சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 23 ஜனவரி, 2020

2020 ஜனவரி சென்னைப் புத்தகக் கண்காட்சி                                      சுப்ரபாரதிமணியன் புதிய வெளியீடுகள்

* சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் பாகம் 2 -
160 சிறுகதைகள் கொண்ட பெரிய தொகுப்பொன்றை காவ்யா பதிப்பகம் முன்னர் வெளியிட்டுள்ளது இது இரண்டாம் பாகமான மொத்த சிறுகதைகள் கொண்டத் தொகுப்பு.  .தொடர்ந்து சிறுகதைகளிலும் நவீனமான விசயங்களைக் கொண்டு சுப்ரபாரதிமணீயன் தீவிரமாக இயங்கி வருவதை இந்த இரண்டாம் பெரிய தொகுப்பு காட்டுகிறது..(  ரூ 650 , காவ்யா  )

* மாலு :  நாவல்
மரண தண்டனக்கு எதிரானக் குரலை - இடம்பெயர்ந்து சிரமங்களையும், மரண தண்டனையை எதிர் கொள்ளும் மலேசியாவிற்குச் சென்ற தமிழ் இளைஞர்களை - மையமாகக் கொண்டுள்ளது இந்த நாவல்,.  * இந்தியிலும் ஆங்கிலத்திலும் கூட  வெளியாகியிருக்கிறது .சுப்ரபாரதிமணியனின் 16 நாவல்களில் இந்த நாவலுக்கு முக்கிய இடம் உள்ளது. திருப்பூர் பொன்னுலகம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும்  சுப்ரபாரதிமணியனின் இன்னுமொரு குறிப்பிடத்தக்க நாவல் “ ரேகை “(  ரூ  140 பொன்னுலகம் பதிப்பகம் )
*             பூமிக்கு மனிதன் தலைவனா? – சுற்றுச்சூழல் கட்டுரைகள்

         . .இயற்கை வளங்களை மனிதர்கள் அதிக உரிமை எடுத்துக் கொண்டு சுரண்டி வருவதும் மனிதனின் பயன்பாட்டிற்காகவே இருப்பதாக எண்ணிக்கொண்டு செயல்படுவதையும்  மறுக்கும்  சூழலியல்  கோட்பாட்டை  இயற்கையாளர்கள்  முன்வைத்து  எழுதியும்  போராட்டங்களைத் தொடர்ந்தும் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகைப்போராட்டங்களை தொடர்ந்து பிரதிபலிப்பவை சுப்ரபாரதிமணியனின் சூழலியல் வகை எழுத்து. .aaஅவரின் புனைவிலக்கியப்பட்டியலில் இருக்கும் 17 நாவல்கள் உட்பட 70 நூல்களில் சூழலியல் சார்ந்த  போராட்டத்தை  “  சாயத்திரை  “ நாவல் முதற்கொண்டு புத்து மண் “ உட்பட நாவல்களும் பத்துக் கட்டுரைத் தொகுப்புகளும் வெளிப்படுத்தி இருக்கின்றன.  அதன் இன்னொரு அடையாளம் இந்த நூல் .
உயிர்மை பதிப்பகம் வெளியீடுரூ 150
* புத்துமண் நாவல் : 

பூமியில்உயிரினங்கள்ஒன்றையொன்று சார்ந்துள்ளன என்பதையே
நவீன சூழலியம் ஆழமாக, அழுத்தமாக, விரிவாகச்சொல்கிறது.  . நகரமயமாக்கலின்அழிவுப்பக்கத்தைக்காணத்தொடங்கியிருந்தாலும்ஏற்கனவே அதுஏற்படுத்தியுள்ளசேதங்களைச்சீராக்கமுடியாமல்உலகெங்கிலும்நாடுகள் திணறுகின்றன.புத்துமண் என்ற இந்தநாவலில் சாயக்கழிவுநிலத்தடிநீரில்ஏற்படுத்தும் மாசு, சுமங்கலித்திட்டம்என்றபெயரில்திருப்பூர்பனியன்கம்பனிகளில்நடக்கும் கொத்தடிமைத்தனம், பெண்கள்வேலையிடத்தில்விரல், கையைஇழந்துசொற்பஇழப்பீட்டுக்குஅலைவது, தொழிற்சங்கக்கல்வியின்முக்கியத்துவம், இடப்பெயர்ச்சியின்காரணகாரியங்கள், கல்விமுறையில்உள்ளஅவலங்கள், விளைநிலத்தில்குழாய்கள்பதிக்கப்படுவது, வாழ்வாதாரத்தைப்பறித்துஅழிக்கும்வளர்ச்சி வேகம், திருப்பூர்தொழிற்சாலைகளுக்கு அந்நியர்கள்வருகை, ஆக்கிரமிப்பு, பற்றி இந்நாவல் பேசுகிறது ..வெளியீடு;  என்சிபிஎச் ரூ 125