சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 28 பிப்ரவரி, 2018

சுப்ரபாரதிமணியன் படைப்புகள்

சுப்ரபாரதிமணியன் படைப்புகள் கருத்தரங்கம் காந்தி கிராமப் பல்கலைக்கழகம், திண்டுக்கல்லில் 27/2/18 நடைபெற்றது.

 துவக்க உரை : டி.செல்வராஜ் (சாகிதய் அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர் ); நெசவாளர் சமூகத்தைப் பற்றி தமிழின் முதல் முற்போக்கு நாவல் தொமுசி ரகுநாதனின் பஞ்சும் பசியும், அதன் பின் எம் வி வெங்கட்ராமின் நாவல்கள் இடம்பெற்றுள்ளன. சுப்ரபாரதிமணியனின் தறிநாடா, சப்பரம் போன்ற நாவல்களில் நெசவாளர் சமூகத்தைப் பற்றி நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இன்றைய  உலகமயமாக்கல்,மத வாத சூழலில் அவரின் படைப்புகள் சாதாரண மக்களின் துயரங்களை சரியாகச் சொல்கிறது.

சுப்ரபாரதிமணியன்  நாவல்கள் பற்றி உரை : முருகேசபாண்டியன்: சமூகப் போராளியாக அவரின் 15 நாவல்கள் இன்றைய சூழலின் விமர்சன்ங்களாக வெளிப்பட்டுள்ளன, சமகாலப்பிரதிபலிப்பு, உலகமயமாக்கலின் நாசம் , விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை என்று வெவ்வேறு தளப் பரிமாணங்களில் கலைத்தன்மையுடன் எழுதி வெற்றி கண்டிருக்கிறார்.இவரின் குரல் கார்ப்பரேட் உலகின் வன்முறைக்கு எதிரான முக்கியமான குரல்.
சிறுகதைகள் பற்றி உரை :, சு.வேணு கோபால் ,
250 சிறுகதைகளுக்கு மேல் எழுதியிருக்கும். பலவகை அனுபவங்கள், பெண்களின் இயல்புகள், பிரச்சினைகள். சுற்றுச்சூழல், சாதாரண மக்களின் இயல்புகள், நிலத்தோடு தொடர்புடைய அனுபவங்கள்., மனிதர்களின் தன் வெறுப்பு, வன்மம் என்று விரிவான தளங்களில் உளவியலோடு ஊடாடி இருக்கிறார். அவரின் சில சிறந்த சிறுகதைகள்:
ஒவ்வொரு ராஜகுமாரிகளுக்குள்ளும், மிச்சம், எதிப்பதியம், கை குலுக்க சில சந்தர்ப்பங்கள்,விமோசம், வாக்கு.., தொலைந்து போனக் கோப்புகள்......

சுற்றுச்சூழல் படைப்புகள் பற்றி ஓசை காளிதாஸ்;  உணர்வுகளை மையமாகக் கொண்ட சுப்ரபாரதிமணீயனின் படைப்பிலக்கியங்கள் தாண்டி 10 சுற்றுச்சூழல் கட்டுரை நூல்களை வெளியிட்டுள்ளார்.அவை அறிவு சார்ந்த பல கேள்விகளை முன் வைப்பவை அவை. சாயத்திரை, புத்துமண் இரண்டும் சுற்றுச்சூழல் சார்ந்த தீவிரமானப் நாவல் படைப்புகள் . நான் அவரை படைப்பாளி என்பதை மீறி சுற்றுசுசூழல்வாதியாகவே அடையாளம் காண்கிறேன்.


 32 ஆண்டுகள் கனவு இதழ் செயல்பாடுகள் பற்றி கோவை இளஞ்சேரல்:
பேரா .  ஆனந்தகுமார் : இரட்டை நகரங்களின் கதை சொல்லி அவர் . செகந்திராபாத், திருப்பூர்  என....கலைத்தன்மையுடன் படைப்புகளை எழுதியிருப்பவர்,


தலைமை  வகித்தார் : சு. நடராசன்( துணை வேந்தர் , காந்தி கிராமப் பல்கலைக்கழகம், திண்டுக்கல். ஏற்புரை நிகழ்த்தினார் சுப்ரபாரதிமணியன்


                                உலகத் தாய் மொழி தினம்
பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளியில் உலகத் தாய் மொழி தினம் வியாழன் அன்று ஒரு நாள் நிகழ்ச்சியாக  நடைபெற்றது.
மருத்துவர்  முத்துச்சாமி தலைமை வகித்தார். காலை நிகழ்ச்சியில் கதை இன்பம் என்ற தலைப்பில் கீதா சச்சின் ( குழந்தைகள் நல ஆலோசகர்), சாவித்ரி ( சமூக செயல்பாட்டாளர் ) ஆகியோர் பேசினர்.
மாலை நிகழ்ச்சியில்  மொழி இன்பம் என்றத் தலைப்பில் பெரும்புலவர் சொக்கலிங்கனார், கவிஞர் ஜோதி ஆகியோர் பேசினர் .
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், நிறைவுரையாற்றினார் . .பெற்றோர் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்
( செய்தி: கி .கிருஷ்ணகுமாரி, தலைமையாசிரியை
 பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளி )

வாசிப்பு முகாம் :இடம் பெற்ற நூல்கள்
1. கடலும் கிழவனும் –ஹெமிங்வே ( நோபல் பரிசு நாவல்)
2. பாடம்படித்த குருவி – லீஸ்யா உக்ரென்கா ( மொழிபெயர்ப்பு )
3. சிந்திக்க வைக்கும் சிறுவர் கதைகள் –சுப்ரபாரதிமணீயன்
கல்வியாளர்கள் ரூபா, கற்பகவல்லி ஆகியோர் வழி நடத்தினர். எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயன், மருத்துவர் முத்துச்சாமி உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்
( செய்தி: கி .கிருஷ்ணகுமாரி, தலைமையாசிரியை
 பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளி )


                                வாசிப்பு முகாம் 

சனி, 24 பிப்ரவரி, 2018

சுப்ரபாரதிமணியன் படைப்புகள் கருத்தரங்கம்

காந்தி கிராமப் பல்கலைக்கழகம், திண்டுக்கல்
27/2/18 காலை 10 மணி

துவக்க உரை : டி.செல்வராஜ் (சாகிதய் அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர் )
உரைகள் : முருகேசபாண்டியன், சு.வேணு கோபால் , இளஞ்சேரல், ஓசை காளிதாஸ், ஆனந்த குமார்,சுப்ரபாரதிமணியன்


தலைமை: சு. நடராசன்( துணை வேந்தர் , காந்தி கிராமப் பல்கலைக்கழகம், திண்டுக்கல்

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

  நூல்கள்  வெளியீடு:


தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.           திருப்பூர்  மாவட்டம் * பிப்ரவரி  மாதக்கூட்டம் .11 /2/18 ஞாயிறு  மாலை.5 மணி..              பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் ரோடு                                 (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர்.,நடைபெற்றது .
3 நூல்கள் வெளியீடப்பட்டன :
*. சுப்ரபாரதிமணியனின்  ஆங்கில நூல் Migration 2.0
 * எஸ் .ஏ.காதரின் “ குயிலா ‘நாவல்
* ஆட்டனத்தியின் “ இங்கேயும் ஒரு ஆரண்யகாண்டம் “
*. சுப்ரபாரதிமணியனின்  ஆங்கில நூல் Migration 2.0 – சேவ் நிர்வாக இயக்குனர் வியாகுல மேரி வெளியிட வெண்மணி நடராசன் பெற்றார்.
 * எஸ் .ஏ.காதரின் “ குயிலா ‘நாவல் முடியரசு வெளியிட  சசிகலா, இரத்தினமூர்த்தி பெற்றனர்
* ஆட்டனத்தியின் “ இங்கேயும் ஒரு ஆரண்யகாண்டம் “- கட்டுரைத் தொகுப்பை  பேரா. சுந்தரம் வெளியிட  முனைவர் மனோகர் பெற்றார்.


* நூல்கள்   அறிமுகம்..:  *
உருவாகாத இந்திய தேசியமும் உருவான இந்து பாசிசமும் “ – பழ. நெடுமாறன் நூல் பற்றி   தோழர் வடிவேல்* நூல் அறிமுகம்  நிகழ்த்தினார் ..:  *

 -   அந்தோனியா கிராம்சி – அறிமுகம் தோழர் ஓடை.துரையரசன் நிகழ்த்தினார் ..:  *

* உரைகள் : படைப்பு அனுபவம்
- திசைகாட்டும் திருப்பூர் –பொதிகை சுந்தரேசன் பேசினார்
*இலக்கிய நூல்கள் அறிமுகம்: துருவன் பாலா
-அம்மாவின் கோலம் (ஜெயதேவன்)
-தொடர்ந்து படிகளில் ( சுப்ரா), கண்மறைத்துணி ( பிரதீபன் )
*இலக்கிய இதழ்கள் அறிமுகம் : பரிசோதனை, தொக்கம்
...பாடல்கள், கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள் வழங்கப்பட்டன.யோகி செந்தில், பாரதி இளந்தமிழர் சங்க நிர்வாகிகள் பாரதி வாசன், முத்து பாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இடம் பெயர்ந்தவர்களின் அனுபவ்ங்களை நூலாக்கிய அனுபவத்தை ஆங்கில நூல் Migration 2.0 சுபரபாரதிமணீயன் பகிர்ந்து கொண்டு இவ்வாறு பேசினார்.
போர், கால நிலை மாற்றம், அகதி நிலையெல்லாம் மக்களை இடம் பெயர வைக்கும் என்ற வரையறை உடைந்து போய் காரல் மார்க்ஸ் வகைப்படுத்தாத, கண்டுபிடிக்காத  தொழிலாளர்களாய் இடம் பெயர்ந்து வந்தத் தொழிலாளர்கள் இன்று பெருநகரங்களை நிறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அதில் முக்கிய நகரம் திருப்பூர்

 திருப்பூரின் மக்கள் தொகையில்( 10 லட்சத்தில்) 4லட்சம் பேர் இப்போது அவர்களாகிவிட்டார்கள்.தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து வந்து வேலை செய்வது பழைய கதை இப்போதெல்லாம் மேற்கு வங்கம், அஸ்ஸாம் பீகார், ஒடியா, ஜார்கலாந்த்லிருந்து என்று 5 மாநில மக்கள் குவிந்திருக்கிறார்கள். பெரும்பாலும் தலித் மக்கள்தான். உயர்சாதிமக்கள் வெகுகுறைவு. இந்த 4 லட்சம் பேரில் 70-80 சதவீதம் இளைஞர்கள். 20 சதவீதம் குடும்பத்தினர். குடும்பத்தினர் என்றால் வயதானவர்கள் இருப்பதில்லை. பெரும்பாலும் தம்பதிகள் , சிறு குழந்தைகள். வயதிற்கு வந்த பெண்களை ஊரிலேயே பாதுகாப்பு கருதி விட்டு விட்டு வருகிறார்கள். வயதானவர்கள் பார்த்துக்கொள்ள என்று...  அங்கு வருமானம் குறைவு என்று வந்தாலும் சாதிய அடக்குமுறை அதிகம் என்பதால் தப்பிக்கிறார்கள். இங்கு வந்த பின் அவர்களின் சாதியைச் சொல்வதில்லை . அவசியமும் இல்லை.தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லுகிறார்கள். ஆதார் வைத்திருப்பார்கள். ரேசன் அட்டை என்று ஊரில் இருப்பதில்லை. நிரந்தர வருமானம் உண்டு. ஆனால் சமூகப்பாதுகாபு இல்லை என்பது தெரிந்தே இருக்கிறார்கள். பனியன் தொழிற்சாலைகள் அவர்கள் முடங்கிக் கொள்ள ஏதாவது வேலை தருகின்றன.

சாப்பாடு விசயத்தில் பெரிய அக்கறை கொள்வதில்லை. சப்பாத்தி( அதுவும் ஆட்டா மாவு போதும் ) , உருளைக்கிழங்கு சில கிலோக்கள் அவர்களுக்குப் போதும். தெருவோர வண்டிஉணவுகளை விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

குழந்தைகளின் கல்வி பற்றி அக்கறை அவர்களுக்கு இல்லை. வெந்ததைத் தின்று மகிழ்ச்சியை வெளிக்காட்டிக்கொள்கிறார்கள்.

இந்தக் குழந்தைகளுக்கான கல்வியைப் பற்றி அக்கறை கொண்டு  சேவ் என்ற தன்னார்வக்குழு திருப்பூரில் 15 இணைப்புப் பள்ளிகளை நடத்துகிறார்கள். அவற்றிலும் மற்றும்  தேசிய குழந்தைத் தொழிலாளர் அமைப்பும் 9-14 வயதுக் குழந்தைகளையே இணைப்புப் பள்ளியில் ( ப்ரிட்ஜ் ஸ்கூல் ) சேர்க்கிறார்கள். மற்ற குழந்தைகள் வீட்டில் இருந்து கொண்டு வீட்டு வேலை செய்து கொண்டு அல்லது இச்சிறு குழந்தைகளை கவனித்துக் கொண்டு ஒரு வகையில் குழந்தைத் தொழிலாளிகளாக இருக்கிறார்கள். வீட்டில் இருக்கும் குழந்தையைப்பார்க்க இன்னொரு குழந்தை இருக்கிறது வீட்டில் இருக்கும்  5-8 வயதுக்குழந்தைகளை அரசும் கைவிட்டு விட்டது. புலம்பெயர்ந்த மக்களின் இக்குழந்தைகளை இணைப்புப் பள்ளியில் சேர்த்து ஒரு வருடம் கழித்து அவர்களின் வயதிற்கு ஏற்ப  அரசு பள்ளிகளில் சேர்ப்பதில் சிக்கல் இருக்கிறது. தமிழ் தெரிவதில்லை. இந்தி பாடமும் அங்கில்லை. ஆசிரியர்களும் சிரமப்படுகிறார்கள். மீண்டும் அக்குந்தைகள் வீட்டிற்கேத் திரும்புகிறார்கள்.என்றார்


.                                            தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.திருப்பூர் 2202488



தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.          திருப்பூர்  மாவட்டம்
* மார்ச்  மாதக்கூட்டம் .4 /3/18 ஞாயிறு  மாலை.5 மணி..              பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் வீதி,(மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர்.,

முன்னிலை: தோழர்கள் கே.சுப்பராயன் ( Ex MP ), எம்.இரவி..,பிஆர் நடராசன்
சிறப்பு விருந்தினர்கள்: எஸ். விசுவநாதன் ( ட்வின் ஸ்டார் ),  எஸ். விசுவநாதன் 
சிறப்புரை :  கண .குறிஞ்சி ( PUC L ) , கே.தங்கவேல்    ( Ex MLA), பேரா.சுந்தரம்

நூல்கள் வெளியீடு :
*. சுப்ரபாரதிமணியனின்  மறைந்து வரும் மரங்கள் “
 * செ.நடேசனின் “ வரலாற்றில் புராணத்திற்கு இடமில்லை “
* ம. நடராசன்  - நாவல் “ விசக்கடி “

* கவிதை நூல்கள்   அறிமுகம்..:  *
:மதிவதனன்( தாழ்ப் பறக்கும் வானம் ) மகாராசன் ( சொல்நிலம் ), வெள்ளைவானவில் ( ஊ.வ.கணேசன்)

* உரைகள் : முதல் நாவல் அனுபவம்
திருப்பூர் படைப்பாளிகள் : இரத்தினமூர்த்தி, முத்துபாரதி
*இலக்கிய இதழ்கள் அறிமுகம் : குறி, புதிய கோடாங்கி, படச்சுருள்
மற்றும்...பாடல்கள், கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள் வருக.                                            தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.திருப்பூர் 2202488







திங்கள், 12 பிப்ரவரி, 2018

நூல்கள்  வெளியீடு:


தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.           திருப்பூர்  மாவட்டம் * பிப்ரவரி  மாதக்கூட்டம் .11 /2/18 ஞாயிறு  மாலை.5 மணி..              பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் ரோடு                                 (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர்.,நடைபெற்றது .
3 நூல்கள் வெளியீடப்பட்டன :
*. சுப்ரபாரதிமணியனின்  ஆங்கில நூல் Migration 2.0
 * எஸ் .ஏ.காதரின் “ குயிலா ‘நாவல்
* ஆட்டனத்தியின் “ இங்கேயும் ஒரு ஆரண்யகாண்டம் “
*. சுப்ரபாரதிமணியனின்  ஆங்கில நூல் Migration 2.0 – சேவ் நிர்வாக இயக்குனர் வியாகுல மேரி வெளியிட வெண்மணி நடராசன் பெற்றார்.
 * எஸ் .ஏ.காதரின் “ குயிலா ‘நாவல் முடியரசு வெளியிட  சசிகலா, இரத்தினமூர்த்தி பெற்றனர்
* ஆட்டனத்தியின் “ இங்கேயும் ஒரு ஆரண்யகாண்டம் “- கட்டுரைத் தொகுப்பை  பேரா. சுந்தரம் வெளியிட  முனைவர் மனோகர் பெற்றார்.


* நூல்கள்   அறிமுகம்..:  *
உருவாகாத இந்திய தேசியமும் உருவான இந்து பாசிசமும் “ – பழ. நெடுமாறன் நூல் பற்றி   தோழர் வடிவேல்* நூல் அறிமுகம்  நிகழ்த்தினார் ..:  *

 -   அந்தோனியா கிராம்சி – அறிமுகம் தோழர் ஓடை.துரையரசன் நிகழ்த்தினார் ..:  *

* உரைகள் : படைப்பு அனுபவம்
- திசைகாட்டும் திருப்பூர் –பொதிகை சுந்தரேசன் பேசினார்
*இலக்கிய நூல்கள் அறிமுகம்: துருவன் பாலா
-அம்மாவின் கோலம் (ஜெயதேவன்)
-தொடர்ந்து படிகளில் ( சுப்ரா), கண்மறைத்துணி ( பிரதீபன் )
*இலக்கிய இதழ்கள் அறிமுகம் : பரிசோதனை, தொக்கம்
...பாடல்கள், கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள் வழங்கப்பட்டன.யோகி செந்தில், பாரதி இளந்தமிழர் சங்க நிர்வாகிகள் பாரதி வாசன், முத்து பாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இடம் பெயர்ந்தவர்களின் அனுபவ்ங்களை நூலாக்கிய அனுபவத்தை ஆங்கில நூல் Migration 2.0 சுபரபாரதிமணீயன் பகிர்ந்து கொண்டு இவ்வாறு பேசினார்.
போர், கால நிலை மாற்றம், அகதி நிலையெல்லாம் மக்களை இடம் பெயர வைக்கும் என்ற வரையறை உடைந்து போய் காரல் மார்க்ஸ் வகைப்படுத்தாத, கண்டுபிடிக்காத  தொழிலாளர்களாய் இடம் பெயர்ந்து வந்தத் தொழிலாளர்கள் இன்று பெருநகரங்களை நிறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அதில் முக்கிய நகரம் திருப்பூர்

 திருப்பூரின் மக்கள் தொகையில்( 10 லட்சத்தில்) 4லட்சம் பேர் இப்போது அவர்களாகிவிட்டார்கள்.தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து வந்து வேலை செய்வது பழைய கதை இப்போதெல்லாம் மேற்கு வங்கம், அஸ்ஸாம் பீகார், ஒடியா, ஜார்கலாந்த்லிருந்து என்று 5 மாநில மக்கள் குவிந்திருக்கிறார்கள். பெரும்பாலும் தலித் மக்கள்தான். உயர்சாதிமக்கள் வெகுகுறைவு. இந்த 4 லட்சம் பேரில் 70-80 சதவீதம் இளைஞர்கள். 20 சதவீதம் குடும்பத்தினர். குடும்பத்தினர் என்றால் வயதானவர்கள் இருப்பதில்லை. பெரும்பாலும் தம்பதிகள் , சிறு குழந்தைகள். வயதிற்கு வந்த பெண்களை ஊரிலேயே பாதுகாப்பு கருதி விட்டு விட்டு வருகிறார்கள். வயதானவர்கள் பார்த்துக்கொள்ள என்று...  அங்கு வருமானம் குறைவு என்று வந்தாலும் சாதிய அடக்குமுறை அதிகம் என்பதால் தப்பிக்கிறார்கள். இங்கு வந்த பின் அவர்களின் சாதியைச் சொல்வதில்லை . அவசியமும் இல்லை.தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லுகிறார்கள். ஆதார் வைத்திருப்பார்கள். ரேசன் அட்டை என்று ஊரில் இருப்பதில்லை. நிரந்தர வருமானம் உண்டு. ஆனால் சமூகப்பாதுகாபு இல்லை என்பது தெரிந்தே இருக்கிறார்கள். பனியன் தொழிற்சாலைகள் அவர்கள் முடங்கிக் கொள்ள ஏதாவது வேலை தருகின்றன.

சாப்பாடு விசயத்தில் பெரிய அக்கறை கொள்வதில்லை. சப்பாத்தி( அதுவும் ஆட்டா மாவு போதும் ) , உருளைக்கிழங்கு சில கிலோக்கள் அவர்களுக்குப் போதும். தெருவோர வண்டிஉணவுகளை விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

குழந்தைகளின் கல்வி பற்றி அக்கறை அவர்களுக்கு இல்லை. வெந்ததைத் தின்று மகிழ்ச்சியை வெளிக்காட்டிக்கொள்கிறார்கள்.

இந்தக் குழந்தைகளுக்கான கல்வியைப் பற்றி அக்கறை கொண்டு  சேவ் என்ற தன்னார்வக்குழு திருப்பூரில் 15 இணைப்புப் பள்ளிகளை நடத்துகிறார்கள். அவற்றிலும் மற்றும்  தேசிய குழந்தைத் தொழிலாளர் அமைப்பும் 9-14 வயதுக் குழந்தைகளையே இணைப்புப் பள்ளியில் ( ப்ரிட்ஜ் ஸ்கூல் ) சேர்க்கிறார்கள். மற்ற குழந்தைகள் வீட்டில் இருந்து கொண்டு வீட்டு வேலை செய்து கொண்டு அல்லது இச்சிறு குழந்தைகளை கவனித்துக் கொண்டு ஒரு வகையில் குழந்தைத் தொழிலாளிகளாக இருக்கிறார்கள். வீட்டில் இருக்கும் குழந்தையைப்பார்க்க இன்னொரு குழந்தை இருக்கிறது வீட்டில் இருக்கும்  5-8 வயதுக்குழந்தைகளை அரசும் கைவிட்டு விட்டது. புலம்பெயர்ந்த மக்களின் இக்குழந்தைகளை இணைப்புப் பள்ளியில் சேர்த்து ஒரு வருடம் கழித்து அவர்களின் வயதிற்கு ஏற்ப  அரசு பள்ளிகளில் சேர்ப்பதில் சிக்கல் இருக்கிறது. தமிழ் தெரிவதில்லை. இந்தி பாடமும் அங்கில்லை. ஆசிரியர்களும் சிரமப்படுகிறார்கள். மீண்டும் அக்குந்தைகள் வீட்டிற்கேத் திரும்புகிறார்கள்.என்றார்


.                                          

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

பின்னலாடை நக்ரின் இலக்கியப் பயணம் :திருப்பூர்  15 வது  புத்தகக் கண்காட்சி :
--------------------------------------------------------------------
திருப்பூர் நூறாண்டைத்தொட்டு இருப்பது அது நகராட்சியாக  உருவாக்கப்பட்டு இருப்பதைக் கொண்டு கணிக்கப்பட்டுள்ளது ( டிசம்.1, 1917 ) ஜன 1 2008 ல்  மாநகராட்சியானது. . தற்போது பின்னலாடைத்துறை ஏற்றுமதியால் 30,000 கோடி ரூபாய் அந்நியச் செலவாணியைக் கொடுக்கும் நகரம். 18,000 கோடி ரூபாய் உள்நாட்டு வர்த்தகத்தால் பெறுகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் moமொத்தமாய் அது 1 லட்சம் கோடியாக உயரும் வாய்ப்புகள் உள்ளதாக ஏற்றுமதியாளர்கள் கருதுகிறார்கள். பல்லடம் தாலுக்காவின் சிறு கிராமமாக ஒரு காலத்தில் இருந்தது இப்போது வந்தாரை வாழ வைக்கும் ஊர். நன்னீர் ஓடிய நொய்யல் இன்று மறைந்து போன நதியாகி விடும் அபாயம் உள்ளது.  கரிசல் பூமியின் பருத்தி முன்பு நெசவாளர்களுக்கு வாழ்வு தந்தது இபோது பின்னலாடை மூலம் வேலை தேடி வரும் வெளிமாநில தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பைத் தந்து வருகிறது.திருப்பூரின் 10 லட்சம் மக்கள் தொகையில் 4 லட்சம் பேர் இடம் பெயர்ந்த தொழிலாள்ர்கள் .இவர்களின் வாழ்க்கையை பdaidaiடைப்பிலக்கியத்தில் சித்தரித்து இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வதுள்ள என் ஆங்கில நூல் மைக்ரேசன் 2.0 ( migration 2.0 - ---                2 .0.  ரஜினி க்குச் சொந்தமானதா என்ன ) 
திருப்பூர் பகுதி சார்ந்த மக்களின் வழ்க்கையை பதிவு செய்தவர்களில் முன்னோடி ஆர. சண்முகசுந்தரம். நாகம்மாள் . சட்டி சுட்டது, போன்ற பல நாவல்களில் இப்பகுதி நிலவுடமைச் சமூகம், அந்த மனித உறவுகள். , சாதீய அமைப்புகள்  பற்றி எழுதியவர் அவர். இன்றைய திருப்பூர் மக்களின் வாழ்க்கையை  சுப்ரபாரதிமணியன் சாயத்திரை நாவல் முதற்கொண்டு நீர்த்துளி, நைரா, சமையறைக்கலங்கள், தேனீர் இடைவேளை, முறிவு, நைரா போன்ற நாவல்களில்  எழுதியிருப்பது போல், வாமு கோமு, கோபாலகிருஷ்ணன், ரத்தினமூர்த்தி, குழந்தைவேல். சம்சதீன் ஹீரா போன்றோர் நாவல்வடிவங்களிலும்   மகுடேசுவரன், கோவை சதாசிவம், தாண்டவக்க்கோன் உள்ளிட்டோர் பிற வடிவங்களிலும் எழுதியுள்ளனர்.muRpookku திருப்பூர் மக்களின் வாழ்க்கையை குறும்படங்கள் மூலம் வெளிப்படுத்தி பெரிய திரையிலும் வெற்றி பெற்ற் இன்று நேற்று நாளை இயக்குனர் இரவிக்குமர், முண்டாசுப்பட்டி ராம் போன்று 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குறும்படங்களை வெளியிட்டுள்ளனர். மொழிபெயர்ப்புப் பணியில் செ.நடேசன், மிலிட்டரி பொன்னுசாமி, போன்றோரின் பணிகளையும், தொல்பொருள் ஆய்வுப்பணியில் வீர்ராசேந்திரன் குழுவினர் குறிப்பாக பேராசான் சுந்தர்ம், ரவிக்குமார் போன்றோரின் பணிகளையும் குறிப்பிட வேண்டும் .

திருப்பூர் பகுதியின்  மண் சார்ந்த கூத்துக்கலை “ அண்ணன்மார்சுவாமி கதை “ இப்பகுதியைச் சுற்றிய:ள்ள பல குடும்பங்களால் இன்னும் இரவு நேரங்களில் நிகழ் கலையாக அரங்கேற்றப்படுகிறது. இதனை எளிமையாக கலைஞர் கருணாநிதி நாவலாக்கினார். ஆனால் மூலத்திற்கு அது நேர்மையாக இல்லை. இன்னும் திரைப்படத்தில் அது சொச்சையாக்கப்பட்டது.பழனிச்சாமி  புலவர் போன்றோர் இப்பகுதி பற்றி பல மரபு வழிக் காவியங்களை இஅய்ற்றியுள்ளனர்.  பழனிச்சாமி புலவரின் காவியங்களில் அழகுமலைக்குறவஞ்சி போன்றவை முக்கியமானவை. இவரின் தந்தை புலவர் கருந்தும்பின் பங்களிப்பும் முக்கியமானது.
திருப்பூர் குமரனின் வாழ்க்கை பற்றிய சித்திரத்தில் முன்னணியில் நிற்பவர் அவருடன் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட பி எஸ். சுந்தரம் அவர்கள். திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாற்றை பி எஸ். சுந்தரம் முதல் ஜீவபாரதி, மு.பழனிச்சாமி, அனிதா கிருஷ்ணமூர்த்தி,  போன்று நூறுபேராவது  எழுதியிருக்கிறார்கள் .

திருப்பூரில் டாஸ்மாக் கடைகள் மிக அதிகம்.. வருமானமும் அதிகம் . புள்ளி விபரங்கள் எந்த உயிருக்கும் ஆறுதல் தராது. திருப்பூர் மாவட்டம் ஆண்டுக்கு 1100 கோடி ரூபாய் டாஸ்மாக்கால் வருமானம் தருகிறது.  திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 300 கடைகளும் திருப்பூர் நகரில் 150 கடைகளும் உள்ளன. தினமும் 3 கோடி ரூபாய்க்கு குடிக்கும் திருப்பூர் வாசிகள் பண்டிகை தினங்களில் 6 கோடி ரூபாய்க்குக் குடிக்கிறார்கள்.thinamum. தினமும் 10 -12 மணி நேரம் உழைக்கும் தொழிலாளர்கள் வாசிப்பை தொடர்ந்து மேற்கொளள் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கதாகும்.


முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலை இலக்கியப்பெருமன்றம், கனவு இலக்கியவட்டம் , திருப்பூர் தமிழ்ச்சங்கம் ( இது 25 ம ஆண்டு )பதியம் போன்ற அமைப்புகள் தொடர்ந்து இலக்கியச் செயல்பாட்டால் திருப்பூரின் நிலையை மக்களுக்கு படைப்பிலக்கியத்தின் வழியே உணர்த்தி வருகின்றன. பின்னல் புத்தக நிலையம் நடத்தும் தொடர்ந்த வாசிப்பு முகாம்கள், புத்தக்கக் கண்காட்சிகள் ( புத்தக தினம், குழந்தைகள் தினம் இவற்றை முன்னிட்டு இவர்களின் நகரின் 100 இடங்களிலான புத்தகக் கண்காட்சிகள் கடந்த இரு ஆண்டுகளில் பெரும் சாதனையாகக் கொள்ளலாம் )

en என் . * நைரா  - நாவல் : ( நைரா- நைஜீரிய  ரூபாய் )
உலகமயமாக்கல் வியாபாரச்சந்தைகளை   எல்லா நாடுகளுக்குமாய் திறந்து விட்டிருக்கிறது. வியாபாரம, பிரச்சினைகள் என்று மக்கள் அலைகிறார்கள். புலம்பெயர்ந்தும் வாழ நிர்பந்தம் ஏற்படுகிறது. அப்படி பல மாநில மக்களும், வேற்று நாட்டு மக்களும் தொழில் நகரங்களில் வாழ்கிறார்கள். அவர்களில் ஒரு பிரிவினர் நைஜீரியர்கள். வியாபாரம் சார்ந்து வந்து குழுக்காக வாழ்கிறார்கள். வாழும் இடங்களில் அவர்களின் நடவடிக்கையால் உள்ளூர் மக்களுக்கு  கலாச்சார அதிர்ச்சி  ஏற்படுகிறது. அந்நியமும் ஏற்படுகிறது. அவர்களின் புறச்சித்திரங்கள் லகுவாகக் கிடைத்து விடுகிறது. அக அளவில் அவர்களின் பிரச்சினைகள் பன்முகத்தன்மை கொண்டாதாய் இருக்கிறது. அவ்வகை மக்களின் ஒருகுறிப்பிட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் எதிர் கொள்ளும் அனுபவங்கள் இதில் காட்டப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களின் அதிர்ச்சி அனுபவங்களும் கூட. எப்படியும்   சிக்கல்கள் சார்ந்த வலிகளாயும் இருக்கின்றன.. புதிய திறப்பாய் பலரின் வாழ்க்கை இதில் காட்டப்பட்டுள்ளது. நகரத்தில் வாழும் மனிதர்களின் மன நெருக்கடிகளும், கல்வியின் வழியே பார்க்கும் பார்வையும் இதில் குறிப்பிடத்தக்கது. புலம்பெயர்ந்தவரிகளில் ஒடியா, பீகார் , வங்காள மக்களைப்போன்று நைஜீரியர்களுன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.  

        
நுகர்வு மயமாகிப் போன சூழலில் திரையரங்குகளும் திரைப்படங்களுமே மக்களின் வாழ்வியலாகப் போய் விட்ட தமிழர்களின்  வாழ்க்கையில் ஒரு நூலகம் வாசகர்களுக்கு அடைக்கலமாக , ஒரு வேடந்தாங்கலாக 16 ஆண்டுகளாக விளங்குவதை ஆச்சர்யத்தோடே  பார்த்து வருகிறேன் திருப்பூர்  மக்கள் மாமன்றம் நூலகத்தை. ஒரு திரையரங்கின் வாசலில் 16 ஆண்டுகளாய் கம்பீரமாய் நின்று கொண்டிருக்கிறது –ஒரு கோவில், ஒரு தீயணைப்பு நிலையம், நெரிசலானத் தெருவில் ஒரு திரையரங்க முகப்பில் சற்றே ஓரமாய் மக்கள் மாமன்றம் பாசமுள்ள அம்மாவுடன் நின்றிருக்கும் குழந்தையைப் போல ..
    இதுவரை சுமார் 5,00,000 வாசகர்கள் அங்கு வந்து நூல்களை, இதழ்களைப் படித்துப் பயன்பெற்றிருக்கிறார்கள்.
திருப்பூரின் பல அரசு நூலகங்களுக்கு இல்லாத பெருமை இந்தத் தனியார் நூலகத்திற்கு உண்டு.சாதாரண வாசகர்களின் அடைக்கலம் என்பதே அது . இலவச நூலகம். இதன் ஸ்தாபகர் சி.சுப்ரமணீயன் எழுதிய திருப்பூரைச்செதுக்கிய சிற்பிகள் நூல் குறிப்பிடத்தக்கது. திருப்பூரின் வரலாறை அஜிதன் குப்புசாமி, சிவதாசன் போன்றோர் எழுதியுள்ளனர். விரிவான வரலாறுகள் வர வேண்டும்.
                                aஆர்பி அமுதனின்  திருப்பூர் : “  டாலர் சிட்டி  “ சமீபத்திய ஆவணப்படம்  பனியன் தொழிலாளிகைத்தறி நெசவுத்தொழிலாளிவிசைத்தறி தொழிலாளிகள் , பனியன் உற்பத்தியாளர்கள் , தொழிற்சங்கத் தலைவர்கள் பார்வையில் அவர்களின் நேர்காணல்கள் மூலம் இப்படம்  சொல்லப்பட்டிருக்கிறது. திருப்பூர் நொய்யல் பற்றியும்சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றியும் பல படங்கள் வந்துள்ளன. ஆனால் தொழில்ரீதியான ஒரு ஆவணப்பட இயக்குனரிடமிருந்து திருப்பூரைப் பற்றிய படமாக இதைக்கொள்ளலாம்..

   ” நான் ஏன் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். நான் பீகாருக்குப் போனால் இந்த தமிழ் நோ யூஸ். இங்கு பீகாரி மொழி கற்றுக் கொடுங்கள் . கற்றுக் கொள்கிறேன். என்க்கு இந்தி இரண்டாம் பட்சம் . அதுகூடப் பரவாயில்லை. கற்றுக் கொள்ளலாம் . நான் ஏன் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். நானா கேட்டேன். இல்லையென்றால் என்னை விட்டு விடுங்கள் . பனியன் கம்பனிக்குப் போய் சம்பாதிப்பேன்.. என்னைக் குழந்தைத் தொழிலாளி என்றெல்லாம் சொல்லாதீர்கள்
இது போன்ற குரல்கள் இங்கு இப்போது சாதாரணம்
ஒன்பது வயது ரோஷனின் ரோஷமான குரல் இது . கல்வி கற்கும் வயது . திருப்பூருக்குஅவன் பெற்றோர் வேலைகாரணமாய்  இடம் பெயர்ந்து வந்ததால் தத்தளிக்கிறான்.ஏதாவது இணைப்புப் பள்ளியில் சேர தன்னார்வக்குழுவினர் முயலும் போது இந்தக் கேள்விகளைத்தான் கேட்கிறான்.

திருப்பூரின் ஒவ்வொரு வார்டிலும் குறைந்தது 100 குழந்தைகள் இப்படி பள்ளிக்கு வெளியே இருக்கிறார்கள். திருப்பூரில் மொத்தம் 60 வார்டுகள்.     
 திருப்பூரின் மக்கள் தொகையில்( 10 லட்சத்தில்) 4லட்சம் பேர் இப்போது அவர்களாகிவிட்டார்கள்.தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து வந்து வேலை செய்வது பழைய கதை இப்போதெல்லாம் மேற்கு வங்கம், அஸ்ஸாம் பீகார், ஒடியா, ஜார்கலாந்த்லிருந்து என்று 5 மாநில மக்கள் குவிந்திருக்கிறார்கள். பெரும்பாலும் தலித் மக்கள்தான். உயர்சாதிமக்கள் வெகுகுறைவு. இந்த 4 லட்சம் பேரில் 70-80 சதவீதம் இளைஞர்கள். 20 சதவீதம் குடும்பத்தினர். குடும்பத்தினர் என்றால் வயதானவர்கள் இருப்பதில்லை. பெரும்பாலும் தம்பதிகள் , சிறு குழந்தைகள். வயதிற்கு வந்த பெண்களை ஊரிலேயே பாதுகாப்பு கருதி விட்டு விட்டு வருகிறார்கள். வயதானவர்கள் பார்த்துக்கொள்ள என்று...  அங்கு வருமானம் குறைவு என்று வந்தாலும் சாதிய அடக்குமுறை அதிகம் என்பதால் தப்பிக்கிறார்கள். இங்கு வந்த பின் அவர்களின் சாதியைச் சொல்வதில்லை . அவசியமும் இல்லை.தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லுகிறார்கள். ஆதார் வைத்திருப்பார்கள். ரேசன் அட்டை என்று ஊரில் இருப்பதில்லை. நிரந்தர வருமானம் உண்டு. ஆனால் சமூகப்பாதுகாபு இல்லை என்பது தெரிந்தே இருக்கிறார்கள். பனியன் தொழிற்சாலைகள் அவர்கள் முடங்கிக் கொள்ள ஏதாவது வேலை தருகின்றன. இவர்களைப் பற்றியது தான்  சமீப என் நூல் மைக்ரேசன் 2.0 ( migration 2.0 )   



சுதந்திரப்போராட்டம், தியாகி குமரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேலான    தியாகிகள் இந்திய சுதந்திரத்தில் பங்காற்றிய ஊர். திருப்பூரில் சுதந்திரப்போராட்டத்தில் 144 தியாகிகள் ஈடுபட்டிருப்பதை சமீபத்தில் சுதந்திரப்போரில் திரூப்பூர் தியாகிகள் நூலை வெளியிட்டிருகும் பிஆர் நடராசன் பதிவு செய்திருக்கிறார் .  2008ல் திருப்பூர் மாவட்டமாக உருவாகியிருந்தாலும் நகரின் கட்டமைப்பு, சுகாதாரம், கழிவு நீர் மேலாண்மை , சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் தத்தளிக்கிறது. தொழிலாளி வர்க்கம் தன்னை தொழிலாளியாக உணர வாசிப்பும் புத்தகங்களூம் அவசியம் என்பதை  நகரில் நடக்கும் விபரீத செயல்கள், தற்கொலைகள் உள்ளிட்டவை காட்டுகின்றன.

இந்நூலாசிரியர்  சுப்ரபாரதிமணியன் :


15 நாவல்கள், 15 சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 55 நூல்களை வெளியிட்டிருக்கும்  சுப்ரபாரதிமணியன் தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கி வருபவர் .சாயத்திரை “ என்ற சுற்ற்சுச்சூழல் மாசுபாடு பற்றிய  நாவலுக்கான தமிழக அரசின் பரிசு, சிறந்த சிறுகதையாளருக்கான இந்திய சனாதிபதி வழங்கிய “ கதா விருது “ உட்பட பல முக்கிய வி