சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 12 ஏப்ரல், 2022

அந்திமகாலத்தில் வெளிச்சக்கீற்றுகள் அந்திமம் :. ப. சகதேவன் நாவல் : சுப்ரபாரதிமணியன் கொங்கு பகுதியை சேரந்த நாவலாசிரியர் பல ஆண்டுகளாக பெங்களூரில் வசித்து வருகிறார் இந்த நாவலின் தலைப்பு சொல்வது போலவே அவர் அந்திமத்தில் இருப்பதாக கருதுகிறார் .ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கிறார் ..இந்த ஓய்வு வாழ்க்கையை கூடுதல் போனதாகவே கருதுகிறார் இந்த சூழலில் பெங்களூர் சார்ந்த அவரின் தனிப்பட்ட அனுபவங்களையும் அவர் சந்தித்த பல்வேறு தரப்பட்ட மனிதர்கள் பற்றியும் கொஞ்சம் குடும்பச் சூழ்நிலை பற்றியும் இந்த நாவலில் எழுதியிருக்கிறார் . பெங்களூர் தமிழர்களின் வாழ்க்கைப் போக்கை இந்த நாவலின் பல பகுதிகள் சுட்டிக்காட்டுகின்றன அதேபோல பெங்களூரில் வளர்ச்சியும் வளர்சிதை மாற்றங்களும் இணையாக வந்து செல்கின்றனர் சகாதேவன் எழுத்துக்களில் வழக்கமாக இருக்கும் கிண்டல் துளியும் சற்றே நகைச்சுவையும் நாவல் முழுக்க நகைக்க வைக்கின்றன இந்த கிண்டல் குடும்ப வாழ்க்கை சார்ந்த விஷயங்களில் அதிகமாக இருக்கிறது .சக மனிதர்கள் மீதான நேசத்தை கூடிக்கொண்டே போகிறது ஒரு தனி மனித வாழ்க்கையின் விசாரமும் அவரின் குடும்பமும் இந்த நாவலில் விரிவாக சொல்லப்பட்டிருக்கின்றன . கொங்கு மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து முதல் பெங்களூர் வாழ்க்கையில் சுமார் 40 ஆண்டுகள் கழித்து வரை பல்வேறு அனுபவங்களின் சித்தரிப்பு இந்த நாவல் தனிமனித ஆர்வலர்களால் நிறைந்த இந்த நாவல் பெங்களூர் வாழ் தமிழர்கள் பற்றிய வேறு வகையான சிக்கல்களையும் அடையாள நெருக்கடி நிலையையும் அதிகமாக பேசவில்லை .அந்நகரின் 50 ஆண்டுகாலம் சரித்திரத்தில் பல முக்கிய சம்பவங்கள் சில கோடுகளாக வரையப்பட்டிருக்கின்றன ஆனால் அவை மெலிதான கோடுகளாக இருக்கின்றன .தனிமனித வாழ்க்கையின் அனுபவங்கள் விரிவாக சொல்லப்பட்டிருக்கின்றன நாவலாசிரியர் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமியின் பரிசு பெற்றவர் ஒரே ஒரு நாவல் மொழிபெயர்ப்பு செய்தார் .. இது ஒரே ஒரு நாவல் முயற்சி ஆகக்கூடாது . அவரின் படைப்பிலக்கிய முயற்சிகள் தொடர வேண்டும் அபூர்வமாக தென்படும் கட்டுரைகள் மற்றும் அது சார்ந்த முயற்சிகள் தொடர வேண்டும் அவர் தொடர்ந்த இலக்கிய முயற்சிகளில் இருக்கிறார் என்பதுவும் ஆறுதலை தருகிறது சுப்ரபாரதிமணியன் திருப்பூர் ( யாவரும் பதிப்பகம் வெளியீடு விலை ரூ 550) தொகுப்பாசிரியர் : ப.கண்ணையா அணுகுமுறை அறிஞர் என்ற அரிய பட்டத்தைப் பெற்றுள்ள நண்பர் ப.கண்ணையா அவர்கள், அப்பழுக்கற்ற தமிழ்த் தொண்டர். இலக்கிய இலக்கணங்களைக் கற்றுள்ள தமிழறிஞர்களிடம் இல்லாத தமிழ்ப் பற்று கொண்டவர் , நடத்துனராகத் தன் வாழ்க்கை முழுவதும் தமிழுக்கு ஆற்றியத் தொண்டு அளவிடற்கரியது. இன்றும் தொடர்கிறது. மாதந்தோறும் பல நிகழ்ச்சிகளைக் கொண்ட இலக்கியக் கூட்டத்தைத் தனித்து நின்று சிறப்பாக நடத்துகின்றவர். மேலும் பல்வேறு தமிழ் அமைப்புகளையும் வளர்க்கின்ற பண்பாளர். ‘மானிட மர்ம சாஸ்திரம் என்னும் சிசு உற்பத்தி சிந்தாமணி’ என்ற பழமையான நூல் உட்பட பல அரிய நூல்களின் பயனை உணர்ந்து, தமிழ் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நல்லுள்ளத்தோடு பெரும் பொருட் செலவில் மீண்டும் பதிப்பித்து வழங்கி வரும் பெருந்தகை ஆவார். அவர் உலகம் சுற்றும் வாலிபர். .பல நாடுகளுக்குச் சுற்றுலா சென்று வருபவர். அவர் பயணம் செய்த நாடுகள், பங்களாதேஷ், சிங்கப்பூர், மலேசியா, பினாங்க், லங்காவி, பாங்காக், பட்டயா, ஆங்காங், மக்காவ், கம்போடியா, பர்மா, அந்தமான், துபாய், ஷார்ஜா, சைனாவில் ஷங்காய், பீஜிங் ஆகியவை. தான் சென்ற நாடுகளோடு தமிழர்களுக்கு உள்ள தொடர்பை அறிந்து தனக்குக் கிடைத்த செய்திகளைத் தொகுத்து ‘கடல் கடந்து வாழும் தமிழர்கள்’ என்ற நூலைத் தமிழுலகத்திற்குத் தந்துள்ளார். அஃது ஓர் அறிய முயற்சி! அது போல் இந்த நூலும் முக்கியமானத் தொகுப்பு நூலாகும். - தமிழமுதன்