சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

திருவள்ளுவர் தின விழா நிகழ்ச்சி: மக்கள் மாமன்ற நூலகத்தில் என் சாயத்திரை நாவல் எழுப்பிய வளர்ச்சியா சுற்றுச்சூழலா சார்ந்த கேள்விகள் இன்னும் பதிலளிக்கப்படாமல் இருப்பதை பின்னலாடை ஏற்றுமதியாளர் சங்கத் தலைவரும் நிட்மா அமைப்பின் தலைவருமான அகில் ரத்தினசாமி அவர்களிடம் முன் வைத்தேன் * நொய்யல் நதியை சாயக்கழிவுகளால் நாங்கள் கெடுத்ததை கடந்த 5 ஆண்டுகளாக சரி செய்து வருகிறோம். 2023 ல் நொய்யல் மீண்டும் ஜீவநதி யாக மாறும்.. ஏற்றுமதி யாளர்கள் சங்க த் தலைவர் களில் ஒருவரான அகில் ரத்தின சாமி ௨ரை.இன்று மக்கள் மாமன்ற நூலகத்தில். திருவள்ளூர் தின நாள். தமிழன் னை சிலைக்கு பெரும் நிதியுதவி வழங்கினார் * சுப்ரபாரதிமணியன் 1.பிறந்த ஊர் செகடந்தாளி கிராமம், கோவை மாவட்டம் 2 பிறந்த ஆண்டு, தேதி : 25/10/1955 3 பெற்றோர் பெயர் “ : பழனிச்சாமி ,பழனியம்மாள் ( நெசவாளர்குடும்பம் ) 4 கல்வி பயின்ற ஊர்கள், பள்ளிகள் கல்லூரிகள். ஆரம்பக்கல்வி : செகடந்தாளி கிராமம், கோவை மாவட்டம் உயர்நிலைப்பள்ளி: திருப்பூர் பி எஸ் சி கணிதம் : திருப்பூர் அரசு கலைக்கல்லூரி எம் எஸ் சி கணிதம் : கோவை பூ சா கோ கலைகல்லூரி 5 மனைவி பெயர். மணமான ஆண்டு நாள்” சுகந்தி செப்டம்பர்11 , 1984 சுகந்தி மறைவிற்குப் பின் இரண்டாம் திருமணம் : கிரிஜா 6.குழந்தைகள் பெயர்: ஸ்ரீமுகி, சுபமுகி 7 தொழில்: தொலைத்தொடர்புத்துறை ( 2014ல் ஓய்வு) 30 ஆண்டுகள் பணி 8.முதல் படைப்பு. ” திருப்பூர் விழிப்பு இடது சாரி இதழ் “1977 சிறுகதை சுதந்திர வீதிகள் ( இந்தியாவின் அவசரகால கட்டம் சார்ந்த சிறுகதை ) 9 முதல் படைப்பை எழுதிய ஆண்டு, பிரசுரமான ஆண்டு - 1977 10.இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள்- ஜெயகாந்தன், கிரா, ஜெயந்தன் 11.விருதுகள் : பட்டியல் இணைப்பு 12. நூல்பட்டியல் - [முடிந்தால்] இணைப்பு 13 கலை இலக்கியப் பெருமன்றம். உறுப்பினர் அரசியல் செயல்பாடுகள் இல்லை. 14: கனவு இலக்கிய இதழ் 36ம் ஆண்டில் வெளிவந்து கொண்டிருக்கிறது ( ஹைதராபாத்தில் ஆரம்பித்த இதழ் ) 14 உங்கள் இணையதளம் பற்றி,. அதன் வெளியீட்டு நாள் www.rpsubrabharathimanian.blogspot.com 2000