சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 27 மே, 2019

செல்போன் பூதம்  : சிறுவர் கதைகள்   ஹாரிங்டன் ஹரிஹரன் --- சுப்ரபாரதிமணியன்
சிறுவர் படைப்புகள் யதார்த்த்த் தளத்திலிருந்து அடுத்த நிலையாய்  நேர் மறை விடயங்களுக்கும்  லட்சிய வாதத்திற்கும் செல்வது முக்கியமாக எனக்குத் தோன்றும்.
ஹாரிங்டன் ஹரிஹரன் கதைகளில் அதை கண்ணுற்ற போது மகிழ்ச்சியாக இருந்தது. இத்தொகுப்பில் உள்ள 1. கைபேசியின்  அதீதப் பயன்பாடு 2. துரித உணவில் சிறு பொட்டலப் பயன்பாடுகள் போன்றவை பற்றி சில ஆண்டுகள் முன்னர் நானும் சில கதைகளை எழுதியுள்ளேன்  ஹாரிங்டன் ஹரிஹரன் அதே அம்சங்களை  அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வது சிறப்பாக இருந்தது.உதாரணமாக  கைபேசியின் அதீதப் பயன்பாட்டால் காது பாதிக்கப்படுவது பற்றியது என் கதை. ஆனால் காது பாதிக்கப்பட்டவர் தன்னம்பிக்கை கொண்டு வாழ்வில் முன்னேறி முன்மாதிரியாக விளங்குவது ஹாரிங்டன் ஹரிஹரன் கதையின் சிறப்பு 2. துரித உணவின் கேடுகளை பிராணிகள் கையாண்டு அவை அவற்றைப் புறக்கணீத்து இயல்பான உணவு நிலைக்குத் திரும்புவது இன்னொரு நல்ல அம்சம்.இவை வகைக்கு இரண்டு.
 இதுபோல் யதார்த்தத்தின் கசப்பு நிலையை மீறி குழந்தைகளுக்கு செய்தியாகவும் அறிவுரையாகவும் பலவற்றை இக்கதைகளின் மூலம் ஹாரிங்டன் ஹரிஹரன்  நிறுவியுள்ளார்.அதை  சிறுவர்களுக்கான செய்திகளாய் ரத்ததானம், சேமிப்பு, கல்வியின் உயர்நிலை என்றும் பல கதைகளில் கையாண்டிருக்கிறார்..
 மண்ணின்  கசடுகளை மீறி மலைப்பகுதிகள் , காட்டுப்பகுதிகள் என்று நுணுக்கமாக பயணீக்கிறார் இவர். உருவத்தை வைத்து எடை போடும் குணத்தைச் சாடுகிறார்.  பழையதை மறந்து புதியததற்குப்போக  இவரின் கதாபாத்திரங்கள் சொல்வது , அவ்வகையில்  கதைகள் சொல்வது இவரின் சிறப்பமசமாகக் கொள்ல்லாம். முதல் கதைத்தொகுப்பிலேயே தனிமுத்திரைக்கு அக்கறைப்பட்டிருப்பது அவர் நல்ல அனுபவங்களை தனக்குள் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.

---( 2019 இதன் விலை ரூபாய் 80, பாவை மதி வெளியீடு ..)-- சுப்ரபாரதிமணியன்