சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 8 ஜூலை, 2024

சுப்ரபாதிமணியனின் திரைக்கதை நூல்கள் வரிசை - மதுராந்தகன் சுப்ரபாதிமணியனின் . திரைப்பட கட்டுரை நூல்களில் திரைப்பட ரசிகனுக்கு, இலக்கிய வாசகனுக்கு நல்ல திரைப்படம் பற்றிய வழிகாட்டியாக இருக்கும். ( காவ்யா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ” திரைப்படம் என்னும் சுவாசம் “ என்ற 400 பக்க நூல் இதற்குச் சாட்சியம் ) . திரைவெளி போன்ற நூல்களும் இதற்கு சாட்சி ( உயிர்மை, நிவேதிதா பதிப்பக வெளியீடு ) தற்போது அவரின் திரைக்கதை நூல்கள் ஏழு வெளிவந்துள்ளன. ஆரம்பத்தில் நாவல்களையும் சிறுகதைகளையும் எடுத்து திரைக்கதைகளாக்கும் முயற்சியில் மூன்று நூல்களை வெளியிட்டு இருக்கிறார்..சுமார் 30 திரைக்கதைகள் இதில் உள்ளன. இந்த முயற்சியில் அவரின் படைப்புகளைத்தாண்டி தொடர்ந்து ஏழு நூல்களை வெளியிட்டுள்ளார். . திரைப்பட தயாரிப்பாளர்கள் கதைக்காக அலைய வேண்டியதில்லை. ஏழு பாகங்களாக வந்துள்ள அவர்களின் நூல்களை படித்தால் திரைப்படத்திற்காக கதை இல்லையே என்று கவலைப்பட தேவையில்லை. இவரின் கதைகள் ஏற்கனவே திரைப்பட பல தயாரிப்பாளர்களால் திருட்டுத்தனமாக கையாளப்பட்டுள்ளது. ஒரு படைப்பாளியின் மூலப்படைப்பை எடுத்து திரைக்கதையாக்கம் செய்யும் போது பல சிதைவுகள் ஏற்படும். நாவலின் மையம் சிதைந்து போகும். அல்லது பல முக்கியமான, நுணுக்கமான கதாபாத்திரங்களும் விடுபட்டுப் போகும். இந்த இந்த நிலையில் எழுத்தாளனே அவனின் படைப்புக்கு திரைக்கதை எழுதும் போது இந்த சிதைவு இருக்காது. ஓரளவு படைப்பாளிக்கும் திருப்தி ஏற்படும். திரைக்கதையில் வேறு ஒரு கோணமும் கிடைக்கும். இந்த வகையில் சுப்ரபாரதி மணியன் அவரின் எல்லா நாவல்களையும் திரைக்கதைகளாக்கி விட்டார் . இது தமிழ் இலக்கிய உலகில் ஒரு சாதனை என்று சொல்லலாம். அதைத்தவிர பல புதிய களன்களில் திரைக்கதைகள் என்று மொத்தமாய் 62 திரைக்கதைகள் இந்த ஏழு நூல்களில் இடம் பெற்றுள்ளன. படைப்பாளிகள் திரைக்கதை முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் தங்கள் படைப்புகளை எடுத்துக் கொண்டு திரைக்கதையாக்கும் முயற்சி குறைவுதான். காரணம் தயாரிப்பாளரும் இயக்குனரும் கேட்கும் விசயத்தைதான் அவர்கள் திரைக்கதையாக்குகிறார்கள். வியாபாரரீதியாக அதுதான் தேவை என்று நினைக்கிறார்கள். அவர்களின் படைப்புகளை திரைக்கதைகளாக்கும் போது கூட வணிக ரீதியாக பல விசயங்களைச் சேர்த்துக் கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். அப்படித்தான் படைப்பாளிகளின் திரைக்கதையாக்க முயற்சிகள் உள்ளன. ஆனால் சுப்ரபாரதிமணியன் அவரின் படைப்புகளை எடுத்துக் கொண்டு படைப்பின் மையம் அதிகம் சிதறாமலும், வணிக அம்சங்களை அளவோடு எடுத்துக் கொடும் செய்திருக்கிறார். அவரின் நாவல்களைப் படிக்கிற வாசகன் திரைப்பட வடிவத்திற்காக அவற்றை யூகித்துக் கொள்வது சாதாரணம் . அந்த யூகிப்பின் வடிவமாக இந்த திரைக்கதைகள் உள்ளன. இந்த ஏழு தொகுப்புகளில் அவரின் வெளிவ்ந்த படைப்புகள் தவிர வெளிவராத சில படைப்புகளையும், புது மையங்களையும் திரைக்கதை வடிவத்தில் தந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திரைப்பட தயாரிபாளர்கள், திரைக்கதாசிரியர்கள், இயக்குனர்கள், திரைக்கதைகளில் ஆர்வம் கொண்ட வாசகர்களுக்கும் ஒருமித்த வகையில் பயனளிக்கும் இந்த முயற்சிகளை பிற படைப்பாளிகளும் தொடர வேண்டும். (ரூ 280 சுப்ரபாதிமணியனின் திரைக்கதை நூல் வரிசை 7 மொத்தமாய் 7 திரைக்கதை நூல்களும் பெற ரூ:2000 ( 89393 87296 நிவேதிதாபதிப்பகம், சென்னை வெளியீடு) Thanks : Puthagam pesuthu