சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 2 ஜூலை, 2024

வாழ்த்துரை : : சுப்ரபாரதிமணியன் ”ரிச்சர்ட் பாக் எழுதிய ஜனாதன் லிவிங்ஸ்டன் சீகல்” என்ற புத்தகத்தில் கழுகு போல் உயர விரும்பிய ஒரு சிறு கடல் பறவையின் கதையை நாம் படித்திருக்கிறோம் ..அதுபோல தன் நண்பர்கள், தன்னை சுற்றி உள்ளவர்கள் உயர வேண்டும் என்று விரும்புகிற மனம் ரத்தினமூர்த்தி அவர்களுக்கு உண்டு. அந்த அனுபவத்தை, ஆசையை இந்த நூலில் பல கட்டுரைகளில் எழுதிருக்கிறார். . ” வானில் பறந்து கொண்டிருக்கும் பருந்திற்கு உயரம் ஒரு பொருட்டல்ல. தனது இலக்கிற்கு தேவையானதை தேடி வட்டம் இட்டு கொண்டிருக்கும் .கைப்பற்றுவோம் ” என்ற நம்பிக்கையுடன் என்ற ஒரு கட்டுரையை முடிக்கிறார். இந்த நம்பிக்கை தான் இந்த தொகுப்பு முழுக்க இருக்கிறது. பல நண்பர்கள் பற்றி எழுதி இருக்கிறார் தன்னை சுற்றியுள்ளவர்களை பற்றி எழுதி இருக்கிறார். நண்பர்கள சார்ந்த அனுபவங்கள் மூலம் வாழ்க்கையை நோக்கம் பற்றி ஒரு தெளிவை திரும்பத் திரும்பச் சொல்கிறார்., அமாவாசை, ராஜநாகன் போன்ற நண்பர்களை முன்னிறுத்தி வாழ்க்கையை பார்க்கும் திசையை காட்டுகிறார். இதுபோல் எண்ணற்ற நண்பர்களுடைய அனுபவங்களை பெயர் சொல்லியும் பெயர் சொல்லாமலும் அவர் இந்த நூல் முழுக்க சொல்லிக் கொண்டிருக்கிறார் தொழில் , நட்பு, குடும்பம் சார்ந்து பல நண்பர்களின் அனுபவங்களைச் சொல்கிறார்.. ” வாழ்க்கையின் சாராம்சம் என்பது மிகுந்த மகிழ்ச்சி தருவது. நீங்கள் தான் உங்களைச் சார்ந்தவர்.உண்மையான கதாநாயகன் நீங்கள்தான். யாரையும் விட்டுக் கொடுக்காது என் தனித்துவம் என்பது எல்லோரை மதிப்பது “ என்று ஒரு கட்டுரையில் அவர் தன்னுடைய நேர்மையான மனதைத் திறந்து காட்டுகிறார் உடல்நல குறைபாடு ஏற்பட்டு மீண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னால் வெளிவரும் முதல் நூலாக இது இருக்கும். அந்த வகையில் இந்த நூல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. தொடர்ந்து அவர் அவ்வப்போது எழுதியவை இன்னும் ஏழு எட்டு தொகுப்புகளுக்கான விஷயங்கள் உள்ளன. அவை நூலாக வெளிவரும் என்ற அவரின் தகவலும் மகிழ்ச்சிகரமாக இருக்கிறது நான் என்றுமே மிகப்பெரிய ஆளுமையாகத்தான் வலம் வந்து கொண்டிருக்கிறேன். இந்த சமுதாயம் இலக்கு நோக்கிப்பயணப்பட்டிருக்கிறது என்று சொன்னால் நீங்கள் உண்மையாகவே உங்களைப் புரிந்து கொண்டவர் உலகைப் புரிந்து கொண்டார். சமுதாயம் புரிந்து கொண்டுள்ளது உலகம் உங்கள் நட்பிற்காக காத்திருக்கிறது என்று மனதார வாழ்த்தலாம் என்ற கருத்துக்களையும் முன் வைக்கிறார். அவரின் படைப்பிலக்கியத்தில் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என்ற களத்தைத் தாண்டி பல அனுபவக் கட்டுரைகளை இந்த தொகுப்பில் காட்டுகிறார். இதற்கு முன்னால் கூட ஒரு தொகுப்பில் இப்படி பல கட்டுரைகள் இடம்பெற்று இருந்ததும் அதற்கு நான் ஒரு முன்னுரை எழுதியதும் ஞாபகம் வருகிறது ஆனால் இந்த கட்டுரைகள் அவையல்ல. வேறு வகையாக இருக்கின்றன. முன்னாள் அவர் தந்த அந்த கட்டுரைகளை அவர் தேடி நூலாக கொண்டு வர வேண்டும் என்பது என் விருப்பம் ஒரு மனிதன் இயங்குவதற்கான பல சக்திகள் உள்ளன. அதில் இலக்கியம் என்ற ஜீவசக்தி முக்கியமானது. அந்த ஜீவசக்தியை உணர்ந்து உடல் நலக் குறை பாடு என்ற ஒரு முக்கியமான காலகட்டத்தை தாண்டி வந்திருக்கிற நண்பன் ரத்தினமூர்த்தி அவர்களை இயக்குகிற ஜீவ சக்தியாக இருக்கிறது இலக்கியம். .அந்த ஜீவசக்தியின் துணையுடன் அவர் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்துவார் அதற்கு அத்தாட்சியாக இந்த கட்டுரைத் தொகுப்பைப் பார்க்கிறேன்