சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 4 நவம்பர், 2021

சுப்ரபாரதிமணியனின் ” மறைந்து வரும் மரங்கள் - பி ஆர் நடராஜன் சுற்றுச்சூழல் நூல்களை எழுதுவதில் அக்கறை கொண்டவர் சுப்ரபாரதிமணியன். அவரின் சாயத்திரை, புத்துமண் போன்ற நாவல்கள் , சூழல் அறம், மேக வெடிப்பு, மூன்றாம் உலகப்போர் கட்டுரை நூலகள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கட்டுரை நூல்கள் இதைச் சொல்லும். அந்த வரிசையில் இந்நூல் எழுதிய அனுபவத்தை இப்படிச் சொல்கிறார். : ” பசுமை விகடனின் “ ஒரு நாள் விவசாயி ” நிகழ்ச்சிக்கு மது ராமகிருஷ்ணனின் பொள்ளாச்சி இயற்கை வேளாண்மைப்பண்ணைக்குச் சென்றிருந்த போது காலை, மதியம் உணவு வகைகளை திருவோட்டில் வழங்கினார். நண்பர்கள் ஒரு விதகக்கூச்சத்தால் நெளிந்தனர். பிறகு திருவோடு மரத்தைக் காட்டியவர் இது அழிந்து வரும் மரம் என்றார். அதன்பின்னதான அவருடனான பேச்சில் அழிந்து வரும் மரங்கள் பட்டியலைத் தந்து எழுதச் சொன்னார். சில புத்தகங்கள், இணையதளச் செய்திகள் என் தேடலுக்கு உதவி செய்தன .” இதில் மறைந்து வரும் 30 மரங்கள் பற்றிய செய்திகள் உள்ளன.தாவரவியல் செய்திகள் , மருத்துவச்செய்திகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இலக்கிய ரீதியான தகவல்கள் இதன் சிறப்பம்சம். சுப்ரபாரதிமணீயன் ஒரு எழுத்தாளர் என்ற வகையில் பல நவீன கவிதைகளை ( நாஞ்சில் நாடன், கல்யாண்ஜி, தேவதேவன் ) மற்றும் சங்க இலக்கியப் பாடல்களை மேற்கோள் காட்டுவது வெகு சிறப்பு. உதாரணமாய் சில : இலந்தை பள்ளிப்பருவத்தில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் வெளியே இலந்தைப் பழம் வாங்கி சாப்பிடுவோம். இதன் வரலாறு , வகைகள் விரிவாய் உள்ளது . பூவரசு : பூவரசம் பீப்பி எங்கே? கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே? நடைபழக்கிய நடை வண்டி எங்கே? அரைஜான் கயிறு எங்கே? தென்னை ஓலை விசிறி எங்கே ?பனை ஓலை விசிறி எங்கே ? பல்லாங்குழி எங்கே? கிச்சு கிச்சு தாம்பாளம் எங்கே? தெல்லு விளையாட்டு எங்கே ? கோபிபிஸ் விளையாட்டு எங்கே? சாக்கு பந்தயம் எங்கே? கில்லி எங்கே? கோலிகுண்டு எங்கே? கோலிசோடா எங்கே? இப்படி எங்கே எங்கே என்று கேட்கிற கேள்விகள் இன்று நீண்டு கொண்டே இருக்கின்றன. நம் இலக்கியங்கள் அடையாளப் படுத்திய பாடல் பெற்ற சிறப்புடைய நானூற்றி சொச்சம் மரங்களில் எத்தனை மரங்களை இப்போது உள்ளன. உலகின் தற்போதைய மக்கள் தொகையான 7.2 பில்லியன் எதிர்வரும் 2050-ம் ஆண்டு 9.2 பில்லியனாக உயரும் எனக்கூறுகிறார்கள். நிலம், நீர், காற்று மற்றும் ஏனைய இயற்கை வளங்களை முறையற்ற வகையில் பயன்படுத்துவதே காரணமாகும். புவி வெப்பமய மாதல், ஆற்றல் பற்றாக்குறை, அதிகப்படியான உணவுத்தேவை, பாதுகாப்பு, மண்வளம், காலநிலை மாற்றம், உயிரினங்களின் அழிவு மற்றும் பருவகால மாற்றங்களினால் ஏற்படும் நோய்கள் போன்றவை தற்கால சூழலின் சவால்களாக திகழ்கிறது.. 2016-ம் ஆண்டு உயர்ந்த அளவில் வெப்பநிலை உலகெங்கிலும் காணப்பட்டது..அனலால் அலறினோம்.80 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆற்றல் தேவைகள் நிலக்கரியின் மூலம் பெறப்படுவதால் சூழல் மாசுபாடு அடைவதோடு புவி வெப்பமயமாதலுக்கும் முக்கிய காரணியாக விளங்குகிறது. இந்தியாவில் 365 விலங்கினங்களும், 1236 தாவர இனங்களும் அழியும் தருவாயில் உள்ளதாக இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு நிறுவனம் கூறியுள்ளது. மேற்கண்ட சூழல் சவால்களை எதிர்கொண்டு சூழல் மண்டலங்களைக் காப்பதற்கு பல்துறை ஆராய்ச்சி இன்றியமையாததாக விளங்குகிறது. மாசு இல்லாத உலகில் அன்று மனிதர்கள் வாழ்ந்தார்கள். நோய் பயம் இல்லாமல் நீண்ட ஆயுள் பெறமுடிந்தது. காற்று மண்டலத்தில் உள்ள விண்வெளியை வனங்கள் தூய்மைப்படுத்தின. தொழில் புரட்சியின் விளைவால் வனங்களின் அழிவு தொடங்கியது. நெருக்கமான நகரக்குடியிருப்புகள் தோன்றின. கிராமமாயிருந்த இடங்களில் மாநகரங்கள் தோன்றின. அபூர்வமான மரங்களூம் அழிந்து வருகின்றன என்கிறார். அதற்கான விழிப்புணர்ச்சியாய் மறைந்து வரும் சில மரங்கள் பற்றி இத்தொகுப்பு பேசுகிறது. மரங்கள் பற்றி அறிந்து கொள்ள நல்ல நூல் இது.மரங்களின் அவசியம் , அவற்றைப் பேண வேண்டிய அவசியம் பற்றி இந்நூல் சூழல் அக்கறையுடன் பேசுகிறது. ( ரூ 100 என்சிபிஎச் வெளியீடு , சென்னை ) ( பி ஆர் நடராஜன் , தொழிற்சங்கத் தலைவர், தமிழ்நாடு சுதந்திரப்போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சமீதி தலைவர் , திருப்பூர் )