சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 12 ஏப்ரல், 2022

வடகிழக்கு இந்தியப் பயணம் :6 சுப்ரபாரதிமணியன் கவுகாத்தியில் தங்கியிருந்த ஹோட்டல் பிரின்ஸ் நகரத்தின் முக்கியமான நேரு விளையாட்டரங்கம் அமைந்த வீதியில் இருந்தது. ஒரு நாள் காலையில் எங்களின் காலை நடை சற்று தாமதமாகத்தான் ஆரம்பித்தது. முக்கிய வீதி . மிதமானத் தாங்கிக்கொள்கிற குளிர்தான் . ஆனால் நடமாட்டம் குறைவாக இருந்தது . இரண்டு கி மீ நடந்தும் எந்தக்கடையும் திறக்கப்படாமல் இருந்தது ஆச்சர்யப்படுத்தியது. அதுவும் தம் டீ கடைகள் கூடத் திறக்கப்படவில்லை. நகராட்சி துப்புறவுத்தொழிலாளர்கள் வந்து காத்திருக்கும் வண்டிகளில் ஏறி பயணப்படுவதைக்காண முடிந்தது. “ கவுகாத்திக்கார்ர்கள் , பொதுவாக அசாமியர்கள் சோம்பேறிகள் ”என்றார் கூட வந்த நண்பர் இந்த விசயத்தை விடுதிக்காரர் காதில் போட “ அப்படியெல்லாம் இல்லை . குளிருக்கு தங்களை இதமாக்கிக் கொள்ள விரும்புகிறவர்கள் “ என்றார் அப்போது அவருடன் இருந்த ஒருவர் குளிருக்கு நம்மை இதமாக்கிக் கொள்ள அரசாங்கமே அரை நாள் விடுமுறை தரப்போவதாகச் சொன்னார் அது என்ன காஷ்மீர் பைல்ஸ் படம் வெளியாகப் போகிறது . அதைப் பார்க்க அரை நாள் விடுமுறையை அரசு ஊழியர்களுக்கு அரசு தருகிறது. படத்தைச் சாக்காக வைத்து குளிரை விரட்ட பாரில் நேரம் செலவிடலாமே அப்படி அரசை ஏமாற்ற முடியாது.பார்த்த பட டிக்கெட்டுகளை கொடுத்தால் மட்டுமே விடுமுறை அங்கீகரிக்கப்படும் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா படம் பார்க்கத் தயாராகிக்கொண்டிருப்பதாக பத்திரிக்கைச் செய்திகள் சொல்லின. அதே தினத்தில் அவர் செய்தித்தாளிதந்த இன்னொரு செய்தி கவனத்திற்குறியதாகியிருந்தது,அசாம் மாநிலஅமுஸ்லீமக்களை சிறுபான்மையினராகக் கருதஅமுடியாது. அவர்கள் மாநிலத்தில் 35 சதவீதமான மக்கள் தொகை கொண்டவராகிவிட்டனர்.காஷ்மீரில் காஷ்மீர் பண்டிட்டுகள் அங்கிருந்து விரட்டப்பட்டதைப் போல தங்களுக்கும் நேருமா என்று அச்சத்துடன் கேட்கின்றனர் . முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக நடந்து கொண்ட காஷ்மீர் மாதிரி நடக்காது என்று உறுதியளித்து அவர்களில் அச்சத்தை போக்குவோம் என்று சொல்லியிருந்தார். இனி ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் ப்ற்றி.. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந் துள்ள நிலையில், அந்தப் படத்திற்கு நாடாளுமன்றத்திலேயே பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்து இருப்பதுடன், பாஜக ஆளும் மாநி லங்களில் அந்தப் படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு, படத்தைப் பார்ப்ப தற்காக அரசு ஊழியர்களுக்கு விடு முறையும் வழங்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆதரவு நடிகர்களான அனு பம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்கர வர்த்தி, விவேக் அக்னிஹோத்ரியின் மனைவி பல்லவி ஜோஷி உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஹிந்திப் படம்தான் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. சுமார் 3 மணி ஓடும் இந்தப் படத்தை விவேக் அக்னி ஹோத்ரி இயக்கியுள்ளார். கடந்த ஜனவரி 26- குடியரசுத் தினத்தன்றே வெளியிடுவதற்கு திட்டமி டப்பட்டிருந்த இந்தப் படம், ஒமைக்ரான் பரவல் காரணமாக தடைப்பட்டு, தற் போது மார்ச் 11 அன்று நாடு முழுவதும் 630 திரையரங்குகளில் வெளியாகி யுள்ளது. இந்தப் படத்தைத்தான் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் துவங்கி பாஜக வினர் அனைவரும் கொண்டாடி வரு கின்றனர். தியேட்டர்களில் தங்கள் செல வில் சிறப்புக் காட்சிகளையும் நடத்தி வரு கின்றனர். ஆனால், வரலாற்றைத் திரித்து, முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் பான்மை இந்துக்கள் மத்தியில் வெறுப்பை விதைக்கும் தீய நோக் கத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருப்ப தாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. காஷ்மீரைச் சேர்ந்த மாணவர், தாத்தாவுடன் தில்லியில் வசித்தவாறே ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். தன்னுடைய பெற்றோர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக, தாத்தா தெரிவித்ததை நம்பி வருகிறார். தன்னுடைய ஜேஎன்யு ஆசிரியை ராதிகா மேனன் கூறுவதையும் அப்ப டியே நம்புகிறார். எனினும், தாத்தாவின் இறப்புக்குப் பிறகு அவரின் அஸ்தி யைக் கரைக்க, காஷ்மீர் செல்லும் மாண வருக்கு வேறோர் உலகம் விரிகிறது. தனது பெற்றோர் வன்முறையில் கொல் லப்பட்டதை அறிந்துகொள்கிறார். அந்தக் கல்லூரி மாணவனின் பய ணமே ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் கதைச் சுருக்கம் என்று கூறப்படுகிறது. அதாவது, காஷ்மீர் பள்ளத்தாக்கில் 1980-களின் பிற்பகுதியிலும் 90-களி லும் காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேறி யதன் பின்னணியை கதைக் களமாக வும், அந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகவும் கொண்டே ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தை எடுத்தி ருப்பதாக அதன் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தெரிவிக்கிறார். ஆனால், “முஸ்லிம்கள் காஷ்மீரி பண்டிட்டுகளைக் கொன்றதாகவும், அவர்கள்தான் பண்டிட்டுகளை வெளி யேற்றியதாகவும் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் சித்தரிக்கிறது; 90-களில் காஷ்மீ ரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் இந்துக்கள் மட்டுமே கொடூரமாக கொலை செய்யப்பட்டது போல் காட்டு கிறது; வரலாற்றின் ஒருபக்கத்தை மட்டுமே காட்டி, முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பான்மை இந்துக்கள் மத்தியில் வன்முறையை தூண்டுகிறது. இதுதான் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது சரிதான் என்று ஆளுங்கட்சிக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறது; நாட்டின் முற்போக்கான கல்வி நிறுவனமான கருதப்படும் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் குறித்தும் படத்தில் தவறாக சித்தரிக்கப் பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. காஷ்மீர் கிளர்ச்சியின்போது உயிரி ழந்த இந்திய ராணுவ வீரரின் மனைவி, தன்னுடைய கணவர் குறித்து படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி வழக்கு தொடர்ந்த நிலையில், சம்பந்தப்பட்ட வீரரின் குறித்த காட்சிகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஏராளமான சர்ச்சை களுக்குள் சிக்கியிருக்கும் படத்திற்குத் தான் பிரதமர் நரேந்திர மோடி நாடா ளுமன்றத்திலேயே பாராட்டு தெரி வித்துள்ளார். `கருத்து சுதந்திரத்தின் பெயரால் குரல் எழுப்பும் மொத்த ஜமாத்தும் கடந்த 5, 6 தினங்களாக கடும் கோபத்தில் இருக்கிறார்கள். திரைப்படத்தை அதன் தகவல்களுக்காகவும், கலைக்காகவும் விமர்சனம் செய்வதற்குப் பதிலாக, அதனை அவமதிக்க சதித் திட்டம் உரு வாகி வருகிறது’ என்று பேசியுள்ளார். மேலும், “இந்தத் திரைப்படம் சரியானது அல்ல’ என நினைப்பவர்கள் தாங் களே சொந்தமாகத் திரைப்படம் இயக்க வேண்டும். அவர்களை எது தடுக்கிறது? இத்தனை ஆண்டுகளாக அவர்கள் மறைத்து வைத்திருந்த உண்மை வெளியே வந்திருப்பதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படத்துக்கு பாஜக ஆளும் உத்த ரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஹரி யானா, குஜராத், கர்நாடகா, உத்தர கண்ட், கோவா, திரிபுரா மாநிலங்களில் வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அசாம் மாநில பாஜக அரசு, ஒருபடி மேலே சென்று, தனது மாநில அரசு ஊழியர்கள் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் பார்க்க அரை நாள் சிறப்பு விடுமுறை அறிவித்துள்ளது. படத்தைப் பார்த்து, மறுநாள் டிக்கெட்டுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும்உத்தரவிட்டுள்ளது( தீக்கதிர் ) 0 தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்திற் கான மோடி அரசின் ஆக்ரோஷ மான பிரச்சாரம், பழைய காயத்திற்கு மருந்திடாமல், சமூகப் பிரிவினை யைத் தூண்டுவதாக உள்ளது என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வ ரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி கூறி யுள்ளார். காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்டுகளை குறிவைத்து தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தியதை யும், தீவிரவாதிகளின் எச்சரிக்கை யைத் தொடர்ந்து பண்டிட்டுகள் அங்கிருந்து வெளியேறிய சம்ப வங்களையும் அடிப்படையாக கொண்டு ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ என்ற படம் கடந்த வாரம் வெளியானது. ஆனால், படம் எடுக்கப்பட்ட வித மான முஸ்லிம்களுக்கு எதிராக, இந்துக்கள் மத்தியில் வெறுப்பை விதைப்பதாக உள்ளது என்று விமர்ச னங்கள் எழுந்துள்ளன. தனது இந்துத்துவா நிகழ்ச்சி நிர லுக்கு உதவியாக இருப்பதால், பாஜக ஆளும் மாநிலங்கள் இந்தப் படத் திற்கு வரிவிலக்கு அளித்திருப்பது டன், இலவசமாக படத்தை திரை யிட்டுக் காட்டி, மதவெறியைத் தூண்டி வருகின்றனர். பிரதமர் மோடி படக் குழுவினரை நேரடியாகவே அழைத்துப் பாராட்டியதோடு, பாஜக எம்.பி.க்கள் அனைவரும் படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். பாஜக மாநில முதல்வர்களும் இப்படத்துக்கு ஆத ரவாக பிரச்சாரம் செய்து வருகின்ற னர். இந்நிலையில், இப்படத்தின் மூலம் பாஜக பிரிவினையைத் தூண் டுவதாக ஜம்மு -காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார். ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தை ஒன்றிய அரசு ஆக்ரோஷமாக ஊக்கு விப்பது காஷ்மீர் பண்டிட்டுகளின் வலியை ஆயுதமாகப் பயன்படுத் தும் அவர்களின் தவறான உள்நோக் கத்தை வெளிப்படுத்துகிறது. பழைய காயங்களுக்கு மருந்திடாமல் இரு சமூகத்தினரிடையே இணக்கமான சூழலை உருவாக்குவதற்குப் பதி லாக, அவர்கள் வேண்டுமென்றே பிரிக்கிறார்கள்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். OVER 19/3 வடகிழக்கு இந்தியப் பயணம் : 7 சுப்ரபாரதிமணியன் பருத்தியும் தேயிலையும் சுற்றுலாப் பேருந்தில் குவாஹாட்டியில் சுற்றும் போது அடிக்கடி பருத்தி பல்கலைக்கழகம் கண்ணில் பட்டது. விவசாயக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் கேள்விப்பட்ட்துதான். இது என்ன புதிதாய் .. இது இருக்க வேண்டிய இடம் கொங்குப்பகுதியல்லவா என்ற எண்ணம் வந்தது (முன்னர் காட்டன் கல்லூரி என அறியப்பட்டது) என்பது இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள குவாஹாட்டியில் அமைந்துள்ள ஒரு பொது மாநில பல்கலைக்கழகம் ஆகும் . பருத்திக் கல்லூரி 1901 ஆம் ஆண்டில் அஸ்ஸாமின் முன்னாள் பிரிட்டிஷ் மாகாணத்தின் தலைமை ஆணையராக இருந்த சர் ஹென்றி ஸ்டெட்மேன் காட்டனால் நிறுவப்பட்டது. இது அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு இந்தியா முழுவதிலும் உள்ள பழமையான உயர்கல்வி நிறுவனமாகும் . [2] பருத்திக் கல்லூரி 1948 இல் கௌஹாத்தி பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான கல்லூரியாக மாறியது , பின்னர் அது 2011 இல் நிறுவப்பட்டபோது, அஸ்ஸாம் அரசாங்கத்தின் சட்டத்தின் மூலம் (2011 ஆம் ஆண்டின் XIX ஆம் சட்டம்) காட்டன் கல்லூரி மாநில பல்கலைக்கழகம் ஆனது. பருத்திப் பல்கலைக்கழகச் சட்டம், 2017 கல்லூரிக்கும் பல்கலைக்கழகத்துக்கும் இடையே உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக இயற்றப்பட்டது கல்லூரி இல்லாத ஒரே மாகாணம் அஸ்ஸாம் என்பதாலும், குவஹாத்தி மிகவும் வசதியான இடம் என்பதாலும், குவஹாத்தியில் கல்லூரியைத் திறக்குமாறு மாணிக் சந்திரா 1899ல் பிரிட்டிஷ் அரசுக்குக் கடிதம் எழுதினார். பதிலுக்கு, சர் ஹென்றி ஸ்டெட்மேன் காட்டன் , KCSI, அப்போதைய அஸ்ஸாமின் தலைமை ஆணையர், 3 நவம்பர் 1899 அன்று கவுகாத்தியில் ஒரு கல்லூரி திறக்கப்படும் என்று அறிவித்தார். பெயர்: பொது மக்களால் தீர்மானிக்கப்பட்ட பருத்திக் கல்லூரி, 27 மே 1901 அன்று பருத்தியால் தொடங்கப்பட்டது. கல்லூரி கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது மேலும் ஐந்து பேராசிரியர்களுடன் தொடங்கப்பட்டது; இதில் கல்லூரியின் முதல் முதல்வர் பிரடெரிக் வில்லியம் சட்மர்சன் மற்றும் 39 மாணவர்கள் அடங்குவர். இக்கல்லூரியானது சுதந்திர இயக்கம் மற்றும் மாநிலத்தின் இலக்கிய மற்றும் கலாச்சார இயக்கங்களின் மையமாக இருந்தது, இது இந்தியாவின் ஒரு தனித்துவமான, ஒருங்கிணைந்த அங்கமாக அஸ்ஸாமின் அடையாளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. 1948 இல் கௌஹாத்தி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டபோது, கல்லூரி அதனுடன் இணைக்கப்பட்டதால், அது ஒரு தொகுதிக் கல்லூரியாக மாறியது 2015 இல் கல்லூரி சிறப்பு பாரம்பரியக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி, கல்லூரி சிறந்த மையமாக அறிவிக்கப்பட்டது, [6] இந்த நிகழ்வானது , அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் ஷர்மாவுடன் ஒரு புனிதமான விழாவில் கொண்டாடப்பட்டது . மேலும் இது அதிகாரப்பூர்வமாக முதுகலை கல்லூரியாக மாறியது. [5] பருத்திக் கல்லூரி தனது நூற்றாண்டு விழாவை 27 மே 2001 முதல் 26 மே 2002 வரை ஒரு வருட நிகழ்ச்சியுடன் கொண்டாடியது. ₹ 4.00 நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டது. பருத்தி கல்லூரி மாநில பல்கலைக்கழகம் அசாம் அரசாங்கத்தின் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது இந்தப் புதிய பல்கலைக்கழகத்தின் தொலைநோக்கு உலகத் தரம் வாய்ந்த ஒன்றாக, கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி ஆகிய இரண்டிலும் சிறந்து விளங்குவது, காமரூப் ஊரக மாவட்டம் அதிக அளவில் பருத்தியை விளைவிக்கிறது மகாராஷ்டிரம் மாநிலம் அதிக அதிக அளவில் பருத்தியை விளைவிக்கிறது காமரூப் ஊரக மாவட்டம், அசாமில் உள்ளது. இதன் அருகில் உள்ள பார்பேட்டா மாவட்டம், நல்பாரி மாவட்டம் ஆகியவற்றுடன் இதுவுன் சேர்ந்த பகுதியை காமரூப் பகுதி என்கின்றனர். இந்த மாவட்டங்களில் காமரூபி மொழி பேசுவதே இதற்கு காரணம். இந்த மாவட்டம் 4345 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது பருத்தி ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆத்திரேலியா உட்பட உலகெங்கும் பயிரிடப்படுகிறது. இதில் அமெரிக்க வேளாண்துறையின் ஆய்வின் படி இந்தியா பருத்தி விளைச்சலில் முதல் இடத்தில் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பேரளவில் பஞ்சு இழைகளை உருவாக்கவல்ல வகைகள் தேர்ந்தெடுத்து உருவாக்கப்பட்டுள்ளன. இருபது ஆண்டுகளுக்கு முன்பே 2002 ஆம் ஆண்டில் 330,000 ச.கி.மீ. பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டு, 2000 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள 2.1 கோடி டன் பஞ்சு விளைச்சல் செய்யப்பட்டது. பருத்தி விவசாயிகள் பெரும்பாலும் வேதி உரங்களையும், பூச்சி மருந்துகளையும் நம்பியுள்ளனர். அண்மைக்காலங்களில், சில பயிர்த்தொழிலாளர்கள் இயற்கை பயிர்த்தொழில் முறையில் பருத்தி பயிரிடத் துவங்கியுள்ளனர்.. மேலை நாடுகளில் பஞ்சு பெரும்பாலும் எந்திரங்களின் உதவியுடன் அறுவடை செய்யப்படுகிறது. இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ இலைகள் உதிர்ந்ததும் பஞ்சுக்காய்கள் பறிக்கப்படுகின்றன அல்லது தகுந்த வகையினங்களில் பஞ்சு மட்டும் காயிலிருந்து பறிக்கப்படுகிறது. நில நடுக்கோட்டுப் பகுதியில் பஞ்சு பல ஈடுகள் தொடர்ந்து வளரக்கூடியது. பருத்தி முக்கியமாக உடை தயாரிக்க பயன்படுகின்றது. மீன்பிடி வலைகள், கூடாரங்கள், புத்தக அட்டைகள் ஆகியவற்றிலும் பருத்தி பயன்படுத்தப்படுகிறது. சீனர்கள் உருவாக்கிய முதல் காகிதம் பஞ்சு இழைகளைக்கொண்டே உருவாக்கப்பட்டது. தற்போதைய அமெரிக்க டாலர் நோட்டும், அரசாங்க காகிதங்களும் பஞ்சு இழை கலந்தே செய்யப்படுகின்றன. டெனிம் எனும் உறுதியான முரட்டுத்துணி வகை பெரும்பாலும் பருத்தியைக் கொண்டே செய்யப்படுகிறது. பஞ்சு பிரிக்கப்பட்ட, பருத்தி விதைகளிலிருந்து பருத்திக்கொட்டை எண்ணெய் ஆட்டப்படுகிறது. தூய்ம செய்யப்பட்ட பின், இது மனிதர்களால் மற்ற எண்ணெய்கள் போலவே சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. அஸ்ஸாம் மாநில மக்கள் அதிக அளவில் பருத்தி ஆடைகள் அணிகிறார்கள் என்பது முக்கியமானச் செய்தியாகும். பருத்தி போலவே தேயிலை என்பது இந்த மாநிலத்தில் முக்கியமான விளை பொருளாகவும் பொருளாதாரத்தை நிர்ணயிக்க்க்கூடியதாவும் விளங்குகிறது அஸ்ஸாம் தேயிலை என்பது அதன் உற்பத்திப் பிரதேசமான இந்தியாவின் அசாம் மாநிலத்தின் பெயரால் அழைக்கப்படும் ஒரு தேயிலை ஆகும். அசாம் தேயிலை ஒரு கருப்பு தேயிலை ஆகும். அசாம் தேநீர் குறிப்பாக கேமல்லியா சினன்சிஸ் என்ற சீனத் தேயிலைச் செடியிலிருது பெறப்படுகிறது.[1][2] இதே தேயிலைச் செடி பாரம்பரியமாக சீனாவின் யுன்னான் மாகாணத்திலும் பயன்படுத்தப்படுகிறது அஸ்ஸாம் தேநீர் பெரும்பாலும் கடல் மட்டத்திற்கு நிகரான உயரட்திலோ அல்லது அதற்கருகிலோ வளர்க்கப்படுகிறது. மேலும் அதன் வடிவம், அதன் உற்சாகம், தீஞ்சுவை, அடர்வு, பிரகாசமான நிறம் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றது. அசாம் தேயிலை மற்றும் அசாம் தேயிலைக் கலவைகள் கொண்ட தேயிலைகள் காலைத் தேநீர் ‘ என விற்கப்படுகின்றன. உதாரணமாக, ஐரிஷ் காலை உணவு தேநீர், ஒரு சுவையான மற்றும் வலுவான காலைத் தேநீர் ஆகும். இத்தேயிலை சிறிய அளவிலான அசாம் தேயிலை இலைகளைக் கொண்டுள்ளது. அசாம் மாநிலம் உலகின் தேயிலை வளரும் பகுதியில் மிகப்பெரியது ஆகும் பிரம்மபுத்ரா ஆற்றின் இருபுறமும், பங்களாதேஷ் மற்றும் மியான்மரின் எல்லையிலும் அசாம் உள்ளது. இந்தியாவின் இந்த பகுதி அதிக மழைப்பொழிவைப் பெறுகிறது. மழைக்காலத்தில், ஒரு நாளைக்கு 10 முதல் 12 அங்குலங்கள் வரை (250–300 மிமீ) மழைப் பொழிவு இருக்கும். பகல்நேர வெப்பநிலை சுமார் 96.8 பாரன்ஹீட் (36° C) ஆக உயர்கிறது. தீவிர ஈரப்பதம் மற்றும் வெப்பத்தின் காரணமாக பைங்குடில் விளைவு போன்ற நிலைமைகளை உருவாக்குகிறது. இந்த வெப்பமண்டல காலநிலை அசாமின் தனித்துவமான உலர் தேயிலைச் சுவையில் பங்களிக்கிறது, இந்த அம்சத்தால் இந்தத் தேநீர் நன்கு அறியப்பட்டதாகத் திகழ்கிறது. அசாம் தேயிலை பொதுவாக அதன் தனித்துவமான கருப்பு தேயிலைகளைக் குறிக்கிறது என்றாலும், இப்பகுதி சிறிய அளவிலான பச்சை மற்றும் வெள்ளை தேயிலைகளையும் அவற்றின் தனித்துவமான குணாதிசயங்களையும் உற்பத்தி செய்கிறது. வரலாற்று ரீதியாக, உலகின் சொந்த தேயிலைச் செடிகள் உள்ள இரண்டு பகுதிகளில் அசாம் தெற்கு சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது வணிகத் தேயிலை உற்பத்தி பிராந்தியம் என அழைக்கப்படுகிறது. ஐரோப்பாவிற்கு அஸ்ஸாம் தேயிலைச் செடி ஸ்காட்லாந்து சாகசக்காரரான ராபர்ட் புரூஸ் என்பவரால் அறிமுகமானது.[5] அவர் 1823 ஆம் ஆண்டில் இதை அறிந்தார். இப்பிராந்தியத்தில் அவர் வணிகம் செய்யும் போது அசாமில் "காட்டுச் செடிகளாக" தேயிலைச் செடிகள் வளர்ந்து வருவதை புரூஸ் கண்டதாகக் கூறப்படுகிறது மனிராம் திவான் என்பவர் இதுகுறித்து வழிகாட்டியதோடு அவரை உள்ளுர் பழங்குடியினத் தலைவரான பெஸா காம் என்பவரிடம் அழைத்துச் சென்றார்.[6] உள்ளூர் பழங்குடியினர் (சிங்போஸ் மக்கள்) இச்செடியின் இலைகளில் இருந்து தேநீர் காய்ச்சுவதைக் கவனித்த புரூஸ், பழங்குடித் தலைவர்களுடன் இலைகள் மற்றும் விதைகளின் மாதிரிகளைச் சேகரித்து வழங்க ஏற்பாடு செய்தார், அதை அவர் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யத் திட்டமிட்டார். ராபர்ட் ப்ரூஸ் சிறிது காலங்களில் இறந்து போனதால் இச்செடி சரியாக வகைப்படுத்தப்படவில்லை. 1830 களின் முற்பகுதியில் ராபர்ட்டின் சகோதரர் சார்லஸ், அசாம் தேயிலைச் செடிகளிலிருந்து சில இலைகளை கல்கத்தாவில் உள்ள தாவரவியல் பூங்காக்களுக்கு முறையான பரிசோதனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார். அங்கு, இச்செடியானது இறுதியாக பலவிதமான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இது தேயிலைச்செடி அல்லது கேமல்லியா சினென்சிஸ் வர் அசாமிகா என அடையாளம் காணப்பட்டது, ஆனால் சீனத் தேயிலையிலிருந்து ( கேமல்லியா சினென்சிஸ் வர். சினென்சிஸ் ) வேறுபட்டதாகும். நீலகிரியில் விளையும் தேயிலை மூன்று வகைப்படும். அவையாவன (1) தூய்மையான சீனத் தேயிலை. இத் தேயிலை மிகவும் உறுதியானதாக இருக்கும் (2) அஸ்ஸாமில் பெரும் அளவு விளையும் நாட்டுத் தேயிலை. இது 25 அல்லது 30 அடி உயரம் வளரும் தன்மையுடையது. (3) சீன இனத்தையும், நாட்டு இனத்தையும் கலந்து உண்டாக்கப்பட்ட தேயிலை (Hybrid). இது சீனத் தேயிலையைப்போல் இருமடங்கு இலைகளைக் கொண்டிருப்பதோடு, அதன் உறுதியையும் பெற்றிருக்கிறது. அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் அதிகமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன, அங்கு விளையும் அரியவகை கோல்டன் டீத்தூள் கவுகாத்தி தேயிலை ஏல நிலையம் (GTAC) மூலம் 99,999 ரூபாய்க்கு ஏலம்விடப்பட்டது., மனோகரி கோல்டு டீத்தூள் சென்ற ஆண்டைக் காட்டிலும் அதிக விலைக்கு ஏலம் போயுள்ளது. சென்ற ஆண்டு 75,000 ரூபாய்க்கு ஏலம்விடப்பட்டது இந்த அரியவகை தேயிலைத்தூளை சவுரவ் வர்த்தக நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. இதன் அதிகபட்ச விலை கிலோவுக்கு 99,999 ரூபாய் என விற்கப்படுகிறது. இது போன்ற அரிய வகை டீத்தூளை பல வெளிநாட்டுக்காரர்கள் மிகவும் விரும்புவதாக பிகானி தெரிவித்தார். இந்த விற்பனை அஸ்ஸாம் தேயிலை விற்பனையில் ஒரு பெரிய மைல் கல்லாகும். இந்தியாவின் தேயிலை உற்பத்தியில் 52 விழுக்காடு அஸ்ஸாம் மாநிலத்தில் உற்பத்தியாகிறது. அஸ்ஸாமின் பல இடங்களில் விளையும் பல்வேறு தேயிலை அதிக விலைக்கு விற்கப்படுகின்றது. இந்நிலையில் இந்திய தேயிலை ஆணையம் (NTA) தேயிலைத் தோட்டங்களை விரிவுப்படுத்துவதை நிறுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைவிடுத்துள்ளது, மேலும் அங்குப் பணிபுரிபவர்களுக்கு குறைந்தபட்சம் மூன்றாண்டு கால வருங்கால வைப்புத்தொகை (PF) வழங்க கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இதையும் தாண்டி அஸ்ஸாமில் 850 சிறிய, பெரிய தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அதன் பராமரிப்புப் பணிகளுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயம்செய்ய வேண்டும். இந்திய தேயிலை ஆணையமும் இதையே பரிந்துரைசெய்கிறது. மனிதனின் அடிப்படைத் தேவையான தண்ணீரை அடுத்து சர்வதேச அளவில் அனைவரும் பருகும் பானம் தேநீர். காலை எழுந்தவுடனே தேநீர் அருந்தவில்லையென்றால் அன்றைய நாளில் எதையோ இழந்துவிட்டது போல் தோன்றும் அளவுக்கு நம் வாழ்க்கையோடு ஒன்றாகக் கலந்து விட்டது. பிரிட்டிஷார் நம் நாட்டில் திணித்தவற்றுள் மிக முக்கியமானது தேயிலை. அவர்கள் தேவைக்காக நம்மை பயிரிடச் சொல்லி பின்பு நம்மையே நுகர வைத்து அதன் தேவையை அதிகப்படுத்தி லாபம் ஈட்டினார்கள். ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு சர்வதேச அளவில் தேயிலையின் தேவை அதிகரித்தையொட்டி இந்திய அரசு தேயிலை பயிரிடுவதை ஊக்கப்படுத்தியது. மலைவாழ் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பையும் அவர்களுக்கு வாழ்வாதாரத்தையும் தேயிலை அளித்து வருகிறது. இந்த தேயிலை துறையை பற்றியும் தேநீரை பற்றியும் சில தகவல்கள் உங்களுக்காக…. கி.மு மூன்றாம் நூற்றாண்டில் தென்மேற்கு சீனாவில் ஷாங் பேரரசர்கள் தேநீரை மருந்தாக பயன்படுத்தியதற்கு வரலாற்று ஆவணங்கள் உள்ளன. கி.மு.800 களில் தேநீர் அருந்தும் பழக்கம் ஜப்பானுக்கு பரவியது. ஜப்பானிலிருந்தே ஐரோப்பிய நாடுகளுக்கு தேயிலை பரவியது. 17ஆம் நூற்றாண்டில் தான் பிரிட்டனில் தேநீர் மிக பிரபலமடைந்தது. இதன் பிறகே இந்தியாவில் தேயிலை உற்பத்தியை பிரிட்டிஷார் தொடங்கினர். முதன் முதலில் இந்தியாவில் தேயிலையை பயிரிட்டவர் மணிராம் தேவான் தேயிலையை பற்றி படிக்கக்கூடிய கலைக்கு டேசியோகிராபி (Tasseography) என்று பெயர். சீனா, ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளில் தேநீர் விழா நடத்தப்படுகிறது. மத விழாக்கள், திருமணம் போன்றவற்றின் போது தேநீர் விருந்து நடத்தப்படுகிறது. சீனர்கள் இதை `ஆர்ட் ஆஃப் டீ’ என்று அழைக்கிறார்கள். இந்தியாவில் இரண்டாவது அதிகம் வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய துறை தேயிலை துறை. ரயில் நிலையங்களிலும் பொது இடங்களிலும் தேநீர் அருந்துவதை ஊக்கப்படுத்தும் வகையில் பிரிட்டிஷார் விளம்பரப்படுத்தினர். 1920-ம் ஆண்டுக்கு பிறகுதான் இந்தியாவில் தேநீர் அருந்துவது மிகவும் பரவலானது. உலகின் மொத்த தேயிலை உற்பத்தியில் சீனாவின் பங்கு 36% இந்தியாவின் பங்கு 22.6% உலகின் மொத்த தேயிலை உற்பத்தியில் இந்தியாவின் நுகர்வு 25% இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலம் அஸ்ஸாம். அஸ்ஸாமில் 3,04,000 ஹெக்டேரில் தேயிலை பயிரிடப்படுகிறது. அஸ்ஸாம் டீ என்பது உலகளவில் மிகவும் பிரபலம். 2014-ம் ஆண்டு தகவலின் படி இந்தியாவில் தேயிலை சந்தையின் மதிப்பு 20,000 கோடி ரூபாய். இதில் கிரீன் டீ சந்தையின் மதிப்பு 250 கோடி ரூபாய் எகிப்தியர்கள் ஹைபிஸ்கஸ் என்று அழைக்கக்கூடிய செம்பருத்தி பூவிலிருந்து தயாரிக்கப்படும் டீயையே அருந்துகின்றனர். இதன் பெயர் கார்ஹடே. ஐரோப்பியர்கள் மாலை 3 மணியிலிருந்து 6 மணிக்குள் டீ அருந்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் உடல் எடையை குறைப்பதற்கு வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் கிரீன் டீயை விரும்புகிறார்கள். 1800களுக்குப் பிறகு கிரீன் டீ உலகளவில் பிரபலமடைந்தது. அதிலும் அமெரிக்கர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. கமீலியா சைனசிஸ் என்ற தேயிலையிலிருந்துதான் இந்த டீத்தூள் தயாரிக்கப்படுகிறது. கிரீன் டீயை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள் சீனா மற்றும் ஜப்பான். அஸ்ஸாமில் உள்ள தேயிலைத் தொழிலாளர்கள் தினக்கூலியாக 205 யை கூடப் பெறவில்லை. இது கேரளா (403), கர்நாடகா (349), மற்றும் தமிழ்நாடு (333) ஆகிய மாநிலங்களின் தினக்கூலியை விட மிகக்குறைவு. அசாமின் 7 மாவட்டங்களில் 5,000 தேயிலைத் தொழிலாளர்களுடன் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது‌. தேயிலைத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக ஊதியத்தை உயர்த்துவது குறித்துப் பரிசீலிக்குமாறு அரசாங்கம் மற்றும் தேயிலைத் துறைக்கு ஆக்ஸ்பாம் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சுமார் 39% நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் 61% தற்காலிக தொழிலாளர்கள் அங்கு வேலை பார்க்கிறார்கள். கோவிட் நெருக்கடிக்கு முன்னர், 7% பெண் தொழிலாளர்கள் மட்டுமே மகப்பேறு விடுப்புக்குப் பதிவுசெய்துள்ளனர். வெறும் 2% பேர் மட்டுமே தங்கள் முதலாளிகளால் வழங்கப்படும் குழந்தைகளின் கல்விக்கான வசதியைப் பெற முடிந்தது” என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. ஒரு தோட்டத் தொழிலாளியின் ஊதியத்திலிருந்து முதலாளிகள் சராசரியாக 778 ஐ மாதத்திற்குக் கழிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளி உண்மையில் ஒரு நாளைக்கு 160-180 ரூபாய் தான் ஊதியமாய் பெற்றுள்ளனர். தரத்தின் காரணமாக அசாம் தேநீர் முதன்மையாகக் கென்யா மற்றும் இலங்கை போன்ற ஏற்றுமதி செய்யும் நாடுகளுடன் போட்டியிடுகிறது. ஆக்ஸ்பாம் கருத்துப்படி, இந்த நாடுகளில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மோசமான தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகளே கிடைக்கின்றன. அசாமின் தினக்கூலி 205 ரூபாயும் ஒப்பிடும் போது அது கென்யாவில் 370 மற்றும் இலங்கையில் 260 ரூபாயாக உள்ளது. ஆங்கிலேயர்களால் அஸ்ஸாமில் உள்ள தேயிலை தோட்டத்துக்கு கொண்டு வரப்பட்ட தொழிலாளர்களில் எட்டு தலைமுறைகள் கடந்துவிட்டன. கிராமங்கள் தற்போது வளர்ந்துவிட்டன; சில கிராமங்களில் தேயிலை தோட்டம் சாராத பணிகள் கிடைக்கிறது; ஆனால் அனைவருக்கும் கிடைப்பதில்லை. உலகின் முன்னணி தேயிலை நிறுவனங்களில் சில, தாங்கள் தேயிலை வாங்கும் இந்தியத் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களின் பணி நிலைமைகளை மேம்படுத்த உறுதியளித்திருக்கின்றன. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில், தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஆபத்தான மற்றும் மிகவும் இழிவான நிலைமைகளில் வேலை செய்ய வேண்டியிருப்பதை பிபிசி ஆய்வு ஒன்று கண்டறிந்ததை அடுத்து இந்த உறுதிமொழி தரப்பட்டிருக்கிறது. தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வேண்டிய கழிப்பிட வசதிகள் இல்லை, கழிப்பிடங்கள் இருந்தால், அவை மிக மோசமான நிலையில் இருக்கின்றன. கழிவுப் பொருள் தொட்டிகள் நிரம்பி வழிந்து தொழிலாளர்கள் வாழும் இடங்களுக்குள் கழிவு நீர் வருகிறது என்று இந்த ஆய்வு கூறுகிறது. இது போன்ற மோசமான நிலைமைகளும், மிகக் குறைவான ஊதியமும், தொழிலாளர்கள் ஊட்டச்சத்து இல்லாத நிலையிலும், வியாதி தொற்றும் நிலையிலும் இருப்பதற்கு வழி வகுத்திருக்கின்றன. தேயிலைப் பயிரின் மீது தொழிலாளர்கள் பாதுகாப்பு ஏதுமின்றி ரசாயன உரங்களைத் தெளிப்பதையும் இந்த ஆய்வு கண்டறிந்திருக்கிறது. முன்னணி பிரிட்டிஷ் தேயிலை நிறுவனங்களான, பி.ஜி.டிப்ஸ், ட்வினிங்ஸ், மற்றும் டெட்லீஸ் போன்றவை நிலைமைகளை மேம்படுத்த உறுதியளித்திருக்கின்றன. இந்தியாவில் தேயிலை தயாரிப்பு நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும், இந்திய தேயிலை சங்கம் என்ற அமைப்பின் அஸ்ஸாம் கிளையின் தலைவரான, சந்தீப் கோஷ், தொழிலாளர்களின் வாழ்விட நிலைமைகள் மோசமாக இருப்பதை ஒப்புக்கொண்டார். கழிப்பறை சரியாக இல்லாத நிலை, திறந்த வெளியில் கழிப்பது போன்றவை ஏற்றுக்கொள்ளமுடியாத நிலைமைகள், இவைகள் நிவர்த்தி செய்யப்படவேண்டியவை, என்று அவர் பிபிசியிடம் பேசுகையில் கூறி கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொழில் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு துறைகளில் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேயிலைத் தொழிலில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இந்தியாவின் தேயிலைத் தொழிலில் முக்கியப் பங்கு வகிக்கும் அஸ்ஸாம் மாநிலத்தில் மார்ச் 22ஆம் தேதியிலேயே தேயிலைத் தோட்டங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. இதனால் ஒப்பந்த ஊழியர்கள் உட்பட பலரின் வாழ்வாதாரம் இல்லாமல் காங்கிரஸின் "சதித்திட்டத்தின்" ஒரு பகுதியாக உலகெங்கிலும் பிரபலமான அஸ்ஸாம் தேயிலை மற்றும் நமது பண்டைய புனித பாரம்பரியமான யோகாவை அவதூறு செய்ய ஒரு ”டூல்கிட்” கருவித்தொகுதி சமீபத்தில் முயன்றது என்றார். பிரதமர் நரேந்திர மோடி "அசாம் தேயிலைக்கு எதிராக ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டது. நீங்கள் ஒரு கருவித்தொகுப்பைப் பற்றி கேள்விப்பட்டிருக்க வேண்டும். இது அசாமின் தேயிலைத் தோட்டங்களை அழிக்க முயன்றது. எந்த இந்தியரும் அதை அனுமதிக்க மாட்டார்" என்று அவர் கூறினார். இது ஒரு வித்யாசமானப் போட்டியும் பேட்டியும் ஆகும். எப்படியிருந்தாலும் நேனீர் சாப்பிடும் போது தொழிலாளர்களின் ரத்தமும் ஞாபக்ம் வருவதும் தவிர்க்க இயலாததே .