சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 2 ஜூலை, 2024

முனைவர் பட்டம் வாங்க வயது தடையல்ல. இளைய தலைமுறையினர் வாசிப்பை நேசித்தால் வாழ்க்கைக்கு அவை கலங்கரை விளக்கங்களாக இருக்கும் --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ” சுப்ரபாரதிமணியன் சுற்றுச்சூழல் படைப்புகளில் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் “ என்ற தலைப்பில் சமீபத்தில் முனைவர் பட்டம் ( டாக்டர் ) பெற்றவர் திருப்பூர் கோகில செல்வி. வயது . ஐம்பதைந்தை எட்டுபவர் . அவருக்குப் பாராட்டு திருப்பூர் வாசகர் சிந்தனைப் பேரவையின் 18 வது கூட்டத்தில் வழங்கப்பட்டது. இன்றைய உலகம் சூடாகிக் கொண்டிருக்கும் சிக்கல்களை முதன்மைப்படுத்தி சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் தீவிரம் பற்றி ஏற்புரையில் பேசினார் 0 வாசகர் சிந்தனைப் பேரவை ( நிகழ்வு 18 ) ; இலக்கிய சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது: 2/6/24 ஞாயிறு மாலை 4 மணிக்கு ஏவிபி லேஅவுட் குடியிருப்போர் நலசங்கக் கட்டடம், காந்தி நகர், திருப்பூர் 0 பாராட்டு பெற்றோர்: திருமதி கோகிலச்செலவி ( ” சுப்ரபாரதிமணியனின் சுற்றுச்சூழல் படைப்புகள் “ தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றமைக்காக ) குறும்பட இயக்குனர் : எஸ் எல். முருகேசன் குறும்படக்கலைஞர் : என். சரவணன் நூல்கள் வெளியீடு : மேட்டுப்பாளையம் பெ. மணிவண்ணனின் இரு நூல்கள் ( சிறு துளி, ஊர்க்குருவிகள் ) நூல்கள் அறிமுகம் : சுப்ரபாரதிமணியன் - அபுதாபி துரை ஆனந்த் குமார் எழுதிய 11 சிறுவர் நூல்கள் - தாஹிர்பாட்சாவின் ” பிரியாணிக்கடை “ சிறுகதைத் தொகுதி சிறப்பு விருந்தினர்கள் : கோவை ஆனந்தி, ..முனைவர் பேரா. ஆ.பரிமளா,...முனைவர் பேரா. பி அனுராதா தொடர் சொற்பொழிவு : ” விடுதலை வேள்வியில் தமிழகம் “ : எஸ் ஏ முத்து பாரதி (இம்மாதம் ” வீரவாஞ்சி ” குறித்து ) கவிதை வாசிப்பு : முதலிபாளையம் சாந்தி அவர்கள் தலைமையில் ந்டைபெற்றது. . சிறப்பு விருந்தினர்கள் வாசிப்பை இளைய தலைமுறையினர் வாசிப்பை நேசித்தால் வாழ்க்கைக்கு அவை கலங்கரை விளக்கங்களாக இருக்கும் என்று கருத்துக்களைத் தெரிவித்தனர்: செய்தி : .. ( தங்கபூபதி 99445 70352 / பாலசுப்ரமணியம் 90033 09352 ) இணைக்கப்பட்ட புகைப்பட்த்தில் : கோவை ஆனந்தி உரையாறுகிறார். மேடையில் முனிஅவர் கோகிலச் செல்வி, முதலிபாளையம் சாந்தி , பேராசிரியர் அனுராதா, பேராசிரியர் பி. அனுராதா