சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 8 ஜூலை, 2024

Perfect days பர்பெக்ட் டேஸ் / திரைப்படம் ./ சுப்ரபாரதி மணியன் ( இந்த படம் 2023 கான் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான நடுவர்களின் விருதைப் பெற்றது ) நம் தினசரி வாழ்க்கையின் சம்பவங்கள் வேலைகள் ஒரே மாதிரியாகத்தான் அமைகின்றன. ஓரிரு புது வேலைகள் வந்து புது மனிதர்கள் வந்து அந்த சம்பவங்களை கொஞ்சம் சுவாரஸ்யமாக மாற்றுகிறார்கள். இந்த ஒரே மாதிரியான சம்பவங்களை தொகுத்து திரைப்படம் ஆக்கினால் எப்படி இருக்கும் கேட்கவே அலுப்பாக தான் இருக்கிறதும் வாழ்க்கையின் ஒரே மாதிரியான சம்பவங்கள்ன் நிகழ்வுகள் அவற்றையெல்லாம் திரும்பத் திரும்ப காட்டிக்கொண்டு இருந்தால் என்ன கிடைக்கும் ஆனால் அந்த மையங்களில் இருந்து கொண்டு வரப்படும் வாழ்க்கையின் சாரம் பற்றிய விஷயம் மனதில் நிற்கக் கூடியதாக இருக்கும் என்பதை விம்வெண்ட்டர் அவர்களின் பர்பெக்ட் டேஸ் என்ற திரைப்படம் காட்டுகிறது . இந்த படம் 2023 கான் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான நடுவர்களின் விருதைப் பெற்றது. சிறந்த நடிகருக்காக இதில் நடித்திருக்கிற முக்கியமான நடிகருக்கும் பரிசு வாங்கி தந்தது. அவர் கோஜி யகுசோ.முக்கியமான கதாபாத்திரம் ஜப்பானின் பரபரப்பு வாழ்க்கைக்கு நடுவில் அகப்பட்டதாகும். பெரிய பெரிய கட்டிடங்கள். விரைந்து செல்லும் வாகனங்கள் இதிலிருந்து சாதாரண வாழ்க்கையை வாழ்கிறார் அவர் .அவர் போட்டிருக்கும் டோக்கியோ டாய்லெட் என்ற சட்டை வாசகம் ஏதோ பேஷன் காரனமாகப் போடப்பட்டதாய் பனியன் வெளிப்படுத்தும் வாசகமாக இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் அவர் அங்கு தான் பணி புரிகிறார் என்பதை தெரிந்து கொள்ள கொஞ்சம் நேரமானது. செய்கிற வேலையை சரியாக செய்கிறவர் . ஹிராயாமா. அவர் கழிப்பறையில் சுத்தம் செய்யும் வேலையின் போது எல்லாவற்றையும் ஜாக்கிரையாக செய்கிறா.ர் சின்ன தூசு இருந்தால் கூட ஜாக்கிரதையாக துடைத்து எடுக்கிறார். அப்படி ரசித்து வேலை செய்யும் வேலையின் போது யாராவது கழிப்பறைப்பை பயன்படுத்த வந்துவிட்டால் அவர்களின் அவசரமும் அவருக்கு தெரிந்து விடுகிறது. வெளிவந்து வானத்தைப் பார்த்து ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார். நேரம் கிடைக்கிற போது அவர் உட்காருவதற்கு தென்படுகிற மரங்களையும் அவற்றை இலைகளையும் படம் பிடிக்கிறார். அவ்வப்போது புத்தக கடைக்கு போய் ஒரு டாலர் விலையில் ஒரு புத்தகம் வாங்குகிறார். பெரும்பாலும் சிறந்த எழுத்தாளர்களின் புத்தகங்கள் அவை. . அதை படிக்கிறார் படம் பிடிக்கிற கேமராவை சரியாக பாதுகாக்குகிறா.ர் அந்த படத்தை பிரிண்ட் போட்டு எடுத்து வந்து பார்க்கிறார். அது திருப்தியாக இருந்தால் வைத்துக் கொள்கிறார். இல்லாவிட்டால் கிழித்து போட்டு விடுகிறார். சாலையோரம் மரங்களின் அடியில் வளரும் சிறு செடி கூட அவருடைய பார்வையில் முக்கியமாக படுகிறது. எடுத்து வந்து வீட்டில் பாதுகாக்கிறார். இப்படி சின்ன சின்ன விஷயங்களை ஜாக்கிரதையாக செய்கிறார் .இரவில் வழக்கமாய் போய் சாப்பிடும் இடத்தில் சாப்பிடுகிறார் அந்த கடைக்காரர் இவரின் உழைப்பை பார்த்து பாராட்டு விதமாய் தரும் குளிர்பானத்தை அருந்திவிட்டு அறைக்கு வருகிறார். அவர் கழிப்பறையை சுத்தம் செய்யும் இடங்களுக்கு போகும் போது மகிழ்வுந்துவைப் பயன்படுத்திக்கிறார். ஆனால் மற்ற இடங்களுக்கு போய்விட்டு திரும்புவதற்கு அவரிடம் மிதிவண்டி இருக்கிறது .தினசரி வானத்தை பார்த்து ரசிப்பதும் காலையில் எழுந்ததும் ஒரு குளிர்பானத்தை குடிப்பதும் என்ற அவருடைய வேலையை தொடங்குகிறார். இந்த வேலையின் தினசரி அம்சங்கள் ஒரே மாதிரியாக இருக்கிறன. இவற்றை திரும்பத் திரும்ப படத்தில் காட்டப்படும் போது என்ன சொல்ல வருகிறார் என்று பல பேருக்கு அயர்ச்சி செயல்படக்கூடும். ஆனால் அவர் ஏன் தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் இரவில் படிக்க போது கொஞ்சம் படிக்கிறார். அசந்து தூங்கிவிட்டார் கனவு வருகிறது. கனவின் பொருள் என்ன மனச்சுமையில் எப்போதும் மாட்டித் தவிக்கிறவர் அல்ல ஆனால் மனச்சுவையில் தவித்துப் போகிறார்கள் அவரிடம் வந்து அடைக்கலமாக இருக்கிறார்கள். தாயிடம் கோபித்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறி அவர் அறையில் வந்து தங்கும் சகோதரியின் மகள் கூட சில நாட்கள் கழிப்பறை சுத்தம் செய்யப் போகிறாள். அவளுக்கு வாழ்வின் அர்த்தமும் புரிகிறது. அதை கற்றுக் கொடுக்கிறார் அந்த பெண்ணின் அம்மா வந்து திரும்பக் கூட்டிக்கொண்டு போய்விடுகிறார் மற்றும் அவர் பார்க்கிற ஒரு காட்சி அவரை நடுங்க வைக்கிறது. கழிப்பறையைச் சுத்தம் செய்துவிட்டு அமர்ந்திருப்பவர் எதிரில் உள்ள ஒரு அறையில் அந்த வீட்டுப் பெண் ஒரு ஆணுக்கு கதவை திறந்து வருகை தர கேட்கிறாள். அவர் உள்ளே போகிறார் ஒருவித ஆர்வத்தால் அங்கே என்ன நடக்கிறது என்பதை கதவின் சந்து வழியாக அவர் பார்க்கிறார் அவர்கள் இருவரும் கட்டி அணைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது அவருக்கு துணுக்கு வைக்கிறது. அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை அவர் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று சில சமயங்களில் கேட்கப்படுகிறது . மற்றவரின் அந்தரங்க வாழ்க்கையில் வீணாக குறிப்பிட்டு விட்டோமோ என்ற ஒரு குறுகுறுப்பு ஏற்படுகிறது அந்த நீர் பரப்பின் அருகில் வந்து பதற்றத்தைக் குறைக்க மது அருந்தும்போது இவருடன் சேர்ந்து கொள்கிறார் அவர் அந்த பெண்ணின் முன்னாள் கணவர். விவாகரத்து வாங்கியவர். ஆனால் புற்றுநோய் வந்து விட்டது அதற்கான சிகிச்சையில் இருப்பதாக சொல்கிறார். அவரின் வேதனை வெளிப்படாமல் இருக்க தாங்கள் இருவரும் வெளிச்சத்தில் வெளிப்படும் நிழல்களை வைத்துக் கொண்டு சில உரையாடல்களை அவர் பரிமாறிக் கொள்கிறார். இருவருக்கும் பாரம் குறைந்து கொண்டிருக்கிறது. அடுத்த நாளும் சரியான நேரத்தில் கண்சொருக தூங்கிடுவார் வீட்டுக்கு வெளியே வந்து வானத்தை பார்ப்பார். பக்கத்தில் இருக்கும் ஒரு தானியங்கி இயந்திரத்தில் ஒரு குடிபானம் வாங்கி அருந்துவார். கழிப்பறை சுத்தம் செய்யும் வேலைக்கு போக வேண்டும் .அப்படிக்கு போக அந்த நாளில அந்த வேலை ஒப்பந்தம் முடிந்து விட்டதாக தகவல் வருகிறது. அந்த வேலை செய்யும் இடத்திற்கு போனால் இன்னொரு பெண்மணி அந்த வேலை செய்ய காத்துக் கொண்டிருக்கிறாள். ஆகவே அடுத்து என்ன செய்வது என்பது குறித்து அவருக்கு சிரமம் இல்லை. அவருக்கு வாழ்க்கையில் ரசிக்கவும் வாழ்க்கை தந்த அனுபவங்களை புரட்டி போட்டு கொள்ளவும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. அவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.. இஅப்பானின் தலைசிறந்த இயக்குநரானயாசுஜிரோஓசு அவர்களின் பிரபலமான டோக்யோ ஸ்டோரி பட்த்தின் பிரதான் கதாபாத்திரத்தின் பெயர் அது. இதில் சொல்லப்படாத கதாநாயகரின் வாழ்க்கை மர்மமாயமே இருக்கிறது பழுதடைந்த வேன். ஒரு கேசட் பிளேயர். அவருக்கு ஆசுவாசப்படுத்தும் விசயங்கள். இசையின் வாயிலாக பலகாட்சிகளைக்கடந்து செல்கிறோம். இசையும் வாசிப்பும், புகைப்படம் எடுப்பதும் அவருக்கு மூச்சாக அமைந்துவிட்டிருக்கிறது. இந்த தினசரி வாழ்க்கையின் சம்பவங்களை பெரிய வித்தியாசம் இன்றி இதை சொல்லி கொண்டு போவதில் அவர் கலை நயம் மிக்க வாழ்க்கையை தரிசனத்தை கொண்டு வந்து விடுகிறார். இந்த தரிசனம் எல்லோராலும் வழி காட்ட முடியாது . விம் வெண்டர் போன்ற தேர்ந்த திறமையான கலைஞர்களால் முடியும். அதை அவர் திரும்பவும் நிரூபித்திருக்கிறார் இந்த படத்தின் மூலம்.. மக்கள் அனைவரும் சமமானவர்கள் எனும் அடிப்படையில்தான் எனது அனைத்துத் திரைப்படங்களும் உருவாக்கப்படுகின்றன.சமத்துவம் என்பது எனது எல்லாத் திரைப்படங்களிலும் முதன்மைப் பண்பாகச் செயல்படுகிறது.மக்கள் எல்லோரும் மக்கள்தான் என்பதை அவைப் புலப்படுத்துகின்றன. அதில் மேலாண்மையோ கீழிறக்கமோ இல்லை. அவர்கள் முக்கியமானவர்களோ முக்கியமற்றவர்களோஇல்லை என்பதில் நம்பிக்கை கொண்டு அதைத் அவரின் திரைப்படங்களிலும் கதாபாத்திரங்களை வெளிப்படுத்துகிறார். சுப்ரபாரதி மணியன்
சுப்ரபாதிமணியனின் திரைக்கதை நூல்கள் வரிசை - மதுராந்தகன் சுப்ரபாதிமணியனின் . திரைப்பட கட்டுரை நூல்களில் திரைப்பட ரசிகனுக்கு, இலக்கிய வாசகனுக்கு நல்ல திரைப்படம் பற்றிய வழிகாட்டியாக இருக்கும். ( காவ்யா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ” திரைப்படம் என்னும் சுவாசம் “ என்ற 400 பக்க நூல் இதற்குச் சாட்சியம் ) . திரைவெளி போன்ற நூல்களும் இதற்கு சாட்சி ( உயிர்மை, நிவேதிதா பதிப்பக வெளியீடு ) தற்போது அவரின் திரைக்கதை நூல்கள் ஏழு வெளிவந்துள்ளன. ஆரம்பத்தில் நாவல்களையும் சிறுகதைகளையும் எடுத்து திரைக்கதைகளாக்கும் முயற்சியில் மூன்று நூல்களை வெளியிட்டு இருக்கிறார்..சுமார் 30 திரைக்கதைகள் இதில் உள்ளன. இந்த முயற்சியில் அவரின் படைப்புகளைத்தாண்டி தொடர்ந்து ஏழு நூல்களை வெளியிட்டுள்ளார். . திரைப்பட தயாரிப்பாளர்கள் கதைக்காக அலைய வேண்டியதில்லை. ஏழு பாகங்களாக வந்துள்ள அவர்களின் நூல்களை படித்தால் திரைப்படத்திற்காக கதை இல்லையே என்று கவலைப்பட தேவையில்லை. இவரின் கதைகள் ஏற்கனவே திரைப்பட பல தயாரிப்பாளர்களால் திருட்டுத்தனமாக கையாளப்பட்டுள்ளது. ஒரு படைப்பாளியின் மூலப்படைப்பை எடுத்து திரைக்கதையாக்கம் செய்யும் போது பல சிதைவுகள் ஏற்படும். நாவலின் மையம் சிதைந்து போகும். அல்லது பல முக்கியமான, நுணுக்கமான கதாபாத்திரங்களும் விடுபட்டுப் போகும். இந்த இந்த நிலையில் எழுத்தாளனே அவனின் படைப்புக்கு திரைக்கதை எழுதும் போது இந்த சிதைவு இருக்காது. ஓரளவு படைப்பாளிக்கும் திருப்தி ஏற்படும். திரைக்கதையில் வேறு ஒரு கோணமும் கிடைக்கும். இந்த வகையில் சுப்ரபாரதி மணியன் அவரின் எல்லா நாவல்களையும் திரைக்கதைகளாக்கி விட்டார் . இது தமிழ் இலக்கிய உலகில் ஒரு சாதனை என்று சொல்லலாம். அதைத்தவிர பல புதிய களன்களில் திரைக்கதைகள் என்று மொத்தமாய் 62 திரைக்கதைகள் இந்த ஏழு நூல்களில் இடம் பெற்றுள்ளன. படைப்பாளிகள் திரைக்கதை முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் தங்கள் படைப்புகளை எடுத்துக் கொண்டு திரைக்கதையாக்கும் முயற்சி குறைவுதான். காரணம் தயாரிப்பாளரும் இயக்குனரும் கேட்கும் விசயத்தைதான் அவர்கள் திரைக்கதையாக்குகிறார்கள். வியாபாரரீதியாக அதுதான் தேவை என்று நினைக்கிறார்கள். அவர்களின் படைப்புகளை திரைக்கதைகளாக்கும் போது கூட வணிக ரீதியாக பல விசயங்களைச் சேர்த்துக் கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். அப்படித்தான் படைப்பாளிகளின் திரைக்கதையாக்க முயற்சிகள் உள்ளன. ஆனால் சுப்ரபாரதிமணியன் அவரின் படைப்புகளை எடுத்துக் கொண்டு படைப்பின் மையம் அதிகம் சிதறாமலும், வணிக அம்சங்களை அளவோடு எடுத்துக் கொடும் செய்திருக்கிறார். அவரின் நாவல்களைப் படிக்கிற வாசகன் திரைப்பட வடிவத்திற்காக அவற்றை யூகித்துக் கொள்வது சாதாரணம் . அந்த யூகிப்பின் வடிவமாக இந்த திரைக்கதைகள் உள்ளன. இந்த ஏழு தொகுப்புகளில் அவரின் வெளிவ்ந்த படைப்புகள் தவிர வெளிவராத சில படைப்புகளையும், புது மையங்களையும் திரைக்கதை வடிவத்தில் தந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திரைப்பட தயாரிபாளர்கள், திரைக்கதாசிரியர்கள், இயக்குனர்கள், திரைக்கதைகளில் ஆர்வம் கொண்ட வாசகர்களுக்கும் ஒருமித்த வகையில் பயனளிக்கும் இந்த முயற்சிகளை பிற படைப்பாளிகளும் தொடர வேண்டும். (ரூ 280 சுப்ரபாதிமணியனின் திரைக்கதை நூல் வரிசை 7 மொத்தமாய் 7 திரைக்கதை நூல்களும் பெற ரூ:2000 ( 89393 87296 நிவேதிதாபதிப்பகம், சென்னை வெளியீடு) Thanks : Puthagam pesuthu
62 வயதில் தன் முதல் நூலை வெளியிட்டார் திருப்பூர் பனியன் தொழிலாளி கரு கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய முதல் கவிதை ஹைக்கூ தொகுதியை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருப்பூர் வாசகர் சிந்தனை பேரவை ஜீலை நிகழ்ச்சியில் வெளியிட்டார்.. திருப்பூர் பனியன் தொழிலாளி கரு கிருஷ்ணமூர்த்தி.. இவருக்கு 62 வயதாகிறது. திருப்பூர் காந்திநகர் ஏவிபி லேஅவுட் குடியிருப்போர் சங்க கட்டிடத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது சிறு வயது முதல் நாடகம், கவிதை என்ற ஆர்வம் கொண்டவர். அவர் எழுதிய சுமார் 800 ஹைக்கூ கவிதைகளில் இரு நூறு கவிதைகளைத் தேர்வு செய்து ஒரு நூலாக வெளியிட்டார். இந்த நூலை எழுத்தாளர்கள் வெண்ணிலா முருகேஷ் தம்பதியரின் அகநி பதிப்பகம் வந்தவாசி வெளியிட்டுள்ளது. இந்த நூலை வாசகர் சிந்தனை பேரவை நிர்வாகி தங்க பூபதி வெளியிட கவிஞர் முத்து பாரதி பெற்றுக் கொண்டா.ர் கரு கிருஷ்ணமூர்த்தி தன் வாழ்க்கை, பனியன் தொழில் அனுபவங்களையும் கவிதை வாழ்க்கையையும் பற்றி விரிவாகப் பேசினார் டெல்லி ஷாஜகான் சிறப்பு விருந்துனராக்க் கலந்து கொண்டு பேராசிரியர் ரமணி மொழிபெயர்ப்பு செய்த இரண்டு கவிதை தொகுப்புகள்( தெரகாதா, தெரிகாதா ) ஆகியவற்றை வெளியிட்டார்.புத்த பிக்குனிகளின் கவிதைகளின் மொழிபெயர்ப்பு இந்த இரு நூல்கள். இவற்றை திருப்பூர் கனவு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. முதல் பிரதிகளை திராவிட பாசறை இதழின் ஆசிரியர் திராவிட மணி பெற்றுக் கொண்டார். . டெல்லி ஷாஜகான் தன் 32 ஆண்டுகள் டெல்லி வாழ்க்கை சார்ந்து புத்தக பதிப்பு துறையில் இயங்கிய அனுபவங்களையும் டெல்லி தமிழர்கள் வாழ்க்கை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.. பொள்ளாச்சி சண்முகம் எழுதிய தாயம்மா சிறுகதைத் தொகுஹ்டி அறிமுகம் நடைபெற்றது. திராவிட பாசறை என்ற மாத இதழை திருப்பூரில் இருந்து வெளியிடும் திராவிட மணி அவர்களுக்கு பிரபு பொன்னாடை போற்றி பாராட்டினார். திராவிடமணி தன் திருப்பூர் பத்திரிக்கை அனுபவங்களை எடுத்துரைத்தார்.. திருப்பூரைச் சார்ந்த பத்திரிகையாளர் கே எஸ் அவர்களின் எழுத்தை தொகுத்து வெளியிட்ட நூல் ” வாழ்க்கை உங்கள் கையில் “ விழாவில் வெளியிடப்பட்டது. இதை யுவராஜ் தொகுத்து வழங்கியிருக்கிறார் அந்த நூலில் பத்திரிகையாளர் அமரர் கே எஸ் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடத்திய கே எஸ் என்ற விளம்பர பத்திரிக்கையில் அவர் எழுதிய பலகட்டுரைகளின் தொகுப்புகள் அடங்கியுள்ளன இந்த விழாவில் எழுத்தாளர் வெள்ளியங்கிரி ,சுப்ரபாதிமணியன், நடராஜன், எத்திராஜ், கோவிந்தராஜ், மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டார்கள் வாசகர் சிந்தனை பேரவையின் ஜூலை மாத கூட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது செய்தி : தங்க பூபதி

செவ்வாய், 2 ஜூலை, 2024

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவி பாரதி திருப்பூரில் தனக்கு அளிக்கப்பட்ட பாராட்டு விழாவில்... ” இலக்கியம் மனிதனை முன்னெடுத்துச் செல்வது.. இன்றைய இளைஞர்களுக்கு இலக்கியம் வழிகாட்டியாக இருக்கும் கலங்கரை விளக்கமாக இருக்கும்” என்று இந்த ஆண்டின் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவி பாரதி திருப்பூரில் தனக்கு அளிக்கப்பட்ட பாராட்டு விழாவில் தெரிவித்தார். 7/4/24 இந்த ஆண்டின் சாகித்ய அகாடமி விருது தேவி பாரதி அவர்களுக்கு நீர் வழிபடூம் என்ற நாவலுக்காக வழங்கப்பட்டது அதற்காக திருப்பூர் வாசகர் சிந்தனை பேரவை சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. அந்த பாராட்டு விழாவில் அவர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அவரின் படைப்புகளைப் பற்றி தமிழ் கல்விக் கூட்டமைப்பின் தலைவர் மூர்த்தி, ஆசிரியை ஹேமலதா., எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன், அழகு பாண்டி அரசப்பன், முத்து பாரதி, வின்சென்ட் ராஜ் உட்பட பலர் பேசினர். . ஏவிபி லேஅவுட் சங்க கட்டிடம், காந்திநகரில் நடைபெற்றது தேவி பாரதி : “ நவீன மனிதர் என்பவன் பகுத்தறிவாளன் கேள்வி கேட்பவன்.., மாற்றம் இல்லாதது என்றும் இல்லை எல்லாம் மாறும் ஆனால் எந்த காலத்திற்கும் மாறாத நவீனம் அன்புதான். சக மனிதன் அன்பு என்றைக்கும் நவீனமானது தான் “ என்று குறிப்பிட்டார் முத்து பாரதி தீர்த்தகிரி என்ற விடுதலைப் போராளி என்ற தலைப்பில் பேசினார் வாசகர் சிந்தனை பேரவையின் தலைவர் துரை, செயலாளர் வெள்ளிங்கிரி, துணைச் செயலாளர் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்திற்கு வாசகர் சிந்தனை பேரவை பாலசுப்பிரமணி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள் . வாசகர் சிந்தனை பேரவையின் 16 வது கூட்டம் இது. செய்தி : தங்கபூபதி - வாசகர் சிந்தனை பேரவையின் நிர்வாகி
உலக புத்தக தினத்தையொட்டி திருப்பூரின் மூத்த எழுத்தாளருக்குப் பாராட்டு. .( 83 வயது மதுராந்தகன் ) 0 திருப்பூரின் மூத்த எழுத்தாளர் 83 வயது மதுராந்தகனுக்கு உலக புத்தக தினத்தையொட்டி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வாசகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ” என் முகவரி” என்ற கவிதைத் தொகுதி, ” வாழ்வை அறிந்த மாய சூழல்” இலக்கிய விமர்சங்கள் கட்டுரை நூல் ஆகியவை வெளியாகியுள்ளன. 5 தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். நூற்றுக்கணக்கானக் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் நூல் வடிவம் பெறாமல் உள்ளன. சமீபத்தில் வெளிவந்த “ கள்வன் “ திரைப்படத்தில் ( இயக்குனர் பிவிசங்கர் ) நடித்துள்ளார். முண்டாசுப்பட்டி, சூது கவ்வும் ஆகிய திரைப்படங்களில் சிறு பாத்திரங்களில் நடித்தவர். பல வீதி நாடகங்களிலும் நடித்தவர். அயலான் படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கிய 4 குறும்படங்களிலும் இயக்குநர் ராம்குமார் இயக்கிய 4 குறும்படங்களிலும் இயக்குநர் து.சோ.பிரபாகரன் இயக்கிய 2 குறும்படங்களிலும் இயக்குநர் தாண்டவக்கோன் இயக்கிய 2 குறும்படங்களிலும் இயக்குநர் பழனிகுமார் இயக்கிய 2 குறும்படங்களிலும் நடித்தவர். இந்த வாரம் 83 வது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். திருப்பூர் கனவு இலக்கிய வட்ட நண்பர்கள் அவருக்கு பாராட்டைத் தெரிவித்தனர். 0 தமிழக அரசின் ரேசன் பொருட்கள் இவருக்கு உயிர் நீர். மதுராந்தகன் வயது 83. நான் வசிக்கும் பகுதியில் வாழ்கிறார். .அடிப்படையில் ஒரு நெசவாளி. அப்புறம் விட்டு விட்டு பனியன் தொழிலாளியாக 60 வருடங்கள் வேலை செய்தவர். இப்படியாக இதுவரை காவலாளி எனவும் 27 வேலைகள் பார்த்தவர். 5ம்வகுப்பு படிப்பு. தொடர்ந்த வாசிப்பு கொண்டவர். வாடகை வீட்டில் மனைவியுடன் வாசம் ( ஆஸ்பெஸ்டாஸ் கூரை மாடி வீடு ) . தமிழக அரசின் ரேசன் பொருட்கள் இவருக்கு உயிர் நீர். கொரானா காலத்தில் காவலாளி உத்யோகம் கூட வாய்க்கவில்லை. நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கி முதல் நூலை வெளியிட்டுள்ளார். இலக்கிய வாசகர்கள், புரவலர்கள் இவருக்கு அவரின் நூலை வாங்குவதன் மூலம் உதவலாம். ( 77089 89639 ). எழுத்தாள நண்பர் ஒருவர் வீட்டில் புத்தக ஒழுங்கமைப்பு வேலை ஒன்றரை மாதம் செய்தார். தினமும் ரூ150 பெற்றார். அது முடிந்த பின் சிரம திசை. கொரானா காலம் முடிந்த பின் காவலாளி-செக்யூரிட்டி வேலை கிடைக்கும் என்ற கனவில் இருந்தார்.. தான் கடன் வாங்கிப் போட்ட நூலை விற்று விட்டு கடன் அடைப்பது கொரானாவில் அவரின் பிரதான கனவு . “ என் முகவரி “ இவரின் கவிதை நூல் . நிரந்தர முகவரி இல்லாமல் வாடகை வீட்டில் வசிப்பவர். வயது : 83 ( என்பத்து மூன்று ) ( 77089 89639 ) வேலை : நெசவு உட்பட 27 தொழிலகள் பார்ததவர் படைப்பு : நவரத்னா கவிதை இதழ் 1960 புரட்சித் தலைவி சாதனை மலர் 2005 மெய்ப்படும் உணர்வுகள் ( கவிதை தொகுப்பு ) எனது முகவரி ( கவிதை தொகுப்பு ) வீடு : சொந்த வீடு இல்லை., வாடகை வீடு முகவரி : மாற்றத்திற்கு உட்பட்டது முகவரி 8/.33 94 பாண்டியன் நகர் வடக்கு தாய்த்தமிழ்ப் பள்ளி அருகில் திருப்பூர் 641 602 ( 77089 89639 ) 83 வயதுக்காரர். அடிப்படையில் நெசவாளி. நெசவு, பனியன் தொழிலாளி, காவலாளி உட்பட 27 தொழில்கள் செய்தவர். சிறு வயது முதல் தேர்ந்த இலக்கிய வாசிப்பு கொண்டவர். அவ்வப்போது எழுதிய கவிதைகள் சேகரிப்பில் இல்லாமல் தொடர்ந்தவை ஐநூறாவது இருக்கும். அவற்றில் பல இலக்கிய இதழ்களில் வெளிவந்தவை. திருப்பூர் சத்யஜித்ரே திரைப்பட சங்கம், நவரத்ன இலக்கிய இதழ் என ஆரம்பித்தவர். கனவு இலக்கிய வட்டம், குறிஞ்சி கையெழுத்து இதழ், கனவு இலக்கிய வட்டம் ஆகியவற்றில் இணைந்து செயல்பட்டவர். சமீபத்திய கள்வன், முண்டாசுப்பட்டி, சூது கவ்வும் ஆகிய திரைப்படங்களில் சிறு பாத்திரங்களில் நடித்தவர். இயக்குநர் அயலான் படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கிய 4 குறும்படங்களிலும் இயக்குநர் ராம்குமார் இயக்கிய 4 குறும்படங்களிலும் இயக்குநர் து.சோ.பிரபாகரன் இயக்கிய 2 குறும்படங்களிலும் இயக்குநர் தாண்டவக்கோன் இயக்கிய 2 குறும்படங்களிலும் இயக்குநர் பழனிகுமார் இயக்கிய 2 குறும்படங்களிலும் நடித்தவர். ( சுப்ரபாரதிமணியன் ) இணைக்கப்பட்ட புகைப்படத்தில்: தூரிகை சின்னராஜ், மதுராந்தகன், சுப்ரபாரதிமணியன்..
ஹைதராபாத் நாவல்கள் சுப்ரபாரதி மணியன் ஹைதராபாத்தில் 8 ஆண்டுகள் வசித்தவர். .அவர் அந்த அனுபவங்களை அப்போது மூன்று நாவல்களாக வெளியிட்டு இருந்தார். இப்போது அந்த மூன்று நாவல்களும் ஒரே நூலாக வெளிவந்துள்ளது. அவரின் முதல் நாவல் “ மற்றும் சிலர் “ மதுரை சின்னாளபட்டியில் இருந்து ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்த, திமுக ஆட்சி காலத்தில் இந்தி ஆசிரியர் பணியை இழந்த ஒருவரை பற்றியக் கதை. ஐதராபாத் வாழ் தமிழர்களின் வாழ்க்கையையும் தெலுங்கானா போராட்ட பின்னணியையும் கொண்ட நாவல்..தமிழ் கிளாசிக் நாவல் வரிசையில் இடம்பெற்றது. முன்பு நர்மதா, மருதா, டிஸ்கவரி ஆகிய பதிப்பகங்கள் இதை வெளியிட்டுள்ளன. “ நகரம் 90 “ என்ற நாவல் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது அங்கு காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த பிரிவுகள் செய்த குழப்பங்கள் அதன் மூலமாக அடிக்கடி முதலமைச்சர் மாறிக்கொண்டிருந்த சூழல்.. அப்படியான சூழலில் மத கலவரத்தை பயன்படுத்தி முதலமைச்சரை மாற்றிய மோசமான ஒரு காலம் இருந்தது., மதக்கலவரம் மூலமாக முதலமைச்சர் பதவியை கைப்பற்றி சாதாரண மக்களை பதவிக்காக பலி கொண்ட அரசியல் கலவரச் சூழலை பற்றிய நாவல் இது .. குமுதம் ஏர் இந்தியா நடத்திய இலக்கிய போட்டியில் பரிசு பெற்று இங்கிலாந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சுப்ரபாரதிமணியன் செல்லும் வாய்ப்பை தந்த நாவல். “ சுடுமணல் “ மூன்றாவது நாவல். தேசியம் என்பது மாயம் என்பதை நிரூபிக்கும் வகையில் தண்ணீர் பிரச்சனை வருகிற போதெல்லாம் தமிழர்கள் தாக்கப்படுவதும் அவர்கள் வேறு மாநிலச்சுழலில் அந்நியமாக்கப்படுவதும் பற்றிய அனுபவங்களை ஹைதராபாத் பின்னணியில் எழுதியிருந்தார்., இந்த நாவல் பதினாறு பதிப்புகள் வெளியாகி இருப்பதும் மலையாளம்,, ஆங்கிலத்தில் மொழியாகி இருப்பதும் சிறப்பாகும். இந்த மூன்று நாவல்கள் மூலமாக சுமார் 1960-95 ஆண்டுகால ஹைதராபாத் தமிழர்களின் வாழ்க்கையை இந்த நாவல்களில் சுப்ரபாரதிமணியன் பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.. வேற்று மாநிலச் சூழலில் தமிழர்களின் அந்நியமாதல் சூழலை விவரித்துள்ளது. அசோகமித்திரன் அவர்களின் சிறுகதைகளும் 18 ஆவது அட்சக்கோடு போன்ற நாவல்களும் ஹைதராபாத் தமிழர்களின் வாழ்வியல் பின்னணியில் அமைந்தவை.. அவற்றை சுப்ரபாரதிமணியனின் இந்த நாவல்களின் முன்னோடியாகக் கொள்ளலாம் ( ரூபாய் 480 காவ்யா பதிப்பகம் வெளியீடு சென்னை ) -பெரம்பலூர் காப்பியன் ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ பெரம்பலூர் காப்பியன் என்ற பெரம்பலூர் முனைவர் சின்னச்சாமி சிறு பத்திரிகைகளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். அரசு பள்ளியில் பணியாற்றுகிறார். சிறு பத்திரிகை சார்ந்து அவரின் செயல்பாடுகள் இருக்கின்றன. சிறு பத்திரிகைகள் கண்காட்சிகள், சிறு பத்திரிகை பற்றிய ஆய்வு நூல்கள் பற்றி தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூரில் நடைபெற்ற வெயில் வாசகர் வட்டத்தின் மூன்றாவது ஆண்டு தொடக்க விழாவில் அவர் ஹைதராபாத் நாவல்கள் நூல் பற்றி பேசினார்
ஹைதராபாத் நாவல்கள் : சுப்ரபாரதிமணியன் அசோகமித்திரன் அவர்களின் படைப்புகள் மூலம்தான் ஹைதராபாத் பற்றி நான் அறிந்திருந்தேன். ” பதினெட்டாவது அட்சக்கோடு “ நாவல் மற்றும் நூறு சிறுகதைகளில் அவர் எழுதிய சித்தரிப்புகளையும் ஹைதராபாத் மக்கள் வாழ்க்கையையும் அறிந்திருந்தேன். இடம் பெயர்ந்து ஆந்திர மாநிலத்திற்கு வேலைக்குச் சென்றேன்.தொலைத்தொடர்புத்துறையில் பொறியாளர் பணி அங்குதான் எனக்குக் கிடைத்தது எங்கள் குடும்பத்தலைமுறையே மைசூரில் ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் . ஏதோ காரணத்திற்காக கோவை மாவட்ட வந்து குடியேறியவர்கள்.நாங்கள் குடியேறிகளா என்று பல சமயங்களில் கேட்டுக் கொள்வேன்.( திப்புசுல்தான் படையெடுப்பு, குல அவமரியாதை என்று அப்போதைய இடம் பெயர்வுக்குக் காரணம் சொல்வார்கள் ) செகந்திராபாத்தில் வசிக்கும் போது சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் டெக்கான் கிரானிக்கல் ஆங்கில தினசரியை புரட்டும்போது ஒரு வகை பதட்டம் வந்துவிடும் எனக்கு. சனி ஞாயிறுகளில் திவோலி ,லிபர்ட்டி திரையரங்குகளில் போடப்படும் உலக திரைப்படம்., இந்திய திரைப்படம் தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய விளம்பரம் வரும் . . தொலைக்காட்சி தொலைபேசி துறையில் பொறியாளர் பணி என்பதால் எனக்கு ஒரே வகையான வேலை நேரம் என்றில்லாமல் ஷிப்ட் முறையில் இருக்கும். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் என் வேலை நேரம் சார்ந்து லிபர்டி தியேட்டரில் போடப்படும் உலக திரைப்படம்., இந்திய திரைப்படம் பார்ப்பதற்கு ஏதுவாக நான் என் வேலை திட்டத்தை மாற்றி வைத்துக் கொள்வேன். அல்லது பிறரின் வேலை நேரத்தை எடுத்துக் கொண்டு திரைப்படம் பார்ப்பதற்காக மாற்றி அமைத்துக் கொள்வேன். அப்படித்தான் லிபர்டி பிரத்தியேக திரையரங்கில் பல முக்கியமான பரிசு பெற்ற இந்தியத் திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். அது ஒரு தனி ஆர்வமாக இருந்தது .காலை வேலை என்பதை மாற்றி மதியம் என்று மாற்றிக்கொள்வேன் காலை வேலை முடிந்து இரண்டு மணிக்கு அந்த படங்களுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்வேன் அல்லது மாலை பணி என்றால் காலையில் இருக்கும் காட்சிக்கு செல்வேன் பெரும்பாலும் அந்த வகை பரிசு பெற்ற படங்கள், தேசிய விருது படங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை காட்சிகளில் திரையிடப்படும். அதற்கேற்ப நான் என் பணி நேரத்தை தொடர்ந்து பிறரிடம் சொல்லி மாற்றிக் கொள்வேன். பலருக்கு இது பிடிக்கவில்லை. திரைப்படம் பார்க்க இப்படி தொந்தரவு செய்கிறானே என்பார்கள் . சத்யஜித்ரே, மிருணாள் செண் உட்பட பலரின் படங்களை அப்படித்தான் நான் லிபர்ட்டி திரையரங்கில் பார்த்தேன் .இது ஒரு வகை அனுபவம் . இன்னொரு பக்கம் தமிழ்த் திரைப்படங்களை பார்க்க கூட ஆவலாக இருக்கும் .எப்போது எந்த காட்சியில் தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன என்பது டெக்கான் கிரானிக்கிள் ஆங்கில தினசரியில் விளம்பர பக்கத்தில் 2க்கு 2 இஞ்ச் வடிவத்தில் ஒரு சிறு செய்தியாக வந்து இருக்கும். அதை பார்த்து தமிழ்த் திரைப்படத்திற்கு போகிற திட்டத்தைப் போட வேண்டும். வீடியோ இல்லாத காலம். தமிழ் திரைப்படம் பார்க்க ஞாயிற்றுக்கிழமை தியேட்டரின் காலை காட்சிக்கு செகந்திராபாத் ஹைதராபாத் இரட்டை நகர தமிழர்கள் தவம் இருக்க வேண்டியிருக்கும். ஒரே ஒரு காலை காட்சி பெரும்பாலும் இருக்கும். அப்படம் தமிழ்நாட்டில் வந்து ஐந்து ஆண்டுகளாவது ஆகியிருக்க வேண்டிய கட்டாய நிபந்தனைகளை ஒன்றாய் அதில் திரையிடப்படும் தமிழ் படங்களின் வகை இருக்கும். அப்படித்தான் ஒரு ஞாயிறு காலையில் ரிக்சாக்காரன் திரைப்படம் திரையிட்டிருந்தார்கள். படம் பார்க்கிற மனநிலை இல்லை ஆனால் பொழுது போக வேண்டி இருந்தது. அதனால் டிவோலி திரையரங்கிற்கு சென்று இருந்தேன். ஏதோ ஒரு உந்துதல் காரணமாக பதிவு பெற்று உள்ளே சென்று உட்கார்ந்தேன். பலர் குறிப்பிடும்படியாக தங்களின் அருகில் துணி மூட்டைகளை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் ஹைதராபாத் செகந்திராபாத் பகுதிகளில் இருக்கக்கூடிய சின்னாளப்பட்டி சேர்ந்த சிறு வியாபாரிகள். மிதிவண்டிகளில் துணி மூட்டைகளை வைத்துக் கொண்டு செகந்திராபாத் ஹைதராபாத்தில் வெளிப்புற பகுதிகளுக்கும் தெரிந்த இடங்களுக்கும் சென்று துணி வியாபாரம் செய்பவர்கள். ஞாயிற்றுக்கிழமை கண்டோன்மென்ட் பகுதியில் தமிழக ராணுவ வீரர்கள் குடும்பங்கள் அதையும் இவ்வகைத் துணிகளை வாங்குவார்கள் . பார்வையிடுவார்கள் பெரும்பாலும் தமிழர்கள் இருக்கும் பகுதிகளுக்கு தான் இந்த துணி வியாபாரிகள் செல்வார்கள். ஞாயிற்றுக்கிழமை என்பது அவர்களின் வியாபாரத்தில் மிக முக்கியமான நாளாகும் .அதை விட்டுவிட்டு தமிழ் திரைப்படத்தை பார்க்க அவர்களை அவர்களில் பலர் அங்கு இருப்பது எனக்கு அதிசயமாகவே பட்டது. பிறகு அவ்வகை கூட்டத்தை பலர் பல சமயங்களில் பார்த்திருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். தமிழ் திரைப்படம் பார்க்கும் ஆர்வத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. துணிமூட்டை வியாபாரிகள் என்னை பாதித்தார்கள்.அந்த சமயங்களில் அவர்கள் போல் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் செகந்திராபாத்தில் இருந்தார்கள். பின்னால் நான் என் முதல் நாவலை எழுதுகிற போது அந்த சிறு துணி மூட்டை வியாபாரிகள் குடும்பங்களில் பற்றி எழுதினேன் அதுதான் என்னுடைய முதல் நாவல் மற்றும் சிலர்,, இந்தி எதிர்ப்பு போராட்டம் முடிந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பின் சில இந்திய ஆசிரியர்களுடைய பணி விலக்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட ஒருவர் ( சின்னாளப்பட்டியைச் சார்ந்தவர் )ஹைதராபாத்திற்கு வந்து உறவினர் ஒருவருடன் வியாபாரம் செய்கிற வேலையை செய்து வந்தார். அவர் பின்னால் தெலுங்கானா போராட்டம் ஒன்றில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது காவல்துறையால் தாக்கப்பட்டு அவரின் உடம்பு சீர்கேட்டது. என்ன தான் தமிழ் தெலுங்கு உருது பேச கற்று இருந்தாலும் தெலுங்கு பெண்ணையே கல்யாணம் செய்து இருந்தாலும் ஒரு தமிழன் எப்படி அந்த தெலுங்குப் பகுதியில் அந்நியனாக ஆக உணர்கிறான் என்பதை சொன்ன நாவல் தான் என்னுடைய முதல் நாவல் “ மற்றும் சிலர் “. என் முதல் நாவலை நர்மதா ராமலிங்கமும், அடுத்து வந்த பதிப்புகளை மருதாவும், டிஸ்கவரி புக் பேல்ஸ் வேடியப்பனும் வெளியிட்டார்கள். 0அந்த நாவல் பற்றி ஜெயந்தன், ஜெயமோகன், நகுலன் போன்றோரின் கீழே உள்ள குறிப்புகள் அந்நாவல் வாசிப்பிற்கு உதவும் 1 ஜெயந்தன் : ” மற்றும் சிலர் “ படித்து முடித்தேன். எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை. நாவல் மிக அருமையாக இருக்கிறது. நாவல் ஆதவனின் “காகித மலர்களு”க்கு இணையாக இருக்கிறது. பல அம்சங்களில் உங்கள் உளவியல் அணுகுமுறைகள் ஆச்சர்யமாக இருக்கிறது அத்தனைப் பாத்திரங்கள் அச்சு அசல் என்று எங்களை நம்ப வைக்கிறீர்கள். பிறரின் அனுபவங்களையும் தன் அனுபவ்ம் போல் எழுத வல்லவனே நிலைத்து எழுத முடியும். . of how much details and punches . Congradulations my dear rival ( ஜெயந்தனின் கடிதத்தில் ஒரு பகுதி ) 2 ஜெயமோகன் நாவலுக்குரிய நிதானமும் அழகும் கூடியிருக்கிறது. ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு எழுத்துருவம் உரித்ததாக இருக்கும். புதுமைப்பித்தனுக்கு சிறுகதை, ஜானகிராமனுக்கு நாவல். இப்படி உங்கள் உருவம் நாவல்தானோ என்று இதைப் படித்த போது தோன்றுகிறது. அதிகமான விவரணை, மொத்தமானப் பார்வை போன்ற உங்கள் தனித்தன்மைகள் நாவலுக்கு உரியவை. சிறுகதை போல் ஒரு புள்ளி மீது படியக்கூடியதல்ல நாவலிஸ்டின் பார்வை. இப்படி படிந்தால் நாவலும் சிறுகதை ஆகிவிடும். ( 18வது அட்சக்கோடு, வாடிவாசல் மாதிரி ). உங்கள் பார்வை ஒரே சமயம் பல விசயங்கள் மீது படிவது. இது நாவலாசிரியனின் பார்வை. சிறுகதை உள்ளங்கையில் ஏந்திய படிகக் கல். நாவல் தொலைதூர மலை. மலைக்கே உரிய பிரமாண்டம். கச்சிதமான உருவம் இல்லாமை, தெளிவும் தெளிவின்மையும் பலவித உருவகங்களின் தொகுப்பு போன்ற தன்மை போன்றவை நாவலில் இருக்க வேண்டும். இவை அனைத்தும் உங்கள் நாவலில் உள்ளன. ஆற்றூர் ரவிவர்மாசார் ” நகர வாழ்வின் ஒரு சில்லு துல்லியமாய் பதிவாகியுள்ளது “ என்றார். பாராட்டக்கூடிய முயற்சி. எனினும் நாவல் அடிப்படையான் பிரச்சினை ஒன்றை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் அது இதில் இல்லை.. காலமாற்றம் வாழ்வினொரு தோற்றம். இவை மட்டும் போதாது . இவை அனைத்தும் உங்கள் நாவலில் உள்ளன. தமிழில் நாவலாசிரியர்கள் இருவரே. சுரா...திஜா.. நீங்கள் சிறந்த அடுத்த நாவலை எழுத இயலும். அதற்கு அடிப்படை தேவையான் நாவல் மனம் இருக்கிறது. அனேகமாய் மேற்குறிப்பிட்ட இருவர் தவிர்த்து மூன்றாவது ஆள் நீங்கள் . ( புகழ்ச்சி இல்லை வெட்கம் வேண்டாம் ) ----ஜெயமோகன் 12/8/87 3. நகுலன் சில நாவல்களின் தலைப்புகளே நம்மை அவைகளைப் பற்றி சிந்திக்க வைக்கத் தூண்டுகின்றன. உடனடியாக நினைவுக்கு வருவது சா.கந்தசாமியின் “ அவன் ஆனது “ போலவே சுப்ரபாரதிமணியனின் “ மற்றும் சிலர்”. இந்த நாவலில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இதன் சீரான அனுபவ பூர்வமான் குரலை உயர்த்தாத ஒரு கலைப்பாங்குடைய நடை. அனுபவத்துடன் இயைந்த நடை என்பதால் ஒரு கணம் வந்து போகும் பாத்திரங்கள் கூட நமது நினைவில் தங்கியிருக்கிறார்கள். எந்த ஒரு அனுபவத்தையும் காட்சி பூதமாகப் பார்க்கும் ஒரு நிலையில் நாவலுக்கு ஒரு தரிசன வேகம் வந்து விடுகிறது. படித்ததும் சிந்திக்கச் செய்யும் நாவல்களில் “ மற்றும் சிலரும்” ஒன்று. 0 என் இரண்டாவது நாவலான சுடுமணல் கூட இடம் பெயர்வு சார்ந்த ஒரு படைப்பு என்று சொல்லலாம் ” சுடுமணல் ”நாவலில் தண்ணீர் பிரச்சனை, இந்திய தேசியம் போன்ற மாயைகள் நம்மை அலைக்களித்துக்கொண்டிருக்கின்றன என்பதை ஆராய்ந்தேன்.அந்த தண்ணீர் பிரச்சனை -காவிரி கர்நாடகாவில் விஸ்வரூபம் எடுக்கின்ற போது தமிழர்கள் அங்குஇருக்கும் தமிழர்கள் படும் சிரமங்கள் என் பல படைப்புகளில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன .இந்த சுடுமணல் நாவலில் அப்படித்தான் அந்த பிரச்சனையை மையப்படுத்தி எழுதியிருந்தேன். அதில் இடம்பெறும் மனிதர்களும் களமும் ஹைதராபாத் ஆக இருந்தது. பெங்களூர் போன்ற நகரங்களில் மற்றும் பூகோள ரீதியான விஷயங்கள் என் ஞாபகத்தில் அவ்வளவாக இல்லாததால் நான் அப்போது வசித்து வந்த ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு அந்த நாவலை எழுதினேன். அதில் தண்ணீர் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கிறது .ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு மக்கள் இடம்பெயர்வு செய்ய வேண்டிய கட்டாயமும் அகதிமுகாம்கள் போன்று அமைக்கப்படும் தற்காலிக கூடாரங்களில் தங்குவதும் சில கதாபாத்திரங்களை பாதிக்கிறது . உயிர், உடமைக்காக தமிழரகள் இடம் பெய்ர்கிற அவலம்.இது பத்துக்கும் மேற்பட்ட பதிப்புகள் பெற்ற நாவலாகும் .என்னுடைய முதல் நாவல் மற்றும் சிலர் ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்து வந்து வாழும் தமிழ் குடும்பங்கள் பற்றியக் கதையாக இருந்தது, அதில் இடம்பெறும் முக்கிய கதாபாத்திரம் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி வந்த பின் தமிழகத்தில் இந்திய ஆசிரியர்கள் எண்ணீக்கை குறைக்கப்பட்டு நீக்கப்பட்டு இருந்த சூழலில் ஒருவர் ஹைதராபாத்திற்கு இடம் பெயர்கிற கட்டாயம் ஏற்படுவதை சித்தரித்து இருந்தேன். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சிக்கலாய் இடம்பெயர்வும் இடம்பெயர்வு சார்ந்து மக்கள் நகரும்போது ஆள்கடத்தல் நிகழ்வதும் என்று சொல்லலாம். இந்த பிரச்சனைகள் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமானவை. 0 சுடுமணல் பற்றி சாகித்ய அகாதமி பரிசு பெற்ற தோப்பில் மீரான் அவர்களின் குறிப்புகள் கீழே உள்ளன. சுப்ரபாரதிமணியன் தமிழில் நன்கு அறியப்பட்ட ஒரு இலக்கியப் படைப்பாளி. கடந்த இருபத்தைந்து வருடங்களாகத் தொடர்ந்து ‘கனவு’ என்னும் இலக்கிய இதழை நடத்தி வருபவர். தமிழ் இலக்கிய உலகில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டுள்ள இவர் இதுவரை பதினைந்து நாவல்களையும் பதினைந்து சிறுகதைத் தொகுதிகளையும் உள்ளடக்கிச் சுமார் அய்ம்பது படைப்புகளை வெளிக் கொண்டு வந்துள்ளார். இவருடைய இலக்கிய படைப்பாக்க முயற்சி நாவல்கள், சிறுகதைகள் என்று நின்று விடாமல் கவிதையிலும், விமர்சனத்திலும் கூட விரிவடைந்து தனிப்பட்ட முத்திரை பதித்துள்ளன. இந்த நாவலாசிரியருடைய ‘சாயத்திரை’ என்ற நாவல் ‘சாயம் புரண்ட திரா’ என்ற பெயரில் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. அதனுடைய வங்காள, ஆங்கில, இந்தி, கன்னட மொழிபெயர்ப்புகளும் வெளி வந்துள்ளன. ‘தேநீர் இடைவேளை’ என்ற (சாய இடவேளெ) , பிணங்களின் முகங்கள் ( பிரேதங்களின் முகங்கள்) ஆகிய இவரது இரண்டு நாவல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சுப்ரபாரதிமணியனுடைய பிறந்த ஊர் பனியன் தொழிற்சாலைகள் நிறைந்த திருப்பூராக இருந்த போதிலும் தொடக்க கால நாவல்கள் இரண்டும் அய்தராபாத் பின்னணியில் எழுதப்பட்டவை. தொடக்க காலத்தில் இவர் அங்கு பணியாற்றியதன் காரணமாக அதைப் பின்புலமாக்கி இவர் எழுதியுள்ளார். அதன் பிறகு, வெளியிடப்பட்டவை திருப்பூர் என்ற தொழில் நகரத்தைப் பின்புலமாக்கி எழுதப்பட்டவை. சுப்ரபாரதிமணியன் எழுதியுள்ள பிற இலக்கியப் படைப்புகளோடு தொடர்பு படுத்திப் பார்க்கும்போது சிறிதளவு திறனும், மாறுபட்டதுமாக உள்ள ஒரு பின்புலத்தில் படைக்கப்பட்ட ‘ஓடும் நதி’ விமர்சகர்களுடைய கவனத்திற்கு உள்ளாகி உள்ளது.. கூரிய கதாபாத்திரங்களை உள்ளடக்கிய மிக நல்ல நாவலாக இது அமைந்திருக்கிறது.இது என்சிபிஎச்-கலை இலக்கியப் பெருமன்றத்தின் ஆண்டிற்கான சிறந்த நாவல் பரிசு பெற்றது. இவருடைய இலக்கியப் படைப்புகள் முழுவதும், வாழ்க்கையில் காணப்படுகின்ற மாற்றங்களையும், தகர்வுதலையும், நிராசைகளையும், அனுபவித்துக் கொண்டே வாழ்ந்து வருகின்ற மனிதர்களுக்குரிய நியாயங்களை முன் நிறுத்திக் கூடியவையாக உள்ளன. உலகமயமாதல் சூழ்நிலைமையில் தொழில் நகரங்களில் வாழ்ந்து வரும் மக்களுடைய நரக வேதனை மிகுந்த வாழ்க்கையை எதார்த்தமாகச் சித்தரிக்கக் கூடியவையாக இவரது படைப்புகளின் நோக்கமாகும். தொழிலாளர்கள் கொடுமையான முறையில் சுரண்டலுக்கு உள்ளாகும் நவீன முதலாளித்துவத்திற்கு, புதிய அடிமைத் தனத்திற்கு எதிராக நின்று, தொழிலாளர்களுக்கு விடுதலை வேண்டி உரத்த குரல் எழுப்புவது இவருடைய படைப்புகளின் வாயிலாக இவர் மக்களுக்குச் செய்யும் பணியாக உள்ளது. இந்த வகையில் இவர் ஒரு தீவிரமான இலக்கியப்படைப்பாளியாக விளங்குகிறார். மனிதர்களுடைய வாழ்க்கை நிலைப்பாடு என்ற நிலையில் அவசியமான தேவையாக உள்ள உழைப்புச் சக்தியைக் குத்தகைக் கம்பனிகளுக்கு அடகு வைக்கும் செயலில் கூட்டாகச் சேர்ந்து செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும், மக்கள் விரோத சக்திகளுக்காய் எதிராகப் போராடும் அமைப்புகளுக்கு ஆதரவாகவும் காணப்படும் நிலைப்பாடுகளை அடையாளப்படுத்தும் விதத்தில் இவரின் படைப்புகள் அமைந்துள்ளன.நதிநீர்பிரச்சினையால் பாதிக்கப்படுகிற சமூகம் பற்றி படைக்கப்பட்டுள்ள நாவல்தான் “ சுடுமணல்”. .. 0 நகரம் 90 : ஹைதராபாத் பற்றிய என் மூன்றாம் நாவல் * சுஜாதா தேர்வு செய்து பரிசளித்தது * குமுதம் ஏர் இந்தியா இலக்கியப் போட்டியில் பரிசு பெற்று இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யும் வாய்ப்பைத் தந்த படைப்பு . அந்த அனுபவம் “ மண்புதிது “ என்ற தலைப்பில் காவ்யா பயண நூலாகவும் வந்தது. * குமுதம் இதழில் தொடராக வந்தது * மதவாதத்தை அரசியல்வாதிகள் தங்கள் லாபத்திற்காக பயன்படுத்தும் போக்கையும் மதக்கலவரத்தில் அப்பாவி பொதுமக்கள் பலியாவதைப் பற்றியுமான நாவல். * மதவாதத்திற்கு எதிரான முக்கிய இலக்கியப் பதிவு இந்நாவல் 0 இந்த மூன்று நாவல்களையும் ஒரே தொகுப்பாக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
இன்னும் ஞாபகமிருக்கிற அந்த “ இலக்கியச் சிந்தனைப் பொழுது…..” ------------------------------------ சுப்ரபாரதிமணியன் --------------------------------------------------------------------- சென்னை “ இலக்கியச் சிந்தனை ” அமைப்பு சமீபத்தில் பொன்விழாவைக் கொண்டாடியிருப்பது ஒரு சாதனை. சிறுகதைகளின் மேன்மை சார்ந்து இவ்வளவு ஆண்டுகள் இரு அமைப்பு இயங்குவது சாதனைதான். சிறுகதையாளர்கள் நோபல் பரிசு போன்ற உயரிய விருதுகளில் கவனிக்கபப்டுவதில்லை என்ற ஆதங்கம் பலருக்கு உண்டு . ஆனால் அலிஸ்மன்றோவுக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. அவர் ஒரு (பெரும்) சிறுகதையாளர். எனக்கு “இன்னும் மீதமிருக்கிறப் பொழுதுகளில்.. “ என்ற சிறுகதைக்காக இலக்கியச் சிந்தனைப் பரிசு கிடைத்த போது அப்படியொரு பெரும் பரிசு கிடைத்த மகிழ்ச்சி இருந்தது. எழுத்துலகின் ஆரம்பகாலம் .என்ற காரணம் நான் பெரும் குறிப்பிடத்தக்க பரிசாய் அப்போது அது அமைந்திருந்தது. எஸ். வி. ராஜதுரை அவர்களை ஆசிரியராகக் கொண்டு வந்த “ இனி ..” என்ற இதழில் அக்கதை வெளிவந்தது. நான் அப்போது ஹைதராபாத்தில் வசித்து வந்தேன். பரிசு பெற்றதையொட்டி ஊருக்கு வர முடிந்த மகிச்சியும் கூட சேர்ந்து கொண்டது இன்னொரு காரணம். " இனி " இதழ் தமிழ் சிற்றிதழ் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இதழ். அழகான அச்சமைப்பு, நேர்த்தியான வடிவம் . நலல ஓவியங்களுடன் நேர்த்தியாக் அக்கதை அச்சிடப்பட்டதை பார்த்த கணத்தில் எல்லையில்லாத ஆனந்தத்தில் திளைத்தேன் என்பதே உண்மை. நெசவாளர் குடும்பத்துத் திருமணங்களில் டர்பன் கட்டுவதை தொழிலாளச் செய்து வந்த ஒருவர் கால மாறுதலில் நசிந்து போய் புது மாறுதல்களை மன அவஸ்தைகளுடன் பார்க்கும் அனுபவமாய் அமைந்திருந்தது. சாதாரண அனுபவங்களாய் நினைத்து நான் பதிவு செய்தது முக்கிய பண்பாட்டுக்கூறுகளாகவும் அமைந்து பெரும் வரவேற்பும் கவனிப்பும் கொண்ட கதைகளாய் அமைந்திருந்ததில் இக்கதைக்கும் " ஒவ்வொரு ராஜகுமாரிகளுக்கும் " என்ற கதைக்கும் இடமிருக்கிற்து. சென்னை விழாவில் கலந்து கொள்ளப் போகிறோம் என்றப் பரபரப்பு திரு .பாரதி அவர்களின் கடிதம் வந்தது முதல் ஒட்டிக் கொண்டது. அமரர் செ. யோகநாதனிடம் முதலில் தொலை பேசியில் இதைப் பகிர்ந்து கொண்டேன். மாலன், திகசியின் வாழ்த்து ரொம்பவும் உற்சாகமூட்டியது. ( அப்போது “ தீராநதி ‘’யில் வந்த எனது சுற்றுச்சூழல் கட்டுரைகள் பற்றி திகசி தொலை பேசியில் பேசும் போது சுற்றுச்சூழலைப் பொறுத்த அளவில் நீங்கள் ஓர் இயக்கமாகச் செயல்படவேண்டும் என்பார். அதைத்தான் அப்போதும் அவர் சொன்னார். இயக்க ரீதியான செயல்பாடுகளில் அவருக்கு என்றைக்கும் நம்பிக்கை இருந்திருக்கிறது. ) ராஜேஸ்வரி திருமணமண்டபத்தில் தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்கள் கலந்து கொள்ள மேடையில் இடம் கிடைத்தது பெரும் பாக்யமாகப் பட்டது. சிறுகதை படைப்புக்கான அங்கீகாரம் அது என்பதை உணர்த்தியது. ஒடிய, ஆங்கில எழுத்தாளர் மனோஜ் தாஸ் பரிசை வழங்கினார். அவர் எழுத்துக்களை நான் ஆங்கில மொழியில் அப்போது அதிகம் படித்ததில்லை. சில மொழிபெய்ர்ப்புக்கதைகளை பாண்டிச்சேரி ராஜ்ஜா அவர்களின் மொழிபெயர்ப்பில் படித்திருந்தேன். இலக்கியச் சிந்தனைப் பரிசு சிறுகதை படைப்புக்கான அங்கீகாரம் அது என்பதை உணர்த்தியது. வேர்த்து விருவிருத்த முகத்துடன் அவரிடமிருந்து பரிசு பெற்ற புகைப்படம் மனதிலிருக்கிறது. புகைப்படப் பதிவு என்பது அப்போது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இன்றைக்குத் தெரிந்திருக்கிறது. ( சமீபத்தில் மரணமடைந்தார். இந்திய எழுத்தாளர்களில் முக்கியமானவரான மனோஜ்தாசின் சில கதைகள் மிருகங்களுடனான மனித உறவுகளை விளக்குவதற்குப் பயன்பட்டதை அவரின் சில சிறுகதைகளை படிக்கையில் உணர்ந்திருக்கிறேன்.புலியொன்றை வளர்த்து வருபவன் சுதந்திரம் என்பது அது காட்டிற்குள் திரிவது என்பதைக் கண்டு கொண்ட ஒருவன், அதை காட்டிற்குள் கொண்டு விடச் செய்கிற முயற்சிகள் தோற்றுப் போவதைக் காண்கிறான். முதலை ஒன்று ஒரு பெண்ணின் மீது மையல் கொண்டு அவளை இழுத்துச் சென்று குடும்பம் நடத்துகிறது. அது மனித உருவாகவும் ஆகும் இயல்பு கொண்டது. அது ஊருக்குள் வந்து இருக்கும் போது ,கொல்லப்படுகிற போது அவற்றின் உறவில் ஏற்படும் அதிர்வுகளை இன்னொரு கதை பேசுகிறது. ஆந்தை பற்றிய ஒரு கதையின் சித்தரிப்பில் ஆந்தை மூடநம்பிக்கைகளின் குறியீடாகவும், கடவுளின் நேரடி பிரதிநிதியாகவும் ஊருக்கு வந்து மக்களை மிரட்டுவதை ஒரு கதையில் சித்திரித்திருக்கிறார். அதை ஜமீந்தார் ஒருவர் சுட்டுக் கொல்லும் போது அந்த ஊர் பயத்துள் மூழ்கிப் போவதை அக் கதையில் சொல்கிறார். ) . லட்சுமணன் இனிமையாக வரவேற்றார். லட்சுமணன் அவர்கள் முந்தைய மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் சகோதரர் என்பது அப்போது தகவலாய் கிடைத்திருக்கவில்லை எனக்கு. அ.சா. ஞானசம்பந்தன் அவர்களின் பேரூரையைக் கேட்கும் அரிய வாய்ப்பும் ஏற்பட்டது. பழுத்த ஞானப் பழம் அவர். அ.முத்துலிங்கம் அவர்கள் நோபல் பரிசு பெற்ற அலீஸ்மன்றோ பற்றிய ஒரு கட்டுரையில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார் : அவரிடம் நான் ஒருமுறை கேட்டேன். ’உங்களுடைய சிறுகதைகளைப் படிக்கும்போது அழகான வசனங்களின் கீழே அடிக்கோடிடுவேன். ஆனால் சமீபத்தில் நீங்கள் ஓரிடத்தில் உங்கள் கதைகளில் அழகான வசனங்கள் வரும் இடங்களை வெட்டிவிடுவீர்கள் என்று படித்திருக்கிறேன். அது உண்மையா?’ அவர் சொன்னார். “ அழகான வசனம் அல்ல. கெட்டிக்காரத்தனமாகத் தோன்றும் வசனம். அல்லது திரும்பத்திரும்ப மினுக்கப்பட்ட அலங்காரமான வசனம். அவற்றை நான் விரும்புவதில்லை. அகற்றிவிடுவேன். காரணம் ஒரு கதையை சொல்லும்போது அந்தக் கதைதான் முக்கியம். ஓர் அலங்காரமான வசனம் வாசகருடைய கவனத்தை கதையின் மையத்திலிருந்து திருப்பிவிடும். ஆனால், கதை முடிவை நோக்கிச் செல்லும்போது வசன அமைப்பு முக்கியமாகிறது. அந்த வசனம் சொல்வது அதில் உள்ள வார்த்தைகளின் சேர்க்கையிலும் பார்க்க அதிகமாக இருக்கவேண்டும். அதை வரவேற்பேன். ஒரு வசனம் அது சொல்ல வந்ததிலும் பார்க்க கூடச்சொல்லவேண்டும். ஆனால் பூச்சு வேலை எனக்கு பிடிக்காது.” இலக்கியச் சிந்தனையும் பூச்சும், மினுக்கமும், வண்ணமும் சேர்க்காமல் இயல்பாக இன்னும் தன் பணியைச் செய்து வருவது மகிழ்ச்சி தருகிறது. ஆனால் தற்போது இலக்கியச் சிந்தனை மாதக் கூட்டத்திற்கு வருவோரின் எண்ணிக்கை வருத்தமே கொள்ளச் செய்கிறது.நான் நடத்தி வரும் “ கனவு “ இலக்கிய காலாண்டிதழ் சார்ந்த மற்றும் கனவு இலக்கிய வட்டக் கூட்டத்திற்கு வரும் நபர்களின் எண்ணிக்கையும் அவ்வாறே உள்ளது, ஆனாலும் இலக்கியச் சிந்தனை தொடர்ந்து வெகுஜன இதழ்களில் நசிந்து வரும் சிறுகதைக்கு ( அதே சமயம் சிற்றிதழ்களில் வரும் அதிதீவிரமான, முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகள்) ஊக்கம் தருவது டானிக் ஆகவே கொள்ளலாம். இலக்கியச் சிந்தனை தன் பரிசிலனைக்கு இலக்கிய இதழ்களை பெருவாரியாக எடுத்துக் கொள்ளாததன் குறையையே சமீபத்தில் அவதானித்து இவ்வாறு சொல்கிறேன். பள்ளியில் பெற்ற முதல் பரிசு ஓரடி ஸ்கேல்தான். ஆனால் அது எப்போதும் பெரிய பரிசாகப்பட்டிருக்கிறது. அது போல் இலக்கியச் சிந்தனையின் பரிசும் பல அடிகள் தாவிப் பாய உதவியிருக்கிறது என்பது உண்மை.இன்னும் இலக்கியச் சிந்தனை உயிர்ப்புடன் இயங்கி வருவது ஆறுதல் .அதன் அடையாளம் ஏப்ரல் மாதப் பொன்விழாக்கூட்டமும் எழுத்தாளர்களுக்கான அங்கீகாரமும். 500 பக்க அளவில்கடந்த 50 ஆண்டுகளின்- ஆண்டின் சிறந்த சிறுகதைக்கான பரிசு பெற்ற 50 சிறுகதைகளைத் தொகுப்பாக்கிக் கொண்டுவந்திருப்பதும் சாதனைதான் . சுப்ரபாரதிமணியன்
சுப்ரபாதிமணியனின் திரைக்கதை நூல்கள் வரிசை - மதுராந்தகன் சுப்ரபாதிமணியனின் . திரைப்பட கட்டுரை நூல்களில் திரைப்பட ரசிகனுக்கு, இலக்கிய வாசகனுக்கு நல்ல திரைப்படம் பற்றிய வழிகாட்டியாக இருக்கும். ( காவ்யா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ” திரைப்படம் என்னும் சுவாசம் “ என்ற 400 பக்க நூல் இதற்குச் சாட்சியம் ) . திரைவெளி போன்ற நூல்களும் இதற்கு சாட்சி ( உயிர்மை, நிவேதிதா பதிப்பக வெளியீடு ) தற்போது அவரின் திரைக்கதை நூல்கள் ஏழு வெளிவந்துள்ளன. ஆரம்பத்தில் நாவல்களையும் சிறுகதைகளையும் எடுத்து திரைக்கதைகளாக்கும் முயற்சியில் மூன்று நூல்களை வெளியிட்டு இருக்கிறார்..சுமார் 30 திரைக்கதைகள் இதில் உள்ளன. இந்த முயற்சியில் அவரின் படைப்புகளைத்தாண்டி தொடர்ந்து ஏழு நூல்களை வெளியிட்டுள்ளார். . திரைப்பட தயாரிப்பாளர்கள் கதைக்காக அலைய வேண்டியதில்லை. ஏழு பாகங்களாக வந்துள்ள அவர்களின் நூல்களை படித்தால் திரைப்படத்திற்காக கதை இல்லையே என்று கவலைப்பட தேவையில்லை. இவரின் கதைகள் ஏற்கனவே திரைப்பட பல தயாரிப்பாளர்களால் திருட்டுத்தனமாக கையாளப்பட்டுள்ளது. ஒரு படைப்பாளியின் மூலப்படைப்பை எடுத்து திரைக்கதையாக்கம் செய்யும் போது பல சிதைவுகள் ஏற்படும். நாவலின் மையம் சிதைந்து போகும். அல்லது பல முக்கியமான, நுணுக்கமான கதாபாத்திரங்களும் விடுபட்டுப் போகும். இந்த இந்த நிலையில் எழுத்தாளனே அவனின் படைப்புக்கு திரைக்கதை எழுதும் போது இந்த சிதைவு இருக்காது. ஓரளவு படைப்பாளிக்கும் திருப்தி ஏற்படும். திரைக்கதையில் வேறு ஒரு கோணமும் கிடைக்கும். இந்த வகையில் சுப்ரபாரதி மணியன் அவரின் எல்லா நாவல்களையும் திரைக்கதைகளாக்கி விட்டார் . இது தமிழ் இலக்கிய உலகில் ஒரு சாதனை என்று சொல்லலாம். அதைத்தவிர பல புதிய களன்களில் திரைக்கதைகள் என்று மொத்தமாய் 62 திரைக்கதைகள் இந்த ஏழு நூல்களில் இடம் பெற்றுள்ளன. படைப்பாளிகள் திரைக்கதை முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் தங்கள் படைப்புகளை எடுத்துக் கொண்டு திரைக்கதையாக்கும் முயற்சி குறைவுதான். காரணம் தயாரிப்பாளரும் இயக்குனரும் கேட்கும் விசயத்தைதான் அவர்கள் திரைக்கதையாக்குகிறார்கள். வியாபாரரீதியாக அதுதான் தேவை என்று நினைக்கிறார்கள். அவர்களின் படைப்புகளை திரைக்கதைகளாக்கும் போது கூட வணிக ரீதியாக பல விசயங்களைச் சேர்த்துக் கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். அப்படித்தான் படைப்பாளிகளின் திரைக்கதையாக்க முயற்சிகள் உள்ளன. ஆனால் சுப்ரபாரதிமணியன் அவரின் படைப்புகளை எடுத்துக் கொண்டு படைப்பின் மையம் அதிகம் சிதறாமலும், வணிக அம்சங்களை அளவோடு எடுத்துக் கொடும் செய்திருக்கிறார். அவரின் நாவல்களைப் படிக்கிற வாசகன் திரைப்பட வடிவத்திற்காக அவற்றை யூகித்துக் கொள்வது சாதாரணம் . அந்த யூகிப்பின் வடிவமாக இந்த திரைக்கதைகள் உள்ளன. இந்த ஏழு தொகுப்புகளில் அவரின் வெளிவ்ந்த படைப்புகள் தவிர வெளிவராத சில படைப்புகளையும், புது மையங்களையும் திரைக்கதை வடிவத்தில் தந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திரைப்பட தயாரிபாளர்கள், திரைக்கதாசிரியர்கள், இயக்குனர்கள், திரைக்கதைகளில் ஆர்வம் கொண்ட வாசகர்களுக்கும் ஒருமித்த வகையில் பயனளிக்கும் இந்த முயற்சிகளை பிற படைப்பாளிகளும் தொடர வேண்டும். (ரூ 280 சுப்ரபாதிமணியனின் திரைக்கதை நூல் வரிசை 7 மொத்தமாய் 7 திரைக்கதை நூல்களும் பெற ரூ:2000 ( 89393 87296 நிவேதிதாபதிப்பகம், சென்னை வெளியீடு) Thanks : Puthagam pesuthu
மலையாள கவி பி ரவிக்குமார் உரை : சுப்ரபாரதி மணியனின் ” சாயத்திரை “ மற்றும் “ மற்றும் சிலர் “ போன்ற நாவல்கள் மூலமும் கனவு இலக்கிய இதழ்கள் மூலமும் நான் நன்கு அறிந்திருக்கிறேன். நண்பர்கள் பலர் அவை பற்றி பேசி இருக்கிறார்கள். நா.சுகுமாரன் அவர்களே நிறைய சொல்லி இருக்கிறார்கள்’ சுப்ரபாரதி மணியனின் தொடர்ந்த செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது தமிழ் கவிதைகள் பற்றி நான் ஆரம்பத்தில் இருந்து நகுலன், தட்சிணாமூர்த்தி போன்ற வழியாக தெரிந்து கொண்டிருக்கிறேன். தமிழ் மக்களின் வாழ்க்கை எளிமையானது. வெளிப்படையானது. அதை அவர்களின் படைப்புகளும் வெளிப்படுத்துகின்றன. தமிழ் ஆதி பாஷையாக கொண்டவர்கள் நாங்கள். அந்த வகையில் தமிழை போற்றுவதும் தமிழ் படைப்புகளை மனதில் கொள்வதும் எப்போதும் எங்களுக்கு இருந்திருக்கிறது.. நான் என் 70 வயதில் நசிகேதன், பட்டினத்தார், எம்.டி ராமநாதன் என்ற தலைப்புகளில் மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்.சுப்ரபாரதிமணியன் நிறைய எழுதியுள்ளது மகிழ்ச்சியானது. பூஜாப்புரை தமிழ்ச் சங்கம் 75 ஆவது ஆண்டு விழாவை எட்டி உள்ளது. அவர்கள் முன்பு நடத்திய தமிழமுதம் என்ற இதழ் குறிப்பிடத்தக்கது. நல்ல தமிழ் எழுத்தாளர்களையும் மலையாள எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்திய இதழாகும். மலையாள கவி பி ரவிக்குமார் சுப்ரபாதிமணியின் 9 கவிதைகள் நூலை வெளியிட்டு திருவனந்தபுரத்தில் பேசியது சுப்ரபாரதி மணியனின் 9 திரைக்கதைகள் நூல் மலையாளத்தில் வெளிவந்திருக்கிறது ரூபாய் நூத்தி எண்பது கனவு 9486101003 ( முகநூலில் இருந்து )