சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 4 நவம்பர், 2021

புதியநூல் வெளியீடு ” சிலைகள் என்பது காக்கைகள் எச்சமிட இருக்கும் இடம் போலில்லாமல் அந்த சிலைகளில் இருக்கும் மகான்களின் சிந்தனைகள் , எண்ணங்கள் நட்டைமுறைப்படுத்தலில் அவர்களுக்கு கவுரவம் கிடைக்கும்.திருப்பூரில் அமைய உள்ள தமிழன்னை சிலைக்கு என்னாலான முயற்சிகளையும் உதவியையும் செய்வேன்” என்று திரு . க. செல்வராஜ் ( திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர்- தெற்கு ) சுப்ரபாரதிமணியனின் புதியநூல் ” தொலைக்காட்சி ரிமோட் “ சிறுவர் கதைகள் வெளியீட்டுப் பேசும்போது குறிப்பிட்டார்,. நூலை தனியார் காப்பீட்டுக்கழக அதிகாரி குமார் , எழுத்தாளர் சாமக்கோடாங்கி ரவி ஆகியோர் பெற்றுக்னொண்டனர் 29/10/21 மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு அருகில், திருப்பூர் தலைமை : திரு .சி சுப்ரமணியம் ( மக்கள் மாமன்றம்) தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் ( ஓய்வு ) குமார் சிறப்புரை ஆற்றினார் : “ ஆட்சிமொழியிலும் தமிழ் இங்கு தொடர்ந்து அலுவலக ரீதியாக நடைமுறைப்படுத்தப்படுவது இப்போது தமிழ் நாட்டில் ஆரோக்யமானது . எழுத்தாளர்களை கவுரவப்படுத்த பல விருதுகளை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழில் அர்ச்சனைக்கான ஆணை அமல்படுத்தப்படுகிறது. எல்லா சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற ஆணை நடைமுறைப்படுத்தப்படுவது சமூக சீர்திருத்த நடவடிக்கையாகும், நீதிமன்ற மொழியாக தமிழ் அமல்படுத்தப்பட வேண்டும் “ என்றார் மக்கள் மாமன்றம் நிர்வாகிகள் ராஜா, பாண்டியராஜன், மற்றும் லயன் ராதாகிருஷ்ணன், எழுத்தாளர்கள் என பலர் திரண்டு கலந்து கொண்டனர் / சுப்ரபாரதிமணியன் 94861 01003 )