சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 12 ஜூலை, 2011

சிங்கப்பூரில் புத்தர்

ரஜினிகாந்த் சிங்கப்பூரில் இருக்கும் வரை சிங்கப்பூர் ஆச்சர்யங்களுக்குக் குறைவில்லைதான். 15 , 25 சிங்கப்பூர் டாலர் செலவழித்து ‘எந்திரன்’ படத்தைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் , நூறு டாலர் செலவழித்து தேக்காவிலும் மற்ற இடங்களிலும் அம்மன், முருகன் கோவில்களில் விசேச பூஜை செய்து திருப்தி அடைந்திருக்கின்றனர். ரஜினி தெய்வங்களுக்கு நன்றி சொல்கிறார். ரஜினி ரசிகர்கள் அவரை தெய்வம், புத்தர் என்று வர்ணிக்கிறார்கள். சிங்கப்பூர் தமிழர்களைச் சந்தித்து விட்டு தான் சூப்பர் ஸ்டார் சென்னை கிளம்ப வாக்குறுதி தந்திருக்கிறார். ஜெயகோ.

சிங்கப்பூர் ஜெயந்தி சங்கரின் மொழிபெயர்ப்புப் பணிகளைத் தொடர்ந்து கவனிக்கிறபோது இன்னும் ஆச்சர்யம் குறையாது. வாழுமிடத்து கலாச்சாரம், நம்பிக்கை, தொன்மம் முதற்கொண்டு பலவற்றைக் கிரகித்து, மொழிபெயர்த்து அவர் இருப்பை நியாயப்படுத்த அவர் செய்யும் முயற்சிகள் ஆச்சர்யப்பட வைப்பவை. சீன நாடோடிக் கடைகள் முதற்கொண்டு தொன்மக்கதைகள் வரை பல பாலியல் உவ்வே சமாச்சாரங்களை மிகவும் எளிமையாக மொழிபெயர்த்து வரும் அவரின் மொழிபெயர்ப்பு உட்பட நூல்களின் பட்டியல் 25 தொடும் சீக்கிரம். அவரின் கடைசி இரண்டு நாவல்கள் மனப்பிரிகை, குவியம் சரியாகக் கவனிக்கப்பட்டிருக்க வேண்டியவை..சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்க்கையை அவ்வளவு கூர்மையாக அவதானித்து நேர்கோட்டுப்பாணி தவிர்த்த வடிவத்தில் வெளிப்படுத்தியிருந்தார். அவரின் ” வாழும் புத்தர் “ என்ற சமீபத்திய மொழிபெயர்ப்புக் கதை இப்படி முடிகிறது ( வடக்கு வாசல் ஜூன் 2011 ) : “ நிச்சயமாக இவ்வுலகில் தெய்வங்கள் இருக்க முடியாது. ஆனால் முட்டாள்தனத்தினால் எதன் மீதாகிலும் முக்கிய நம்பிக்கை வைக்கவும் மனிதன் தெய்வங்களை உருவாக்குகிறான். சக மனிதர்கள் அவனை வணங்கும்போது தானும் தெய்வம்தான் என்றே எண்ணத் தலைப்படுகிறான். தெய்வமாக நடந்து கொள்ளவும் ஆரம்பிக்கலாம். மனிதர்களும் முன்பை விட அதிகமாக அவனை நம்பவும் பைத்தியமாக வழிபடவும் ஆரம்பிக்கலாம். மக்களுக்குத் தெரியாது அவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பது. சொல்லப்போனால் தெய்வமாக்கப்பட்டிருக்கும் மனிதனுமே ஏமாற்றப்பட்டிருக்கிறான். ஆனால், காலம் செல்ல அம்மனிதன் வேறு வழியில்லாமல் தெய்வத்தைப்போலவே நடக்க முயற்சிக்க வேண்டியிருக்கிறது. இது மக்களை மேலும் முட்டாளாக்கும் வேலை. இதே போன்று ஏமாற்று வேலைகளில் பல்லாண்டுகள் கழிந்து போயின. அவ்வருடங்கள் அபத்தங்கள் நிறைந்தவை. அபத்த வருடங்கள் எல்லாம் போனது போனதுதான். அதே மக்களால்தான் வரலாறும் எழுதப்படும் என்பதுதான் மிகவும் வேடிக்கை.” ரஜினியை ரசிகர்கள் மனிதனாயும், தெய்வமாயும் பார்க்க சமீப சந்தர்ப்பங்கள் வாய்த்திருக்கின்றன.

சிங்கப்பூரின் திரைப்பட ஆர்வம் கொண்டவர்களால் எடுக்கப்பட்டு தமிழகம் உட்பட உலகம் முழுக்க வெளியிடப்பட்ட படம் ’சிங்கையில் குருசேத்திரம்,’வழக்கமான வணிகப் பட வரிசையில் அமைந்ததே. போதைப் பொருட்களைக் கடத்தும் ஒருவன் அத்தொழிலுக்கு அவனது சகோதரியையும், மனவளர்ச்சி குன்றிய குழந்தையையும் பயன்படுத்துகிறான். சகோதரி ஒரு நிலையில் காவல் துறையினரிடம் மாட்டி சிறைக்குச் சென்று விடுகிறாள். தொழிலுக்கும் தன் தனிப்பட்ட குடும்ப விவகாரங்களுக்கும் உதவியாக தனது மாமாவை விரித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அவர் தனது அப்பாவைக் கொன்றது, தாய், தம்பியைக் கடத்தியது உட்பட பலவற்றில் ஈடுபட்டிருந்தது தெரியவரும்போது அவரின் வியாபார மையங்கள் கலைந்து போக சூழ்ச்சி செய்வது பற்றி இப்படம் விவரிக்கிறது. தொழில்நுட்ப வசதிகள் இப்படத்தை மிரட்டலாக்கியிருக்கின்றன. வழக்கமான துப்பறியும் கதையாகவும் அமைந்துவிட்டது.

சிங்கப்பூர் என்பதே மிகப் பெரிய பொருட்களின் விற்பனைச் சந்தை-ஷாப்பிங் சென்டராக இருக்கிறது.அவ்வகை மால்களில் அடைக்கலமாகிற மூன்று கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டபடம்.

“கான்ஷாப்பிங் “அதில் ரேணு என்ற தமிழ்ப் பெண் குழந்தையும் உண்டு. இதன் விரிவான அறிமுகத்தை கனவு 63ம் இதழில் எழுதியிருக்கிறேன்.

சிங்கப்பூரின் படங்களில் சமீப ஆண்டுகளில் கேன்ஸ் திரைப்பட உட்படுத்தலின் மூலம் பேசப்பட்ட படம் “ மை மேஜிக். “ 10 நாளில் எடுக்கப்பட்ட ஒன்றரை மணி நேர படம். பிரிக்ஹி என்ற இயக்குனரின் இப்படம் போஸ்கோ பிரான்சிஸ் என்ற மேஜிக் கலைஞரின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. போஸ்கோ பிரான்சிஸ் மேஜிக் கலைஞனாகக் கூட நடித்திருக்கிறார். அவர் குடிகாரராகி தன் திறமைகளை வீணடித்துக் கொண்டிருப்பவர். அவரின் மகன் அவர் குடித்துவிட்டு எங்கோ கிடக்கிற போதெல்லாம் அவரைக் கூட்டிவந்து அவருக்கு உபசரிப்பு செய்கிறான். அவனின் திருமண வாழ்க்கையும் தோல்வியாகி அவனை அலைக்கழிக்கிறது. அவனது மனைவியிடம் தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு கெஞ்சுவதில் பொழுது கழிகிறது. அவன் மேஜிக் கலையின் தீ விழுங்குதல், கண்ணாடி மேல் நடத்தல், உடம்பில் கம்பிகளைச் செலுத்துதல் போன்றவற்றில் பயிற்சியும் எடுக்கிறான். ஆனால் தாதா கும்பலைச் சேர்ந்த இன்னொருவன் அவனின் முயற்சிகளைக் குலைக்கிறான் என்பதைப் படம் சொல்கிறது. தொலைந்து போய் தங்களை அடையாளம் கண்டடைகிற முயற்சியில் இம்மனிதர்கள் ஈடுபடுகிறார்கள். புத்தராய் தொலைந்து போகிறவர்களும் இருக்கிறார்கள்.

திங்கள், 4 ஜூலை, 2011

Encyclopedia > Subrabharathimanian


NATION MASTER


Subrabharathimanian is one of the modern Tamil eminent wirters from Tirupur. Inspired by the mordern greatest Tamil patriotic poet Mahakavi Subramaniya Bharathiyaar and immense love towards Tamil he renamed himself as Subrabharathimanian. His writings are particularly based on living style and the problems being faced by the people of Tirupur. People in Tirupur are mainly from southern part of tamil nadu such as Madurai, Tirunelveli and its allied areas to work at knitting factories as labours. Due to knitting factories, air, water and land are being polluted severly. This has been the centeric in his works. Tamil is a classical language and one of the major languages of the Dravidian language family. ... Tirupur is a town in Tamil Nadu, south India. ... Mahakavi Subramaniya Bharathiyaar (or Bharathiyar )was born in the year 1882 in a small town called Ettaiyapuram of Tirunelveli District, Tamil Nadu (The region has been re-districted under Thoothukudi District, Tamil Nadu). ... Tamil is a classical language and one of the major languages of the Dravidian language family. ... Tirupur is a town in Tamil Nadu, south India. ... Madurai is situated on the banks of Vaigai River in Tamil Nadu, a southern Indian state. ... Tirunelveli is a city in Tamil Nadu state of southern India. ... Look up air in Wiktionary, the free dictionary. ... Water (from the Old English waeter; c. ... A LAND attack is a DoS (Denial of Service) attack that consists of sending a special poison spoofed packet to a computer, causing it to lock up. ...

He has been writing short and long fiction with high seriousness, dealing with the manner in which the thoughtless plundering of natural resources is leading India to a disastrous future. His concern for the marginalised and the poor is palpable in every one of his stories. He has won many awards including the prestigious Katha Award for the best short story writer from the President of India.
Among his five novels, CHAYATHIRAI has won uniform accolades and has been recently rendered into English. PINANKALIN MUGANGAL is another novel on the way the adolescence of the poor people is blasted in every way due to poverty and the increasing turn towards moral turpitude in our society. He has published 20 books including 10 short story collections and one travelogue.
UNWRITTEN LETTERS deals with pitiable segment of our society and uses the post-modernist technique of Spatial Form to convey how the mill workers lead a life of silent desperation.