தமிழ் எழுத்தாளர்கள் பலரும் அத்தொகுப்பை மிகவும் சிலாகித்துப் பேசினார்கள். கமல்ஹாசன், இயக்குநர் பாலசந்தர், பாலுமகேந்திரா, ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், வசந்த் போன்றோர் அத்தொகுப்பைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

அதற்குப் பின்பு அண்மை, யாரோ ஒருத்தியின் நடனம், காமக் கடும்புனல், மண்ணே மலர்ந்து மணக்கிறது, இன்னும் தொலையாத தனிமை என இதுவரை அவர் ஆறு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். இக்கவிதைத் தொகுப்புகளை முன்வைத்து பொதுவாக தமிழ்ச் சூழலின் கவிதையுலகம் பற்றியும் மகுடேசுவரன் கவிதைகளின் ஆதார மையம் பற்றியும் பேசுவது இங்கே பொருத்தமாக இருக்கும்.

கவிதைகளின் இயங்குதளம் மொழியாகவே இருக்கிறது. நடையும் மொழிநேர்த்தியும் கைகூடிவருமிடத்திலிருந்தே கவிதை பிறக்கிறது. தனக்குக் கைவந்த அத்திறனிலிருந்து ஒரு விஷயத்தைச் சொல்வதற்கோ, தான் உணர்ந்த வலியை மற்றவருக்கு உணர்த்துவதற்கோ கவிதைகள் கதைகளை எழுதுகிறார்கள். மகுடேசுவரன் தன் படைப்புலகைக் கவிதைகளில் ஆரம்பிக்கிறார். நானும் கவிதையில்தான் ஆரம்பித்தேன். கவிதையிலிருந்துதான் கதைகள், நாவல்கள் என்று வெவ்வேறு படைப்புகளை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம்.

மகுடேசுவரன் தன்னுடைய ஆறு தொகுப்புகளில் என்ன மாதிரியாக இயங்கியிருக்கிறார் – அவருடைய கவிதைகளின் பொதுத்தன்மை என்ன – அவர் தன் கவிதைகளுக்காக எடுத்தாளும் பாடுபொருள்கள் எவையாக இருக்கின்றன - என்பன குறித்தெல்லாம் பார்க்கலாம்.

கவிதைக்கான முக்கியமான மூலதனம் மொழியும் சொந்த அனுபங்களும் தாம். அதிலும் மொழிக்கே பிரதான இடம். இப்பொழுதுங்கூட கடந்த நூற்றைம்பது வருடங்களாக உலகில் ஏராளமான மொழிகள் அழிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். சமீபத்தில் அந்தமானில் ஒரு மொழி அழிந்துபோய்விட்டதாக அறிகிறோம். தமிழைச் செம்மொழி என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால், உலகிலுள்ள அழிந்துவரும் மொழிகளில் தமிழும் ஒன்று என்று சொல்கிறார்கள்.

எதுவாயினும் நமக்கான ஒரே தொடர்பு சாதனம் மொழிதான். மொழி வெறும் தொடர்பு சாதனம் மட்டுமேயன்று – அது ஒரு கலாச்சார ரீதியிலான கூர்மையான ஆயுதம். கலாச்சாரத் தளத்தில் படைக்கும் பணியைச் செய்பவர்கள் கையில் அதன் வலிமை இன்னும் இன்னும் அதிகம்.

கவிதைத் தொகுப்புகள் தற்சமயம் மிகுதியாக வந்துகொண்டிருக்கின்றன. கடந்த இரண்டாயிரம் இரண்டாயிரத்து ஐந்திற்குப் பிறகு தமிழ்க் கவிதைகள் உலகத் தரத்திற்கு ஈடாக எழுதப்பட்டு வருகின்றன. இதுவரை எழுதாத பாடுபொருள்களில் எல்லாம் கவிதைகள், கதைகள், நாவல்கள் பீறிட்டுக் கிளம்பியிருக்கின்றன. ஒரு காலத்தில் இந்திய இலக்கியங்கள் என்றால் முதலில் இந்தி இலக்கியங்களைச் சொல்வார்கள். அதோடு அதிகபட்சம் வங்காள இலக்கியங்களைச் சொல்வார்கள். ஆனால், இன்று இந்திய இலக்கியங்களை அடையாளப்படுத்தத் தமிழைப் புறந்தள்ளி யாரும் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இது பெரிய மாறுதல் !

ஆரம்ப காலங்களில் தமிழ்ப்பண்டிதர்கள்தாம் கவிதை எழுதினார்கள். பா வடிவிலான அவற்றில் எதுகை மோனை சீர் சந்தம் அடி தளை என யாப்பு முன்வைத்த வடிவத்தில் அவற்றை எழுதினார்கள். பிறகு இந்தக் கட்டுப்பாடுகள் ஏதுமில்லாத புதுக்கவிதை தோன்றியது. அதன் தோற்றமே எல்லாரும் கவிதை எழுதலாம் என்ற நிலையை உருவாக்கியது. இப்பொழுது சாதாரண கையடக்கக் கேமரா இருந்தால் யார் வேண்டுமானாலும் ஒரு குறும்படத்தை எடுக்கலாம் என்ற நிலை ஏற்பட்டிருப்பதைப் போல, எண்பதுகளில் யார் வேண்டுமானாலும் கவிதை எழுதலாம் என்ற நிலை ஏற்பட்டது. அந்தக் காலகட்டங்களில் வீட்டுக்கொரு மரம் இருந்ததைப் போல வீட்டுக்கொரு கவிஞர் இருந்தார்.




எளிமை என்பதற்காக எழுதுவதெல்லாமே கவிதையாகிவிடுகிறதா என்றால் இல்லை. நாம் சாதாரணமாக உரையாடுகிறோம் – அது கவிதையாகிவிடுமா என்றால் ஆகாது. புதுக்கவிதை எளிமையின் வழியாக அடையப்படவேண்டிய இறுக்கமான கட்டுமானம். அங்கே மொழி சுண்டக் காய்ச்சப்பட்ட பால்.

இன்று கவிதைகள் நிறைய எழுதப்படுகின்றன. எழுதுகிற எவரேனும் மொழி குறித்த அக்கறை கொண்டிருக்கிறார்களா என்றால் வருத்தமே எஞ்சுகிறது. கவிதை வெளிப்பாட்டு முறைகளில் காட்டப்படும் மேதைமை கவிதைக்கு மிகவும் பிரயோஜனமானது.

இன்றைய வாழ்க்கை மிகவும் இறுக்கம் நிரம்பியதாகவே இருக்கிறது. அந்த வாழ்க்கையிலிருந்து எழும் கவிதைகள் மேலும் இறுக்கம் கொண்டதாக இருக்கவேண்டுமா, அல்லது சாதாரண எளிமையோடு இருந்தால் போதுமா என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. எது எப்படியாயினும் மொழி மிகச் சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் சலுகை எதுவும் இல்லை.

மக்களிடத்தே புழங்குகிற அதே மொழியை இலக்கியமாக்குவதில் முதன்மையாக வாய்மொழி இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள் என்று சொல்லப்படுகிறவை முன்னால் நிற்கின்றன. மக்கள் வாயிலிருந்து விழுகிற அதே சொற்களை அப்படியே பயன்படுத்தி ஏராளமானவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த மக்கள் மொழியினை அதே கவிச்சத்தோடு பயன்படுத்துவதில் சிக்கல்கள் இல்லாமலில்லை.

இன்னொரு தரப்பில் கனவுகள், நனவுநிலைகள், அதீத எண்ணங்கள் போன்றவற்றைச் சொல்வதற்கு மிகச் சிக்கலான மொழியையே பயன்படுத்துகிறார்கள். மொழியின் இலக்கண அழகுகளைக் கெடுக்காமல் யார் பயன்படுத்துவார்கள் என்றால் தமிழை அறிந்தவர்கள் பயன்படுத்துவார்கள். அவர்கள் பெரும்பாலும் பழைய ஆள்களாகவே இருப்பார்கள். கண்ணதாசன் வாய்மொழிச் சொற்களை - அது சினிமாப் பாடலாக இருந்தாலும் கூட - இலக்கிய வடிவமாக்கிப் பயன்படுத்துவார். சிற்பி பாலசுப்பிரமணியம் போன்ற மொழிப் பேராசிரியர்கள் மரபையும் அறிந்து புதுக்கவிதை எழுத வந்தவர்கள் ஆதலால் இருவகைப் போக்குகளையும் உணர்ந்து எழுதுவார்கள். ஞானக்கூத்தன் போன்றவர்கள் கவிதையைச் சந்த ஒழுங்குக்கு உட்படுத்தி எழுதினார்கள்.

மகுடேசுவரன் தன் கவிதையில் மொழியைச் செறிவாக ஒழுங்குபடுத்திப் பயன்படுத்துகிறார். மகுடேசுவரன் கல்லூரிக்குச் சென்று தமிழைப் பாடமாகப் பயிலவில்லை. ஆனால், அவரிடத்தில் கவிதை குறித்து கனமான அக்கறை இருக்கிறது. அந்த அக்கறையே அவரை மொழியை வல்லமையோடு பயன்படுத்துபவராக மாற்றியிருக்கிறது. அதனால் சொற்களை மிகக் கவனத்தோடு பொருத்தமாகப் பயன்படுத்துகிறார். நகைசெய்பவர்கள் எப்படி ஒவ்வொரு வளைவையும் நெளிவையும் நிதானித்துச் செதுக்குவார்களோ அத்தகைய துல்லியத்தோடு இருக்கும் அது. இதை நகாசு வேலை என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால், மொழியை அதன் துல்லிய பதச்சேர்க்கைகளைக் கொண்டு அமைப்பதால் - மரபில் உள்ள புலமையைப் போதிய விகிதத்தில் கலப்பதால் - உருவாகும் கவிதை பலமுள்ளதாகவே இருக்கிறது.

என்னை எடுத்துக்கொண்டால் நான் கல்லூரியில் முதுகலைக் கணிதம் பயின்றவன். நான் மொழியை இந்தளவு நுணுக்கங்களோடு பயன்படுத்திக்கொண்டிருக்கிறேனா என்றால் இல்லை. நான் தமிழைப் பாடமாகவும் படிக்கவில்லை. மகுடேசுவரன் கல்லூரிக்குச் சென்றவரோ தமிழைப் பாடமாக எடுத்துப் படித்தவரோ அல்ல. ஆனால், மகுடேசுவரன் கவிதையில் உள்ள மொழியிறுக்கம், வாக்கியக் கட்டுமானம், சொற்சேர்க்கைகளில் காணப்படும் துல்லியம், அவை உணர்த்தும் அர்த்தங்களின் உக்கிரம் இவற்றையெல்லாம் காணும்பொழுது - அவர் தன் மொழியறிவை இவ்வளவு தூரம் தன் சொந்த முயற்சியால் மட்டுமே கற்று அடைந்தார் என்றறியும்போது - அது இந்தக் காலகட்டங்களில் எளிதான ஒன்றாக எனக்குப் படவில்லை. அவருடைய கவிதைகளைப் படித்திருப்பவர்களுக்கு நான் கூறுவது நன்கு பிடிபடும்.

இதற்கு இன்னொருபுறத்தில் வேறு நிலைகளும் இருக்கின்றன. இப்பொழுது பெண்கள் கவிதை எழுத வந்திருக்கிறார்கள். தலித்துகள் எழுத வந்திருக்கிறார்கள். அரவாணிகள், ஓரினப் புணர்ச்சியாளர்கள் என்று சமூகத்தின் எல்லாத் தரப்பிலிருந்தும் கவிதைகள் எழுதுகிறார்கள். அவர்களிடம் இத்தகைய நுட்பங்களையும் மொழிப் புலமையையும் நாம் எதிர்பார்க்க முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டவர்கள் இந்தத் தலைமுறையில்தான் எழுதப் படிக்கவே அறிந்தார்கள். அவர்களுடைய எழுத்துகளில் இலக்கணம் இருக்காது. நாம் வகுத்துவைத்திருக்கும் இலக்கணங்களிலிருந்து முற்றிலும் பிழைபட்டதாகவே இருக்கும். ஏதாவதொரு வகையில் தங்கள் நிலையை, கருத்தை, படைப்பைப் பதிவு செய்ய முன்வந்திருக்கும் அவர்களிடம் நாம் அவரகளுடைய குரல்களைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்கவும் கூடாது. சில தேர்ச்சிகளைக் காலப்போக்கில் அவர்களும் அடைந்து விடுவார்கள் என்றும் இருந்துவிடலாம்.

மகுடேசுவரன் ஒரு விஷயத்தைப் பல்வேறு முனைகளிலிருந்து எழுதிப் பார்க்கிறார். சிலர் தங்கள் கவிதையை ஒரே மாதிரி வார்த்ததுபோல் எழுதிக்கொண்டிருப்பார்கள். அப்படியல்லாமல் எல்லா வகை மாதிரியும் எழுதத்தானே வேண்டும் ? ஒரு படைப்பாளி தீண்டாமல் விட்டுவைத்த வடிவம், சொல்முறை என்றிருப்பதை நாம் அவனது பலம் என்று கொள்ள முடியாது. மகுடேசுவரன் கவிதைகளில் எல்லா வகை மாதிரிகளையும் காண முடியும். ஒரு சிலவற்றை நாட்டுப் புறப் பாடல்களில் எழுதியிருக்கிறார். அதற்கு எதிராக தூய இலக்கண வடிவத்திலும் எழுதியிருக்கிறார். கொஞ்சம் இருண்மை கலந்து எழுதும் அதேநேரம், அதிக எளிமையுடனும் எழுதுகிறார். கதையாகும் பொருள்களைக் கவிதையாக்குகிறார். நகைச்சுவையும் அங்கதமும் எழுதுகிறார். காமக்கடும்புனலில் காமத்தைப் பாடுபொருளாக்கி நானூறு கவிதைகள் எழுதியிருக்கிறார்.

தற்போது பழைய அற இலக்கியமான திருக்குறள்களை நவீன கவிதை வடிவில் எழுதி வருகிறார். எழுத்தாளர்கள் பலரும் பழைய இலக்கியங்களுக்கு உரை எழுதுவார்கள். அவர்களுடைய எழுத்துக்கு வலிமை சேர்க்கும் பயிற்சியாக அம்முயற்சியை அமைத்துக்கொள்வார்கள். அந்த இலக்கியங்களை ஒருவர் ஆழ்ந்து அணுகுவதற்கு இதைவிடச் சிறந்த வேறுமுறைகளே இல்லை எனலாம். மு. வரதராசன், சுஜாதா போன்றவர்கள் திருக்குறள், புறநானூறு உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியிருக்கிறார்கள். அவற்றின் வழியாக அந்த எழுத்தாளர்கள் அந்நூல்களை எவ்வாறு அணுகினார்கள், அவர்களின் பார்வைகள் எப்படிப்பட்டனவாக இருந்தன என்பதையும் நாம் அறிந்துகொள்கிறோம்.

இறுதியாக, மகுடேசுவரன் கவிதைகளின் பிரதான அம்சங்கள் என - துல்லியமான செறிவான மொழி, கூறும் முறைகளில் பல்வேறு சாத்தியப்பாடுகளின் இயக்கம், தான் வாழும் உலகின் அத்தனை கீழ்மைகளையும் சமரசமின்றிப் படைப்பாக்கும் தன்மை - ஆகியவற்றைக் கூறுவேன்.

எழுத்தாளன் காலத்தின் கண்ணாடியாகச் செயல்படுகிறவன். அவன் படைப்புகள் அவன் நடமாடிய உலகத்தின் மறுக்கமுடியாத ஆவணங்களாக மாற்றம் கொள்ளும். இன்றைய இறுக்கமான வாழ்க்கையில் மனித உறவுகள் சிக்கலாகிக்கொண்டே செல்கின்றன. உலகமயமாக்கலின் கோரப் பிடிக்குள் நமது அன்றாடப் பொருளாதாரம் சிக்கித் தவிக்கிறது. மக்கள் சங்கமாக ஒன்றுகூடித் தங்கள் முழக்கங்களை முன்வைத்த சூழ்நிலை மாறிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தனித்தனியாகி அலைகிறோம். தொழிற்சங்கங்களால் கைவிடப்பட்டவர்களாக தொழிலாளர் வர்க்கம் ஆக்கப்பட்டிருக்கிறது. தனிமனிதன் என்றைக்கும் இல்லாத அளவு வன்முறைக்கு இலக்காகிறான். எங்கும் ஊழல்மயமாகி மாறாத மதிப்புடைய விழுமியங்கள் மதிப்பிழந்து வருகின்றன. இப்படிப்பட்ட மூச்சுத் திணறடிக்கும் சூழலில் படைப்பாளிகளாகிய நாம் பிடிவாதத்தோடு இயங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதே ஆறுதல்தான்.

(கடந்த 18.07.2010 அன்று திருப்பூர் வழக்கறிஞர் சங்கமும் கனவு இலக்கிய வட்டமும் சேர்ந்து நடத்திய புத்தக விமர்சனக் கூட்ட்த்தில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்)

seythi :http://kavimagudeswaran.blogspot.com/2010/08/blog-post.html

சனி, 31 ஜூலை, 2010

வால்பாறை

வால்பாறை
--------------------


குளிரும், மழையும், பனியும் என்று ஒரு வாரத்தங்கலில் வால்பாறை புது அழகுடன் இருப்பதை சமீபத்தில் கண்டு கொண்டேன். உடுமலைக்கு வேலை மாற்றலாகிற வரைக்கும் வால்பாறை போனதில்லை. அங்கு போன பின்பு அலுவலக நிமித்தமாக வால்பாறைக்குப் போவது சாதாரணமாகி விட்டது.இந்த முறை கைபேசி நுட்பக்கோளாறு காரணமான வேலையில் ஒரு வாரம் தங்கியிருந்தேன். ஆசியாவின் மிகச்சிறந்த தூய்மைப்பகுதிகள் என்று கணிக்கப்படுகிற டாப்சிலிப்பும், அக்காமலையும், மிகப்பெரிய அணையான சோலையார் அணையும், காடம்பாறை மின் நிலையமும், மிக உயரமான கவர்க்கல் பகுதியும், பாலாஜி கோவிலும் முக்கியமானவை.
வால்பாறையில் சுற்றுலா இடங்கள் என்று அதிகம் இல்லாவிட்டாலும் மடிப்புகளான மலைகளும், இயற்கை சூழலும், ரம்மியமானவை. தேயிலைக்கு விலையில்லாமல் போவது பற்றி சமீப ஆண்டுகளில் தொடர்ந்து செய்திகள் வருவது தேயிலைத்தொழிலாளர்களின் நிலையைச் சொல்லி வருகிறது. திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு மலைப்பபகுதி மக்கள் இடம் பெயர்வது சமீபத்தில் சாதாரணமாகிவிட்டது. தொழிற்சஙக உரிமைகளை நிலை நாட்டுவதற்காக தொழிற்சங்கங்கள் என்ற நிலை இல்லாமல் அதிகாரத்துடனான நெருக்கமான உறவுக்கும், தலைவர்களின் சுயலாபத்திற்கும் தொழிற்சங்கங்கள் என்றாகி விட்டன. இரட்டை, மூன்று உறுப்பினர் நிலை என்று கணக்கு காண்பிப்பதற்காக ஒரே தொழிலாளரே மூன்று தொழிற்சங்கங்களில் உறுப்பினராக தலைவர்களே சந்தா செலுத்தி தங்கள் சங்கங்களை காத்து வருகிறார்கள். ஆரம்பத்தில் தேயிலை தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைகள், கொத்தடிமை நிலை பற்றி “எரியும் பனிக்காடு “ என்ற ஆங்கில நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு விரிவாகச் சொல்கிறது. ஆங்கிலத்தில் வெளிவந்து 40 ஆண்டுகளுக்குப்பிறகு அந்த “ ரெட் டீ “ தமிழ் வடிவம் பெற்றுள்ளது. விடியல் பதிப்பகம், கோவை அதை முருகவேளின் மொழிபெயர்ப்பில் வெளியிட்டுள்ளது.இனறைய தோட்டத்தொழிலாளி மலின உழைப்பை முன் நிறுத்தி மீண்டும் நவீன கொத்தடிமை ஆகிக்கொண்டிருப்பதை அவர்களின் நிலை பற்றி அறிகிற போது தெரிந்து கொள்ள முடிகிறது.
அறையில் குளிரில் முடங்கிக் கிடந்த போது வெங்கடேசனின் “ தாண்டவராயன் கதை” நாவலைப்படித்துக் கொண்டிருந்தேன். அதை கவனித்த விடுதி ஊழியர் ஒருவர் ” என்ன நீங்க எழுத்தாளரா.. கொஞ்ச நாளைக்கு முந்தி இங்க கவிஞர்கள் கூட்டம் ஒண்ணு நடந்தது. எல்லாரும் சந்தோசமா இருந்தாங்க. கவிஞர்கள்ன்னா சிடுமூஞ்சியா இருப்பாங்க. ஆனா அவங்கெல்லா ஜாலியா இருந்தாங்க. கவிதைன்னா சந்தோசம்தாங்களே..” என்றார். அவரின் கவிஞர்கள் பற்றிய ப்ரமைகட்டுடைப்பிற்கு குறிப்பாக கவிதாயினிகள் முன்னுதாரணமாக இருந்திருக்கிறார்கள்.
கைபேசி கோபுரம் தொழில் நுட்பக்கோளாறு சின்கோனாபகுதியினை முடக்கியிருந்தது.அங்கு தோட்டத்தொழிலாளர்களின் பழைய மருத்துவ மனையை சீர்திருத்தி பாரதியார் பல்கலைக்கழக அரசு கலைக் கல்லூரியை நிறுவி இருக்கிறார்கள். வால்பாறையில் இருக்கும் சுமார் 60 தேயிலைத் தோட்டப்பகுதிகளைச் சார்ந்த மாணவ மாணவியர் படிக்கிறார்கள். சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப்பகுதி மக்களுக்காக அமைக்கப்பட்டிருக்கிறது அக்கல்லூரி. பனியும், மழையும், ஸ்வெட்டரும் , குடையும் அவர்களின் உடம்போடு ஒட்டிக்கொண்டவை. சிறு குழுவாய் உட்கார்ந்திருந்த மாணவர்களிடம் கேட்டேன்: “ என்ன கடலையா... “
“ இல்லீங்க .. கவிதைங்க “ என்றார்கள் . “ நெசமாலுமுங்க ..”

கவிதாயினிகள் தங்குவதற்காக சின்கோனாபகுதியில் நான் சிபாரிசு செய்யும் இடம் “ உட்டன் ஹைவுஸ் “. 1720ல் வெள்ளையர்களால் முழுக்க மரத்தால் வடிவமைக்கப்பட்ட வெயிலுக்கும், மழைக்கும் இதமாக இருக்கும் விடுதி . சின்கோனா சின்ன சொர்க்கம்.
subrabharathi@gmail.com
-------- சுப்ரபாரதிமணியன்

வியாழன், 22 ஜூலை, 2010

பழமலையும், ப க பொன்னுசாமியும்....

சமீபத்தில் சில தமிழ் நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் பார்க்க நேர்ந்த்து. விழுப்புரம் பழமலையின் “ ஜனங்களின் கதை “ கவிதை நூல் ஆங்கில வடிவம் பெற்றுள்ளது. மொழிபெயர்த்துள்ளவர் தில்லியில் வசிக்கும் ராஜா அவர்கள். தலைப்பை அப்படியே வைத்துள்ளது இது ஆங்கில வாசகர்களுக்கு உரியது அல்லவே என்ற எண்ணத்தை உருவாக்கியது. ஆனால் கவிதைகளின் மொழிபெயர்ப்பும் , பழமலை வெளிக்கொணர்ந்த நுணுக்கமான அவர் பகுதி சார்ந்த மக்களின் அனுபவங்களும் சரியாகவே மொழிபெயர்பில் படிக்கக் கிடைத்திருப்பது ஆங்கில வாசகனிடம் சரியாகப் போய் சேரும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. பழமலையின் மொத்தக் கவிதைகள் “ காவ்யா “ பதிப்பகத்தினரால் முழுத் தொகுப்பாக வெளிவந்திருக்கும் இந்த நேரத்தில் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பும் மகிழ்ச்சி தருகிறது.
உடுமலையில் வசிக்கும் முந்நாள் துணை வேந்தர் ப க பொன்னுசாமியின் ”படுகளம்” நாவல் கொங்கு பகுதி பற்றிய குறிப்பிடத்தக்கதாகும் ( மணிவாசகர் பதிப்பகம், சென்னை, ரூ 300)
.இதன் ஆங்கில மொழிபெயர்ப்பின் தட்டச்சுப் பிரதியின் சில பகுதிகளை சமீபத்தில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. தலைப்பு ” அவைட்டிங் காடஸ் “
கொங்கு பிரதேச வழக்குகளும், பேச்சும் ஆங்கில வாசகனுக்கு புதிது போல தோற்றம் கொள்ள செய்தாலும், மக்களின் அனுபவங்கள் நேரடியாக புரிந்து கொள்ளும்படி மொழிபெயர்ப்பு அமைந்திருந்தது. பொன்னுசாமியின் இயற்பியல் சார்ந்த ஆங்கிலக்கட்டுரைகளை வாசிக்கிற போது இந்த நாவலின் மொழிபெயர்ப்பையும் அவரே செய்திருக்கலாம் என்று தோன்றியது.
”படுகளத்” தை அடுத்து அவர் எழுதி வரும் முந்தின நாவலின் தொடர்ச்சியான நாவலை ஆங்கிலத்திலும் அவரே எழுதலாம்.
பொள்ளாச்சி சிற்பிபாலசுப்ரமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலில் டாக்டர் கே எஸ் சுப்ரமணியனின் மொழிபெயர்ப்பு ஆங்கில வாசகனை மனதில் கொண்டு நுணுக்கமாக உருவாக்கப்பட்டிருந்தது.இந்த்த் தேர்ச்சியை அவர் மொழிபெயர்த்துள்ள ஜெயகாந்தனின் நாவல்களிலும் காணலாம்
எனது “ பிணங்களின் முகங்கள் “ நாவல் கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 2003 ம் ஆண்டிற்கான சிறந்த நாவல் பரிசு பெற்றது பரிசு பெற்றது.( இப்பரிசை பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், சிவசங்கரி, சோலைசுந்தரப்பெருமாள், பாவைச்சந்திரன் போன்றோரும் பெற்றிருக்கின்றனர் )இது சமீபத்தில் கோவையைச் சார்ந்த பேராசிரியர்
ஆர். பாலகிருஸ்ணனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. நவீன இலக்கியத்தோடு பரிச்சயம் கொண்டவர் என்ற வகையில் அவரின் மொழிபெயர்ப்பில் காணப்படும் உற்சாகம் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. இவர் இளம் வயது பேராசிரியர் என்பதால் , ஓய்வு பெற்ற பேராசிரியர்களின் வழமையான மொழிபெயர்ப்பில் இருந்து மாறுபட்டிருக்கிறது எனபது ஆறுதலானது.

*சுப்ரபாரதிமணியன்

“ கனவு “ இலக்கிய இதழ் தொகுப்பு நூல் வெளியீடு

கனவு இலக்கிய இதழ் 23 ஆண்டுகளாய் வெளிவந்து கொண்டிருக்கிறது. 1987ல் செகந்திராபாத்தில் சுப்ரபாரதிமணியனால் ஆரம்பிக்கப்பட்ட கனவு இதழ் தற்போது அவர் வசித்து வரும் திருப்பூரில் இருந்து தொடர்ந்து காலாண்டு இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. கடந்த் 20 ஆண்டுகளில் கனவு இதழில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா சமீபத்தில் திருப்பூரில் நடைபெற்ற சாகித்திய அகாதமியின் ” எழுத்தாளர்களுடன்ஒரு மாலை ”என்ற
நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்டது. கனவு தொகுப்பு நூலை சாகித்திய அகாதமியின் தமிழ் ஆலோசனைக்குழு ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் வெளியிட்டார். விழாவில் எழுத்தாளர்கள் பிரபஞ்சன், பொன்னீலன் , பாரதிகிருஸ்ணகுமார், சிங்கப்பூர் எழுத்தாளர் டாக்டர்லக்சுமி சுப்ரபாரதிமணியன், ஆகியோர் உரையாற்றினர்.கனவு தொகுப்பு நூலை காவ்யா பதிப்பகம், சென்னை வெளியிட்டுள்ளது. 700 பக்கங்கள் விலை ரூ 350/.
இடம் பெற்றிருக்கிற சில படைப்பாளிகள்:க நா சுப்ரமணியன், பசுவையா, நகுலன், பிரம்மராஜன், கல்யாண்ஜி, புவியரசு, ஜெயமொகன், எஸ் ராமகிருஸ்ணன், பாவண்ணன், பெருமாள் முருகன், இந்திரன், காலசுப்ரமணியன், அ மார்கஸ், சுஜாதா, அசோகமித்திரன், சா கந்தசாமி, ஜெயந்தன், தமிழவன், நாஞ்சில் நாடன், அ முத்துலிங்கம், ரெ பாண்டியன், சுதேசமித்திரன், ஜி முருகன், எஸ் சங்கரநாராயணன், காலசுப்ரமணியன், நா கண்ணன்.கனவு 64 ம் இதழ் சமீபத்தில் வெளிவந்துள்ளது. கனவு ஆண்டு சந்தா ரூ 50/. மட்டும், ஆயுள் சந்தா ரூ 1000/, காசோலை, வரைவோலை அனுப்ப:
கனவு, 8/2635 பாண்டியன் நகர் , திருப்பூர் 641 602. (09486101003) * கனவு இதழ் இணைய தளத்தில் காண: கீற்று.காம்*
சுப்ரபாரதிமணியனின் இணைய தளம்; rpsubrabharathimanian.blogspot.com


செய்தி: Issundarakannan7@gmail.com

புதன், 30 ஜூன், 2010

பண்ணத்திர: ”சாயத்திரை” கன்னட மொழிபெயர்ப்பு

சுப்ரபாரதிமணியன் பண்ணத்திர “நூலின் முன்னுரை
========================================== ====
தொழில் நிமித்தம் காரணமாக வெளியூர்களில் வசித்துவிட்டு 10 ஆண்டுகள் கழித்து எனது சொந்த ஊரான-பின்னலாடை நகரம்-திருப்பூருக்கு மீண்டும் குடிவந்தபோது நகரத்தின் முகம் புதிதாய் மாறியிருந்ததைக் கண்டேன். 10,000 ஆயிரம் கோடி போய் அந்நியச் செலவாநியைத் தரும் தொழில் நகரமாயிருந்தது. என்னுடன் படித்த பலர் ஏற்றுமதியாளர்களாகி இருந்தனர். ஆனால் இந்த வளர்ச்சிக்குப் பின்னால் நொய்யல் என்ற நதி காணாமல் போனதும், நொய்யல் சாயக்கழிவுகளின் ஓடையாகியிருந்ததும், ஐம்பதாயிரம் குழந்தைத் தொழிலாளர்களும், சுற்றுச் சூழல் கேடும் என்னை வெகுவாக பாதித்தது. இந்த பாதிப்பு சுற்றுச் சூழல் குறித்த அக்கறையாக என்னுள் விதைவிட்டது.
தொழில் வளர்சிக்குப் பின்னால் இருக்கிற மனிதர்களின் இடர்பாடுகளும், சுற்றுச்சூழல் கேடும், மனித உரிமை பிரச்சனைகளும் படைப்பினூடே சமூக இயக்கங்களிலும் பங்கு பெறச் செய்தது. என் போன்றோர் தொழில் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்ற பிரச்சாரமும் வலுப் பெற்றது. ஆனால் தொழில் வளர்ச்சி என்பது எதன் பொருட்டு என்ற கேள்வியும் தார்மிகமாய் முன் வைக்கப்பட்டு போராட்ட வடிவமானது.
அச்சூழல் “சாயத்திரை” நாவலை எழுத வைத்தது. சாயங்களை அப்பிக் கொண்டு திரிகிற மனிதர்கள். குழந்தைத் தொழிலுக்காக தங்கள் இளம் பருவத்தையும் கல்வியையும் இழந்த குழந்தைகள். காணாமல் போன நதி. இவை வெவ்வேறு கதாபாத்திரங்கள் மூலம் வெளிப்பட்டன. விளிம்பு நிலை மனிதர்களை பிரதானப்படுத்தி முன் வைக்கப்பட்ட இலகியப் பிரதியாக அது அமைந்தது. பின் நவீனத்துவ மனிதர்களும் உள்ளீடும் நாவலுக்கு பலமூட்டின. சிறந்த நாவலுக்கான தமிழக அரசின் பரிசைப் பெற்றது. ஆங்கிலத்தில் புதுவை பா.ராஜா அவர்களாலும் மொழிபெயர்க்கப்பட்டு இந்த நாவல் வெளிவந்திருக்கிறது. ஹிந்தியில் திருமதி மீனாட்சி பூரி அவர்களால் ரங்க் ரங்கிலி சாதர் மெஹெலி என்ற பெயரில் மொழிபெயர்ப்பாகியுள்ளது. தற்போது ஸ்டேன்லி அவர்களால் மலையாளத்திலும், தமிழ்ச் செல்வி அவர்களால் கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒரே சமயத்தில் வெளிவருவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்டவன் என்றாலும் கன்னடம் வாசிப்பு இல்லாத குறை இப்போது இந்தப்பிரதியைக் காணும் போது ஏக்கமாக வடிவெடுக்கிறது .
தமிழில் இந்த நாவல் வெளிவந்து பத்தாண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்த நாவல் முன் வைக்கும் உள்ளீடான தார்மீகக் கேள்விகள் உலகளாவில் சுற்றுச் சூழல் பிரச்சனைகளாக வடிவெடுத்துவிட்டன என்பது இன்னும் துயரமானது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களாய் திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் அறிவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் பயமுறுத்துகின்றன. அடிப்படை மனித உரிமைப்ப்பிரச்சினைகளாக சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உலகெங்கிலும் வடிவெடுத்துள்ளன. கார்பரேட் சமூகப் பொறுப்புணர்வு, நியாய வணிகம் போன்றவை உலக அளவில் முதலாளித்துவதின் கருணை முகங்களாய் காட்டப்படும் இந்நாளில் நவீனக்கொத்தடிமைத்தனமும் புதிய பரிணாம விசுவரூபங்களைக் கொண்டிருக்கிறது.மனிதர்களின் பேராசைக்காக மண்ணை நாசமாக்குவதும், ஆறுகளை மாசுபடுத்துவதும், நிலத்தடி நீரை மாசுபடுத்துவதும் தொடர்ந்த தொழில் முன்னேற்றம் என்ற பெயரில் நடைபெற்றுவருவது கவலை கொள்ள வைக்கிறது. அதற்கான எதிர்ப்புக்குரல் என்ற அளவில் இதைக் கன்னடத்தில் மொழிபெயர்த்த திருமதி.தமிழ்ச் செல்விக்கும், வெளியிடும் ரவிக்குமாருக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

அன்புடன்________________


சுப்ரபாரதிமணியணின் ‘சாயத்திரை’
நாவலின் கன்னட மொழிபெயர்ப்பு சுப்ரபாரதிமணியன் பண்ணத்திர “நூலின் முன்னுரை இது
(புத்தக விலை . ரூ100 ,நவயுக பதிப்பகம், பெங்களூர் )


"நன்றி திண்ணை "

ஞாயிறு, 13 ஜூன், 2010

சாகித்ய அகாதெமி

சாகித்ய அகாதெமி
இலக்கிய நிகழ்ச்சி
AN EVENING WITH WRITERS -
TIRUPUR
சிறப்புரை
சுப்ரபாரதிமணியன்
பிரபஞ்சன்
பொன்னீலன்
சிற்பி
பாரதி கிருஷ்ணகுமார்
நாள்:
20-06-2010, ஞாயிறு மாலை 6.00மணி
இடம்:
குமாரசாமி கல்யாண மண்டபம்,
யுனிவர்சல் திரையரங்கு சாலை,
திருப்பூர்.
அனைவரும்வருக!

அந்தமானில்……

அந்தமானில்……
================
சுப்ரபாரதிமணியன்
===================
அந்தமானில் ஒரு வாரம் தங்கியிருந்தேன். கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட நாளுக்கு முன் தினம் புறப்பட்டுவிட்டேன்.
அந்தமான் என்றால் பொது புத்திக்கு ஆதிவாசிகள்தான் ஞாபகம் வருவர். ஆதிவாசிகளைப் பார்க்கிற ஆர்வம் அங்கு செல்லும் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. அவர்கள் பற்றி கிடைக்கிற தகவல்கள் புகைப்படங்கள்,ஒளிப்படங்கள் ஆகியவை அவர்களின் வாழ்க்கைமுறை பற்றி அறிந்து கொள்ள ஆர்வத்தைத் தூண்டும்.
போர்ட்ப்ளேயரில் இருந்து பாராடன்ங் தீவிற்கு செல்லும் வழியில் ஜாரவா பழங்குடிகள் வழக்கமாக தென்படுவர். பாதுகாப்பாய் வாகனங்களில் செல்வோர் அவர்களைப் பார்க்க வாய்ப்பு ஏற்படும். சமீபத்தில் பாதையில் பல்வேறு இடங்களில் தென்படும் ஜாரவா ஆதிவாசிகளின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகிறது. யாத்ரீகர்கள் வீசியெரியும் உணவுப்பண்டங்கள் இனிப்புப்பண்டங்களை எதிர்பார்த்து நிற்கும் அவர்களின் எண்ணிகை சற்றே அதிகரித்துதான் வருகிறது.
நவீன உணவுப்பொருட்களின் ருசி அவர்களுக்கு பிடித்துப்போயிருக்கலாம். வழக்கமாக செல்லும் வாகன ஓட்டிகள் பான்பராக்,புகையிலை பொட்டலங்களையும் தூக்கியெரிகிறார்கள். இது போன்ற போதை வஸ்துகளை எதிர்பார்த்து காத்திருப்பது போல் தோன்றுகிறது. ஆதிவாசிகளளின் உடையமைப்பிலும், தோற்றத்திலும் பல்வேறு மாறுதல்கள் தென்படுகின்றன. பாதி நிர்வாணம், பாதி இலைஉடை என்ற வகையிலும் தென்படுகிறார்கள். சிறுவர்கள் டீசர்ட்,ஜீன்ஸ் ஆகியவற்றுடன் தென்படுகிறார்கள். அரசின் நலத்திட்ட உதவிகளும், மருத்துவ உதவிகளும், உடை உதவிகளும் இந்த மாற்றங்களை கொண்டுவந்துள்ளன. கைகளில் வைத்திருக்கும் வில்அம்பு, கத்திகள் போன்றவற்றை வாகனங்களில் பறித்து பயமுறுத்தி உணவுப் பொருட்களை வாங்க அவர்கள் பயன்படுத்துகிறார்கள். உணவுத் தேவைக்கான அவர்களின் தேடல் வீதிகளில் வாகனங்கள் வரை வந்துவிட்டன.
எக்கோ-டூரிசம் என்ற சுற்றுலாபாணி சமீபத்தில் பிரபலமடைந்துள்ளது. அடர்ந்த காடுகள் மலைப்பிரதேசங்கள், அறியப்படாத பகுதிகளுக்கு செல்வதும், ஆதிவாசிகளை வேடிக்கை பார்ப்பதும் இதனுள் அடங்கும்.
ஆதிவாசிகள் காட்சிப்பொருளாக மாற்றப்படுவதற்கான தந்திரங்களையும் இந்தபாணி சுற்றுலா கொண்டிருக்கிறது. விலங்குகளுக்கு அளிக்கப்படும் நவீன உணவு வகைகள்,யாத்ரீகர்களின் நவீன உடைகள், பிளாஸ்டிக் பொருட்கள் அவர்களின் உயிர்க்கு ஆபத்தாக முடிகின்றன. எக்கோ-டூரிசம் வணிகரீதியாக வெற்றிபெற்றிருந்தாலும் ஆதிவாசிகளை முக்கியமான காட்சிப்பொருளாக ஆக்கிவிட்டது.
பாரடங்கில் தென்படும் ஜாரவா ஆதிவாசிகளின் வீதியோர நிலைமை ஈழத்தில் அகதி முகாம்களில் நிற்கும் ஈழத்தமிழர்களை ஞாபாகப்படுத்தியது.
அந்தமான் தமிழர் சங்கம் இலங்கைத் தமிழர்களுக்காக ஊர்வலங்களையும் கூட்டங்களையும் நடத்தியிருக்கிறது. பங்காளதேசின் அகதிகள் குடியேறி நிரந்தர குடியுரிமை பெற்றிருக்கிறார்கள். இலங்கை அகதிகள் இங்கு குடியேற்றப்படுவதில்லை. இலங்கை தமிழர்களும், ஜாரவாக்களைப் போல காட்சிப்பொருளாகிவிட்டார்கள்.

கனவு புதியது


கனவு புதிய இதழ் வந்துள்ளது

கனவு சுப்ரபாரதிமணியன் அவர்களால் 22 வருடங்களாக நடத்தப்படும் காலாண்டு இதழ் .திருவனந்த புரம் உலக திரைப்படவிழா பற்றியும்,முக்கிய இயக்குனர்கள் குறித்தும் விரிவாக எழுதியுள்ளார், பாலியல் படம் எடுக்கும் பயந்தகொல்லி இயக்குனர் என்ற பெயரில் அவர் எழுதியுள்ள கட்டுரை சுவாரஸ்யமாக உள்ளது.தமிழ் நதி,ஆண்கரை பைரவி போன்றவர்கள் புத்தக விமர்சன பக்கங்களை எழுதியுள்ளனர்இரு நகரங்களின் கதை என்ற கட்டுரை டெல்லி 6 பற்றியும்,சங்கட் சிட்டி படம் பற்றியும் எழுதப்பட்டு உள்ளன.சம கால நாவல்கள் பற்றிய உரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது.மொழிபெயர்ப்பு கவிதைகளும் கணிசமாக இடம் பெற்று உள்ளது.பிரதி வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி ,சுப்ரபாரதிமணியன்,8/2635 பாண்டியன் நகர்திருப்பூர் 641 602.செல் 94861 01003email subrabharathi@gmail.comசென்னையில் உள்ளவர்கள் நியூ புக் லேண்ட்ஸ், தி.நகர், சென்னை. போன் : 28158171,வாங்கி கொள்ளலா

சனி, 5 ஜூன், 2010

அங்காடித் தெருவும் "தேநீர் இடை வேளை" நாவலும்

அங்காடித் தெரு பற்றி பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில்தான் இதைப் பார்த்தேன்.
சுப்ரபாரதிமணியனின் தேநீர் இடைவேளை என்றொரு நாவல் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வெளி வந்த்து. புரோக்கர்களால் தெற்கு மாவட்டங்களிலிருந்து டீன் ஏஜ் பெண்கள் அழைத்து வரப்படுவது, பின்னலாடை பஞ்சாலைகளில் அவர்கள் சுமங்கலித் திட்ட்த்தின் கீழ் கொத்தடிமைகளாக கொட்டடிகளில் அடைக்கப்பட்டு வேலை வாங்கப்படுபது, பாலியல் ரீதியான சுரண்டல், ஓன்னுக்குப் போவதற்குக் கூட அபராதம் கட்ட வேண்டிய சூழல், வட்டிக்கு பணம் கொடுத்தவர்களால் பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவது, பெண்களின் தற்கொலை, காதல் முறிவுகளால் பெண்களின் அவஸ்த்தை இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நாவல் கடிதங்கள், டைரி குறிப்புகள் என்ற வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நாவல் பிரேமா நந்தகுமார் அவர்களால்
“UNWRITTEN LETTERS” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளி வந்துள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகள் இடைவெளியில் சுமங்கலித்திட்டம் போன்றவற்றின் தாக்கங்கள் வெகுஜன ஊடகங்களிலும் பதிவுகளை செய்துள்ளன. சுப்ரபாரதிமணியனின் தேநீர் இடைவேளை நாவலை திரைப்படத் துரை சார்ந்த நண்பர் ஒருவரும் திரைக்கதை முயற்சியில் ஈடுபட்டு திரைக்கதையை மூன்றாண்டுகளுக்கு முன் முடித்திருந்தார். சுப்ரபாரதிமணியணின் தேநீர் இடைவேளை நாவலை காவ்யா பதிப்பகம், சென்னை வெளியிட்டுள்ளது.

செய்தி : சுந்தரக்கண்ணன்

வெள்ளி, 4 ஜூன், 2010

பெண்களின் உரத்த குரல்

திரைப்பட ஆக்கங்களில் சமூக அக்கறையும், குறைந்த செலவிலான படங்களும் 1960களில் மலையாளிகளின் யதார்த்த உலகத்தை சரியாக முன்வைத்திருக்கின்றன. திரைப்படத்திலிருந்து அவன் வெகுவாக அந்நியப்படாதவனாக சமூக வாழ்க்கையிலும், திரைப்படத்திலும் அவன் இருந்திருக்கிறான். இலக்கியப் படைப்புகளைத் திரைவடிவங்களாககும் முயற்சிகள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. எண்பதுகளில் உலகப் பொருளாதார நெருக்கடிகளும் இந்தியத் திரைப்பட முயற்சிகளில் மலையாளிகளின் தீவிரத்தைக் குறைத்து விடவில்லை. ஆனால் உலகமயத்தின் விளைவுகளால் திறந்த சந்தையில் மலையாள வெகுஜன திரைப்பட முயற்சிகள் அவர்களின் அடையாளங்கள் இல்லாத சாதாரண மனிதனாக்கிவிட்டது. அதிலும் பெண்கள் குறித்த அக்கறை வெகு மலினமாகிவிட்டது.
சமீப ஆண்டுகளில் சித்திக் லாலின் பெரும்பான்மையான படங்களில் நான்கு ஆண்கள், ஓரிரு பெண்கள் பிரதானமாய் தென்படுவார்கள். ஆனால் பெண்கள் கேவலமான கவர்ச்சிப் பொருளாகவே இருப்பார்கள். ரஞ்சித்தின் இயக்கத்திலான படங்கள் வெகுஜன தளத்தில் தயாரிக்கப்பட்டவையென்றாலும் பெண்களைக் கேவலமாக சித்தரிப்பதைத் தவிர்த்து வந்திருக்கின்றன. ஷாஜி கைலாஸின் படங்கள் உயர்ந்த ஜாதி, நிலப்பிரபுத்துவ குடும்ப ஆண்களின் பெருமையை நிலைநாட்டுபவை. பெண்கள் ஆண்களின் பெருமையைக் காப்பாற்றுவதற்காகப் பிறப்பெடுத்தவர்கள் என்ற ரீதியில் காட்டப்படுவர். ரெஞ்சி பணிக்கரின் படங்கள் வன்முறைக் காட்சிகளால் நிறைந்து பெண்கள் மீதான வன்முறை சுலபமாக்கப்பட்டிருக்கும். வாணி விசுவநாத்தின் உயர்பதவி பெண் பாத்திரங்கள் இன்று வலிவிழந்து விட்டன.
பெண்கள் பிரச்சினைகள் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களில் ஒருவராக டி.வி. சந்திரன் தென்படுகிறார். அவரின் இவ்வாண்டின் படமான ‘பூமி மலையாளம்’ கேரள சமூகத்தின் ஏழு இளம் பெண்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்டிருக்கிறது. ஜானகி காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் பலியான கணவனைப் பற்றின பிரமைகளில் சிக்கித் தவிக்கிறாள். ஜானகியின் மகள் மீனாட்சி மனம் அரசியல் போராட்டமொன்றில் கொலை செய்யப்பட்ட மகனின் நினைவுகளால் நிரம்பி அலைக்கழிகிறது. மீனாட்சி மகள் நிர்மலா ஒரு தொழிற்சாலையில் வேலை செய்கிறவள். அங்கு நிகழும் பாலியல் அத்துமீறல் அவளை நிலைகுலையச் செய்கிறது. நிர்மலாவின் அனுபவங்களைத் தொலைக்காட்சிக்காகப் படம் பிடிக்க வரும் பௌசியா என்ற முஸ்லிம் பெண்ணின் கணவனுக்கு அவளின் தொழில் பிடிப்பதில்லை. விலக தீர்மானிக்கிறான். பௌசியாவின் பெண் சுதந்திரம் குறித்த எண்ணங்கள் தினசரி வாழ்க்கையில் வெகு சாதாரணமாக சிதைகின்றன. மீனாட்சியின் அப்பா தீவிரமான பொதுவுடைமைக் கட்சிக்காரராக இருக்கிறார். நிலப்பிரபுக்களை எதிர்க்கிறார். கடத்தப்படும் நெல்மூட்டைகளை மீட்க மனைவியின் கழுத்து நகைகளைத் தியாகம் செய்கிறார். மக்களுக்கு அந்த நெல்லை விநியோகம் செய்கிறார். மனநிலை பாதிக்கப்பட்ட அம்மாவைப் பார்த்து அலறுகிறவளாக இருக்கிறாள். இன்னொரு நிலப்பிரபு அப்பாவிற்கு முந்திரி தொழிற்சாலை இருக்கிறது. அவளின் மகள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும், பெண்களின் போராட்டங்களையும் புத்தக வாசிப்பின் மூலம் அறிந்து கொள்கிறாள். வாசிப்பும், அனுபவமும் ஒரு நிலப்பிரபு தந்தையின் அடையாளத்தை அவளுக்குக் காட்டுகிறது. காதல் கனவுகளில் மூழ்கியிருக்கும் இன்னும் ஒரு பெண்ணின் கனவு ராணுவத்தில் இருக்கும் காதலனின் மரணத்தால் சிதைகிறது. விளையாட்டில் அக்கறை கொண்ட இளம் பெண்ணின் வாழ்க்கை விவசாயி அண்ணனின் தற்கொலையால் சிதைகிறது. வாங்கிய கடனைக் கட்டமுடியாததால் அண்ணன் தற்கொலை செய்து கொள்கிறார். தங்கை விளையாட்டு ஆர்வத்தை விட்டு திருமணம் செய்துகொண்டு சாதாரணமானவளாகிறாள்.
திடுமென வந்து சேரும் அரசின் விளையாட்டு சார்ந்த உதவிகள் அவளை மீண்டும் விளையாட்டு வீராங்கனையாக்குகிறது. இந்த ஏழு பெண்களில் விளையாட்டு வீராங்கனை பெண் மட்டுமே இதிலிருந்து தன்னை மீட்டெடுத்துக் கொள்கிறாள். பௌசியா என்ற தொலைக்காட்சி பெண்ணிற்கு விளையாட்டு வீராங்கனையின் வெற்றி ஆறுதலாக, நம்பிக்கை தருவதாக இருக்கிறது. சுதந்திரத்திற்குப் பின் நாற்பத்தெட்டுகளில் கேரள சமூகத்தில் நிகழ்ந்த பெண்கள் மீதான வன்முறைகள் காரணமான சாவுகள், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முன்னும் பின்னுமான காலகட்டங்களில் பொதுவுடைமை இயக்கம் சார்ந்த சில குடும்பங்களின் பெண்கள் நிலைமையையும், இன்றைய நவீன யுவதிகளை மையமாகக் கொண்டு பின்னோக்கிப் பார்த்திருக்கிறார் டி.வி.சந்திரன்.
மது கைதபுரத்தின் இயக்கத்திலான ‘மதியவேனல்’ படத்து நாயகி சரோஜினி தன் மகளின் வாழ்க்கையைச் சீரழிக்க முயல்கிற ஒரு யுவனை எதிர்க்கிற குறியீடாகிறாள். சரோஜினியின் கணவர் பொதுவுடைமைவாதி. கணினி, தனியார் வங்கிகள் கிராமங்களில் நுழைவதை எதிர்த்துப் போராடும் பீடி சுற்றும் தொழிலாளர்கள் சங்கத் தலைவன். ஆனால் இயக்கம் அவனிடமிருந்து ‘காலடியில் இருக்கும் மண்’ நழுவுவது போல நழுவுகிறது. அவனின் கேள்விகளை நிராகரித்து, சாதாரண தொழிலாளிகளின் நலனை இரண்டாம் பட்சமாக்கி அவனையும் கட்சியிலிருந்து வெளியேற்றுகிறது. தோட்டக் கூலியாக வேலை செய்து பணம் கொண்டு வருகிற ஒரு நாளில் மரணமடைகிறான். செங்கொடி போர்த்தின சடலம் வீட்டில் கிடக்கிறது. மகள் அப்பாவையும், அம்மாவையும் நிகழ்காலத்திற்கு ஒத்து வராதவர்களாகப் பார்க்கிறாள். தனியார் வங்கி கடன், வங்கி மேலாளரின் தந்திர நட்பால் அலைக்கழிக்கப்படுகிறாள். சரோஜினி கைத்தறி சேலை நெய்யும் பெண். காந்தியவாதி அம்மாவால் வளர்க்கப்பட்டவள். காதி நிறுவன ஊழல்களை எதிர்ப்பவள். மகளின் கனவுக்கு எதிராக உறுதியாக நிற்கிறாள்.
பொதுவுடைமை இயக்கம் பற்றிய விரிவான நிகழ்கால விமர்சனமாகவும், இளைய தலைமுறையின் நிராகரிப்பும், துல்லியமாக இப்படத்தில் காட்டப்பட்டிருக்கிறது. திருப்பூர் பற்றிய குறிப்புகள் நாலைந்து இடங்களில் இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு காதி அலுவலக மேலாளராக நடித்திருக்கிறார்.
பொதுவுடைமைவாதி கணவனின் நேர்மை, காந்தியவாதியான அம்மாவின் அர்ப்பணிப்பு இவை மக்களுக்கான போராட்டங்களில் ஈடுபடுபவளாக சரோஜினியை மாற்றிவிடுகிறது. தனியார் மயத்தின் அலட்சியக் குறியீடான யுவனை புறம் தள்ளும் வலிமைமிக்க குரலாகவும் வெளிப்படுத்துகிறது. சரோஜினியின் வாழ்க்கை எதிர்ப்புணர்வின் குறியீடாகி விசுவரூபித்திருக்கிறது.
(இந்தப் படத்தில் இன்னும் நினைவு நிற்கும் சிலவை: பீடியும், தேனீருமான பொதுவுடைமை இயக்கத் தோழனின் வாழ்க்கை, அவசரநிலை காலத்தில் தலைமறைவு வாழ்க்கை அனுபவங்கள், குழந்தை இறந்த சோகத்தால் தறிக்குழிக்கு வராமல் சோர்ந்து போயிருக்கும் பெண்ணை ஆறுதல்படுத்தி சரோஜினி கூட்டிவரல், விதைகள் பாதுகாப்பு, நக்சலைட்டுகளின் ஊர்வலம், தனியார் வங்கிகள் கிராமத்தில் ஊடுருவி சாதாரண தேனீர் கடைக்காரனை ‘பாஸ்ட் புட்’ கடையாக்கு என்று சொல்லிக் கடன் கொடுத்து பின் வட்டி கேட்டு மிரட்டல், ஏ.கே.ஜி.யின் அமராவதி நில மீட்புப் போராட்டம், கேரளாவில் முன்பு 43,000 பீடித் தொழிலாளர்கள்- இப்போது 3000 மட்டும், பீடித் தொழில் நசிவு, கால் அடியில் இருக்கும் மண் நழுவுவது போல பொதுவுடைமைக் கட்சி தொண்டனிடம் இருந்து அந்நியப்பட்டுப் போவது, சாவின்போது ஏழைத் தொழிலாளி தரும் இறுதிச் சடங்கு வணக்கம் ‘எல்லாம் நல்காம், ஜென்மம் நல்காம், பால்யம் தருமோ’ பாடல், உதவிகள் எலிப்பொறிக்கு சமம் என்று சில).

வேட்டையாடப்படும் எழுத்தாளர்கள்

2009 கேரளத் திரைப்பட விழாவில் பார்த்த சில படங்களில் எழுத்தாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.
‘லவ் லைஃப் ஆஃப் எ ஜெண்டில் வேர்டு’ என்ற குரோஷிய நாட்டுப் படத்தில் இடம்பெறும் எழுத்தாளன் சகா வெற்றிபெறாத எழுத்தாளன். எழுத்தும், தனிப்பட்ட வாழ்க்கையும் நிறைவுறாத தனிமைத்தீவுகளாய அமைந்திருக்கின்றன. மனைவியைப் பிரிந்துவாழும் சூழல். பையனை அவ்வப்போது பார்ப்பது மட்டும் ஆறுதலாக இருக்கிறது. மனைவி வேறொருவனுடன் மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்துகிறாள். முதுகு வலிக்கு மஸாஜிற்குப் போகுமிடத்தில் விளையாட்டு பயிற்சியாளர் பெண்ணுடன் நட்பு ஏற்படுகிறது. ஆறுதலாக அமைகிறது. ஆனால் அதுவும் நீண்டநாள் நீடிப்பதில்லை. மீண்டும் தனிமையான வாழ்க்கைக்குத் தள்ளப்படுகிறான்.


மேற்கத்திய நாடுகளில் ஒவ்வொரு தொழில் சார்ந்தும் குறிப்பாய் இயங்கும் எழுத்தாளர்கள் உண்டு. சகா ஓட்டல்களின் தரம் பற்றியும் அவற்றை முன்வைத்துப் பல்வேறு விஷயங்களையும் எழுதுகிறவன். ஏன், சமையல் குறிப்புப் புத்தகம் எழுதலாமே என்று பதிப்பாளர் ஒருவர் கிண்டல் செய்கிறார். காப்ரியல் மார்க்கியூஸ் போல் தேவையில்லை என்கிறார். பதிப்பாளருக்குப் பிடிக்கிற மாதிரி எழுதுவது சிரமமாக இருக்கிறது. அவன் கதைகளும் எழுதுகிறான். அவற்றை விளையாட்டுப் பயிற்சியாளர் பெண் படித்து சிலாகிப்பதுதான் அவர்களின் நட்பை சற்றே நீட்டிக்கச் செய்கிறது. ஆனால் மஸாய், நீராவிக் குளியல் என்று அவன் அலைகிறபோது பெரிய மனிதர்கள் தென்படுகிறார்கள். அவர்களின் உலகம் பற்றி எழுதுகிறபோது தொல்லைக்கு உள்ளாகிறான். தாக்கப்படுகிறான். விளையாட்டுப் பயிற்சியாளர் பெண்ணின் நட்பும் அறுபடுகிறபோது சிரமத்திற்குள்ளாகிறான். அவனின் முதுகு வலி ஒருவகைக் குறியீடாய் படம் முழுக்க அமைந்திருக்கிறது. வெற்றி பெறாத குடும்ப வாழ்க்கையும், எழுத்தாளன் பணியும் அவனின் முதுகு வலியால் பாரமாய் அமைந்துவிடுகின்றன.
குரோஷியாவில் ஆண்டுதோறும் பத்துப் படங்கள் வெளிவந்தாலே அதிகம். 1940ல் யூகோஸ்லேவியா படத் தொடர்புகள் காரணமாக குரோஷியப் பட உலகம் எழுச்சி பெற்றதாக இருந்திருக்கிறது. அறுபதுகளில் நவீனத்துவமும், பல்வேறு உத்திகளும் படங்களைச் செழுமையாக்கியிருக்கின்றன. தொண்ணூறுகளில் ஏற்பட்ட போர்கள் சந்தைப் பொருளாதாரத்தைப் பாதித்து திரைப்பட உலகத்தையும் பாதித்திருக்கிறது. இரண்டாயிரத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் சுதந்திரமான வெளிப்பாட்டு முறைக்குத் திரைப்பட இயக்குனர்களைக் கொண்டு சென்றிருக்கிறது. குரோஷியத் திரைப்பட உலகத்தின் மூன்றாவது பொற்காலம் என்று குறிப்பிடும் வகையில் அவை அமைந்திருக்கின்றன. நகைச்சுவை, போர் நிகழ்வுகளும், அரசியலும் என்று பல்முகத் தன்மையைக் கொண்டதாக படங்கள் அமைந்து வருகின்றன. சகாவின் நிலைமை அங்கு வாழும் சாதாரண மனிதனின் நிலையாகவே இருக்கிறது.
மலையாள இயக்குனர் ஷ்யாம்பிரசாத்தின் ‘ரிது’ படைப்புத் தன்மை ஒரு குடும்பத்தில் தொடர்ந்து வருவதை, தகவல் புரட்சி தொழில்சார்ந்து இயங்கும் இளைஞனிலும் உள்ளீடாகி இருப்பதைக் காட்டுகிறது. ஷ்யாம் பிரசாத்திற்கு எழுத்துலகம் ஆதர்சமாகவே இருந்திருக்கிறது. அவரின் முதல் படமே லலிதாம்பிகா அந்தர்ஜனம் எழுதிய சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவலை மையமாகக் கொண்ட ‘அக்னி சாட்சி’யாகும். சென்றாண்டில் வெளிவந்து சர்வதேச அளவில் பல்வேறு பரிசுகளைப் பெற்ற ‘ஒரே கடல்’ வங்காள எழுத்தாளர் தனில்சங்கோபாத்யாயாவின் நாவலை மையமாகக் கொண்டதாகும்.
‘ரிது’வில் குழந்தைப் பருவத்திலிருந்து நட்பாய் வளர்ந்த மூவரின் இன்றைய கதையாக இருக்கிறது. இருவர் ஆண்கள். ‘சிலிக்கன் வேலி’யிலிருந்து ஊருக்கு வரும் சரத்வர்மா, பெங்களூர் ஐ.டி. தொழிலில் இருக்கும் மற்ற அந்த இரு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு கணினி மென்பொருள் துறை நிறுவனத்தில் சேருகிறார்கள். சிறு கிராமச் சூழலில் வளர்ந்தவர்கள் அவர்கள். வாழ்க்கை ஒரே துறையைச் சார்ந்ததாக இருந்தாலும் நினைவுகளைக் கிளறிப் பார்க்கக் கூடியதாகவே அமைந்திருக்கிறது.


வர்சாஜானிக்கும், பெண் தனி இம்மாட்டிக்குமான நட்பு ஒருவகையில் அவர்களை ஒரு இணையாகக் காட்சியளிக்க வைக்கிறது. தனியுடனான நட்பைப் பெரிதும் விரும்பும் சரத்வர்மா அவள் நவீன எண்ணங்களுடனான பெண் என்பதால் அவளின் வெளிப்படையான நடவடிக்கைகள் அவனைச் சங்கடப்படுத்துகின்றன. தனக்கானவளாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். வர்சாஜானி குடும்பத்திலிருந்து அந்நியப்படுகிறான். இந்த வயதிலும் அவனை அடித்துத் துன்புறுத்தும் அப்பா மென்பொருளை வெளியாளுக்கு விற்கவும் துணிகிறான். பிடிபடுகிறான். மென்பொருள நிறுவனத் தொழில் அனுபவங்கள் சரத்வர்மாவிற்குக் கசப்பானதாக அமைந்து விடவே அதிலிருந்து வெளியேறி எழுதுகிறான். நண்பர்களின் பார்வையிலிருந்து மறைந்து போகிறான். சரத்வர்மாவின் அப்பா ஒரு எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். அவன் எழுதி வைத்திருந்த டைரியை அவன் அமெரிக்காவிலிருந்து திரும்பியபின் தந்து அவனின் வெளிப்பாடு தனித்துவமானதாகும், மொழி சுயமாகவும் இருப்பதால் தொடர்ந்து எழுத வேண்டும் என்கிறார். மென்பொருள் நிறுவனத் தொழில் சூழல், அலைக்கழிக்கும் தனி இம்மாட்டி போன்றோர் அவனை அவனுள் பரிமாறிக் கொள்ள வைக்கத்தக்க கவிதைப் படைப்புகளை உருவாக்குகின்றன. சரத்வர்மாவின் தந்தை சாவதற்கு முன் அவனுடன் காரில் பயணம் செய்யும்போது அவனின் வேலை மீறி அவன் எழுத்தில் ஈடுபட வேண்டும் என்கிறார். மென்பொருள் துறையில் அவன் அப்பாவின் எழுத்தாளர் நிலையும், அவன் சகோதரனின் பொதுவுடமை சித்தாந்த ஈடுபாட்டால் தனிப்பட்ட வாழ்க்கைத் தோல்வியும் நகைப்பிற்குள்ளாக்கப்படுகின்றன. அவர்களின் போலி உலகத்திலிருந்து விடுபட எழுத்து ஆசுவாசமாகிறது. ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்து அந்த உலகத்திற்குள்ளேயே இயங்கி ஆசுவாசப்படுத்திக் கொள்கிறான். தனி கணினி சார்ந்த ஒரு தொழிலில் குழந்தைகளுக்குப் பயிற்சியாளராக இருந்து ஆசுவாசம் பெறுகிறான். வர்சா ஜானி மென்பொருள் துறை தொழிலில் உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறான். சரத்வர்மா எழுதின நாவல் ‘ரிது’ அவர்கள் இருவருக்கும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. பழைய நினைவுகளை முற்றிலும் அழித்துவிட்டு வேறு உலகமாகப் படைப்பிலக்கியத்தை அவன் கைக்கொண்டு தொடர்கிறான். மென்பொருள் துறை சார்ந்த அனுபவங்கள், அவர்களின் உலகம், வார இறுதி விடுமுறைக் கொண்டாட்டங்கள், உயர்தர ஆடம்பர வாழ்க்கையாய் முழுக்க இளைஞர்களின் உலகமாய் இப்படம் கொண்டிருக்கிறது. அதில் வேலை செய்யும் கடைநிலை ஊழியன் இளைஞன் ஒருவனின் வாழ்க்கையை முன் வைத்து அத்தொழிலின் இன்னொரு பக்க முகத்தையும் ஷ்யாம் பிரசாத் காட்டுகிறார். தங்களின் நிலம் அத்தொழிற்சாலைக்காய் பிடுங்கப்பட்டு, வேலை வாய்ப்பு உறுதியளிக்கப்பட்டு சாதாரண காவலாளியாக நியமிக்கப்படும் ஒரு இளைஞன் அத்தொழிலில் நடக்கும் ஊழல்கள் காரணமாக உயிரைப் பணயம் வைக்கிற சிக்கலில் மாட்டுகிறான். நிலத்தை இழந்தும், அமைதியற்ற ஒரு வாழ்க்கைக்குத் தள்ளப்பட்ட ஒரு சாதாரண மனிதனின் குறியீடாகப் போகிறான். அந்தக் கடைநிலை ஊழியர் இளைஞனும். இன்றைய இளைஞர்கள் உலகம் பற்றிய இளமை ததும்பும் படம் ஷியாமினுடையது.
இயக்குனர் ராஜீவ்நாத் 13 படங்கள் இயக்கியிருக்கிறார். சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை இவரின் ‘ஜனனி’ படம் 1999ல் பெற்றது. கேட்பாரற்று விடப்படும் ஒரு குழந்தையை எடுத்துப் பராமரிக்கும் சில கிறிஸ்துவக் கன்னியாஸ்த்ரீகள் பற்றின படம் அது. ஓ.வி.விஜயனின் ‘கடல்தீரத்து’ என்ற கதையையும் எடுத்திருக்கிறார். இவ்வாண்டில் வந்திருக்கும் அவரின் ‘பகல் நட்சத்திரங்கள்’ ஒரு எழுத்தாளனின் மரணம் குறித்தது. சித்தார்த்தன் என்ற எழுத்தாளன் அவனின் மாலைகளையும் இரவுகளையும் நண்பர்களுடன் கழிக்கப் பயன்படுத்தும் ஒரு இடத்தில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். காவல்துறை அதை ஒரு கொலை என்று கணிக்கிறது. ஆனால் கொலையாளியைக் காவல்துறை கண்டுபிடிக்க முடிவதில்லை. பத்தாண்டுகளுக்குப் பிறகு சித்தார்த்தனின் மர்மமான மரணம் குறித்த அவனின் நண்பர்கள் ஆராயும் பொருட்டு பழைய இடத்திற்குச் செல்கிறார்கள். பழைய கட்டிடம் இடிக்கப்பட்டிருந்தாலும் அவ்விடம் எழுப்பும் நினைவலைகள் எழுத்தாளனைப் பற்றியதாக இருக்கிறது. மோகன்லால், சுரேஷ்கோபி போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்தாலும் வணிகரீதியான வெற்றியை ராஜீவ்நாத்திற்கு இப்படம் தரவில்லை.
சோவியத் யூனியனின் சிதறலுக்குப் பிறகு தன்னுரிமை பெற்ற கஜகிஸ்தானின் படங்கள் பெரும்பாலும் பிரச்சார அம்சங்களைக் கொண்டவையாக இருந்த காலமுண்டு. ஆனால் ஹாலிவுட் பார்வை தற்சமயம் அவர்களின் படங்களை ஆக்கிரமித்திருந்தாலும் நல்ல படங்களின் வருகை ஆறுதல் தருவதாகத்தான் இருக்கிறது. சென்றாண்டில் வெளிவந்த ‘குல்சாரி’யும், இவ்வாண்டின் கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான பரிசு பெற்றப் படமும் அவர்களின் முந்தைய அடையாளங்களை அழித்திருக்கின்றன. ஸ்டெப்பிப் புல்வெளியின் நாட்டுப்புறப் பாடகனும் கவிஞனுமான பிர்ஜான் இயல்பான தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாதபடி அவர்களின் பழங்குடி வாழ்க்கை முட்டுக்கட்டையாகிறது. பிர்ஜான் பற்றிய சரித்திர ஆவணமாக இப்படம் அமைந்திருக்கிறது. அவன் நடுவயது மனைவியை மிகவும் நேசிக்கிறவன்தான். அவனுக்குப் பரிச்சயமாகிற இளம்பெண்ணும் பாடகியுமான வேலிமின் அழகில் மனதைப் பறிகொடுக்கிறான். மனைவியும் சாவுப்படுக்கையில் தன் விருப்பத்தையே கூறுகிறாள். ஆனால் அவள் மாமனுக்கு நிச்சயிக்கப்பட்டிருப்பதைக் கூறி ஊர்ப் பெரியவர்கள் மறுக்கிறார்கள். பிர்ஜானும் மனதை மாறறிக் கொள்ள வேண்டியதாகிறது. திருவிழாவில் பொதுமக்கள் மத்தியில் பாடிக் களிக்கும் அவனை ஊர் பெரியதனம் முன்னால் சிலர் பாடச்சொல்லிக் கேட்கிறார்கள். அவன் மறுக்கவே விரோதமாகிறது. அவனின் காதல் ஆசை நிராகரிக்கப்படும்போது தனிமையாக்கப்படுகிறான். தான் விரும்பிய வாழ்க்கையும் நிராகரிப்பும் அவனைச் சோர்வாக்குகிறது. ஆனாலும் பாடல் அவனை இயக்கிக் கொண்டே இருக்கிறது. சிறைப்பிடிக்கப்படுவது போல கட்டி இழுத்தும் செல்லப்படுபவன் தனிமையாளாக்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறான். நிறுவனங்களுக்கும், அதிகாரத்திற்கும் எதிராக அவன் குரல் பாடலாய் விரிந்து கொண்டேயிருக்கிறது. 19ம் நூற்றாண்டின் கலைஞனின் அவலத்தை முன்வைக்கிற இபப்டம் இப்போதைய குரோஷிய நாட்டுப் படத்தின் சகா என்ற எழுத்தாளனின் தனிமை அவலத்தோடு வெகுவாக ஒத்திருக்கிறது. இப்படத்தின் ஆரம்பக் காட்சியில் வர்ண உடைகளுடன் வேகமாய் குதிரைகளில் ஓடியோடி பிர்ஜான் ஒரு குரூர நாயை வேட்டையாடும் காட்சி இருக்கிறது. பிர்ஜானும் அவனின் விருப்பங்களுக்கு எதிராக அவனின் சமூகத்தில் வேட்டையாடப்பட்டவன்தான். சகாவின் விருப்பங்கள் எப்போதிலும் நிறைவேறியதில்லைதான்