சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 4 நவம்பர், 2021

Kanavu 101 issue சீனிவாசன் நடராஜன் சிந்தனா முறையின் வெளிப்பாடு – புதினம். மிக நீண்ட பாரம்பரியம் உடைய திராவிடமொழிக் குடும்பத்தில் 'தமிழ்' தொன்மையானது. நமக்கு மிக சுலபமாக கையாளக்கூடியவடிவத்தில்வாசகனுக்கானவிஷயங்களைஎளிமையாகச்சொல்லக்கூடிய வகையில் ஓர் இலக்கிய வடிவம், வகைப்பாடு நமக்குத் தேவையாக இருந்திருக்கிறது.அதன் பொருட்டே நாம் மொழியில் சில மாற்றங்களை அல்லது சில மீறல்களை காலம் காலமாகபரிசோதித்துப் பார்த்திருக்கிறோம். அப்படி தொடர்ச்சியாகசெய்து பார்க்கப்பட்ட வடிவம், உரைநடை. மீறல்களிலிருந்து நாம் புதிய வகைப்பாடுகளைக் கண்டடைந்திருக்கிறோம் அல்லது நமது வசதிகளுக்காக மொழியை எளிமையாகஎழுதிப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளலாம்.தமிழ் மொழியைப் பொறுத்தவரையில் நமக்கு நாவல் வகைமை கிடைத்திருக்கிறது. நாவல்குறித்துத் தேடிப் பார்க்கலாம். 'நாவல்லஸ்' என்ற லத்தீன் சொல்லிலிருந்து விரிந்த வடிவமே 'நாவல்' எனச் சொல்கிறார்கள். நாம்,'நாவல்' என்று தொடங்கி 'நவீனம்' எனவும் பின்னர் 'புதினம்' என்றும் அழைக்கிறோம். பதினாறாம்நூற்றாண்டிலிருந்து'நாவல்'எனும்சொல்பழக்கத்தில்இருக்கிறது.கொலம்பியாகலைக்களஞ்சியத்தில்இதற்கானக்குறிப்பு வருகிறது. 'உரைநடையில்அமைந்தகதை'என்பதுஇதன்பொருள்.'உணர்ச்சி,எண்ணம்,செயல்,அவற்றைவிளக்கிஎடுத்துரைக்கும்தன்மையைக்கொண்டஉரைநடையில்அமைந்தநீண்டகதை'என்றும்சொல்கிறார்கள். 1876-ஆம் ஆண்டு மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய 'பிரதாப முதலியார் சரித்திரம்' தமிழில் வெளிவந்த முதல் நாவலாகக் கருதப்படுகிறது. இராஜம் ஐயர் எழுதிய 'கமலாம்பாள் சரித்திரம்', மாதவையா எழுதிய ''பத்மாவதி சரித்திரம்' இரண்டும் அதன் சம காலத்தவை. 1890-ஆம்ஆண்டுசித்திலெப்பைமரைக்காயர்எழுதிய'அசன்பேசரித்திரம்'இலங்கையில்வெளிவந்தமுதல்நாவலாகச் சொல்லப்படுகிறது. எம்.வி.வெங்கட்ராமனின் 'உயிரின் யாத்திரை' குறுநாவல் வகைக்கு ஒரு சான்றாகச் சொல்லலாம். வை.மு.கோதைநாயகி அம்மாள் பெண் நாவலாசிரியர்களில் முதன்மையானவர். ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார் போன்றவர்கள் ஆங்கில துப்பறியும் நாவல்களைத் தழுவி துவக்ககாலத்தில்தமிழில் நாவல்கள் எழுதினார்கள். அந்த காலகட்டத்தில், கல்கி, இராஜம்கிருஷ்ணன், அகிலன் போன்றவர்கள் சமூக நாவல்களை எழுதினார்கள். மு.வரதராசனாரின் 'கரித்துண்டு' நாவலும் அவ்வகையைச் சாரும். க.நா.சு(கந்தாடை நாராயணன் சுப்பிரமணியம்), சிதம்பர சுப்ரமணியம், எம்.வி.வெங்கட்ராமன், சி.சு.செல்லப்பா, தொ.மு.சி.ரகுநாதன் போன்றவர்கள் தீவிர நாவல் செயல்பாட்டாளர்களாக முன் நிறுத்தப்படுகிறார்கள். அதன்பிறகு தமிழ் நாவல் வகைமையில் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் புதியவகைமையை உருவாக்கி தமிழ் நாவல்களுக்குத் தனித்த அடையாளத்தை உருவாக்கியவர் 'சுந்தர ராமசாமி' என்று சொல்லலாம். சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள், குழந்தைகள் ஆண்கள் பெண்கள் இரண்டும் தமிழின் முதன்மையான பரிசோதனை நாவல்கள் என்று போற்றப்படுகின்றன. வட்டாரம் சார்ந்து எழுதப்படும் புதினங்கள் தற்காலத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட மக்களின் வாழ்க்கையை, கலாச்சாரத்தை அவர்களுடைய வட்டார மொழியில் எழுதப்படுவது என்று இவ்வகைமையை எடுத்துக்கொள்ளலாம். நாகம்மாள், அறுவடை இவ்விரண்டு நாவல்களும் ஆர்.சண்முகசுந்தரம் எழுதிய வட்டார நாவல்களுக்கு உதாரணமாகும். தகழி சிவசங்கரன் பிள்ளையின் செம்மீன், தோட்டியின் மகன் போன்ற நாவல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.மொழிபெயர்ப்புநாவல்களுக்குஇதை உதாரணமாகச்சொல்லலாம். அதைப்போல பிறமொழி நாவல்களைத் தழுவி எழுதப்படும் நாவல்களுக்கு உதாரணமாக மறைமலை அடிகள் எழுதிய 'குமுதவல்லி' அல்லது 'நாகநாட்டரசி' எனும் நாவலைச் சொல்லலாம். ( இவ்விடத்தில் தழுவல் நாவல்கள் வேறு மொழிபெயர்ப்பு நாவல்கள் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.) தமிழ் நாவலாசிரியர்களில் தி.ஜானகிராமன் தனித்து குறிப்பிடத்தக்கவர். அவருடைய மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு, செம்பருத்தி போன்றவை இன்றும் கொண்டாடப்படுகின்றன. மேலும் இவை, உளவியல் சிக்கல்களை கலாச்சார அடையாளங்களோடு அழகியல் மிளிரும் வகையில் எழுதப்பட்ட நாவல்கள் ஆகும். லா.ச.ராமாமிர்தத்தின்'அபிதா' நாவல் நனவோடை நாவல் அமைப்பிற்கு சிறந்த உதாரணமாகும். தமிழில் நாவல் வகைமை தோன்றியதற்கும் அயல் மொழியில் நாவல் வகைமை தோன்றியதற்கும் இரண்டு வேறுபாடுகளைப் பொருத்திப் பார்க்கலாம். தமிழ் உரைநடை தோன்றியதற்கு செய்யுள் வடிவம் பண்டிதமொழியாகஇருந்ததுஒருகாரணம்.தமிழ் மிகவும் தொன்மையான மொழி. அதில் செய்யுள்களும் கவிதைகளும் இருந்தன. 1800 கள் வரையிலும் அது மாதிரியான செய்யுள் வடிவமே இருந்தது என நாம் அறிவோம். அசை, சீர், தளை, தொடை, எதுகை, மோனை போன்றவை இல்லாமல் மக்கள் மொழியில் எழுதுவதும் வாசகர்கள் அதை புரிந்து கொள்வதும் என்ற இயல்பில் கையாளப்பட்ட வடிவம் உரைநடை என்றும், அயல் மொழியில் நாடகத்தின் வடிவத்தில் ஏற்பட்ட சலிப்புத்தன்மை அல்லது புதிய வடிவத்தை தோற்றுவிக்க நினைத்து என்றும் எடுத்துக் கொள்ளலாம். எதார்த்தம், மாய எதார்த்தம், நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்றெல்லாம் அதன் பண்புகள், வகை பிரித்துப் பார்க்கப்படுகின்றன. இராஜம் கிருஷ்ணனின் 'குறிஞ்சித் தேன்' மலைவாழ் மக்களின் வாழ்க்கையை அவர்கள் மொழியிலேயே பேசக் கூடியது. 'கரிப்பு மணிகள்' தூத்துக்குடி அருகில் வாழும் உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பேசுகிறது. சு.தமிழ்ச்செல்வியின் 'அளம்'அப்படியான கீழத் தஞ்சையின் உப்பள தொழிலாளர்களின் வாழ்க்கையை பேசக்கூடிய ஒருநாவலே. கீழத்தஞ்சைவட்டாரம் சார்ந்த'நல்லநிலம்'பாவைச்சந்திரன் எழுதியது. சி.எம்.முத்து, கார்ல் மார்க்ஸ் கணபதிபோன்றவர்களும்தஞ்சைவட்டார மொழியிலேயே எழுதுகிறார்கள். இதை நான் மைக்ரோஅல்லதுநானோவெர்நாகுலர்என்று வகைப் பிரிக்கிறேன். ஒரு வட்டாரத்தின் உள்ளே இருக்கக்கூடிய மிக குறிப்பிட்ட ஒரு பகுதியைச் சார்ந்த ஒரு வழக்கு மொழி இருக்கும். அம்மொழியிலேயே நாவலின் வடிவமும் அதன் போக்கும் இருந்தால் அதை நாம் நானோ அல்லது மைக்ரோ வெர்னாகுலர் என்று குறிப்பிடுகிறோம். உதாரணமாக,கீழை.கதிர்வேலன்பேசும்பொழுது நாம் கவனித்து கேட்டிருந்தால், அது தஞ்சை வட்டாரத்தில் திருத்துறைப்பூண்டியிலிருந்துநாகப்பட்டினத்திற்குள் இருக்கக்கூடிய பேச்சுமொழியாக இருப்பதைபுரிந்துகொள்ளலாம். கீழையூர் மற்றும்சில ஊர்களில் வழக்கில் இருக்கக்கூடிய மொழியில் அவர் பேசுவதுநாகப்பட்டினத்தில்இருந்து அவர் சிங்கப்பூரில் குடியேறி பலவருடங்கள்ஆன போதும்வட்டார மொழிஅவரிடம் மாறிவிடவில்லை. அந்தக் குறிப்பிட்ட வட்டார வழக்கு, தஞ்சாவூர் என்றவட்டாரத்திற்குள்ளேஇருக்க கூடியகீழத்தஞ்சைவட்டாரத்தினுடைய தனித்த அடையாளம். இதை தஞ்சாவூர்பகுதிகளில் வாழ்பவர்கள்சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள முடியும். கும்பகோணம் அருகில் அந்தபேச்சுவழக்குவேறாகவும் தஞ்சாவூர் பகுதிகளில் வேறாகவும் பட்டுக்கோட்டை அறந்தாங்கி புதுக்கோட்டை பகுதிகளில் வேறாகவும் இருக்கும். திருத்துறைப்பூண்டி நாகப்பட்டினம் பகுதிகளில் அவ்வழக்கு மொழிவேறாக இருக்கும். எனவே தஞ்சை என்பதை ஒரு வட்டாரம் என்று வைத்துக்கொண்டால் அதற்குள்ளேயே தனித்தனியான வழக்கு மொழிகள் வெவ்வேறாக இருக்கும். அதையே நாம் நாவல்களுக்கும் ஒரு புதிய வகைப்பாடாக சொல்ல வேண்டி இருக்கிறது. இது எல்லா வட்டார மொழிகளுக்கும் பொருந்தும். உதாரணமாக, கொங்கு வட்டாரத்தில் சண்முகசுந்தரம் எழுதி இருந்தாலும் அதனை பெருமாள்முருகன் வெரோன்றாக பெரிதும் கையாள்கிறார். கேரளா என்று நாம் எடுத்துக் கொண்டால் வட கேரளம் தென் கேரளம் என ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை உணர முடியும். ஒரிசாவிலும் இதை நாம் பார்க்கலாம். இதனை ஒருவகைமாதிரியாக முன் வைக்கிறோம். பொன்நீலனின்'கரிசல்', கி.ராஜநாராயணனின் 'கோபல்ல கிராமம்', ஹெப்சிபா ஜேசுதாசின் 'புத்தம் வீடு' ஆகியவை வட்டார நாவல்களுக்கு ஓர் உதாரணம். தஞ்சை பிரகாஷின் 'கரமுண்டார் வீடு' சமூக நாவல்களில் தனித்தன்மை மிக்கது. இந்நாவல் முற்றிலும் வேறு ஒரு மொழியில் இருக்கும். ஏனென்றால் அவர் கத்தோலிக்க கிறிஸ்தவராக இருந்து, பெரிய பெரிய அதிகாரிகளின் கலாச்சாரம், பண்பாடு, மொழியில் வளர்ந்தவர். அந்த பின்புலத்திலிருந்து எழுதியிருப்பார். அவர் ஒரு மிகப்பெரிய பாய்ச்சலை மொழியிலும்செய்து காட்டியிருப்பார்.'மீனின் சிறகுகள்' நாவலைப் படித்தால் தெரியும். ஒட்டுமொத்தமாக தஞ்சை நிலப்பரப்பில் அவரை பொருத்திப் பார்க்க முடியாது. அதனால் சின்ன சின்ன வகைப்பாடுகளில் அதற்குள்ளேயே சிலவகைப்பாட்டில் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆறுமுக நாவலர் உரையாசிரியராக பேச்சு மொழியில் உரைநடையை அமைத்தார். அவர் மறைந்த 1879 ஆம் ஆண்டிற்குசற்றுமுன்னே முதல் உரைநடை நாவலும் வெளிவந்தது, ஒருதற்செயல். 'புதினம்' என்ற நாவல் இலக்கியத்தைப் பற்றி தொல்காப்பியத்தில் தேடினால், "பாட்டிடை வைத்த குறிப்பி னாலும் பாவிடை எழுந்த கிளவியானும் பொருளோடு புணர்ந்த நகைமொழி யானும் பொருளோடு புணர்ந்த பொய்ம்மொழி யானும் உரைவகை மொழியே நான்கென மொழிப" எனும் ஒரு குறிப்பு இருப்பதை நாம் எடுத்துக் கொள்ளலாம். சிலப்பதிகாரத்திலேயே உரைநடை ஆரம்பித்ததாக சில தமிழறிஞர்கள் நமக்கு எடுத்துரைக்கிறார்கள். சேஷய்யங்கார், நாவல் முன்னுரையில்"இது பொய்ப்பெயர் பூண்டு மெய்ப்பொருள் காட்டும்" என்று குறிப்பிடுகிறார். மாயூரம் வேதநாயகம் பிள்ளை 'பிரதாப முதலியார் சரித்திரம்' என்ற நாவலின் முன்னுரையில் நாவலை "வசன காவியம்" என்று குறிப்பிடுகிறார். ஆர்.எஸ்.நாராயணசாமி ஐயர் "இனிய இயல்பான நடையில் சாதாரணமாய் யாவரும் அறியும் வண்ணம் பிரகிருதியின் இயற்கை அமைப்பையும் அழகையும் அற்புதங்களையும் ஜன சமூகங்களின் நடை, உடை, பாவனைகளையும், மனோ, வாக்கு, செயல் என்னும் திரிகாரணங்களாலும், மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள எண்ணிறந்த வித்தியாசங்களையும் பிரத்தியட்சமாய் உள்ளபடி கண்ணாடி மேல் பிரதிபிம்பம் காட்டுவதே நாவல்" என்று சொல்கிறார். தமிழ் நாவல்இலக்கியத்தைமூன்றுகட்டங்களாகபிரித்துக் கொள்ளலாம். மாயூரம்வேதநாயகம்பிள்ளைகாலத்திலிருந்து1910 வரை முதல் காலகட்டம் என்றும் அதில்எஸ்.எம்.நடேசசாஸ்திரி, பி.ஆர்.ராஜம்ஐயர், சு.வை.குருசாமிசர்மா, ஆ.மாதவையாமுதலியோரைமுதல் காலகட்டமாகச்சொல்லலாம். இரண்டாம் காலகட்டம் 1940 வரை. மூன்றாம்காலகட்டம் 1940 இல்தொடங்கி இன்றுவரை எடுத்துக் கொள்ளலாம். கிட்டத்தட்ட மணிக்கொடி எழுத்தாளர்களுக்கு பிறகான என்றுதான் நாம் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அங்குதான் தீவிரத்தன்மை, வணிகம் என்று எழுத்து இரண்டாகப்பிரிகிறது. நாம் தீவிரத்தன்மைஎன்றபோக்கில் நின்று இதைப் பேசிப் பார்க்கலாம்.ஜெயகாந்தனின்' ஒருமனிதன் ஒருவீடுஒருஉலகம்', லெட்சுமியின் 'பெண்மனம்','மிதிலா விலாஸ்', இந்திராபார்த்தசாரதியின் 'குருதிப் புனல்', பாமாவின் 'கருக்கு', வண்ணநிலவனின்'கடல் புறத்தில்', சுகுமாரனின் 'பெருவலி', ஆதவனின்' என்பெயர் ராமசேஷன்', கரிச்சான்குஞ்சுவின் ' பசித்தமானுடம்'இப்படி இந்தபட்டியலின்நீளம்வெகுஅதிகம். அசோகமித்திரன், சு.சமுத்திரம், விட்டல் ராவ், தமிழவன், நாஞ்சில்நாடன், தோப்பில்முகமதுமீரான், தேவகாந்தன், சுப்பிரபாரதிமணியன், பாவண்ணன், இமயம், கோணங்கி, சாரு நிவேதிதா, சு.வேணுகோபால், ஜோடிகுரூஸ் என்று இப்பட்டியல் நீண்டு கொண்டே போகும். பா.சிங்காரம், நகுலன், சா. கந்தசாமி, ஜி.நாகராஜன், சம்பத், பூமணி, பிரேம் ரமேஷ், ராஜ் கெளதமன், சோபாசக்தி, யூமாவாசுகி, பா. வெங்கடேசன் என்றும் பட்டியலிடுவார்கள். இதில் தீவிரத்தன்மை எழுத்துக்குள் யாரெல்லாம் செயல்பட்டிருக்கிறார்கள், நாவலை புதிய கோணத்தில் அணுகியிருக்கிறார்கள், புதிய கதையாடல்களை கருத்துக்களை சொல்லிப் பார்த்திருக்கிறார்கள் என்றகோணத்தில்இப்பட்டியலை எடுத்துக்கொள்ளலாம்.இராஜம் கிருஷ்ணன் மக்களிடம் நேரடியாக பேசுவதுபோல் அமைத்துக் கொண்டிருப்பார். அதைப் போலஎம்.ஜி.சுரேஷ் கோட்பாடுகளுக்காக நாவல்கள் எழுதினார். சுப்ரபாரதி மணியனின் நாவல்களும் கோட்பாடு சார்ந்த நாவல் முயற்சியே. இப்படி, தமிழ் நாவல் உலகில் பலபுதுமைகள்நடந்தேறியிருக்கின்றன. கிருத்திகாவின் நாவல் உலகம் நேரடிகளஆய்வின்மூலம்எழுதப்பட்டது. 'நேற்றிருந்தோம்', 'புகை நடுவில்'போன்றவைஅவருடைய குறிப்பிடும் படியான நாவல்கள். இராஜாஜியின்'திக்கற்ற பார்வதி'வாசிக்கப்பட வேண்டிய நாவல். வணிகஎழுத்துக்குஒருபட்டியல் போட்டால்அதில் கல்கி, சாண்டில்யன், தேவன், நா.பார்த்தசாரதி போன்றவர்களைச்சொல்லலாம். கொத்தமங்கலம்சுப்பு வணிகஎழுத்தில்குறிப்பிடத் தக்கவர். அவருடைய 'தில்லானா மோகனாம்பாள்'புதினம் வணிகஎழுத்தில்பிரபலமாகப்பேசப்பட்டது. பிற்காலத்தில் சாவி, பாலகுமாரன், சிவசங்கரி, இந்துமதி, வாசந்தி, ரா.கி.ரங்கராஜன், சுஜாதா போன்றவர்களைச்சொல்லலாம்.பொழுதுபோக்குஅல்லதுவணிகஎழுத்தில்வாசிக்க வேண்டிய நாவல்கள் என்று பார்த்தால், உமாசந்திரனின்'முள்ளும் மலரும்', ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்', புஷ்பா தங்கதுரையின் ' ஒருஊதாப்பூகன் சிமிட்டுகிறது', இந்துமதியின்' தரை இறங்கும் விமானங்கள்', சாவியின் ' வாஷிங்டனில்திருமணம்', தேவனின்' மிஸ்டர்வேதாந்தம்' என்று ஒருபட்டியலைச்சொல்லலாம். குறிப்பாக நூற்றாண்டுகளாய் எழுதப்பட்டு வரும் புதின எழுத்தாளர்களுள் ஜெயமோகன், பெருமாள் முருகன் ஆகியோர் தவிர்க்க இயலாதவர்கள். ஏனென்றால் இருவரும் வெவ்வேறு கருத்தாக்கத்தில், அறம் வேண்டும் என்று சொல்வது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் பார்த்தால் மக்கள் வாழ்வுஎன்று, பெருமாள் முருகன். இன்றைய காலகட்டத்தில் ஷர்மிளாசயித், சல்மா, அ.வெண்ணிலா, சைலஜாபோன்றவர்கள் நாவல் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். எஸ்.செந்தில் குமார், அபிலாஷ் சந்திரன், 'சுளுந்தி' எழுதிய முத்து நாகு துவங்கி, சரவணன் சந்திரன், கார்த்திக் பாலசுப்ரமணியன், விநாயக முருகன், கார்ல் மார்க்ஸ் கணபதி போன்றவர்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.நான் வாசித்த வரையில் என்னுடையபுரிதலின்வழிமாணவர்களாகியஉங்களுக்கு நாவல் வாசிப்பு, வரலாறு என்பதைச்சுருங்கச்சொல்லிப் பார்த்திருக்கிறேன். கதை சொல்லல் என்பதுதமிழின்எழுத்துமொழிக்கு முந்தையச்செயல். எழுத்தாணிபிடித்து எழுதியவர்கள்ஓலைச் சுவடியில்புள்ளி வைத்தால் ஓட்டை விழுந்து விடும் என்பதற்காகபுள்ளி இல்லா எழுத்துஇருந்தகாலமும் உண்டு. பைபிள்கதைகள் காகிதத்தில்அச்சடிக்கப்பட்டபிறகு தமிழ் மொழியின்உரைநடைவேறுவடிவம் பெற்றது. இப்படிஉரைநடையில், கட்டுரை, நாவல், சிறுகதைஎன்றவடிவங்கள்,கூறல் என்றமுறையிலிருந்துஎழுத்துஎன்றமுறைக்கு வடிவம் பெற்ற பிறகு, நாவல் பலவடிவச்சோதனைகளைசெய்து பார்த்திருக்கிறது.நாவல் எழுதுவதுபற்றிஎன்னுடையஅனுபவத்தைஉங்களோடுபகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். லைப்ரரியன்எஸ்.ஆர்.ரங்கநாதன் பிறந்த ஊர்தான் என்னுடைய ஊர். ஊரில்லைப்ரரி இருந்தது ஆனால் இன்று அது அரசு கட்டிடத்தில் இயங்குகிறதா எனத்தெரியவில்லை. வாடகை கொடுக்காமல் அவ்வப்போது இடத்தை மாற்றிக் கொண்டு புத்தகங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு சில புத்தகங்கள் தெருவில் கிடந்ததைக் கூடப் பார்த்திருக்கிறேன். இவ்வாறு பல நிகழ்வுகள் ஊரில்நடந்தேறி இருக்கிறது. எஸ்.ஆர்.ரங்கநாதன் பிறந்த ஊரிலேயே அன்று அரசு கட்டிடத்தில் நூலகம் இல்லை. இப்பொழுது இருக்கிறதா என தெரியவில்லை. அந்த நூலகத்தில் தான் புத்தகம் அடுக்கி கொடுத்துக்கொண்டு வாசிக்க ஆரம்பித்தேன். புத்தகங்களை படிக்கவும் ஆரம்பித்தோம். அப்பொழுதுதான் புத்தகம் எழுதுபவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கம்யூனிச இயக்கத்திலிருந்து இரண்டு நபர்கள் கதை எழுதுவதைப்பற்றிபேசிக்கொண்டிருப்பார்கள், நாங்கள் கேட்டுக் கொண்டிருப்போம். சில வருடங்களுக்குப் பிறகு நான் 11ஆம்வகுப்போ 12ஆம் வகுப்போ படிக்கும் பொழுது எல்லோருக்கும் வருவது போல எனக்கும் காதல் வந்தது, அப்பொழுது நானும் கவிதை எழுதினேன்.அப்படித்தான் நான் காதல் கவிதைகளில் தொடங்கினேன். பின்னாளில் 1991- இல்அக்கவிதைகளைத் தொகுத்து'நோட்புக் கவிதைகள்' என்று வெளியிட்டேன். இவ்வாறாகஎன்னுடையதனிப்பட்டநாட்கள் போய்க்கொண்டிருந்த காலகட்டத்தில் திருப்புமுனையாக,ஜேஜேசில குறிப்புகள் வாசித்த பிறகு, சுந்தர ராமசாமியை சந்திப்பதற்கு நாகர்கோவிலுக்கு டிக்கெட் எடுத்து கவிஞர் ரவி சுப்ரமணியத்தையும் உடன் வரச் சொல்லி அழைத்தேன். அவர் என்னைக் கடுமையாகத் திட்டினார்."'காகங்கள்' தொகுப்பு வந்துள்ளது. அதை வாங்கி படித்துவிட்டு வா!" என்று கூறினார். நான் சிறுகதைகளில்பெரிதும் ஆர்வம் இல்லாதவனாகஇருந்தேன். இருப்பினும்'காகங்கள்'புத்தகங்களை வாங்கி வந்தேன்.ஒருநாளில்படித்துமுடிக்கக்கூடியபுத்தகம்அல்ல,மிகப்பெரியது. ஒருவழியாக 'காகங்கள்' தொகுப்பை படித்து முடித்து விட்டேன். மிகவும் சுவாரசியமாக இருந்தது மேலும் சுராவை எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவரை நாவல்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த நான் முதன்முறையாக ஒரு சிறுகதைத் தொகுப்பை படித்தேன். பின்னர் இருவரும் சுந்தர ராமசாமியைச் சந்திக்க நாகர்கோவிலுக்கு இரயிலில் பயணப்பட்டோம். அவரது வீட்டிற்கு சென்றபோதுதான் தெரிந்தது, நாங்கள் வந்த இரயிலுக்கு எதிர் ரயிலில் சுந்தரராமசாமி கோயம்புத்தூருக்குப் பயணப்பட்டு இருக்கிறார் என்று. பின்னர் இருவரும் நாகர்கோவிலை சுற்றி பார்த்துவிட்டு ஊர் திரும்பினோம். பிறகு ஒருநாள் கடிதம் போட்டுவிட்டு அவரை சென்று சந்தித்தோம். சுந்தர ராமசாமி, ரவி சுப்பிரமணியத்திடம் நாவல் எழுதுங்கள் என்று சொன்னார். இதுகுறித்து வெகுநேரம் கலந்துரையாடினார்கள். பிறகு, நான், சுந்தர ராமசாமி, ரவி சுப்பிரமணியம் மூவரும் ஒரு ஆட்டோ எடுத்துக்கொண்டு நாகர்கோவிலைச் சுற்றிப் பார்த்தோம். அது ஒரு மகிழ்ச்சியான தருணம். அச்சமயம் நான் ஒரு ஓவியன் மட்டுமே, ஒரே ஒரு கவிதைத் தொகுப்பு மட்டும் வெளியிட்டிருந்தேன். சிறிது காலம் கழித்து, எழுதலாம் என்ற முடிவுக்கு வந்தேன். பலஆண்டுகளுக்குப் பிறகு நான் பார்த்த அல்லது எனக்குத் தெரிந்த மரணங்கள் குறித்து எழுதலாம் என ஆரம்பித்து 'விடம்பனம்' நாவலை எழுதினேன். விடம்பனத்தை அடுத்து'தாளடி', 'காகிதப்பூ' என இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறேன். இதற்கிடையில் பல கட்டுரைகளும் எழுதி, அவை 5 கட்டுரைத் தொகுப்புகளாக வந்திருக்கிறது.'நம்மோடுதான்பேசுகிறார்கள்','அச்சப்படத்தேவையில்லை', 'கனவுவிடியும்','புனைவு','கலை அல்லதுகாமம்'என்பன அவற்றின்தலைப்புகள். நாவல் எழுதுவது தொடர்பாக என்னிடம்தெளிவுஇருந்தது. துவக்க காலத்தில் இருந்தே எழுத்துப் பயிற்சிஇருந்ததால், நான் எழுத வந்தபோதுசுலபமாக இருந்தது. வெங்கட்சாமிநாதன் டெல்லியில் ஓய்வு பெற்று மெட்ராஸில் மடிப்பாக்கத்தில் குடிவந்த நாளிலிருந்து அவர் மெட்ராசில் இருந்து பெங்களூர் சென்ற நாள் வரை தினமும் சாயங்காலம் அவருடன்தான் என்னுடைய பொழுதுகள் கழிந்தன.அது எனக்கு மிகப் பெரியபயிற்சியாக இருந்தது. மாணவர்களாகிய நீங்கள், மனதில் என்னவெல்லாம் நினைக்கிறீர்களோ அதை நாவல் என்றோ கதை என்றோ கவிதை என்றோ நினைக்காமல் தொடர்ச்சியாக தினமும் ஒரு பத்து பக்கம் எழுதிக்கொண்டே இருங்கள். அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஓராண்டு கழித்து அதனை எடுத்துக்கொண்டு உங்களுக்கு தெரிந்த நண்பர், உங்கள் ஊரில் இருக்கும் எழுத்தாளர், உங்களுடைய பள்ளியில் உடன் பயில்பவர்கள், வேலை பார்க்கும் இடத்தில் எதிர் வீட்டில் யாரிடமாவது கொடுத்து படித்துப் பார்க்கச் சொல்லுங்கள். அதன் பிறகு முடிவு செய்யுங்கள் எது வேண்டும் எது தேவை எது தேவையில்லை எது கதையாக உள்ளது எது கதையாக இல்லை எது கவிதையாக உள்ளது எது கவிதையாக இல்லை என்று முடிவு செய்யுங்கள். என்னுடையவாழ்க்கையில்தொடர்ச்சியாகபயணம் செய்து வந்திருக்கிறேன். பயணம் எனக்கு பலஅனுபவங்களைத் தந்திருக்கிறது. அனுபவத்தின்வழிநின்றும், வாசிப்பின்முதிர்ச்சிவழிநின்றும் நம்முடைய சிந்திக்கும் திறன் செயல்படுகிறது. முதலில் எதைப் பார்க்கிறோம், எதை உள் வாங்குகிறோம், எதை எழுத நினைக்கிறோம், அதற்கு எந்தக் கருவியை பயன்படுத்துகிறோம் என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் சிறுகச்சிறுக காட்சியை மொழியாக மாற்றும் கலையை கற்றுக் கொள்வீர்கள். வடிவம் குறித்ததெளிவுஏற்படுவதற்கு மொழியில்ஆழ்ந்த பயிற்சிஇருக்க வேண்டும். மொழியை புரிந்துகொள்வதற்குவாசிப்புஅனுபவம்கைகொடுக்கும். இதனைக் கொண்டு மொழியைக் கையாளும்செய்நேர்த்தியைஅடையலாம். அதில்படைப்பாற்றல்மிகுந்துகாணப்பட, மாணவர்களின்சிந்திக்கும் திறன்சார்ந்தபயிற்சிதேவை. சிந்தனாமுறையும் செய்நேர்த்தியும்இரண்டறக் கலந்து, மொழிஎன்னும்கருவியின்வழிவெளிப்பட்டால், அதை படைப்பு எனக் கொள்ளலாம்.நேரடிபயிற்சியில்சந்திக்க இயலாமையால் உங்களிடம் சுருங்கச்சொல்லி விளக்க முயற்சித்திருக்கிறேன். நம்பிக்கையோடு செயல்படுங்கள்.புதியபடைப்பாளர்களைக்காணஆவலோடு காத்திருக்கிறேன். ( சீனிவாசன் நடராஜன்.