சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 18 டிசம்பர், 2021

பொன் சண்முகசுந்தரம் / கனவு கல்வி விருது மனிதன் இயற்கை இவர்களுக்கிடையிலான நெருக்கமான உலகம் மீதான நேசமே கவிதையின் ஊற்று எனவேதான் கவிதை எழுதுவதில் மனிதர்களுக்கு இன்பம் இருக்கிறது என்பார்கள். இயற்கை ஜீவியாக இருந்து கொண்டு மனிதன் செயல்படுவதில் அவனின் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது அந்த அர்த்தத்தை கவிதையின் மூலம் தொடர்ந்து வெளிப்படுத்தி வருபவர் திருப்பூர் பொன் சண்முகசுந்தரம் அவர்கள் . வகுப்பறை என்றத் தொகுப்பின் மூலம் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியலான உறவை அருமையான கவிதைகள் மூலம் வெளிப்படுத்தியவர் இப்போது இந்தக்குறுங்கவிதைகள் மூலம் அதையே மீண்டும் நினைவுறுத்துகிறார் நம்மைச்சுற்றி உள்ள மனிதர்களையும் பிற உயிர்கள் குறித்த அக்கறையுடனான தொடர்பு மொழியே கவிதை என்பதை மீண்டும் நிருப்பித்திருக்கிறார் பொன் சண்முகசுந்தரம் . அதை வட்டெடுத்து, பிராமி எழுத்துப்பிரதிகளுடனும் வடிவமைத்திருக்கிறார் என்பது இன்னொரு சிறப்பம்சம் சுப்ரபாரதிமணியன் கனவு கல்வி விருது கனவு கல்வி விருது கல்வித்துறையைச் சார்ந்த படைப்பிலக்கியத்தில் அக்கறை கொண்ட ஆசிரியர்களுக்கு மக்கள் மாமன்ற நூலகத்தில் ஞாயிறு நடைபெற்ற கூட்டத்தில் வழங்கப்பட்டது. எழுத்தாளர் சாமக்கோடாங்கி ரவி விருதை அளித்தார். நாமக்கல் நாதன் , பேரா பிரவிணா, கணிதம் பழனிவேல், பொன் சண்முகசுந்தரம், ஜெரோஷா, பேரா . கோமளசெல்லி உட்பட பலர் விருது பெற்றனர், விழாவுக்கு சி.சுப்ரமணியம் தலைமை தாங்கினார், சுப்ரபாரதிமணீயன், ஆழ்வைக்கண்ணன், துசோ பிரபாகர், அழகுபாண்டி அரசப்பன், செம்பருத்தி விஸ்வாஸ் உட்பட எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். கவிதைகள் வாசிப்பும் உரைகளும் நிகழ்ந்தன. இந்த விருதிதைனை கனவு இலக்கிய வட்டம் அளித்தது FB Thanjavur Harani வணக்கம். இன்று என் வாழ்வில் ஓர் இனிய நாள். எழுத்தாளர் திருமிகு சுப்ரபாரதிமணியன் அவர்கள் தன் கனவு மெய்நிகர் சந்திப்பினைத் தொடர்ந்து நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. இன்று அதில் என் படைப்பு அனுபவம் குறித்துப் பேசுவதற்கு நாலைந்து வாரங்களுக்கு முன்பே கேட்டார். மகிழ்ச்சியோடு சம்மதம் சொன்னேன். அடுத்து உங்களின் படைப்புகள் பற்றி அவற்றின் அட்டைப் படங்களை அனுப்பச்சொன்னார். செய்தேன். சந்திப்பு நிகழும் விவரத்தைச் சொல்லி கூகுள் மீட் விவரங்களைத் தந்தார். எல்லாவற்றையும் அவர் முறையாக செய்தது எனக்குப் பிடித்திருந்தது. நான் இப்படித்தான் ஒரு நிகழ்வை எடுத்துக்கொண்டால் அதைப் பார்த்துப்பார்த்து ஒழுங்காகச் செய்வேன். சொன்னபடி நிகழ்வு இன்று 6 மணிக்குத் தொடங்கிவிட்டது. இந்நிகழ்வில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த (தற்போது சிங்கப்பூர் வானொலியில் பணியாற்றும்) கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள், நான், மற்றும் சுபசெல்வி (நாவலாசிரியை) பேசுவதாக இருந்த வரிசையில் என்னை முதலில் பேசச் சொன்னார்கள். மனந்திறந்து என் படைப்பு அனுபவம் பற்றிப் பேசினேன். மன நிறைவாக இருந்தது எனக்கு. கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களைப் பற்றிப் பல்லாண்டுகளாகக் கேள்விப்பட்டிருந்தாலும் இன்றுதான் இந்த இணைய நிகழ்வில்தான் நேரில் பார்த்தேன். அருமையான குரல். அருமையான கவிதைகள். அருமையான வாசிப்பு. அத்தனை ஆர்வமுடன் தன் கவிதைக்கான அனுபவத்தைப் பகிர்ந்தார். இன்னொரு வியப்பான செய்தி என் புகைப்படக்கவிதைப்போட்டியில் வெளியாகும் சில கவிதைகளைத் தன் மக்கள் மனம் இதழில் அவ்வப்போது பிரசுரம் செய்த ரகசியத்தைச் சொன்னார். தொடர்ந்து புகைப்படக்கவிதைகளை அனுப்பச்சொன்னார் தன் இதழில் பிரசுரம் செய்வதாகக் கூறியுள்ளார். எத்தனை மகிழ்ச்சியானது இது. FB Thanjavur Harani சுபசெல்வியின் படைப்பு அனுபவம் எளிமையாகக் குழந்தையின் அசைவுகளைப்போல அழகாக அமைந்தது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தூரிகை சின்னராஜ் ஒவ்வொரு பேச்சின் முடிவிலும் அழகாகத் தொகுத்துப் பாராட்டினார் FB Thanjavur Harani நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தூரிகை சின்னராஜ் ஒவ்வொரு பேச்சின் முடிவிலும் அழகாகத் தொகுத்துப் பாராட்டினார் FB Thanjavur Harani . நல்ல குரல். அப்புறம் இடையில் நல்ல கருத்துரைகள் பரிமாறப்பட்டன. ஒரு மனநிறைவான நிகழ்வு. அன்பின் நன்றிகள் சுப்ரபாரதிமணியன் சார்.