சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 2 ஜூலை, 2024

நற்பவி வாசகர் வட்டம்: நூல் வெளியீடு 0 திருப்பூர் மதுராந்தகன் எழுதிய “ வாழ்வை அறிந்த மாயச்சூழல் “ இலக்கியக் கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியீடு ஞாயிறு நடைபெற்றது. நற்பவி நிர்வாகி சுரேஷ் வெளியிட்டார்.. இதில் கொங்குபகுதியைச் சார்ந்த எழுத்தாளர்களின் நூல்கள் பற்றியக் கட்டுரைகள் உள்ளன .இவை முன்பு வெவ்வேறு இதழ்களில் வெளிவந்தவை. ( ரூ80, திருப்பூர் கனவு பதிப்பகம் வெளியீடு ) 16/6/24 ஞாயிறு காலை 12 மணி நற்பவி இசைமையம், நகைக்கடை மாடி, பேருந்து நிறுத்தம்பாண்டியன் நகர், திருப்பூரில் நடைபெற்றது கேரளா பாடத்திட்டத்தில் சுப்ரபாரதிமணியன் எழுதிய “ மொறு.. மொறு “ என்ற சிறுகதை இடம்பெற்று கேரள மாணவர்கள் துரித உணவு பற்றிய விழிப்புணர்வு பெற அக்கதை உதவியதை பற்றி அவருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. 0 ( மதுராந்தகன் சிலகுறிப்புகள்: திரு மதுராந்தகன் ( இயற்பெயர் ம.ஜெயபால் . வயது 83 ) நெசவாளி.ஒரு படைப்பாளி கூட .. இலக்கிய ஆர்வமும் நல்ல நவீன இலக்கிய வாசிப்பும் கொண்டவர் . இலக்கிய அமைப்புகள், எழுத்து மூலமாக தமிழகம் முழுவது அறிமுகமானவர், 83 வயதில் தொடர்ந்து இயங்குபவர். வயது மூப்பு காரணமாக வேலை எதுவும் இல்லாமல் கலை இலக்கிய நடவடிக்கைகளில் இருக்கிறார். ) 0 திருப்பூர் மதுராந்தகன் எழுதிய “ வாழ்வை அறிந்த மாயச்சூழல் “ ( சுப்ரபாரதிமணியனின் படைப்புலகம் ) கட்டுரைகள் ( ரூ80, கனவு வெளியீடு ) 0 நற்பவி சுரேஷ் வரவேற்கிறார்