சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
சனி, 16 செப்டம்பர், 2023
சுவர்கள் நாவல்- மாற்கு /
சுப்ர பாரதி மணியன்
கிறிஸ்தவத்தில் கல்லறைகளில் தீண்டாமை இருக்கிறது தீண்டாமை சுவர்கள் கல்லறைகளில் இருந்து மக்களை பிரிக்கின்றன. ஆதிக்க சாதியைச் சார்ந்த கிறிஸ்தவர்களுக்கு ஓரிடத்திலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மற்றொரு இடத்திலும் கல்லறை இருக்கிறது என்ற நிலைமை தமிழகத்தில் இன்றும் தொடர்கிறது. கிறிஸ்துவத்தில் தீண்டாமைக்கு இடம் இல்லை ஆனால் தீண்டாமை பல இடங்களில் கடைபிடிக்கப்படுகிறது இதை கிறிஸ்தவ தலைவர்களால் தடுக்க முடியவில்லை தீண்டாமை என்பது இந்தியாவை பொறுத்த அளவில் சமயங்களைக் கடந்த சமூக பிரச்சனையாக மாறி உள்ளது என்பது எதார்த்தம். தலித் ஒருவர் கிறிஸ்துவராக மாறினால் அவர் கிறிஸ்துவராக மாறிவிட்டா.ர் எனவே அவரை சமமாக மதிக்க வேண்டும் என்று பொதுச் சமூகம் நினைப்பதில்லை. மத மாற்றத்திற்கு முன்பு அவரை எப்படி நடத்தியதோ அப்படியே தான் நடத்துகிறது என்ற மாற்கு அவர்களுடைய எண்ணங்கள் நாவல் வடிவங்களாக கிறிஸ்துவ சமுதாயத்தில் தலித் மக்கள் படும் சிரமங்களை கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது கிறிஸ்தவத்தில் எந்த விதத்தில் தீண்டாமை இருந்தாலும் தவறுதான் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது காலத்திற்கு காலம் புது வடிவங்களில் அது வெளிப்பட்டு இருப்பதை இந்த நாவலில் அவர் சொல்கிறார்.
இந்த விஷயம் சாவிலும் தொடர்கிறது ஆதிக்க சாதிக் கிறிஸ்தவர்கள் புதைக்கப்பட்ட இடங்களில் கல்லறைகளில் பக்கத்தில் தலித் கிறிஸ்தவர்கள் புதைக்கப்படக்கூடாது என்பதற்காக சுவரைக்கட்டி பிரித்துப் பார்க்கிறார்கள். இந்த தீண்டாமையை பற்றி எழுதப்பட்ட நாவல் தான் சுவர்கள் என்பதாகும்.
இறந்த பின்பு கிறிஸ்தவர்களுக்கு ஏற்படும் இந்த பாகுபாடு தேவையா கல்லறையில் சமத்துவம் இருக்கிறதா என்பதை பற்றி அவர் இந்த நூலை எழுதியிருக்கிறார். மாற்கு அவர்கள் கிறிஸ்துவ சமுதாயத்தைப் பற்றிய விமர்சனங்களை சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாவல்களில் வெளிப்படுத்தி இருக்கிறார் மற்றும் அவருடைய புலனாய்வு நூல்களும் தன் வரலாற்று நூல்களும் இதை வெளிப்படுத்துகின்றன. இதில் வருகிற செல்வம் என்ற கதாபாத்திரம் கிறிஸ்தவ பாதிரியார் ஆகி சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் ஆனால் அங்க இருக்கிற தீண்டாமையும் பாகுபாடும் அவரை அங்கிருந்து வெளியேறு செய்கிறதும் அவர் மீது காவல்துறையின் வன்முறையும் ஏவப்படுகிறது அவர் தன்னுடைய உயிரையும் இழக்க வேண்டி இருக்கிறது
இந்த நாவலில் பல கதாபாத்திரங்கள் மூலம் அவர் சொல்லும் குரலை நாம் கேட்க வேண்டும் “ செத்த பிறகும் மேரிக்கு பக்கத்தில் வாழ முடியாத இப்ப நிலைதான் சாமி தெரியுது உயர்ந்த சாதிக்கு தனி கல்லறை. அரிசனங்களுக்கு தனி கல்லறை ..என்ன சாமி இது சாமி.. செத்த பிறகு கூட நான் என் மேரிக்கு பக்கத்தில் இருக்கக் கூடாதா ..எதற்கு சாமி இது தனித்தனி கல்லறையா நான் செத்த பிறகு என் மேரிக்கு பக்கத்தில் இருக்கணும்னு ஆசைப்படுகிறேன் என்று அதில் வருகிற கதாபாத்திரங்கள் ஒன்றை கதறுகிறது
ஆதிக்க சாதி கல்லறைக்கு பக்கத்தில் புதைக்க முயற்சி செய்தால் கலகம் வரும். சாதி கலவரத்திற்கு வித்திட்டதாக அமையும் என்பதை இதில் வருகின்ற பல சம்பவங்கள் சொல்கின்றன. “ என்னடா இவன் எப்படி இங்கே வந்தான்னு தானே நினைக்கிறீங்க நமது சாதியை மதிப்ப நான் சாமியாரா போயி உயர்த்துவேன்னு நினைச்சீங்க ஆனா நான் அங்கு இருந்தா நமது சாதியின் மதிப்பு அவ்வளவு உயர்த்த முடியாது வெளியே வந்தாத்தான் அதிகம் உயர்த்த முடியும் என்று நினைத்தேன் அதனால் வெளியே வந்துட்டேன் “ என்று செல்வம் என்ற ஒரு மனிதனின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது ஆனால் அந்த குரல் பலவீனம் ஆகிப்போகிறது. இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் பிரிக்கும் சுவற்றை இடிக்கிறார்கள். அதன் பின்னால் என்ன நடக்கிறது என்பதையும் இந்த நாவல் சொல்கிறது. சமமான கல்லறையும் வேண்டும் தடுப்பு சுவர்கள் இருக்கக்கூடாது என்று போராடும் விடுதலை குழுக்கள் மதவாதிகளால் மற்றும் காவல்துறையால் அடக்கப்படுகிறார்கள்.” விளைச்சலில் எல்லோரும் சமமாக பாவிக்கப்பட வேண்டும். சமமாக அறுவடை செய்ய வேண்டும் இருப்பதை பரிந்து கொள்ள வேண்டும் எனக் கூட்டு முறை விவசாயம் செய்து அதை அடுத்த தலைமுறைக்குஅறிவிக்க வேண்டும் என்ற கனவை கூட இந்த நாவல் வருகிற கதாபாத்திரங்கள் உணர்த்துகின்றன. சாதிக் கொடுமைகளை எல்லாம் நீக்க வேண்டும் என்று கிறிஸ்துவத்துக்குள் கருப்பு தினம் கொண்டாடப்படுகிறது. அந்த கருப்பு தினங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதை இந்த சுவர்கள் நாவல் சொல்லுகிறது
ரூபாய் 200 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை வெளியீடு
0
ஓ கனடா
(யாவரும் கேளீர் )
பொ. முத்துக்குமரன், ம சாலமன் பெர்னாட்ஷா/
சுப்ர பாரதி மணியன்
உலகில் பெரிய நாடு என்ற பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு வருகிறது கனடா. ஒரு சமூகம் அதன் முதியோரையும் நோயுற்றவரையும் அனாதைகளையும் பழங்குடிகளையும் சிறுபான்மையினரையும் ஊனமுற்றவர்களையும் பெண்களையும் குழந்தைகளையும் எப்படி கவனித்துக் கொள்கிறது என்பதிலிருந்து தான் அந்த சமூகத்தை நாம் மதிப்பட வேண்டும் என்பதை கனடா உணர்ந்துள்ளதாக இந்த ஆசிரியர்கள் தங்களுடைய முதிய வயதின் முத்திரையாக இந்த நூலில் தெரிவிக்கிறார்கள். கண்ணால் கண்டபின் கனடா நாட்டைப் பற்றிய பரம்பரை ரீதியான பூகோள தகவல்கள் மற்றும் ஆட்சி முறை அமைப்புகள், முக்கியமான இடங்கள் ஆகியவற்றை பற்றி இந்த பயணங்கள் மூலம் கண்டு கொண்டதை சொல்கிறது இந்நூல்.என்றென்றும் கனடா ஒரு காலனிய நாடு என்றுதான் அறியப்பட்டுள்ளது. முதலில் பிரெஞ்சு காலனி ஆதிக்கம். பிறகு பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம். தற்போது அமெரிக்க காலனி ஆதிக்கம் . அந்த நிலையில் பிரிட்டனையும் அமெரிக்க ஒன்றியத்தை எதிர்த்து எப்படி போராடியது என்பது விளக்கப்பட்டுள்ளது. ஒரு தேசமாக கனடா ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற உந்துதல் தேசப்பற்றின் காரணமாக பிறந்திடவில்லை அரசு நிர்வகிக்க இடையூறாக இருந்த இன்னல்கள் இருந்து விடுவதற்கான ஆயத்தங்களில் பிறந்தது என்பது பற்றிய ஆய்வுக்குறிப்புகள் இந்த நூலில் நிறைய உள்ளன
இன்றைய கனடா என்பது அமெரிக்க ஒன்றியம், அட்லாண்டிக் பெருங்கடல் பசிபிக் பெருங்கடல், அலாஸ்கா போன்றவற்றின் எல்லைகளைக் கொண்டு இருக்கிறது இந்த எல்லை பரிணாம வரலாற்றை தொடக்கம் முதல் முறை இந்த நூல் எடுத்துரைக்கிறது, சமூக நீதி நீதி சேவைகளை வழங்குதல், பொதுநிலை பாதுகாத்தல் சம வாய்ப்பு உடைய சூழலை பேண்ல் சுற்றுச்சூழலை பாதுகாக்கல் போன்ற செயல்பாடுகளில் கனடா அரசு முக்கிய பங்கு வைக்கிறது. கனடா நாட்டில் பல்வேறு இடங்களுக்கு செல்கிற போது அவை தருகிற சரித்திரம் சம்பந்தமான நினைவுகளும் சம்பவங்களும் பல விஷயங்களையும் பல போர்களையும் மக்களின் குடியேற்ற விஷயங்களிளையும் அவர்களின் வாழ்க்கையும் சொல்வதாக இருப்பதை விரிவாக இந்த நூல் எடுத்துரைக்கிறது. முடிந்தது பயணம் தொடங்கியது வரலாறு என்று சொல்கிறார்கள் அதேபோல ஒரு பயணம் முடிகிறபோது ஒரு பயணம் நூல் இவர்களிடமிருந்து தொடங்குவது என்பதன் அத்தாட்சியாக இந்த நூல் விளங்குகிறது பல அபூர்வமான படங்களுடன் விளங்குகிறது
ரூபாய் 900 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு சென்னை
சுவர்கள் நாவல்- மாற்கு /
சுப்ர பாரதி மணியன்
கிறிஸ்தவத்தில் கல்லறைகளில் தீண்டாமை இருக்கிறது தீண்டாமை சுவர்கள் கல்லறைகளில் இருந்து மக்களை பிரிக்கின்றன. ஆதிக்க சாதியைச் சார்ந்த கிறிஸ்தவர்களுக்கு ஓரிடத்திலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மற்றொரு இடத்திலும் கல்லறை இருக்கிறது என்ற நிலைமை தமிழகத்தில் இன்றும் தொடர்கிறது. கிறிஸ்துவத்தில் தீண்டாமைக்கு இடம் இல்லை ஆனால் தீண்டாமை பல இடங்களில் கடைபிடிக்கப்படுகிறது இதை கிறிஸ்தவ தலைவர்களால் தடுக்க முடியவில்லை தீண்டாமை என்பது இந்தியாவை பொறுத்த அளவில் சமயங்களைக் கடந்த சமூக பிரச்சனையாக மாறி உள்ளது என்பது எதார்த்தம். தலித் ஒருவர் கிறிஸ்துவராக மாறினால் அவர் கிறிஸ்துவராக மாறிவிட்டா.ர் எனவே அவரை சமமாக மதிக்க வேண்டும் என்று பொதுச் சமூகம் நினைப்பதில்லை. மத மாற்றத்திற்கு முன்பு அவரை எப்படி நடத்தியதோ அப்படியே தான் நடத்துகிறது என்ற மாற்கு அவர்களுடைய எண்ணங்கள் நாவல் வடிவங்களாக கிறிஸ்துவ சமுதாயத்தில் தலித் மக்கள் படும் சிரமங்களை கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது கிறிஸ்தவத்தில் எந்த விதத்தில் தீண்டாமை இருந்தாலும் தவறுதான் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது காலத்திற்கு காலம் புது வடிவங்களில் அது வெளிப்பட்டு இருப்பதை இந்த நாவலில் அவர் சொல்கிறார்.
இந்த விஷயம் சாவிலும் தொடர்கிறது ஆதிக்க சாதிக் கிறிஸ்தவர்கள் புதைக்கப்பட்ட இடங்களில் கல்லறைகளில் பக்கத்தில் தலித் கிறிஸ்தவர்கள் புதைக்கப்படக்கூடாது என்பதற்காக சுவரைக்கட்டி பிரித்துப் பார்க்கிறார்கள். இந்த தீண்டாமையை பற்றி எழுதப்பட்ட நாவல் தான் சுவர்கள் என்பதாகும்.
இறந்த பின்பு கிறிஸ்தவர்களுக்கு ஏற்படும் இந்த பாகுபாடு தேவையா கல்லறையில் சமத்துவம் இருக்கிறதா என்பதை பற்றி அவர் இந்த நூலை எழுதியிருக்கிறார். மாற்கு அவர்கள் கிறிஸ்துவ சமுதாயத்தைப் பற்றிய விமர்சனங்களை சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாவல்களில் வெளிப்படுத்தி இருக்கிறார் மற்றும் அவருடைய புலனாய்வு நூல்களும் தன் வரலாற்று நூல்களும் இதை வெளிப்படுத்துகின்றன. இதில் வருகிற செல்வம் என்ற கதாபாத்திரம் கிறிஸ்தவ பாதிரியார் ஆகி சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் ஆனால் அங்க இருக்கிற தீண்டாமையும் பாகுபாடும் அவரை அங்கிருந்து வெளியேறு செய்கிறதும் அவர் மீது காவல்துறையின் வன்முறையும் ஏவப்படுகிறது அவர் தன்னுடைய உயிரையும் இழக்க வேண்டி இருக்கிறது
இந்த நாவலில் பல கதாபாத்திரங்கள் மூலம் அவர் சொல்லும் குரலை நாம் கேட்க வேண்டும் “ செத்த பிறகும் மேரிக்கு பக்கத்தில் வாழ முடியாத இப்ப நிலைதான் சாமி தெரியுது உயர்ந்த சாதிக்கு தனி கல்லறை. அரிசனங்களுக்கு தனி கல்லறை ..என்ன சாமி இது சாமி.. செத்த பிறகு கூட நான் என் மேரிக்கு பக்கத்தில் இருக்கக் கூடாதா ..எதற்கு சாமி இது தனித்தனி கல்லறையா நான் செத்த பிறகு என் மேரிக்கு பக்கத்தில் இருக்கணும்னு ஆசைப்படுகிறேன் என்று அதில் வருகிற கதாபாத்திரங்கள் ஒன்றை கதறுகிறது
ஆதிக்க சாதி கல்லறைக்கு பக்கத்தில் புதைக்க முயற்சி செய்தால் கலகம் வரும். சாதி கலவரத்திற்கு வித்திட்டதாக அமையும் என்பதை இதில் வருகின்ற பல சம்பவங்கள் சொல்கின்றன. “ என்னடா இவன் எப்படி இங்கே வந்தான்னு தானே நினைக்கிறீங்க நமது சாதியை மதிப்ப நான் சாமியாரா போயி உயர்த்துவேன்னு நினைச்சீங்க ஆனா நான் அங்கு இருந்தா நமது சாதியின் மதிப்பு அவ்வளவு உயர்த்த முடியாது வெளியே வந்தாத்தான் அதிகம் உயர்த்த முடியும் என்று நினைத்தேன் அதனால் வெளியே வந்துட்டேன் “ என்று செல்வம் என்ற ஒரு மனிதனின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது ஆனால் அந்த குரல் பலவீனம் ஆகிப்போகிறது. இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் பிரிக்கும் சுவற்றை இடிக்கிறார்கள். அதன் பின்னால் என்ன நடக்கிறது என்பதையும் இந்த நாவல் சொல்கிறது. சமமான கல்லறையும் வேண்டும் தடுப்பு சுவர்கள் இருக்கக்கூடாது என்று போராடும் விடுதலை குழுக்கள் மதவாதிகளால் மற்றும் காவல்துறையால் அடக்கப்படுகிறார்கள்.” விளைச்சலில் எல்லோரும் சமமாக பாவிக்கப்பட வேண்டும். சமமாக அறுவடை செய்ய வேண்டும் இருப்பதை பரிந்து கொள்ள வேண்டும் எனக் கூட்டு முறை விவசாயம் செய்து அதை அடுத்த தலைமுறைக்குஅறிவிக்க வேண்டும் என்ற கனவை கூட இந்த நாவல் வருகிற கதாபாத்திரங்கள் உணர்த்துகின்றன. சாதிக் கொடுமைகளை எல்லாம் நீக்க வேண்டும் என்று கிறிஸ்துவத்துக்குள் கருப்பு தினம் கொண்டாடப்படுகிறது. அந்த கருப்பு தினங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதை இந்த சுவர்கள் நாவல் சொல்லுகிறது
ரூபாய் 200 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை வெளியீடு
0
தங்க பூபதி
திருப்பூர் எழுத்தாளர் சுப்ர பாரதி மணியன் அவர்களின் நூறாவது நூல் வெளியீட்டுக்கு பாராட்டு விழா
திருப்பூர் எழுத்தாளர் சுப்ர பாரதி மணியன் அவர்களின் நூறாவது நூல் வெளியீட்டுக்கு பாராட்டு விழா ஞாயிறு 3/9/23 அன்று மாலை திருப்பூரில் நடைபெறுகிறது. வாசகர் சிந்தனை பேரவை இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கிறது.
திருப்பூரில் எழுத்தாளர் சுப்ரபாதி மணியன் 25 நாவல்கள் இருபதுக்கு சிறுகதை தொகுப்புகள் 30 கட்டுரை தோப்புகள் உட்பட 100 நூல்களை வெளியிட்டு இருக்கிறார் ச.மீபத்தில் அவரின் நூறாவது புத்தகமாக “ சிலுவை “என்ற நாவல் வெளி வந்திருக்கிறது.
அந்த நாவல் 900 பக்கங்கள் கொண்டது .1200 ரூபாய் விலை உள்ளது .அதை சென்னை சேர்ந்த நியூஸ் செஞ்சுரி புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது
அவரின் 100 புத்தகங்கள் வெளியீட்டை ஒட்டி அவருக்கு திருப்பூர் வாசகர் சிந்தனை பேரவை பாராட்டு விழா நடத்துகிறது .திருப்பூர் வாசகர் சிந்தனை பேரவையின் ஒன்பதாவது நிகழ்வு ஞாயிறு அன்று மாலை 4 மணிக்கு காந்திநகர் ஏவிபி லேஅவுட் குடியிருப்போர் சங்க அலுவலக கட்ட்டத்தில் நடைபெறுகிறது
அப்போது “விடுதலை வேள்வியில் தமிழகம் “என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவு நடத்தும் எஸ் ஏ முத்து பாரதி அவர்கள் தென்னிந்திய புரட்சி என்ற தலைப்பில் பேசுகிறார் மற்றும் கவிதை வாசிப்பில் காயத்ரி சிவகுமார் அவர்களின் தலைமையில் கவிதை வாசிப்பு நடைபெறுகிறது . இலக்கிய எழுத்ஹ்டு அனுபவம் என்ற தலைப்பில் அழகு பாண்டி அரசப்பன் பேசுகிறார் மற்றும் சுப்ரபாரதிமணியன் சிலுவை என்ற நூறாவது நூலுக்கு பாராட்டும் அவருக்கு சமீபத்தில் திருச்சி சார்ந்த மதிப்பு மிக்க எஸ் ஆர் வி இலக்கிய விருது பெற்றதற்கு பாராட்டும் நடைபெறுகிறது.
இந்த விழாவிற்கு ஏவிபி குடியிருப்பு நல சங்கம் தலைவர் துரை அவர்களும் செயலாளர் வெள்ளிங்கிரி எவ்வளவு தூரம் ,துணைப் பொதுச் செயலாளர் பிரபு அவர்களும் பொருளாளர் விளங்கும் அவர்களும் துணைத்தலைவர் நடராஜன் அவர்களும் முன்னிலை வைக்கிறார்கள்.
மற்றும் எழுத்தாளர்கள் பங்குபெறும் புத்தகங்கள் பற்றிய கருத்துரைகள் புத்தக அறிமுக அறிமுகங்கள் நடைபெற உள்ளன
பிரதி மாதம்முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு இந்த வாசிப்பு இயக்க க் கூட்டம் நடைபெறுகிறது
அனைவரையும் இந்த விழாவிற்கு வர தங்க பூபதி அதனுடைய ஒருங்கிணைப்பாளர் தகவல் தந்திருக்கிறார் 9944570352
0
சுப்ரபாரதிமணியனின் “ சிலுவை “ நாவல்
300 ஆண்டுகளுக்கு மேலான கொங்கு பகுதியின் சரித்திர, கலாச்சார வாழ்வை காட்டும் நாவல் இது. திப்பு சுல்தான் வருகை , கிறிஸ்தவர்களின் குடியேற்றம் தொடங்கி ஒரு கிறிஸ்துவ குடும்பத்தின் நீண்ட வாழ்க்கை இதில் இடம் பெற்றிருக்கிறது.
சோமனூர் வாழ் நெசவாளர் வாழ்வியல், மில் தொழிற்சங்க இயக்க செயல்பாடுகள் என்று தொடங்கி நவீனப் பின்னலாடை தொழில்சார்ந்த வாழ்க்கை முறை என்று சமீப காலம் வரை நீள்கிறது.
அந்தக் கிறிஸ்தவ குடும்பத்தின் முழு உலகமும் தனித்து ஒரு தீவாய் தள்ளப்பட்டாலும் சமூக மனிதர்களின் தொடர்புடன் அடிவானத்தை நோக்கிப் பயணப்படுகிற கப்பலை போல் ஆழ்கடல் நடுவில் கரை எதுவும் காணாதபடி இருத்தலியல் சிக்கல்களுடன் சென்று கொங்கு பகுதி மக்களின் வாழ்க்கையின் உண்மை தன்மையையும் மதிப்பீடுகளையும் சொல்கிறது இந்த நாவல்..
“ சிலுவை “ நாவல் சுப்ரபாரதி மணியனின் இருபத்தைந்தாவது நாவலாகவும், நூறாவது புத்தகமாகவும் இது அமைகிறது
சுப்ரபாரதிமணியன் திருப்பூர் 9486101003/
subrabharathi@gmail.com/ fb lkanavusubrbharathimanian tiruppru
திருநங்கையர் சிறுகதைகள் நூல் அறிமுகம் :
திருப்பூரில் வாழும் திருநங்கையினரின் வாழ்க்கையை அடைப்படையாகக் கொண்டு புனைவுடன் எழுதப்பட்ட சிறுகதைகள் உட்பட 19 திருநங்கையர் பற்றிய சிறுகதைகள் கொண்ட நூல் ” திருநங்கையர் சிறுகதைகள் ” அறிமுகம் மக்கள் மாமன்றத்தில் செவ்வாய் மாலை நடைபெற்றது.
மக்கள் மான்ற செயலாளர் ராஜா தலைமை வகித்தார், கவிஞர்கள் மாரிமுத்து, மாயாவி மனோகரன், மற்றும் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், வின்செண்ட்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நூலில் திருப்பூரில் வாழும் திருநங்கையினரின் வாழ்க்கையை அடைப்படையாகக் கொண்டு புனைவுடன் எழுதப்பட்ட இரண்டு சிறுகதைகளை சுப்ரபாரதிமணியன் மற்றும் முத்து பாரதி எழுதியுள்ளனர். மொத்தம் 19 கதைகள் இடம்பெற்றுள்ளன. இதை சேலம் பொன் குமார் தொகுத்துள்ளார். சென்னை நிவேதிதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது . ரூ 200
என் ஹைதராபாத் நாவல்கள் தொகுப்பு
மற்றும் சிலர் , சுடுமணல், நகரம் 90 ( ஹைதராபாத்தை மையமாகக் கொண்ட 3 நாவல்கள் தொகுப்பு )
ஹைதராபாத் நாவல்கள் : சுப்ரபாரதிமணியன்
அசோகமித்திரன் அவர்களின் படைப்புகள் மூலம்தான் ஹைதராபாத் பற்றி நான் அறிந்திருந்தேன். ” பதினெட்டாவது அட்சக்கோடு “ நாவல் மற்றும் நூறு சிறுகதைகளில் அவர் எழுதிய சித்தரிப்புகளையும் ஹைதராபாத் மக்கள் வாழ்க்கையையும் அறிந்திருந்தேன்.
இடம் பெயர்ந்து ஆந்திர மாநிலத்திற்கு வேலைக்குச் சென்றேன்.தொலைத்தொடர்புத்துறையில் பொறியாளர் பணி அங்குதான் எனக்குக் கிடைத்தது எங்கள் குடும்பத்தலைமுறையே மைசூரில் ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் . ஏதோ காரணத்திற்காக கோவை மாவட்ட வந்து குடியேறியவர்கள்.நாங்கள் குடியேறிகளா என்று பல சமயங்களில் கேட்டுக் கொள்வேன்.( திப்புசுல்தான் படையெடுப்பு, குல அவமரியாதை என்று அப்போதைய இடம் பெயர்வுக்குக் காரணம் சொல்வார்கள் )
செகந்திராபாத்தில் வசிக்கும் போது சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் டெக்கான் கிரானிக்கல் ஆங்கில தினசரியை புரட்டும்போது ஒரு வகை பதட்டம் வந்துவிடும் எனக்கு. சனி ஞாயிறுகளில் திவோலி ,லிபர்ட்டி திரையரங்குகளில் போடப்படும் உலக திரைப்படம்., இந்திய திரைப்படம் தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய விளம்பரம் வரும் .
. தொலைக்காட்சி தொலைபேசி துறையில் பொறியாளர் பணி என்பதால் எனக்கு ஒரே வகையான வேலை நேரம் என்றில்லாமல் ஷிப்ட் முறையில் இருக்கும். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் என் வேலை நேரம் சார்ந்து லிபர்டி தியேட்டரில் போடப்படும் உலக திரைப்படம்., இந்திய திரைப்படம் பார்ப்பதற்கு ஏதுவாக நான் என் வேலை திட்டத்தை மாற்றி வைத்துக் கொள்வேன். அல்லது பிறரின் வேலை நேரத்தை எடுத்துக் கொண்டு திரைப்படம் பார்ப்பதற்காக மாற்றி அமைத்துக் கொள்வேன். அப்படித்தான் லிபர்டி பிரத்தியேக திரையரங்கில் பல முக்கியமான பரிசு பெற்ற இந்தியத் திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். அது ஒரு தனி ஆர்வமாக இருந்தது .காலை வேலை என்பதை மாற்றி மதியம் என்று மாற்றிக்கொள்வேன் காலை வேலை முடிந்து இரண்டு மணிக்கு அந்த படங்களுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்வேன் அல்லது மாலை பணி என்றால் காலையில் இருக்கும் காட்சிக்கு செல்வேன் பெரும்பாலும் அந்த வகை பரிசு பெற்ற படங்கள், தேசிய விருது படங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை காட்சிகளில் திரையிடப்படும். அதற்கேற்ப நான் என் பணி நேரத்தை தொடர்ந்து பிறரிடம் சொல்லி மாற்றிக் கொள்வேன். பலருக்கு இது பிடிக்கவில்லை. திரைப்படம் பார்க்க இப்படி தொந்தரவு செய்கிறானே என்பார்கள் . சத்யஜித்ரே, மிருணாள் செண் உட்பட பலரின் படங்களை அப்படித்தான் நான் லிபர்ட்டி திரையரங்கில் பார்த்தேன் .இது ஒரு வகை அனுபவம் .
இன்னொரு பக்கம் தமிழ்த் திரைப்படங்களை பார்க்க கூட ஆவலாக இருக்கும் .எப்போது எந்த காட்சியில் தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன என்பது டெக்கான் கிரானிக்கிள் ஆங்கில தினசரியில் விளம்பர பக்கத்தில் 2க்கு 2 இஞ்ச் வடிவத்தில் ஒரு சிறு செய்தியாக வந்து இருக்கும். அதை பார்த்து தமிழ்த் திரைப்படத்திற்கு போகிற திட்டத்தைப் போட வேண்டும். வீடியோ இல்லாத காலம். தமிழ் திரைப்படம் பார்க்க ஞாயிற்றுக்கிழமை தியேட்டரின் காலை காட்சிக்கு செகந்திராபாத் ஹைதராபாத் இரட்டை நகர தமிழர்கள் தவம் இருக்க வேண்டியிருக்கும். ஒரே ஒரு காலை காட்சி பெரும்பாலும் இருக்கும். அப்படம் தமிழ்நாட்டில் வந்து ஐந்து ஆண்டுகளாவது ஆகியிருக்க வேண்டிய கட்டாய நிபந்தனைகளை ஒன்றாய் அதில் திரையிடப்படும் தமிழ் படங்களின் வகை இருக்கும். அப்படித்தான் ஒரு ஞாயிறு காலையில் ரிக்சாக்காரன் திரைப்படம் திரையிட்டிருந்தார்கள். படம் பார்க்கிற மனநிலை இல்லை ஆனால் பொழுது போக வேண்டி இருந்தது. அதனால் டிவோலி திரையரங்கிற்கு சென்று இருந்தேன். ஏதோ ஒரு உந்துதல் காரணமாக பதிவு பெற்று உள்ளே சென்று உட்கார்ந்தேன். பலர் குறிப்பிடும்படியாக தங்களின் அருகில் துணி மூட்டைகளை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் ஹைதராபாத் செகந்திராபாத் பகுதிகளில் இருக்கக்கூடிய சின்னாளப்பட்டி சேர்ந்த சிறு வியாபாரிகள். மிதிவண்டிகளில் துணி மூட்டைகளை வைத்துக் கொண்டு செகந்திராபாத் ஹைதராபாத்தில் வெளிப்புற பகுதிகளுக்கும் தெரிந்த இடங்களுக்கும் சென்று துணி வியாபாரம் செய்பவர்கள். ஞாயிற்றுக்கிழமை கண்டோன்மென்ட் பகுதியில் தமிழக ராணுவ வீரர்கள் குடும்பங்கள் அதையும் இவ்வகைத் துணிகளை வாங்குவார்கள் . பார்வையிடுவார்கள் பெரும்பாலும் தமிழர்கள் இருக்கும் பகுதிகளுக்கு தான் இந்த துணி வியாபாரிகள் செல்வார்கள். ஞாயிற்றுக்கிழமை என்பது அவர்களின் வியாபாரத்தில் மிக முக்கியமான நாளாகும் .அதை விட்டுவிட்டு தமிழ் திரைப்படத்தை பார்க்க அவர்களை அவர்களில் பலர் அங்கு இருப்பது எனக்கு அதிசயமாகவே பட்டது. பிறகு அவ்வகை கூட்டத்தை பலர் பல சமயங்களில் பார்த்திருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். தமிழ் திரைப்படம் பார்க்கும் ஆர்வத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
துணிமூட்டை வியாபாரிகள் என்னை பாதித்தார்கள்.அந்த சமயங்களில் அவர்கள் போல் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் செகந்திராபாத்தில் இருந்தார்கள். பின்னால் நான் என் முதல் நாவலை எழுதுகிற போது அந்த சிறு துணி மூட்டை வியாபாரிகள் குடும்பங்களில் பற்றி எழுதினேன் அதுதான் என்னுடைய முதல் நாவல் மற்றும் சிலர்,, இந்தி எதிர்ப்பு போராட்டம் முடிந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பின் சில இந்திய ஆசிரியர்களுடைய பணி விலக்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட ஒருவர் ( சின்னாளப்பட்டியைச் சார்ந்தவர் )ஹைதராபாத்திற்கு வந்து உறவினர் ஒருவருடன் வியாபாரம் செய்கிற வேலையை செய்து வந்தார். அவர் பின்னால் தெலுங்கானா போராட்டம் ஒன்றில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது காவல்துறையால் தாக்கப்பட்டு அவரின் உடம்பு சீர்கேட்டது. என்ன தான் தமிழ் தெலுங்கு உருது பேச கற்று இருந்தாலும் தெலுங்கு பெண்ணையே கல்யாணம் செய்து இருந்தாலும் ஒரு தமிழன் எப்படி அந்த தெலுங்குப் பகுதியில் அந்நியனாக ஆக உணர்கிறான் என்பதை சொன்ன நாவல் தான் என்னுடைய முதல் நாவல் “ மற்றும் சிலர் “.
என் முதல் நாவலை நர்மதா ராமலிங்கமும், அடுத்து வந்த பதிப்புகளை மருதாவும், டிஸ்கவரி புக் பேல்ஸ் வேடியப்பனும் வெளியிட்டார்கள்.
0அந்த நாவல் பற்றி ஜெயந்தன், ஜெயமோகன், நகுலன் போன்றோரின் கீழே உள்ள குறிப்புகள் அந்நாவல் வாசிப்பிற்கு உதவும்
1 ஜெயந்தன் :
” மற்றும் சிலர் “ படித்து முடித்தேன். எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை. நாவல் மிக அருமையாக இருக்கிறது. நாவல் ஆதவனின் “காகித மலர்களு”க்கு இணையாக இருக்கிறது. பல அம்சங்களில் உங்கள் உளவியல் அணுகுமுறைகள் ஆச்சர்யமாக இருக்கிறது அத்தனைப் பாத்திரங்கள் அச்சு அசல் என்று எங்களை நம்ப வைக்கிறீர்கள். பிறரின் அனுபவங்களையும் தன் அனுபவ்ம் போல் எழுத வல்லவனே நிலைத்து எழுத முடியும். . of how much details and punches . Congradulations my dear rival ( ஜெயந்தனின் கடிதத்தில் ஒரு பகுதி )
2 ஜெயமோகன்
நாவலுக்குரிய நிதானமும் அழகும் கூடியிருக்கிறது. ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு எழுத்துருவம் உரித்ததாக இருக்கும். புதுமைப்பித்தனுக்கு சிறுகதை, ஜானகிராமனுக்கு நாவல். இப்படி உங்கள் உருவம் நாவல்தானோ என்று இதைப் படித்த போது தோன்றுகிறது. அதிகமான விவரணை, மொத்தமானப் பார்வை போன்ற உங்கள் தனித்தன்மைகள் நாவலுக்கு உரியவை. சிறுகதை போல் ஒரு புள்ளி மீது படியக்கூடியதல்ல நாவலிஸ்டின் பார்வை. இப்படி படிந்தால் நாவலும் சிறுகதை ஆகிவிடும். ( 18வது அட்சக்கோடு, வாடிவாசல் மாதிரி ). உங்கள் பார்வை ஒரே சமயம் பல விசயங்கள் மீது படிவது. இது நாவலாசிரியனின் பார்வை. சிறுகதை உள்ளங்கையில் ஏந்திய படிகக் கல். நாவல் தொலைதூர மலை. மலைக்கே உரிய பிரமாண்டம். கச்சிதமான உருவம் இல்லாமை, தெளிவும் தெளிவின்மையும் பலவித உருவகங்களின் தொகுப்பு போன்ற தன்மை போன்றவை நாவலில் இருக்க வேண்டும். இவை அனைத்தும் உங்கள் நாவலில் உள்ளன. ஆற்றூர் ரவிவர்மாசார் ” நகர வாழ்வின் ஒரு சில்லு துல்லியமாய் பதிவாகியுள்ளது “ என்றார். பாராட்டக்கூடிய முயற்சி. எனினும் நாவல் அடிப்படையான் பிரச்சினை ஒன்றை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் அது இதில் இல்லை.. காலமாற்றம் வாழ்வினொரு தோற்றம். இவை மட்டும் போதாது . இவை அனைத்தும் உங்கள் நாவலில் உள்ளன. தமிழில் நாவலாசிரியர்கள் இருவரே. சுரா...திஜா.. நீங்கள் சிறந்த அடுத்த நாவலை எழுத இயலும். அதற்கு அடிப்படை தேவையான் நாவல் மனம் இருக்கிறது. அனேகமாய் மேற்குறிப்பிட்ட இருவர் தவிர்த்து மூன்றாவது ஆள் நீங்கள் . ( புகழ்ச்சி இல்லை வெட்கம் வேண்டாம் ) ----ஜெயமோகன் 12/8/87
3. நகுலன்
சில நாவல்களின் தலைப்புகளே நம்மை அவைகளைப் பற்றி சிந்திக்க வைக்கத் தூண்டுகின்றன. உடனடியாக நினைவுக்கு வருவது சா.கந்தசாமியின் “ அவன் ஆனது “ போலவே சுப்ரபாரதிமணியனின் “ மற்றும் சிலர்”.
இந்த நாவலில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இதன் சீரான அனுபவ பூர்வமான் குரலை உயர்த்தாத ஒரு கலைப்பாங்குடைய நடை. அனுபவத்துடன் இயைந்த நடை என்பதால் ஒரு கணம் வந்து போகும் பாத்திரங்கள் கூட நமது நினைவில் தங்கியிருக்கிறார்கள். எந்த ஒரு அனுபவத்தையும் காட்சி பூதமாகப் பார்க்கும் ஒரு நிலையில் நாவலுக்கு ஒரு தரிசன வேகம் வந்து விடுகிறது. படித்ததும் சிந்திக்கச் செய்யும் நாவல்களில் “ மற்றும் சிலரும்” ஒன்று.
0
என் இரண்டாவது நாவலான சுடுமணல் கூட இடம் பெயர்வு சார்ந்த ஒரு படைப்பு என்று சொல்லலாம் ” சுடுமணல் ”நாவலில் தண்ணீர் பிரச்சனை, இந்திய தேசியம் போன்ற மாயைகள் நம்மை அலைக்களித்துக்கொண்டிருக்கின்றன என்பதை ஆராய்ந்தேன்.அந்த தண்ணீர் பிரச்சனை -காவிரி கர்நாடகாவில் விஸ்வரூபம் எடுக்கின்ற போது தமிழர்கள் அங்குஇருக்கும் தமிழர்கள் படும் சிரமங்கள் என் பல படைப்புகளில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன .இந்த சுடுமணல் நாவலில் அப்படித்தான் அந்த பிரச்சனையை மையப்படுத்தி எழுதியிருந்தேன். அதில் இடம்பெறும் மனிதர்களும் களமும் ஹைதராபாத் ஆக இருந்தது. பெங்களூர் போன்ற நகரங்களில் மற்றும் பூகோள ரீதியான விஷயங்கள் என் ஞாபகத்தில் அவ்வளவாக இல்லாததால் நான் அப்போது வசித்து வந்த ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு அந்த நாவலை எழுதினேன். அதில் தண்ணீர் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கிறது .ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு மக்கள் இடம்பெயர்வு செய்ய வேண்டிய கட்டாயமும் அகதிமுகாம்கள் போன்று அமைக்கப்படும் தற்காலிக கூடாரங்களில் தங்குவதும் சில கதாபாத்திரங்களை பாதிக்கிறது . உயிர், உடமைக்காக தமிழரகள் இடம் பெய்ர்கிற அவலம்.இது பத்துக்கும் மேற்பட்ட பதிப்புகள் பெற்ற நாவலாகும் .என்னுடைய முதல் நாவல் மற்றும் சிலர் ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்து வந்து வாழும் தமிழ் குடும்பங்கள் பற்றியக் கதையாக இருந்தது, அதில் இடம்பெறும் முக்கிய கதாபாத்திரம் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி வந்த பின் தமிழகத்தில் இந்திய ஆசிரியர்கள் எண்ணீக்கை குறைக்கப்பட்டு நீக்கப்பட்டு இருந்த சூழலில் ஒருவர் ஹைதராபாத்திற்கு இடம் பெயர்கிற கட்டாயம் ஏற்படுவதை சித்தரித்து இருந்தேன். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சிக்கலாய் இடம்பெயர்வும் இடம்பெயர்வு சார்ந்து மக்கள் நகரும்போது ஆள்கடத்தல் நிகழ்வதும் என்று சொல்லலாம். இந்த பிரச்சனைகள் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமானவை.
0
சுடுமணல் பற்றி சாகித்ய அகாதமி பரிசு பெற்ற தோப்பில் மீரான் அவர்களின் குறிப்புகள் கீழே உள்ளன.
சுப்ரபாரதிமணியன் தமிழில் நன்கு அறியப்பட்ட ஒரு இலக்கியப் படைப்பாளி. கடந்த இருபத்தைந்து வருடங்களாகத் தொடர்ந்து ‘கனவு’ என்னும் இலக்கிய இதழை நடத்தி வருபவர். தமிழ் இலக்கிய உலகில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டுள்ள இவர் இதுவரை பதினைந்து நாவல்களையும் பதினைந்து சிறுகதைத் தொகுதிகளையும் உள்ளடக்கிச் சுமார் அய்ம்பது படைப்புகளை வெளிக் கொண்டு வந்துள்ளார். இவருடைய இலக்கிய படைப்பாக்க முயற்சி நாவல்கள், சிறுகதைகள் என்று நின்று விடாமல் கவிதையிலும், விமர்சனத்திலும் கூட விரிவடைந்து தனிப்பட்ட முத்திரை பதித்துள்ளன.
இந்த நாவலாசிரியருடைய ‘சாயத்திரை’ என்ற நாவல் ‘சாயம் புரண்ட திரா’ என்ற பெயரில் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. அதனுடைய வங்காள, ஆங்கில, இந்தி, கன்னட மொழிபெயர்ப்புகளும் வெளி வந்துள்ளன. ‘தேநீர் இடைவேளை’ என்ற (சாய இடவேளெ) , பிணங்களின் முகங்கள் ( பிரேதங்களின் முகங்கள்) ஆகிய இவரது இரண்டு நாவல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
சுப்ரபாரதிமணியனுடைய பிறந்த ஊர் பனியன் தொழிற்சாலைகள் நிறைந்த திருப்பூராக இருந்த போதிலும் தொடக்க கால நாவல்கள் இரண்டும் அய்தராபாத் பின்னணியில் எழுதப்பட்டவை. தொடக்க காலத்தில் இவர் அங்கு பணியாற்றியதன் காரணமாக அதைப் பின்புலமாக்கி இவர் எழுதியுள்ளார். அதன் பிறகு, வெளியிடப்பட்டவை திருப்பூர் என்ற தொழில் நகரத்தைப் பின்புலமாக்கி எழுதப்பட்டவை.
சுப்ரபாரதிமணியன் எழுதியுள்ள பிற இலக்கியப் படைப்புகளோடு தொடர்பு படுத்திப் பார்க்கும்போது சிறிதளவு திறனும், மாறுபட்டதுமாக உள்ள ஒரு பின்புலத்தில் படைக்கப்பட்ட ‘ஓடும் நதி’ விமர்சகர்களுடைய கவனத்திற்கு உள்ளாகி உள்ளது.. கூரிய கதாபாத்திரங்களை உள்ளடக்கிய மிக நல்ல நாவலாக இது அமைந்திருக்கிறது.இது என்சிபிஎச்-கலை இலக்கியப் பெருமன்றத்தின் ஆண்டிற்கான சிறந்த நாவல் பரிசு பெற்றது.
இவருடைய இலக்கியப் படைப்புகள் முழுவதும், வாழ்க்கையில் காணப்படுகின்ற மாற்றங்களையும், தகர்வுதலையும், நிராசைகளையும், அனுபவித்துக் கொண்டே வாழ்ந்து வருகின்ற மனிதர்களுக்குரிய நியாயங்களை முன் நிறுத்திக் கூடியவையாக உள்ளன. உலகமயமாதல் சூழ்நிலைமையில் தொழில் நகரங்களில் வாழ்ந்து வரும் மக்களுடைய நரக வேதனை மிகுந்த வாழ்க்கையை எதார்த்தமாகச் சித்தரிக்கக் கூடியவையாக இவரது படைப்புகளின் நோக்கமாகும். தொழிலாளர்கள் கொடுமையான முறையில் சுரண்டலுக்கு உள்ளாகும் நவீன முதலாளித்துவத்திற்கு, புதிய அடிமைத் தனத்திற்கு எதிராக நின்று, தொழிலாளர்களுக்கு விடுதலை வேண்டி உரத்த குரல் எழுப்புவது இவருடைய படைப்புகளின் வாயிலாக இவர் மக்களுக்குச் செய்யும் பணியாக உள்ளது. இந்த வகையில் இவர் ஒரு தீவிரமான இலக்கியப்படைப்பாளியாக விளங்குகிறார்.
மனிதர்களுடைய வாழ்க்கை நிலைப்பாடு என்ற நிலையில் அவசியமான தேவையாக உள்ள உழைப்புச் சக்தியைக் குத்தகைக் கம்பனிகளுக்கு அடகு வைக்கும் செயலில் கூட்டாகச் சேர்ந்து செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும், மக்கள் விரோத சக்திகளுக்காய் எதிராகப் போராடும் அமைப்புகளுக்கு ஆதரவாகவும் காணப்படும் நிலைப்பாடுகளை அடையாளப்படுத்தும் விதத்தில் இவரின் படைப்புகள் அமைந்துள்ளன.நதிநீர்பிரச்சினையால் பாதிக்கப்படுகிற சமூகம் பற்றி படைக்கப்பட்டுள்ள நாவல்தான் “ சுடுமணல்”. ..
0
நகரம் 90 : ஹைதராபாத் பற்றிய என் மூன்றாம் நாவல்
* சுஜாதா தேர்வு செய்து பரிசளித்தது
* குமுதம் ஏர் இந்தியா இலக்கியப் போட்டியில் பரிசு பெற்று இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யும் வாய்ப்பைத் தந்த படைப்பு . அந்த அனுபவம் “ மண்புதிது “ என்ற தலைப்பில் காவ்யா பயண நூலாகவும் வந்தது.
* குமுதம் இதழில் தொடராக வந்தது
* மதவாதத்தை அரசியல்வாதிகள் தங்கள் லாபத்திற்காக பயன்படுத்தும் போக்கையும் மதக்கலவரத்தில் அப்பாவி பொதுமக்கள் பலியாவதைப் பற்றியுமான நாவல்.
* மதவாதத்திற்கு எதிரான முக்கிய இலக்கியப் பதிவு இந்நாவல்
0
இந்த மூன்று நாவல்களையும் ஒரே தொகுப்பாக இந்த வடிவத்தில் கொண்டு வரும் காவ்யா சண்முகசுந்தரம் அவர்களுக்கு நன்றி
அன்புடன்,
சுப்ரபாரதிமணியன்
சுப்ரபாரதிமணியன் :
25 நாவல்கள், 18 சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 100 நூல்களை வெளியிட்டிருக்கும் சுப்ரபாரதிமணியன் தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கி வருபவர் ..
” சாயத்திரை “ சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றிய நாவலுக்கான தமிழக அரசின் பரிசு, சிறந்த சிறுகதையாளருக்கான இந்திய சனாதிபதி வழங்கிய “., கதா விருது “ உட்பட பல முக்கிய விருதுகளைப் பெற்றவர்.
இவரின் நாவல்கள், சிறுகதைகள் பல இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. குறிப்பாக “ சாயத்திரை “ என்ற திருப்பூர் சுற்றுசூழல் சார்ந்த நாவல் ஆங்கிலம், இந்தி, மலையாளம், வங்காளம், கன்னட மொழிகளில் வெளிவந்திருக்கிறது. 5 நாவல்கள் இந்தியிலும், 9 நாவல்கள் ஆங்கிலத்திலும் , 5 நாவல்கள் மலையாளத்திலும் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. 5 சிறுவர் நூல்கள் வெளியிட்டிருக்கிறார். அதில் 4 ஆங்கிலத்திலும் வந்துள்ளன
சென்றாண்டு இவர் பெற்ற முக்கிய விருதுகள் :
* “ அந்நியர்கள் “ என்ற நாவல் எழுத்து அறக்கட்டளையின் ஒரு லட்சம் பரிசு பெற்றது
* சார்ஜா புத்தகக்கண்காட்சியில் “ புக்கிஷ் “ விருது .
என் சி பி எச் வெளியீடான “ சிலுவை “ நாவல்( 2023 Rs 1200 ) சுப்ரபாரதி மணியனின் இருபத்தைந்தாவது நாவலாகவும், நூறாவது புத்தகமாகவும் இது அமைகிறது.
திரைப்படக்கதைகள் நூல்கள் நான்கு வெளியாகி உள்ளது. திரைப்படங்கள் குறித்த 5 நூல்களும் வெளியிட்டிருக்கிறார்.திரைப்பட சங்க கூட்டமைப்பின் பிராந்திய குழு உறுப்பினராகவும்பணி புரிகிறார். கனவு என்ற திரைப்பட சங்கத்தையும் நடத்தி வருகிறார்.
புக்கோடன்
சுற்றுசூழல் சார்ந்த இயங்கிய கேரளா புக்கோடன் அவர்களை கேரள திரைப்பட விழா ஒன்றில் அவரின் அவரைப் பற்றிய ஆவணப்படம் திரையிட்ட போது சந்தித்திருக்கிறேன். “ மனிதன் என்பவன் இயற்கையின் ஒரு பகுதி. இயற்கையின் உடம்பாக இருக்கிறவன். அவன் வாழ வேண்டும் என்றால் இயற்கை கூட சமரசம் செய்து கொள்ள வேண்டும். இணைந்து போராட வேண்டும் “ என்ற மார்சின் தத்துவங்களில் அக்கறை கொண்டு பொதுவாழ்க்கையில் இணைந்தவர்
புக்கோடன் அவர்கள் கேரளாவின் பல பகுதிகளில் 500 மாங்குரோவ் காடுகளை தங்களை நட்டு பசுமை திட்டங்களுக்கு உதவியாக இருந்தவர் இப்படி மேங்குரோவ் மரங்களை நட்டதன் மூலமாக அவர் புகழ் பெற்றவராக மாறினார். ஆரம்பத்தில் பொதுவுடை இயக்கத்தில் இருந்தவர். சுற்றுச்சூழல் சார்ந்து குழந்தைகளுக்கான கல்வியை தந்தவர். தொடர்ந்து மரங்களை நடும் பணியில் ஈடுபட்டிருந்தவர். சாதிய பிரச்சனைகளும் சுற்றுச்சூழலும் அவரின் கவனத்திற்கு பின்னால் வந்தன
18 வயதில் பொதுவுடமை இயக்கத்துக்கு வந்தவர் . அதில் அக்கறை கொண்டு சேர்ந்து இருக்கிறார் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு இருக்கிறார். விவசாய தொழிலாளர்களுடைய பிரச்சனைகள் மற்றும் சில போராட்டங்களில் சிறை படுத்தப்பட்டிருக்கிறார் அதன் காரணமாக தலைமறை வாழ்க்கையும் கையாண்டு இருக்கிறார்
கொஞ்ச காலம் நான் அரசியல்வாதியாக இருந்தேன். கம்யூனிசம் எல்லாவற்றிற்கும் தீர்வாகும் என்று நினைத்தேன் ஏழைகளுக்கும் பணக்காரருக்கும் உள்ள இடைவெளியை குறைக்க முடியும் என்று நினைத்தேன் ஆனால் கட்சிக்குள் இருந்த பல்வேறு பிரச்சனைகள் காரணமாக எனக்கு அலுப்பாக்கி விட்டது. நான் பாடுபட்ட நோக்கில் சமூகம் வளரவில்லை என்றுதான் தோன்றியது. இடசாரிகள் பிற்பட்ட மக்களினுடைய நலனில் இன்னும் அக்கறை காட்ட வேண்டும் என்ற அக்கறையில் நான் வெளியேற நேர்ந்தது என்று ஒரு பேட்டியில்ல் குறிப்பிட்டு இருந்தார்.
எல்லா வகையான அமைப்புகளாலும் சுரண்டப்படும் சாதாரண மக்களின் வாழ்க்கை அவரை சிரமப்படுத்திருக்கிறது .தலித் இலக்கியத்தின் செயல்பாடுகள் என்பது ஒரு கலாச்சார நடவடிக்கை சமூக மாற்றத்திற்கான முயற்சிகள் என்பதில் அவர் அக்கறை கொண்டு அந்த வகையான மக்களோடு பழகுவது அவருடைய பிரச்சனை முன்வைப்பதை வாழ்க்கை முழுவதும் கையாண்டு இருக்கிறார். 2015இல் மறைந்த அவர் ஒரு தலித் போராளியாகவும் சுற்றுச்சூழல் போராளியாகவும் வழங்கினார் அதை அவருடைய சுயசரிதை நூலில் எழுதி இருக்கிறார் நதிக்கரைகளில் மரங்கள் நடுவது அவற்றை பராமரிப்பது என்பது அவர் வாழ்க்கையினுடைய முக்கியமான செயல்பாடுகளாக இருந்திருக்கிறது
கண்ணூர் மாவட்டத்தில் குன்னி என்ற ஒரு கிராமத்தில் 1937 இல் பிறந்தவர். அவருடைய வீடு என்பது ஒரு அறை கொண்ட ஓலைக் குடிசையாகும். எல்லா காலத்திற்கும் அந்த குடிசை அவருக்கு இருப்பிடமாக இருந்திருக்கிறது. புலையர் சமூகத்தின் மூட நம்பிக்கைகள் சார்ந்தும் நிறைய செயல்பாடுகளை மேற்கொள்ளதால் அந்த சமூகம் அவரை வெறுத்தது. சமூக செயல்பாடுகளையும் அரசியல் கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து தன் போக்கில் மாற்றம் பெற்று சுற்றுச்சூழல் சார்ந்து மரம் நடுவதையும் குழந்தைகளுக்கான பசுமை இலக்கிய கல்வியையும் முன்னெடுத்தார். சுற்றுச்சூழல் சார்ந்து இயங்குகிற போக்கு கேரளத்தில் இன்று ஒரு மதமாக கடைபிடிக்கப்படுகிறது அதற்கு முன்னோடியாக இருந்தவர்களில் ஒருவர் புக்கோடன். அவர்கள். அவர் நினைவு நாட்களில் அவர் சரியாகவே கேரளாவில் நினைக்கப்படுகிறார்
( டாக்டர் அலெக்ஸ் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையை அடிப்படையாகக் கொண்டது )சுப்ரபாதி மணியன்
யாழினி ஸ்ரீ கவிதைகள்
யாழினி ஸ்ரீ அவர்களை பற்றி நினைக்கிற போதெல்லாம் அவருடைய திடமான மனமும் தொடர்ந்து செயல்பாடுகளும் பலருக்கு உதாரணங்களாக இருக்கும்.
பொன்வண்டின் முதுகில்
பூமிப்பந்தை சுமக்கும் ஆற்றல்
உடல் பலத்தால் வருவதல்ல
மனதிடத்தைப் பொறுத்ததே
என்பதை அவரின் உள்ளார்ந்தக் குரலாக பலர் எடுத்துக் கொள்வார்கள்.. நானும்..
தேடலை துரிதப்படுத்து என்று அவர் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பவர். அவர். எப்போதும் கவிதை உலகில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆறறை கருவறைக்குள்
அடைப்பட்டு ஒளிந்து போ என்று அவர் ஒரு கவிதையில் சொன்னாலும் அதை அவருடைய குரலாக எடுத்துக் கொள்ள முடியாது. பலர் கதைகளில் எழுதுகிற போது பல கதாபாத்திரங்கள் வருகிறார்கள், அந்த கதாபாத்திரங்களின் குரல்களாக என்று பல வெளிப்படுகின்றன. அவை எழுத்தாளர்களின் குரல்களாக எடுத்துக் கொள்ள முடியாது அப்படித்தான் கதாபாத்திரங்களின் இயல்புக்கே ஏற்ற அவர்களின் குரலாக எண்ணங்களாக பல வெளிப்படும். அப்படித்தான் இந்த அடைபட்டு ஒழிந்து போ இருக்கிறது
ஒரு கோப்பை வாழ்க்கை
ஒவ்வொரு மிடறாய்
ரசித்து ருசித்து பருகிறேன்
என்று அவர் இன்னொரு கவிதையில் சொல்கிறார். அதைத்தான் நான் அவரை சம்பந்தப்படுத்தி வெகுவாக நினைத்துக் கொள்கிறேன். காரணம் வாழ்வை ரசித்து ஒவ்வொரு கணத்தையும் கவிதையாய் நினைப்பதும் கவிதைக்குள் கொண்டு வருவதும் அவருடைய செயல்பாடுகளாக இருக்கிறது. அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார் அவர் தொடர்ந்து தன்னை சுற்றி உள்ளவர்களையெல்லாம் எழுத சொல்கிறார். இயங்க சொல்கிறார். இந்த மனம் தேடலை ஊக்குவிக்கும். இவர் பிறரை ஊக்குவிப்பவர் என்ற வகையில் நாம் வாழ்த்துவோம்.
சுப்ரபாரதிமணியன், திருப்பூர்
2 friends
வழக்கறிஞர் ஜீவன் : மாமன்னன் படத்தில் இடம்பெற்ற கவிதைகளில் இவரின் மரக்குதிரை தொகுப்பில் உள்ள ஒரு கவிதையும் முக்கியமானது
வழக்கறிஞர் ஜீவன் சமீப காலமாக திருப்பூரில் வசித்து வருகிறார் மாமன்னன் படத்தில் இடம்பெற்ற கவிதைகளில் இவரின் மரக்குதிரை தொகுப்பில் உள்ள ஒரு கவிதையும் முக்கியமானது மரக்குதிரை தொகுப்பு தெலுங்கு கவிஞர் நக்னம் முனி அவர்களின் கவிதையை மையமாகக் கொண்டு. ஏகதேசம் அந்த நேரடி மொழிபெயர்ப்பு வித்தியாசமானது. இதைத் தவிர ஜீவன் அவர்கள் இன்குலாப் ஜிந்தாபாத் என்ற ஒரு நாவலைக் கூட எழுதியிருக்கிறார் பல மொழிபெயர்ப்புகளையும் ஆங்கிலத்தில் பல கட்டுரைகளையும் எழுதி இருக்கிறார் சமீப ஆண்டுகளாக திருப்பூரில் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் சட்டரீதியான இலவச ஆலோசனை மையம் சார்ந்து ஆங்கில நூல்களையும் வெளியிட்டு இருக்கிறார் என்பது முக்கியமானது
நண்பர் ஹைதராபாத் முத்துசாமி அவர்கள் இந்த ஆண்டு திருப்பூர் தமிழ் சங்கத்தின் கவிதை பிரிவு பரிசு பெறுகிறார். நான் ஹைதராபாத்தில் இருந்தபோது கனவு இலக்கிய வட்ட கூட்டங்களில் ஒவ்வொரு மாதமும் ஏதாவது புத்தகத்தை எடுத்து அறிமுகப்படுத்துவார். அதை சிரத்தியோடு செய்வார். அப்போது கூட மரபுக் கவிதைகளை தான் படிப்பார் கூட்டங்களில் . பலர் கிண்டல் அடிப்பார்கள் இன்னும் மரபு பைத்தியத்தில் இருப்பதாக ஆனால் .அவர் தொடர்ந்து மரபுக் கவிதைகளை ஜீவன் உள்ளதாக ஆக்கி எழுதிக் கொண்டிருந்தார். இன்னும் மரபுக் கவிதைகள்தான் எழுதிக் கொண்டு இருக்கிறார் அவருடைய பல மரபுக் கவிதைகளை நான் வாய்விட்டு வாசித்து மகிழ்ந்திருக்கிறேன் .திருப்பூர் தமிழ்ச்சங்க கவிதை பிரிவில் ஒரு மரபுக் கவிதைக்கு பரிசளிப்பது இன்னும் பாராட்டக் கூடியதாக இருக்கிறது
சுப்ரபாரதி மணியன் கட்டுரையாளர், எழுத்தாளர். நாவல்,சிறுகதை நுால்கள், நாடக தொகுப்பு,கவிதைகள், கட்டு...
Read more at: https://www.dinamalar.com/news_detail.asp?id=3424185
Thiraikathai nool 4
திரை நாவல்
திரை நாவல் என்ற வர்த்தைப்பிரயோகம் கண்ணகி நாராயணி அவர்களிடமிருந்து அவரின் பிராந்தியம் நாவலில் இருந்து கற்றுக் கொண்டேன்,
திரைக்கதை அம்சங்களை சிறு நாவல்களாக்கும் முயற்சி அது. அந்த வகையில் நானும் சிலதை சமீபத்தில் முயற்சித்து வருகிறேன்
முழு நாவல்கள் எழுத ஆண்டுகள் பிடிக்கின்றன. பிரசுரம் ஆகவும் ஆண்டுகள் ஆகின்றன. பல பதிப்பகங்கள் குறைந்த பிரதிகளே வெளியிடும் துயரம் எழுத்தாளருக்கு மரியாதைத அல்ல.
இப்போதைக்கு திரை நாவல் ஆறுதல் போலத்தான் படுகிறது
Thiraikathai nool 4
சமர்ப்பணம்
இயக்குனர், கவிஞர் பிருந்தா சாரதி அவர்களுக்கு..
0
எழுத்து என்பது தன்னையே விளையாட்டாக அடையாளப்படுத்திக் கொள்வதோடு அது தனக்கான மைதானத்தின் விதிகளை தானே கட்டமைத்துக் கொள்கிறது.-
மிஷல் பூக்கோ
( அப்படி விளையாட்டாய் சில மையங்களை எடுத்து பயிற்சி செய்த திரைக்கதைகள் இவை
0
இந்திரன் 75 விழாவில் இயக்குனர்., கவிஞர் பிருந்தாசாரதியைச் சந்தித்தபோது உங்கள் நாவல்களைச் சிதைத்து இப்படி செய்யப்படும் திரைக்கதைகள் ஒரு முயற்சி என்றாலும் உண்மையான வாசகன் அந்த நாவல்களைத் தேடிப் படித்து விடுவான் என்பது முக்கியம் என்றார். அதனால் என் நாவல்களை விடுத்து அப்படி விளையாட்டாய் சில மையங்களை எடுத்து பயிற்சி செய்த திரைக்கதைகள் இவை ).
செவ்வாய், 9 மே, 2023
இறக்கையற்ற சில பறவைகளுடன்.. சுப்ரபாதிமணியன்
ஆசித் முகமது அவர்களின் நாவல்
மயான பயணிகள் -மலையாளம்
தமிழில் சிதம்பரம் ரவிச்சந்திரன் அவர்கள்
முன்னாள் மாணவி ஒரு ஆசிரியரை நீண்ட காலம் கழித்து தேடி வரும் கதை இந்த நாவல், அவருடன் பழகிய கல்லூரி, நூலகம் முதல்வர் வளாகம் என்றும், அவரை தெரிந்து கொண்ட சில பேரையும் அந்தப் பெண் மர்வர் தேடுவதும் தான் இந்த நாவலாக வந்திருக்கிறது.
மர்வர். அஞ்சுவேளை தொழுகிற அந்தப் பெண் மத கட்டுப்பாடுகளை எல்லாம் மீறி வேறு மதத்தைச் சார்ந்த ராஜவர்ம ஆசிரியரின் கடைசி கடன்களை நிறைவேற்றுகிறாள் மாமனிதனான ராஜ வர்மாவின் அன்பை தோல்வியாக மதிப்பிட்ட மனைவி உட்பட பலரால் வாழ்க்கையில் முழுவதும் காயப்பட்டவர் அவர். தற்கொலை செய்து கொள்கிறார். அவரின் . அஸ்தியை கரைக்கிற பொறுப்பு மர்வர் என்ற பெண்ணுக்கு வந்து சேர்கிறது.. எதிரணியில் அந்தப் பெண்ணின் குடும்பம் சார்ந்த வாழ்க்கை அப்பா மற்றும் சகோதரர் சாவு, அம்மா கல்லை பூ மாதிரி எடுக்கும் பலசாலியான பெண், அவள் குடும்பத்தையும் நிர்வகிப்பது அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது
ஈராக்கின் 1990 இல் குட்டி அரபு நாட்டை ஆக்கிரமித்து செய்த அதிகார வன்முறை பற்றி பல பக்கங்கள் பேசுகின்றன. அந்தப் பாலைவன நாட்களை மிகவும் அற்புதமாக இதில் சித்திருக்கிறார். வியாழன் ஒரு சந்தோஷமான நாளாக இருக்கிறது என்பது போலவே இஸ்லாம் மதச் சிந்தனைகள் எப்படி அவர்களுக்கு எல்லாம் ஆறுதல் தருகின்றன என்பதைச் சொல்கிறார். அந்த குவைத் தருணங்களும் மழைக்காலம் சார்ந்த அனுபவங்களும் இந்த நாவலில் மிக சிறப்பான முறையில் பிடிபட்டிருக்கின்றன..
அந்நிய மதத்தை சார்ந்த அந்தப் பெண் இறுதி சடங்காய் அஸ்தியை கடலில் கொண்டு கரைக்க வேண்டி இருக்கிறது. ராஜு வர்மா நம்பிக்கை கொண்டிருந்த மதத்தின் வழியாக அவருக்கு ஆத்ம சாந்தியை தேடித் தர வேண்டி இருக்கிறது. அதெல்லாம் சரிதான் ஆனால் ஏன் அந்த பெண் கடலில் அஸ்தியைக் கரைக்கிற நிகழ்ச்சியில் நீரில் மூழ்கிப் போகிறாள். அவள் நீரில் மறைந்து போகிற விதியை காட்ட வேண்டிய அவசியம் என்ன என்பது ஒரு கேள்வியாக இருக்கிறது.
வெவ்வேறு மாதங்கள் சார்ந்த நம்பிக்கைகள் மற்றும் வாழ்வியல் அம்சங்களை இந்த நாவல் விரிவாக எடுத்துச் சொல்கிறது. ஆனால் அந்த கடலில் கரைந்து போகிற பெண் ஏன் அப்படி தன்னை கரைத்துக் கொண்டாள், தற்கொலை செய்து கொண்டாளா என்பது போன்ற கேள்விகள் எழாமல் இல்லை. இதை மொழி பெயர்த்திருக்கிறார் சிதம்பரம் ரவிச்சந்திரன் அவர்கள்.. விழித்திறன் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தொடர்ந்து எழுதுகிறார்.. மலையாள மொழியில் இருந்து கதைகளையும் மொழி பெயர்த்திருக்கிறார் .கடந்த ஆண்டில் திருவனந்தபுரம் தமிழ் சங்கம் வழங்கிய சிறந்த மொழி மொழிபெயர்ப்புக்கான உள்ளூர் பரமேஸ்வரன் விருதை பெற்றிருக்கிறார். ஒரு பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.
அவரின் எளிமையான மொழியால் இந்த நாவல் வலுப்பெற்று இருக்கிறது
சுப்ரபாதிமணியன் திருப்பூர்
ஆறாம் திணை
குரு அரவிந்தன் கட்டுரை நூல் / சுப்ரபாரதிமணியன்,
குரு அரவிந்தன் அவர்கள் கனடாவில் வசித்து வரும் இலங்கையை தாயமாகக் கொண்ட எழுத்தாளர்.
எல்லோருக்கும் பிறந்த மண், சொந்த நாடு பற்றிய நினைவுகளையும் பெருமிதங்களையும் சொல்வதில் எப்போதும் ஆர்வம் இருக்கும். அப்படித்தான் குரு அரவிந்தன் அவர்கள் இலங்கை பற்றிய பல்வேறு விஷயங்களை இந்த கட்டுரை தொகுப்பில் வெளியிட்டிருக்கிறார்.
ஒவ்வொரு கட்டுரைக்கும் இடையில் இன்றைய இலங்கை நிலைமை பற்றிய விவரங்களையும் கொண்டு வந்து சேர்த்திருப்பதில் அவரின் தனித்தன்மை வழங்குகிறது. அவருடைய பார்வை கூர்மையாக, தங்கி நிற்கும் குட்டையைப் போல இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் நதியைப் போல இருப்பதை அவருடைய தொடர்ந்து செயல்பாடுகள் இருக்கையில் இந்த தொகுப்பும் மெய்ப்பிக்கிறது .
அப்படித்தான் சின்ன வயசு அனுபவங்கள் படித்த கால அனுபவங்கள், வளர்ந்த காலத்தில் இலங்கை இருந்த நிலைமை போர்சூழல், இலங்கை ராணுவத்தின் இன்றைய நிலை என்று இலங்கையின் நீண்ட காலகட்டத்தில் அத்தாட்சிகளை இந்த கட்டுரைத் தொகுப்பில் நாம் பார்க்க முடியும். தொடர் வண்டியில் செல்லும் அனுபவமாகட்டும், கலங்கரை விளக்கம் தரும் வெளிச்சமாகட்டும், காவல் நிலையத்தில் சென்ற அனுபவமாகட்டும், கடி நாய் தந்த வேதனையாகட்டும், வேப்பமரம் போன்ற மரங்கள் வாழ்வில் இணைந்து இருப்பதாகட்டும் திருமண உட்பட விழாக்களின் கூர்மையான சடங்குகளும் சமுதாயங்களும் என சிறப்பாக பழைய காலத்தை நினைவுபடுத்தி எழுதியுள்ளார் குரு அரவிந்தன் அவர்கள்.
அந்த நினைவுகளில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது இப்படி எழுத்தின் மூலமாக வடிகட்டத் தயாராக வேண்டும். ஆனால் கந்தர் வீதி குளமும், குருவி ,கோயிலும் இடிந்து நாசமாகி இருப்பதை பற்றி படிக்கையில் கண்ணீர் வருகிறது. தமிழ் பாடசாலைகள் இன்று எப்படி இருக்கின்றன, பழைய நிலை காட்சிகளில் இப்போது பொது அரசியல் காட்சிகள் எப்படி அரங்கேறி இருக்கின்றன என்பது பற்றிய அத்தாட்சிகளை அவர் சொல்லுகிறார். உள்ளார்ந்த அனுபவங்களை கொண்ட சடங்குகள் பற்றிய விவரங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன. ராணுவ தளம் முகாம் பற்றி விவரங்களும், ராணுவ அத்துமீறல்களும் எப்போதுமே மனதை பதட்டப்பட வைப்பவை. அப்படித்தான் இந்த நூலில் பல விஷயங்களை நாம் சாதாரண வாசிப்புக்கு உட்படுத்த முடியாது. மனம் பதபதைக்கும் .அப்படி சில விஷயங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
இந்த கடலை போலத்தான் நீதி நியாயம் எதுவும் இன்றி எங்களிடமிருந்து எங்கள் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லாமல் காலப்போக்கில் எல்லாமே கொள்ளை அடிக்கப்பட்டு விட்டது. அதை நினைக்கும் போது ஆற்றாமையால் உடம்புக்குறுகிப் போவது என்கிறார். ராணுவ தடை முகாம்களை கடந்து பாடசாலைக்கு போகும் ஒரு மாணவியின் மன நிலை எப்படி இருக்கும் என்பதைப் போலத்தான் இதில் உள்ள பல பக்கங்களை எல்லாம் கடந்து போகையில் நினைக்க வேண்டி இருக்கிறது.
சொந்த நிலத்தின் வனப்பும் அழகும் சிதைக்கப்பட்டு இருப்பதை சமூக நிலைமையில், பண்பாட்டு ரீதியாக மட்டும் இல்லாமல் கலாச்சார ரீதியாகவும் உணர்வுச் சந்தர்ப்பங்களாக இவை அமைந்திருக்கின்றன. தை பொங்கல் தான் தமிழனின் வருட பிறப்பு என்ற கொள்கையை கொண்டவர்களால் தை மாதம் தான் புது வருடம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டதால் பாடல் வரிகள் பொது வருடம் மாற்றம் காரணமாக காலத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை .ஆனாலும் இது போன்ற பாடல் வரிகள் காலத்தை காட்டியிருக்கின்றன என்பதை மறுப்பதற்கு இல்லை எழுத்து புலவர்கள், எழுத்துக் கவிஞர்கள் பலரின் ஆக்கங்கள் இன்று கவனிப்பாளர்கள் இன்றி, ஆவணப்படுத்தப்படாமல் எங்கள் மத்தியில் இருந்து மறைந்து கொண்டு இருக்கின்றன என்று அவரின் ஆதங்கங்களை நாம் சரியாகத்தான் புரிந்து கொள்கிறோம்.
இவ்வளவு சொல்லிக் கொள்கிற குரு அவர்கள் வாழ்க்கை என்ற பயணத்தில் ஒரு முடிவு இருக்கும். அந்த கடைசி பயணத்தை பற்றியும் சிந்திக்காமல் இல்லை. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மனிதன் 1969 ஆம் ஆண்டு சந்திரனில் கால் பதித்து விட்டான். இப்போது செவ்வாய் கிரகம் நோக்கி ரோபடை அனுப்பி இருக்கின்றான். வெகு விரைவில் செவ்வாய் கிரகத்திலும் கால் பதிக்க போகின்றான். அதைத் தொடர்ந்து எல்லையில்லாத வானத்தில் அடிப்படையாக மனிதன் ஒவ்வொரு கிரகங்களாக சென்று குடியேறலாம். விஞ்ஞானம் எவ்வளவுதான் வளர்ச்சி அடைந்தாலும் மனிதன் கடைசி பயணம் எங்கே எப்போது என்பது இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியம் இன்றுவரை புரியாத புதிர் என்பதையும் அவர் சொல்லாமல் இல்லை.
இலங்கை நிலத்தின் வெவ்வேறு திணைகள் சார்ந்த இடத்தையும் அவை சார்ந்த அவருடைய அனுபவ பதிவுகளையும் கொண்டிருக்கும் இந்த நூல் கடைசி அத்தியாயம் கனடா தமிழரின் வரலாறும் கனடா தமிழ்ச் சூழலும் என்பது அவர் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் கனடாவின் சூழலை பற்றி முழுக்கமான பல குறிப்புகளை வைத்திருக்கிறார். அதில் அந்த சூழலில் தன் கலாச்சார நடவடிக்கைகளை மறந்து விட்ட தமிழ் வாழ்க்கை பற்றியும் பழைய வாழ்க்கையைப் பற்றி இயங்கிக் கொண்டிருப்பது பற்றியும் சொல்லி இருக்கிறார் குரு அரவிந்தன். அவருடைய தொடர்ந்த செயல்பாட்டில் இது போன்ற கட்டுரை தொகுப்புகளும் ஒரு குறிப்பிட்ட சாதனையாகவே இருக்கின்றன. இனிய நந்தவன பதிப்பகம் திருச்சி இதை வெளியிட்டு இருக்கிறது
அநீதிக் கதைகள் 2 அருண் மோ / சுப்ரபாரதி மணியன்
அருண் மிகையான எதார்த்தத்தை முன் வைக்கிறாரா.... தீவிரமான பிரச்சனைகளை முன் வைக்கும்போது சிலருக்கு அப்படித் தோன்றும். ஆனால் அந்த வகையான எதார்த்தத்தில் சாத்தியம் உள்ளது. சாத்தியமாகி நடந்தது பற்றி தான் அவர் எழுதுகிறார்.அல்லது சாத்தியமாகும் விசயம் பற்றித்தான் எழுதுகிறார். அப்படித்தான் முதல் தொகுப்பிலும் இந்த தொகுப்பிலும் உள்ள விஷயங்கள் சொல்லப்பட்ட விதத்திலும் மையத்தின் தீவிரத்திலும் வெகுவாக அக்கறை கொண்டவை
எல்லா கதைகளும் சமூக நிகழ்வுகளை நாடகிய பண்புகளுடன் வெளிப்படுத்தியிருக்கிறார். திரைப்படத்தில் பெரும்பாலும் எதார்த்த போக்கை மீறி நாடக மயமான சித்தரிப்புகள் பார்வையாளருக்கு உணர்ச்சிவசப்பட வைப்பவை. கவர்பவை.
அப்படி திரைப்படத்துறை சார்ந்தவர் என்ற முறையில் சில கூறுகளும் அருண் அவர்களிடம் காணாமல் இல்லை. இ பாஸ்., தொற்று காலம் போன்ற கதைகளில் இந்த மிகையான எதார்த்தத்தை நாம் சுலபமாக கண்டு கொள்ளலாம். தொற்றுக்காலத்தில் வெளியே வரும் மனிதர்கள் இ பாஸ் பெற்று தொடர்வண்டி ஒன்றை முன் விழுந்து தற்கொலை செய்து கொள்கிற அவலத்தை சொல்கிறார் இதே போல தொற்றுக்காலத்தில் பசி, வறுமை மேலோங்கி நிற்பதையும் தங்கள் குழந்தைகளை வறுமை சார்ந்து இருக்கிற கொடுமையும் சொல்லப்பட்டிருக்கிறது .” மனுசன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயிலே. இது மாறுவதைப்போ இது தீர்வது எப்போ “ என்று பட்டுக்கோட்டை எழுதினார். ஆனால் அப்படி சுரண்டப்பட்ட மக்கள் அந்த நிலைக்கு தள்ளப்பட்டதை ஒரு மிகை எதார்த்தத்தில் சொல்லி இருக்கிறார். மனிதனை மனிதன் சாப்பிடும் அவல நிலை பற்றிய கற்பனை கொஞ்சம் பயப்படவே வைக்கிறது. ஆனால் அந்த கதை சொல்லப்பட்ட முறையிலும் கதையின் மையத்தை தீவிரமாக கொண்டு சென்ற முறையிலும் ஒரு முக்கியமான கதையாகவே இருக்கிறது. சாதி சார்ந்த படிநிலைகள் எப்படி இருக்கின்றன என்பதை எப்போதும் அக்கறை கொண்டு எழுதுபவர். அந்த வகையில்தான் கொல்லப்படுகிற பஞ்சமி நில மனிதர்கள் மற்றும் காதலுக்காக பலிகொள்ளப்படுகிற காதலர்கள் கருப்பு கூட்டம் கதைகளிலும்..
அருண் அவர்கள் திரைப்படத் துறையை சார்ந்து இயங்கிக் கொண்டிருப்பதால் அந்த சார்ந்த துறை சார்ந்த சிரமங்கள் இதில் இரண்டாம் கதையில் வெளிப்பட்டிருக்கிறது. வான்கோ காதுகளை அறுத்துக் கொண்டது போல இன்றைய கால சிரமங்களை வெளிப்படுத்தும் கதாபாத்திரமும் அதிலிருந்து தப்பிப்பதற்காக காதுகளை அறுத்து ஒரு வழியில் நிவாரணம் அடைவதும் இன்னொரு கதையில் இருக்கிறது. நாமும் காதுகளை அறுத்து ஆறுதல் கொண்டது போல ஆகிவிடுகிறது பகுத்தறிவு சார்ந்த விஷயங்களை எடுத்துக் கொண்டு மூடநம்பிக்கை சார்ந்த விஷயங்களை கட்டுடைக்கிற தன்மையும் இருக்கிறது. இந்த கட்டுடைத்தல் எல்லா கதைகளிலும் அமைந்திருக்கிறது. சமூக நிகழ்வுகளை கட்டுடைத்து வித்தைகள் காணும் ரூபம் இந்தக் கதைகளில் கவனிக்க முடிகிறது .
நுகர்வு முகத்தை சார்ந்து இயங்குகிற கதைகளின் அத்தாட்சிகளாக இபி மின்சாரம், கிரெடிட் கார்டு ஆகியவை உள்ளன, இபி மின்சாரம் கதையில் மின்சாரம் தடைபடலும் கட்டண உயர்வுகளும் ஒரு சாதாரண மனிதனை அலைக்கழிப்பதை சொல்கிறார். கிரெடிட் கார்டு என்று அம்சம் சாதாரண மக்களை வணிக்க் களவாணி கூட்டத்தில் மாட்டிக் கொள்ள வைத்து அலைக்கழிப்பதை பற்றி சொல்லப்படுகிறது. தொடர்ந்து சமூக அநீதிகள் நிகழ்வுகளை கதைகளால் சொல்லும் போது மிகை எதார்த்தமும் சற்று உயர்ந்த குரலும் கொண்டு வெளிப்படுத்துவது தவிர்க்க முடியாத்தாகிறது. அப்படித்தான் இக்கதைகளும் தவிர்க்க முடியாத கொடுமைகளான சமூகம் சார்ந்த அநீதிகளை சுட்டிக்காட்டும் கதைகளாக அமைகிறது - சுப்ரபாரதி மணியன்
அக்கானி :. இலா வின்சென்ட் நாவல் -- சுப்ரபாரதிமணியன்
பனையேறி மக்களுடைய வாழ்க்கையை ஹெப்சிபா ஜேசுதாசன் ஜேக்கப் வாத்தியார் முதற்கொண்டு செல்வம் வரை பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் வின்சென்ட் அவர்களின் நாவலில் அவருடைய களமும், கோலமும் வேறுபட்டதாக இருக்கிறது. வின்சென்ட் அவர்கள் சேலத்திற்கு நாஞ்சில் நாட்டு கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்து சுமார் 50 ஆண்டுகள் ஆகிவிட்டன ஆனால் இந்த நாவலில் அவர் பயன்படுத்தி இருக்கும் பூட்டேற்றி கிராம மக்கள் சார்ந்த மொழியை அவர் பயன்படுத்தும் லாவகமும் மலையாளமும் தமிழும் கலந்த மணி பிரவாள பேச்சு நடையும் இந்த நாவலின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. அந்த பேச்சு மொழியோடு அவர்களுடைய உணவு வகைகள், அவர்களின் வசிப்படங்கள், வாழ்க்கை முறை போன்றவற்றை மிகவும் நுணுக்கமாக இதில் காட்டியிருக்கிறார். அந்த பனையேறி மக்கள் வேலையில்லாத போது நெசவு தொழிலைக் கைக்கொள்கிறார்கள் அல்லது கூலி வேலைக்குச் செல்கிறார்கள். பனையேறி தொழில் சார்ந்த தீவிரமான நுணுக்கமான விவரிப்புகள் போல நெசவாளர் சார்ந்த தகவல்கள் இல்லாமல் இருக்கிறது. ஆனால் கதை ஓட்டத்தோடு நெசவுத்தொழிலோடு அந்த மக்கள் எப்படி இயைந்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை சிறப்பாக சொல்கிறார். ஏழ்மையில் கிடக்கும் மக்கள் தங்கள் தினசரி வாழ்க்கைக்கு ஓடுபவர்கள். அவர்களுக்குப் பசியைத் தீர்க்க ஏதாவது உணவு கிடைத்தால் போதும். இதிலிருந்து மீட்சி என்பது பற்றி எல்லாம் அவர்கள் யோசிப்பதில்லை. ஆனால் கல்வி என்பது அவர்களுக்கு எப்படி மீட்சியைத் தருகிறது. பொதுவுடமை இயக்கங்கள் எப்படி அவர்களை வலிமைப்படுத்தி எழுச்சி கொள்ள வைக்கிறது என்பதுதான் இந்த நாவலின் முக்கிய மையமாக இருக்கிறது. அதுவும் பெண்கள் படும் பாட்டை சொல்ல இயலாது. குடும்பத்தில் உழைப்பாளிகளாக இருக்கிறார்கள். கணவன்களின் கொடுமையை சகித்துக் கொள்கிறார்கள். குடும்பப் பெருமையை காப்பாற்ற வேண்டியிருக்கிறது. பாலியல் ரீதியான பல்வேறு தொல்லைகளையும் சகித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது இதெல்லாம் மீறி தன் குடும்பத்து உறுப்பினர்களை பெருமைப்படுத்த பல்வேறு செயல்களில் செயல்பட வேண்டி இருக்கிறது. அந்த வகையில் ஏழ்மையிலும் கல்வியைப் பெறுவது அதற்கான முயற்சியில் எடுப்பது என்பது பெண்களின் முக்கிய கடமையாகி விடுகிறது. இந்த பனை தொழிலாளர்கள் தங்களுடைய சிரமங்களை அப்படியே சொல்லிக் கொண்டிருக்காமல் தங்கள் உரிமைகளை சார்ந்து போராடவும் வழி வகுத்துக் கொள்கிறார்கள். இதுதான் இந்த நாவலில் முக்கிய அம்சமாக இருக்கிறது. அந்த போராடும் மக்களின் வாழ்க்கை முறையில் இருந்து, படித்த ஒருவர் அந்த இயக்க வேலைகளுக்காக தன்னை ஈடுபடுத்திக் கொள்வதை சூசகமாக சொல்லி இந்த நாவல் முடிகிறது. அங்கு இருக்கிற பொதுவுடமை இயக்கம் சார்ந்த செயல்பாடுகளை பற்றி விரிவாக சொல்கிறபோது அப்பகுதியில் அந்த கட்சியின் தோற்றம், வளர்ச்சி அது தேர்தலில் தன்னை முன்னிறுத்த ஆசைப்படுவது, அது பற்றி விமர்சனங்கள் போன்றவையும் சொல்லப்படுகிறது கிறிஸ்துவத்தை பற்றியும், விடுதலை இறையியல் பற்றியும் பல்வேறு விவாதங்கள் இந்த நாவலில் இருக்கின்றன, அந்த விவாதங்களை அவர்கள் தங்களுடைய பேச்சுக்களாக, உரைகளாக மட்டும் கொள்ளாமல் நாடக வடிவில் சொல்லும் விதத்திலும் அந்த நாடகப் பிரதி என்று இந்த நாவலில் இடம்பெற்றிருக்கிறது. பொதுவுடமை இயக்கங்கள் இந்த மண்ணின், பனையேறி மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பாடுபடுவதை இந்த நாவல் பல்வேறு சித்திரங்கள் மூலம் சொல்கிறது. 70 களில் திருப்பூரில் நடந்த ஒரு நெசவாளர் போராட்டத்தை மையமாக வைத்து நான் ” தறி நாடா” என்ற நாவலை எழுதியிருக்கிறேன். அந்த நாவலில் நெசவாளிகளின் போராட்ட சூழலும் அந்த நெசவாளர் குடும்பத்திலிருந்து படித்த இளைஞன் அந்தப் போராட்டம் தருகிற அறிமுக காரணமாக தன்னை பொதுவுடமை இயக்கத்தில் முழுமையான மாறுவதற்காக தயார் படுத்திக் கொள்வதை அந்த நாவலில் நான் எழுதி இருந்தேன். அந்த நாவலின் இரண்டாவது
பாகமாக அந்த இளைஞரின் பொதுவுடமை இயக்க அனுபவங்களும் இன்றைய கட்சி சார்ந்தவர்களின் சாதிய, தனி மனித குருரங்களும் சார்ந்து அது அவனை சிதைப்பதை இரண்டாவது பாகமாக எழுத நினைத்திருந்தேன். ஆனால் இரண்டாவது பாகம் ஒரு வகையில் பொதுவுடமை இயக்கம் சார்ந்த பலவீனங்களை பெரிதுபடுத்தி காட்டுவதாக அமைந்துவிடும் என்று நான் அந்த இரண்டாம் பாக நாவலை எழுதவில்லை.
இந்த நாவலில் வின்சென்ட் அவர்கள் அப்படி ஒரு இளமையான, துடிப்பான இளைஞனைத் தான் முன்வைக்கிறார். சுயநலத்தோடு வாழ்க்கையை நடத்துவதை விட பொதுநலத்தோடு அணுகுவது என்பது அந்த இளைஞனுக்கு உவப்பாக இருக்கிறது. இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சிகள் சாதாரண தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியத் தாக்கங்களை இன்னொரு கோணத்தில் சொல்லும் நாவலாகவும் இது அமைந்திருக்கிறது. இந்த நாவலில் வரும் பாத்திரங்கள் பனையேரி மக்களுடைய வாழ்க்கையோடுப் பின்னிப் பிணைந்தவை. அவர்களிடம் மொழியும் அந்த வகையில் பின்னிப்பிணைந்தவை. ரத்தமும் சதையுமாக அந்த மனிதர்களை முன் வைப்பதில் இல வின்சென்ட் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார். அவருடைய 15க்கும் மேற்பட்ட நூல்களில் அவருடைய முதல் நாவலாக இதைக் கொள்ளலாம். பல்வேறு ஆய்வு நூல்களும் கட்டு நூல்களும் எழுதி இருந்தாலும் முதல் நாவல் என்ற வகையிலேயே ஒரு சிறந்த நாவலை அவர் தந்திருக்கிறார் என்பது கூடுதல் பலம் தருகிறது.
பாரதி புத்தகாலயம் சென்னை வெளியீடு - ரூபாய் 330
ReplyForward
என் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் : சுப்ரபாரதிமணியன்
“ மொழிபெயர்ப்பது என்பது
ஒரு வகையில் கூடுவிட்டு கூடு பாய்வது தான்
ஒரு மீன் தண்ணீரில் தாவி நீந்துவது போல்
ஒரு மொழிபெயர்ப்பாளனும் மனங்களுக்குள் நீந்துகிறான். ஒவ்வொரு சொல்லின் கரையிலும்
நிரம்பி இருக்கும் மணலில் மண்டியிடுகிறான்.
ஒவ்வொரு சிற்பியின் வண்ணத்தையும் உற்றுநோக்குகிறான். ஒவ்வொரு சங்கையும் ஊதி பார்க்கிறான்
மொழிபெயர்ப்பு என்பது
விக்கிரமாதியன் கதைகளில் வரும்
தலைகளை இடம் மாற்றி வைக்கும் வேலைதான். மொழிபெயர்ப்பாளன் இன்னொரு கவிஞனின் தலையை
தன் முண்டத்தின் மீது பொருத்தி வைக்கிறவன் தான்.
மொழிபெயர்ப்பின் வழியில் வருகிறவர்களே
உங்கள் காலணிகளை கழற்றி விடுங்கள் கரையில்..
உங்கள் உடைகளைக் களைந்தும் விடுங்கள்
நிர்வாணமாகப் பதுங்கி செல்லுங்கள்.”
( மலையாளக் கவிஞர் கே. சச்சிதானந்தன்)
0
இந்தியா என்பது ஒற்றை கலாச்சாரத்தால் அமைக்கப்பட்டது என்பது போல சில சமயம் தோற்றமளித்தாலும், அப்படி சிலரால் கட்டமைக்கப்பட்டாலும் இந்தியா என்பது அப்படியல்ல, பல்வேறு கலாச்சார கூறுகளை உள்ளடக்கிய பல மடிப்புகளை கொண்டது. இந்த எண்ணங்கள் இந்தியாவின் பல்வேறு மொழி படைப்பாளிகளின் படைப்புகளை ஆங்கிலம் மூலம் மொழிபெயர்க்க போது நான் உணர்ந்தேன்
சாகித்ய அகாடமியின் ஆலோசனை குழு உறுப்பினராக 2008 முதல் 2012 வரை கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் தலைமையிலான குழுவில் பணியாற்றினேன். அப்போது சாகித்ய அகாடமிக்காக இரண்டு நூல்களை நான் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பிராந்திய செயலாளராக இருந்த இளங்கோவன் அவர்கள் என்னை மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபடுத்திக் கொள்ளச் சொன்னார். ஆலோசனைக் குழு உறுப்பினர் என்ற வகையில் பல்வேறு படைப்பாளிகளுக்கு மொழிபெயர்ப்புக்காக படைப்புகளை ஒதுக்கீடு செய்யும் பணியின் போது என்னையும் மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபடச் சொன்னார்
அப்படி நான் சாகித்ய அகாடமிற்காக எடுத்துக் கொள்ள முதல் நூல் ஒடிய எழுத்தாளரான ஜே பி தாஸ் என்பவரின் “ உயில் மற்றும் பிற கதைகள் “ .ஜே பிதாஸ் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். டெல்லியில் அப்போது இருந்து கொண்டிருந்தார். அவரின் ஒடியக் கதைகள் இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பதையும் ஒடிய கலாச்சார அம்சங்களும், தொன்மங்களும், மக்களின் நம்பிக்கைகளும் அவை மூட நம்பிக்கையாக இருந்தாலும் சரி தனித்து விளங்குவதை கண்டேன். எனவே அந்தக் கதைகளை மொழி பெயர்க்கிற போது அந்த கூறுகளை உள்வாங்கிக் கொண்டு மொழிபெயர்ப்பது என்பது சற்று சிரமமாகத்தான் இருந்தது. கடவுள் நம்பிக்கையோ, மூடநம்பிக்கையோ மக்கள் சார்ந்த தொன்மக்கதைகளோ என பல பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கதைகளாக அவை இருந்தால் கூட பல சமயங்களில் அவை ஒவ்வொன்றுக்குமான தனித்தன்மை இருப்பதை அந்த ஒடிய கதைகளை மொழிபெயர்க்கும் போது அறிந்து கொண்டேன். அதற்கு பின்னால் நான் மொழி பெயர்த்தது ” பூமியின் பாடல்கள்” என்ற சாகித்ய அகடமி வெளியிட்ட நூல், வடகிழக்கு இந்திய எழுத்தாளர்கள் சிறுகதைகள் தொகுப்பு . வடகிழக்கு இந்திய எழுத்தாளர்களுடைய கதைகளினுடைய அம்சங்களை கவனிக்கிற போது அவை பல சமயங்களில் இந்தியாவிலிருந்து துண்டிக்கப்பட்டதைப் போல தென்படும். மலைப்பகுதிகளும் இயற்கை வளங்களும் கொண்ட வடகிழக்கு இந்திய பகுதி சார்ந்த கதைகள் அவர்களின் பிரத்தியேக வாழ்க்கையை சொல்வதை கனிம வளங்களும் தேயிலைத் தோட்டங்களும் இயற்கை சம்பந்தமான இடங்களும் என்று உள் வாங்கினேன். அதனோடு மக்களுடைய வாழ்க்கையையும் கனிம வளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளை அடித்துக் கொண்டு போய் விடக்கூடாது என்ற அக்கறையில் அவற்றை பாதுகாக்கும் ஆதிவாசிகளும், பழங்குடி மக்களும் போராளி குழுக்களும் அவர்களுடைய பிரிவினைகளும் ஒற்றுமையும் பல சமயங்களில் ஆச்சரியப்படுத்தியது. பின்னால் வடகிழக்கு இந்திய பகுதிகளுக்கு நான் சென்றிருந்தபோது நான் மொழி பெயர்த்த அந்த கதைகள் சார்ந்த மனிதர்களை நேரில் பார்த்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அந்தக் கதைகளை நான் இன்னும் ஒரு முறை திரும்ப வாசித்த போது அவற்றின் தீவிர தன்மையும் உண்மை தன்மையும் அறிந்து கொள்ள முடிந்தது. இந்த இரண்டு நூல்கள் மொழிபெயர்ப்பிலும் நான் மூலப்படைப்பைப் போல பல சிக்கல்களை எதிர்கொண்டேன். ஆனாலும் எழுதி முடித்ததில் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.
எங்கள் திருப்பூர் என்பது 50 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலவாணி தரும் நகரமாக இருக்கிறது. பின்னலாடை துறை மூலமாக இந்த 50,000 கோடி ரூபாய் அன்னிய செலவாணி கிடைக்கிறது. இந்த துறை சார்ந்து பல்வேறு ஆய்வுகள் உலகம் முழுக்க இருந்து வரும் கல்வித்துறை சார்ந்தவர்களாலும் ஜவுளித்துறை சார்ந்தவர்களாலும் செய்யப்படுகின்றன. அப்படி செய்யப்பட்ட ஒரு நூல் நெதர்லாந்து சார்ந்த சில ஆய்வாளர்கள் நடத்திய பின்னலாடை துறை சார்ந்த ஆய்வு ” நிட்டட் டுகெதர்” என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளிவந்தது. அதை நான் ” பின்னலின் பின்னல்” என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தேன். சுமார் 400 பக்கம் கொண்ட அந்த ஆய்வில் திருப்பூர் சார்ந்த தொழிலார்களின் நிலைமை, பெண்களுடைய வேலை அமைப்பு, சாயப்பட்டறை தொழில் மாசுபடுத்தி இருப்பது உட்பட பல விஷயங்களைப் பற்றிய புள்ளி விவரங்களை நான் கண்டுகொண்டேன். அப்போதுதான் திருப்பூர் சார்ந்து இயங்கும் தன்னார்வ குழுக்கள் மற்றும் திருப்பூர் மக்களின் வாழ்க்கையை போராட்டங்களில் மூலம் பதிவு செய்யும் தொழிற்சங்கங்கள் இவற்றினுடைய போக்குகளும் நடவடிக்கைகளும் சரியாக அறிந்து கொள்ள முடிந்தது.
விஜயவாடாவில் நடக்கும் கவிதை திருவிழாக்களில் பல ஆண்டுகள் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அவற்றை முன் நின்று நடத்தியவர் திருமதி பத்மாஜா ஐயங்கார் என்பவர்.தமிழர். பாடி என்று அவரை செல்லமாக அழைப்பார்கள். அந்த பெயரில் தான் அவரும் ஆங்கிலத்தில் எழுதுவார் .அவர் விஜயவாடாவில் அந்த கவிதை திருவிழாவை ஆண்டுதோறும் நடத்துவார். உலகம் முழுக்க இருந்து கவிஞர்கள் கலந்து கொள்வார்கள். அவற்றையெல்லாம் தொகுத்து 500 பக்கங்களுக்கு மேலாக ஆண்டுதோறும் புத்தகமாக வெளியிடுவார். அந்த புத்தகத்தில் அவரவர் மொழி சார்ந்தப் பிரதிகள் மட்டுமல்லாமல் ஆங்கிலம் ஹிந்தி மலையாளம் உட்பட பல வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்ப்பு பிரதிகளையும் அதே நூலில் வைத்திருப்பார்கள். பெரிய முயற்சியாக பல ஆண்டுகள் அந்த திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. ஓர் ஆண்டில் அப்போதைய ஆந்திராவின் முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு அவர்கள் கலந்து கொண்டு தமிழ் தெலுங்கு கவிதை உலகம் பற்றியும் இந்திய கவிதையை பற்றியும் ஆற்றிய உரை மிகவும் முக்கியமானது. பல வெளிநாட்டுக் கவிஞர்களின் அரிய உரைகளையும் கேட்டிருக்கிறேன். அந்த கவிதை திருவிழாவில் நான் ஆண்டுதோறும் ஒடிய கவிஞர் சுப்ன பெஹரா என்பவரை சந்திக்கிற வழக்கம். அப்படித்தான் ஓராண்டில் அவரின் ஒரு கவிதை தொகுப்பை பெற்றிருந்தேன். அதை ” அகதி முகாமில் ஓர் இரவு” என்ற தலைப்பில் மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தேன். அதேபோல இன்னொரு ஆண்டு அதே ஓடிய பிரதேசத்தைச் சார்ந்த சங்கரா ஜெனே என்பவருடைய ” கான்சிபூரின் நிலவு “ என்ற நூலை தமிழுக்கு மொழி பெயர்த்து இருந்தேன். ஒரு இரண்டுமே நல்ல அனுபவங்கள். அந்த விஜயவாடா கவிதைத் திருவிழா ஆகட்டும், சாகித்திய அகடாமி நிகழ்ச்சிக்காக வெவ்வேறு ஊர்களுக்கு நான் செல்கிற போதும் அங்கு சந்திக்கிற கவிஞர்களின் படைப்புகளுடன் உறவாடுகிற போது அவற்றில் மூழ்கி இருக்கிற வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு பின்னால் பன்னாட்டு கவிதைகள் 2016/ 2017 என்ற தலைப்புகளில் மொழிபெயர்ப்பைக் கொண்டு வந்திருக்கிறேன்
என்னுடைய படைப்புகளில் சுமார் 20 படைப்புகள் சுற்றுச்சூழல் சார்ந்தவை. சுற்றுச்சூழல் சார்ந்த என் படைப்புகளில் என் மூன்று நாவல்களும், 12 கட்டுரை நூல்களும் அடங்கும். ஆகவே தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்த என் மனம் அது சார்ந்த பல பிரச்சனைகளைக் கொண்ட கட்டுரைகளையும் மொழிபெயர்க்கவும் செய்திருக்கிறது. அப்படித்தான் இன்றைக்கு உலகை ஆட்டிக் கொண்டிருக்கும் உலக வெப்பமயமாதல் உட்பட பல்வேறு பிரச்சனைகள் சார்ந்து நான் மொழிபெயடுத்த கட்டுரைகள் ” போப் சூழலில் மற்றும் பிற கட்டுரைகள்”
என்ற தலைப்பில் நான் ஒரு நூலாக கொண்டு வந்தேன்
சார்ஜா புத்தக கண்காட்சிக்கு இரண்டு முறை சென்று வந்திருக்கிறேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் முதல் முறை சென்ற போது அங்கு லாபியா அஞ்சும் என்ற ஒரு இளம் கல்லூரி மாணவி மற்றும் பெண் கவிஞரை சந்திக்க நேர்ந்தது அவருடைய ஒரு கவிதை தொகுப்பை நான் மலையாள எழுத்தாளர் வெள்ளியோடன் அறையில் தங்கியிருந்த போது தினந்தோறும் ஒரு கவிதை என்ற வகையில் மொழிபெயர்க்க ஆரம்பித்து சார்ஜா புத்தகக் கண்காட்சி முடிகிற சமயத்தில் ஒரு தொகுப்பை முடித்து வைத்திருந்தேன். அதுதான் பின்னால் ” பேசாத.. “ என்ற தலைப்பில் திருப்பூர் கவிநிலா பதிப்பகம் ஒரு புத்தகமாக கொண்டு வந்தது. சென்றாண்டு 2021 இல் மீண்டும் சார்ஜா புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அப்போது துபாயில் தங்கி இருந்தபோது அந்த பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் மெலடி என்பவர் ஒரு ஆங்கில கவிதை தொகுப்பை எனக்கு பரிசளித்தார் .அவர் ஒரு மலையாள கவிஞர் பத்திரிகையாளர். தினமும் கிடைத்த ஓய்வில் துபாய் கவிஞரின் அந்த கவிதைகளை மொழிபெயர்த்து முடித்தேன் “ புலம்பெயர் மணல் துகள்கள்” என்ற தலைப்பில் அந்த நூல் பின்னால் வெளிவந்தது. அந்த நூலில் இடம் பெயர்ந்து வாழும் இந்திய மக்களுடைய பிரச்சினைகள் பற்றியும் அவர்களுடைய உணர்வுகள் பற்றியும் கவிதைகளின் அனுபவங்களை மொழிபெயர்த்து இருந்தேன் .
சாகித்ய அகாடமின் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகள் எனக்கு மிகுந்த உற்சாகம் தரக்கூடியவை. அப்போதெல்லாம் அங்கு சந்திக்கிற கவிஞர்களின் கவிதைகளை பெற்று உடனே மொழிபெயர்க்கிற ஒரு வேலை தொடர்ந்து செய்து கொண்டு இருந்தேன். அந்த கவிதைகளை நான் “ அரசியல்வாதியும் புறாவும்” என்ற தலைப்பில் ஒரு தொகுப்பாக வெளியிட்டிருக்கிறேன் பல்வேறு அரசியல் கருத்துக்கள் சார்ந்த விஷயங்கள் நம் இந்திய சமூகத்தை பாதிப்பதை அந்த தொகுப்பில் நான் அடையாளம் கண்டு கொண்டேன்.
பெண்கள் உரிமைகள் சார்ந்தும், பாலின வேற்றுமை சார்ந்தும் பல்வேறு கருத்தரங்குகளில் நான் கலந்து கொண்டிருக்கிறேன் இந்தியாவில் நடைபெற்ற அந்த வகை கருத்தரங்குகளில் மட்டுமல்லாமல் பாலின வேறுபாடு சார்ந்த இரண்டு சர்வதேச கருத்துகளில் வங்காள தேசத்தின் டாக்காவில் நடைபெற்றவையில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அந்த அனுபவங்களை பல்வேறு கட்டுரைகளாக எழுதி இருந்தால் கூட நான் பெண்கள் உரிமை சார்ந்த ஒரு நூலை மொழிபெயர்க்கிற வாய்ப்பை ஒரு தன்னார்வ குழு அமைப்பாளர் திலகா அவர்கள் ஒருமுறை அளித்தார். அது சர்வதேச தொழிலாளர் ஆணையம் வெளியிட்ட பெண் உரிமைகள் சம்பந்தமான ஒரு நூலாகும். அந்த நூலை ” பெண்களும் தொழிற்சங்கங்களும்” என்ற தலைப்பில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டு இருக்கிறேன் அந்த நூலில் பாலின வேறுபாடு காரணமாக சுரண்டப்படும் பெண்களும் அவர்களுக்கான நிலையும் உலக அளவில் எப்படி இருக்கிறது வெளிநாட்டுத் துறைகளில் எப்படி இருக்கிறது என்பதை சார்ந்த பல எண்ணங்களின் பிரதிபலிப்பாக அந்த நூல் வெளி வந்திருக்கிறது.
சர்வதேச திரைப்பட விழாக்களில் பல ஆண்டுகளாகக் கலந்து கொள்கிற வாய்ப்பின் போது அங்கு வாங்கும்பல நூல்களின் கட்டுரைகளை மொழிபெயர்த்திருக்கிறேன்
சமீபத்தில் வெளிவந்த என்னுடைய மொழிபெயர்ப்பு நூல் ” பெயிண்டிங் பிரஸ் நம்பர் 000 “. பாலக்காட்டைச் சேர்ந்த அஞ்சு சஜித் அவர்கள் ஒரு பிரபலமான பதிப்பகத்தின் முக்கிய நிர்வாகியாக பணிபுரிகிறவர் அவர் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதுகிறவர். அவர் ஆங்கிலத்தில் எழுதின பல படைப்புகளை படித்து இருக்கிறேன் ஒருமுறை நானும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான ப.கா. பொன்னுசாமியும் பாலக்காட்டிற்கு சென்றிருந்தோம். பாலக்காட்டில் பிரபல எழுத்தாளர் அமரர் ஓ வி விஜயன் அவர்களுடைய நினைவு இல்லத்திற்கு சென்று விட்டு அவருடைய படைப்புகள் பற்றி பல்வேறு பரிமாணங்னைகளை உள்வாங்கிக் கொண்டு திரும்பிய போது பாலக்காட்டில் அஞ்சு சஜித் அவர்களைச் சந்தித்தேன். அவர் கொடுத்த அந்த நாவலின் ஆங்கில பதிப்பை பாலக்காட்டில் இருந்து நான் திருப்பூர் வருவதற்குள் படித்து முடித்து விட்டேன். அதை உடனே மொழிபெயர்க்க வேண்டும் என்று தோன்றியது. ஓவியர் ஒருவரின் உலகத்தை பற்றி அந்த நாவல் சொன்னது. நரபலிகள் மற்றும் மூடநம்பிக்கை சார்ந்து இயங்குகிற ஒரு சமூகத்தில் அதை தன்னுடைய படைப்புகள் மூலம் வெளிப்படுத்துகிற ஒரு ஓவியனுக்கு ஏற்படுகிற சிரமங்களும் அனுபவங்களும் பின்னால் அவர் காணாமல் போவதும் அவரைத் தேடி அவருடைய மகன் சென்னையில் அவர் வசித்த பகுதிகளில் சென்று அலைவதுமான அனுபவங்களை அந்த நாவல் கொண்டிருந்தது.
என் மொழிபெயர்ப்பு பணியில் என் படைப்பிலக்கியத்தின் அம்சங்கள் அவற்றை மொழி பெயர்க்க எனக்கு உதவி இருக்கின்றன. ஒரு படைப்பை உருவாக்குவது போலவே மொழிபெயர்ப்பையும் உருவாக்கும் தன்மையை நான் உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன். இந்திய மற்றும் சர்வதேச கலாச்சார அம்சங்களை உள்வாங்கிக் கொள்கிற ஒரு பணியாக மற்றும் ஆங்கில வழியில் அந்த மொழி சார்ந்த நுணுக்கங்களை பிரதிபலிக்கும் தன்மையை இந்த கவிதைகளின் மொழிபெயர்ப்பு படைப்புகளின் மொழியாக்கமும் என்னை தொடர்ந்து இந்த துறையில் இயங்கச் செய்து கொண்டிருக்கிறது
குரு அரவிந்தன் அவர்களின் இரண்டு நாவல்கள்
” சொல்லடி உன் மனம்
கல்லூரி உன்னருகே நானிருந்தால்.. ”
ஆகியவற்றை முன்வைத்து.. / சுப்ரபாரதிமணியன்
குரு அரவிந்தன் அவர்களுள்ள வாசக வட்டம் உலகளாவியது. பரவலானது. பரவலானது என்றாலே அந்த கதைகளை வாசிக்க கூடியவர்களே குடும்பக் கதைகளில் அக்கறை கொண்டவராக இருக்கிறார்கள். குடும்பக்கதைகளில் வருகிற கதாபாத்திரங்களை தங்களுடைய குடும்ப மாந்தர்களாக எண்ணி அவர்களுடன் வாசகர்கள் உரையாடுகிறார்கள். உணர்ச்சி கொள்கிறார்கள். அதனால் தான் குடும்ப கதைகளை படிக்கிற வாசகர்கள் உலகம் முழுக்க அதிகமாக இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.அப்படித்தான் குரு அரவிந்தன் கதைகளும் என்று நினைக்கிறேன்.
இந்த இரண்டு நாவல்களிலும் அவர் ஓரளவுக்கு குடும்பக் கதையை தான் சொல்லி இருக்கிறார் என்று தோன்றுகிறது. மற்ற இலக்கிய பிரதிகளில் வருவது போன்று சிக்கலான மனிதனுடைய மனப்பான்மையைச் சொல்லாமல் இயல்பான மனிதர்களின் கதையை சொல்லுகிற போக்கு பெரிதாக இருக்கிறது. அவர் இதுபோல இளம் எழுத்தாளர்களின் கலைஞர்களின் வாழ்க்கை போராட்டத்தை எடுத்து சொல்லும் புதினம் ” சொல்லடி உன் மனம் கல்லோடி “ .
புலம்பெயர்ந்த மண்ணில் எழுத்தாளனுக்கும் கலை உலகுக்கும் இவர் மிகுந்த பயன்பாடு கொண்டவராக இருக்கிறார் என்றருகிறேன். பலரை வளர்த்தார் என்பது கூட முக்கியமான விஷயமாக இருக்கிறது. இதில் வருகிற கமலினிக்கு அமெரிக்கா செல்வது ஒரு கனவாக இருக்கிறது. அவளுக்கு இசை தெரியும். நாட்டியம் தெரியாது அவருடைய இன்னொரு நெருங்கிய மாலதி நாட்டியம் நன்கு தெரிந்தவள். கண்ணன் புலம்பெயர்ந்து வந்தவன். மிருதங்கத்தில் மிகுந்த ஆர்வம். கொண்டவன் அவனின் திருமண ஆசையும் இந்த நாவலில் விரிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. மாலதியும் கமலினியும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். ஆனால் சில முரண்பாடுகள் உண்டு கமலினிக்கு ஆங்கில மோகம் மாலதிக்கும் தமிழ் தேச எண்ணம். உடை அலங்காரத்தில் மேலைநாட்டு உடைகளை கமலினி விரும்புவாள். மாலதி தமிழ் பண்பாடு கலாச்சாரத்தை பேணி காப்பதில் கவனம் கொள்வாள்.. வாழ்ந்தால் அமெரிக்காவில் தான் வாழ வேண்டும் என்ற கனவோடு கமலினி இருப்பாள். ஓலை குடிசை என்றாலும் குடும்பத்தோடு நல்ல வாழ்க்கை வாழ்ந்தால் போதும் என்று மாலதியின் வாழ்க்கை முறையும் கண்ணனின் எண்ணங்களும் அநேகமாக ஒத்து போகக்கூடிய தன்மை இருக்கின்றன. அந்த வகையில் இந்த நாவலில் அந்நாட்டையும் பற்றியும் இசை பற்றியும் பல அருமையான உரையாடல்கள் உள்ளன. நாட்டியத்தில் நவரசம் என்றெல்லாம் சொல்லுவார்களே அது எது குறிக்கும் நவரசத்தை பற்றி அறிந்து கொள்ள விரும்பினால் தொல்காப்பியத்தில் வரும் பல விஷயங்களைப் படிக்க வேண்டும் பரதநாட்டியத்தில் இருக்கும் இரண்டு உட்புறவுகளான திருத்தம் திருத்தியம் ஆடல் என்று சொல்லில் இருந்துதான் அடைவு பிறந்து இருக்க வேண்டும். உடலின் அசைவுகளால் தான் நடனத்தில் இந்த அடைவுகள் தோன்றுகின்றன. அதனுடைய நன்றாக கற்றபிறகு ஆடல் உறுப்படிகள் அலாரிப்பு வண்ணம் பதம் தில்லானா போன்றவற்றையும் முறைப்படி கேட்க வேண்டும் என்பதில் கூட அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. மாலதியின் கணவர் குடித்து செத்து விடுகிறார் .அவர் பெயர் ராஜன் என்பது. அவன் கொலையா என்பது கூட ஒரு சிக்கல் ஏற்படுகிறது. ஆண் குழந்தை என்று அவளுக்கு இருக்கிறது.
குரு அரவிந்தன் அவர்களுடைய எழுத்து வாழ்க்கை 25 ஆண்டுகளை கடந்து இருக்கிறது என்ற முக்கியமான குறிப்பையும் இந்த சமயத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
” உன்னருகில் நானிருந்தால்” என்ற நாவலில் வரும் நந்தகுமார் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக இருக்கிறான். இந்தியனாக இருக்கிறான். உல்லாச பயணியாகத்தான் அமெரிக்காவுக்கு வந்தேன். ஆறு மாதத்திற்கு மேல் இங்கே இருக்க முடியாது அதனால் எல்லையை கடந்து போய் கனடாவில் அது அகதி நிலை கோரப்போகிறேன் என்பதால் அவனின் ஆரம்பகால நிலையாக இருக்கிறது. அவன் உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது ஒலிவியா அவனை கவனித்துக் கொள்கிறாள் அவள் ஒரு இத்தாலிக்காரி. கனடா வாழ்க்கை பற்றி பல முக்கியமான குறிப்புகள் இந்த நாவலில் உள்ளன. வைதேகி என்பவள் முக்கியமான கதாபாத்திரமாக வருகிறாள். லட்சுமி பாட்டி அவனுக்கு பல அறிவுரைகள் சொல்கிறாள். சுபாவிற்கு திருமண ஆசை இருக்கிறது. ஆனால் அவள் மனதில் இருப்பவன் வேறு ஒரு திருமணம் செய்து கொள்கிறான். இந்த சிக்கல்களில் உள்ள மனப்போராட்டங்களை இந்த நாவல் சொல்லிக் கொண்டு போகிறார். .நாலாவது தலைமுறையாக இருந்தாலும் சகோதர சகோதரி முறை என்று தெரிந்தால் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பது போல் பல விஷயங்கள் சொல்லப்படுகிறது முதலாவது தலைமுறை அதாவது ஒரே பெற்றோருக்கு பிள்ளைகளாக பிறந்த அண்ணன் தங்கை இவர்கள் திருமணம் செய்வதென்பது பண்பாட்டு சமாச்சாரங்களுக்கு பொருந்தாது அருவருப்பானது என்று அபிப்பிராயம் சொல்லப்படுகிறது. லட்சுமி பாட்டி வாக்கு கொடுத்தாலும் அது வேறு கவரப்பட்ட விசயம், அந்த விருப்பம் அதிகரித்தாலும் நிச்சயமாக வைதேகியின் திருமணத்தை செய்து பார்க்கலாம் .பகுத்தறிவுப்படி பார்த்தால் நாலாவது தலைமுறை ஞாபகம் வைத்திருப்பது கஷ்டம். நாலாவது தலைமுறை என்பதால் மருத்துவ ரீதியாக அதிகம் தாக்கம் இருக்காது ஆகவே அவர்கள் திருமணம் செய்து கொள்ள பற்றி சர்ச்சைகள் உண்டு என்ற உணர்வு இல்லாதவர்கள் என்று இந்த கதை பற்றி சொல்லியிருக்கிறார்கள்.. ஒரு குடும்பத்தில் உள்ளேயோ அல்லது குறுகிய சமயத்தில் உள்ளேயோ தலைமுறையினராக மாறி கல்யாணங்கள் செய்து வருகிற போது பரம்பரை வியாதிகள் வருவதும் சாதாரணமாகவே உள்ளது. அவை பற்றி விவாதங்கள் இங்கே உள்ளன. அதே சமயம் தூய்மையான அன்பால் படைக்கப்பட்டுள்ள இரண்டு உள்ளங்களை போலியான சம்பிரதாயங்களை காட்டிப் பிரித்து வைப்பது சரியாகுமா என்பதை பற்றிய விவாதம் இந்த நாவலில் இருக்கிறது. ஆனால் இந்த சர்ச்சை குறித்து முடிவு விஷயத்தை வாசகர்கள் முடிவு சொல்லட்டும் என்று அவர் விட்டுவிடுகிறார்.. வைதேகி திருமணம் சமூக வழக்குகளால் அங்கீகரிக்கப்பட முடியாது. தனிப்பட்ட விருப்புகளை அடிப்படையில் நடத்தலாம் என்பது போன்ற கருத்துக்கள் புலம்பெயர்ந்த மக்களின் சமகால வாழ்க்கையோடு சொல்லப்படுகின்றன. சுபாவை போன்ற பெண்மணிகள் அந்த மண்ணில் கையில் குழந்தையோடு ஆதரவு இல்லாமல் அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சொல்கிறார்.
மனித குல வரலாறு எத்தனையோ மாற்றங்களை கண்டது அவற்றில் இது போன்ற திருமண உறவுகளும் ஒன்று. பழையது என்பதாலேயே அனைத்தையும் கழித்து கட்டுவது புதுமை என்பதாலே அப்படியே ஏற்றுக் கொள்வது நன்மை பயக்காது பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வகையினானே என்னும் நன்னூல் வழக்குக்கு ஏற்ப நீக்கி ஏற்க வேண்டியதை ஏற்று வாழ்க்கை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற அபிப்பிரங்கள் விவாதங்கள் மூலமாக இந்த நாவலில் முன் வைக்கப்படுகின்றன .
காலம் ஒரு நதியைப் போல உருண்டோடி கொண்டிருக்கிறது காலத்திற்கு திரும்பிச் செல்லும் விஷயம் நம் ஞாபகப்படுத்திக் கொள்வதன் மூலமாக நடக்கும். காலத்தை திருப்பி எட்டிப் பிடிக்க முடியாது காலத்தின் பயணத்தில் பல மாற்றங்கள் நடக்கும். அந்த மாற்றங்கள் பின்னால் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் நாளை என்பதில் மாற்றம் வரலாம். எழுதி எழுதி அழித்து செல்ல வல்லது காலம். காலம் அப்படித்தான் வாழ்க்கையின் பல விஷயங்களை அழித்து புதிதாக எழுதித் தொடர்கிறது.
இந்த காலத்தின் கோலத்தை இரண்டு நாவல்களிலும் குரு அரவிந்தன் வெளிப்படுத்தி இருக்கிறார். குடும்ப நாவல் சார்ந்த கதாபாத்திரங்கள் என்பதால் பரவலான வாசகர்களும் எளிமையான நாவல் நபர்களின் போக்கும் பலருக்கு பிடித்திருக்கிறது. அவருடைய பணி தொடர்ந்து செல்ல வேண்டும். புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள் சார்ந்த அவரின் சித்திரங்களும் அவரின் நாவல்களில் காணக்கிடைப்பது பொக்கிசமாக உள்ளது. அவற்றை அவரின் கட்டுரைகளில் காண்பதில் நிஜமானப் புதையல்கள் கிட்டியிருப்பதை படித்து மகிழ்ந்திருக்கிறேன்.
நாவல் சாட்சரதா
-----------------------------------------
(கா. சு வேலாயுதன் எழுதிய சாட்சரதா நாவல் குறித்து சுப்ரபாரதிமணியன் )
காசு வேலாயுதன்பத்திரிக்கையாளர் என்ற முறையில் பலம் வாய்ந்தவர். பத்திரிகையாளர் என்பவர் படைப்பிலக்கியம் பொறுத்த அளவில் பலவீனமானவர்.
பத்திரிகை பாணியும் எழுத்துமுறையும் படைப்பிலக்கியத்தில் மரியாதை பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால் பத்திரிகையாளர் என்ற முறையில் தான் பெற்ற அனுபவங்களை ஒரு அருமையான நாவலாக கொடுத்த வகையில் அவர் ஒரு பலமான பத்திரிக்கையாளராக விளங்கியதை இந்த நாவல் நிருபித்திருக்கிறது.
“ பொழுது கால் மின்னல்” என்ற ஒரு கொங்கு நாட்டு பாத்திரங்களை மையமாகக் கொண்ட ஒரு நாவலை எழுதி சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னால் அவர் இந்த இரண்டாவது நாவலினை வெளியிட்டு இருக்கிறார். இடையில் சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் சார்ந்த மில் தொழிலாளருடைய வாழ்க்கையை அழுத்தமாக முகநூலில் எழுதி இருக்கிறார். அது இன்னும் நாவல் வடிவம் பெறவில்லை.
இந்த நாவலை பொறுத்த அளவில் எனக்கு ” மற்றும் சிலர்” என்ற வார்த்தை தான் ஞாபகம் வருகிறது. மற்றும் சிலர் என்றால் .தமிழகத்தில் உள்ள தமிழர்களை தவிர வேறு இடங்களில் வசிக்கிற தமிழர்கள் எனக்கு ஞாபகம் வருவார்கள்.
என்னுடைய முதல் நாவல் ” மற்றும் சிலர்” ( 1987 ) கூட ஹைதராபாத்தில் வசிக்கிற தமிழ் குடும்பங்களை மையமாகக் கொண்டு இருந்தது. அப்படித்தான் ஆதவன் முதல் ஆ மாதவன் வரை பலர் தாங்கள் வாழ்ந்த பகுதியை, வாழ்ந்த வேற்று மாநிலச் சூழலை படைப்புகளில் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டு வேற்று மாநில சூழலில், வேறு இடங்களில் வாழும் தமிழர்களைப் பற்றிய படைப்புகளில் இந்த காசு வேலாயுதம் அவர்கள் நாவல் முக்கியத்துவம் பெறுகிறது.
சமீபத்தில் மலையாளத்தில் ஒரு படம் வந்திருக்கிறது ” அதர்ஸ் ”என்று பெயர். அவர்கள் ஆண், பெண்களைத் தவிர திருநங்கைகள் ஆகியவரை அதர்ஸ் என்று குறிப்பிடுகிறார்கள். அப்படித்தான் நானும் தமிழ்நாடு அல்லாமல் வேறு இடங்களில் வசிக்கிறவர்களை ” மற்றும் சிலர்” என்று குறிப்பிடுகிறேன்.
இந்த வேற்று சூழல் பற்றி தமிழ்நாட்டில் இருந்து எழுதிய எழுத்துக்கள் நிறைவே தென்படும். உடனடி யோசிப்பில் அகிலன் அவர்களுடைய ” பால்மரக் காட்டினிலே “ நாவல் ஞாபகம் வருகிறது.
அது மலேசியா பின்னணியில் அங்கு தமிழர்களுடைய வாழ்க்கையை சொன்னது. இதுபோல நாவல்களை அ.முத்துலிங்கம் அவர்கள் கூட எழுதியிருக்கிறார். நானும் பலமுறை மலேசியா நாட்டிற்குச் சென்ற காரணத்தினால் அந்த பாதிப்பில் அங்குள்ள தமிழர்களின் வாழ்வியலை கூர்ந்து பார்த்து கடவுச்சீட்டு, மாலு ( உயிர்மை பதிப்பகம், பொன்னுலகம் பதிப்பகம் ) என்ற நாவல்களை எழுதி இருக்கிறேன்.
பத்திரிகையாளராக பல ஆண்டுகள் அட்டப்பாடி பகுதியில் உள்ள தமிழர்கள் மற்றும் மலையாளிகள் வாழ்க்கையை கூர்ந்து பார்த்து எழுதப்பட்ட ஒரு முக்கியமான நாவல் இது.
அட்டப்பாடி என்றதும் நமக்கு அது அட்டப்பாடி பகுதி பழங்குடியினர் மீதான காவல்துறையினர் அத்துமீறல் என்பது தான் ஞாபகம் வரும முன்னூறு ஏக்கர் பரப்பில் அடர்ந்த காடு. ஒரு சதுர கிலோ மீட்டரில் 2000 நுண்ணுயிர்கள் வாழக்கூடிய பகுதி.
அந்த பகுதியில் 70 களில் ஒரு நீர் மின்நிலையம் கட்ட ஆரம்பிக்கப்பட்டபோது அதன் காரணமாக அமைதி பள்ளத்தாக்கு அழிந்துவிடும் என்று சுகுத குமாரி போன்ற எழுத்தாளர்கள் முன்னின்று போராட்டம் நடத்தி அந்த அணைக்கட்டும் திட்டத்தை கைவிடச் செய்தனர்.
இன்றைக்கு சமீபத்தில் நான் அங்கு சென்று இருந்த போது உலகம் வெப்பமாய் கொண்டிருக்கிற சூழலில் பாதிக்கப்பட்ட பகுதியாக அதன் ஒரு பகுதி வறட்சியாக மாறி இருந்தது. மரங்களும், அபூர்வமான தாவரங்களும் கருகி மறைந்து போய் கிடக்கின்றன.
அந்த பகுதியை பற்றி பல மலையாளச் சித்திரங்கள் ( நாவல்கள்., திரைப்படங்கள் ) இருந்தாலும் காசு வேலாயுதம் தன் நாவலில் குறிப்பிடுபவதை தனித்தன்மை வாய்ந்தவை.
அட்டப்பாடி பகுதி சார்ந்து வாழும் பழங்குடி மக்களுடைய வாழ்வியலை பிரதிபலிக்கும் அவர்களுடைய மொழியிலேயே சொல்லப்பட்ட கவிதைகளை ” ஆதிவாசிகள் கவிதைகள் “ என்ற தலைப்பில் சுதேசமித்திரனை ஆசிரியர் கொண்ட ” அகநாழிகை” மின்னிதழ் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
அதை நிர்மால்யா மணி அவர்கள் மொழி பெயர்த்து வெளியிடுகிறார். அட்டபாடி சார்ந்து ஒரு முழு நாவலை காசு வேலாயுதம் இதன் மூலம் தந்திருக்கிறார்.
சமீபத்தில் ” பாராக்குருவி” என்ற ஒரு படம் மலையாளத்தில் அட்டப்பாடி மையமாக வைத்து வெளி வந்திருக்கிறது. அது இருளர் மொழியில் எடுக்கப்பட்ட படம். இருளர் மொழியில் மொழி வந்திருக்கிற முதல் படம் அது என்ற வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது.
அதில் சாராயம் காய்ச்சும் ஒரு தமிழ் பெண்மணி தான் கதாநாயகி..
கணவன் கைவிட்டு போய்விட்டான். மகள் ஒருத்தி இருக்கிறாள். அவளின் வாழ்க்கையும் அவளை சுற்றியுள்ள தமிழருடைய வாழ்க்கையும் மற்றும் பழங்குடியினர் வாழ்க்கையும்தான் அந்த திரைப்படம் சொன்னது.
”பாராக்குருவி என்பது தந்தையில்லாதக் குருவியாம். அதுபோல் அந்த இளம்பெண் கர்ர்பமாகிவிடுகிறாள். தந்தையில்லாதக் குழந்தையாக அதனை வளர்க்க விரும்பவில்லை . கல்வி என்பது பெண்ணுடைய வாழ்வில் மிக முக்கியமாக இருக்கிறது
திருமணம் என்பதைத் தாண்டி அவள் வெளிவர கல்வி முக்கிய பாதையாக இருக்கிறது என்பதை அந்த படம் சொன்னது. இந்த அம்சத்தை தான் சாராயம் மற்றும் கல்வி சார்ந்த முக்கிய கூறுகளைக் கொண்ட நாவலாக காசு வேலாயுதம் நாவல் அமைந்திருக்கிறது. இதையும் ஒரு சிறந்த படமாக்க முடியும்.
கா.சு வேலாயுதன் நாவலில் வருகிற இரண்டு குறிப்பிடத்தக்க விஷயங்கள். மதுவும் அதனால் பாதிக்கப்பட்ட பெண்களும் அவர்களுக்கான கல்வியை மீட்போம் என்ற நடவடிக்கைகளும் முக்கியமானவை. தமிழர்கள் சாராயம் காய்ச்சுகிறார்கள்
அந்த பகுதியில் மதுவிலக்கு அமலில் உள்ள போது கூட தமிழகத்தினுடைய எல்லையில் திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளால் அந்த கேரளப் பகுதி மக்கள் நாசமாகிறார்கள்.
அந்த ஆண்கள் மீது அந்தப் பகுதி பெண்களுக்கு பெரும் வெறுப்பு இருக்கிறது .மதுவைக் குடித்துச் சாகிறார்கள். அவர்கள் இருந்து என்ன பயன்.. சாகட்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள் ஆண்கள் இல்லாமல் விதவையாகவே வாழ அவர்கள் விரும்புகிறார்கள்.
ஆனால் அதிலிருந்து மீள்வதற்காக தங்களை பல அமைப்பு மூலமாக வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அதிலொன்று சாட்சரதா.
சமூக அநீதிகளை சொல்லிக் கொள்கிறார்கள் .தங்கள் குழந்தைகள் அதிலிருந்து மீட்க கல்விதான் முக்கியம் என்று உணர்கிறார்கள்.
அப்படித்தான் அந்த இயக்கம் அங்கு ஒளிர் விடுகிறது, பெண்கள் மீதான பாலியல், வன்முறை ஆண்களின் அதிகாரம், காவல்துறை அதிகாரம், கூட்டு களவாணித்தனங்களால் இவர்களின் போக்குகள் நிறைந்திருப்பது இவற்றையெல்லாம் நாவல் சொல்கிறது.
கல்வி சார்ந்த இயக்கம் வெற்றி பெறுகிற போது அப்போதைய குடியரசு தலைவராக இருந்த அப்துல் கலாம் அது சார்ந்த ஒரு கூட்டத்திற்கு வருவது என்பது ஒரு பெரிய அங்கீகாரமாக இருக்கிறது. அதில் போராடிய பெண்களை முன்னிலைப்படுத்துகிறார்.
அவர்கள் கண்ணகி, மாதவி என்ற இலக்கிய கதாபாத்திரங்கள்- காவியத்தன்மை கொண்டவை அதேபோல இந்த நாவலில் வருகின்ற அந்த இரண்டு மாதிரி என்ற பாத்திரங்களும் அப்படித்தான். ஒரு காவியத்தன்மையில் நிலை பெற்றவர்கள்.
அவர்களை அப்துல் கலாம் அவர்கள் அங்கீகரிக்கிறார். ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையில் அவரின் வருகையை விவரிக்கிற விதம் சுவாரஸ்யமாக இருக்கிறது.
சமீபத்தில் வெற்றி பெற்ற அட்டப்பாடியை மையமாக வைத்த மலையாள படம் ” கோசியும் ஐயப்பனும் ” அதில் காவல் துறை அதிகாரிகள் சாராய உலகத்தில் இருப்பவர்களோடு எப்படி இறங்கி இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள்,
அவர்களுடைய வன்முறை உலகம் எப்படி இருக்கிறது என்பதை பற்றி சொல்வது. அந்த படத்தில் வருகிற நஞ்சம்மாவின் ஆதிவாசிப் பாடல் மனதை உருக்கும் பாடலாகும். அப்படி சாராயம் பண உலகமும் கொண்ட தளத்தில் காவல்துறை அதிகாரிகளும் எந்தளவில் இருக்கிறார்கள் என்பதை இன்னொரு பார்வையாய் காசு வேலாயுதன் இந்த நாவலில் சொல்கிறார்.
கல்வி இல்லாமல் வளரும் ஒரு சமூகம், .ஆண்களின் பாதுகாப்பு இல்லாமல் வளரும் சமூகம், . இவர்கள் மத்தியில் பெண்களுடைய நிலையை உயர்த்தும் போக்கு என்பது மிக முக்கியமாக இருக்கிறது.
இந்த தற்போதைய சமூக உலகத்தில் இருந்து இன்னொரு நல்ல சமூகம் வர வேண்டும் என்ற கனவு வேலாயிதத்திடம் இருக்கிறது.
இந்த கனவும் இந்த லட்சியமும் இந்த நாவலில் மட்டுமல்ல அவருடைய எல்லா படைப்புகளிலும் அடிநாதமாக இருக்கிறது அதை அவருடைய சிறுகதைகளிலும் முகநூல் கோப பதிவுகளிலும் நாம் காணலாம்.
அவருடைய முதல் நாவல் “ பொழுதுக்கால் மின்னல்” . மின்னல் என்றால் வெளிச்சம், ஒளி ,அப்படித்தான் இலக்கியங்கள் என்பது ஒளி தரும் கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும் என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதில் வருகிற மது சார்ந்த விஷயங்களை ஒட்டி சோம பானம் பற்றிய ஒவ்வொரு அத்தியாயத்தின் குறிப்புகளும் சுவாரஸ்யமாக உள்ளன. அந்த சோம பானத்திற்கு எதிராக மக்கள் ஊர்வலமாக செல்வது, போராடுவது என்பது இந்த நாவலின் முதல் அத்தியாயமாக இருக்கிறது .
அவர்களில் தங்களை ஒழுங்கு படுத்திக் கொண்டு ஒரு ஊர்வலமாக செல்கிறார்கள் என்பதை விவரிக்கும் அந்த காட்சியில் பல சிற்றாறுகள் சேர்ந்து கலந்து போவது போல் பேராறு எனக் கடந்து செல்லும் விவரிப்பு மிக அற்புதமானவாகும்.
அதேபோல இந்த பகுதி குழந்தைகள் விளையாட்டு அம்சங்களில் இருக்கிற பாடல்களை அவர்களின் மொழியிலேயே அவர் சொல்கிறார். அந்த இருளர் மொழி என்பது தனியாக இல்லை
ஆனால் அவர்கள் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் அந்த மொழியில் உள்ள பாடல்களை இந்த நாவலில் அறிமுகப் படுத்தியிருக்கிறார். பழங்குடி மக்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த உதவும் பண்டிகை நடவடிக்கைகள், அங்குள்ள விலங்குகள், அந்த மக்களை அச்சுறுத்துவது, குறிப்பாக காட்டு யானை போன்றவற்றின் அச்சுறுத்தல்கள் போன்றவையெல்லாம் விலா வாரியாகச் சொல்லப்பட்டுள்ளன.
அந்த பகுதியில் உள்ள ஊர் பெயர்கள், இருளருடைய பாத்திரங்களின் பெயர்கள் இவையெல்லாம் ஆச்சரியப்படுத்துபவை.
அமைதி பள்ளத்தாக்கு இந்த நாவலில் ஒரு பகுதியாக அங்கங்கே வந்து போகிறது பவானி நதியின் ஓட்டமும் அதனோடு இணைந்து போகிறது.
ஒரு காடு பாதுகாப்பாக இருக்கிறது, மக்களை பாதுகாக்கிறது ஆனால் அந்த காட்டை சுரண்டி வாழும் சில மக்கள் எப்படி அவர்களை எல்லாம் வெளியேற்றுகிற வேலையில் இருக்கிறார்கள் என்பதை தொடர்ச்சியாக சொல்லுகிறார்.
அதுவும் காவல்துறைக்கும் சாராய கும்பலுக்கும் இடையில் உள்ள பிணைப்பைச் சொல்கின்ற போது அந்த பணப்பரிமாற்றங்களை வெளிப்படையாகவே ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையில் தைரியத்துடன் காசு வேலாயுதன் அவர்கள் சொல்லியிருக்கிறார்.
அதுவும் சிறுவர்கள் சிறுமிகள் சார்ந்த பாலியல் தொல்லைகள் எப்படி வடிவெடுக்கின்றன என்பதை சொல்கிறார். தமிழர்கள் சாராயம் காச்சி அந்த பழங்குடி மக்களை வீழ்த்துகிறார்கள் என்பதில் தமிழர் மீது பழி கூட இருக்கிறது.
ஆனால் அது உண்மையான விஷயமாக இருக்கிறது. ஹாஜி மஸ்தான் போன்றவருடைய பிணைப்பு, அதிலிருந்து மீள்வதற்காக ஒரு காவல்துறை அதிகாரி தருகிற நம்பிக்கைகளோ சிதறிக்கப்பட்டு இருக்கிறது.
மூன்று மாநில காவல் துறையினர் அங்கு செயல்படுவதும் அவர்களின் போக்கும் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது .
பெண்கள் இந்த மதுவையும் போலீஸ் அராஜகத்தை எதிர்த்து உயிர் விட தயாராக இருக்கிறார்கள். பழங்குடிகளின் கல்வியாகட்டும் தங்களுடைய கல்வியாகட்டும் தமிழர்களுடைய கல்வியாகட்டும் அவருடைய வாழ்வில் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த நாவலில் அவர் சொல்லி இருக்கிறார் .அப்துல்கலாம் அவர்கள் முன்னிலையில் மக்கள் எடுத்துக் கொள்ளும் சபதம் மதுவை ஒழிப்பது குறித்ததாக இருக்கிறது.
ஆனால் இந்த நாவல் எழுதப்பட்ட காலம் என்று இப்போது ஆக இருந்தாலும் அதில் வருகிற சம்பவங்களும் நிகழ்வுகளும் 25 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. 25 ஆண்டுகள் கழித்தும் அந்த மக்களின் வாழ்வு இன்னும் பெரிதாக மேம்பட வில்லை என்று கருதுகிறேன்.
ஆகவே அறம் சார்ந்து பல கேள்விகளை இந்த எழுப்பும் இந்த நாவலின் அந்த மக்கள் வாழ்வு மேம்பட அக்கறை குரல் ஒன்றையும் வேலாயுதம் அவர்கள் எழுப்புகிறார்.
தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்து யானைகளை ஒட்டி அவர் எழுதிய யானைகள் வருகை தொடர் புத்தகங்களும், அவருடைய நொய்யல் இன்று புத்தகமும் இந்த நாவலை வருகிற அட்டப்பாடி சார்ந்த காட்டுப் பகுதிகளுடைய நுணுக்கமான விவரிப்பும் மக்களின் வாழ்க்கையும் சூழலியல் இலக்கியம் சார்ந்த இலக்கியத்தில் காசு வேலாயுதத்தின் பங்களிப்பை சிறப்பாகவே காட்டுகின்றன.
எழுத்துப் பிரசுரத்தின் இந்த ஆண்டின் சிறந்த நாவல்களில் ஒன்றாக பாராட்டைப் பெற்றது இந்த நாவல்.
விலை ரூ. 310 /- ஜீரோ டிகிரி பதிப்பகம், சென்னை வெளியீடு செல்பேசி: 8925061999
Published in Uyirmmeei April issue 2023
Short story
குற்றமும், தண்டனையும்/ சுப்ரபாரதிமணியன்
“ கருப்புக் கண் “ என்று அந்த போலீஸ்காரர் தியாகராஜனைப் பார்த்துச் சொன்னார் .அவர் வழக்கமான சீருடை அணிந்து இருக்கவில்லை .நன்கு சலவை செய்யப்பட்ட வெள்ளை சட்டையில் நீல பூக்கள் இருந்தன .அவரின் தலை கேசம் காவல் துறை சார்ந்த மனிதரின் அலங்காரமாக இல்லாமல் புதிதாக இருந்தது. இன்றைய கல்லூரி மாணவர்கள் போட்டுக்கொள்ளும் தலைக்கேச வேஷம் போல் இருந்தது. அந்த அறைக்கு வந்து செல்பவர்களில் பாதிப்பேர் இப்படித்தான் காவல்துறை உடுப்பு இல்லாமல் இருந்தார்கள். பலர் வெள்ளை சட்டையில் இருந்தார்கள். அவனை அடித்தவர்கள் யாரென்று அடையாளம் காண முடியாதபடி பலர் வந்து போகிறார்கள். போனார்கள்
” கருப்புக் கண் தெரியுமா ”.
” தெரியாதுங்க ஒரு கண்ணாடியில் பார்த்தால் உனக்கு தெரிஞ்சுடும் ” .
” கண்ணாடி இருந்தாக் குடுங்க “
” ஓ அது வேறயா ..அதுவேற கொடுக்கணுமா உன் மூஞ்சி லட்சணம் எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கணுமா “
.தியாகராஜனின் கண்களைச் சுற்றி கருப்பாய் வீக்கம் வந்திருந்தது. எலும்பு முறிந்த இடம் என்றில்லாமல் வேறு இடத்தில் வீக்கம் வந்து விட்டது போலிருந்தது ” .கண்டியூசன் அடினா என்னனு தெரியுமா .அந்த அடி தான் நீ இன்னைக்கு வாங்க போறே”.
” வேண்டாங்க. வாங்குனது போதும் உடம்பெல்லாம் வலி .எதெத் தாங்கறது “
” கண்டியூசனடினா என்னனு இன்னைக்கு நான் உனக்கு தெரிய வைக்கனும்”.
கை கூப்பியபடி சுவற்றோடு சேர்ந்து உட்கார்ந்திருந்த தியாகராஜனின் கைகள் தளர்ந்து விழுந்தபோது அவனின் கண்களில் கண்ணீர் கசிந்தது. தியாகராஜனின் கைகளிலும் கால்களிலும் பல இடங்களில் வட்ட வடிவில் வீக்கம் வந்திருந்தது .மூடின கையை ஒன்று சேர்த்து அடித்த இடங்களில் இப்படி வட்டவடிவில் வீக்கம் வந்து விட்டது. சொல்லி குத்தி விட்டது போல இருந்தது .தொடைக்கு கீழ் ஒவ்வொரு இடமும் இன்னும் வலித்தது அவனின் மூளையில் அபாய சிக்னல்களைத் தந்து கொண்டிருந்தன. விரைக்கொட்டை பெரிய வீக்கத்தைக் கொண்டு வந்துவிட்டது மிகவும் அடிபட்ட பல பகுதிகளில் வீக்கம் வேறு இடங்களில் பரவுவது போல இருந்தது .எங்கு எலும்பு முறிந்து இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் வேறு இடத்தில் வீக்கம் வந்து விட்டது போல இருந்தது .அவன் அருகில் ஏதாவது கயிறு இருக்கிறதா என்று தேடினார்கள் முன்பே அவன் இடுப்பில் கட்டியிருந்த அருணாக் கயிற்றைக் பிடுங்கி இருந்தார்கள் .
”ஏதாவது கயிறு இங்கே கிடந்ததா”
”அதெல்லாம் ஒன்னும் இல்லை ”
” இல்ல உனக்கு முன்னால் இங்கு ஒருத்தன் இருந்தான் அவன் கழுத்தில் கயிறு போட்டு இறுக்கி இருக்கான்”
” அய்யய்யோ “
” என்னய்யா ஆகும். கழுத்தை இறுக்கி இருக்கான் மூச்சுத்திணறல் வந்துடுச்சு அந்த கயிறு ஏதாச்சும் துண்டு கிடைக்குதான்னு “
” ஒன்னும் காணங்க”.
தியாகராஜனுக்குக் கூட அப்படி ஒரு கயிறு கிடைத்து கழுத்தை இறுக்கி மூச்சுத்திணறல் வந்து விட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான்.உடம்பின் எல்லா பாகங்களும் வலித்தன.மெல்ல எழ முயன்று சுவற்றோடு உடம்பை சேர்த்துக் கொண்டு இன்னும் அழுத்தம் கொடுத்து எம்பியதில் அவனின் வட்டவடிவ வீக்கங்கள் பெரிதாகியது போல இருந்தது .
கருப்புக் கண் வந்தாயிற்று. அடுத்து கண்டியூசனடினா என்னனு காட்டறேன் என்கிறார். இதெல்லாம் எங்கு போய் முடியும் தன் உடம்பை என்னவாகி வைக்கும் என்பது தியாகராஜனுக்கு பயம் அதிகரித்து அவன் உடம்பில் வியர்வை பெருக்கெடுத்தது .வெளியில் ஓரளவு வெயில் இருக்கும் அந்த வெயிலின் வெப்பம் அறைக்குள் வந்து இன்னும் வியர்வையைப் பெருக்கெடுத்து ஓட விட்டது போல இருந்தது .
எதுக்கு இப்படி அடிக்கிறீங்க என்று கேட்ட போது ” அப்புறம் குண்டர் சட்டத்தில் போட்டவங்களை சும்மா விடுவாங்களா” என்றான் ஒருவன் ” . குண்டர் சட்டமா. ஆமாம் அதுதான் உள்ள வச்சிருக்காங்க உன் மாதிரி ஆளுக இனிமேல இந்த மாதிரி நடவடிக்கைகளை வெச்சுக்கக் கூடாதுன்னு. அப்புறம் உன்னை மனசுல வெச்சுட்டு எவனும் இது மாதிரி பண்ணக் கூடாது.. அதுக்கு தான் ...பொம்பளெ கேசு இப்போ இடம் மாறிடுச்சு இப்பிடி “
”அதுக்கு இப்படியா அடிப்பாங்க “.
” அண்ணன் தம்பி உதவற மாதிரி இந்த அடி உதவும் நல்ல அடி. நல்ல பாடமாக இருக்கும் ”.
அந்த காவலாளி அறையை விட்டு வெளியே செல்லும்போது சப்தமாக்கி கேட்டை பூட்டிவிட்டுச் சென்றான். மெல்ல உடம்பை நகர்த்தி ஒரு அடி சுவரோடு சேர்ந்து நகர்ந்து மெல்ல எழுவதற்கு முயன்றான் தியாகராஜன்.வலி எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை.ஆனால் உடம்பின் ஒவ்வொரு அணுவும் வலித்தது.ஒவ்வொரு அணு என்று சொல்வார்களே அதன் பூரணத் தன்மையை இப்போதுதான் அவன் அறிந்து கொண்டான். ஒவ்வொரு அணுவில் இருந்து கிளம்பும் வலி மெல்ல மெல்ல அவன் உடம்பையே தீயில் போட்டு வாட்டி எடுத்த மாதிரி இருந்தது . அருகில் கசங்கிக் கிடந்த அந்தத் தாளை அவன் எடுத்தான். எண்ணெய் பிசுக்குடன் அந்த தினசரித் தாளின் கையளவுப் பகுதி இருந்தது .இவர்கள் ஏதாவது எண்ணைப் பலகாரம் தின்றதன் மிச்சமாய் அது தன் அறைக்கு வந்து வேடம் காட்டுகிறது என்று நினைத்தான். மெல்ல அதை எடுத்து முகர்ந்து போது அந்தத் தாளில் இன்னும் எண்ணை வாசம் மிச்சம் இருப்பது தெரிந்தது. அப்படி என்றால் இப்போது தான் அந்த தாள் இங்கே இடம் பெயர்ந்திருக்க வேண்டும். இப்போதுதான் ஏதாவது சாப்பிட்டுவிட்டு அவர்கள் இங்கே கடாசி வீசியிருக்க வேண்டும் இந்த போண்டா, பஜ்ஜி எண்ணையின் பிசுபிசுப்பு வாசனை எத்தனை நாளைக்குப் பிறகு உணரப் போகிறோம் என்ற கற்பனை அவனுக்கு வந்தது. இதையெல்லாம் சாப்பிடுகிற வாய்ப்புக் கூட இல்லாமல் செய்து விட்டார்களே என்று இருந்தது தியாகராஜனுக்கு. அந்தத் தாளில் கிழி பட்ட பகுதியை அவன் பார்க்க ஆரம்பித்தான். செய்தித்தாள் படித்தும் பல நாட்கள் ஆகிவிட்டன .படிக்கிற பழக்கத்தில் செய்தித்தாள் மட்டும் அவனின் அட்டவணையில் இருந்தது. கையிலிருந்த எண்ணெய் பிசுக்கால் தாளின் வரிகள் ஒருவகை மினுமினுப்புடன் அவனின் கண்களில் தெரிந்தன. மனிதனின் வாழ்வில் ஒரு செயலும் இல்லை. நல்லதானாலும் சரி கேட்டதானாலும் சரி.. ஒவ்வொரு செயலுக்கும் பலனுண்டு. அணுவளவு நன்மையோ அல்லது தீமையோ அதற்கும் பலன் உண்டு. மனிதன் பரிசோதனைக்காகப் படைக்கப்பட்டான். இந்த வாழ்வு ஒரு பரிசுக்காக இந்த உலகம் ஒரு பரிசோதனைக் கூடம். உங்களின் ஒவ்வொரு செயலும் பதிவு செய்யப்படுகிறது இதில் தேர்ச்சிபெறவே மனிதன் போராட வேண்டும் இதைத்தான் வேதங்களை அளித்து உணர்த்துகிறான் இறைவன். அவனின் வாழ்வு அவனுக்கு தரப்பட்ட சந்தர்ப்பம். அதை மிகச் சரியாக உபயோகிக்க வேண்டும். இந்த வாழ்வு மகத்துவம் மிக்கது .மீண்டும் இந்த சந்தர்ப்பம் கிடைக்காது. இறந்துவிட்டால் இந்த நாட்கள் கிடைக்காது என்று இருந்த அந்தப் பத்தியின் ஓரத்தில் வேதங்களில் ஒளியில் இறைவன் என்று இருந்தது .அது புத்தகத்தின் பெயராக இருக்கக் கூடுமா. இப்போதெல்லாம் புத்தகங்களை யார் படிக்கிறார்கள் புத்தகங்களை இப்படி போண்டா பஜ்ஜி மடக்குவதற்குத் தான் பயன்படுத்த வேண்டும் போல இருக்கிறது. இது இஸ்லாமிய நூலாக இருக்குமா கிறிஸ்துவ நூலாக இருக்குமா. நிச்சயம் இந்து நூலாக இருக்காது .அனேகமாக இஸ்லாமிய நூல் ஆகத்தான் இருக்கும் என்று நம்பத் தொடங்கினான் தியாகராஜன். நவாஸ் ஹமீத் என்றொரு நண்பன் அவனுக்கு உண்டு. அவனுக்கு இருக்கிற பழக்கங்களில் மோசமான பழக்கங்களில் ஒன்று வாயில் எப்போதும் சிகரெட்டை வைத்துக் கொண்டிருப்பது தான் .சமீபமாய் இ-சிகரெட் என்று ஏதோ வந்திருக்கிறது என்று அவனிடம் நீட்டினான் .புகை வராது ஆனால் புகை படிக்கிற அனுபவமும் ருசியும் இருக்கும் என்று சொன்னான் .இதெல்லாம் எனக்கு எதற்கு என்று தியாகராஜன் வேண்டாம் என்று சொல்லியிருந்தான். அவனுக்கு இறை நம்பிக்கையும் தானம் செய்வதில் அக்கறையும் இருந்தது அவனிடம் இப்படி ஒரு புத்தகப் பத்தியை மனப்பாடமாகச் சொன்னால் அவன் நிச்சயம் மகிழ்ச்சி அடைவான். இந்த குறுகிய அறைக்குள் வேறு எதையும் சிந்திக்க முடியாது. இந்தத் தாளில் ஒரு பகுதியை மனப்பாடம் செய்து கொள்ளலாம் .அவனிடம் இந்த வார்த்தைகளைச் சரியாகச் சொன்னால் அவன் மகிழ்ச்சி அடைவான். தியாகராஜன் திரும்ப அந்த தாளின் முனையில் உள்ள பத்தியைப் பார்க்க ஆரம்பித்தான். அந்த எழுத்துக்கள் எண்ணைப்பூச்சுடன் வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தன
00
கை விரல்கள் பரபரத்துக் கொண்டிருந்தன தியாகராஜனுக்கு .எப்போதும் கைகளில் இருக்கும் கைபேசியை எந்த வகையிலாவது உபயோகப்படுத்திக் கொள்வது என்பது சாதாரணமாகி விட்டது அவனை. முகநூல் , வாட்ஸ்அப் , குறுஞ்செய்தி என்று ஏதாவது அலைக்கழித்துக் கொண்டே இருக்கும் அதுவும் முகநூலில் வருகிற வீடியோக்களில் பெண்கள் சம்பந்தமான விசயங்களை விரும்பிப் பார்ப்பான் ,கொஞ்சம் கைவிரல்கள் பிசகி விட்டது போல எதையாவது அழுத்திவிட்டால் பெண்கள், பாலியல் சம்பந்தமாக நிறைய வீடியோக்கள் வந்து குவிந்து விடும். அந்த வகை வீடியோக்களைப் பார்ப்பதில் அவனுக்கும் ஆர்வம் இருந்தது. இப்போது கைபேசி இல்லாமல் கம்பிகளுக்குள் அடைபட்டுக் கிடப்பது அவனுக்கு சிரமமாகத்தான் இருந்தது.
எவ்வளவு கைபேசிகளை காவல்துறையினர் அபகரித்துக் கொண்டார்கள் என்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது .நோக்கியா சாம்சங் சைனா மாடல் மைக்ரோமேக்ஸ் லெனோவா சோனி எரிக்சன் சாம்சங் என்று அப்போது அறையில் அங்கிருந்த அவர்களிடம் இருந்த கைபேசிகளை எல்லாம் சுருட்டிக் கொண்டார்கள். பணமும் அதுபோல் மேசையின் மேலும் மேசையின் இழுப்பறையிலும் இருந்தவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டார்கள் .இந்த கைபேசிகளை எல்லாம் என்ன செய்திருப்பார்கள் என்று பல சமயங்களில் அவன் யோசித்திருக்கிறான். கைப்பற்றப் பொருட்களை பார்ம் 95ல் பதிவிட்டு நீதிபதியிடம் ஒப்படைத்து விடுவார்கள் பிறகு அவையெல்லாம் அப்படியே கிடக்கும். ஒரு நாளைக்கு அவை அடித்து நொறுக்கப்பட்டு குப்பை ஆகிவிடும் .இந்த கைபேசிகளை காவல்துறையினர் ஏதாவது எடுத்து பயன்படுத்துவார்களா என்ற சந்தேகம் தியாகராஜனுக்கு எழுந்திருக்கிறது .இந்த கைபேசி களிலிருந்து சிம்களைப் எடுத்துவிட்டு வேறு சிம்களை போட்டு பயன்படுத்தலாம் அப்படி செய்வதற்கு சாத்தியங்கள் இருக்கிறதா என்று யோசித்திருக்கிறான். ஆனால் அவற்றிலிருந்து கிடைக்கும் அலைவரிசை கைபேசி சம்பந்தமான தயாரிப்பு எண்கள் எங்காவது பதிவாகி குற்றம் சாட்டப்பட்டவர்கள் இடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைபேசிகள் என்ற எண்ணம் வந்துவிடும் என்று அதை பெரும்பாலும் தவிர்ப்பதாக சொல்லிக்கொண்டான். இது போல் ஆயிரக்கணக்கான கைபேசிகள் அவர்களிடம் இருக்கும். ஊரில் உள்ள வீடியோ பார்லர்களில் கைப்பற்றப்பட்ட குறுந்தகடுகளை அப்படித்தான் காவல் துறை அலுவலகங்களில், பீரோக்களில் கிடப்பதையும் அல்லது சாக்கு மூட்டையாகக் கிடப்பதையும் தியாகராஜன் பார்த்திருக்கிறான் .அவனுக்கு தெரிந்த ஒரு நண்பர் காவல்துறை கைப்பற்றிய குறுந்தகடுகளை வாங்கி வந்து பார்த்துவிட்டு திருப்பித் தந்ததாக கூடச் சொன்னார். அந்த கைப்பற்றப்பட்ட குறுந்தகடுகளில் பாலியல் சம்பந்தமான விஷயங்கள் இருந்தன .ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் அவற்றைப் பெற்று பார்த்து அனுபவித்து திருப்பித் தந்ததாக ஒரு நண்பர் சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது அதற்கெல்லாம் அவசியம் இல்லை எல்லாப் படங்களும் கைபேசியில் இருக்கின்றன. ஆனால் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் கொடுத்து வாங்கிய இந்த கைபேசிகள் இப்படி முடங்கிப்போய் கிடப்பதோ அல்லது இறுதியில் நொறுக்கப்பட்டு குப்பை ஆக்கப்படுவதோ அவனுக்கு நினைக்கையில் சங்கடம் அளித்தது .முகநூல் , வாட்ஸ்அப் என்று வந்தபின் தொடர்புகொள்வது சுலபமாகத்தான் ஆகிவிட்டது . ஆனால் அதுவே காவல்துறையினருக்கு வழக்குகளை விசாரிக்க போதுமானதாக இருப்பதாக சொல்லிக்கொண்டார்கள் .கைபற்றப்பட்ட கைபேசிகளில் அதிகபட்சமாய் 8000 ரூபாய் உள்ள கைபேசி இருந்தது. அதே போல 300 ரூபாய் உள்ள சைனா கைபேசிகளும் இருந்தன கைப்பற்றப்பட்ட பொருட்களைப் பட்டியலிடும் போது ஒவ்வொன்றிற்கும் எண் குறித்தார்கள் அப்போது காண்டம் ,கருத்தடை ஆணுறை விலை குறிக்காமல் மதிப்பிடப்பட்ட விலை என்ற பகுதியில் 0 என்று குறிப்பிட்டார்கள். அது அப்படி விலை அற்றதா அல்லது விலை மதிப்பு இல்லாததா.. அதை எவ்வளவு ஜாக்கிரதையாக கையாள வேண்டும் .அதை எவ்வளவு நுணுக்கமாக பயன்படுத்த வேண்டும் என்னென்ன அத்தியாவசியமான விஷயங்களுக்குத் தேவையாக இருக்கிறது என்றில்லாமல் மதிப்பிட்டவர்கள் கீழே விரிக்கப்பட்டிருந்த நீலக்கலர் பிளாஸ்டிக் பாய் 200 ரூபாய் என்று போட்டு இருந்தார்கள் .அதனுடைய விலை மட்டும் சரியாகக் குறித்து இருந்தார்கள். மற்றபடி மற்ற கைபேசிகளுக்கு விலை என்று குறிப்பிட்ட தொகை பாதியாக தான் இருந்தது. அவையெல்லாம் சரியான பயன்பாட்டில் தான் இருந்தவை .ஆனால் இவ்வளவு குறைவாக மதிப்பிட்டு இருக்கிறார்கள் என்று அவன் கூட முணுமுணுத்துக் கொண்டான். குற்ற அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விவரங்களில் கடவுச்சீட்டு எண் என்று ஒன்று இருப்பதை அவன் எட்டிப் பார்த்தபோது அந்த விண்ணப்பத்தில் இருப்பது தெரிந்தது.
தியாகராஜன் மலேசியா சிங்கப்பூர் போக வேண்டுமென்று கடவுச்சீட்டு எடுக்க ஆசைப்பட்டு இருந்தான். ஆனால் சமீபகாலங்களில் விசா பெறுவதற்கு அங்கிருந்து யாராவது கடிதம் அனுப்ப வேண்டும், உத்தரவாதம் தரவேண்டும் என்று வந்துவிட்ட விதிமுறைகளால் தாமதித்துக்கொண்டிருந்தது. .இல்லை என்றால் கொஞ்சம் காசு அதிகம் செலவழித்து அங்கு அறைகள் பதிவு செய்துகொண்டு அதை விசாவிற்கு காண்பித்தால் சுலபமாகிவிடும். அது கொஞ்சம் செலவு அதிகம் என்று அவன் தவிர்த்திருந்தான். கடவுச்சீட்டு வாங்குகிற எண்ணம் அப்படியே தவிர்த்து விட்டது .
அவன் ஒரு முறை அங்கு வருகிற நெருக்கமான பெண்களிடம் மலேசியா சிங்கப்பூர் போலாமா என்று கூட கேட்டு வைத்தான். அவர்கள்கூட உற்சாகமாய் போகலாம் என்று சொல்லியிருந்தார்கள் அதற்காக திட்டமிடல் பற்றி அவன் யோசித்துக் கொண்டிருந்தான் .குற்றம்சாட்டப்பட்டவர்களின் விவரப்பட்டியல் இருந்த கடவுசீட்டு எண் என்பது வெளிநாடு செல்வதற்கான பாஸ்போர்ட் அல்ல. சிறைக்கு அனுப்புவதற்கு அவர்களுக்கான ஒரு எண் என்பது அவனுக்கு பின்னால் தெரிய வந்தது .அந்த விவரம் பிணையத்தில் எடுக்கும்போது பூர்த்தி செய்யப்பட வேண்டிய குறிப்பாக இருந்தது .ஆனால் பிணையம் தனக்கு கிடைக்குமா என்பது சந்தேகமாக இருந்தது. அவனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்திருந்தார்கள் .அவனையும் ஜான்சிராணி அடையாளம் காட்டினாள். அவளை விபச்சாரத்திற்கு ஈடுபடுத்தியதாய் அவள் சொன்ன எட்டு பேர்களை குண்டர் சட்டத்தில் தான் போட்டிருந்தார்கள், ஆனால் குண்டர் சட்டத்தில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்பதை அவர்களின் வழக்கறிஞர்களிடம் அவனும் சொல்லி இருந்தான். அப்படி குண்டர் சட்டத்தில் போட்டால் பிணையும் கிடைக்காது .ஓராண்டுக்கு வெளியில் வரமுடியாது அவர்கள் மேல் போடப்பட்டிருக்கும் வழக்குகளை குண்டர் சட்டத்திலிருந்து வேறு பிரிவுகளுக்கு மாற்றினால் பிணையம் கிடைக்கும், வெளியே வர ஏதுவாகும் என்பது கூட முக்கியமான விஷயமாக இருந்தது ,அதற்காக வழக்கறிஞரிடம் அவனும் சொல்லிக்கொண்டிருந்தான் ,ஆனால் காவல் துறையில் உள்ளவர்களால் தான் அடிபட்டு மிதிபட்டு நடமாடச் சிரமப்பட்டு பிணையில் வெளியே போய் நிம்மதியாக இருக்க முடியுமா என்ற கேள்வி வந்தது .
இனி மனைவி அவனைச் சரியாக பார்ப்பாளா. மரியாதை தருவாளா .இனி அவளை எப்படி எதிர்கொள்வது. எதற்கெடுத்தாலும் முறைத்துக்கொண்டு அவள் பெற்றோர் வீட்டுக்கு செல்பவள் இந்த வழக்கு காரணமாக அவள் நிரந்தரமாகக் கூட தன்னைவிட்டு விலகக் கூடும் என்பது அவனுக்கு பயம் அளித்தது. பல பேர் பாதுகாப்பு இல்லத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டு இருந்தான். தன்னுடன் கைதுசெய்யப்பட்ட அழகிகளையெல்லாம் சிறையில் போடுவார்களா அல்லது பாதுகாப்பில்லத்தில் வைப்பார்களா என்பது அவனுடைய கற்பனைக்கே எட்டவில்லை. வழக்குகள் என்பது பல பிரிவுகளாக இருந்தன. சில வழக்குகள் விடுதலை வரை பல வழக்குகள் தண்டனையாக அபராதத் தொகை கட்டும் வரை. சில வழக்குகள் சிறைக்குச் சென்று தள்ளி விடும் வரை. சில வழக்குகள் தண்டனை முடியும்வரை என்று வகைவகையாக இருந்தன. இவற்றில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இப்படி வகை வகையான தண்டனைகள் கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது தனக்கு கிடைக்கும் தண்டனை எதுவாக இருக்கும் இந்தப் பட்டியலில் ஏதாவது ஒன்று அவனுக்கு கிடைக்கும். ஆனால் அது எதுவாக இருக்கும் என்பது அவனின் யோசிப்பிற்கு உடனே வரவில்லை. பெயில் வரை இருக்கும் வழக்குக்கு மேலாக சிறை மேலும் இருக்கும் என்பது அவனுடைய மனதில் இருந்தது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருப்பவர்கள் பல பேர் அவனுக்கு அவ்வப்போது அறிமுகமாகி இருந்தார்கள். ஆனால் அவர்கள் தன்னை சுற்றிவளைத்த காவல்துறையுடன் இருப்பது அவனுக்கு ஆச்சரியம் தந்தது .சாதாரண சமூகப் பணியாளர்கள் ஆலோசனை சொல்பவர்கள்,கவுன்சிலர்கள் போன்றவர்களெல்லாம் அந்தப் பட்டியலில் வந்துவிட்டது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது , குழந்தைகள் நலக்குழு வைச் சார்ந்த சிலரும் அவனிடம் கேள்விகள் கேட்டார்கள் ஆச்சரியமாக இருந்தது. இவர்கள் எல்லாம் யார் .திடீரென்று இவர்களெல்லாம் எப்படி முளைத்தார்கள் .இவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறதா .ஏதோ கொஞ்சம் பணம் ,கொஞ்சம் எலும்புத் துண்டு போட்டால் இவர்கள் எல்லாம் ஓடி விடுவார்கள் என்றுதான் தியாகராஜன் நினைத்திருந்தான். ஆனால் அவர்களின் செல்வாக்கு என்ன என்பதை அவர்கள் கேட்ட கேள்விகளில் இருந்து அவன் அறிந்து கொண்டான் .குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் என்று சுமார் 30 பேராவது அந்த பட்டியலில் இருப்பார்கள் என்று தோன்றியது .இவர்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒரே வழக்கறிஞரை வைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை அல்லது ஒவ்வொருவரும் தனக்கு தெரிந்த வழக்கறிஞர்களை நியமித்து தான் வாதாட வேண்டுமா என்பது அவனின் குழப்பங்களில் ஒன்றாக இருந்தது .ஆனால் குண்டர் சட்டத்தில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்டு வேறு வழக்கு பிரிவுகளின்கீழ் தாங்கள் வந்துவிட்டால் ஓரளவு ஆறுதலாக இருக்கும் என்று நினைத்தான் .தான் அடி பட்டது போல் மற்றவர்களும் அடிவாங்கி இருப்பார்களா அல்லது பாதிக்கப்பட்ட பெண்களை பாலியல்தொழில் செய்ய தூண்டியதாக உள்ள சிலருக்கு இன்னும் கடுமையான அடி உதைகள் கிடைத்திருக்குமா.. பாலியல் தொழில் மூலம் சம்பாத்தியம் ஈட்டி பாதிக்கப்பட்ட பெண்களை பாலியல் தொழில் செய்யத் தூண்டியதாக யார் மீதெல்லாம் வழக்குகள் போட்டிருப்பார்கள் அவனுக்கு யூகிக்க முடியவில்லை. ஆனாலும் குண்டர், போக்சோ சட்டப் பிரிவில் இருந்து வேறு சட்டப் பிரிவுக்கு மாற்றம் செய்து விட்டார்கள் என்றால் அது ஒருவகை ஆறுதலாக இருக்கும் என்பது அவனின் விருப்பமாக இருந்தது .
விரல்களின் நாட்டியத்தை இப்போது கைபேசி எதுவுமில்லாமல் விரல்களை அசைத்து பாவனை செய்து கொண்டான் ஆனால் உடம்பின் ஒவ்வொரு அணுவும் வலியை உற்பத்தி செய்வது போல விரல் நுனிகளில் வலியின் தீவிரம் வந்து நின்றது. ஐயோ என்று லேசாக முணுமுணுத்துக் கொண்டான் .அம்மா என்று எதேச்சையாக வார்த்தைகள் அவனின் வாயில் இருந்து வந்தன. அம்மாவை இன்னும் கொஞ்சம் கௌரவப்படுத்தி சாக விட்டிருக்கலாம். கடைசி காலத்தில் காலில் அடிபட்டு கிடந்தவளை ஒரு பிச்சைக்காரியைப் போல தானும் சேர்ந்து நடத்தி விட்டது ஞாபகம் வந்தது .அம்மா கால்களைத் தூக்கிவைக்க முடியாமல் ஏதோ இரும்பு குண்டுகளைக் கட்டி விட்டது போல இருப்பதாகச் சொல்லி அழுவாள் .அதேபோலத்தான் பெரிய இரும்புக் குண்டுகளை கயிற்றில் மாட்டி தன் உடம்போடு இணைத்து பெரும்பாரம் ஆகிவிட்டதை அவனின் கண்களில் இருந்து கசிந்த கண்ணீர் வெளிப்படுத்தியது.
” நான் செத்துருவன் போலிருக்கு “
” நீ சாக மாட்டே. ரொம்ப நாள் இருப்பே . தப்பு பண்ணும் போது தெரியலையா தப்புன்னு “
“ தப்புன்னு தெரியலே. கொஞ்சம் காசு வந்துச்சு. பல பெரிய புள்ளிக கைக்கிவந்துட்ட மாதிரி இருந்துச்சு . “
“ தப்புன்னு தெரியலே. ஆனா தண்டனை மட்டும் இப்போ தெரியறதாக்கும் “
“ ஆமாங்க “
வவ்வால் பூ சிரிக்கும் வனாந்திரம்.
14/40 கொண்டை ஊசி வளைவு - சுப்ர பாரதி மணியன்
யாழ் எஸ் ராகவன்
தேடலின் தீவிரத்தில் பலர் இங்கே சுயத்தை தொலைக்க நினைப்பதுண்டு ஆனாலும் சுயம் அகம் புறம் என்ற பேதம் இன்றி எல்லா இடங்களிலும் வெளிப்பட்டே தீரும். குறைவான பாத்திரங்களைக் கொண்டு ஒரு நாவலை கட்டமைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. தத்துவ விசாரணமும் ஆழ்ந்த அனுபவமும் உளவியல் சார்ந்த நிலைப்பாடுகளும் தெரிந்த ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு நாவலை எழுதி விட முடியும் என்று தோன்றுகிறது.நேரடி கதை சொல்லும் முறை என்பது வேறு சற்று ஆழ்ந்து படித்து புரிந்து கொண்டு ரசிப்பது என்பது வேறு.
வாசகனின் மனநிலையை வாசகனின் வாசிப்பு ஆற்றலை உரசி பார்க்கும் விதமாக எழுதுகின்ற இருண்மை தன்மையில் நாவல் படைக்கப்பட்டு இருக்கிறது.
சீர பாகம். திராக்ஷாபாகம். நாளிகரபாகம். என்று ஒரு பிரதியை புரிந்து கொள்ளும் விதத்தை வடமொழியாளர்கள் மூன்று விதமாக சொல்லி வைத்திருக்கிறார்கள் சீரம் என்றால் பால் பாலை பருகுகின்ற போது எவ்விதமான சிரமமும் தேவையில்லை. திராட்ச பாகம் என்பது திராட்சை பழத்தை சாப்பிடும் போது அதில் இருக்கும் விதைகளை துப்பி விட்டு அருந்த வேண்டும்.
நாளிகரம் என்றால் தேங்காய் தேங்காய் பால் வேண்டுமென்றால் தேங்காய் உடைத்து துருவி அது வெந்நீரில் போட்டு பிழிந்து அதன் பிறகு தான் நாம்தேங்காய் பாலை அருந்த முடியும்அந்த வகையில் எனக்கு இந்த கதை நாளிதர பாகமாகவே தெரிகிறது. 14/40 கொண்டை ஊசி வளைவு என்ற நாவல் தமிழில் மிகச் சிறந்த படைப்பாளி சுப்ர பாரதி மணியன் அவர்களால் எழுதப்பட்டது.
வாழ்வில் பொருள் சம்பாதிக்க வேண்டும் பணம் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஓடி ஓடி உழைத்த ஒருவன்.ஓய்விற்காக உடல் மட்டும் மன செம்மைப்படுத்தும் பயிற்சிக்காக ஆனைகட்டி அருகில் உள்ள ஒரு பயிற்சியில் தங்குகிறான்.அங்கே வாழ்வில் பல துன்பங்களை சிக்கல்களை சந்தித்து உடலாலும் மனதாலும் சுரண்டப்பட்டு துன்பத்தில் உழண்ட பெண்ணான நயன்தாரா என்ற கதாபாத்திரத்தை சந்திக்க நேர்கிறது.
ஆறுதல் தேடி அலையும் அவள்.உடலை மட்டுமே சுரண்டிய சுரண்டும் உன்மத்தர் கூட்டத்திற்கு மத்தியில் யாரேனும் உள்ளத்தை ஆசைகளை புரிந்து கொள்வார்களா என்று ஏங்கும் ஒரு பெண்ணின் மனம்.குடும்பச் சிறையில் பாசக்கயிற்றில் பணம் எண்ணும் அரக்கனின் கொடூர கோர பசியில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் ஒரு இளைஞனின் ஆசைகளும் அபிலாசைகளும் ஊடும் பாவுமாக கதையின் மைய நீரோட்டமாக அமைகிறது.
இயற்கை எழில் கொஞ்சும் ஆழியார் அணை ஆனைகட்டி பகுதியில் இருந்து கதை அற்புதமாக தொடங்குகிறது மெதுவாக நகர்ந்து நகர்ந்து. காதலும் காமமும் நகைச்சுவையும் சரிவிகிதத்தில் கலந்து சித்த தத்துவம் ஜென் தத்துவம் சைவ சித்தாந்த தத்துவம் அத்தனையும் அலசி ஆராய்ந்து கதை வேகம் எடுக்கிறது.
இயல்பாக ஒரு ஆணுக்கு பெண் மீது ஏற்படும் ஈர்ப்பும் காமமும் ஒரு பெண்ணுக்கு ஆண் மீது ஏற்படும் காதலும் கவித்துவமாக கதையில் வருணிக்கப்பட்டு வந்திருக்கிறது. மனவளக்கலை பயிற்சி மையம் அங்கே இடம் அமைப்பு உணவு அமைப்பு அறை அமைப்பு அத்தனையும் விரிவாக விளக்கப்பட்டு வந்திருக்கிறதுகாதல் என்ற ஒழுங்கு உள்ளே வந்து விட்டது என்றால் உலகமே ஒழுங்கின்மையாக தெரியும்.
திருமணமான ராஜகுமாரன் ஒரு விடுதியில் தன் கற்பை பறிகொடுத்து பொதுமகளிர் ஆக்கப்பட்ட நயன்தாராவும் சந்திக்கின்ற இடம் அபாரம்.
அவள் பெயர் வள்ளி எதுவானாலும் இருக்கலாம் ஆனாலும் நம் கற்பனையை மெருகட்டுவதற்கு நயன்தாரா என்ற பெயர் சுவையாக தான் இருக்கிறது.
கதையின் முதல் பகுதியில் காசியில் நடக்கும் மூடநம்பிக்கை சார்ந்த விஷயங்களை கட்டு உடைத்து எதார்த்தத்தின் மைய நீரோட்டத்தை அலசி பார்க்கும் தத்துவ விசாரணமாகவே கதை அமைகிறதுபயிற்சிக்கு செல்லாமல் அறையிலேயே தங்கி அவர்கள் காதல் புரியும் அழகு இடையிடையே ராஜகுமாரனுக்கு தன் மனைவி பேசுகின்ற செயல் அரசன் என்ற கதாபாத்திரம் வயதுக்கு மீது வழியும் காட்சி அங்கு இருக்கும் வாட்ச்மேன் உடைய அறிவுரை.
இன்னும் அந்த பயிற்சிக்கு வந்திருக்க கூடிய பல்வேறு மக்களைப் பற்றி விவரிக்கிறார் நண்பர்கள் இலங்கை அகதியாக வந்தவர் பல்வேறு இயக்கத்தில் இருந்து வெளிவந்தவர்கள் தொழில் சார்ந்தவர்கள் வாழ்க்கை இழந்தவர்கள் என்று பலரின் வர்ணனைகள் குறைவான கதாபாத்திரங்களில் நம் மனதில் நிறைவாக நிற்கின்றன
வாழ்வில் பல சிக்கல்களை சந்தித்து அதை தீர்ப்பதற்காக பயிற்சிக்கு வந்த இருவருக்கிடையில் ஏற்பட்ட காதலை எவ்வளவு சுவையுடன் அவர் பகிர்ந்து இருக்கிறார் அந்த ஆணனை
நம்பி இவள் சந்தேகத்துடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து வெளியே இருவரும் தனியாக செல்கிறார்கள் அவர்கள் செல்லுகிற இடம்தான் 14.40 கொண்டை ஊசி வளைவு.
அங்கே ஒரு சித்தர் போலிகளையும் மாயைகளையும் கட்டுடைத்து பேசுகிறார்.இவன் கூட நாம் இருப்பது சரியா என்று யோசிக்க முன்னே அந்தப் பெண் அவனை விட்டுவிட்டு வெளியே சென்று விடுகிறார். இயல்பை மீறி நடக்கும் எதுவும் துன்பம் தருவதாகவும் தொல்லையை மேலும் அதிகப்படுத்துவதாகவே இருக்கும்.ஏற்றுக்கொண்ட அமைப்பில் இருந்து விலகுவதும் ஏற்றுக்கொண்ட புரிதல் இருந்து மாறுவதும் எப்பொழுதும் நமக்கு சங்கடங்களை தரும் என்பதை மிக அழகாக சொல்லப்பட்ட நாவல் 102 பக்கங்கள்
(உயிர்மை பதிப்பக வெளியீடு அற்புதமான பதிப்பு )
நீங்கள் ஒரு முறை அந்த வளைவுக்குள் சென்று வாருங்கள் வவ்வால் பூ பூக்கும் வனாந்தரம் உங்களையும் வசீகரிக்கும்
யாழ் எஸ் ராகவன் உத்தமபாளையம் வட்டம்
தேனி மாவட்டம்
இந்த ஈர நிலங்களானது பல்வகையான பல்லுயிர்களுக்கு பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் இருந்து வருகிறது. நாம் பெரிதும் கவனித்திடாத நத்தைகள், வண்டுகள், சிறு பூச்சிகள், புழுக்கள் என ஆயிரக்கணக்கான பல்லுயிர்கள் இந்த ஈர நிலத்தில் பிறந்து வாழ்ந்து அந்த சூழலின் உணவுச் சங்கிலியில் ஓர் பங்கு வகித்து வருகிறது.
சற்று ஆழமில்லாமல் நமது குதிங்கால் வரை நீர் தேங்கி சில காலம்வரை நிற்கும் ஈரநிலங்களில் பல பறவைகள் நின்று அந்த நீரினுள் உள்ள மண்ணை கொத்தி கிளரிக் கொண்டிருப்பதை நம்மில் பலர் கண்டிருப்போம்.
வாருங்கள் வவ்வால் பூ பூக்கும் வனாந்தரம் உங்களையும் வசீகரிக்கும்
( யாழ் எஸ் ராகவன் உத்தமபாளையம் வட்டம்
தேனி மாவட்டம் )
0
கோட்டயம் 2023 - சுப்ர பாரதி மணியன்
சார்ஜா புத்தக கண்காட்சிகளில் டி. சி.புத்தகப் பதிப்பகம், கேரளா அமைக்கும் நூற்றுக்கணக்கான அரங்குகளை கண்டிருக்கிறேன் 2018. & , 2021 சார்ஜா புத்தக கண்காட்சியில் தமிழ் புத்தகங்கள் ஒரு அரங்கம் இருந்தது. அந்த அரங்கம் கூட டிசி புக்ஸ் என்ற குடையின் கீழ் தான் இருந்தது, அரங்கத்தினுடைய பெயர் அப்படித்தான் இருந்தது. சின்ன இடத்தில் தமிழ் புத்தகங்கள் என்ற ஒரு சின்ன அட்டை இருந்தது. பல தமிழ்ப் பதிப்பகங்கள் ஒன்று சேர்ந்து அந்த ஒரு அரங்கை நிர்வகித்து இருந்தார்கள்.
ஆனால் மலையாளத்தில் சுமார் 150 அரங்குகள் இருந்தன. அதில் பெரும்பாலும், நூற்றுக்கு மேற்பட்ட அரங்குகள் பி சி புக்ஸ் அமைத்து இருந்தார்கள். மற்ற பதிப்பாளர்கள் மீதி உள்ளவற்றை பரிந்து கொண்டார்கள்
சார்ஜா, துபாய், அபுதாபி போன்ற நாடுகளில் சுமார் 30 லட்சம் மலையாளிகள் வசிக்கிறார்கள்.. இலக்கிய உணர்வு கொண்டவர்கள் அவர்கள். அங்குள்ள பள்ளிகளில் மலையாளம் பயிற்சி தரப்படுகிறது . என்ற தகவல்கள் அந்த அரங்குகளில் விற்கப்படும் நூல்களின் உடைய தரம், தீவிரம் பற்றிச் சொல்லின ஆனால் சுமார் 10 லட்சம் தமிழர்கள் வசிக்கக்கூடிய அந்த பகுதியில் பள்ளிகளில் தமிழ் கல்வி இல்லை, நல்ல ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ் அமைப்புகள் இல்லை இந்த சூழலில் ஒரு அரங்கோடு தமிழ் நின்று விட்டது, அப்போது சி டி புக் சார்ந்த ஊழியர்கள் ஒரே விதமான உடை அணிந்து கொண்டு இருப்பதையும் ஒரே இடத்தில் தங்குவதையும் அவர்களுக்கான உணவு விநியோகம் போன்றவற்றையும் கேள்விப்பட்டிருந்தேன் அப்போதுதான் டிசி புக்ஸ் என்ற ஒரு வலிமையான புத்தகம் நிறுவனம் கேரளாவில் நடைபெறுவது பற்றி சரியாக அறிந்து கொள்ள முடிந்தது
அந்த ஆண்டில் பெருமாள் முருகன் அவர்களை புத்தக கண்காட்சியில் பேச அழைப்பு அழைத்து இருந்தார்கள் காரணம் டி . சி புக்சில் அவருடைய புத்தகங்கள் பல மலையாள மொழிபெயர்ப்புகளில் வெளியாகி இருப்பது காரணம் என்றார்கள் அந்த டி டி சி புக்ஸ் பல தமிழ் பதிப்பாளர்களுடைய நூல்களை அங்கே கொண்டு செல்வது போல முயற்சி கொண்டிருக்கிறார்கள்.
இந்த முறை கோட்டயத்திற்கு சென்றிருந்தபோது டிசி புக்ஸ் தலைமையகத்துக்குச் சென்றேன். புத்தக விற்பனை அரங்குகளும் அலுவலகம் இவை எல்லாம் ஆச்சரியம் தந்தன. தமிழ்நாட்டின் எந்த பதிப்பாளருக்கும் இப்படி பெரிய கட்டிடம் இருந்ததில்லை என்று நினைக்க வைத்தது.தமிழ்நாட்டில் என் சி பி எச் போன்ற பெரிய நிறுவனங்கள் மட்டுமே இவ்வளவு பெரிய கட்டிடங்களையும் அமைப்புகளையும் கொண்டு இருக்கிறார்கள் என்று தோன்றியது. அப்போதான் கே ஆர் மீரா அவர்களின் ஆரச்சார் நாவல் டி.சி புக்சால் வெளியிடப்பட்டு 46 பதிப்புகள் வந்திருப்பதைக் கண்டேன். அந்த நாவல் தமிழில் செந்தில் குமார் அவர்களது மொழிபெயர்ப்பில் சாகித்ய அகாடமி வெளியிட்டிருக்கிறது. அதைப் படித்திருந்தேன் .. தமிழில் அதோட விலை அதிகமாகத்தான் இருந்தது. மலையாள பதிப்பில் விலை குறைவாகவே இருந்ததை கண்டு கொண்டேன். அதேபோல சிற்பி பாலசுப்ரமணியம் அவர்கள் மொழிபெயர்ப்பில் ஒரு நாவல் வெளிவந்திருக்கிறது ( மரம். ). பொள்ளாச்சி எதிர்ப்பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. இன்னும் ஒரு நாவலை செந்தில் குமார் மொழிபெயர்ப்பில் எதிர் பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது சமீப காலத்தில் தமிழ் சூழலில் அதிர்வுகளை உண்டாக்கிய நாவல்கள் என்ற வகையில் கே ஆர் மீரா அவர்களின் படைப்புகளைச் சொல்லலாம். கே ஆர் மீரா அவர்கள் கோட்யத்தைச் சார்ந்தவர் என்று அறிந்தேன். அவரைச் சந்திக்க முயற்சிகள் எடுத்துக் கொண்டேன். ஆனால் முயற்சிகள் கைகூடவில்லை
பத்து ஆண்டுகளுக்கு முன்னால் கோட்டையம் சென்ற போது அப்படித்தான் அருந்ததிராய் அவர்களை சந்திக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். அவரின் சொந்த ஊர் கோட்டயம். அவர் அம்மா இங்கே இருக்கிறார்கள் பள்ளிக்கூடம் என்ற கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். ஒரு கிறிஸ்தவர் அன்பரின் திருமணத்திற்கு சென்ற போது நேரம் ஒதுக்கி பள்ளிக்கூடத்தை தேடிச் சென்றேன் அங்கு நோய்வாய் பட்டு இருந்த அருந்ததி ராயின் அம்மா அவருடைய சந்தித்தேன் . அந்த சந்திப்பு மற்றும் நான் அந்த வீட்டை தேடி அலைந்தது பற்றி ” அருந்ததிராயின் வீட்டுக்கு சென்றிருந்தேன் “ என்றொரு சிறுகதையை உயிர் எழுத்து இதழில் எழுதி இருந்தேன். அது என்னுடைய சிறுகதை தொகுப்புகளில் இடம் பெறாமல் போய்விட்டது என்று தான் நினைக்கிறேன். இந்த முறையை அப்படித்தான் கே ஆர் மீரா அவர்களை சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது
கோட்டையம் செல்கிறபோதெல்லாம் குமரகம் செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வேன். அங்குள்ள பல படத்துறைகள், ஏரிகள் போன்றவை எப்போதும் ஈர்ப்பு ஏற்படுத்தும் இந்த முறையும் இருந்தது. அப்படித் தான் குமரகம் பகுதியில் இருந்து மகாமக என்ற கடல் பகுதிக்கு பயணம் இருந்தது. சுமார் 40 நிமிடம் கடலில் பயணம் வெறும் 16 ரூபாய் தான் கட்டணம் வசூலித்தார்கள் அரசு படகில். ஆனால் அதுவே தனியார் படகில் 25 மடங்கு அதிகமாக இருந்ததை கண்டு கொண்டேன். அரசு பஃடகில் இருந்த சில நூலகம் ஒன்று ஆச்சரியப்படுத்தியது. அதிலிருந்து சில புத்தகங்களை புரட்டிக்கொண்டு இயற்கை காட்சிகள் ரசித்துக் கொண்டும் சென்றது . நீர்க்காக்கைகள் உட்பட பல பறவைகளை ரசிக்க முடிந்தது. ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. பறவைகளின் கத்தல்கள் அவை நீரோடு கொள்ளும் அனுபவம், தூரத்தில் தென்படும் மரங்கள், நீர் நிலைகள், எல்லாம் கடந்து அந்த பயணம் இருந்தது. ரசித்து அனுபவித்த ஒரு பயணம் அது.
அருந்ததிராயின் நாவல் “ சின்ன விஷயங்களின் கடவுள் “ காட் ஆப் ஸ்மால் திங்ன்ஸ் நாவல் அப்படி ஒரு நீர் நிலங்களை கொண்ட அப்பகுதியின் ஒரு கிராமத்தை தான் மையமாகக் கொண்டிருந்தது . ஏரிகளும் குளங்களும் நிரம்பிய பகுதியை நிலப் பகுதியை மையமாக வைத்து அவர் எழுதியிருந்தார் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வதும் வெவ்வேறு வகையான நீர்நிலைகளும் அந்தப் பகுதியை இயற்கை வளம் உள்ள காட்சிகளாக நிறைவேற்றி இருப்பதை அருந்த்திராய் அவர்களும் குறிப்பிட்டிருக்கிறார். வேம்பனாடு ஏரியினுடைய அழகை ரசிப்பதற்கு பல நாட்கள் வேண்டும். தெற்காசியாவில் நல்ல நீர் ஏரி என்ற அளவில் இரண்டாவது இடத்தை பெற்றது வேம்பநாட்டின் பழமையான படகுகளையும் பலவகையான படகோட்டிகளையும் அந்த வேம்பநாடு ஏரியில் காணலாம். 100 கிலோ மீட்டருக்கு அதிகமான பரப்பளவில் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது. அந்த வேம்பநாடு ஏரி அதுவும் ஓண்ம் சமயங்களில் அங்கு நடைபெறுகிற பாம்பு படகுப் போட்டிகள் மிகவும் முக்கியமானவை. அங்கிருந்து கொஞ்ச தூரம் நகர்ந்து போனால் பறவைகள் சரணாலயம் தென்படும். பல வெளிநாட்டு பறவைகள் சிரமமாக அங்கு அது தென்படும். ஜூன் முதல் ஆகஸ்ட் வரை அந்தப் பறவைகள் முட்டையிடும் காலமாகவும் இருந்து சைபீரியன்ஸ் ஸ்டோர்க், டாக்டர் ஒயிட் பீஸ் எக் ரேட் போன்ற பறவைகள் உடைய நடமாட்டத்தை சொல்லும் காட்டுப்பகுதியாகும்,. நவம்பரும் மே மாதமும் வெளிநாட்டு பறவைகள் டக் பார்ட்டி பில் டாக் மார்ச் ஆரியர் சிரிப்பில் போன்றவை வந்து செல்லும் என்றார்கள், .அந்த பகுதியில் படகு பயணங்களில் மீன் பிடிக்கும் பல வகையான மீனவர்களுடைய போக்குகளும் அவருடைய தொழில் முறைகளை பற்றியும் அறிந்து கொள்ளலாம். இன்னும் ஒரு கரையில் இருக்கிற ஆட்டமங்கலம் தேவாலயத்தில் ராஜா ரவிவர்மாவின் பெரும்பலா திருமேனி சார்ந்த ஓவியங்கள் காணப்படுகின்றன. அவை முக்கியமானவைகளாக இருக்கின்றன
இல வீளா பூஞ்சிரி என்ற ஒரு மலைப்பகுதி இப்போது பரவலாக பேசப்படுவதின் காரணம் அந்த பெயரில் வந்திருக்கிறது ஒரு திரைப்பட.ம். இலைகள் வீழாத இடம் என்று அதற்கு பெயர் அங்கு பலத்த மரங்கள் இல்லை.. ஆனால் அங்குள்ள இயற்கை சூழல் மக்களை தன் பால் ஈர்த்து உள்வாங்கிக் கொண்டு சாசகம் செய்யும் இடமாக இருக்கிறது. அந்த தலைப்பிலான திரைப்படம் வந்த பின்னால் பிற மாநில மக்களும் வெளிநாட்டுப் பயணிகளும் அந்தப் பகுதிக்கு செல்வது அதிகமாக இருக்கிறது என்று சொன்னார்கள்.. அதேபோல இளிக்கால்கள் என்ற ஒரு மலைப்பகுதி நாலாயிரம் அடிகளுக்கு மேல் தன்னுடைய உயரத்தை கொண்டிருக்கிறது. ஒரு மலை. விரிந்த காளான் போன்ற உருவத்தைக் கொண்டிருக்கிறது. கையூரில் அமைந்திருக்கிற இயற்கை காட்சிகள் நல்ல அனுபவத்தை தருபவை அங்குள்ள ஒரு கோயில் மகாபாரதத்தில் பாண்டவர் சகோதரர்கள் அங்கு இருந்ததாக சொல்லி அமைக்கப்பட்டு இருக்கிறது.. அங்கிருந்து சபரிமலைக்கு சுலபமாக சொல்ல முடியும். அந்த மகாபாரத கோவிலில் நெய் விளக்குகள் முக்கியம், பெண்கள் சபரிமலையில் கடவுளை தரிசிக்கு செல்வது தடை செய்யப்பட்ட விஷயமாகு.ம். தடை என்றால் பக்தர்களின் தடை அரசு நீதிமன்றமோ தடை விதிப்பதில்லை அதன் மீறி சென்ற பெண்கள் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட பல அனுபவங்கள் நிறைந்திருக்கின்றன.. டிப்பாரா என்ற இடம் ஒரு மலைப்பகுதி கொண்டது கண்ணாடியில் பிரதிபலிப்பது போல காலை சூரியன் உதயமாவது எங்கிருந்து பார்ப்பது நிச்சயமாக நிச்சயமாக இருக்கிறது அதேபோல அந்தப் பகுதியில் இருக்கிற ஐயப்பனார் மலை என்பது மிக முக்கியமானதாகும். அதுவும் பாண்டவர் சகோதரர்களோடு சம்பந்தப்பட்டது. 2000 அடி கடல் மட்டத்திற்கு மேலே உள்ள இந்த பகுதியில் பாண்டவர்களை நினைவு கொள்ளும் பல விஷயங்கள் உள்ளன. அஞ்சு பாரா என்று அழைக்கப்படுகிறது 5 பாறைகள் அந்தப் பகுதியில் உள்ள மணிமாலா ஆறும் மத்திய திருவாரூ பகுதியின் மிக முக்கியமான நீரோட்டமாக கருதப்படுகிறது. பம்பா ஆறுடன் இது சேர்கிறது கோட்டயத்தில் இருந்து மிக அருகில் உள்ள மீனாட்சி ஆறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்கிறார்கள். இந்தியாவின் பழமையான நதிகளில் ஒன்று சொல்கிறார்கள் அங்குள்ள ஒரு மசூதியும் கூட முக்கியமானதாக கருதப்படுகிறது.
வைக்கயம் நகரில் உள்ள சிவன் கோவில் முக்கியமானது கோட்டையத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊராகும். பரசுராமின் கதையோடு சம்பந்தப்பட்ட ஒரு கோயில் இது .காசி போன்ற பழமையும் பெருமையும் கொண்டதாக சொல்கிறார்க.ள். இங்கு தான் தாழ்த்தப்பட்டவர்களை ஆலயத்தில் நுழைய வேண்டும் என்று பல போராட்டங்கள் நடத்திய போது தமிழகத்தின் பெரியார் ஈவேரா ராமசாமி அவர்கள் கலந்து கொண்டார் என்பது முக்கிய செய்தியாகும். அந்த கோயிலில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் பெரியார் நினைவு மண்டபம் இருக்கிறது.. அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை வைத்து இருக்கிறார்கள் எம்ஜிஆர் அந்த நினைவு மட்டத்திற்கு அடிக்கல் நாட்ட ஜெயலலிதாவை திறந்து வைத்திருக்கிறார்.. பெரியாருடைய வாழ்க்கை சார்ந்த பல்வேறு புகைப்படங்களும் விளக்கங்களும் அங்கே இருக்கின்றன .அந்த நினைவு மண்டபத்தை தமிழ்நாடு அரசாங்கம் தான் பராமரித்து வருவதாக அங்கிருந்த பாதுகாவலர் ராமச்சந்திரன் என்பவர் சொன்னார்.. அந்த நினைவு மணடபத்துக்கு எதிராக தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களும் இன்னொரு முதலமைச்சர் ஜானகி அவர்களும் ஒன்றாக சேர்ந்து இருக்கும் சிலை இருக்கிறது. அந்த சிலைக்கு பின்னால் இருக்கும் வீட்டில் தான் ஜானகி அவர்கள் இருந்திருக்கிறார். இப்போது அங்கு அவருடைய உறவினர்கள் சிலர் குடியிருப்பதாக சொன்னார்கள்
கோட்டையும் பகுதியில் திருநாவுக்கர மகாதேவன் கோயில் அருகில் தான் தங்கி இருந்தேன். மார்ச் மாதத்தில் அந்த நாட்களில் அங்கு போய் விசேஷம் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தது நாட்டுப்புறக் கலைகளும் யானைகளின் அணிவகுப்பும் மக்களின் கூட்டமும் ஆச்சரியப்படுத்தின. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது அந்த கோயில் தெற்கு மகாராஜா அதை கட்டி இருக்கிறார் .கேரளத்துடைய கலை அம்சங்களை கொண்ட சுவர்களும் ஒவ்வொரு மூலையும் முக்கியமானவை.. கூட்டம், கூத்தம்பலம் என்ற பல நிகழ்ச்சிகள் நடக்கும் இடம் எங்கே முக்கியமாக இருக்கிறது அந்த கோயில் விசேஷங்களை அந்த சமயத்தில் பக்கம் இருந்து வேடிக்கை பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது.. வேங்கமான் மலை பகுதிக்கு ஒருநாள் சென்றிருந்தோம் அழகான பகுதி நீர் நிலைகளும் தேயிலைத் தோட்டங்களும் விரிந்திருந்த பகுதி எங்கு பார்த்தாலும் வாழை மரங்கள் வீடுகளிலும் தோட்டங்களிலும் தோப்புகளிலும் நிறைந்திருக்கும். ஆனால் வாங்கைமான் பகுதில் உள்ள உணவு விடுதிகளில் சாப்பிடும் போது வாழை இலைத் தாளைப் பயன்படுத்தினார்கள் செயற்கையாக உருவாக்கப்பட்ட தாள்.. வாழை இலைகள் எங்கும் விளைந்திருக்கிற இடத்தில் கூட சாப்பாட்டிற்காக அவற்றை பயன்படுத்தாமல் வாழை செயற்கைத் தாள் பயன்படுத்தினார்கள். இதேபோல வாழையிலே பாணியில் வடிவக்கப்பட்ட பீங்கான் தட்டுகளை பல உணவு விடுதிகளில் பார்க்க நேர்ந்தது. ” வீட்டில் உணவு-- வீட்டிலே ஊணு “ என்ற பெயரில் பல இடங்களில் விளம்பரங்கள் காணப்பட்டன. அவை வசீகரமான விளம்பரங்கங்களாக அமைந்திருந்தது. அவற்றிலும் கூட வாழை இலை கிடைக்காமல் போகுமா என்ற கற்பனை எனக்கு வந்தது. நல்ல சுவையான மீன்களை அதிக விலை கொடுத்து தான் வாங்கி சாப்பிட வேண்டியிருந்தது. பல வகையான உயிர் மீன்கள் கண்ணில் பட்டு அதிசயம் தந்தன. கேரளா செல்கிறபோதெல்லாம் ஒவ்வொரு முறையும் கோட்டயம் செல்லும் வாய்ப்பு அமைவது சிறப்பானதாகத் தோன்றும். டி சி புக்ஸ்முகப்பில் காணப்படும் அச்சு இயந்திரங்கள் கோட்டயம் அச்சாக்க்கம், பதிப்புத்துறை இவற்றில் முன்னோடியாக இருந்த்தைச் சொல்லின. அப்படித்தான் கோட்டையம் பகுதிக்கு இம்முறை சென்றிருந்தது புது அனுபவமாக மாறி இருந்தது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)