சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 4 நவம்பர், 2021

காகிதப்பூ : சீனிவாசன் நடராஜன் நாவல் / சுப்ரபாரதிமணியன் ரஜினியாகவே மாறும் ரஜினி ரசிகனும் ஓவியத்தொன்மமாக மாற முயற்சிக்கும் இலக்கிய, ஓவிய ரசிகனும் இந்த நாவலில் முதன்மைக்கதாபாத்திரங்கள். ரஜினி காந்த் போல் ஸ்டிலாக எரியும் சிகரெட்டை தூக்கி எறிந்து வீடு தீப்பற்றிக்கொள்வதும் மரம் வெட்டி கட்சி விவகாரகளுக்காக அதை செலவு செய்வதும் உட்ச பட்சமா செயல்கள். இந்த வகையில் .ரஜினி ரசிகனுக்கு ரஜினி ஒரு எழுத்தாளன் மூலமாகவே அறிமுகம் ஆகிறான் . எழுத்தாளனின் பாக்யம் ( பாலகுமாரன் அந்த எழுத்தாளர்) ரஜினி கட்சி ஆரம்பிக்காத போது உயிரை மாயத்துக்கொள்கிறான் முதலாமவன். இரண்டாமவன் வாழ்க்கையை ரசித்து தொடர்கிறான் வாழ்க்கையின் அபத்தங்களைச் சுட்டிக்காடியபடி. இதில் ஆசிரியரின் சுய சரிதம் சார்ந்தக் குறிப்புகள் முக்கியமானவை. புனைவு இல்லாதத் தன்மையுடன் சரித்திர , அரசியல் விசயங்களின் காலப் பதிவாக இருக்கிறது.. ஓவியனின் அழகியல் பரிபாஷை ( பக்கம் 101 ) மொழி மற்றும் கலை வாழ்வு ( பக்கம் 109 ) குறித்த குறிப்புகள் நல்ல அலைசலாகவும் பல இடங்கள் அமைகின்றன ஓவியர்களின் வாழ்க்கையை சில நாவல்கள் பதிவு செய்திருக்கின்றன.இந்நாவலும் ஓவியமாக உருவெடுக்கிறவனின் பரிமாணமும் அதன் நோக்கமுமாக வெளிப்பட்டிருக்கிறது ரங்குலாகலா போன்ற தெலுங்குத் திரைப்படங்களில் காட்டப்படும் வெகுஜன ரசனை ஓவியன், நவீன ஓவியன் இருவருக்குமான சமகால , வேறுபட்ட உலகங்கள் பற்றிய அம்சங்கள் தமிழில் சொல்லப்படவில்லை இதுவரை காகிதப்பூ தலைப்பு நல்ல குறியீடு. ரஜினி ரசிகனுக்கு மிகவும் பொருத்தம் .வாழ்க்கை பற்றிய அலசலின் போதும் ( பக்கம் 20 ) ஐரோப்பிய கலைப்பாடத்தில் ( பக்கம் 43) மற்றும் ரஜினி ரசிகன் காகிதப்பூ அலங்காரம் செய்கிற தொழில்காரனாக மாறி மணம் வீசாமலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்வது தலைப்பை நியாயப்படுத்தும் நல்ல சமாச்சாரங்கள் பழையகாலத்து ரஷ்ய புத்தகங்களை ஞாபகப்படுத்தும் முழுப்பக்க உள் ஓவியங்கள் , கெட்டியானத் தாள், தயாரிப்பில் அக்கறை இதுவெல்லாம் இந்த நூலுக்கு கனம் சேர்க்கிறது. பின்நவீனத்துவ மொழியில் அக்கறை கொண்ட ஆசிரியரின் இந்த நாவல் நேர் கோட்டுத் தன்மையுடையதே. சமகால விசயங்களை படைப்பு மூலம் அலசும் நாவல் இது . ( ரூ 250 எதிர் பதிப்பகம், பொள்ளாச்சி வெளியீடு ) சுப்ரபாரதிமணியன் 2018 ஆம் ஆண்டில் வியட்நாம் நாட்டுக்கு இந்திய கலாசார நட்புறவுக் கழகத்தின் சார்பாக சென்ற அனுபவம்