சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 23 ஜூன், 2011

தற்கொலை நகரம்

: தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:

தாண்டவக்கோன்


1. “ நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்துப் போன காலம் உண்டு. நீரை அள்ளி அள்ளி குடித்திருக்கிறோம். நொய்யல் ஆற்று மணலில் அரசியல் கூட்டங்கள் நடப்பது ஒரு சாதாரண நிகழ்வாக இருந்திருக்கிறது. திருப்பூர் மக்கள் உழைப்பிற்குப் பெயர் பெற்றவர்கள். அதுதான் உலக அரங்கில் பனியன் பெருமையை உயர்த்தியது. இன்றைக்கு 15,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணியைத்தரும் நகரமாக மாறியுள்ளதற்குக் காரணம் அந்த உழைப்புதான். வந்தாரை வாழ வைத்த பூமியாக திருப்பூர் மாறியதற்குக் காரணம் குறுகிய காலத்தில் எந்த வகையான வெளிநாட்டு ஆர்டராக இருந்தாலும் தூக்கம் இல்லாமல் உழைத்து சரக்கை விமானத்திலோ, கப்பலிலோ ஏற்றுமதி செய்து விடக்கூடியவர்கள் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள். திருப்பூரின் இன்றைய 10 லட்சம் மக்கள் தொகையில் 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பனியன் தொழிலாளர்களாக உள்ளனர் இவர்களில் பெரும்பகுதியினர் தமிழகத்தின் தெற்கு மாவட்டஙகளிலிருந்து வந்தவர்களும், கேரளத்தினரும் என்ற பழைய நிலையோடு ஒரிசா, பீகார், நேபாளத்தினரும் கணிசமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திருப்பூருக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு என்பது நீண்ட காலமாக சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் இருந்த தொய்வின் காரணமாகும். முன்பு படிக்காத உழைப்பாளிகள் பனியன் உற்பத்தியாளர்களாக இருந்தனர். தொழில் நுட்பக் கல்வியும், மேலாண்மை படிப்பும் கொண்ட இன்றைய 2.
தலைமுறையினர் சுற்றுப்புறச்சூழலில் பிரச்சினைகளை கவனத்துடன் கையாளுகிறார்கள் . அதிகப்படியான சுத்திகரிப்பு நிலையங்கள் சமீப காலங்களில் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இது தாமதமானதுதான் என்பதை நீதி மன்றத்தின் தீர்ப்பு சமீபத்தில் தெரிவித்திருக்கிறது. நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கை கூடி வருகிறது. தேர்தலை மனதில் கொண்டு தமிழக அரசும் , கட்சிகளும் செய்ல்படுவது 4 லட்சம் மக்களுக்கு ஆறுதல் தருவதாக இருக்கும். சாய்ப்பிரச்சினையை அரசியல் கட்சிகளும் அரசும் சரியாக கவனிக்காமல் இருப்பதாக எழுந்துள்ள பார்வை காரணமாக தேர்தலை புறக்கணிக்க பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள எண்ணம் துரதிஸ்டமானது என்று ஆசியல் கட்சிகள் திகிலடைந்து போயிருக்கிறார்கள். “ என்கிறார் திருப்பூரைச் சார்ந்த எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்.

திருப்பூரின் சுற்றுச்சுழல் பிரச்சினைகளைப் பற்றி தொடர்ந்து எழுதி வரும் சுப்ரபாரதிமணியனின் ” சாயத்திரை” நாவல் திருப்பூரின் சாயப்பிரசிச்னையையொட்டி எழுதப்பட்டு 1998ல் வெளியானது. ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலாகும் அது . “ 15 ஆண்டுகளுக்கு முன் அந்த நாவல் எழுப்பிய சுற்றுச்சூழல் குறித்த தார்மீக்க் கேள்விகள் இன்றைக்கும் எழுப்பப் படுவதன் அடையாளம் தான் நீதிமன்றத்தீர்ப்பும் சாயப்பட்டறைகள் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டது ஆகும். சாயம் குறித்த பிரச்சினைகள் இன்று உலகம் முழுக்க மனித உரிமைப்பிரச்சினைகளாக உருவெடுத்திருக்கும் நிலையில் புதிய உற்பத்தியாளர் தலைமுறை கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு, நியாய வணிகத்தின் அம்சங்களாக சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் கையாள்வதின் அடையாளமாகக் நிறைய சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிடுள்ளன.”

நவீன இலக்கியத்தின் அடையாளமான இவரின் “ கனவு” காலாண்டிதழ் இவ்வாண்டு இறுதியில் 25 ஆம் ஆண்டை தொடுகிறது என்பது பெரிய சாதனை. ”கனவு” இதழில் இன்றைய முக்கிய படைப்பாளிகள் பலர் எழுதி உள்ளனர். பல முக்கிய இளம் படைப்பாளிகளை கனவு உருவாக்கியிருக்கிறது. கனவு முதல் 20 ஆண்டுகளில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் தொகுப்பு 700 பக்கங்களில் வெளியாகியிருக்கிறது. கனவு நடத்தி வரும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான “ கதை சொல்லி” நிகழ்ச்சிகள் முக்கியமானவை. 7 நாவல்கள், 15 சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 35 நூல்களை வெளியிட்டிருக்கும் இவரின் மூன்று குறும்படங்கள், சுமங்கலி திட்டம், குழந்தைத்தொழிலாளர் பிரச்சினை, சாயம் போன்றவாற்றை மையமாகக் கொண்டவை. திருப்பூர் குறும்படப் படைப்பாளிகளின் முக்கிய தளமாக விளங்குகிறது.
“ சென்னைக்கு அடுத்தபடியாக தற்கொலைகளின் விகிதம் அதிகமாக இருக்கும் நகரம் திருப்பூர் என்று சமீபத்தில் எழுந்த சர்ச்சையையும் நடவடிக்கையையும் மீறி இப்போது முளைத்திருக்கும் சாயப்பட்டறைப் பிரச்சினையையும் திருப்பூர் சரியாகவே கையாண்டு மீளும். கடினமான உழைப்பும், கொங்கு நாட்டின் விருந்தோம்பல் குணமும் கொண்டு வந்தாரை வாழ வைக்கும் திருப்பூரிலிருந்து தற்காலிகமாக தங்களின் சொந்த ஊருக்கு செல்ல தயாராக உள்ள ஒரு பகுதி மக்களின் நம்பிக்கை வீண் போகாது என்பதற்கு இன்னும் மூடப்படாமல் இயங்கிகொண்டிருக்கும் பெரும்பான்மையான பனியன் கம்பனிகள் காட்டிடுகின்றன. தற்கொலைமுயற்சிகளில் பனியன் தொழில் இருப்பதாய் காட்டப்படுவது துரதிஸ்டமே ”
மகாபாரதப் போருக்கு முன்னோட்டம் திருப்பூரில்தான் நிகழ்ந்ததாக ஆராய்ச்சிகள் உண்டு. விராடபுரமான தாராபுரத்திலிருந்து துரியோதனன் பிடித்துச் சென்ற மாடுகளைத் தடுத்தி நிறுத்தினான் அர்ஜீனன். அவனுடன் போர் செய்து வெற்றி பெற்று அர்ஜீனன் மாடுகளைத் திருப்பி அனுப்பியதால் திருப்பூர் எனப் பெயர் வந்ததாம். 25 சதுர கிமீ பரப்பளவு கொண்ட ஊரில் பரப்பளவை வைத்துப் பார்த்தால் ஆசியாவின் அதிக பட்சமான பெட்ரோல் பங்குகள், அதிக பட்சமான டாஸ்மாக் கடைகள், அதிக பட்ச இரட்டை வாகன ஊர்திகள்,மற்றும் அதிக பட்சமான அந்நிய செலவாணி ரூ 15,000 கோடி. சாயப் பட்டறை பிரச்சினையை வைத்துப் பார்த்தால் பின்னலாடை ஏற்ருமதியில் அது எந்த வகையில் திருப்பு முனையாக இருக்கும் என்பது சீக்கிரம் தெரிந்துவிடும்.என்கிறார்.

தாண்டவ்க்கோன் : thandavakon , tiruppur

thandavakkon@hotmail.com

ஞாயிறு, 12 ஜூன், 2011

அண்டை வீடு : பயண அனுபவம் சிலுவை


டாக்கா விமானநிலைய இமிகிரேஷன் சோதனையில் அலாரம் சப்தத்துள் முடங்கிப்போனார் ஜ.என்.டி.யூ.சி. தண்டபாணி. துப்பாக்கிக்குப் பயந்து கைகளைத் தூக்குவது போல் தூக்கிக் கொண்டார். அலாரம் தொடர்ந்தது. கைபேசி, பர்ஸ் உட்பட எல்லாமும் வெளியேற்றி விட்டார். இன்னும் அலாரம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஏதோ கண்டுபிடித்தவர் போல அலாரத்திற்கான காரணமாக இடுப்பில் இருந்து ‘அரணாக்கயிறு’ என்று அரைஞான்கயிறைச் சுட்டியபடி கத்திக் கொண்டிருந்தார். திரும்பத் திரும்ப அரணாக்கயிறு என்றார், பிறகு தமிழ்நாடு தமிழ்நாடு என்றார். அரைஞாண்கயிறு பற்றிய விளக்கத்தை அவர் தொடங்குவதற்கு முன்பாகவே அவரைப் போகச் சொல்லி விட்டனர்.ஏதோ சிரிப்புடன் அவரை போகச் சொன்னார்கள் உலகத் தொழிலாளி வர்க்கம் இப்படித்தான் கைகளைத் தூக்கி கேட்பாரற்று, எங்களை கவனிக்க யாருமில்லையா என்று கதறுவதாகத் தோன்றுகிறது. உலகம் முழுக்க மலின உழைப்பு, குறைந்த கூலியில் தொழிலாளர்கள் உழன்று கொண்டிருக்கிறார்கள்.

தண்டபாணி டாக்காவில் நடந்த சில கூட்டங்களின் இடையே வெளியேறி வெளியே போய் சிகரெட் புகைத்துக் கொண்டிருப்பார்.

"என்னங்க, இங்க வந்திட்டீங்க?"

"எவ்வளவு நேரம்தா அவன் சொல்ற பொய்யைக் கேட்டுட்டு உக்காந்திட்டிருக்கிறது."


பொய்யும் புனைவும் லாபம் சம்பாதிக்க வார்த்தைகளைக் கொட்டியபடி முதலாளி வர்க்கம், கார்ப்பரேட் கம்பெனிகள் இருந்து கொண்டிருக்கின்றன. எட்டுமணி நேரஉழைப்பு என்பது 10மணிநேரம், 12மணிநேரம் என்றாகிவிட்டது. தினக்கூலிகள், பீஸ்ரேட் செய்பவர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களாய் தொழிலாளர் வர்க்கம் மாறிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு என்பது கனவாகவே இருக்கிறது.

மே தினக் கொண்டாட்டத்திற்கு ஒரு முதிய தொழிற்சங்கத் தலைவர் அழைக்கப்பட்டார். அவர் சொன்னது: " எட்டு மணி நேர உழைப்புக்கு மே தினம். கொண்டாட்டம் எல்லாம். உங்க ஊர்லதா அது 12 மணி, 16 மணி நேரம்னு அதே கூலியில் போய்ட்டிருக்கே. இதிலே எதுக்கு மேதினம் கொண்டாடறது?"

வங்கதேசப் பின்னலாடையில் ஐந்து ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி பெற்றிருப்பதற்குக் காரணம் ஒன்றுதான்: மலின உழைப்பு. இது உலகம் முழுவதும் தொடர்கிறது. எல்லா தொழில்களிலும், துறைகளிலும் தொடர்கிறது. வங்கதேச வங்கிகள் 100 மில்லியன் டாலர் பணத்தைப் பின்னலாடை ஏற்றுமதியில் முதலீடு செய்யப் போகின்றன. வரும் ஆண்டில், 1989 முதல் வெளிநாட்டு மூலதனப் பொருட்கள் பருத்தி உட்பட்டவை தருவித்துக் கொள்ளப் பெரும் உதவி செய்திருக்கிறது. 330 மில்லியன் டாலர் இதுவரை உதவி தந்துள்ளது. ஏற்றுமதியாளர்கள் 3.5% வட்டியில் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தலாம். வழக்கமான வட்டி விகிதமான 12% விட இது மிகவும் குறைவு. இவ்வகையான உதவிகள் போட்டியான சர்வதேச சூழலில் தங்கள் வியாபாரம் பெருக உதவும் என்கிறார்கள். 29 வணிக வங்கிகள் உதவத் தயாராக உள்ளன. தொடர்ந்த வெளிநாட்டு மூலதனங்கள் தொழிலை இன்னும் ஊக்குவிக்கும்.




ஆனால் தொழிலாளி வர்க்கம் கையறு நிலையில் உழைப்பைக் கொடுத்து விட்டு சாவுப்பெட்டியைத் தயார் செய்து கொள்கிறது. கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு, நியாய வணிகம் என்று வர்த்தக தார்மீகக் கோட்பாடுகள் உலகளவில் மனித உரிமைகளாகப் பேசப்பட்டு வரும் இன்றைய நாட்களில் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தினர் நவீனக் கொத்தடிமைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். தொழிற்சங்க உரிமைகள், நிரந்தரப் பணி பாதுகாப்பு என்று எதுவும் கோராமல் தினக் கூலியாக நிரந்தர உருவம் எடுத்து வருகிறது. நவீன கொத்தடிமை முறையில் கோர முகம் பயஙகரமானதுதான். அது கார்ப்பரேட் உலகின் கவர்ச்சிகளையும், குரூரங்களையும் ஒருசேரக் கொண்டது.

"ஏலி ஏலி லாமா சபக்தானி" (தேவனே , என் தேவனே, ஏன் எங்களை கைவிட்டீர்).