சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 11 நவம்பர், 2011

மலையாள நாளிதழில்

செவ்வாய், 8 நவம்பர், 2011

வேண்டுகோள் / எச்சரிக்கை

வேண்டுகோள்/எச்சரிக்கை

எனது மின்ன்ஞ்சல் முகவரியிலும், பெயரிலும் பல செய்திகள் பலருக்கு விசமத்தனமாக

அனுப்பப்பட்டுள்ளன. அதை நண்பர்கள் நிராகரிக்க வேண்டுகிறேன். மின்னஞ்சல் பெட்டி

ஊடுருவப்பட்டு களவாடப்பட்டுள்ளது.. இதை எச்சரிக்கையுடன் கையாளுமாறு கேட்டுக்

கொள்கிறேன். இதனால் ஏற்பட்டுள்ள மனச்சங்கடங்கள் குறித்து என வருத்த்த்தைத்

தெரிவித்துக் கொள்கிறேன்..




=சுப்ரபாரதிமணியன்

மீண்டும் முத்தத்திலிருந்து

சுப்ரபாரதிமணியன்

நீ யாராக மாற விருப்பம்
ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டனர்.
நான் புலியாக
வீரத்தின் சின்னமாக
ஆணின் ஆகுருதியாக…

நான் தென்றலாக
பூவாக எங்கும் உலாவி…

ஆடை களைந்து
ஆடிய ஆட்டத்தில்
உடம்பு சோர்ந்து விடவில்லை
என் பிரிய மீனே என்று கொஞ்சினான்
என் பிரிய காற்றே என்றாள் அவள்.

உடம்புகள் பிரிந்து
தனித்தனியாக்க் கிடந்த போது
புலியாக இருந்த்தாக அவன் சொன்னான்.
இன்னும் சிங்கமாக, காட்டுக்குருவியாகவும் கூட.

நானும் தென்றலாக உலவி வந்தேன்
அப்புறம் புறாவாகவும், காடையாகவும் கூட.

வெவ்வேறு உருவங்களில்
திரிந்து விளையாடி
சுயம் பெற்றதாகச் சொல்லினர்.
தந்த முத்த்த்தில்
மீண்டும் விளையாட்டுக்கு திரும்பினர்
இன்னும் புலியாகவும், பூவாகவும்.
வேறு வேட்த்தில் திரும்பத்திருமப.