சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

இயற்கையின் மீதும், பறவைகளின் மீதும் கரிசனம் கொண்ட நீங்கள் செய்யப்போகும் இந்த மகத்தான பணியினைச் செய்ய நேரம் ஒதுக்குங்கள் ஞாயிறு அன்று திருப்பூர் மக்கள் மாமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மேட்டுப்பாளையம் சலீம் அலி சிறார் பறவைகள் கவனித்தல் மன்றத் தலைவர் துரிகா அவர்கள் பறவைகள் கவனித்தல் குறித்து உரை ஆற்றினார் . முன்னதாக அங்கு நடந்தக் கவிதைப்பட்டறையில் தமிழ்வளர்ச்சித்துறை முன்னாள் இணை இயக்குனர் குமார் , சுப்ரபாரதிமணீயன், து சோ பிரபாகர், அழகு பாண்டி அரசப்பன், நாதன் ரகுநாதன்., பொன் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பயிற்சி உரைகளை நிகழ்த்தினர் .கல்லூரி மாணவர்கள் மற்றும் இலக்கிய வாசகர்கள் கலந்து கொண்டு கவிதை எழுதும் பயிற்சி பற்றிய பல்வேறு சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெற்றனர் சுப்ரபாரதிமணியன் மொழிபெயர்த்த துபாயில் வாழும் இஸ்மாயில் மெலடியின் “ புலம் பெயரும் மணல் துகள்கள்” கவிதை நூலை தூரிகா வெளியிட சந்தோஷ்குமார் பெற்றுக்கொண்டார் ( கனவு வெளியீடு ரூ60). மக்கள் மாமன்ற நிர்வாகிகள் சி சுப்ரமணியன், சத்ருக்கன், சிவகுமார் பிரபு, நூலகர் வின்செண்ட் ராஜ உட்பட பலர் கலந்து கொண்டனர். ” இந்த உலகம் மனிதனுக்காக படைக்கப்பட்டதல்ல. மனிதன் இல்லாமல் எந்த உயிரினமும் வாழ முடியும். ஆனால் பிற உயிரினங்களில் ஒன்று அழிந்தால்கூட மனிதனுக்கு ஆபத்தும் நோயும் துரத்த ஆரம்பித்துவிடும். அதன் வெளிப்பாடுதான் இன்றைய கொரானா பாதிப்புச் சூழல் வல்லமை வாழும் என்கிற தத்துவத்திற்கு மனிதனின் வளர்ச்சியும், அவன் மற்றவர்களை ஆட்டிப்படைப்பதும் தொடர்ந்து நிகழ்கிறது. இதில் பறவைகள் நோய் தடுப்பதில் பெரும் பங்கு வகிப்பதுடன், மனிதனை எதிரியாகவே பார்க்கிறது. அதனால்தான் எந்த பறவையும் மனிதனின் மீது வந்தமர தயங்குகிறது. ஒரு கொக்கு மாட்டின் கண்களில் அழுக்கை அகற்றுவதையும், ஒரு இரட்டைவால் கருங்குருவி எருமை மீது சவாரி செய்வதையும் பார்க்கும்பொழுது அது மனிதனை அச்சத்துடன்தான் பார்க்கிறது” என்று குறிப்பிட்டார். துரிகா அவர்கள் ஆற்றிய விரிவான உரையில்... மாபெரும் அதிசயம் ஒன்றின் மீதே அமர்ந்துகொண்டு அதைப்பற்றி சிந்திக்காமல் வாழ்வது நம் எதிர்காலத்திற்று மட்டுமல்ல., நம் நிகழ்காலத்திற்கும் நல்லது அல்ல. உலகம் என்னும் அதிசயம் உயிர்ச்சூழல்களான தாவரம், விலங்கு, நுண்ணியிர், பறவைகள், மனிதர்களால் மட்டும் நிரப்பப்பட்ட ஒன்றல்ல. உயிரற்ற சூழலான சூரிய ஒளி, நீர் நிலம் காற்று என ஏராளமான அதிசயங்களும் சேர்ந்தால்தான் சுகமாக இந்த பூமி சுழல் முடியம். உயிர்களை தாவரம், விலங்கு, நுண்ணுயிர் என மூன்றுப் பெரும் பிரிவுகளாகப் பார்க்கிறோம். ஒன்வொரு இனத்திலும் கோடிக் கணக்கில் உயிர் எண்ணிக்கைகளை காண்கிறோம். அவைகளுக்கு இடையே இருக்கும்சார்புத்தன்மையை நாம் புரிந்துகொண்டது மிக்குறைவே. இயற்கையின் வினோத ஏற்பாட்டினால் உயிர்கள் அனைத்தும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பின்னப்பட்டிருக்கின்றன. உணவுச் சங்கிலி சக்தியின் சுழற்சி போன்றவற்றால் பிணைக்கப்பட்டுள்ளன. . இந்த உலகம் மனிதனுக்காக படைக்கப்பட்டதல்ல. மனிதன் இல்லாமல் எந்த உயிரினமும் வாழ முடியும். ஆனால் பிற உயிரினங்களில் ஒன்று அழிந்தால்கூட மனிதனுக்கு ஆபத்தும் நோயும் துரத்த ஆரம்பித்துவிடும். வல்லமை வாழும் என்கிற தத்துவத்திற்கு மனிதனின் வளர்ச்சியும், அவன் மற்றவர்களை ஆட்டிப்படைப்பதும் தொடர்ந்து நிகழ்கிறது. இதில் பறவைகள் நோய் தடுப்பதில் பெரும் பங்கு வகிப்பதுடன், மனிதனை எதிரியாகவே பார்க்கிறது. அதனால்தான் எந்த பறவையும் மனிதனின் மீது வந்தமர தயங்குகிறது. ஒரு கொக்கு மாட்டின் கண்களில் அழுக்கை அகற்றுவதையும், ஒரு இரட்டைவால் கருங்குருவி எருமை மீது சவாரி செய்வதையும் பார்க்கும்பொழுது அது மனிதனை அச்சத்துடன்தான் பார்க்கிறது. சிட்டுக்குருவிகள் அருகி வர நமது வாழ்வியல் மாற்றமும் காரணம், தானியங்களை அறுவடை செய்வது முதல், போரடித்தல், தூற்றுதல், புடைத்தல், என திறந்த வெளி செயல்பாடுகளுக்கு மாற்றாக இயந்திர பண்ணைக்கருவிகளின் வருகையும், முற்றத்தில் சாம்பல் கொண்டு பாத்திரம் கழுவும்பொழுது சிதறும் பருக்கைகளை உன்ன வந்த காக்கைகள் தற்போது உணவு தேடி அலைவதையும் பார்க்க முடிகிறது. பிணந்தின்னிக் கழுகுகள் எண்ணிக்கை காடுகளில் குறைந்து வரும் இவ்வேளையில் மனிதனுக்கு காற்றில் பரவும் கிருமிகளால் நோய்த் தோற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சிறு கொசுக்கள் முதல், நோய் பரப்பும் பூச்சிகளை உண்டு வாழும் பறவைகள்தான் வரும் முன் நோய் தடுக்கும் காவலர்கள். அப்படிப்பட்ட பறவைகளை கணக்கெடுத்து காப்பது இன்றைய மனித குல தேவை. ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (Great Backyard Bird Count) என்பது ஒரு சமூக அறிவியல் திட்டமாகும். இது ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வானது கார்னெல் லேப் ஆஃப் ஆர்னத்தாலஜி மற்றும் நேசனல் ஆடுபோன் சொசைட்டி ஆகியவற்றின் ஆதரவில் நிகழ்த்தபடுகின்றது. இந்த நான்கு நாள் நிகழ்வின் போது, உலகெங்கிலும் உள்ள பறவை கவனித்தல் செயல்பாட்டாளர்கள் , அவர்கள் வாழும் பகுதியில் உள்ள பறவைகளின் விவரங்களை கணக்கிட்டு தகவல் அளிக்க அழைக்கப்படுகிறார்கள். இந்த தரவானது ஒரு இணைய இடைமுகம் வழியாக இயங்கலையில் சமர்ப்பிக்கப்படுகிறது. இத்தரவுகளானது அறிவியல் ஆய்வுக்குப் பயன்படுத்த தொகுக்கப்படுகிறது. பார்வையில் படும் பறவைகள் குறித்த தகவல்களை இயங்கலையில் சேகரித்து, நிகழ்நேரத்தில் முடிவுகளைக் காண்பிக்கும் முதல் சமூக அறிவியல் திட்டமாக இத்திட்டம் உள்ளது. ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு முதன்முதலில் 1998 இல் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. இது பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் நடத்தப்படுகிறது. 2013 முதல், இந்த நிகழ்வை சர்வதேச பறவை நோக்கர்கள் கவனித்தனர். இப்போது யார் வேண்டுமானாலும் இந்த நிகழ்வில் பங்கேற்கலாம் பள்ளி மாணவர்களும் இதில் ஈடுபடலாம். இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமாக ஒரே வேளையில் நடைபெறும் ஒரு மாபெரும் நிகழ்ச்சி. உலகம் முழுவதும் உள்ள பறவைகளை ஒரே நேரத்தில் ஒவ்வோர் ஆண்டும் கணக்கிடுவதால் பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களை ஆண்டு தோறும் கண்காணிக்க முடியும். உதாரணமாக பூமிவெப்பமடைவதால் (Global Warming) எந்த அளவிற்கு பறவைகள் பாதிப்படைகின்றன என்பன போன்ற கேள்விகளுக்கு விடையறிய முடியும். பல்லுயிர் பாதுகாப்பிற்கு இத்தகைய நீண்ட கால ஆராய்ச்சி முடிவுகள் பேருதவியாக இருக்கும். நாம் வாழும் இப்பூமியின் சூழலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களை அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக வலசை வரும் பறவைகளை ஓரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும் நாட்களை ஆண்டாண்டு காலமாக கண்காணித்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை (climate change) கணிக்க முடியும். இது போன்ற நாடு தழுவிய கணக்கெடுப்பை ஓரிரு ஆராய்ச்சியாளர்களாலோ, பறவையியலாளர்களாலோ, விஞ்ஞானிகளாலோ நட்த்துவதென்பது முடியாத காரியம். ஆகவே தன்னார்வமுள்ள, இயற்கை பாதுகாப்பில் நாட்டமுள்ள பொதுமக்களின் உதவியும் அவசியம். இதுபோன்ற அறிவியல் துறைகளில் பொதுமக்களின் பங்களிப்பில் நடைபெறும் திட்டங்களை மக்கள் அறிவியல் (citizenscience) என்பர். இந்தியாவில் இது போன்று சிட்டுக்குருவியின் எண்ணிக்கையை கணக்கெடுத்தல் 2012ல் நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இன்னொரு திட்டம் வலசைவரும் பறவைகளின் அவதானிப்பு எனும் திட்டம் பல்வகையான மரங்கள் பூப்பூக்கும், காய்க்கும் வேளைகளை பதிவு செய்கிறது. தற்போது நடைபெறவுள்ளது ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC). இது போன்ற மக்கள் அறிவியல் திட்டங்களுக்குப் பங்களிக்கும் ஒவ்வொருவரும் மக்கள் விஞ்ஞானி (citizen scientist) ஆவர். இக்கணக்கெடுப்பிற்கு மக்கள் விஞ்ஞானியான நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்: 1. இந்தக் கணக்கெடுப்பை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஓரிடத்தில் இருந்து குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்காவது பறவைகளைப் பார்த்து எண்ணி குறித்துக்கொள்ள வேண்டும். 2. பார்க்கும் பறவைகளை அடையாளம் கண்டு அவற்றின் எண்ணிக்கையை கணக்கிடுங்கள். (எ.கா: 5-சிட்டுக்குருவி, 2-காகம், 3 – மைனா). மிகப் பெரிய பறவைக்கூட்டங்களை எண்ணுவது அவ்வளவு எளிதல்ல. எனினும், உங்களால் முடிந்த அளவிற்கு சரியாகக் கணிக்கவும் (எ.கா: சுமார் 20-30 உண்ணிக்கொக்கு, 10-15 தகைவிலான்கள்). 3. நீங்கள் ஒவ்வொரு நாளும் (18-19,20,21 பிப்ரவரி) கணக்கிட்டு எழுதி வைத்திருக்கும் பட்டியல், ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் பறவைகளைப் பார்த்து கணக்கிட்ட பட்டியல் மற்றும் ஒரு நாளில், ஒரே இடத்திலிருந்து, வெவ்வேறு நேரங்களில் பறவைகளைப் பார்த்து கணக்கிட்டு எழுதி வைத்திருக்கும் பறவை பட்டியல் (அல்லது பட்டியல்களை) eBird இணையதளத்தில் சமர்ப்பிக்கவும். eBird இணையதளம் ஒரு வேளை ebird இணையத்தில் நீங்கள் பதிவு செய்யாமல் இருந்தால் உடனே உங்களது பெயரிலோ அல்லது உங்களது நிறுவனத்தின் பெயரிலோ அல்லது குழுவின் பெயரிலோ பதிவு செய்து கொள்ளுங்கள். பறவைப் பட்டியலை இணைய தளத்தில் உள்ளீடு செய்தல் இணைய தளத்தில் உங்களை பதிவு செய்து கொண்டவுடன் நீங்கள் பறவைகளைப் பார்த்து பட்டியலிட்ட இடத்தை கூகுள் வரைபடத்தில் (Google Map or Google Earth) கண்டறியவும். ஒரு வேளை அந்த இடத்தின் அட்சரேகை/தீர்க்கரேகை (latitude/longitude) தெரிந்திருந்தால் அதன் மூலமாகவோ, ஊரின், தெருவின் அடையாளங்களை வைத்து கூகுள் வரைபடத்தில் பறவைகள் பார்த்த இடத்தைக் குறித்துக் கொள்ளவும். நேரமும், நாளும், பறவை கணக்கிடல் முறையும் பறவைகளைக் கணக்கிட எடுத்துக் கொண்ட நேரத்தையும் குறித்தல் வேண்டும். பறவைகளை பார்க்க ஆரம்பித்த நேரம், அதை செய்து முடித்த நேரம், பறவைகள் கணக்கிடலில் பங்கு கொண்டது எத்தனை பேர் முதலிய விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். பறவைகள் கணக்கிட்ட நாளையும், அதைச் செய்த முறையையும் பதிவு செய்தல் வேண்டும். நீங்கள் பறவைகளை பொதுவாக மூன்று வகைகளில் பார்த்து கணக்கிட்டிருக்கக்கூடும். பயணித்துக்கொண்டு (Travelling) – ஓரிடத்தில் நில்லாமல் நடந்து கொண்டோ, அல்லது வண்டியில் பயணித்துக் கொண்டோ பறவைகளைப் பார்த்து கணக்கிடுதல். (எ. கா: பூங்காவிலோ, காட்டுத் தடத்திலோ, ஏரி ஓரமாகவோ நடந்து சென்று அல்லது இரயிலில், பஸ்ஸில், காரில் பயணித்துக் கொண்டு பறவைகளை பார்த்து கணக்கிடுதல்). எவ்விதமாக பயணித்தாலும் பறவை பார்த்தலும், கணக்கிடுதலும் உங்கள் முக்கியப் பணியாக இருத்தல் வேண்டும். ஒரிடத்தில் நின்று கொண்டு (Stationary)– ஓரிடத்தில் நின்று கொண்டு உங்களைச் சுற்றியுள்ள பறவைகளைப் பார்த்து கணக்கிடுதல். (எ.கா: உங்கள் வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு, குளக்கரையில் நின்று கொண்டு, பேருந்திற்காகக் காத்திருக்கும் வேளையில்). தற்செயல் நிகழ்வு (Incidental) – பறவை பார்த்தலும் அதைக் கணக்கிடுதலும் உங்கள் முக்கிய பணியாக இல்லாமல், வேறு வேலை செய்து கொண்டிருக்கும் போதோ, பயணித்துக் கொண்டிருக்கும் போதோ (வீட்டிலிருந்து பள்ளிக்கோ, அலுவலகத்திற்கோ, நடைபழக பூங்காவிற்கோ செல்லும் போது), தற்செயலாக பார்த்த பறவைகளை தோராயமாகக் கணக்கிடல். உங்களது பறவைப் பட்டியலை உள்ளிடுதல் நீங்கள் பார்த்து, கணக்கிட்ட பறவைகளை ebird வலைதளத்தில் உள்ளிட்டு பட்டியலை தயார் செய்து கொள்ளுங்கள். இயற்கையின் மீதும் பறவைகளின் மீதும் கரிசனம் கொண்ட நீங்கள் செய்யப்போகும் இந்த மகத்தான பணியினை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பரிந்துரைத்து அவர்களையும் பங்குபெறச் சொல்லுங்கள். கணக்கிட்டு தகவல் அளிக்க அழைக்கப்படுகிறார்கள். இந்த தரவானது ஒரு இணைய இடைமுகம் வழியாக இயங்கலையில் சமர்ப்பிக்கப்படுகிறது. இத்தரவுகளானது அறிவியல் ஆய்வுக்குப் பயன்படுத்த தொகுக்கப்படுகிறது. பார்வையில் படும் பறவைகள் குறித்த தகவல்களை இயங்கலையில் சேகரித்து, நிகழ்நேரத்தில் முடிவுகளைக் காண்பிக்கும் முதல் சமூக அறிவியல் திட்டமாக இத்திட்டம் உள்ளது. என்று குறிப்பிட்டார் ReplyForward