சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 13 ஆகஸ்ட், 2026

ஹபீபீ திரைப்படமும் சுப்ரபாரதி மணியனின் சிலுவை நாவலின் கிறிஸ்துவ நெசவாளர்களும் சுப்ரபாரதி மணியன் நெசவாளர் குடும்பத்தை சார்ந்தவன் என்ற வகையில் சிலுவை, சப்பரம், தறிநாடா என்ற நாவல்களும் சுமார் 30 சிறுகதைகளையும் என்ன நெசவாளக் குடும்ப அனுபவங்களையும் அவர்களின் வாழ்வியலையும் எழுதி உள்ளேன் சமீபத்திய படங்களில் ஹபீபீ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த்தாக அமைந்திருப்பதற்கு காரணம் இஸ்லாமிய வாழ்வியலை துல்லியமாக காட்டியது அது சமயம் நெசவாளர்களின் வாழ்வையும் நுணுக்கமாக காட்டியிருக்கிறார் சிலுவை நாவலில் ஒரு கிறிஸ்துவ குடும்பம். அது நெசவாளர் குடும்பம் என்பதை மையமாக வைத்து எழுதி இருந்தேன். 300 ஆண்டுகால கொங்கு வாழ்க்கையில் நெசவாளர்களின் பாரம்பரியமான தொழிலும் கிறிஸ்துவத்துக்கு நெசவாளர்கள் மதம் மாறியதும் பின்னால் தொழில் முறை மாற்றத்தின் காரணமாக விசைத்தறிக்குப் போவதும் என்ற ஆரம்பித்து ஒரு நெசவாளர் குடும்பத்தின் கதையை 300 ஆண்டுகளில் தந்திருக்கிறேன். 2000 ஆண்டு வரைக்கும் உலகமயமாமக்களின் விளைவுகளை என் கதாபாத்திரங்கள் சந்தித்திருக்கிறார்கள்.. இழந்து போனக்காதல் கதைகளையும் உள்ளடக்கியது. மீரா கதிரவன் அவர்களின் இந்த படத்தில் முஸ்லீம் வாழ்வில் பற்றிய நுணுக்கமான சித்திரங்கள் வந்திருக்கின்றன. கிராம நெசவாளர்கள் உலகமயமாக்களால் தொழில் மாற்றங்களின் மூலம் விசைத்தறிக்குப் போனதும் அவர்கள் குடும்பச் சிரமங்களும் நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இரண்டு இடங்கள் என்னையும் பெரிதும் பாதித்தன ஒன்று நெய்ததை முதலாளியிடம் கொண்டு போய் தரும் போது அவர் தரும் விமர்சனங்களும் அதனால் அந்த சிறுவனின் மனச்சிரமங்களும்…. இதை நானும் அனுபவித்து இருக்கிறேன் இரண்டாவதாக நெசவாளர் வீடுகளில் மழைக் காலத்தில் குறைபாடான ஓட்டின் வழியாக நீர் கசிந்து தறி குழிக்குள் சென்றுவிடும் அதே சமயம் அந்த பகுதியில் இருக்கும் நீர் ஊற்றுகள் காரணமாக நீர் தொடர்ந்து தறிக்குழிக்குள் ஏறி நீர் குழியாகி விடும். அந்த பகுதி மிக சிரமமாக நிலையுடன் இந்த பணத்தில் காட்டப்பட்டிருக்கிறது. இப்படி ஏராளமான இடங்கள் நெசவாளர்களின் வாழ்க்கையில் நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருகின்றன. . குடும்பச் சூழ்நிலைகாரணமாக பெண்கள் கண்வன்மாருடன் சேர்ந்து நெசவில் ஈடுபடுவதை பல கதாபாத்திரங்கள் சொல்கின்றன. கஸ்தூரி ராஜாவின் மனைவியின் கால் பாதங்களில இவ்வகை நீருடன் இருந்து பழகி தான் ஏற்படும் புண்களின் விரிவானக் காட்சி சிரமம் தருகிறது. இழந்த காதலும் அதை நிமிர்ந்து செய்ய முடியாத காரணமான பகுதிகளை இந்த படத்தில் திறமையாக காட்டியிருக்கிறார் மீரா கதிரவன் அவர்கள் என் சிலுவை நாவலின் பாரம்பரிய நெசவும் அதில் ஒரு விதவைப் பெண் நெசவாளனை திருமணம் செய்து கொள்வதும் பின்னால் அந்த குடும்பம் கிறிஸ்தவ குடும்பமாக மாறுவதும் என்பது ஆரம்பமாக இருக்கிறது. பின்னால் தொழில்சார்ந்த சிரமங்களும் விசைத்தறிக்கு மக்கள் போவதும் பனியன் கம்பெனியின் நாடுவதும், பம்பர் கோரா பட்டு நெசவு மாறுவதும் என்று என் சிலுவை நாவல் கதாபாத்திரங்கள் அமைந்திருந்தன இஸ்லாமிய வாழ்க்கையை கூறுகளை நுணுக்கமாகச் சொன்ன மலையாள படங்கள் சாதாரணமாகி விட்டன ஆனால் அந்த தரத்தில் தமிழில் ஒரு படத்தை பார்ப்பது அரிதான சூழ்நிலையில் மீரா கதிரவன் அதை சாதித்து காட்டியிருக்கிறார். கஸ்தூரிராஜா போன்றவர்களின் தேர்வு நடிப்பில் இந்த படம் பல சிகரங்களைத் தொட்டிருக்கிறது. இதுபோன்றப் படங்களுக்கு ஏற்படும் பொருளாதார தடைகளோ அல்லது பட்ஜெட் சமாச்சாரங்களோ இதில் ஏற்படாது போல இந்த படத்தின் ஒளிப்பதிவும் திரைக்கதை அமைப்பும் விரிவாக இருப்பதும் முக்கியமானதாக இருக்கிறதும் மீரா கதிரவன் குழுவினருக்கு பாராட்டுக்கள்.. - சுப்ரபாரதிமணியன் Siluvai Rs 1200 NCBH , Chennai Book review எதிர்கால உணவு சுற்றுச்சூழலுக்கு எதிரானதா. சுப்ரபாரதிமணியன் கடைசியாக மலேசியாவிற்கு சென்ற போது முதல் முறையாகச் செயற்கை இறைச்சியைச் சாப்பிட்டேன் திருப்பூரைச் சேர்ந்த நண்பர் கோலப்பன் அங்கு அறை எடுத்துத் தங்கி ஜோசியம் பார்க்கும் வேலையை செய்து வந்தார். மாதத்தில் ஓரிரு நாட்கள் மட்டும் திருப்பூரில் இருப்பார். மற்றபடி மலேசியா, சிங்கப்பூரில் தான் வசித்து வந்தார். அவருடனான சந்திப்பின் போது ஏதாவது உணவு விடுதிக்கு அழைத்துச் சென்று நல்ல அசைவ உணவு தருவதில் அக்கறை கொண்டிருந்தார் அப்படித்தான் ஒரு நாள் அழைத்தார் சென்று இருந்தேன். அந்த நாள் வெள்ளிக்கிழமை என்பதாலும் ஏதோ விரத நாள் என்பதாலும் நாம் இன்றைக்கு அசைவ உணவு சாப்பிட முடியாது என்றார். பரவாயில்லை என்றேன் ஏனென்றால் ஒவ்வொரு முறையும் அவருடைய சந்திப்பில் அசைவ உணவு தான் சாப்பிடுவேன் அவர் ஒரு சைவ உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார் ஆனால் மாமிச கறிகள் அதிகம் இருப்பது போல தோற்றமளித்த ஒரு பிரிவுக்கு அழைத்துச் சென்றார். இங்கே மாமிச உணவின் சுவையுடன் செயற்கை அசைவ உணவு உள்ளது அதேபோல சுவை இருக்கும் சாப்பிடுங்கள் என்றார் அவர் வெள்ளிக்கிழமை என்பதால் விரதம் என்பதால் அன்றைக்கு அந்த செயற்கை இறைச்சி உணவையும் சாப்பிட மறுத்துவிட்டார் அப்போது தான் எனக்கு அந்த செயற்கை உணவு அறிமுகமானது. அந்த செயற்கை இறைச்சி வகை உணவுகளைப் பற்றி பாமயன் இந்த நூலில் சொல்லியிருக்கிறார் 0 aகாலநிலை மாற்றத்தின் விளைவான புவிவெப்பமாதல் பற்றி பேசுகிறபோது அசைவ உணவு கால்நடை வளர்ப்பும் அதன் முக்கியமான காரணங்களாக சொல்லப்படுகிறது. கால்நடை வளர்ப்பில் மாடுகள் போன்ற அசைபோடும் விலங்குகள் அதிக மீத்தேன் வெளியை வெளியிடுகின்றன என்கிறார்கள். அதேபோல அசைவ உணவு தயாரிக்க பயன்படும் மறை நீரின் அளவும் அதிகமாக இருக்கிறது .ஒரு கிலோ மாட்டு இறைச்சி உற்பத்திக்கு ஆயிரக்கணக்கான லிட்டர் நீர் தேவைப்படுகிறது என்பது நமக்கு தெரியும் எனவே இயற்கைக்கு குறைந்தபட்ச பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகள் தேவை என்று வலியுறுத்தப்படுகிறது அந்த எதிர்கால உணவுகள் பற்றிப் பேசப்படுகிற.போது அது எப்படி இருக்கும் ..அவை செயற்கை இறைச்சி, ..தாவரம் அடிப்படையிலான புரதங்கள். பால் புரதங்கள் போன்றவை .செயற்கையான உணவுகள் - எதிர்கால உணவுகள் என்று உருவாகியுள்ளன ஆரம்ப மனித வாழ்க்கையின் காலத்தில் காட்டு உணவுகளை அதிகமாக பயன்படுத்தினோம். பிறகு வேளாண்மை சமூகம் வந்த பிறகு வேளாண்மை உணவுகள் அதிகம் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இப்போது தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் உணவு பெரும் பெரும் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. அவை அதிகமான வெப்பம், அழுத்தம் கொடுத்து பதப்படுத்தப்படுதல் தூரங்களுக்கு பதப்படுத்துதல் இடப்பட்டு எடுத்து கொண்டு செல்லப்படுதல் ஆகிவை எதிர்கால உணவின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.என்கிறார் சுற்றுச்சூழலை பற்றி அசைவ உணவு அதிகம் பேசப்படுகிற போது சூழலில் கருத்துக்கள் செயறகை உணவு தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக இருக்கின்றன. வளர்ப்பு இறைச்சியின் அதிகப் பயன்பாடுகளை குறைப்போம் நுகர்வைத் தடுக்கும் மீத்தேன் வழி வெளியேற்றத்தை குறைக்கும் பெரிய அளவிலான கால்நடை வளர்ப்பு தேவையில்லாமல் போகும் என்று சூழலில் சார்ந்து எதிர்கால உணவைப் பற்றி சொல்கிறீர்கள் ஆதரிக்கிறார்கள் . ஆகவே உணவு என்ற கருத்தின் அடித்தளத்தை மாற்றுகின்றன . இன்றைய கருத்தாகங்கள் .. அவை எப்படி உள்ளன என்பது வெறும் ஊட்டகங்களா.. மண், தாவரங்கள். விலங்குகள் வேளாண்மை ஆகியற்றின் பங்களிப்பின்றி உருவாக்கப்படும் பொருளையும் உணவாக கருத முடியுமா.. தொழில்நுட்பம் மனிதனை பசியில் இருந்து விடுவிக்குமா அல்லது இயற்கையில் இருந்து மேலும் விடுவிக்குமா என்ற கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை பாமயன் அவர்கள் இந்த நூலில் தந்திருக்கிறார் மாற்று உணவு என்பது பாதுகாப்பான உணவு என்றாக இருக்க வேண்டும் ரசாயன முறையில் நஞ்சு இல்லாத உணவாக இருக்க வேண்டும் உயிரியல் சூழலில் சமூகவகையில் ஒத்து செய்யும் உணவாக இருக்க வேண்டும் ஒவ்வொரு உணவும் சோதனையில் பாதுகாப்பானதாக மெய்ப்படும் நிலையில் அது இயற்கை முறை வேளாண்மையைச் சேதப்படுத்தினால் உள்ளூர் உணவு பண்பாட்டினை மாற்றுமேயானால் அல்லது உணவு நிறுவன கட்டுக்குள் கொண்டு சேர்க்குமேயானால் அந்த உணவை முழுமையாக பாதுகாப்பானது என்று கருத முடியாது என்று அவர் கருதுகிறார் மாற்று உணவில் செயற்கை இறைச்சி என்பது விலங்குகளின் இறைச்சி தயாரிக்கும் முறை ஒரு மாற்று அறம் என்று கூறப்படுகிறது .தொழிற்சாலை கால்நடை பல்கலைகள் காணப்படும் நெருக்கி அடைத்து வைத்தல் ஊக்கநீர் பயன்பாடு கட்டாயம் போன்ற கொடுமைகளையும் சுட்டிக்காட்டுகிறார். உலக அளவில் இறைச்சியை நுகர்வோர் அதிகமாகி வருகின்றனர். சைவ உணவுகளை தயாரிக்கும் நேரமும் பொறுமையும் மக்களிடம் இல்லை ஆகவே இந்த பின்னணியில் உருவாக்கப்படும் செயற்கை முறையைக் கொண்டு செய்யப்படும் இறைச்சி உலக உணவுத்துறையில் முக்கியமான புரட்சியாக இருக்கிறது பயிர்களில் இருந்து பெறப்படும் இறைச்சி கூட கோடிக்கணக்கான டாலர்களை முதலீடாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது சூழலியல் பார்வையில் உணவு என்பது வெறும் வேதியியல் மூலக்கூறுகளின் தொகுப்பு அல்ல அது உயிரினங்கள் நிலம், நீர் நுண்ணுயிர்கள் சமூகப் பண்பாட்டு மரபுகள் ஆகியவற்றின் சிக்கலான உறவுகளில் வெளிப்பாடு , இந்த நிலையில் செயற்கை பால், ஆய்வக முட்டை போன்ற மாற்று உணவுகள் மனிதனை இயற்கையில் இருந்து மேலும் விலக்குமா? அல்லது இயற்கையை வளங்களின் மீது ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும் புதிய வாய்ப்பாக மாறுமா என்பது இன்னும் தீர்க்கப்படாத கேள்வியாக உள்ளது .அதன் விடை தொழில்நுட்பத்தின் நெற்றியில் மட்டுமல்ல வரும் சமூகம் எதிர்காலத்திற்காக எந்த வகை உணவு முறையை தேர்ந்தெடுக்கிறது என்பதிலும் சுற்றுச்சூழலுக்கு அவை எந்த பாதிப்பை தருகிறார்கள் என்பதிலும் அடங்கியுள்ளது அசைவ உணவுகளில் கடல் உணவுகள் முக்கியமாக இருக்கின்றன கடலில் ஏற்படும் சூழலியல் நெருக்கடி அதிக அளவில் பேசப்படுகிறது. உலக அளவில் வரம்பற்ற மீன் பிடிப்பு காரணமாக பல மீன் இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன.விசைப் படகுகளை வைத்து மீன் பிடிப்பதால் கடல் நீர் ஆதாரங்கள் சேதமாகின்றன .அவை பிற கடல் உயிரினங்களையும் அழிக்கின்றனர் இந்த நிலையில் கடல் வெப்பமாக்கல், அமில மழை போன்ற காரணங்களால் பவலப் பாறைகள் அழிந்து பல நுண்ணுயிர்கள் அழிந்து போகின்றன மனித தாய்ப்பால் கூட செயற்கையாக உருவாக்கப்படுகிறது .குழந்தை உணவு உருவாகுவதை தயாரிக்கும் பெரிய வியாபாரத்தில் இந்த மனித தாய்ப்பால் கூட இடம்பெற்றிருக்கிறது .தாய்மைப் பால், இறைச்சி உணவுகளில் தயாரிக்க பயன்படுத்தப்படும் சோயா போன்ற பயிர்களின் தொழில் மைய வேளாண்மை பெருமளவில் ஊக்குவிக்கிறது. அதேபோல செயற்கை இறைச்சி என்ற செயற்கை உணவு சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்ற அடையாளம் இந்நூலில் தரப்படுகிறது ஆனால் இந்த வகை இறைச்சி சுற்றுச்சூழலுக்கு தேவையானதா நல்லதா என்பதை பற்றிய வேறுபாடு ஆய்வுகள் இல்லாமல் இருக்கிறது சூழலியல் பார்வையில் உணவு என்பது வெறும் புரதம் கொழுப்பு மாவுகளின் தொகுப்பு அல்ல அது மண்ணில் நுண்ணுயிர்கள் தாவரங்கள் விலங்குகள் விவசாயிகள் சமூக உறவுகள் அவர்களின் பண்பாட்டு நினைவுகளின் ஒருங்கிணைந்த வெளிப்பாடாகும் ஒரு உணவின் மதிப்பு அதன் ஒற்றை அளவில் மட்டுமல்ல அது எவ்வாறு உருவாக்கப்படுகிறது ,யாரால் உருவாக்கப்படுகிறது, என்ன நிலப்பரப்புகளின் தொடர்புடையது ,எந்த சமூகத்தின் வாழ்வு முறையுடன் இணைந்துள்ளது என்பதில் உள்ளது என்கிறார் எதிர்கால உணவு இந்த விரிவான பொருளிலிருந்து சுருக்கப்பட்டு தயாரிக்கப்படும் பிரதம அல்லது உயிர் தயாரிப்பு என்கிற குறுகிய வரவிற்குள் அடைக்கப்பட்டு கூடும் .இதனால் உணவின் பண்பாட்டு சமூக சூழ்நிலையில் மேல் பரிமாணங்கள் புறக்கணிக்கப்படும். மக்கள் இயற்கையோடு இணைந்து உண்மையை உருவாக்க உயிரில் ஒரு பங்காளிகளாக இல்லாமல் தொழில்நுட்ப அமைப்புகளின் நுகர்வோராக மட்டுமே மாற்றப்படும் என்ற அச்சம் இன்று உள்ளதை பாமயன் விளக்குகிறார். செயற்கை உணவுகள் தயாரிக்கப்படும் நாடுகளில் உள்ள அதிகமான முதலீடுகள் மற்றும் இயந்திரங்களின் பயன்பாடு . மனித உழைப்பு நிராகரிக்கப்படுவது பற்றிய அச்சத்தையும் இந்த நூல் தருகிறது.. ஒவியங்கள் , அட்டவணைகள், குறிப்புச் சித்திரங்கள் ஆகியவை பிரசுரம் ஆகியிருக்கும் பக்கங்கள் தெளிவாக இல்லை. இந்த நூலில் வேர்கள் ராமலிங்கத்தின் தொடர்ந்த பங்களிப்பும் மகிழ்ச்சி தருகிறது… . உணவு இயந்திரம் ( செயற்கை உணவு , ஆய்வக இறைச்சி , உணவு இறையாண்மை ) பாமயன் கட்டுரைகள் …தாளாண்மை வெளியீடு ரூபாய் 120 )