சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 23 ஜனவரி, 2020

                       ” இளைஞர்களுக்கு திசை காட்டி நல்ல இலக்கியம் “
பொன்னீலன் உரையில் “ மனிதர்களில் படைப்பாளிகளும் கலைஞர்களும் ஒளிந்திருக்கிறார்கள். சமூக உணர்வுள்ளவர்கள் சமூக மனிதர்களின் நிலையைப் பெறுகிறார்கள். எழுத்தாளனால் இந்த உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது.  சமூகத்திற்காக எவன் அழுகிறானோ அவனே எழுத்தாளன் ஆகிறான். . சமூக அதிர்வுகளின் வெளிப்பாடே படைப்பும் இலக்கியமும். சமூக அதிர்வுகளைக் கண்டு கொள்ள  இன்றைய இளைஞர்கள் நவீன இலக்கியம் படிக்க வேண்டும். அது அவர்களுக்கு திசைகாட்டியாக அமையும்  “ என்றார்
                                        பொன்னீலன் 80 “
தோழர் எழுத்தாளர்  பொன்னீலன் அவர்களின் 80 வயதையொட்டி வாழ்த்தும் பாராட்டும்  நிகழ்ச்சி திருப்பூரில் நடைபெற்றது . சுப்ரபாரதிமணியன்,        எம். இரவி  ஆகியோர் அவரின் படைப்புகள் குறித்துப் பேசினர் .
ஏற்புரை  நிகழ்த்தினார்: தோழர் பொன்னீலன் அவர்கள் .
தலைமை : தோழர்  பி ஆர். நடராஜன்  ( திருப்பூர் மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் )

ஆவணப்படம்  அறிமுகம் :
 புதுச்சேரி தமிழ்க்காப்பியத்தாத்தா
துரை. மாலிறையனார் புதுவை யுகபாரதி இயக்கம்
கீழ்க்கண்ட நூல்கள் அறிமுகம்  : துருவன் பாலா, காதர் நிகழ்த்தினர்
 முனைவர் தே ஞானசேகரனின் தந்தை இல்லாத என் வீட்டு முற்றம்  கவிதை நூல் 
-முனைவர் ஆர்.கார்த்திகேயனின்  நான்கு நூல்கள் ( திரைப்பாடம், நம் மக்கள் நம் சொத்து, வேலையைக்காதலி,மனசு போல வாழ்க்கை )
* மற்றும்...பாடல்கள்  , கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள்  தொடர்ந்தன..
நன்றியுரை: தோழர்  சண்முகம் ( தலைவர் , க இ  பெ. மன்றம் )



தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்...திருப்பூர் 2202488