சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 2 ஜூலை, 2024

அன்பாதவன் சமீபத்திய சிறுகதைகள் : சுப்ரபாரதிமணியன் அன்பாதவன் சமீபத்திய சிறுகதைகளில் பின் நவீனத்துவ கூறுவன அமைந்திருப்பதாக எண்ணுகிறேன் .காரணம் கதை சொல்லல் முறையில் இருக்கும் மீறல்தான். அந்தக் கதைகளில் இருக்கும் செய்தி தன்மையையும் கொஞ்சம் புனைவையும் எடுத்துக்கொண்டு வழக்கமான கதை சொல்லும் முறையை மீறி எப்படி இந்த கதைகளை சொல்லி இருக்கிறார் என்பது முக்கியம். பிறகு அதில் வருகிற செய்திகளை கட்டுடைக்கிற சதன்மையும் இந்த கதைகளில் இருக்கிறது இந்த இரண்டும் சேர்ந்து இந்த கதைகளை ஒரு வகையில் பின்நவீனத்துவக்கதைகள் என்ற வகையில் சேர்க்க ஏதுவாகிறது. தீண்டாமை, தாழ்த்தப்பட்டவருக்கு மீதான கொடுமை விஷயங்களை வேதனையோடு சொல்லி இருக்கிறார். வேங்கை வயல் முதற்கொண்டு பல விசயங்கள் இதில் உள்ளன. அவை செய்திகளாக சொல்கிறபோது வெறும் பத்திரிகை தன்மையுடன் இருக்கும் என்பதால் அதில் ஒரு புனைவை கொண்டு வந்து அந்த கொடுமைகளை சொல்கிறார். அப்போது அவருக்கு கதை சொல்லியாக வேதாளமோ, பேயோ, கோமாளியோ, கதை சொல்லியோ அல்லது துணைக்கு யாராவது வந்து விடுகிறார்கள் .அது விஷயங்களை இவற்றின் தெரிந்து கொள்ள இன்னும் சிறப்பாக இருக்கிறது அந்த குறிப்பிட்ட விஷயத்தை எடுத்துக்கொண்டு அதன் மூலம் என்ற விசயக்கொடுமையை ஆராய்வதில் தொடங்கி அந்த விஷயத்தைப் பற்றிய கட்டுடைப்பு இருக்கிறது இந்த கட்டுடைப்பு சிறப்பாகவும் மறுவாசிப்பாக, சமூக விமர்சனமாக அமைந்துவிடுகிறது. இதி முன்பே பல கதைகளில் அவர் பாணியாக எழுதியுள்ளார். அன்பாதவன் தன்னுடைய வங்கி பணி சார்ந்து பல ஊர்களில் வேலை செய்தவர் எனவே அந்தந்த ஊருக்கு செல்கிற போது அவர் அந்த ஊர்கள் பற்றி இருக்கிற முக்கிய அம்சங்களையும் அந்த ஊர் பற்றிய தொன்மங்களையும் திரும்பக் கதையாக எழுதுகிறார். இந்த கதையின் தன்மைகளில் அவர் மறுவாசி போன்று எதையும் செய்வதில்லை அப்படியே அந்த தொன்மங்களை கொண்டு வந்து நம்முள் நிறுத்தி விடுகிறார். இந்த வகையான கதைகளை அவர்கள் தொகுப்புகளில் தொடர்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது.அந்த்த் தொன்மங்கள் பற்றிய மறுவாசிப்போ கட்டுடைத்தலோ இல்லாமல் அவற்றை தன் விவரிப்பாகக் கொண்டு வந்து விடுகிறார். இந்த கதையில் தொகுப்பை வேரல் பதிப்பகம் அழகாக வெளியிட்டு இருக்கிறது. அன்பாதவனின் தொடர்ந்த இலக்கியப் பயணத்தில் இந்த தொகுப்பு ஒரு முக்கியமானதாக அமைந்திருக்கிறது Veral, Rs 210- சுப்ரபாரதிமணியன்