சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 4 நவம்பர், 2021

சாத்கர் அரிசிக்கா நாவல்: சிந்து சீனு ஆசிரியர் சுப்ரபாரதிமணியன் மனிதர்களின் உலகில் எதிர் எதிரான இணைகளின் வகையினர் நிறைந்து காணப்படுகிறார்கள். அன்புக்கு எதிரானது அன்பு இல்லாதது என்றில்லாமல் அதிகாரத்துவம் என்பதே முன் நிற்கிற இந்த அதிகாரத்துவம் கொண்ட மனிதர்களை முரணாக எப்போதும் தன் படைப்புகளில் முன் நிறுத்துபவர் சிந்து சீனு அவர்கள். சுற்றுச்சூழலை மனதில் வாங்கிக்கொண்டு ஓரளவு இயற்கையோடு இணைந்து வாழ ஆசைப்படும் சாமான்ய மனிதர்களையும் அந்தச்சூழலைக் கெடுக்கும் அதிகாரம் மிகுந்த மனிதர்களையும் அவர் இந்நாவலில் காட்டுகிறார். முந்தைய நாவலில் சாதாரண மனிதன் ஒருவன் வாழ்க்கைக் காற்று அடித்துச் செல்லும் திசையில் செல்லும் சருகுகள் போல் அடித்துச் செல்லப்படும் நிகழ்வுகளால் ஒருவனைக்கதாநாயகனாக்கியிருந்தார், இந்த நாவலில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் என்ற சூறாவளி தூக்கி அடித்துத் துரத்தும் மனிதர்களை அவர் வாழும் பகுதியை மையமாகக் கொண்டு சொல்கிறார். சமூக பொருளாதார , அரசியல் சூழல்களில் சிந்து சீனு தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருப்பதன் அடையாளமாய் இந்த நாவலின் நிகழ்வுகள் இருக்கின்றன. பல கதாபாத்திரங்களுடன் பல நிகழ்வுகளுடன் சிந்து சீனு அவர்களை சம்பந்தம் கொண்டுப்பார்க்கலாம். சாதீய அடுக்கு நிலை தரும் புறக்கணிப்பும் அதிகாரமும் வன்முறையும் விளிம்பு மனிதர்களை சாதாரணக்குடிநீர் பிரசினைக்காக உடலால் சிரமம் தந்து மருத்துவமனைக்கு அனுப்புகையில் அவர்களோடு சேர்ந்து பலரும் அலைகிறார்கள்.இன்னொரு புறம் நாவல் முழுக்க சுற்றுசூழல் பிரச்சினைகள் காரணமாக சக மனிதர்கள் சிதைந்த உடலோடும் வியாதிகளோடும் அலைவதுதான் இந்த நாவல். “ ஒவ்வொரு நாளும் பிணத்தின் முகத்தில் முழிக்கும் சூழல் “ என்று இதில் வரும் கதாபாத்திரம் ஓர் இடத்தில் சொல்கிறது. நச்சு கலந்த வேதியப்பொருட்கள், கழிவுகள், தோல் தொழிற்சாலை, வஜ்ஜிரத் தொழிற்சாலை, பீடிக்கம்பனிகள் என்று பலவித விசயங்கள் மனிதர்களை நடமாடும் பிணங்களாக்குகின்றன. நாவலில் அடிக்கடி வந்து போகும் குட்டி யானை என்ற வாகனம் போல் சாவின் குறியீடாக எருமைகளும் நிறைந்திருக்கின்றன செழுமையைபறிகொடுத்து நிற்கும் அந்த பூமியின் ஒரு பகுதியை வளமாக்கி அந்த மண்ணில் விளைந்த அரிசியை ஊரே சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் வெளிநாடு போய் படித்து விட்டு வரும் நாயகி ( அவளும் விளிம்பு நிலைப்பெண்தான், எதேச்சையாகக் கிடைத்த வெளிநாட்டுப்படிப்பு வாய்ப்பு அவளை வெளிநாட்டிலேயே தங்கி இருக்க வற்புறுத்தினாலும் சொந்த ஊருக்கு வந்து மக்களுடன் இணைந்து வாழ்கிறவள்) பூமியை மகளாக சுவீகாரம் செய்து கொண்டு தாயாகி அவளின் கண் எதிரே மலடான அந்தப்பகுதி மண்ணை என் வம்சம் என் வாரிசு என்று நினைத்து மீண்டும் வளமையான பூமியாக்கும் நேர்மறைக்கனவு நிறைவேறுவதை இந்நாவல் சொல்கிறது. அதிகாரம் ஒருவனிடமோ, சமுதாயத்தின் ஒரே மட்டத்திலோ இருப்பதில்லை அது பொருட்கள், மனிதர்கள் கருத்துக்கள் ஆகியவற்றின் வழியாக பண்பாட்டில் திரும்பத்திரும்ப சுற்றி வருவதை அந்தப்பகுதியின் வரலாறு, தொன்மங்கள், செய்திகள் மூலம் காட்டுகிறார். சமகால வரலாற்றை எழுதுவதென்பது நிகழ்வுகளை மட்டும் சொல்லாமல் அவற்றை விமர்சிக்கவும் பகுப்பாய்வு செய்யும் முறையில் கதையாடலை அமைத்திருக்கிறார் சிந்து சீனு. நாவலுக்குறிய விரிவான வர்ணனைகள் தவிர்க்கப்பட்ட உத்தி வாசகனை தொடர்ந்து வாசிக்க ஏதுவாகலாம் எந்த வரலாறும் அக வய நிலையிலிருந்தும் விலகியிருக்க முடியாது.அது பண்பாட்டு அசைவுகளாக மாறியிருப்பதை சிந்து சீனுவின் படைப்புகள் தொடர்ந்துக் காட்டுகின்றன. KANNAVU MAGAZINE’ / International Tamil magazine Editor : SUBRABHARATHIMANIAN