சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 13 ஆகஸ்ட், 2026

நொய்யலை வரைவோம் 0 பெரியபாளையம் தொல்லியல் சிறப்பு வாய்ந்த ஈஸ்வரன் கோயில் சென்று நேரடி ஓவியங்கள் வரைந்த தமிழ் அந்தாதியின் முதல் முயற்சிக்குப் பின் அடுத்த நேரடி ஓவியம் வரையும் நிகழ்வு ... 0 திருப்பூர் நொய்யலை மையமாக வைத்து சுப்ரபாரதிமணியன் எழுதிய ” சாயத்திரை “ நாவல் வெளிவந்து 30 ஆண்டுகள் ஆவதை ஒட்டி “ நொய்யலை வரைவோம் “ நிகழ்ச்சி நொய்யல் கரைகளில் இருந்து நொய்யலை வரைகிற வித்தையைச் செய்யலாம்,. சிறந்த ஓவியங்களுக்கு,, 10 பேருக்கு பதக்கங்களும் சான்றிதழும் வழங்கப்படும்,. அதைத் தவிர பங்கு பெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். சுப்ரபாரதிமணியனின் ” சாயத்திரை “ 30 ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்தது சிறந்த நாவலுக்கான தமிழக அரசின் பரிசு பெற்றது. இந்தி, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் வெளி வந்திருக்கிறது. இந்த நாவலில் இருந்து சில பகுதிகளை வரையலாம் அல்லது நொய்யல் நதிக்கரையில் இருந்து நொய்யலை வரையலாம். ஓவியம் வரையத் தேவையானப் பொருட்களுடன் வாருங்கள். கூடுமிடம் :: : சுற்றுச்சூழல் பூங்கா முகப்பு, பார்க் வீதி, நொய்யல் கரை திருப்பூர் நாள் ;23/8/26.. மாலை 4 மணிக்கு தொடர்புக்கு ::ஆர். எத்திராஜ் 96778 91584 நிகழ்ச்சி அமைப்பு : கனவு, திருப்பூர்