சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 4 நவம்பர், 2021

புதுச்சேரி இலக்கிய நண்பர்கள் பற்றி முன்னர் பல சமயங்களில் நான் எழுதிய 20 கட்டுரைகளை 9 புதுச்சேரி இலக்கிய நண்பர்கள் பற்றி முன்னர் பல சமயங்களில் நான் எழுதிய பல கட்டுரைகளைக்கண்டபோது அவற்றை ஒரு தொகுப்பாக்க எண்ணம் வந்தது..சிலபடைப்புகளையும் சேர்த்துக் கொண்டேன். இணைதளத்திலிருந்து நன்றியுடன் எடுத்துப் பயன்படுத்தி உள்ளேன்..பாண்டிச்சேரி பற்றிய ஒரு வகை ஆவண நூலாக இது வடிவமைக்கப்பட்டு விட்டது இப்படி ..பிரபஞ்சன், மா. அரங்கநாதன் உள்ளிட்டப் படைப்பாளிகள் பற்றி நான் எழுதியவை கிடைக்காமல் போனது வருத்தமே தந்தது, இதில் இடம் பெற்றப் படைப்பாளிகள் : சுந்தரமுருகன்/ புதுவை யுகபாரதி/ராஜ்ஜா/இரா. சம்பத்/. சொ. சேதுபதி/ கி. நாச்சிமுத்து/ பி என் எஸ் பாண்டியன்/ என் ராஜசேகர்/ ரா.ரஜினி/ கி ராஜநாராயணன்/ க.பஞ்சாங்கம்/ பிரதிபா ஜெயச்சந்திரன்/ etc ( முகநூலில் போட வேண்டாம் . பிறகு பார்க்கலாம். ஒரு பத்திரிக்கைக்கு அனுப்பவும் ) ஒரு குத்துப் பருக்கை : சுப்ரபாரதிணியன் அழகு பாண்டி அரசப்பன் சிறுகதைகள் வட்டார வழக்கு இலக்கியம் சார்ந்த புறக்கணிப்பு மனம் பலருக்கு உண்டு .பொதுவான இலக்கிய வகை அம்சங்களில் அக்கறை கொண்டவர்களுக்கு இந்த வட்டார வழக்கு கசப்பாகவே இருக்கும் ஆனால் அவற்றில் இருக்கிற ஜீவனும் மொழிசார்ந்த உள்ளடக்கமும் அந்த வட்டார மக்களின் வாழ்விலும் கவனிக்கப்பட வேண்டியதாகும் அந்த வகையில் இந்தத் தொகுப்பில் அழகு பாண்டி அரசப்பன் தன்னுடைய கதைகளை தேனி வட்டார மொழி சார்ந்தும் அனுபவம் சார்ந்தும் முழுமையாக உள்ளடக்கி வைக்கிறார் தன் கதைகளில் . தன் பெயரை போடுகிற போது தன் சொந்த கிராமம் முத்துலாபுரம் என்று குறிப்பிடுவது கூட அவரின் சிறப்பாக இருக்கும் என்று சொல்லலாம் அந்த வகையில் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் முழுக்க தேனி பகுதி மக்களின் வட்டார வழக்கும் வாழ்வியலும் அவர்களுடனேயே நிறைந்திருக்கிறது அந்தப் பகுதி மனிதர்களின் வாழ்க்கையை சரியாகவே சொல்லி இருக்கிறார் 25 ஆண்டு காலம் அந்த ஊரில் வாழ்ந்தவர். பிறகு திருப்பூருக்கு இடம்பெயர்ந்து வந்து பனியன் தொழிலாளியாக இருந்தவர். இப்போது தேனீர் கடை நடத்தி வருகிறார் ஆனால் 25 ஆண்டுகாலம் அந்த ஊரில் வாழ்ந்த அனுபவங்களும் அந்த மனிதர்கள் சார்ந்த உணர்வுகளும் சரியாக உள்வாங்கிக் கொண்டு இந்த கதைகளை படைத்திருக்கிறார் . இந்தியச்சமூகம் என்பது சாதியப் படிவங்களால் ஆனது. சாதியில்லாமல் ஒரு மனிதன் வாழ்வதில்லை. மதத்தை விட சாதி என்னும் நிறுவனம் கிராமங்களில் புரையோடிக்கிடப்பதை பல கதைகளில் உள்ளீடாகக் கொள்ளலாம்.அதை வெளிப்படையாகச் சொல்லவில்லை அதிலும் பெண்மணிகள் சார்ந்த சித்திரங்கள் அபாரமானவை .புது மணப்பெண் ஊர் கிணற்றில் சென்று நீ எடுக்கிற சம்பவம் முதல் கதையில் பதிவாகியிருக்கிறது அந்த கிணற்று நீரில் தான் அவளின் முதலிரவு பால் கலந்து இருக்கிறது என்ற குறிப்பு கதை முடிகிறபோது அந்த கிராமத்து நீரை அருந்துகிற அனுபவம் ஏற்பட்டு விடுகிறது . தெய்வங்களின் வடிவமும் குணமும் அவை சார்ந்த சமுகத்தின் தேவைகளையொட்டி அமைந்திருப்பதை இந்தக் கதையில் இடம் பெறும் சடங்கு சம்பிரதாயங்களால் அறிந்து கொள்ள முடிகிறது. குடிகார கணவன் சம்பாதிப்பதை எல்லாம் குடிப்பதற்காகவே செலவிடுகிறான். ஆனால் அவன் மீது அவனின் மனைவி அக்கறை கொண்டவள் .அவன் எப்போது வருவான என்று இரவு நேர நேரத்தில் சூடாக சோறு செய்து காத்திருக்கிற அவளைப் பற்றிய ஒரு அற்புதமான சித்திரம் தினக்கூலி கதையில் இருக்கிறது ..தண்டட்டி கதையில் வரும் கிழவி, முதிய வயதான அவள் அவளின் தண்டட்டி எப்படியோ அடமானம் போகிறது ஆனால் அதை மீட்டெடுக்க அவள் நிறைய முயற்சிகள் எடுத்துக் கொள்கிறாள் .ஆனால் அந்த தண்டட்டி குடிகார கணவனின் போதை பழக்கத்திற்கு போகிற போது அவள் நிலையழிந்து போகிறாள் அவளின் சாவு கூட அதன் பொருட்டே நிகழ்ந்துவிடுகிறது , பூர்வீக வீடு கதையில் வரும் பெண்மணி ரசித்து காப்பி குடிப்பது ஆகட்டும் அவள் வாழ்வை அமைத்துக் கொள்வது ஆகட்டும் மிக அற்புதமான உழைப்பால் நிறைந்திருக்கிறது ஆனால் அந்த வீட்டில் அவள் இறந்து போக வீட்டிலுள்ள மரக்கட்டைகள் கூட பணம் ஆகின்றது பிள்ளைகளுக்கு.. .அங்கிருந்த அவரை கால் பந்தல் காணாமல் போகிறது அடுப்பங்கரை உடைந்து போகிறது சிவந்த மண் பானைகளும் காணாமல் போகின்றன .சிதைந்து கூரை இல்லாமல் விடிந்தும் விடியாமல் மழைக்கும் வெயிலுக்கும் வாசனை மாறாமல் குப்பைக்கீரை செடி வளரும் ஒரு விஷயத்தை அழகிய கவிதை போல் சொல்லியிருக்கிறார் .கிராம மனிதர்களை பற்றி சொல்லுகிற போது அவர்களைப் பற்றிய விவரங்கள் துல்லியமாக விவரிக்கப்பட்டு இருக்கின்றன .வியாபாரி துண்டு போட்டு பேரம் செய்கிற வித்தையை சொல்கிறபோது அந்த பேரத்தில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு வகையான வழக்குச் சொற்களும் அவை சார்ந்த அர்த்தங்களும் ஆச்சரியப்படுத்துகின்றன பல கதைகளில் உரையாடல் பலமாக இருக்கிறது. அந்த உரையாடல் முழுக்க ஜீவனுள்ளது. திருப்பமும் பல கதைகளின் உள்ளீடாக இருக்கிறது மாடு விக்கிறவன் ஆடு விற்பனைக்கு போகிற சாசகம் கூட அப்படித்தான் . தேனி சார்ந்த மக்களின் வரலாறும் பல தொன்மங்களும் கதைகளின் ஊடாக சாதாரணமாகவே இடம்பெற்றிருக்கின்றன அப்படித்தான் முத்துலாபுரம் ஊரிலிருந்து இடம்பெயரும் மக்கள் பற்றிய ஒரு வரலாறும் நந்தி சிலை பற்றியத் தொன்மமும் முக்கியமானவை .குழந்தைகளின் உலகமும் கல்வித் தரமும் பல கதைகளில் வந்துபோகின்றன .படிக்காத பையன்களை அடித்து சிரமப்படுத்தும் ஆசிரியர்களிடம் மனிதாபிமான மனம் மேலோங்கி நிற்கிறது ஆசிரியரின் முயற்சி டீக்கடை வேலையில் சேர்த்துவிட அந்த பையனின் மனம் ஒரு வகையில் விடுதலை கொள்கிறது என்பது முதல் மேஜை போன்ற கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது மனிதர்களைப் போலவே அருவமான பொருட்களும் கவித்துவத்துடன் மாறிவிடுகின்றனர். அப்படித்தான் உப்போடை வீடு மற்றும் பூசாரி வீடுகள் அமைகின்றன .அழகு பாண்டி அரசப்பன் காட்டும் மனிதர்கள் அன்பானவர்கள் ..நேசத்தில் மிகுதியானவர்கள் .. அஞ்சாதவர்கள்.. மைக் டெஸ்ட் மணி முதல் பல மனிதர்களை அவர் இப்படித்தான் காட்டுகிறார் .இந்த மனிதர்கள் மத்தியில் ஏற்படுகிற உறவுகளைப்பற்றி கடைசிக் கதை சொல்கிறது அப்பனும் மகனும் உட்கார்ந்து பேசுவதற்கான வாய்ப்பே இல்லாமல் போகிறது . அவர்களின் வாழ்க்கை பற்றி நிறைய சொல்கிறார் அவர் தேநீர் கடையை அண்மைக்காலத்தில் நடத்தி வருகிறார் .அந்த கடையில் நடக்கும் விசயங்களை அடையாளமாக இரண்டு கதைகளில் விவரித்திருக்கிறார் . ஒரு கதையில் வெளியூர் ஆளுக்கு வேலை வாங்கி தருகிற மனிதாபிமான செயல் இன்னொரு கதையில் தேனீர் கடை எப்படி பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கை எண்ணங்களை பிரதிபலிக்கும் இடமாக மாறி இருக்கிறது என்பதை நுணுக்கமாக சொல்லியிருக்கிறார் . டீக்கடை பெஞ்ச் என்பது எல்லோர் மனதிலும் உருவாக்கும் சித்திரங்கள் நமக்குச் சகஜம் .சிறுகதை நோக்கில் அல்லாமல் இயல்பாக எழுதப்பட்டு இருந்தாலும் சில கதைகளில் அவை முடிகிற கவித்துவ எண்ணங்களால் அவை சிறப்பு பெறுகின்றன ..திருடன் வந்து போகிறான் ஊரில் மக்களின் இயல்பு பின்னர் எப்படி இருக்கிறது ,நடவடிக்கை எப்படி இருக்கிறது என்பது பற்றிய சித்திரம் இந்த வகையில் சொல்லலாம் ,அதேபோல உரையாடலில் இடம்பெறுகிற மனிதாபிமான செல்வங்களான மனிதர்களும் அவர்களின் இயல்புகளும் மிகத்துல்லியமானவை. அதை வெளிப்படுத்த உபயோகப்படுத்தும் சொற்கள் விசேசமானவை .அப்படி பேச்சுப் புழக்கத்தில் இருக்கிற சொற்கள் ஆச்சர்யமூட்டுகின்றன அவையெல்லாம் அகராதிக்குள் பொதிந்து வைக்க வேண்டியவை .தேனி மண்ணை சின்னவயதிலிருந்து சுவைத்த மனிதன் கதைகள்சொல்லிச் சொல்லி திளைக்கிற கதைகள் இவை மைக் டெஸ்ட் மணி கதையில் விவரிக்கும் குலுக்க அல்லது குலுக்கை தானியங்களை சேமிக்கிற இடமாக இருக்கிறது அப்படித்தான் தேனி மக்களின் அனுபவங்களையும் பேச்சுவழக்கு உணர்வுகளையும் அழகு பாண்டி அரசப்பன் குலுக்கையாக மாறி எவ்வளவோ விஷயங்களை சேமித்து வைத்திருக்கிறார் அவையெல்லாம் தமிழுக்கு இனியும் வரமாகத்தான் இருக்கப்போகிறது ரூபாய் 150 கவிநிலா பதிப்பகம் திருப்பூர்