சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வியாழன், 13 ஆகஸ்ட், 2026
“ இன்னும் மீதமிருக்கிறப் பொழுதுகளில்
சுப்ரபாரதிமணியனின் “ இன்னும் மீதமிருக்கிறப் பொழுதுகளில் “ என்ற சிறுகதை ஆண்டின் சிறந்த சிறுகதையாக சென்னை இலக்கியச் சிந்தனையின் பரிசு பெற்றது. அது தோழர் எஸ்வி ராஜதுரை அவர்களால் நடத்தப்பட்ட “ இனி “ என்ற இலக்கியப் பத்திரிகையில் வெளியானது
முதலில் இலக்கியச் சிந்தனை அதை சிறந்த மாதச் சிறுகதையாக தேர்வு செய்திருந்தது. பிறகு அந்த ஆண்டின் முடிவில் அதை ஆண்டின் சிறந்த கதையாகத் தேர்வு செய்து பரிசு தந்து. சிறப்பு அளித்தது .
அந்த இலக்கியச் சிந்தனை விழா அமைப்பாளர்கள் பழைய நிதியமைச்சர் பா,சிதம்பரம், லட்சுமணன், பாரதி போன்றவர்களால் சிறப்பாக நடத்தப்பட்டது அப்போது சுப்ரபாரதிமணியன் ஹைதராபாத்தில் வசித்து வந்தார்.
அந்த சிறுகதை தமிழர் வாழ்க்கையில் ஒரு முக்கியமான அம்சங்களைக் கொண்ட நெசவாளர் திருமணச் சடங்கு பற்றியக் கதையாகும்
இப்போது அந்தக் கதையை அவர் ஒரு திரைக்கதையாக்கி இருக்கிறார். அது இந்த நூலில் இணைக்கப்பட்டிருக்கிறது அது நெசவாளர் சமூகத்தை சேர்ந்த கதை என்பதால், அதே னெ நெசவாளர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு திரைக்கதையும் கூட இணைக்கப்பட்டு இருக்கிறது .
ஆகவே ஒரு சிறுகதையும் இரு திரைக்கதைகளும் என்ற ஒரு வடிவத்தில் இது இடம் பெற்று இருக்கிறது
சுப்ரபாரதி மணியன் இதுவரை 30 நாவல்கள் மற்றும் 15 திரைக்கதை நூல்கள் வெளியிட்டு இருக்கிறார்.. அவரின் திரைக்கதை நூல்கள் தமிழ்த் திரைப்பட நூல்களின் பட்டியலில் முக்கியத்துவமும் பெருகிறது
அன்புடன்,
எத்திராஜ் திருப்பூர்