சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 12 ஏப்ரல், 2022

அணுகுமுறை அறிஞர் ப. கண்ணய்யா என்னுரை : அணுகுமுறை அறிஞர் ப. கண்ணய்யா அவர்களின் சீரிய முயற்சியால் பல நூல்கள் பதிப்பு பெறுகின்றன. அரிய நூல்களுக்கும் இந்தவகையில் பதிப்பு வாய்ப்புகள் ஏற்படுகின்றன அந்த வகையில் என்னுடைய இந்த நூலுக்கு அவர் ஆதரவு தந்திருக்கிறார். பல்வேறு காலகட்டங்களில் நான் எழுதிய நூல்கள் பற்றி பல்வேறு அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் அமைந்திருக்கிறது. ஒரு படைப்பாளியின் படைப்புகள் பற்றி ஓரளவுக்கு முழுமையான பார்வையைத் தரும் இவ்வகை தொகுப்பு கல்வித்துறை சார்ந்தவர்களுக்கும் இலக்கிய மாணவர்களுக்கும் வெகுவாக பயன்படுவதாக இருக்கும். ஒரு படைப்பாளியின் பல்வேறு படைப்புகள் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள ஏதுவாகவும் அந்த படைப்புகளை தேடிப்பிடிக்க உதவி செய்வதாகும் அமையும். அந்த வகையில் இந்த நூல் வெளியீட்டிற்கு ஆதரவுக்கரம் கொடுத்திருக்கிறார் . அணுகுமுறை அறிஞர் ப. கண்ணய்யா அவர்கள்.. கட்டுரையாளர்கள், அவற்றை வெளியிட்ட இதழ்கள், மற்றும் அணுகுமுறை அறிஞர் ப. கண்ணய்யா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நூலை மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்டு பயில்கின்ற மாணவர்களுக்கும், படைப்பிலக்கிய வாதிகளுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன் அன்புடன் சுப்ரபாரதிமணியன் திருப்பூர் Rs 160