சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 8 ஜூலை, 2024

62 வயதில் தன் முதல் நூலை வெளியிட்டார் திருப்பூர் பனியன் தொழிலாளி கரு கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய முதல் கவிதை ஹைக்கூ தொகுதியை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருப்பூர் வாசகர் சிந்தனை பேரவை ஜீலை நிகழ்ச்சியில் வெளியிட்டார்.. திருப்பூர் பனியன் தொழிலாளி கரு கிருஷ்ணமூர்த்தி.. இவருக்கு 62 வயதாகிறது. திருப்பூர் காந்திநகர் ஏவிபி லேஅவுட் குடியிருப்போர் சங்க கட்டிடத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது சிறு வயது முதல் நாடகம், கவிதை என்ற ஆர்வம் கொண்டவர். அவர் எழுதிய சுமார் 800 ஹைக்கூ கவிதைகளில் இரு நூறு கவிதைகளைத் தேர்வு செய்து ஒரு நூலாக வெளியிட்டார். இந்த நூலை எழுத்தாளர்கள் வெண்ணிலா முருகேஷ் தம்பதியரின் அகநி பதிப்பகம் வந்தவாசி வெளியிட்டுள்ளது. இந்த நூலை வாசகர் சிந்தனை பேரவை நிர்வாகி தங்க பூபதி வெளியிட கவிஞர் முத்து பாரதி பெற்றுக் கொண்டா.ர் கரு கிருஷ்ணமூர்த்தி தன் வாழ்க்கை, பனியன் தொழில் அனுபவங்களையும் கவிதை வாழ்க்கையையும் பற்றி விரிவாகப் பேசினார் டெல்லி ஷாஜகான் சிறப்பு விருந்துனராக்க் கலந்து கொண்டு பேராசிரியர் ரமணி மொழிபெயர்ப்பு செய்த இரண்டு கவிதை தொகுப்புகள்( தெரகாதா, தெரிகாதா ) ஆகியவற்றை வெளியிட்டார்.புத்த பிக்குனிகளின் கவிதைகளின் மொழிபெயர்ப்பு இந்த இரு நூல்கள். இவற்றை திருப்பூர் கனவு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. முதல் பிரதிகளை திராவிட பாசறை இதழின் ஆசிரியர் திராவிட மணி பெற்றுக் கொண்டார். . டெல்லி ஷாஜகான் தன் 32 ஆண்டுகள் டெல்லி வாழ்க்கை சார்ந்து புத்தக பதிப்பு துறையில் இயங்கிய அனுபவங்களையும் டெல்லி தமிழர்கள் வாழ்க்கை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.. பொள்ளாச்சி சண்முகம் எழுதிய தாயம்மா சிறுகதைத் தொகுஹ்டி அறிமுகம் நடைபெற்றது. திராவிட பாசறை என்ற மாத இதழை திருப்பூரில் இருந்து வெளியிடும் திராவிட மணி அவர்களுக்கு பிரபு பொன்னாடை போற்றி பாராட்டினார். திராவிடமணி தன் திருப்பூர் பத்திரிக்கை அனுபவங்களை எடுத்துரைத்தார்.. திருப்பூரைச் சார்ந்த பத்திரிகையாளர் கே எஸ் அவர்களின் எழுத்தை தொகுத்து வெளியிட்ட நூல் ” வாழ்க்கை உங்கள் கையில் “ விழாவில் வெளியிடப்பட்டது. இதை யுவராஜ் தொகுத்து வழங்கியிருக்கிறார் அந்த நூலில் பத்திரிகையாளர் அமரர் கே எஸ் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடத்திய கே எஸ் என்ற விளம்பர பத்திரிக்கையில் அவர் எழுதிய பலகட்டுரைகளின் தொகுப்புகள் அடங்கியுள்ளன இந்த விழாவில் எழுத்தாளர் வெள்ளியங்கிரி ,சுப்ரபாதிமணியன், நடராஜன், எத்திராஜ், கோவிந்தராஜ், மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டார்கள் வாசகர் சிந்தனை பேரவையின் ஜூலை மாத கூட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது செய்தி : தங்க பூபதி