சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 9 மே, 2023

வவ்வால் பூ சிரிக்கும் வனாந்திரம். 14/40 கொண்டை ஊசி வளைவு - சுப்ர பாரதி மணியன் யாழ் எஸ் ராகவன் தேடலின் தீவிரத்தில் பலர் இங்கே சுயத்தை தொலைக்க நினைப்பதுண்டு ஆனாலும் சுயம் அகம் புறம் என்ற பேதம் இன்றி எல்லா இடங்களிலும் வெளிப்பட்டே தீரும். குறைவான பாத்திரங்களைக் கொண்டு ஒரு நாவலை கட்டமைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. தத்துவ விசாரணமும் ஆழ்ந்த அனுபவமும் உளவியல் சார்ந்த நிலைப்பாடுகளும் தெரிந்த ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு நாவலை எழுதி விட முடியும் என்று தோன்றுகிறது.நேரடி கதை சொல்லும் முறை என்பது வேறு சற்று ஆழ்ந்து படித்து புரிந்து கொண்டு ரசிப்பது என்பது வேறு. வாசகனின் மனநிலையை வாசகனின் வாசிப்பு ஆற்றலை உரசி பார்க்கும் விதமாக எழுதுகின்ற இருண்மை தன்மையில் நாவல் படைக்கப்பட்டு இருக்கிறது. சீர பாகம். திராக்ஷாபாகம். நாளிகரபாகம். என்று ஒரு பிரதியை புரிந்து கொள்ளும் விதத்தை வடமொழியாளர்கள் மூன்று விதமாக சொல்லி வைத்திருக்கிறார்கள் சீரம் என்றால் பால் பாலை பருகுகின்ற போது எவ்விதமான சிரமமும் தேவையில்லை. திராட்ச பாகம் என்பது திராட்சை பழத்தை சாப்பிடும் போது அதில் இருக்கும் விதைகளை துப்பி விட்டு அருந்த வேண்டும். நாளிகரம் என்றால் தேங்காய் தேங்காய் பால் வேண்டுமென்றால் தேங்காய் உடைத்து துருவி அது வெந்நீரில் போட்டு பிழிந்து அதன் பிறகு தான் நாம்தேங்காய் பாலை அருந்த முடியும்அந்த வகையில் எனக்கு இந்த கதை நாளிதர பாகமாகவே தெரிகிறது. 14/40 கொண்டை ஊசி வளைவு என்ற நாவல் தமிழில் மிகச் சிறந்த படைப்பாளி சுப்ர பாரதி மணியன் அவர்களால் எழுதப்பட்டது. வாழ்வில் பொருள் சம்பாதிக்க வேண்டும் பணம் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஓடி ஓடி உழைத்த ஒருவன்.ஓய்விற்காக உடல் மட்டும் மன செம்மைப்படுத்தும் பயிற்சிக்காக ஆனைகட்டி அருகில் உள்ள ஒரு பயிற்சியில் தங்குகிறான்.அங்கே வாழ்வில் பல துன்பங்களை சிக்கல்களை சந்தித்து உடலாலும் மனதாலும் சுரண்டப்பட்டு துன்பத்தில் உழண்ட பெண்ணான நயன்தாரா என்ற கதாபாத்திரத்தை சந்திக்க நேர்கிறது. ஆறுதல் தேடி அலையும் அவள்.உடலை மட்டுமே சுரண்டிய சுரண்டும் உன்மத்தர் கூட்டத்திற்கு மத்தியில் யாரேனும் உள்ளத்தை ஆசைகளை புரிந்து கொள்வார்களா என்று ஏங்கும் ஒரு பெண்ணின் மனம்.குடும்பச் சிறையில் பாசக்கயிற்றில் பணம் எண்ணும் அரக்கனின் கொடூர கோர பசியில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் ஒரு இளைஞனின் ஆசைகளும் அபிலாசைகளும் ஊடும் பாவுமாக கதையின் மைய நீரோட்டமாக அமைகிறது. இயற்கை எழில் கொஞ்சும் ஆழியார் அணை ஆனைகட்டி பகுதியில் இருந்து கதை அற்புதமாக தொடங்குகிறது மெதுவாக நகர்ந்து நகர்ந்து. காதலும் காமமும் நகைச்சுவையும் சரிவிகிதத்தில் கலந்து சித்த தத்துவம் ஜென் தத்துவம் சைவ சித்தாந்த தத்துவம் அத்தனையும் அலசி ஆராய்ந்து கதை வேகம் எடுக்கிறது. இயல்பாக ஒரு ஆணுக்கு பெண் மீது ஏற்படும் ஈர்ப்பும் காமமும் ஒரு பெண்ணுக்கு ஆண் மீது ஏற்படும் காதலும் கவித்துவமாக கதையில் வருணிக்கப்பட்டு வந்திருக்கிறது. மனவளக்கலை பயிற்சி மையம் அங்கே இடம் அமைப்பு உணவு அமைப்பு அறை அமைப்பு அத்தனையும் விரிவாக விளக்கப்பட்டு வந்திருக்கிறதுகாதல் என்ற ஒழுங்கு உள்ளே வந்து விட்டது என்றால் உலகமே ஒழுங்கின்மையாக தெரியும். திருமணமான ராஜகுமாரன் ஒரு விடுதியில் தன் கற்பை பறிகொடுத்து பொதுமகளிர் ஆக்கப்பட்ட நயன்தாராவும் சந்திக்கின்ற இடம் அபாரம். அவள் பெயர் வள்ளி எதுவானாலும் இருக்கலாம் ஆனாலும் நம் கற்பனையை மெருகட்டுவதற்கு நயன்தாரா என்ற பெயர் சுவையாக தான் இருக்கிறது. கதையின் முதல் பகுதியில் காசியில் நடக்கும் மூடநம்பிக்கை சார்ந்த விஷயங்களை கட்டு உடைத்து எதார்த்தத்தின் மைய நீரோட்டத்தை அலசி பார்க்கும் தத்துவ விசாரணமாகவே கதை அமைகிறதுபயிற்சிக்கு செல்லாமல் அறையிலேயே தங்கி அவர்கள் காதல் புரியும் அழகு இடையிடையே ராஜகுமாரனுக்கு தன் மனைவி பேசுகின்ற செயல் அரசன் என்ற கதாபாத்திரம் வயதுக்கு மீது வழியும் காட்சி அங்கு இருக்கும் வாட்ச்மேன் உடைய அறிவுரை. இன்னும் அந்த பயிற்சிக்கு வந்திருக்க கூடிய பல்வேறு மக்களைப் பற்றி விவரிக்கிறார் நண்பர்கள் இலங்கை அகதியாக வந்தவர் பல்வேறு இயக்கத்தில் இருந்து வெளிவந்தவர்கள் தொழில் சார்ந்தவர்கள் வாழ்க்கை இழந்தவர்கள் என்று பலரின் வர்ணனைகள் குறைவான கதாபாத்திரங்களில் நம் மனதில் நிறைவாக நிற்கின்றன வாழ்வில் பல சிக்கல்களை சந்தித்து அதை தீர்ப்பதற்காக பயிற்சிக்கு வந்த இருவருக்கிடையில் ஏற்பட்ட காதலை எவ்வளவு சுவையுடன் அவர் பகிர்ந்து இருக்கிறார் அந்த ஆணனை நம்பி இவள் சந்தேகத்துடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து வெளியே இருவரும் தனியாக செல்கிறார்கள் அவர்கள் செல்லுகிற இடம்தான் 14.40 கொண்டை ஊசி வளைவு. அங்கே ஒரு சித்தர் போலிகளையும் மாயைகளையும் கட்டுடைத்து பேசுகிறார்.இவன் கூட நாம் இருப்பது சரியா என்று யோசிக்க முன்னே அந்தப் பெண் அவனை விட்டுவிட்டு வெளியே சென்று விடுகிறார். இயல்பை மீறி நடக்கும் எதுவும் துன்பம் தருவதாகவும் தொல்லையை மேலும் அதிகப்படுத்துவதாகவே இருக்கும்.ஏற்றுக்கொண்ட அமைப்பில் இருந்து விலகுவதும் ஏற்றுக்கொண்ட புரிதல் இருந்து மாறுவதும் எப்பொழுதும் நமக்கு சங்கடங்களை தரும் என்பதை மிக அழகாக சொல்லப்பட்ட நாவல் 102 பக்கங்கள் (உயிர்மை பதிப்பக வெளியீடு அற்புதமான பதிப்பு ) நீங்கள் ஒரு முறை அந்த வளைவுக்குள் சென்று வாருங்கள் வவ்வால் பூ பூக்கும் வனாந்தரம் உங்களையும் வசீகரிக்கும் யாழ் எஸ் ராகவன் உத்தமபாளையம் வட்டம் தேனி மாவட்டம் இந்த ஈர நிலங்களானது பல்வகையான பல்லுயிர்களுக்கு பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் இருந்து வருகிறது. நாம் பெரிதும் கவனித்திடாத நத்தைகள், வண்டுகள், சிறு பூச்சிகள், புழுக்கள் என ஆயிரக்கணக்கான பல்லுயிர்கள் இந்த ஈர நிலத்தில் பிறந்து வாழ்ந்து அந்த சூழலின் உணவுச் சங்கிலியில் ஓர் பங்கு வகித்து வருகிறது. சற்று ஆழமில்லாமல் நமது குதிங்கால் வரை நீர் தேங்கி சில காலம்வரை நிற்கும் ஈரநிலங்களில் பல பறவைகள் நின்று அந்த நீரினுள் உள்ள மண்ணை கொத்தி கிளரிக் கொண்டிருப்பதை நம்மில் பலர் கண்டிருப்போம். வாருங்கள் வவ்வால் பூ பூக்கும் வனாந்தரம் உங்களையும் வசீகரிக்கும் ( யாழ் எஸ் ராகவன் உத்தமபாளையம் வட்டம் தேனி மாவட்டம் ) 0