சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 9 மே, 2023

கோட்டயம் 2023 - சுப்ர பாரதி மணியன் சார்ஜா புத்தக கண்காட்சிகளில் டி. சி.புத்தகப் பதிப்பகம், கேரளா அமைக்கும் நூற்றுக்கணக்கான அரங்குகளை கண்டிருக்கிறேன் 2018. & , 2021 சார்ஜா புத்தக கண்காட்சியில் தமிழ் புத்தகங்கள் ஒரு அரங்கம் இருந்தது. அந்த அரங்கம் கூட டிசி புக்ஸ் என்ற குடையின் கீழ் தான் இருந்தது, அரங்கத்தினுடைய பெயர் அப்படித்தான் இருந்தது. சின்ன இடத்தில் தமிழ் புத்தகங்கள் என்ற ஒரு சின்ன அட்டை இருந்தது. பல தமிழ்ப் பதிப்பகங்கள் ஒன்று சேர்ந்து அந்த ஒரு அரங்கை நிர்வகித்து இருந்தார்கள். ஆனால் மலையாளத்தில் சுமார் 150 அரங்குகள் இருந்தன. அதில் பெரும்பாலும், நூற்றுக்கு மேற்பட்ட அரங்குகள் பி சி புக்ஸ் அமைத்து இருந்தார்கள். மற்ற பதிப்பாளர்கள் மீதி உள்ளவற்றை பரிந்து கொண்டார்கள் சார்ஜா, துபாய், அபுதாபி போன்ற நாடுகளில் சுமார் 30 லட்சம் மலையாளிகள் வசிக்கிறார்கள்.. இலக்கிய உணர்வு கொண்டவர்கள் அவர்கள். அங்குள்ள பள்ளிகளில் மலையாளம் பயிற்சி தரப்படுகிறது . என்ற தகவல்கள் அந்த அரங்குகளில் விற்கப்படும் நூல்களின் உடைய தரம், தீவிரம் பற்றிச் சொல்லின ஆனால் சுமார் 10 லட்சம் தமிழர்கள் வசிக்கக்கூடிய அந்த பகுதியில் பள்ளிகளில் தமிழ் கல்வி இல்லை, நல்ல ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ் அமைப்புகள் இல்லை இந்த சூழலில் ஒரு அரங்கோடு தமிழ் நின்று விட்டது, அப்போது சி டி புக் சார்ந்த ஊழியர்கள் ஒரே விதமான உடை அணிந்து கொண்டு இருப்பதையும் ஒரே இடத்தில் தங்குவதையும் அவர்களுக்கான உணவு விநியோகம் போன்றவற்றையும் கேள்விப்பட்டிருந்தேன் அப்போதுதான் டிசி புக்ஸ் என்ற ஒரு வலிமையான புத்தகம் நிறுவனம் கேரளாவில் நடைபெறுவது பற்றி சரியாக அறிந்து கொள்ள முடிந்தது அந்த ஆண்டில் பெருமாள் முருகன் அவர்களை புத்தக கண்காட்சியில் பேச அழைப்பு அழைத்து இருந்தார்கள் காரணம் டி . சி புக்சில் அவருடைய புத்தகங்கள் பல மலையாள மொழிபெயர்ப்புகளில் வெளியாகி இருப்பது காரணம் என்றார்கள் அந்த டி டி சி புக்ஸ் பல தமிழ் பதிப்பாளர்களுடைய நூல்களை அங்கே கொண்டு செல்வது போல முயற்சி கொண்டிருக்கிறார்கள். இந்த முறை கோட்டயத்திற்கு சென்றிருந்தபோது டிசி புக்ஸ் தலைமையகத்துக்குச் சென்றேன். புத்தக விற்பனை அரங்குகளும் அலுவலகம் இவை எல்லாம் ஆச்சரியம் தந்தன. தமிழ்நாட்டின் எந்த பதிப்பாளருக்கும் இப்படி பெரிய கட்டிடம் இருந்ததில்லை என்று நினைக்க வைத்தது.தமிழ்நாட்டில் என் சி பி எச் போன்ற பெரிய நிறுவனங்கள் மட்டுமே இவ்வளவு பெரிய கட்டிடங்களையும் அமைப்புகளையும் கொண்டு இருக்கிறார்கள் என்று தோன்றியது. அப்போதான் கே ஆர் மீரா அவர்களின் ஆரச்சார் நாவல் டி.சி புக்சால் வெளியிடப்பட்டு 46 பதிப்புகள் வந்திருப்பதைக் கண்டேன். அந்த நாவல் தமிழில் செந்தில் குமார் அவர்களது மொழிபெயர்ப்பில் சாகித்ய அகாடமி வெளியிட்டிருக்கிறது. அதைப் படித்திருந்தேன் .. தமிழில் அதோட விலை அதிகமாகத்தான் இருந்தது. மலையாள பதிப்பில் விலை குறைவாகவே இருந்ததை கண்டு கொண்டேன். அதேபோல சிற்பி பாலசுப்ரமணியம் அவர்கள் மொழிபெயர்ப்பில் ஒரு நாவல் வெளிவந்திருக்கிறது ( மரம். ). பொள்ளாச்சி எதிர்ப்பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. இன்னும் ஒரு நாவலை செந்தில் குமார் மொழிபெயர்ப்பில் எதிர் பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது சமீப காலத்தில் தமிழ் சூழலில் அதிர்வுகளை உண்டாக்கிய நாவல்கள் என்ற வகையில் கே ஆர் மீரா அவர்களின் படைப்புகளைச் சொல்லலாம். கே ஆர் மீரா அவர்கள் கோட்யத்தைச் சார்ந்தவர் என்று அறிந்தேன். அவரைச் சந்திக்க முயற்சிகள் எடுத்துக் கொண்டேன். ஆனால் முயற்சிகள் கைகூடவில்லை பத்து ஆண்டுகளுக்கு முன்னால் கோட்டையம் சென்ற போது அப்படித்தான் அருந்ததிராய் அவர்களை சந்திக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். அவரின் சொந்த ஊர் கோட்டயம். அவர் அம்மா இங்கே இருக்கிறார்கள் பள்ளிக்கூடம் என்ற கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். ஒரு கிறிஸ்தவர் அன்பரின் திருமணத்திற்கு சென்ற போது நேரம் ஒதுக்கி பள்ளிக்கூடத்தை தேடிச் சென்றேன் அங்கு நோய்வாய் பட்டு இருந்த அருந்ததி ராயின் அம்மா அவருடைய சந்தித்தேன் . அந்த சந்திப்பு மற்றும் நான் அந்த வீட்டை தேடி அலைந்தது பற்றி ” அருந்ததிராயின் வீட்டுக்கு சென்றிருந்தேன் “ என்றொரு சிறுகதையை உயிர் எழுத்து இதழில் எழுதி இருந்தேன். அது என்னுடைய சிறுகதை தொகுப்புகளில் இடம் பெறாமல் போய்விட்டது என்று தான் நினைக்கிறேன். இந்த முறையை அப்படித்தான் கே ஆர் மீரா அவர்களை சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது கோட்டையம் செல்கிறபோதெல்லாம் குமரகம் செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வேன். அங்குள்ள பல படத்துறைகள், ஏரிகள் போன்றவை எப்போதும் ஈர்ப்பு ஏற்படுத்தும் இந்த முறையும் இருந்தது. அப்படித் தான் குமரகம் பகுதியில் இருந்து மகாமக என்ற கடல் பகுதிக்கு பயணம் இருந்தது. சுமார் 40 நிமிடம் கடலில் பயணம் வெறும் 16 ரூபாய் தான் கட்டணம் வசூலித்தார்கள் அரசு படகில். ஆனால் அதுவே தனியார் படகில் 25 மடங்கு அதிகமாக இருந்ததை கண்டு கொண்டேன். அரசு பஃடகில் இருந்த சில நூலகம் ஒன்று ஆச்சரியப்படுத்தியது. அதிலிருந்து சில புத்தகங்களை புரட்டிக்கொண்டு இயற்கை காட்சிகள் ரசித்துக் கொண்டும் சென்றது . நீர்க்காக்கைகள் உட்பட பல பறவைகளை ரசிக்க முடிந்தது. ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. பறவைகளின் கத்தல்கள் அவை நீரோடு கொள்ளும் அனுபவம், தூரத்தில் தென்படும் மரங்கள், நீர் நிலைகள், எல்லாம் கடந்து அந்த பயணம் இருந்தது. ரசித்து அனுபவித்த ஒரு பயணம் அது. அருந்ததிராயின் நாவல் “ சின்ன விஷயங்களின் கடவுள் “ காட் ஆப் ஸ்மால் திங்ன்ஸ் நாவல் அப்படி ஒரு நீர் நிலங்களை கொண்ட அப்பகுதியின் ஒரு கிராமத்தை தான் மையமாகக் கொண்டிருந்தது . ஏரிகளும் குளங்களும் நிரம்பிய பகுதியை நிலப் பகுதியை மையமாக வைத்து அவர் எழுதியிருந்தார் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வதும் வெவ்வேறு வகையான நீர்நிலைகளும் அந்தப் பகுதியை இயற்கை வளம் உள்ள காட்சிகளாக நிறைவேற்றி இருப்பதை அருந்த்திராய் அவர்களும் குறிப்பிட்டிருக்கிறார். வேம்பனாடு ஏரியினுடைய அழகை ரசிப்பதற்கு பல நாட்கள் வேண்டும். தெற்காசியாவில் நல்ல நீர் ஏரி என்ற அளவில் இரண்டாவது இடத்தை பெற்றது வேம்பநாட்டின் பழமையான படகுகளையும் பலவகையான படகோட்டிகளையும் அந்த வேம்பநாடு ஏரியில் காணலாம். 100 கிலோ மீட்டருக்கு அதிகமான பரப்பளவில் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது. அந்த வேம்பநாடு ஏரி அதுவும் ஓண்ம் சமயங்களில் அங்கு நடைபெறுகிற பாம்பு படகுப் போட்டிகள் மிகவும் முக்கியமானவை. அங்கிருந்து கொஞ்ச தூரம் நகர்ந்து போனால் பறவைகள் சரணாலயம் தென்படும். பல வெளிநாட்டு பறவைகள் சிரமமாக அங்கு அது தென்படும். ஜூன் முதல் ஆகஸ்ட் வரை அந்தப் பறவைகள் முட்டையிடும் காலமாகவும் இருந்து சைபீரியன்ஸ் ஸ்டோர்க், டாக்டர் ஒயிட் பீஸ் எக் ரேட் போன்ற பறவைகள் உடைய நடமாட்டத்தை சொல்லும் காட்டுப்பகுதியாகும்,. நவம்பரும் மே மாதமும் வெளிநாட்டு பறவைகள் டக் பார்ட்டி பில் டாக் மார்ச் ஆரியர் சிரிப்பில் போன்றவை வந்து செல்லும் என்றார்கள், .அந்த பகுதியில் படகு பயணங்களில் மீன் பிடிக்கும் பல வகையான மீனவர்களுடைய போக்குகளும் அவருடைய தொழில் முறைகளை பற்றியும் அறிந்து கொள்ளலாம். இன்னும் ஒரு கரையில் இருக்கிற ஆட்டமங்கலம் தேவாலயத்தில் ராஜா ரவிவர்மாவின் பெரும்பலா திருமேனி சார்ந்த ஓவியங்கள் காணப்படுகின்றன. அவை முக்கியமானவைகளாக இருக்கின்றன இல வீளா பூஞ்சிரி என்ற ஒரு மலைப்பகுதி இப்போது பரவலாக பேசப்படுவதின் காரணம் அந்த பெயரில் வந்திருக்கிறது ஒரு திரைப்பட.ம். இலைகள் வீழாத இடம் என்று அதற்கு பெயர் அங்கு பலத்த மரங்கள் இல்லை.. ஆனால் அங்குள்ள இயற்கை சூழல் மக்களை தன் பால் ஈர்த்து உள்வாங்கிக் கொண்டு சாசகம் செய்யும் இடமாக இருக்கிறது. அந்த தலைப்பிலான திரைப்படம் வந்த பின்னால் பிற மாநில மக்களும் வெளிநாட்டுப் பயணிகளும் அந்தப் பகுதிக்கு செல்வது அதிகமாக இருக்கிறது என்று சொன்னார்கள்.. அதேபோல இளிக்கால்கள் என்ற ஒரு மலைப்பகுதி நாலாயிரம் அடிகளுக்கு மேல் தன்னுடைய உயரத்தை கொண்டிருக்கிறது. ஒரு மலை. விரிந்த காளான் போன்ற உருவத்தைக் கொண்டிருக்கிறது. கையூரில் அமைந்திருக்கிற இயற்கை காட்சிகள் நல்ல அனுபவத்தை தருபவை அங்குள்ள ஒரு கோயில் மகாபாரதத்தில் பாண்டவர் சகோதரர்கள் அங்கு இருந்ததாக சொல்லி அமைக்கப்பட்டு இருக்கிறது.. அங்கிருந்து சபரிமலைக்கு சுலபமாக சொல்ல முடியும். அந்த மகாபாரத கோவிலில் நெய் விளக்குகள் முக்கியம், பெண்கள் சபரிமலையில் கடவுளை தரிசிக்கு செல்வது தடை செய்யப்பட்ட விஷயமாகு.ம். தடை என்றால் பக்தர்களின் தடை அரசு நீதிமன்றமோ தடை விதிப்பதில்லை அதன் மீறி சென்ற பெண்கள் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட பல அனுபவங்கள் நிறைந்திருக்கின்றன.. டிப்பாரா என்ற இடம் ஒரு மலைப்பகுதி கொண்டது கண்ணாடியில் பிரதிபலிப்பது போல காலை சூரியன் உதயமாவது எங்கிருந்து பார்ப்பது நிச்சயமாக நிச்சயமாக இருக்கிறது அதேபோல அந்தப் பகுதியில் இருக்கிற ஐயப்பனார் மலை என்பது மிக முக்கியமானதாகும். அதுவும் பாண்டவர் சகோதரர்களோடு சம்பந்தப்பட்டது. 2000 அடி கடல் மட்டத்திற்கு மேலே உள்ள இந்த பகுதியில் பாண்டவர்களை நினைவு கொள்ளும் பல விஷயங்கள் உள்ளன. அஞ்சு பாரா என்று அழைக்கப்படுகிறது 5 பாறைகள் அந்தப் பகுதியில் உள்ள மணிமாலா ஆறும் மத்திய திருவாரூ பகுதியின் மிக முக்கியமான நீரோட்டமாக கருதப்படுகிறது. பம்பா ஆறுடன் இது சேர்கிறது கோட்டயத்தில் இருந்து மிக அருகில் உள்ள மீனாட்சி ஆறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்கிறார்கள். இந்தியாவின் பழமையான நதிகளில் ஒன்று சொல்கிறார்கள் அங்குள்ள ஒரு மசூதியும் கூட முக்கியமானதாக கருதப்படுகிறது. வைக்கயம் நகரில் உள்ள சிவன் கோவில் முக்கியமானது கோட்டையத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊராகும். பரசுராமின் கதையோடு சம்பந்தப்பட்ட ஒரு கோயில் இது .காசி போன்ற பழமையும் பெருமையும் கொண்டதாக சொல்கிறார்க.ள். இங்கு தான் தாழ்த்தப்பட்டவர்களை ஆலயத்தில் நுழைய வேண்டும் என்று பல போராட்டங்கள் நடத்திய போது தமிழகத்தின் பெரியார் ஈவேரா ராமசாமி அவர்கள் கலந்து கொண்டார் என்பது முக்கிய செய்தியாகும். அந்த கோயிலில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் பெரியார் நினைவு மண்டபம் இருக்கிறது.. அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை வைத்து இருக்கிறார்கள் எம்ஜிஆர் அந்த நினைவு மட்டத்திற்கு அடிக்கல் நாட்ட ஜெயலலிதாவை திறந்து வைத்திருக்கிறார்.. பெரியாருடைய வாழ்க்கை சார்ந்த பல்வேறு புகைப்படங்களும் விளக்கங்களும் அங்கே இருக்கின்றன .அந்த நினைவு மண்டபத்தை தமிழ்நாடு அரசாங்கம் தான் பராமரித்து வருவதாக அங்கிருந்த பாதுகாவலர் ராமச்சந்திரன் என்பவர் சொன்னார்.. அந்த நினைவு மணடபத்துக்கு எதிராக தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களும் இன்னொரு முதலமைச்சர் ஜானகி அவர்களும் ஒன்றாக சேர்ந்து இருக்கும் சிலை இருக்கிறது. அந்த சிலைக்கு பின்னால் இருக்கும் வீட்டில் தான் ஜானகி அவர்கள் இருந்திருக்கிறார். இப்போது அங்கு அவருடைய உறவினர்கள் சிலர் குடியிருப்பதாக சொன்னார்கள் கோட்டையும் பகுதியில் திருநாவுக்கர மகாதேவன் கோயில் அருகில் தான் தங்கி இருந்தேன். மார்ச் மாதத்தில் அந்த நாட்களில் அங்கு போய் விசேஷம் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தது நாட்டுப்புறக் கலைகளும் யானைகளின் அணிவகுப்பும் மக்களின் கூட்டமும் ஆச்சரியப்படுத்தின. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது அந்த கோயில் தெற்கு மகாராஜா அதை கட்டி இருக்கிறார் .கேரளத்துடைய கலை அம்சங்களை கொண்ட சுவர்களும் ஒவ்வொரு மூலையும் முக்கியமானவை.. கூட்டம், கூத்தம்பலம் என்ற பல நிகழ்ச்சிகள் நடக்கும் இடம் எங்கே முக்கியமாக இருக்கிறது அந்த கோயில் விசேஷங்களை அந்த சமயத்தில் பக்கம் இருந்து வேடிக்கை பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது.. வேங்கமான் மலை பகுதிக்கு ஒருநாள் சென்றிருந்தோம் அழகான பகுதி நீர் நிலைகளும் தேயிலைத் தோட்டங்களும் விரிந்திருந்த பகுதி எங்கு பார்த்தாலும் வாழை மரங்கள் வீடுகளிலும் தோட்டங்களிலும் தோப்புகளிலும் நிறைந்திருக்கும். ஆனால் வாங்கைமான் பகுதில் உள்ள உணவு விடுதிகளில் சாப்பிடும் போது வாழை இலைத் தாளைப் பயன்படுத்தினார்கள் செயற்கையாக உருவாக்கப்பட்ட தாள்.. வாழை இலைகள் எங்கும் விளைந்திருக்கிற இடத்தில் கூட சாப்பாட்டிற்காக அவற்றை பயன்படுத்தாமல் வாழை செயற்கைத் தாள் பயன்படுத்தினார்கள். இதேபோல வாழையிலே பாணியில் வடிவக்கப்பட்ட பீங்கான் தட்டுகளை பல உணவு விடுதிகளில் பார்க்க நேர்ந்தது. ” வீட்டில் உணவு-- வீட்டிலே ஊணு “ என்ற பெயரில் பல இடங்களில் விளம்பரங்கள் காணப்பட்டன. அவை வசீகரமான விளம்பரங்கங்களாக அமைந்திருந்தது. அவற்றிலும் கூட வாழை இலை கிடைக்காமல் போகுமா என்ற கற்பனை எனக்கு வந்தது. நல்ல சுவையான மீன்களை அதிக விலை கொடுத்து தான் வாங்கி சாப்பிட வேண்டியிருந்தது. பல வகையான உயிர் மீன்கள் கண்ணில் பட்டு அதிசயம் தந்தன. கேரளா செல்கிறபோதெல்லாம் ஒவ்வொரு முறையும் கோட்டயம் செல்லும் வாய்ப்பு அமைவது சிறப்பானதாகத் தோன்றும். டி சி புக்ஸ்முகப்பில் காணப்படும் அச்சு இயந்திரங்கள் கோட்டயம் அச்சாக்க்கம், பதிப்புத்துறை இவற்றில் முன்னோடியாக இருந்த்தைச் சொல்லின. அப்படித்தான் கோட்டையம் பகுதிக்கு இம்முறை சென்றிருந்தது புது அனுபவமாக மாறி இருந்தது