சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 13 மார்ச், 2015

திருப்பூர் படைப்பாளிகள் தொகுப்பு : இவ்வாண்டு “ டாலர் நகரம் “


அன்புடையீர், வணக்கம்.

 2015 ஏப்ரலில் சித்திரைக்கனியை முன்னிட்டு திருப்பூர் மாவட்டப் படைப்பாளிகள் மற்றும் கனவு இலக்கிய வட்டம் இணைந்து வெளியிடும் தொகுப்பு நூலுக்கு தங்களின் மேலான ஆதரவைக் கோருகிறோம். இந்நூல் தரமாக வெளிவர தங்கள் நிறுவனத்தின் விளம்பரங்கள் பங்கு பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

1. சென்றாண்டுகளில் திருப்பூர் படைப்பாளிகளின் தொகுப்பு நூல்கள் ”பருத்திக்காடு ” , “ பருத்தி நகரம் “ ‘’ பனியன் நகரம் ’‘ வெளிவந்ததை நினைவு படுத்துகிறோம்.

கதை, கவிதை, கட்டுரைகள் என்று பன்முகத்தன்மையுடன் இந்நூல் அமைய உள்ளது. இதில் தாங்கள் விளம்பரங்கள் தந்து திருப்பூர் படைப்பாளிகளின் படைப்புச் சிறப்பையும்,மேன்மையையும் வெளிக்கொணர உதவக் கோருகிறோம்....காசோலையை KANAVU, திருப்பூர் என்ற பெயருக்கு அனுப்பலாம்.

2. உங்களின் படைப்புகளை ( கதை/ கவிதைகள்/ கட்டுரை/) அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம். .........2.... பக்க அளவில் இருக்க வேண்டும். பக்கம்அதிகம் இருந்தால் படைப்பாளியின் கருத்து பெறாமலே சுருக்கப்படும்.எனவே நீங்களே குறிப்பிட்ட பக்க அளவில் அனுப்புவதுநல்லது.மார்ச் 30ம் தேதிக்குள் அனுப்பவும். ஆண்டுதோறும் இத்தொகுப்பு விளம்பரங்கள், நன்கொடைகள், பிரதிகள் விற்பனை மூலமே கொண்டு வரப்படுகிறது . அதற்கு ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

விளம்பரக் கட்டணம்: உள் வர்ணபக்கம்: ரூ 3000*உள்பக்கம் : ரூ 1000.,அரைப்பக்கம்: ரூ 600

அன்புடன், தொடர்புக்கு: சி.ரவி 9994079600 வழக்கறிஞர்சுகன்யா 9043463257* சுப்ரபாரதிமணியன்(9486101003) கவிஞர் ஜோதி 9025526279 . ========================================================================================================

கனவு, 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602.
அவினாசி புத்தகக் கண்காட்சியில் மகாராஜா பெறியியல் கல்லூரி இறுதியாண்டு மாணவன் கவியரசனின் ஓவியங்களூடன்.தன்னிச்சையாக ஓவியம் கற்றுக் கொண்டிருக்கிறார். நிறைய வரைகிறார், அவற்றை நெகட்டி ஆர்ட் என்கிறார். கேமிரா நெகட்டி மோடில் ஓவியங்களின் வேறு நிறங்கள் காணப்படுகின்றன. இது என்ன புதுசாய்..எப்படியாயினும் வாழ்த்துக்கள்.
அவினாசி புத்தகக் கண்காட்சியில் மகாராஜா பெறியியல் கல்லூரி இறுதியாண்டு மாணவன்  கவியரசனின் ஓவியங்களூடன்.தன்னிச்சையாக ஓவியம் கற்றுக் கொண்டிருக்கிறார். நிறைய வரைகிறார், அவற்றை நெகட்டி ஆர்ட் என்கிறார். கேமிரா நெகட்டி மோடில்  ஓவியங்களின் வேறு நிறங்கள் காணப்படுகின்றன. இது என்ன புதுசாய்..எப்படியாயினும் வாழ்த்துக்கள்.தலைப்பு