சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 24 பிப்ரவரி, 2016

நூலின் முன்னுரை:சுப்ரபாரதிமணியன்
பறந்து மறையும் கடல் நாகம் : ஜெயந்தி சங்கர் கட்டுரைகள் நூல்

==========================================================
நான் வெகு சமீபத்தில்  பார்த்த ஒரு சீன ஆவணப்படத்தை இங்கு நான் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
சீனாவில் தற்போதைய  மக்கள் தொகையில் 32 மில்லியன் பையன்கள் பெண்களைவிட அதிகமாக  ( இருபது வயதிற்குட்பட்டவர்களில்)  அதிர்ச்சியைத் தருகிறது.இந்த விகிதம் இந்தியாவிலும் காணப்படுவதிப்பற்ரிய்ச் செய்திகள் சமீபத்தில் அதிகரித்திருக்கின்றன. கருச்சிதைவும், குழந்தைகளின் வளர்ப்புச் சிரமங்களும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்திருக்கிறது. திருமண வயதையொட்டிய ஆண்களின் பெண் தேடலில் இது சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. பெண் குழந்தைகளை வீட்டில் பள்ளி வயதிற்கு முன் பூட்டி வைத்து பாதுகாப்பது, பள்ளிக்குப் போக விடாமல் வீட்டிலேயே இருக்கச் செய்வது, என்று பல அசாதாரண நடவடிக்கைகளும்  சில சமயங்களில் காணப்படுகிறது.

     பள்ளி வகுப்பறையில் பிறக்காத குழந்தைகளின் ஆவிகள் உலவுவது பற்றிய பலகதைகள் உலவுவதாகச் சொல்கிறார்கள். சீனர்களின் சம்பிரதாய மூடநம்பிக்கைகளுக்கு அவை நல்ல உரமாக உள்ளன.
அதே சமயம் ஆண்கள் துணை இல்லாமல், திருமணம் செய்யாமல் வாழும் பெண்களின் எண்ணிக்கை ஜந்து ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் 51% ஆக இருந்தது.4 கோடி இளம் அமெரிக்கப் பெண்கள் தனித்தே வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள்.

சீனாவிலும் இரண்டு கோடிக்கு அதிகமாக இளம் பெண்கள் திருமண வாழ்க்கையைத் தேர்வு செய்யாமல் தனித்து வாழ்கிறார்கள். இப்படி திருமண வாழ்க்கையை மேற்கொள்ளாமல் வாழ்ந்து தங்களின் முதுமையை ஆடைந்திருக்கும் முதியவர்கள் பற்றி  வெளியாகியிருக்கும் ஆவணப்படம்
  Living without Men’   சீனாவில் இருந்து வெளிவந்துள்ளது.
இப்படத்தில் தொழிலாளர்களாக ஜவுளி மில் தொழிற்சாலைகளுக்கு பெண்கள் இருபது வயதிற்குப் பிறகு செல்ல நேர்கையில், திருமணம் செய்து கொண்டால் மில் வேலை பறிபோகும் என்பதால் பலர் வேலைக்குப்போய் சம்பாதித்து, குடும்பத்தைக் காப்பாற்றும் உந்துதலில் திருமணம் செய்து கொள்ளவில்லை என்கிறார்கள். கணவனாக வருகிறவன் குடிகாரனாக, தறுதலையாக இருந்தால் வாழ்க்கைச் சீரழிந்துவிடும் என்று பயப்பட்டும் சிலர் திருமணத்தைத் தவிர்த்ததால் இந்த தள்ளாத வயதை அடைந்துவிட்டதாக கூறுகிறார்கள்.
இந்த படத்தில் இடம் பெற்ற முதியவயதுப் பெண்கள் சாப்பாடு கேரியருக்காக காத்து சலிக்கிறார்கள். சதுரங்கமோ, உருட்டை ஆட்டமோ ஆடி பொழுதைக் கழிக்கிறார்கள். ஒரு முதியவள் ஆக்ஸிஜன் சிலிண்டரை தயாராக வைத்துக் கொண்டு மூச்சுத் திணறும் போது ஆக்ஸிசன் முகமூடியை அணிந்து கொள்கிறாள். மருத்துவ ஊசிபோட, குளுகோஸ் செலுத்த வரும் தாதியர்களுடன் பேசுவது சிலருக்கு பொழுதுபோக்காக இருக்கிறது. தொடர்ந்து புகைபிடிப்பவர்களும் இருக்கிறார்கள். துணிகளைக் காயப்போட்டு அவற்றோடு உறவாடும் முதியவர்களும் இருக்கிறார்கள்.
சீன பெண்களின் திருமணத்தின்போது தலைகோதுவது, தலைபின்னிவது ஒரு முக்ய சடங்காக இருக்கிறது. இந்த தலை பின்னும் சடங்கை நிராகரித்தவர்களே இன்று முதிய இல்லங்களில் தங்களின் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சடங்கை நிராகரித்தபின் அவர்களை திருமணத்திற்குக் கூப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். வசந்தகாலத் திருவிழாக்களில் இப்பெண்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை. பிறரைக் காதலிப்பதாக அறிவிக்கிறப் பெண்களும் ஓதுக்கப்படுகிறார்கள்.
           ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண்ணாவது இப்படி திருமணத்தை நிராகரிப்பவளாக இருப்பது ஒரு சடங்காகி விட்டது. இது ஒரு ‘பேஷன்போல பெண்கள்  மத்தியில் இருந்த காலமுண்டு. எங்கள் குடும்பத்தில் மூன்றாவது தலைமுறையாகப் பெண்கள் திருமணத்தை நிராகரிப்பது நடந்திருக்கிறது. இந்த தொண்ணூறு வயதில் எனக்கு இப்போது நப்பாசையாக இருக்கிறது. திருமணம் செய்து கொண்டிருக்கலாமே என்று நாற்பது வயதிற்கு மேல் என்னுடன் இருந்தவர்கள் , மனைவியை இழந்தவர்கள், அரசியல் கைதிகள் போன்றோரை திருமணம் செய்திருக்கிறார்கள்”  என்கிறார் ஒரு முதிய பெண். அவள் வாயில் சிகரெட் புகை.

ஜடைபின்னும் சடங்கை நிராகரித்த இந்தப் பெண்கள் முதியவர்களாகி காலத்தைக் கடத்துகிறார்கள். ஜடை பின்னும் சடங்கு திருமண இரவிற்கு முந்தின நாளில்  நடைபெறுவதாகும். புது ஆடைகள் உடுத்திய மணப்பெண் நிலாவொளியில் உட்கார்ந்து கொள்ள இது நடக்கிறது. அல்லது பெரிய கண்ணாடி முன் உட்கார வைத்துச் சடங்காகிறது. ஜடை பின்னலின் போதான முதல் முடிச்சு திருமண உறவை வலியுறுத்துகிறது. இணைந்து வாழ வேண்டியதன் அவசியத்தை இரண்டாம் பின்னல் முடிச்சு வலியுறுத்துகிறது. குழந்தைகளை நன்கு வளர்க்கிற அவசியத்தையும், முதுமையில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டியதை பின்முடிச்சுகள் தெரிவிக்கின்றன.

முதிய வயதில் முடி உதிர்ந்து நரைத்தக் குட்டை ஜடையைத் தொட்டபடி சிலர் நினைவுகளில்  அப்படத்தில் அமிழ்ந்து போகிறார்கள்..
         சீனாவைப் பற்றிய தகவல் என்ற ரீதியில் இது ஒரு சாம்பிள்.
                            சீனாவைப்பற்றி  , அதன் வரலாறு, கலாச்சாரம், தொன்மம் , இலக்கியம்  என்று ஆயிரக்கணக்கானப் பக்கங்கள் எழுதியிருப்பவர்  ஜெயந்தி சங்கர் அவர்கள். . சீனாவை இது போல் திரைப்படங்கள்,  லூசுன் போன்றோ ரின் எழுத்துக்கள் மூலம்  சொற்பமாகவே அறிந்திருக்கிறேன். சிங்கப்பூர் சென்ற போது அங்கு தென்பட்ட சீனப்பெண்களும், அவர்களின் குடும்பத்தினரும்  அவர்களைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் ஏற்படுத்தியது. கொஞ்சம் எழுத ஆசை வந்தது. 15 வருடங்கள் முன்பு இணைய தளம் சரியாக புழக்கத்தில் இல்லாத காலம் . நண்பர் ரெ.பாண்டியன் சில தகவல்களைக் கொடுத்திருந்தார்.(இப்போது எங்கிருக்கிறீர்கள் நண்பரே...சிங்கப்பூரிலா) ஒரு குறு நாவலுக்கு முயன்று விட்டு விட்டேன்.ஜெயந்தி சங்கர் தொடர்ந்து சீனா சமாச்சாரங்களை எழுதும் போது சந்தோசமாக இருக்கிறது. கம்யூனிச நாடு என்று மார் தட்டிக்கொண்டிருந்தது .இப்போது வேறு போர்வையில் முதலாளித்துவ நாடாகிவிட்டது. அள்ள அள்ள தகவல்கள். தோண்ட தோண்ட சுரங்கம். அவ்வளவு கொடுத்து விட்டார் ஜெயந்தி சங்கர் .சீனா விஜயம், சீனா அரசாங்க விருது என்று நாமும் காத்திருப்போம். முன்னதாக வாழ்த்தையும் சொல்லி வைப்போம்.அவையெல்லாம் அவரின் எழுத்திற்கும் உழைப்பிற்கும் தகுதியானதுதான். சிங்கப்பூர் இலக்கியம் அங்கு வாழும் தமிழர்களின் வாழ்க்கையைச் சரியாக  பிரதிபலிக்கவில்லை., பதிவு செய்யவில்லை என்ற் குற்றச்சாட்டு ஒரு காலத்தில் இருந்த்து. அதைப் போக்க அக்கறை எடுத்துக்கொண்டு சில நல்ல படைப்புகளைத்தந்திருப்பவர் ஜெயந்தி சங்கர். அதிலும் குறிப்பாக அவரின் நாவல்கள் சரியாக கவனிக்கப்பட வேண்டியவை. புலம்பெயர்ந்த் அங்கு வாழும் தமிழர்களின்  சூழலை பதிவு செய்திருப்பதாகட்டும், இன்றைய உலகமயமாக்கல் சூழல் பாதிப்பு கலாச்சாரதளத்தில் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகளாகட்டும் அவரால் சரியாகவே நாவல்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் நான் எழுதிய ஒரு கட்டுரையை இடைசெருகலாகப்பயன்படுத்திக் கொள்கிறேன் இங்கே. தலைப்பு:.      சிங்கப்பூரில்  புத்தர்
     
ரஜினிகாந்த் சிங்கப்பூரில் இருக்கும் வரை சிங்கப்பூர் ஆச்சர்யங்களுக்குக் குறைவில்லைதான். 15 , 25 சிங்கப்பூர் டாலர் செலவழித்து எந்திரன் படத்தைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் , நூறு டாலர் செலவழித்து தேக்காவிலும்  மற்ற இடங்களுலும் அம்மன், முருகன் கோவில்களில் விசேச   பூஜை செய்து திருப்தி அடைந்திருக்கின்றார்.  ரஜினி தெய்வங்களுக்கு நன்றி சொல்கிறார். ரஜினி ரசிகர்கள் அவரை தெய்வம், புத்தர் என்று வர்ணிக்கிறார்கள்.  . ஜெயகோ.
      சிங்கப்பூர் ஜெயந்தி சங்கரின் மொழிபெயர்ப்புப் பணிகளைத் தொடர்ந்து கவனிக்கிறபோது இன்னும் ஆச்சயம் குறையாது. வாழுமிடத்து கலாச்சாரம், நம்பிக்கை, தொன்மம் முதற்கொண்டு பலவற்றை கிரகித்து, மொழிபெயர்த்து அவர் இருப்பை நியாயப்படுத்த அவர் செய்யும் முயற்சிகள் ஆச்சர்யப்பட வைப்பவை. சீன நாடோடிக் கடைகள் முதற்கொண்டு தொன்மக்கதைகள் வரை பல  பாலியல் உவ்வே சமாச்சாரங்களை  மிகவும் எளிமையாக மொழிபெயர்த்து  வரும்   அவரின் மொழிபெயர்ப்பு  உட்பட   நூல்களின் பட்டியல் 25 தொடும் சீக்கிரம். அவரின் கடைசி இரண்டு நாவல்கள் மனப்பிரிகை, குவியம்  சரியாகக் கவனிக்கப்பட்டிருக்க வேண்டியவை..சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்க்கையை அவ்வளவு கூர்மையாக அவதானித்து நேர்கோட்டுப்பாணி தவிர்த்த வடிவத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.  அவரின் வாழும் புத்தர்  “  என்ற  சமீபத்திய  மொழிபெயர்ப்புக் கதை இப்படி முடிகிறது    ( வடக்கு வாசல் ஜுன் 2011 ) : “  நிச்சயமாக இவ்வுலகில் தெய்வங்கள் இருக்க முடியாது. ஆனால் முட்டாள்தனத்தினால் எதன் மீதாகிலும்  முக்கிய நம்பிக்கை வைக்கவும்  மனிதன் தெய்வங்களை உருவாக்குகிறான். சக மனிதர்கள்  அவனை வண்ங்கும் போது தானும் தெய்வம்தான் என்றே  எண்ணத்தலைபடுகிறான்.  தெய்வமாக நடந்து கொள்ளவும்  ஆரம்பிக்கலாம். மனிதர்களும் முன்பை விட அதிகமாக அவனினை நம்பவும் பைத்தியமாக வழிபடவும்  ஆரம்பிக்கலாம். மக்களுக்குக் தெரியாது அவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பது. சொல்லப்போனால் தெய்வமாக்கப்பட்டிருக்கும் மனிதனுமே ஏமாற்றப்பட்டிருக்கிறான். ஆனால், காலம் செல்ல அம்மனிதன் வேறு வழியில்லாமல் தெய்வத்தைப்போலவே நடக்க முயற்சிக்க வேண்டியதிருக்கிறது. இது மக்களை மேலும் முட்டாளாக்கும் வேலை. இதே போன்று ஏமாற்று வேலைகளில் பல்லாண்டுகள் கழிந்து போயின.  அவ்வருடங்கள்  அபத்தங்கள்  நிறைந்தவை. அபத்த வருடங்கள் எல்லாம் போனது போனதுதான். அதே மக்களால்தான் வரலாறும் எழுதப்படும் என்பதுதான் மிகவு வேடிக்கை.ரஜினியை   ரசிகர்கள் மனிதனாயும், தெய்வமாயும் பார்க்க சமீப சந்தர்ப்பங்கள் வாய்த்திருக்கின்றன.
     ஜெயந்தி சங்கர் தொடர்ந்து அசுரத்தனமாக இயங்குவது  சந்தோசமும்,  பொறாமையும் தருகிறது. எழுத்துச்  செயல்பாட்டில் தொடர்ந்து அக்கறையும், தீவிர மூச்சுச் சிந்தனையும் இல்லாவிட்டால் இது வாய்க்காது.குழந்தைகள், குடும்பம், அலுவலகம் என்பதை மீறி இதை சிந்தித்தாலே  அவரின் எழுத்துப்பணியின்தீவிர  அக்கறை புரியும். அந்த அக்கறையின் இன்னொரு வெளிப்பாடுதான் இந்நூல்.  வழ்த்துக்கள்

                              சுப்ரபாரதிமணியன்   
( ரூ 1000, 1100 பக்கங்கள் , காவ்யா வெளியீடு, சென்னை 
ஜெயந்தி சங்கரின் “ திரிந்தலையும் திணைகள்

                                             சுப்ரபாரதிமணியன்

--------------------------------------------------------------------------------
வேர்களோடு பிடுங்கி தமிழ்ச்சமூகத்தை எங்கும் தனியெ நட்டு விட முடியாது. வாழ்வியலும் உறவுகளூம் தமிழமும், புலம்பெயர்ந்த இடமும் என்று அலைக்கழிந்து கொண்டே தான் இருக்கும். இந்த அலைக்கழிப்பை எப்போது தமிழ் சமூகத்திற்கானதாக்க் கொண்டு இயங்கி வருபவர் ஜெயந்தி சங்கர் அவர்கள். சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் ( ஓரளவு மேல் தட்டு வர்க்கம், மத்திய வர்க்கம் ) சமகாலவாழ்வை கூர்ந்து பார்த்து எண்ணற்ற சிறுகதைகள், நாவல்கள் மூலம் தொடர்ந்து பதிவு செய்து சிங்கப்பூர் இலக்கீயத்தில் தமிழர் வாழ்க்கை பதிவுகளை முக்கியத்துவம் உள்ளதாக்கி இருக்கிறார் என்பது அயலக இலக்கியச் சாதனையில் ஒன்றாகவும் சொல்லலாம்.அவரின் சமீபத்திய இந்த நாவலில் இந்திய சமூகமும், சிங்கப்பூர் சமூகமும் என்று மாதிரிப் பாத்திரங்களைக் கொண்டு இருநாட்டிலும் வாழும்  சாதாரண சமூகங்களின்  படிமங்களைக் காட்டியிருக்கிறார்.. இந்த நாவல்  சாதாரண மத்தியதரத்து மக்களின் சின்னச் சின்ன கன்வுகளையும், அதை எட்ட முயலும் முயற்சிகளையும் கொஞ்சம் சிதைவுகளையும் காட்டுகிறது.
    சுப்பையா, சரவணனின் வீடு பற்றிய கனவுகள்,  ரேணுவின் இரண்டாம் திருமணமாவது சுமூகவாழ்க்கையாக  இருக்கவேண்டிய கனவுகள்,  சரவணன் பத்மாவின் சாதாரண லவுகிய வாழ்க்கைக் கனவுகளைப் பற்றி இந்நாவல் பேசுகிறது.குழந்தைகளின் உலகம் பற்றி அவரின் சிந்தனை தொடர்ந்து அவரின் படிப்புகளில் பிரதிபலித்துக் கொண்டே இருக்கிறது. அர்ச்சனாவின் இயல்பான உலகமும், நவீனின் உளவியல் ரீதியான முரண்பட்ட உலகமும்  எதிமறை அனுபவங்கள்  கொண்டவை. சரவணன் பத்மா,  ரவி ரேணு வின் உலகங்களிலம் மறு பதிப்பானவை.  சகமாணவன் ஸிஹாவ்வின் சேஸ்டைகளின் உலகமும், ரவியின் மனப்பிறழ்வு நடவடிக்கைகளால் அவனது மகன் நவீனின் எதிர் விளைவுகளும் நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.குழந்தைகளின் உலகம்  போலவே முதியவர்களின் உலகத்தையும் நுணுக்கமாகக் காட்டுகிறார்.பருத்த உடம்பு கொண்ட அமாட்டின் நடத்தைகள், லீவிங்கீன் மரணம் அதுவும் கொலையில், சுப்பையாவின் சக்கர நாற்காலி வாழ்க்கை என்ப்தாய் விரிந்து கொண்டே இருக்கிறது. வயதானவர்களின் உலகமும் இந்த இளைய தலைமுறையினருடன் ஓடிக் கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு கோவிலுக்குள் வாக்க்கிங் போவதும், பழனி திருவண்ணாமலி என்று  புனித யாத்திரை போவதும் பிடித்திருக்கிறது.ஒரு வகையில் இந்த வித்தியாச உலகத்தைக் காட்ட இவை உப்யோகப்படுத்தப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் நகரின் வளர்ச்சியோடே இவர்களின் வாழ்க்கையும் ஓடிக் கொண்டிருக்கிறது.முருகன் கோவில் கட்டப்படுதல், விரிவாக்கத்தில் சிதைபடுகிற இடங்கள், வெள்ள காலம், செம்பவாங் சாலை வளர்ச்சி என்று தொடர்கிறது.எலந்த மரம் பாலசுப்ரமணியர் பின்னர் புனித மரம் பாலசுப்ரமணியன் என்று பெயர் மாறி வெள்ளைக்காரனின் பெருந்தன்மையும் காட்டப்படுகிறது.

காலம் மெல்லிய நதியாய் நாவல் முழுவது ஒடிக்கொண்டிருகிறது. இந்திராகாந்தி சுடப்பட்ட பள்ளி காலம்.., யிசின் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிசேக விசேசம், முருகனைத்துரத்திவிட்டு   தண்டவாளம் போடும் ஆர்ச்ச்ர்ட் எமார் டிக்க்காலம், தூன்மேரா தில் வேலியா படம் திரையிடல் காலம் என்று நுணுக்கமானக் குறிப்புகளால் நாவலின் காலம் கதையில் கால் பதியாத மனிதனின் ஓட்டம் போல் ஓடிக்கொண்டேயிருக்கிறது.இவை பற்றியக் குறிப்புகள்  நாவலினை காலம்  சார்ந்து நகர்த்திக் கொண்டே இருப்பது முக்கிய அம்சம்.
.
ரவியின் நட்த்தையில் இருக்கும் மனப்பிறழ்வு அம்சங்கள் குடும்பத்தை திடுக்கிடச் செய்கின்றன. அதற்கான காரணங்கள் சரியாக முன் வைக்கப்பட்டிருகிறது.
இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் என்று மாறி மாறி தமிழ்க்குடுமப்ங்களின் வாழ்க்கை பத்மா, ரேணுகா குடுமபங்கள் மட்டுமின்றி கவிதா, ரேவதி, தர்ஷினி, மீனா குடுமபங்களின் வாழ்க்கை முறையாலும் நீள்கிறது.எல்லா மனிதனும் தான் அணைத்துக் கொள்ள நீளும் இடங்களிலெல்லாம் அகப்படுபவர்களைச் சேர்த்துக் கொள்வது போல் இந்த கதாபாத்திரங்கள் வந்து சேர்கின்றன.இந்திய வாழ்க்கை சென்னை என்று மட்டுமில்லாமல் பூனா, பம்பாய்ம் தில்லி என்று காட்டப்படிருகிறது. இந்திய சமூகத்தின் பல்வேறு கலாச்சார நிலைகளையும், மொழி சார்ந்த நிகழ்வுகளையும் முறையாக எடுத்தியம்ப இந்த்  விரிவாக்கம் உதவுகிறது. ஆனால் அரசியல் ரீதியான முனைப்புகளோ நிகழ்வுச் சிதறல்களோ இல்லாமல் இருப்பது தமிழ் சமூகம் அரசியலை புறம் தள்ளி விட்டு வாழ்வைக் கட்டமைப்பது வருத்தமே தருகிறது
      இதில் வரும் சீன மனிதர்களும் வாழ்க்கையும் அவரின் சீனப் படைப்புகளின் மீதான அக்கறையும் சீன மொழிபெயர்ப்புப் பணிகளையும் நினைவூட்டுகிறது..சீனப்புத்தாண்டு கொண்டாட்டங்கள், சீனக்கோவிலக்ள், சீனர்கள் குணநலன்கள் என்று  சில முக்க்கியப் பதிவுகளையும் இந்நாவலில் கட்டமைத்திருக்கிறார்.
                                               ஜெயந்தி சங்கரின் மொழிபெயர்ப்புப் பணிகளைத் தொடர்ந்து கவனிக்கிறபோது இன்னும் ஆச்சயம் குறையாது. வாழுமிடத்து கலாச்சாரம், நம்பிக்கை, தொன்மம் முதற்கொண்டு பலவற்றை கிரகித்து, மொழிபெயர்த்து அவர் இருப்பை நியாயப்படுத்த அவர் செய்யும் முயற்சிகள் ஆச்சர்யப்பட வைப்பவை. சீன நாடோடிக் கடைகள் முதற்கொண்டு தொன்மக்கதைகள் வரை பல  பாலியல் உவ்வே சமாச்சாரங்களை  மிகவும் எளிமையாக மொழிபெயர்த்து  வரும்   அவரின் மொழிபெயர்ப்பு  உட்பட   நூல்களின் பட்டியல் 25 தொடும் சீக்கிரம். அவரின் கடைசி இரண்டு நாவல்கள் மனப்பிரிகை, குவியம்  சரியாகக் கவனிக்கப்பட்டிருக்க வேண்டியவை..சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்க்கையை அவ்வளவு கூர்மையாக அவதானித்து நேர்கோட்டுப்பாணி தவிர்த்த வடிவத்தில் வெளிப்படுத்தியிருந்தார்அவரின் வாழும் புத்தர்  “  என்ற  சமீபத்திய  மொழிபெயர்ப்புக் கதை இப்படி முடிகிறது            “  நிச்சயமாக இவ்வுலகில் தெய்வங்கள் இருக்க முடியாது. ஆனால் முட்டாள்தனத்தினால் எதன் மீதாகிலும்  முக்கிய நம்பிக்கை வைக்கவும்  மனிதன் தெய்வங்களை உருவாக்குகிறான். சக மனிதர்கள்  அவனை வணங்கும் போது தானும் தெய்வம்தான் என்றே  எண்ணத்தலைபடுகிறான்தெய்வமாக நடந்து கொள்ளவும்  ஆரம்பிக்கலாம். மனிதர்களும் முன்பை விட அதிகமாக அவனை நம்பவும் பைத்தியமாக வழிபடவும்  ஆரம்பிக்கலாம். மக்களுக்குக் தெரியாது அவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பது. சொல்லப்போனால் தெய்வமாக்கப்பட்டிருக்கும் மனிதனுமே ஏமாற்றப்பட்டிருக்கிறான். ஆனால், காலம் செல்ல அம்மனிதன் வேறு வழியில்லாமல் தெய்வத்தைப்போலவே நடக்க முயற்சிக்க வேண்டியதிருக்கிறது. இது மக்களை மேலும் முட்டாளாக்கும் வேலை. இதே போன்று ஏமாற்று வேலைகளில் பல்லாண்டுகள் கழிந்து போயினஅவ்வருடங்கள்  அபத்தங்கள்  நிறைந்தவை. அபத்த வருடங்கள் எல்லாம் போனது போனதுதான். அதே மக்களால்தான் வரலாறும் எழுதப்படும் என்பதுதான் மிகவும் வேடிக்கை.

அபத்த உலகம் தான். அபத்த நிகழ்வுகள்தான்.இந்த அபத்த்த் தன்மை நவீன் மிகு வேக வாழ்க்கையில் விரவி விட்டது. “ போக்குவரத்து வசதிகள் மேம்பட்ட வாழ்வில் நிலப்பரபுகளின் எல்லைகள் கலந்து மங்கி மறந்து விட்ட்தில் ஒவ்வொரு தனி மனிதனும் தனியொரு  திணையாகித் திரிவதை உணர்ந்து “ அதை இலக்கியப் படிவமாக்கியிருக்கிறார் ஜெயந்தி சங்கர். மனப்பிரிகை, குவியம் போன்ற  முந்தின நாவல்களில் கட்டமைக்கப்பட்ட நேர்கோட்டு வடிவச் சிதைவு,  பாகங்களின் நிரப்புதலில் டைரிக்குறிப்புகள், குறுஞ்செய்திக்குறிப்புகள், கடிதங்கள் பாணி இதிலில்லாமல்
    நேர்கோட்டுப்பாணி கதை கூறலில் இந்திய சமூகம், சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பகுதி வாழ்க்கை நிகழ்வுகள் மூலம் சுவையாகக் கட்டமைகப்பட்டிருக்கிறது. இந்நாவலில்  

  ( ரூ 175, சந்தியா பதிப்பகம், சென்னை )

subrabharathi@gmail.com  / 8-2635 pandian nagar, tiruppur  641 602

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016


மலேசியா எழுத்தாளர் ரெ.கார்த்திகேசுவின் படைப்புகள்
கருத்தரங்கம் : 22/2/16 மலேசியா கோலாலம்பூரில் 
---------------------------------------------------


எளிய மனிதர்களின் தன் முனைப்பு      நடவடிக்கைகள்
        
” கார்த்திகேசுவின் நாவல்கள் ” தொகுப்பை முன் வைத்து ..   சுப்ரபாரதிமணியன்                 
பச்சைப் பசுங்கோயில் இன்பப்
பண்ணை மலைநாடு
இச்சைக்குகந்த நிலம்என்
இதயம் போன்ற நிலம்
               - சுத்தானந்த பாரதியார் )


  அய்ந்து நாவல்கள் கொண்ட ரெ.கார்த்திகேசு அவர்களின் இத் தொகுப்பை  படித்து முடிக்கிற போது மலேசியாவின் நிலவியல் சார்ந்த பதிவுகளும்கல்வித்துறை சார்ந்த முனைப்புகளும்,முப்பது ஆண்டுகளுக்கு முந்திய மலேசிய மனிதர்களின் ஒரு பகுதியினரும்  மனதில் வெகுவாக  நிற்கின்றனர்.
ரெ.கார்த்திகேசுவின் அய்ந்தாவது நாவலை எடுத்துக் கொள்ளலாம்.” சூதாட்டம் ஆடும் காலம்” இதன் நாயகன்  கொஞ்ச காலம் பத்திரிக்கையாளனாக இருந்து  விட்டுக்  கல்வித்துறை விரிவுரையாளனாகச் செல்கிறான்அப்பாவின் வன்முறையால் வீட்டை விட்டு ஓடிப்போய் கல்வி கற்று முன்னேறியவன் அவன்அம்மாவைத்தேடிப்போகிறான்காதலியாக இருப்பவள் இன்னொருத்தனை பணத்துக்காக ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்டு  பின் விவாகரத்து பெறுகிறவள் இவனை விரும்புகிறாள்அப்பாஅம்மாக்களை தேடிப்போய் அவர்களின் நோய்மரணம்  ஆகியவற்றில் அக்கறை கொள்கிறான்.
இந்த அம்சங்களை மற்ற நாவல்களிலும் காண முடிவதில் அவர் தன்னை பாதித்த  அனுபவங்களைத் திரும்பிப் பார்க்கிற தன்மை காணப்பட்டது.                 .. முதல் நாவலில்  வானத்து வேலிகள்குணசேகரன் இப்படி வீட்டை விட்டு விரட்டப்பட்டவன் மாட்டுத் தொழுவத்தில் வேலை பார்த்து அந்த வீட்டு பணக்காரப் பெண்ணை காதலித்துலண்டன் போய் படித்து பெரும் பணம் சம்பாதித்து ஏழை மாணவகளுக்கு விடுதி ஒன்றை பெரும் செலவில் கட்டுகிறான்மனைவியுடன் உடல் தொடர்பு இல்லாமல் இருக்கிறவன் மகன் தந்த பாடத்தால்   மனைவியுடன் சேர்கிறான்ராணி என்ற குணசேகரனின்உதவியாளர் திருமணம் செய்து கணவனைப்  பிரிந்து கொஞ்சம் குணசேகரனுக்காக தவிக்கிறவள்.              ” தேடியிருக்கும் தருணங்களில் ” நாவலில் நாயகன் அப்பாவின் சாவுஅஸ்தி கரைப்பு என தன் அம்மாவைத் தேடிப் போகிறான்.  அம்மா சாதாரண கூலிக்காரப் பெண்அவளைக் கண்டடைகிறான்.   அந்திம காலம் “ நாவலில் சுந்தரத்திற்கு புற்று நோய்மகள் ராதா கணவணை விட்டு லண்டனுக்கு மகன் பரமாவை அப்பா சுந்தரத்திடம் விட்டு போய்விடுகிறாள்பின் அந்த வாழ்க்கையும் சரியில்லையென்று திரும்புகிறாள்பரமா இறந்து விடுகிறான்.சுந்தரம் புற்று நோயிலிருந்து தப்பிக்கிறார்” காதலினால் அல்லநாவலில்  கணேஷின் பல்கழைக்கழக அனுபவம்ரேக்கிங்,,அத்தை பெண்காதலிப்பவனைக் கட்டாமல் அத்தைப் பெண்ணை கட்டும் சூழல்எல்லா நாவல்களிலும் நோய் சார்ந்த மனிதர்களின் அவஸ்தை இருக்கிறதுஅதிலும் புற்று நோய் என்று வருகிற போது விவரமான விவரிப்பு இருக்கிறதுகல்வி சூழல் சார்ந்த விரிவான அணுகுமுறைபாடத்திட்டங்கள்,பல்கலைக்கழக கல்வியில் இருக்கும் அரசியல்மாணவர்களின் போக்குகள்ரேக்கிங் சித்ரவதைகள் இடம்பெறுகின்றன.அங்கங்கே இடம் பெறும் இலக்கியக் குறிப்புகளும்  சுவாரஸ்யப்படுத்துகின்றனஎளிய மனிதர்கள் படித்து சுய அக்கறையுடன் கல்வியைத் துணைக்கு வைத்துக் கொண்டு லவுகீய வாழ்க்கையில் முன்னேறும் படிமங்களின் சிதறல் எங்கும் காணப்படுகிறது.

வெகுஜன ஊடகங்களில் கல்விக்கூடம் அதிகம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதுண்டுகுறிப்பாய் திரைப்படங்களில் இளைஞர்கள் இன்று திரைப்படக் கொட்டாய்களுக்கு அதிகம் செல்பவராய் இருப்பதால் அவர்களைப் பற்றிய மேலோட்டமான விசயங்களைக் கொண்ட திரைப்  படங்களே அதிகம் ஆக்கிரமிக்கின்றன,ஆனால் கல்வித்துறையின் இன்னொரு பக்கமாய் இருக்கும் கல்வித்துறை சார்ந்த அரசியல்,மாணவர்களின் போக்குகல்வித்திட்டங்கள்மாணவர் ஆசிரியர் உறவு போன்றவை அதிகம் சொல்லப்படுவதில்லை.இந்நாவல்களில் அதைக்காண முடிவது ஆரோக்கியமானது.
ரெ.கார்த்திகேசு கல்வித்துறையில் பணிபுரிந்தவர் .  கல்வித்துறை சார்ந்த அவரின் விஸ்தாரமான நாவல் அனுபங்கள் வியப்பூட்டுகின்றனஅந்த வகையில் கல்வித்துறை பற்றின முறையான பதிவாகவும் இருப்பது இந்நாவல்களின் பலம்.மலேசியா சூழலின் கல்வித்தன்மைஅவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் கல்விசூழல் குறிப்பிட வேண்டியது.சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரிகிறபோது அத்துறை பற்றி படைப்புகளில் வெளிபடுத்துவது பல விமர்சனங்களுக்கும்,அத்துறையினருக்கும்சம்பந்தப்பட்ட மாதிரிகளுக்கும் சங்கடங்களையும் பகைமையையும் உருவாக்கும்அதையும் மீறி கல்வித்துறை பற்றிய அனுபவங்களையே முன்னிலைப்படுத்தி கார்த்திகேசு இதில் இயங்குவது  ஆச்சர்யப்படுத்துகிறதுஅவர் கல்வித்துறையில் பணிபுரிகிறபோது  இவற்றை எழுதியிருக்கக்  கூடும்அப்போது கல்வித்துறையில் எதிர்கொண்ட பல பாத்திரங்களை பலர் இதில் அடையாளம் கண்டிருப்பார்கள்.விரோதமும் கொண்டிருப்ப்பார்கள்.சிக்கலான சூழ்நிலைகளுக்கும் கொண்டு சென்றிருக்கும்அத்துறையில் பணி செய்யும் காலத்திலேயே இவற்றை அவர் எழுதி வெளியிட்டிருப்பதை பாராட்டியாக வேண்டும்.அவ்வனுபங்களைப் படைப்பாக்குகிற தன்மை தெரிகிறது.   புதிய தலை முறை பற்றிய அக்கறை இந்த கதாபாத்திரங்களுக்கு இருக்கிறதுகுழந்தைகளுக்கு ஆங்கில ஆக்கிரமிப்பு மீறி தமிழ் சொல்லித்தரும் தாத்தாக்கள் இருக்கிறார்கள்பழைய இலக்கியங்களில் தோய்ந்து  அவற்றை வெளிப்படுத்தும் பல இடங்கள் உள்ளனமரணம் பற்றிய பயத்தில் பல கதாபாத்திரங்கள்  அலறிக் கொண்டிருக்கிறார்கள் மரணம்  கூத்தாடுகிறதுஇங்கு எல்லோரும் அதன் பேய்ப் பிடியில் இருக்கிறோம்இன்றொன்றும் நாளையொன்றுமாக தனது விருப்பத்திற்கு அது மனிதர்களைக் கொய்து தின்கிறது.இது மரணப் பேயின் விருந்துக்கூடம் என்று தோன்றியது   “ (பக்கம் 551 )
கார்த்திகேசுவின் சிறுகதைகளின் நுணுக்கமான விசயங்கள் இதிலும் உள்ளனஅவரின் சிறுகதைகள் வெகுவாக சமகாலத்தன்மையோடும் நவீன வாழ்க்கைச் சிக்கலோடும் வெளிப்படுபவைஆனால் இந்நாவல்களின் பிரசுரிப்பு காலம்80,90 என்பதால்  அக்கால மாதிரிகள்  மத்திய தர மலேசியர்களின் வாழ்க்கையை மையமாகக் வெளிப்படுத்துபவையாக அமைந்துள்ளன.. அக்கால இலக்கிய சூழலையும் மனதில் கொண்டே இவற்றை மதிப்பிடுவது நியாயமாகும்இந்நாவல்களின்    நேரடிசாட்சியாக இருந்து அனுபவித்திருப்பதை வெளிப்படுத்தியிருப்பதில்  தன்னை முன்னிருத்திய நேர்மை  தென்படுகிறதுவேறு கற்பனை அனுபவங்களைத் தேடிப்போகாமல் தன் அலுவலக அனுபவங்களையே மேலோங்கியபடிச் சொல்லியிருக்கும் பாணி இவரின் தனித்தன்மையானதாக உள்ளது. இன்றைய புது வாசகன்  இதிலிருந்து  சற்றே மாறுபடலாம்ஆனால் அந்த அனுபவங்களைக் கடந்துதானே இன்றைய சூழலுக்கு வந்திருக்கிறோம் என்பதையும் மறக்க முடியாது.. மலேசியா நிலவியல் சார்ந்த பெரும் விவரிப்புகளும்சரளமான  நடையும்  நாவகளை நல்ல வாசிப்பிற்குள்ளாக்குகிறது.மலேசியா பற்றிய    தகவல்களை அள்ளித்தருகிறது.முன்னுரையில் கார்த்திகேசு இப்படி குறிப்பிடுகிறார்.  “ இது பிள்ளைப் பேறுமாதிரிதான்.பிறக்கும்போது என்ன அமைகிறதோ அதுதான் அதற்கு வாய்த்ததுஅடுத்தவர் கையில் கொடுத்த பிறகு இதன் மூக்கைக் கொஞ்சம் எடுப்பாகப் பண்ணியிருக்கலாம்கண்ணை கொஞ்சம் நீடியிருக்கலாம் எனத் தாய் கவலைப்பட்டு பயனில்லை.எழுத்தின் கருத்துகளுக்கு அவனே பொறுப்புஆனால் நாவலின் மொத்த வடிவத்துக்கு அவன் மூளையோடு அவன் சுரப்பிகளும் பொறுப்பு என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும் “ இவ்வகை திருப்தியின்மையும்சுய விமர்சனமும் எழுத்தாளனிடம் தென்படுவது ஆரோக்யமாக படைப்புத்தளத்தை முன்னகர்த்திச் செல்லும்.முப்பது ஆண்டுகளுக்கு முந்திய மலேசிய வாழ்க்கையின்  அப்போதைய பதிவாக அவற்றைத் திரும்பிப் பார்க்க வைக்கிறதுஅய்ந்து நாவல்களை ஒரே தொகுப்பாக வெளியிட்டிருப்பது அவரின் நாவல் படைப்புகளை ஒரு சேர படிக்கவும்கல்வித்துறை சாந்தவர்களுக்கும்ஆராய்ச்சிமாணவர்களுக்கும்மலேசியா சூழலை ஓரளவு வெளீயிலிருக்கும் வாசகன் சரியாகப் புரிந்து   கொள்ளவும் சரியானதாக அமையும்.

  காவ்யா பதிப்பகம்சென்னை வெளியீடு  998 பக்கங்கள்  விலை ரூ 1300  )