சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 2 ஜூலை, 2024

( 20ம் ஆண்டு திருப்பூர் சக்தி விருது விழா) பெண் எழுத்தாளர்களுக்கான இவ்வாண்டின் திருப்பூர் சக்தி விருது 23/6/24 ஞாயிறு மாலை மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், மங்கலம் சாலை, திருப்பூரில் நடைபெற்றது • தலைமை: கே பி கே பாலசுப்ரமணியம் ( முத்தமிழ்ச்சங்கம்) • அறிமுக உரைகள் : சுப்ரபாரதிமணியன், சாமக்கோடாங்கி ரவி, தூரிகை சின்னராஜ் • சிறப்பு விருந்தினர்: சமூக சேவகி ஆர். ராஜம்மாள் அவர்கள் • முன்னிலை: சத்ருக்கன், ராஜா மற்றும் மக்கள் மாமன்ற நிர்வாகிகள் ” இந்திய சமூகத்தில் மன நோய் அதிகரித்து வருகிறது. மன அழுத்தங்களுடன் பலர் வாழ்கிறார்கள். அவர்களின் பாரங்களை இறக்கி வைக்கும் இடமாக மன நல ஆலோசகர்கள் அதிகரித்து வருகிறார்கள். குடும்பம் என்பது பாரத்தை இறக்கி வைக்கக் கூடியது, அவ்வகை குடும்பச்சூழல்களை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். வீடு என்பது பாதுகாப்பானது. மன அழுத்தங்களிலிருந்து விடுபட இலக்கியம் சிறந்த கருவி.. வாசிப்பும் மஅழுத்தங்களிலிருந்து நம்மைப் பாதுக்கும் கலங்கரை விளக்கம் “ என்று சமூக சேவகி ராஜம்மாள் விழாவில் குறிப்பிட்டார். • நூல் வெளியீடு: சுப்ரபாரதிமணியனின் “ ஹைதராபாத் நாவல்கள் ( காவ்யா , ரூ480 ) வெளியிட்டவர் கல்வியாளர் கவிதா.. பெற்றுக்கொண்டவர் அய்யாசாமி தமிழகத்தைச் சார்ந்த விருதாளர்கள் கீழ்க்கண்டவர்கள் : திருவாளர்கள் லோகமாதேவி, நாராயணி சுப்ரமணியன், ஆர்.வத்சலா, இராஜலட்சுமி, வே.சண்முகதேவி, கனிமொழி செல்லத்துரை, ஜான்சி பால்ராஜ்,சங்கீதா, தெ.சுமதிராணி, பூங்கொடி பாலமுருகன், கமலா முரளி அயலகத்தைச் ச்சார்ந்த விருதாளர்கள் : அமெரிக்கா : பிரியா பாஸ்கரன், அருள்மொழி , சிங்கப்பூர்: இரா.சபரிஸ்ரீ திருவனந்தபுரம்: பகவதி மோதிலால், கல்பனா, பி உஷாதேவி, கோமதி கோதண்டராமன், ராஜேஸ்வரி எஸ்.குமார்., ப.சாந்தி நன்றியுரை : நாதன் ரகுநாதன் ( வரவேற்புரை - 9994079600 –சி. ரவி ) நிகழ்ச்சி அமைப்பு : கனவு இலக்கிய அமைப்பு / திருப்பூர் முத்தமிழ்ச்சங்கம் / மக்கள் மாமன்றம்)