சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 12 ஏப்ரல், 2022

வாசிப்பனுபவம். #அந்நியர்கள் :#சுப்ரபாரதிமணியன் #எழுத்து_கவிதா வெளியீடு / கோவை பிரசன்னா சுபரபாரதிமணியன் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக எழுதிவருபவர். எழுத்தின் எல்லா வகைகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர். சுற்றுச்சூழல் சம்பந்தமான விஷயங்களிலும், அதை நாவல்களில், சிறுகதைகளில் கொண்டு வருவதில் பெயர் பெற்றவர். சகமனிதர்களின் வாழ்க்கையை, அதன் அனைத்துவிதமான தாக்கங்களை இயல்பாக யதார்த்த நோக்கில் எழுதுபவர். இவரின் சாயத்திரை நாவல் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது சிறப்பு. பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். நாம் காணப்போகும் இந்த #அந்நியர்கள் நாவல் "எழுத்து" இலக்கிய அமைப்பின் 2020 ஆண்டிற்கான "திருமதி சௌந்தரா கைலாசம் விருது" பெற்றது. நாவல் இவரின் பல கதைகளைப் போலவே திருப்பூரைக் கதைக்களமாகக் கொண்டது. வேலை தேடி வருவோரை வேண்டாம் என்று சொல்லாமல், இரு கரம் நீட்டி வரவேற்ற ஊர் திருப்பூர். கோவிட் சமயத்தில் இங்க வேலை செய்து, வடமாநிலங்கள் திரும்பியவர்கள் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டும். நாவலில் அது போல பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து வந்து, திருப்பூர் வாழ் மக்களாகியவர்களின் அவஸ்தைகள், அவர்களுக்கு ஏற்படும் சுரண்டல்கள், பெண்களின் மீதான பாலியல் வன்முறை போன்றவைகளைப் பேசுகிறது. துளசி என்ற வடமாநிலப் பெண்ணைச் சுற்றி நகர்கிறது கதை. தன்னார்வலராக அந்தப் பெண் ஈடுபடும் நிகழ்வுகள், சந்திக்கும் பிரச்சினைகள், அவளைப் போல வந்து கஷ்டப்படும் பெண்களை காக்க முற்படுதல்கள், தன்னம்பிக்கை இல்லாமல் காதலித்து திடீரென்று ஓடிப்போகும் காதலன், பின்னர் தத்தளிக்கும் காதலி... சிறு பெண்களின் மீதான அத்து மீறல்கள்... இவற்றையெல்லாம் ஒன்றிணைத்து சரியான நிகழ்வுகளை புள்ளிகளாக வைத்து கோலம் தீட்டியுள்ளார் சுபரபாரதிமணியன். வண்ணக் கோலம் ஆகியிருக்கிறது. கதை முழுவதும் திருப்பூர் நகரம் வருகிறது. அதன் பனியன் கம்பெனி, அதில் வேலை செய்பவர்கள், முதலாளிகள் ரத்தமும் சதையுமாக வருகிறார்கள். பரிசுக்கு நியாயம் செய்யும் நாவல். -கோவை பிரசன்னா.